பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 17, 2014

கூடா நட்பும் ஒரு குட்டி கதையும் !


தேர்தல் சமயத்தில் இந்த செய்தியை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கலைஞர் டிவி முன்னாள் மேலாண் இயக்குநர் சரத்குமார் சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்தார் அதில் அவர் கூறியிருப்பது:

"2007-ஆம் ஆண்டு டிசம்பரில் மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது கலைஞர் டிவி தொடங்கப்பட்டபோது, அதன் நிர்வாக இயக்குநராகச் சேர்ந்தேன். இந் நிலையில், 2008-ஆம் ஆண்டில் மீண்டும் மாறன் சகோதரர்கள், கருணாநிதி குடும்பத்தாருடன் சேர்ந்தனர். அப்போது, என்னை மாறன் சகோதரர்கள் உடல் ரீதியாகத் தாக்கினர். அதில் எனது காலில் முறிவு ஏற்பட்டது.( அந்த சமயத்தில் தமிழகத்தில் கலைஞர் ஆட்சி தான் நடைப்பெற்றது. ஏன் ஒரு போலீஸ் கேஸ் கூட பதிவாகவில்லை ? )

தயாளு அம்மாள்தான் கலைஞர் டிவியின் 60 சதவீத பங்குதாரர். அவரது அறிவுரையின்படியே நான் முக்கிய முடிவுகளைச் செயல்படுத்தினேன். தயாளு அம்மாள் சார்பில் அவரது கருத்துகளைத்தான் கலைஞர் டிவி நிர்வாக குழு கூட்டங்களில் முன்மொழிந்தேன். நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.

சிபிஐ குற்றம்சாட்டியுள்ள ரூ. 200 கோடி தொடர்பான கலைஞர் டிவி நிதிப் பரிவர்த்தனை எனது கவனத்துக்கு உள்பட்டே நடைபெற்றது. அது சட்டப்பூர்வமான பரிவர்த்தனை. நான் அறிந்தவரை அப் பரிவர்த்தனையில் முறைகேடு எதுவும் கிடையாது. முறைப்படி வங்கிகள் மூலம்தான் பணம் கொடுக்கல் வாங்கலும் நடைபெற்றது. வரம்புக்கு உள்பட்டே நான் செயல்பட்டேன்.

அவை அனைத்தும் தயாளு அம்மாளுக்கு தெரிந்தே நடைபெற்றது. அதில் மறைக்க எதுவும் கிடையாது' என்றார் சரத்குமார்.

சங்கமித்திரன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு குரங்குகள் என்றால் மிகவும் பிரியம். ஆகையால் தன் அறைக்குள்ளேயே ஒரு குரங்கை வளர்த்து வந்தான். தன் படுக்கையறைக்குள் வருமளவுக்குச் சுதந்திரம் அளித்து வைத்திருந்தான் சங்கமித்திரன்.

ஒரு நாள் அரசவையில் அதன் அட்டகாசம் தாங்காது அமைச்சர்களும் மற்றவர்களும் குரங்கின் நட்பை விட்டுவிடுமாறு கூறினார்கள். அவர்களது அறிவுரையை ஏற்கவும் மறுத்தான் சங்கமித்திரன்.

ஒரு நாள் இரவில் தான் தூங்கப் போகும் போது குரங்கை தனக்கு விசிறி விடுமாறு சொல்லிவிட்டு ஆழ்ந்து தூங்கிப் போனான் அரசன். அப்போது ஒரு ஈ ஒன்று அவன் கழுத்தில் வந்து அமர்ந்தது. விசிறியால் மீண்டும் மீண்டும் விசிறியும் ஈ பறக்காமல் அமர்ந்திருந்தது. இதனால் கோபம் கொண்ட குரங்கு, "உன்னைக் கொன்று விடுகிறேன் பார்" என்று சொல்லி அரசனின் வாளால் அரசனின் கழுத்தில் அமர்ந்திருந்த ஈயை வெட்ட வாளை ஓங்கி வீசியது. அரசனின் கழுத்து துண்டானது.

கூடா நட்பு கேடாய் முடியும்.

குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
மீண்டும் மீண்டும் ஆராயாமல் கொள்கிற நட்பு, கடைசியில் ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

Read More...

Friday, May 16, 2014

அத்வானிக்கு ஓய்வு தேவை


பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாலும், நரேந்திர மோடிதான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பதை முழுதும் ஒப்புக்கொள்ளாத தொனியில் பேசியுள்ளார்.

பாஜகவின் இந்த எதிர்பாராத வெற்றிக்கு நரேந்திர மோடியின் பங்களிப்பு என்னவென்பதை இனிமேல்தான் மதிப்பிடவேண்டும் என்கிற தொனியில் அத்வானி பேசியுள்ளார்.

வெற்றிக் களிப்பில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்த அத்வானி வரலாற்றில் இந்திய இதுபோன்ற தேர்தலைச் சந்தித்ததில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் காங்கிரஸின் முடியாட்சிப் போக்குகளுக்கு எதிரான மக்களின் கோபமே பாஜகவின் இத்தகைய வெற்றியைத் தீர்மானித்துள்ளது என்று கூறினார் அத்வானி.

"கடந்த தேர்தல்களில் வெற்றி பெறாத தொகுதிகளிலெல்லம் இப்போது வெற்றி பெற்றுள்ளோம். அரசியலில் உள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து இந்த தேர்தல் முடிவுகள் கற்றுக்கொடுத்துள்ள பாடங்களைச் சிந்திக்கவேண்டும், இந்த வெற்றியில் மோடியின் தலைமை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக உள்ளிட்ட பிற அமைப்புகளின் பங்களிப்புகளை ஆய்வு செய்யவேண்டும். ஆனால் முடிவு ஊழல், முடியாட்சி மற்றும் மோசமான நிர்வாகத்திற்கு எதிரானதாகவே நான் கருதுகிறேன்"

அக்மார்க் காங்கிரஸ்காரர் மாதிரியே பேசுகிறார். பேசாமல் காங்கிரஸில் சேர்ந்துவிடலாம் !

Read More...

மோதிக்கு J !

வாழ்த்துகள் !

Read More...

டெல்லி பெல்லி - லைவ்

Read More...

Thursday, May 15, 2014

மலைச்சாமி நீக்கம்

நேற்று மலைச்சாமி நேற்று பேட்டி அளித்த போது “நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்ல நண்பர்; இருவரும் அரசியலால் பிரிந்திருந்தாலும், நட்பு ரீதியாக நெருக்கமாகத்தான் உள்ளனர். மோடி பிரதமர் ஆனால், அவருடன் நல்ல நட்புறவை முதல்வர் வளர்த்துக் கொள்வார்” என்று தன் சொந்த கருத்தை கூறினார். அதிமுகவில் சொந்த கருத்து என்று ஒன்று எப்போது கிடையாது. அம்மாவின் பர்மிஷன் வாங்கிக்கொண்டு தான் பேச வேண்டும் என்பது இவருக்கு தெரியாமல் போனது வியப்பளிக்கிறது.

இத்தகைய கருத்து கட்சியின் கொள்கைக்கு முரணாக இருப்பதாகக் கூறி, மலைச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளார்.


இதனால் தான் அதிமுக என்ற கட்சி ஒழுங்காக இருக்கிறது. பிஜேபி இதை கற்றுக்கொள்ள வேண்டும்.

Read More...

Wednesday, May 14, 2014

This Day That Age


உங்க கணிப்பு என்ன ?

Read More...

Tuesday, May 13, 2014

அம்மாவிற்கு 30 இடங்கள் ?

டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தி.மு.க. 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பிஜேபி என்ன சொல்லுவார்கள் ? ஹரன்பிரசன்னா என்ன சொல்லுவார் ?

Read More...

Thursday, May 01, 2014

ஜெயிக்கப் போவது யாரு ? - துக்ளக்

நன்றி: துக்ளக்
:)

Read More...