சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்குச் சொந்தம் கொண்டாடி வெளிப்படையாகவே முக்கிய கட்சியினர் போட்டிப் போட்டுக்கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அவர்கள் மட்டும்தான் காரணமா என்று கோதாவில் சிலர் இறங்கியுள்ளனர். ஊடக வெளிச்சமின்றிச் சொந்தம் கொண்டாடிவரும் இவர்களைப் பற்றி நமது சிறப்பு லொல்லு படை சார்பாகச் சேகரித்த செய்திகள் இதோ:
மெட்ரோ ரயில் திட்டத்தைத் தாமதப்படுத்தினால் சிறைநிரப்பும் போராட்டம் நடக்கும் என்று எங்கள் கட்சி அறிக்கை எழுதும்போது காபி போட்டுக் கொடுத்ததால் ரயில் திட்டத்தில் தனக்கும் பங்கு இருப்பதாகப் பக்கத்து வீட்டாரிடம் கூறினார் மலர்விழி.
வருமானம் குறைவதால் இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மெட்ரோ ரயில் மறியலில் ஈடுபடமுயன்றோம் ஆனால் தண்டவாளம் அந்தரத்தில் இருந்ததால் மறியலில் ஈடுபடாமல் டிக்கெட்டை வாங்கி மறுவிநியோகம் செய்து நாங்கள்தான் மெட்ரோ ரயில் இயக்க உதவியுள்ளோம் என்று பேருந்து டிக்கெட் வழங்குநர் திரு. மணி கூறினார்
மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபட்ட வட இந்தியர்களைத் தமிழ் கற்றுத்தந்து டாஸ்மாக் கடைகளைக் கண்டுபிடிக்க உதவினேன் என்று குறிப்பிட்டதுடன் மெட்ரோ என்ற இந்திப் பெயரை நீக்கிவிட்டு தமிழில் "பெரிய ரயில்" என்று பெயர்வைக்க வேண்டும் என்று வோர்கிங் பீப்பில் பார்டி தலைவர் முருகதாஸ் கேட்டுள்ளார்.
ரயில் செல்வதற்கு வசதியாகப் பாதையில் இருந்த செம்மரங்களை எனது சொந்தச் செலவில் வெட்டி உதவியுள்ளேன் ஆனால் கடைசி நேரத்தில் சென்னைக்குள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஏமாற்றமடைந்தேன். இருப்பினும் மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பெரியளவில் எனக்கே பங்குண்டு என்று டி.எஸ்.பி. முத்துவேலு கூறியுள்ளார்.
மெட்ரோ ரயில் பணிகளுக்கு உதவுமாறு ஜப்பான் பிரதமரைச் சந்திக்கும் போது நான்தான் கூறினேன். அதனால் மகிழ்ச்சியடைகிறேன் என்று வெளிநாட்டில் வாழும் லலித் ரூடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சில கட்சியினர் இதுகுறித்து விளக்கம் அளிக்க ஜப்பான் பிரதமருக்கு தந்தி அனுப்பியுள்ளனர் என்பது வேறுகதை.
மெட்ரோ ரயில் தொடர்பாக 12முறை டெல்லி சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுத்து வந்ததாகக் கனவுகண்டுள்ளேன் எனவே நானும் இத்திட்டத்திற்குக் காரணமானவன் என்று முறுக்குக்கடை முருகன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
ரயில் நிலையங்களுக்கு வேண்டிய இடங்களை மக்களிடமிருந்து வாங்கித் தந்ததால் நான் தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முக்கிய காரணமாவேன். ஆனால் நில விற்பனையில் கமிஷன் அடித்ததாக வதந்தியைக் கிளப்புவது அரசியல் காற்புணர்ச்சி என்று அமைச்சரின் தம்பி ஓ.மன்னன் கூறியுள்ளார்.
இத்திட்டத்திற்காக பிரிடிஷ் காலத்திலிருந்து குரல் கொடுத்துவரும் கட்சி நாங்கள்தான் என்றும் பலமுறை சட்டசபையில் கேள்வி கேட்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்துள்ளோம் மேலும் இத்திட்டத்தால் மெட்ரோ குடிநீர் அனைவருக்கும் கிடைக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழ் மாநிலக் கட்சி ஒன்றின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டாக அவசரத்தில் அறிக்கை ஒன்றை மாற்றி வாசித்தனர்.
மெட்ரோ ரயில் தண்டவாளத்தைச் சொந்தமாகப் படத்தில் நடித்து அதில் வரும் வருமானத்தில் நாங்களே கட்டித்தருகிறோம் என்றோம். ஆனால் மெட்ரோ அதிகாரிகள் பதிலளிக்கவில்லை அதனால் இத்திட்டத்தில் எங்களுக்கும் பங்குண்டு என்கிறார் நாடக நடிகர் ஷிவால்
இந்தத் திட்டத்திற்குக் காரணம் நீங்களா என்று தயது செய்து என்னை கேட்காதீர்கள். ருஷ்ய எழுத்தாளர் சோகிபுலாவ் சென்னது போல ஒரு எழுத்தாளனின் எழுத்தைத் தொடர்ந்து படித்து வந்தாலே இத்தகைய கேள்வி வராது. மெட்ரோ ரயில் பற்றி அறிந்து கொள்ள எனது புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் என்று பதிவு எழுதியுள்ளார் அரசியல் விமர்சகர் ஆறு
இது சம்மந்தமான வழக்கொன்றில் முறையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு டீ தண்ணீ கொண்டுவந்து கொடுத்தது நான் தான். அந்தத் தீர்ப்பு இல்லாமல் மெட்ரோ ரயில் இயங்கியிருக்காது எனவே நான்தான் காரணம் என்றார் டீ மாஸ்டர் சாமிகுமார்.
அனைவரிடமும் கருத்து கேட்டுவிட்டு வரும் போது ஒரு உண்மை தெரிந்தது, அங்கு வேலை செய்தவர்களில் அநேகமானோர் காலையில் இட்லி அல்லது வடையை உண்டுவிட்டுதான் வேலை செய்துள்ளனர் எனவே மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலகாரணம் இட்லிவடை என்று வாசகர்கள் சார்பாக இதன் மூலம் நாமும் ஒரு அறிக்கையைத் தட்டி விடுவோம்.
எழுதியவர்:நீச்சல்காரன்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, June 30, 2015
மெட்ரோ ரயில் - காரணம் யாரு?
Posted by IdlyVadai at 6/30/2015 11:46:00 AM 4 comments
Labels: நகைச்சுவை
Wednesday, June 24, 2015
தினம் ஒரு பாசுரம் - எ.அ.பாலா
எச்சரிக்கை:
எ.அ.பாலாவிடம் இட்லிவடைக்கு எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது ஏதாவது எழுதி தாங்க என்று கேட்டவுடன் ஐந்தே நிமிடத்தில் ஒரு பதிவு அனுப்பிவிட்டார். அட என்று படித்தால் அவர் தினமும் டிவிட்டர் மக்களுக்காக எழுதும் தினம் ஒரு பாசுரம் பதிவாம்.
இட்லிவடைக்கு அரசியல், கோமாளித்தனமான பதிவு தான் வேண்டும் என்று பதில் அனுப்பினேன். உடனே அவர் இட்லிவடை வாசகர்கள் எதை போட்டாலும் படிப்பார்கள் சும்மா போடுங்க என்று சொல்லிவிட்டார்.
தினம் ஒரு பாசுரம் -36
செருமிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து, சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை அன்ன தன்மை அடல் ஆமையான திருமால் நமக்கோர் அரணே!
— — பெரிய திருமொழி
முந்தைய பாசுர இடுகையில், திருமங்கையாழ்வார் அருளிய மச்சாவதாரம் பற்றிய பாசுரத்தைக் கண்டோம். இன்று கூர்ம அவதாரம் (திருமாலின் 2-வது அவதாரம்) குறித்த ஓர் அற்புதமான பாசுரம். முந்தைய பாசுரத்தில் “ வரு மீனை (திரு)மாலை மறவாது இறைஞ்சு என் மனனே” என்று தனது நெஞ்சுக்கு அறிவுறுத்திய ஆழ்வார் இப்பாசுரத்தில் “அடல் ஆமையான திருமால் நமக்கோர் அரணே!” என்று அறுதியிட்டுச் சொல்கிறார்!
திருப்பாற்கடலை கடைந்த நிகழ்வை விவரிக்கும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் பற்றி நான் எழுதியதை நினைவு கூர்க! அதற்கான தொடுப்பு இதோ.
இப்பாசுரத்தில் ஒற்றை நீக்கி எண்ணினால், ஒவ்வொரு வரியிலும் சரியாக 23 எழுத்துக்களே இருக்கும். சிறப்பான சொல்லாட்சி, அருமையான விவரிப்பு என்ற இலக்கிய நயத்தைத் தாண்டி, இந்த இலக்கண நேர்த்தியையும் நோக்கும்போது திருமங்கை மன்னனின் தமிழ் வீச்சையும், ஆழ்ந்த புலமையையும் புரிந்து கொள்ள முடிகிறது. இவை திருமால் மேல் கொண்ட பெரும்பக்தி, பேரன்பால் விளைந்தவை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
திருமாலின் கூர்ம அவதாரம்
மேலே குறிப்பிட்ட உரலில் உள்ள திருவாய்மொழிப்பாசுர பிரம்மாண்ட விவரிப்பை திருமங்கை மன்னனின் இப்பாசுரத்திலும் காணலாம். இரு பாசுரங்களுமே பிரமிக்க வைத்தாலும், இது அதனினும் சற்று நுண்ணிய விவரிப்பு எனக் கூறலாம். வாசுகி பாம்பின் வர்ணனை, வேகமாகச் சுழன்ற பாற்கடல் வர்ணனை, தேவர்களும் அசுரர்களும் கடல் கடைந்தது, மண்ணும் விண்ணும் அதிர்ந்து நடுங்கியது, ஆமையான கேசவனின் முதுகில் மேரு மலை (மத்து போல) நின்று சுழன்றது, திருமாலே (கடைதலுக்கு ஏதுவாக) பெருமலையைத் தாங்கியதொரு திருமலை போலக் கடலில் கிடந்தது மட்டுமல்லாமல், இத்தனைக் குழப்பங்கள், பேரிரிரைச்சல்கள் மிக்க சூழலில் அந்த பரமபுருடன் கண் வளர்ந்தது என்று, அக்கடல் கலக்கலுக்கு நிகராக ஆழ்வார் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் :-))
செருமிகு வாள் எயிற்ற — வலிமைமிக்க வெள்ளொளி வீசும் பற்களைக் கொண்ட
அரவொன்று சுற்றித் — (வாசுகி எனும்) பெரு நாகத்தை (மேருமலையில் கயிறாகச்) சுற்றி
திசை மண்ணும் விண்ணும் — எண்திசைகளிலும், பூவுலகிலும், விண்ணுலகிலும் வாழ்பவர்கள்
உடனே வெருவர — அவ்வேளையில் அஞ்சி நடுங்கும்படியாக
வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப — திருப்பாற்கடல் முழுதும் கலங்கும்படியாக
இமையோர்கள் நின்று கடைய, — தேவர்கள் (+அசுரர்கள்) நின்றவண்ணம் கடைய
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து, — அகண்ட மலை (மேருவானது, தனது பெரிய) முதுகில் பரந்துயர்ந்த வண்ணம் நின்று
சுழலக் கிடந்து துயிலும், — சுழலும்படியாக, கிடந்த திருக்கோலத்தில் யோகக்துயில் கொண்ட,
அருவரை அன்ன தன்மை — ஓர் அரிய / மேன்மை மிக்க பெருமலைக்கு ஒப்பான தன்மையுடன்
அடல் ஆமையான திருமால் — வலிமையான கூர்ம(ஆமை) வடிவம் கொண்ட திருமால் (ஒருவனே)
நமக்கோர் அரணே! — நம் அனைவரையும் காத்தருள வல்லவன் ஆவான்
எ.அ.பாலா
எ.அ.பாலாவிடம் இட்லிவடைக்கு எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது ஏதாவது எழுதி தாங்க என்று கேட்டவுடன் ஐந்தே நிமிடத்தில் ஒரு பதிவு அனுப்பிவிட்டார். அட என்று படித்தால் அவர் தினமும் டிவிட்டர் மக்களுக்காக எழுதும் தினம் ஒரு பாசுரம் பதிவாம்.
இட்லிவடைக்கு அரசியல், கோமாளித்தனமான பதிவு தான் வேண்டும் என்று பதில் அனுப்பினேன். உடனே அவர் இட்லிவடை வாசகர்கள் எதை போட்டாலும் படிப்பார்கள் சும்மா போடுங்க என்று சொல்லிவிட்டார்.
தினம் ஒரு பாசுரம் -36
செருமிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து, சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை அன்ன தன்மை அடல் ஆமையான திருமால் நமக்கோர் அரணே!
— — பெரிய திருமொழி
முந்தைய பாசுர இடுகையில், திருமங்கையாழ்வார் அருளிய மச்சாவதாரம் பற்றிய பாசுரத்தைக் கண்டோம். இன்று கூர்ம அவதாரம் (திருமாலின் 2-வது அவதாரம்) குறித்த ஓர் அற்புதமான பாசுரம். முந்தைய பாசுரத்தில் “ வரு மீனை (திரு)மாலை மறவாது இறைஞ்சு என் மனனே” என்று தனது நெஞ்சுக்கு அறிவுறுத்திய ஆழ்வார் இப்பாசுரத்தில் “அடல் ஆமையான திருமால் நமக்கோர் அரணே!” என்று அறுதியிட்டுச் சொல்கிறார்!
திருப்பாற்கடலை கடைந்த நிகழ்வை விவரிக்கும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் பற்றி நான் எழுதியதை நினைவு கூர்க! அதற்கான தொடுப்பு இதோ.
இப்பாசுரத்தில் ஒற்றை நீக்கி எண்ணினால், ஒவ்வொரு வரியிலும் சரியாக 23 எழுத்துக்களே இருக்கும். சிறப்பான சொல்லாட்சி, அருமையான விவரிப்பு என்ற இலக்கிய நயத்தைத் தாண்டி, இந்த இலக்கண நேர்த்தியையும் நோக்கும்போது திருமங்கை மன்னனின் தமிழ் வீச்சையும், ஆழ்ந்த புலமையையும் புரிந்து கொள்ள முடிகிறது. இவை திருமால் மேல் கொண்ட பெரும்பக்தி, பேரன்பால் விளைந்தவை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
திருமாலின் கூர்ம அவதாரம்

செருமிகு வாள் எயிற்ற — வலிமைமிக்க வெள்ளொளி வீசும் பற்களைக் கொண்ட
அரவொன்று சுற்றித் — (வாசுகி எனும்) பெரு நாகத்தை (மேருமலையில் கயிறாகச்) சுற்றி
திசை மண்ணும் விண்ணும் — எண்திசைகளிலும், பூவுலகிலும், விண்ணுலகிலும் வாழ்பவர்கள்
உடனே வெருவர — அவ்வேளையில் அஞ்சி நடுங்கும்படியாக
வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப — திருப்பாற்கடல் முழுதும் கலங்கும்படியாக
இமையோர்கள் நின்று கடைய, — தேவர்கள் (+அசுரர்கள்) நின்றவண்ணம் கடைய
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து, — அகண்ட மலை (மேருவானது, தனது பெரிய) முதுகில் பரந்துயர்ந்த வண்ணம் நின்று
சுழலக் கிடந்து துயிலும், — சுழலும்படியாக, கிடந்த திருக்கோலத்தில் யோகக்துயில் கொண்ட,
அருவரை அன்ன தன்மை — ஓர் அரிய / மேன்மை மிக்க பெருமலைக்கு ஒப்பான தன்மையுடன்
அடல் ஆமையான திருமால் — வலிமையான கூர்ம(ஆமை) வடிவம் கொண்ட திருமால் (ஒருவனே)
நமக்கோர் அரணே! — நம் அனைவரையும் காத்தருள வல்லவன் ஆவான்
எ.அ.பாலா
Posted by IdlyVadai at 6/24/2015 06:09:00 PM 3 comments
Labels: எ.அ.பாலா
Subscribe to:
Posts (Atom)