சதீஷ் வாஸன் என்கிற ஸ்ரீநிவாஸன், ட்விட்டரில் அறிமுகமான நண்பர், தமிழ் நண்பர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட பழகுதற்கினியவர், அவரது பேச்சில் எப்பொழுதும் மெல்லிய நகைச்சுவையும், கிண்டலும் இழையோடும், சிரித்த முகத்துடன் இள வயது சுஜாதாவின் படத்தை முகப்புப் படமாகக் கொண்டவர், பெரம்பலூரைச் சேர்ந்த இவர் போஸ்ட்வானாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி போஸ்ட்வானாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் படுகாயமடைந்த இவர், 26 ஆம் தேதியளவில் மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் நேற்றிரவு கிடைக்கப்பெற்றது. நம்புவதா வேண்டாமா என்ற நிலையில், பேஸ்புக்கிலிருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாக கேள்வியுற்றது நிஜம்தான் என உறுதி செய்யப்பட்டது. தவிர அவரது மனைவியும், வாஸனது ட்விட்டர் கணக்கு மூலமாக அவரது நெருங்கிய சகாக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
சமூக வலைத்தளத்தைத் தாண்டி நேரில் அறிமுகம் இல்லையென்றாலும், கடந்த சில வருடங்களாக பழகிய வரையில், அவரது இழப்பு உற்றாரது இழப்பைப் போலவே உணர வைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இட்லிவடை சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற இரைஞ்சுகிறோம்.
- யதிராஜ சம்பத் குமார்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, October 29, 2015
@sathishvasan - அஞ்சலி
Posted by IdlyVadai at 10/29/2015 09:17:00 AM
Labels: அஞ்சலி, யதிராஜ சம்பத் குமார்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
sad to read, rip
Rest In Peace..
Post a Comment