பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 28, 2015

மாஸ் - மாசு - குசு

ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். தெரிந்தும் சினிமா மக்கள் முதலில் ஆங்கிலத்தில் பெயர் வைத்து மார்கெட்டிங் செய்துவிட்டு பிறகு படம் ரீலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்பு, பெயரை மாற்றி வரிசலுகைகள் பெற்றுவிடுகிறார்கள்.

ரசிகர்களுக்கு முதலில் வைத்த ஆங்கிலப் பெயர்தான் மனதில் நிற்கும், எவனாவது நாளைக்கு ”மாசு என்ற மாசிலாமணிக்கு” என்று சொல்லி டிக்கெட் வாங்குவானா ? சினிமாவே ஒரு ஏமாற்று விஷயம் அதில் இந்த தில்லாலங்கடி வேலை வேற.

வெங்கட்பிரபு தனது படத்துக்கு மாஸ் என்று பெயர் வைத்தார்.அதாவது “MASS". வரிச்சலுகைக்காக பிறகு, மாஸ் என்கிற மாசிலாமணி ஆக்கினார்கள். நேற்று மாஸு என்கிற மாசிலாமணியாக பெயர் மாறியது. இன்று மாசு என்கிற மாசிலாமணியாக மாற்றியிருக்கிறார்கள். மாசு என்றால் Pollution என்று பொருள் அதையே தமிழ் படுத்துகிறேன் என்று குசு என்று வைத்தாலும் ஆச்சரியப்பட கூடாது.

நிச்சயம் அஜித் இந்த மாதிரி செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.

Read More...

Sunday, May 24, 2015

ஓவியர் நடனம் - அஞ்சலி


"எனது வாழ்க்கையில் நான் பிரச்னைகளை சந்திக்கும்போதெல்லாம், எங்கிருந்தோ ஒரு தெய்வீக சக்தி வந்து என்னைக் கை தூக்கிவிட்டு அடுத்த படிக்குச் சுலபமாக இட்டுச்சென்று விடுகிறது" - ஓவியர், கார்ட்டூனிஸ்ட், ம்யூரலிஸ்ட் மற்றும் நடிகராகவும் விளங்கிய நடனம்

அஞ்சலி

Read More...

Saturday, May 23, 2015

மீண்டும்...



நன்றி: தி.இந்து.

Read More...

Friday, May 22, 2015

இதய தெய்வமே, தாயே, அம்மாவே, போதி மரமே,போராளியே, கருணையே , சாமியே,....


இன்று சென்னையில் எங்கு திரும்பினாலும் அம்மா கட்டவுட்டும், அதிமுக கொடிகளும். அதனால் இங்கேயும் :-)

Read More...

Thursday, May 21, 2015

எம்.எம்.சி மாணவர் கல்வி உதவி தொடர்பாக

இட்லிவடை வாசகர்களே...

இந்த இடுகை வாயிலாக எ.அ.பாலா விடுத்த தாழ்மையான வேண்டுகோளை ஏற்று, பல நல்ல உள்ளங்கள் செல்வாவின் மருத்துவக் கல்விக்கு உதவி செய்துள்ளீர்கள் என்பதை அறிவிக்கவே இந்தப் பதிவு. இதுவரை சேர்ந்துள்ள தொகை, படிப்பின் முதல் 3 ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்கும். இந்த முயற்சிக்கு பொருளுதவி செய்தோ, ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தோ, வாழ்த்துக்களை தெரிவித்தோ, ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பது இட்லிவடையின் கடமையாகும்.

செல்வாவின் மருத்துவப்படிப்பு முடியும் வரை அவருக்கு உதவி, ஊக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஏதாவது உதவி பின்னாளில் தேவைப்பட்டால், உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.

இதற்கு முன் பல முறை ஆதரவளித்த நீங்கள் மீண்டும் கை கொடுப்பீர்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.
மீண்டும் நன்றி.

இட்லிவடை மற்றும் எ.அ.பாலா

Read More...

Tuesday, May 12, 2015

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ? - அராத்து

தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மனசாட்சியும் இந்த பதிவை ஆமோதிக்கும்.

சுதாகரன் திருமணம் என்றெல்லாம் கூத்தடித்த அப்போதைய ஜெ ஆட்சி முடிந்த கையோடு , இந்த வழக்கில் ஜெ வுக்கு அப்போதே தண்டனை அளிக்கப்பட்டு இருந்தால் மொத்த தமிழகமும் கொண்டாடி இருக்கும். அப்போது அனைத்து மக்களும் ஜெ மீதும், அதிமுக ஆட்சி மீதும் அவ்வளவு வெறுப்புடன் இருந்தனர்.

அதற்குப்பிறகு திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சிகளைப் பார்த்த மக்கள் , ஜெ ஆட்சி எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்ததே , தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி.

இங்கு எந்த அரசியல்வாதியையும் அப்சல்யூட் நல்லவர் என்ற முடிவுக்கெல்லாம் வரமுடியாது. ரிலேடிவ்தான். எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளிதான்.இப்போது ஜெவுக்கு குடும்பம் இல்லை , தற்போதைய ஆட்சியில் அவர் தனக்கென சொத்து சேர்க்கவில்லை. நல்லது செய்கிறாரோ இல்லையோ , நல்லது செய்ய வேண்டும் என்ற முனைப்போடாவது செயல்படுகிறார் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது. இலவசங்கள் , அம்மா திட்டங்கள் - நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ , ஓட்டுப்போடும் மக்களுக்கு பிடித்தே உள்ளது. இப்போதைய ஜெயலலிதாவிற்கு தண்டனை அளிப்பது மக்களுக்கு ரசிப்பாயில்லை.

ஜெயலலிதா நல்லவர் , ஊழலே செய்யவில்லை என்றெல்லாம் யாரும் நம்பவில்லை. மற்ற அரசியல்வாதிகளில் யார் நியாயமாக இருக்கிறார்கள்?

உதாரணமாக வரப்போகும் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் ஸ்டாலினின் சொத்து மதிப்பு 2 கோடியே பதினோரு லட்சம் என தேர்தல் கமிஷனில் தெரிவித்து உள்ளார். சென்னையில் ஒரு கடைக்கோடி கவுன்சிலரின் சொத்து மதிப்பே 10 கோடியைத் தாண்டும் என்பது நண்டு சின்டுக்கு கூடத் தெரியும்.ஸ்டாலின் சொத்து மதிப்பு வெறும் 2 கோடி ....பாவம். கோடி ரூபாய் ஹம்மர் காரில் வெளிப்படையாக பவனி வருவார், கார் வேறு யாரேனும் பினாமி பேரில் இருக்கும். உதயநிதி , அன்பு செழியனிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கித்தான் படம் எடுத்து காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார் , பாவம் !

கூர்கில் இருக்கும் டாட்டா பிளாண்டேஷன் எஸ்டேட்டுக்கு சென்றிருந்தேன். சுற்றிக்காட்டிய அந்த ஊர்க்காரர், இதான் உங்க ஊர் சிதம்பரத்தோட எஸ்டேட் என்றார். அது இருக்கும் போல 200 ஏக்கர். எவ்ளோ வெலை இருக்கும் என்றேன். இதெல்லாம் இப்ப வாங்க முடியாதுங்க , 500 - 1000 கோடி போகலாம் என்றார். சிதம்பரம் சொத்துக்கணக்கில் இதை 10 லட்சமோ 12 லட்சமோ எனக் குறிப்பிட்டு இருந்ததாக நினைவு.

இதைப்போல பழம் தின்று கொட்டைப் போட்ட எல்லா அரசியல்வாதிகளும் , விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து பக்காவாக செட்டில் ஆகி விடுகின்றனர். ஜெ , திடீரென முதல்வராகி , ஆர்வக் கோளாறில் வெளிப்படையாக ஓவர் ஆட்டம் போட்டு மாட்டிக்கொண்டார், அவ்ளோதான்.

இன்றைய சூழலே அபத்தமாக உள்ளது. திமுக ,அதிமுக என இரண்டு கட்சிகளுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றன. மக்களும் இளித்துக்கொண்டே வாங்கிக்கொள்கின்றனர்.அரசு கொடுக்கும் இலவசத்துக்கு வெக்கமே இல்லாமல் , பணக்காரர்களும் , மிடில் க்ளாஸ் மக்களுமே வரிசையில் பிச்சைக்காரர்கள் போல நிற்கிறார்கள். காண்ட்ராக்டர்களிடம் இரண்டு கட்சியுமே ஆட்சியில் இருக்கையில் கமிஷன் பெறுகின்றன.

மக்களோடு டை அப் போட்டுக்கொண்டு அரசு ஊழலில் ஈடுபடுகிறது. மக்களுக்கு கமிஷனை இலவசம் , விலையில்லா பொருள் என்ற வகையில் கொடுத்து விடுகிறது. அதனால் மக்களுக்கு ஊழல் ஒரு பிரச்சனையே அல்ல. ஏனெனில் அவர்களும் அதில் பங்குதாரர்கள். எப்போது கோபம் வரும் என்றால் , அவர்கள் சக்திக்கு மீறி ,அவர்களுக்கு பங்கு கொடுக்காமல் , அவர்கள் வயிறெரியும் அளவுக்கு ஊழல் செய்ய வேண்டும்.

இப்போது மக்களுக்கு 66 கோடி ஊழல் பெரிய எரிச்சல் இல்லை. சமீபத்தில் நடந்த 1,76,000 கோடி என்று சொல்லப்பட்ட ஊழல் வழக்கு , கலைஞர் டிவி வழக்கு ஆகியவைதான் எரிச்சல். சுதாகரன் திருமணத்தின்போது ஜெ எந்தளவுக்கு கூத்தடித்தாரோ அதைவிட பல மடங்கு கருணாநிதி குடும்பத்தினர் மாநிலத்திலும் , மத்தியிலும் சக்க கூத்து அடித்தனர்.பேரன்கள் சினிமா எடுத்தனர் , நடித்தனர் , பல விதமான தொழில்களில் ஈடுபட்டனர்.

பல தொழில் அதிபர்களுக்கு போன் போட்டு கமிஷன் வாங்க மாவட்ட வாரியாக ஏஜண்டுகள் செயல் பட்டனர்.மதுரையில் ரவுடி சாம்ராஜ்யமே தலைவிரித்து ஆடியது.செம்மொழி மாநாட்டில் தமிழகத்தின் மாபெரும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலர் கலர் உடைகளில் தோன்றி எரிச்சலடைய வைத்தனர்.குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்ததால் 2ஜி பிரச்சனை முடிந்து விட்டது என தலைவர் அருள்வாக்கு சொன்னார்.

இப்போது ஜெ விடுவிக்கப் பட்டு தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் , நீதி , சட்டம் இவைகளை முன்வைத்து திமுகவினர் பொங்குவதை பார்க்கையில்தான் காமடியாக உள்ளது. கலைஞர் டிவிக்கு 200 கோடி வந்த வழக்கில் சொல்கிறார்கள்- கனிமொழி இயக்குநர் இல்லை , கலைஞரும் இயக்குநர் இல்லை , ஸ்டாலின் இல்லை. பேர்தான் கலைஞர் டிவி ! யார் இயக்குநர் ? யார் மொதலாளி ? டீ சப்ளை பண்றவனா ?

உழலுக்கு எதிராகவும் , அநியாயத்திற்கு எதிராகவும் , நீதி செத்து விட்டது , சட்டம் தோற்றுவிட்டது என பொங்கினால் மக்களும் உணர்ச்சி வசப்பட்டு பொங்குவார்கள்தான்.ஆனால் யார் பொங்குகிறார்கள் என்று பார்ப்பார்கள். இதை விட அநியாய ஊழல் செய்தவர்களும் , இதைவிட மோசமாக சட்டத்தை வளைத்தவர்களும் திடீர் நீதி தேவன்களாக மாறி ஊளை சதையையும் தொப்பையையும் குலுக்கி குலுக்கி அழுதால் செம காமடி என சிரிப்புதான் வரும் மக்களுக்கு !

நன்றி: அராத்து முகநூல் பக்கம்.

Read More...

Sunday, May 10, 2015

நாளைய தீர்ப்பு

நாயகன் படம் வந்த போது, “நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்லை” என்ற வசனத்துக்கு எல்லோரும் கை தட்டினார்கள். அப்படி இருக்க, தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி பேருக்கு நல்லது நடக்கும் என்றால் எதுவுமே தப்பில்லை.

சத்தியமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் நம் தேசத்தின் நம்பிக்கை.
நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Read More...

Thursday, May 07, 2015

கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல்


சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து, அவருடன் பாதுகாப்புக் குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் தான் போலீஸில் புகார் கொடுத் தார். பின்னர் போலீஸ் தரப்பில் இருந்தும், பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கடும் நெருக்கடிகள் வந்துள்ளன. ஆனால், கடைசி வரை தனது புகாரில் உறுதியாக இருந்த கான்ஸ்டபிள், காச நோயால் பரிதாபமாக இறந்துள்ளார்.

சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப் பட்டது. அதனால், அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, சல்மான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.

சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிகமாக மது குடித்து விட்டு காரை தானே ஓட்டியுள்ளார் சல்மான்.

அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார். இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் பல பிரச்சினைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.

கார் விபத்து குறித்த வழக்கை முதலில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, எதைப் பற்றியும் கவலைப்படாத பாட்டீல், துணிச்சலாக நடந்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று சாட்சியம் அளித்தார். இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன.

நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார். சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடி யைத் தாங்க முடியாமல் தலைமறை வானதாக அப்போது கூறப்பட்டது. அத்துடன் போலீஸ் துறையில் இருந்தவர்களே, சல்மான் மீது கூறப்பட்ட புகாரை மாற்றி சொல் லும்படி நிர்பந்தம் கொடுத்தனர் என்று புகார் எழுந்தது. அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி கடந்த 2006-ம் ஆண்டு போலீஸார் பாட்டீலை கைது செய்தனர். அத்துடன் கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கினர்.

அதன்பிறகு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக பாட்டீல் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டி ருந்தார் பாட்டீல். அதனால், அவரது குடும்பத்தினரும் அவரை அநாதையாக விரட்டி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 அக்டோபர் மாதம் பரிதாபமாக பாட்டீல் இறந்து விட்டார்.

பாட்டீலை மருத்துவமனையில் சேர்த்தது அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் என்பவர் தான். அவர் கூறும்போது, ‘‘பாட்டீல் எனக்கு சிறந்த நண்பர்.

இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாட்டீல் என்னிடம் மனம் திறந்து பேசினார். ‘சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய போலீஸ் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை. எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும். ஒரு முறை போலீஸ் கமிஷனரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று கூறினார். ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்’’ என்றார்.

இப்போது சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இறந்தவர், படுகாயம் அடைந்த 4 பேருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பரிதாபமாக உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கும்தான் என்கிறார் அவரது நண்பர்.

நன்றி: தி.இந்து 

இன்றைய ஆங்கில செய்தி தலைப்பு கீழே: 

Salman Khan returns home for two nights, receives a heroic welcome from fans

Read More...

ஹீரோ வர்ஷிப்


ஆங்கிலத்தில் ஹீரோ வர்ஷிப் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

குடித்துவிட்டு குடிபோதையில் காரை ஓட்டி அது பிளாட்பாரத்தில் ஏறி ஒரு பேக்கரிக்குள் புகுந்து, இதில் பேக்கரிக்கு வெளியே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய ஒருவர் பலி, மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. உடனே நடிகர்கள் பட்டாளம் அவருக்கு ஆதரவாக களம் இரங்கியியிருக்கிறது. சல்மான் கான் வல்லவர் ரொம்ப நல்லவர் என்று புகழாரம் சூட்டுக்கிறார்கள். அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.கோர்ட் அவமதிப்பு வர கூடாது என்ற காரணத்துக்காக சட்டத்தை மதிக்கிறோம் என்று கடைசியில் ஒரு வார்த்தை. சல்மான் கான் செய்தது மிக பெரிய தவறு என்று அவர்கள் சொல்ல தவறிவிட்டார்கள்.

குடித்துவிட்டு கார் ஓட்டுவது தப்பு என்ற சின்ன விஷயம் கூட அவர்களூக்கு தெரியவில்லை. ஏன் என்றால் சப்போர்ட் செய்யும் பலர் இந்த மாதிரி குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பவர்கள். இது ஒரு சாதாரண குற்றம் இதற்கு எதற்கு 5 ஆண்டு ஜெயில் ? என்பது அவர்கள் வாதம்.

போன வாரம் ரிலீஸ் ஆன உத்தமவில்லன் படத்தில் கமலுக்கு முதலில் ஒரு காதலி, பிறகு மனைவி. பழைய காதலிக்கு கல்யாண வயசில் ஒரு மகள். மனைவிக்கு கல்யாண வயசில் ஒரு மகன் என்று இருக்க கமல் டாக்டர் ( ஆண்டரியாவுடன் ) ஜல்சா செய்கிறார்.

அவருக்கு மரணம் என்று தெரிந்தவுடன் அவர் செய்த தப்பு, துரோகம் எல்லாம் ‘பரவாயில்லை’ ரகமாகி அவர் மாமனாரே ( விஸ்வனாத் ) அவர் காலில் விழுகிறார். இதுவும் ஒரு வித ஹீரோ வர்ஷிப் தான்.

( உத்தமவில்லன் பாகம் இரண்டு எடுத்தால் அதில் சல்மான் கான் நடிக்கலாம். படத்தின் இரண்டாவது கதையாக ( தயவு செய்து அதை சுருக்கிவிடுங்கள் ) மனுநீதிச் சோழன் கதையை கொண்டு வரலாம். மக்கள் சூப்பார் என்று புகழ்வார்கள்.)


இதில் சிரிப்பு என்னவென்றால் பெண்கள் "Completely awestruck" என்று ஆதரவு தெரிவிப்பது தான்!



Read More...

Sunday, May 03, 2015

உத்தம வில்லன் - இட்லிவடை விமர்சனம்.

முதல் நாள் முதல் ஷோவிற்கு சென்று ஏமாந்து திரும்பி பின் டிவிட்டர், முகநூல் பக்கம் சென்றால் - கமலின் அடுத்த மைல் கல், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார் கமல், மூன்று மணி நேரம் படம் கொடுத்த பாதிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை என்ற கமெண்டுகளை பார்த்த பிறகு உடனே பார்த்துவிட வேண்டும் என்ற தூண்டுதலின் பெயரில் இன்று பார்த்தாகிவிட்டது.

படம் சுமார். ஏன் என்று சொல்லுகிறேன். கமல் படத்தில் என்ன பிரச்சனை என்றால் அவர் தான் படத்தின் ஆல் இன் ஆல் அழகு ராஜா. அவரே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எல்லாம் செய்துவிடுவார். திரைக்கதையில் வழக்கம் போல் சொதப்பிவிடுவார். அவர் யோசிக்கும் காட்சிகளை படமாக்கிவிடுவார் ஆனால் திரைக்கதையில் ஒட்ட வேண்டாமா ? இதிலும் அதுவே. படம் பார்த்த மக்கள் கடைசியில் அழுதுவிட்டேன் என்று சொல்லுவது எல்லாம் சுரேஷ் கண்ணன் காதில் விழுந்தால் கொலையே செய்துவிடுவார்.

இந்த படம் தமிழ் சினிமாவிற்கு புதுசு இல்லை, சாதாரண இரண்டு பொண்டாட்டி குடும்ப கதை. சினிமாவிலும் நிஜத்திலும் அதை சொல்ல முனைந்திருக்கிறார்.

கடைசியாக இரணியன் கதையை வித்தியாசமாக சொல்லுகிறேன் பேர்வழி என்று நரசிம்மரை சாகடிதத்து கமலின் முட்டாள் தனத்தை காண்பிக்கிறது. கமல் ரசிகர்கள் இதை மேதாவி என்பார்கள்.

இட்லிவடை மார்க் : 5.5/10

பின் சேர்க்கை:
ஏன் சார் படத்தில் அவ்வளவு இருக்கிறது சும்மா விமர்சனம் என்ற பெயரில் ஏதோ அச்சு பிச்சு என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று சில பேர் கேட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு என் பதில்:

படத்தின் கதையை நான் சொல்ல போவதில்லை. விஜய் படத்துக்கே இட்லிவடை கதை சொல்லாது. கமலின் நடிப்பு பற்றி ஒரு நண்பர் கேட்டிருந்தார். கமலின் நடிப்பு அருமை என்றால் நான் ஏதோ புதுசாக கண்டுபிடித்து சொல்லுவது போல ஆகிவிடும். கமல் எல்லா படத்திலும் அவர் பெஸ்டை கொடுத்துவிடுவார், இந்த படம் அதிக்கு விதிவிலக்கு இல்லை. ஆனால் நடிப்பு என்பது அவர் அழும், சோக சீன் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.

படத்தில் ஊர்வசி நன்றாக நடித்துள்ளார். அதை குறிப்பிட மறந்துவிட்டேன்.

மீண்டுன் சொல்லுகிறேன்.
படம் முதல் நாள் வரவில்லை என்ற செய்தி கொடுத்த இம்பாக்ட் படம் பார்த்த பிறகு வரவில்லை. அது தான் இந்த படத்தின் பெரிய குறை.

அடுத்த இன்பாக்ஸ் கேள்வி:
கமல் தன் மகனிடம் தனக்கு வந்திருப்பதை சொல்லும் சீன், அவர் இரணியன் மாதிரி வேஷம் போட்டு நடனம் ஆடும் காட்சி என்று பல காட்சிகளை அடுக்கிக்கொண்டு போகலாம். அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?

ஒரு கல்யாண புகைப்பட ஆல்பம் தயாரிக்கும் போது எல்லா புகைப்படங்களும் கல்யாண வீட்டார் பார்க்கும் போது நன்றாக இருப்பதாக தோன்றும். ஆல்பம் தயாரிக்கும் போது எல்லாவற்றையும் சேர்த்து மெகா சைஸ் ஆல்பம் தயாரித்துவிடுவார்கள். எல்லா படங்களும் நன்றாக வந்திருக்கும்.

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு அதை கொடுத்து பார்க்க சொல்லுவார்கள். வருபவர்கள் எல்லாம் முதலில் ஆர்வமாக பார்ப்பார்கள். பின்னர் அலுப்படைந்து வேகமாக திருப்பிவிட்டு “ஆல்பம் நன்றாக இருந்தது” என்று சொல்லுவார்கள்.

உத்தம வில்லன் அதே போல தான், ஒவ்வொரு சீனும் நல்ல புகைப்படம். ஆனால் சேர்த்து வைத்து பார்க்கும் போது தலையணை சைஸ் கல்யாண ஆல்பம் மாதிரி தான்.

Read More...