கலாம் எனும் கனவு
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
கனவுகளின் கனவு நீ !
இந்தியாவின் உடைமை நீ !
இந்தியாவை இயக்கிய
இளைய தலைமுறையை எழுப்பிய
இணையில்லா தலைவன் நீ !
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
நீ
கனவு கண்டாய்…எங்களைக் காண வைத்தாய்
கல்வி கற்றாய்…எங்களைச் சிந்திக்க வைத்தாய் திறமை வளர்த்தாய்…எங்களைச் செயல்பட வைத்தாய் திறம்பட கடமை ஆற்றினாய் - மேலாக சேவை செய்தாய்….எங்கள் அறிவு மேம்பட ஊக்கம் ஊட்டினாய்….எங்கள் ஆக்கம் மேம்பட தியாகம் செய்தாய்….எங்கள் வாழ்க்கை மேம்பட
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
மனிதம் எழுப்பிய மகத்தான கனவு நீ…கலையாதே….
இந்தியாவின் இணையில்லா இமயம் நீ…சிதறாதே…
பாரதம் பெற்றெடுத்த பார்மிகு பரிசு நீ…தொலையாதே…
என்றும் வாழும் ஆத்மா நீ…
ஊக்கம் தரும் உண்மை நீ…
சாசுவதமான சத்தியம் நீ….
உன் வாழ்க்கை உன் செய்தி
உன் வார்த்தை எம் மந்திரம்
எப்படி நவில்வேன் நன்றி…
எம்செயலே உனக்கு (உண்மையான) நன்றி !
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
- Senthilmurugan
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 29, 2015
கலாம் எனும் கனவு - Senthilmurugan
Posted by IdlyVadai at 7/29/2015 12:00:00 PM
Labels: அஞ்சலி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment