பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 31, 2014

அழகிரி என் நீண்டகால நண்பர் - எஸ்.வி.சேகர்

தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை, மதுரையில் அவரது வீட்டில் எஸ்.வி.சேகர் சந்தித்தார். அழகிரி, என் நீண்டகால நண்பர். மதுரை வரும் போதெல்லாம், அவரை சந்திப்பேன்; அதுபோலவே, இன்றைய சந்திப்பும் நடந்தது. சிவகாசியில், ஒரு நாடகம் நடத்துகிறேன்; அதற்கு அவரை அழைத்தேன். இச்சந்திப்பில் பொதுவான விஷயம் மட்டும் பேசினோம். எங்கள் நட்பு அரசியலை தாண்டியது. அ.தி.மு.க.,வில் இருந்தபோதும் சந்தித்துள்ளேன். என் கணிப்புப்படி, ஏப்., 14க்கு பின், அழகிரிக்கு எல்லாம் சரியாகி விடும் - செய்தி

சென்னை, திருப்பத்துார், திருத்தணி, வேலுார் பகுதிகளில், இயல்பளவை காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தர்பூசணி கடைகளுக்கு செல்கிறார்கள் - செய்தி
நீண்டகால நண்பர் - அப்படியா ?

Read More...

Wednesday, March 26, 2014

ஞாநி பேட்டி



Read More...

Tuesday, March 25, 2014

அழகிரி - நோ கமெண்ட்ஸ்

தி.மு.க.விலிருந்து மு.க.அழகிரி நீக்கம் - செய்தி

Read More...

Saturday, March 22, 2014

சும்மா பாருங்க !


நடுவுல ஏதோ சொல்றார். விமானம் பற்றி என்று நினைக்கிறேன் !

Read More...

மோடி அலை இல்லை தாக்கம் உண்டு! - சோ

நாட்டு நடப்புகள் குறித்து துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் கருத்துக்கள் படித்த, நடுத்தர வர்க்கத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அழுத்தமானதும், பரவலானதும் ஆகும். ஒரு பிரச்னையில் அவரது நிலைப்பாட்டுக்கு நேர் எதிராக உள்ளவர்கள் கூட ‘சோ’ என்ன சொல்கிறார் என்று உற்று கவனிப்பது உண்டு. மக்களவைத் தேர்தல் களம் கொதி நிலையை அடைந்து வரும் இன்றைய சூழலில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு, கூட்டணிகளின் நிலைப்பாடு, கட்சிகளின் பிரசாரம் உட்பட பல விஷயங்கள் தொடர்பாகப் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் மற்றும் சிறப்புச் செய்தியாளர் ப்ரியன் ஆகியோரின் கேள்விகளுக்கு இங்கே தனது பளிச் பதில்களைப் பதிவு செய்கிறார் சோ.

பா.ஜ.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும், தமிழகத்தில் கூட்டணி அமைக்க வேண்டுமென்று நீங்கள் தீவிரமாக முயன்றதாகத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தனவே!

இது குறித்து நான் தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் துக்ளக்கில் இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என்று எழுதி வந்திருக்கிறேன்."

தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பா.ஜ.க. இடங்களைப் பிரிப்பதற்கும், தொகுதிகளை ஒதுக்குவதற்கும் படாதபாடு படுகிறதே?

தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் பல விஷயங்களில் நேர் எதிரான கருத்துக்களைக் கொண்டவை. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே எப்போதும் உரசல்கள் இருந்து கொண்டே இருந்தன. இந்த இரண்டையும் கூட்டணிக்குக் கொண்டு வந்ததே பா.ஜ.க.வின் பெரிய சாதனைதான்."

மோடி மீதுள்ள 2002 கலவரக்கறை இன்னமும் அகற்றப்படவில்லையே!

இந்தக் கலவரம் குறித்து பல்வேறு நீதிமன்ற மட்டங்களில் ஏகப்பட்ட விசாரணைகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள், தங்கள் அரசியல் லாபத்துக்காகவும், சிறுபான்மையினரின் வோட்டுக்காகவும், தொடர்ந்து இது குறித்து மோடியை விமர்சித்து வருகிறார்கள்."

குஜராத்தின் வளர்ச்சி குறித்து ஒரு பக்கம் ‘ஓஹோ’ என்று பாராட்டும் போக்கும் ‘எல்லாம் மீடியாவின் கட்டுக்கதை’ என்ற விமர்சனமும் வருகிறதே?

குஜராத்தில் வளர்ச்சியே இல்லை என்று சொல்வது பொய். அந்த மாநிலத்தில் நடந்த வளர்ச்சியை எல்லோரும் பார்க்கிறார்கள்; பாராட்டுகிறார்கள்.

நீங்கள் (கல்கி) போய் பார்த்து விட்டு வந்து எழுதினீர்கள். நாங்களும் (துக்ளக்) பார்த்துவிட்டு வந்தோம். மோடி தலைமையில் குஜராத்தின் வளர்ச்சி குறித்து பல வருடங்களாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு இப்போது விமர்சனம் வைக்கப்படுகிறது."

அரசியல் சட்டம் 370, ராமர் கோயில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றைக் குறித்த கருத்தை பா.ஜ.க. தேர்தலையொட்டி தெளிவுபடுத்த வேண்டும் என்று சிதம்பரம் சொல்கிறாரே!

இந்தச் சர்ச்சைக்குரிய பிரச்னைகளைப் பற்றி பலமுறை பா.ஜ.க. சொல்லியிருக்கிறது. பா.ஜ.க. தனித்தே பெரும்பான்மை பெறும்போதுதான் இவை குறித்த மேல் நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் கூட்டணி அரசை நடத்தும்போது இவை குறித்து பேச மாட்டோம் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு."

பா.ஜ.க. தனித்தே பெரும்பான்மை பெற வாய்ப்பிருக்கிறதா?

நாடு முழுவதும் மோடியின் தாக்கம் இருப்பதால் கூடுதலாக வோட்டு கிடைக்கும். பா.ஜ.க. தனித்தே பெரும்பான்மை பெற்று விடும் என்று நம்புவதற்கு ஏற்ற சூழல் இன்னமும் உருவாகவில்லை."

காங்கிரஸ் மீது பா.ஜ.க. வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு: ஊழல். இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடியூரப்பா, ஸ்ரீநிவாசலு போன்றவர்களை கட்சி யில் இணைத்துக் கொள்ளும் பா.ஜ. க.வுக்கு தார்மிக ரீதியில் காங்கிரஸை குற்றம்சாட்ட உரிமையிருக்கிறதா?

ஊழல் குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தமட்டில் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்காத வரை ஒருவரை குற்றவாளி என்று சொல்ல முடியாது. கனிமொழி கைதானபோது இதைத்தான் எழுதியிருக்கிறேன். ஆனால் அதேசமயம் வலுவான புகார்கள் எழுப்பப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஏஜென்ஸிகள் விசாரணை செய்யும்போது மீடியாக்களும், எதிர்கட்சியினரும் அந்த ஊழல்கள் குறித்து பேசத்தான் செய்வார்கள். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. பா.ஜ.க.வில் மேல்மட்டத் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கிடையாது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைவர்கள் கட்சியில் இணைவதை மக்கள் அனுமதித்தால் நாம் என்ன செய்ய முடியும்?"

மோடி குறித்து சிறுபான்மையோரிடம் ஒரு அச்ச உணர்வு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

அவர்களிடம் எந்தப் பயமும் இருப்பது போன்று எனக்குத் தெரியவில்லை. குஜராத்தில் இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொள்ளும் முதல்வராகத்தான் மோடி இருக்கிறார். நீதிபதி சச்சார் கூட குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு மோடி அரசு செய்துள்ளவைகளை பாராட்டியிருக்கிறார். ஆனால் குஜராத்தைத் தவிர நாட்டில் வேறெங்கும் சிறுபான்மையோரின் வோட்டு பா.ஜ.க.வுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. மோடி தலைமையில் வரும் காலத்தில் மத்திய அரசு அமையுமானால் நாடு முழுவதும் சிறுபான்மையோரிடம் இப்போதுள்ள கண்ணோட்டம் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு."

பெரும்பான்மை சமூகத்தின் வோட்டுக்களை ஒட்டுமொத்தமாக அள்ள சிறுபான்மையோரை டார்கட் செய்யும் யுக்தியை பா.ஜ.க. கடைப்பிடிக்கிறதா?

இதுபோன்ற யுக்தியால் பெரும்பான்மை வோட்டுக்களை கணிசமாக பெற முடியாது. பெரும்பான்மை வோட்டு என்பது, ஜாதி, சமயம், பிராந்திய உணர்வுகளால் தூண்டப்பட்டு, பல திசைகளாகத்தான் பிரியும். ஒரே திசையில் போகும் என்று சொல்ல முடியாது."

ஜெயலலிதா தனது பிரசாரத்தில் காங்கிரஸை காய்ச்சி எடுக்கிறாரே தவிர பிரதமர் வேட்பாளர் ஆன மோடி பற்றியோ, பா.ஜ.க. பற்றியோ எதுவும் பேசுவதில்லையே?

ஏன் பேச வேண்டும்? பத்தாண்டு காலம் இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸின் செயல்பாடுகளை விமர்சிப்பதுதானே சரியான அணுகுமுறையாக இருக்கக்கூடும்."

ஒருவேளை, தேர்தலுக்குப் பிறகு எது போன்ற சூழல் உருவாகும் என்பது புதிராக இருப்பதால், பா.ஜ.க. குறித்த விமர்சனத்தைத் தவிர்க்கிறாரா ஜெயலலிதா?

தேர்தலுக்குப் பிறகு யார் எங்கு போவார் என்பதை ஊகிக்க முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு வருமானால் மோடியே பிரதமராக வேண்டும். ஏதேனும் காரணங்களால் இது நடக்காமல் போனால், பிரதமர் பதவிக்கு ஜெயலலிதாவை பரிந்துரைத்து பா.ஜ.க. ஆதரவு கொடுக்க வேண்டும். இந்தக் கருத்தை முன்பே நான் சொல்லியிருக்கிறேன்."

ஈழப் பிரச்னையில், பொது வாக்கெடுப்பு, ராஜபட்சே மீது விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை என்று தீவிரமாகச் செயல்படுகிறார் ஜெ. ராஜீவ் கொலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னவுடன் ஏழு கைதிகளை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கிறார். தேர்தலில் ஆதரவைக் கூட்டுவதுதான் இந்த தீவிர செயல்பாடுகளின் நோக்கமாக இருக்குமோ?

நீங்கள் பட்டியலிட்ட ஜெயலலிதாவின் இந்த எல்லா செயல்பாடுகளிலும், என் சிந்தனை நேர் விரோதம். அடுத்து தமிழ்நாட்டில் ஈழப்பிரச்னை ஒரு தேர்தல் பிரச்னை கிடையாது. அப்படியிருந்தால் வைகோ, தனது வோட்டு சதவிகிதத்தை உயர்த்திக் கொண்டு முதல்வராகியிருக்கலாமே. ஈழத் தமிழர்கள் மீது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அனுதாபம் உண்டு; பரிவு உண்டு. அவர்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற ஏக்கம் உண்டு."

பத்தாண்டு காலம் மத்திய அரசில் இருந்த நாங்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லும் ஜெயலலிதா 1998-99ல் ஒரு வருடம் பா.ஜ.க. அமைச்சரவையில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு செய்ததென்ன என்று கேட்கிறாரே ஸ்டாலின்?

தி.மு.க. செய்த கெடுதல்கள் காரணமாக, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியும், நியாயமும், ஒத்துழைப்பும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. எனவே தான் மத்திய அரசில் முக்கிய பங்களிப்பை பெறும் வகையில் மக்களவைத் தேர்தலில் வெற்றியை அளிக்குமாறு மக்களை வேண்டுகிறார் ஜெயலலிதா. பத்து வருடம் மத்திய அரசில் இருந்து உருப்படியாக எதுவும் செய்யாத தி.மு.க. ஒரு வருடமே பங்கு பெற்ற ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி கேக்கற உரிமை இல்லை."

தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி?

இந்தத் தேர்தலில் பெரிய தோல்வியை தி.மு.க. சந்திக்கும். ஆனால் கட்சி இருக்கும்; மறையாது."

தி.மு.க. தோல்விக்கு அழகிரியும் காரணமாக இருப்பாரோ?

தென் மாவட்டங்களில் தி.மு.க.வின் தோல்விக்கு அழகிரி விவகாரம் ஒரு காரணமாக இருக்கக்கூடும்."

தமிழ்நாட்டில் மோடி அலை அடிப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சொல்கிறார்களே!

மோடி அலையில்லை; ஆனால் தாக்கம் உண்டு."

நன்றி: கல்கி

Read More...

இப்படி போனா 200 ரூபா பணமாம்

நன்றி: தினமலர்

படத்திலேயே மஞ்சள் நிறைய இருக்கு கமெண்ட் தேவை இல்லை :-)

Read More...

Friday, March 21, 2014

இரண்டு கைகள் சேர்ந்து


இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை ஓட்டு விழும்:-)

Read More...

Thursday, March 20, 2014

:-)





ராஜ்நாத் சிங் தமிழ்நாட்டிலிருந்து ஊருக்கு போகும் போது இந்த மாதிரி டான்ஸ் ஆடினாலும் ஆடுவார்கள்.

Read More...

வாழ்த்துகள்





தேர்தல் கருத்துக் கணிப்பு எதுவும் சரியாக இருக்காது என்பதற்கு இது சாட்சி :-)

Read More...

Tuesday, March 18, 2014

இட்லிவடை வாசகர்களுக்கு மீண்டும் ஞாநி பதில் அளிக்கிறார்!

ஞாநிக்கு அறிமுகம் தேவை இல்லை. இரண்டு வருஷம் முன் இட்லிவடை 10ஆம் ஆண்டு ஸ்பெஷலாக பத்திரிகையாளர் திரு ஞாநி அவர்களின் பேட்டி இட்லிவடையில் வந்தது.

தற்போது ஞாநி 'ஆம் ஆத்மி’ கட்சியில் இணைதுள்ளார்.  மீண்டும் இட்லிவடைக்கு பேட்டி தர ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு எங்கள் நன்றி.

பேட்டி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும்.


வழக்கம் போல கேள்விகளை பின்னூட்டத்தில் கேட்கலாம்.



Read More...

உடனே ஓட்டு போடுங்க

12 தொகுதிகளில் போட்டியிடுவதாக பாமக தன்னிச்சையாகஅறிவித்ததை தொடர்ந்து பிஜேபி கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறலாம் என்று அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.

தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்பட 12 இடங்களில் போட்டியிடும் என்று பாமக அறிவித்தது. இதை தவிர தருமபுரியில் அன்புமணி போட்டியிடுவார் என்று டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இது பிஜேபி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிஜேபியின் தலைவர் ராஜ்நாத் சிங் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் பாமகவின் அறிவிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக பிஜேபி வட்டாரங்கள் கருதுகின்றன. முடிந்தவரை பாமகவுடன் பேசி சமரச முடிவை எட்ட முடியும் என்று பிஜேபி தலைவர்கள் எண்ணுகின்றனர். இல்லையென்றால் பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றலாம் என்று கருதுவதாக தெரிகிறது.

உங்க ஓட்டை சைடுல குத்துங்க.. :-)

Read More...

பழைய பேப்பர்

நன்றி: TOI
2014ல் எப்படி இருக்கும் ?

Read More...

Monday, March 17, 2014

பிஜேபியின் தமிழ்நாட்டுக்கூட்டணி சொதப்பல் - எ,அ.பாலா

ஆரம்பத்திலிருந்தே இந்தக் கூட்டணி குழப்பத்திற்கு முக்கியக்காரணம், பிஜேபி பிராந்தியக் கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளை மிகப்பெரிய செல்வாகுள்ள கட்சிகள் போல பாவித்து அவற்றை ஏற்றி விட்டது தான்! பிஜேபிக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவு செல்வாகு இல்லாதபோதிலும், ஒரு தேசியக்கட்சி என்ற முறையில் (ஜூனியர் பார்ட்னர் போல அல்லாமல்) கூட்டணி பேச்சு வார்த்தையை ஆரம்பத்திலிருந்தே அணுகியிருக்க வேண்டும். திமுக அல்லது அதிமுக என்ற 2 பெரிய கட்சிகளைத் தவிர வேறு யாருடன் கூட்டு சேர்ந்தாலும், பிஜேபிக்கு 2, மற்றவைக்கு 4 (அதிகபட்சம்) என்ற அளவில் தான் வெற்றி வாய்ப்பு (தேர்தலுக்குப் பின் பாமக ஆதரவு தருவது கூட ஸ்திரமான ஒன்று அல்ல!) என்ற நிலையில் (Nothing to Lose), மோடியால் சற்றே வாய்ப்பு கூடிய நிலையில், பேச்சு வார்த்தையில் உறுதியில்லாமல் ஈடுபட்டது மோசமான அணுகுமுறையே!

பிஜேபி தொண்டர்கள் சரியான கடுப்பில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏதோ “மோடி அலை” என்று சொல்லப்படுவதின் மூலம் கிடைத்த அனுகூலமும் போய்விட்டது போலத் தெரிகிறது. ஒப்புக்குச் சப்பாணி கட்சிகளிடம் ஒப்புக்குச் சப்பாணி ஆட்டம் ஆட வேண்டிய அவசியமே பிஜேபிக்கு இல்லை! ஒரு தேசியக்கட்சிக்கு தெளிவு தேவை, தமிழக பிஜேபி தலைவர்கள் எப்படியாவது கூட்டணி ஏற்பட்டு தாங்கள் தமதமது தொகுதிகளில் வென்று, தில்லிக்குச் செல்வதில் குறியாக இருந்தனர் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. பிஜேபி தனக்கு வேண்டிய சீட்களில் (5-6) உறுதியாக இருந்திருக்க வேண்டும். இவற்றில் திருச்சி, சேலம் முக்கியமானவை.

பா.ம.கவும் தே.மு.தி.கவும் ஆரம்பத்திலிருந்தே பூனையும் எலியும் என்ற நிலையில், இத்தனை இழுத்தடிக்காமல், மதிமுக கூட்டணி போல தே.மு.தி.கவுடன் கூட்டணியை பேசி முடித்திருக்க வேண்டும். பா.ம.க கூட்டணியில் இல்லாவிட்டால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை! பேச்சு வார்த்தை நடத்தியவர்களுக்கு அனுபவம் குறைவு என்று ஒரு சீனியர் பிஜேபி தலைவர் (?) கூறுகிறார்.

கடைசியில் நிலைமையைப் பாருங்கள்! பா,ம,க சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை தொகுதிகளுக்கு (தேமுதிகவுக்கு கூட்டணியில் தரப்பட்டவை) தன்னிச்சையாக வேட்பாளர்களை இன்று அறிவித்து விட்டது. இந்தக் குழப்பம் போதாதென்று, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது! அடுத்து, இந்த (மறைந்து கொண்டிருக்கின்ற) வானவில் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்ட தமிழருவி மணியன், தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். அவருக்கு என்ன ஊடலோ?!? பாமகவுக்கு தர்மபுரி (அன்புமணி ராமதாஸ்) ஒதுக்கப்பட்டது தெரிந்தும், விஜய்காந்த், நேற்றைய பிரச்சாரக் கூட்டத்தில், பிஜேபி தர்மபுரி தொகுதியை யாருக்கும் இன்னும் ஒதுக்கவில்லை என்கிறார்!

என்ன கொடுமை இது மோடிஜி!

---எ.அ.பாலா
மோடி வண்டி ஓட்டுகிறார் என்றால் இன்னும் எவ்வளவு பேர் ஏறிக்கொள்வார்களோ. ஓட்டுவதற்கு முன் ஸ்டாண்ட் எடுக்க வேண்டும்.. எடுப்பார்களா ?

Read More...

Sunday, March 16, 2014

திரும்பவும் சிக்கல்


ஒருவழியாக தொகுதிகளின் எண்ணிக்கையை பிஜேபி கூட்டணி நேற்று உறுதி செய்தனர். அதன்படி தே.மு.தி.க.–14, பா.ஜனதா–8, பா.ம.க.–8, ம.தி.மு.க.–7, ஐ.ஜே.கே.–1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி–1 என்று உறுதி செய்யப்பட்டது. இன்று கூட்டணி தலைவர் என்ற முறையில் விஜயகாந்தை பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விஜயகாந்தை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தை போது இரவு பகல் பாராமல் காபி, பிஸ்கெட் வேர்கடலை என்று சாப்பிட்டுவந்த தலைவர்களுக்கு இந்த கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது பெரிய ஆறுதலாக இருந்தது. சரி இனி கூட்டணி கட்சி தொண்டர்கள் கட்சி தொண்டர்கள் ஒருங்கிணைந்து உடனடியாக தேர்தல் பணியை தொடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று இந்த தொகுதி உடன்பாட்டை ஏற்க பா.ம.க. மறுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி உடன்பாட்டில் நேரடியாக தலையிடாமல் இருந்து வரும் அன்புமணி மேற்கண்ட முடிவுகளை கடுமையாக கண்டித்துள்ளார். இந்த கடுமையான குழப்பத்தில் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்று ஆலோசித்து வருகிறார்கள் என்று செய்தி வருகிறது.

நேற்று பா.ம.க. வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளான ஆரணி, அரக்கோணம் தொகுதிகளில் பிரசாரம் செய்த விஜயகாந்த் பா.ம.க. வேட்பாளர்கள் பற்றி குறிப்பிடாததும் பா.ம.க.வினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் அன்புமணி போட்டியிட உள்ளார். இங்கு வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

அதற்கு முன்பாக தர்மபுரியில் மாலை 5 மணிக்கு டாக்டர் ராமதாஸ் கூட்டணி நிலவரம் குறித்து அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அன்புமணி, ஜெ.குரு, ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், கேட்ட தொகுதி கிடைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை ராமதாஸ் எடுப்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மீண்டும் ஏற்பட்டுள்ள சிக்கல் பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பிகு: தே.மு.தி.க., பா.ம.க., தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி என்ற செய்தியும் வருகிறது.


Read More...

(மல) சிக்கல் தீர்ந்தது

பாஜக கூட்டணியில் கடந்த சில நாள்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார்.

தேமுதிகவுக்கு - 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸýக்கு 1 என மொத்தம் உள்ள 40 தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

பா.ஜ.க. வுடன் கூட்டணியை உறுதி செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, மதிமுக தலைவர் வைகோ, பா.ம.க சார்ப்பில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Read More...

Saturday, March 15, 2014

பிஜேபிக்கு ஊழல் பிரச்சனை இல்லை

"I want to make it absolutely clear that B Sriramulu has been admitted in the party despite my stiff opposition." - Sushma Swaraj

"The leaders must not divert attention from larger issues" - Arun Jaitley


பா.ஜ.க. உட்கட்சிப் பூசல் ஓயவில்லையோ என்று கருதும்படியாகவே, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தலைமைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள் அமைந்துள்ளன. இவர்களைப் போன்ற ‘முக்கியஸ்தர்கள்’ தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன விதங்களில் மோடிக்குத் தொல்லைகள் தரப் போகிறார்களோ! மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டால் கட்சிக்குள் யார் யாரிடம் இருந்து, என்னென்ன தொந்தரவுகள் தலைதூக்குமோ? கட்டுப்பாடு சீர்குலைவு அக்கட்சிக்கு நல்லதல்ல. - சோ




அப்ப பிஜேபிக்கு ஊழல் பெரிய விஷயம் இல்லை என்று தொன்றுகிறது. எடியூரப்பா, இப்ப ஸ்ரீராமலு..

Read More...

வண்டி பஞ்சர் ?


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தேமுதிக தனியாக விடப்படும் என்று தெரிகிறது. கூட்டணியில் தாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தர வேண்டும் என்று தேமுதிக முரண்டு பிடிப்பதும், கூட்டணிக்காக எந்தத் தொகுதியையும் விட்டுக் கொடுக்காமல் சட்டாம்பிள்ளைத் தனம் செய்வதும், பாஜக தலைமையை வெகுவாக வருத்தப் பட வைத்துள்ளது.- செய்தி

பஞ்சர் ஆன வண்டியில் ஏறினால் என்ன ஏறாவிட்டால் என்ன ?

Read More...

நான் ஆர்.எஸ்.எஸ்காரன் - ஹரன்பிரசன்னா


கூடிய சீக்கிரம் ஹரன்பிரசன்னாவிற்கும் ‘Z' பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கும்.

Read More...

துண்டு செய்யும் மாயம்

தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்த தேமுதிகவின் செயல் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜ பொறுப்பாளர் முரளிதரராவ் கூறினார். யாருக்கு எவ்வளவு சீட் என்று முடிவு செய்துவிட்டார்கள் ஆனால் எந்த தொகுதி என்பதில் தான் பிரச்சனை. இன்று மாலைக்குள் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நரேந்திர மோடி அலை இருக்கிறதா என்று தெரியாது ஆனால் தேமுதிக இல்லாமல் அந்த கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்காது. பிஜேபி பேசாமல் பாமக போன்ற ஒரு ஜாதி வெறி பிடித்த கட்சியை கழற்றிவிட வேண்டும்.

நேற்று பிரச்சாரத்தை ஆரம்பித்த கேப்டன், பிஜேபி பற்றியும் மோடி பற்றியும் ஒரு வார்த்தை பேசவில்லை. அதனால் பிஜேபியுடன் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது. நேற்றி தன் பேச்சை ஆரம்பித்த கேப்டன் “என்னுடைய பேச்சு முன்ன பின்ன இருக்கும்...” என்றார்.

போக போக இன்னும் காமெடியாக இருக்க போகிறது.


ஞாநி நேற்று புதிய தலைமுறை ”நேர்படப்பேசு (மோடிக்கு ஆதரவாக ஊடகங்கள் பிரசாரம் : கெஜ்ரிவால் புகார் - உள்நோக்கம் - உண்மையானது) ” நிகழ்ச்சியில் நிறைய ஜோபி வைத்த கருப்பு சட்டைக்காரர், ஒரு பத்திரிகையாளருடன் கலந்துக்கொண்டார் ஞாநி. ஆம் ஆத்மி என்ற ஒரு அரசியல் துண்டை போட்ட பிறகு ஞாநி கூட அரசியல்வாதி போல பேச ஆரம்பித்துவிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மேல் துண்டுக்கு ஒருக்கும் சக்தியை பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இனி ஞாநி பேச்சு கூட விஜயகாந்த் பேச்சு போல ’ முன்ன பின்ன இருக்கும்’ போல

Read More...

Friday, March 14, 2014

அதிமுகவுக்கு 27; திமுகவுக்கு 10 - என்.டி.டி.வி

Read More...

இன்று காரடையான் நோன்பு




ஒரு நாளும் தங்கள் கணவர்(ன்) அவர்களை விட்டு நீங்காதிருக்க வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்திருக்கும் ஞாநி அந்த கட்சியை விட்டு நீங்காதிருக்க பிராத்திப்போம்.

Read More...

மனஅமைதிக்காக ரஜினியை சந்தித்தேன்-அழகிரி

நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, அழகிரி சந்தித்தார்.
இதற்கு முன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் அழகிரி சந்தித்தார்.

இந்த வரிசையில் இன்று ரஜினியை சந்தித்துள்ளார்.

”ரஜினிகாந்த் எனது நலம் விரும்பிகளில் ஒருவர். எனது மன அமைதிக்காக நான் அவரை சந்தித்தேன்” - அழகிரி


புதிய கட்சிக்கு என்ன பெயர் ?

Read More...

உங்க ஓட்டு யாருக்கு ?

தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதை போல தினமும் பிஜேபி கேப்டன் கூட்டணி இழுத்துக்கொண்டு போகிறது.

அவர்கள் முடிவு செய்யும் முன் ’சைடு பார்’ தேர்தலில் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்
.
யார் யாருக்கு எவ்வளவு தொகுதி வரும் என்று பின்னூட்டத்தில் சொல்லலாம்.

Read More...

Sunday, March 09, 2014

சாராய-சக்கரைபொங்கல் கூட்டணி !

திமுக, காங்கிரஸ், தேமுதிக ஒரு அணியாக இருக்கும் என்று சில மாதம் முன் கழுகு-குருவி எல்லாம் ஜோசியம் சொன்னது. ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் வட மாநிலங்களில் சந்தித்த தோல்வியைக் கண்டு திமுக சுதாரித்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் வரும் கொஞ்ச நஞ்ச ஓட்டுகள் கூட வராது என்று முடிவுக்கு வந்தது. தமிழ் உணர்வு போன்ற காரணங்கள் எல்லாம் சும்மா.

தேமுதிக பக்கம் சாயலாம் என்று ஸ்டாலின், கலைஞர் அழைப்பு விடுத்த போது அழகிரி விஜயகாந்த் பற்றி தன்னுடைய பேட்டியில் தாக்க அந்த கூட்டணிக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது. திமுக கதவு மூடப்பட்டுவிட்டது என்று தினமும் அவர்கள் சொல்லுவதைப் பார்க்கும் போது பாவமாகவும் அதே நேரத்தில் காமெடியாகவும் இருக்கிறது. தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் வரும் என்று சொல்லவில்லை வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று பெரியவர் சொல்கிறார். அழகிரி சொன்னதுபோல காயிதே மில்லத் போன்றவர்களுடன் கூட்டணி பேசிய திமுக இப்போ காய்ந்தவர்களுடன் கூட சேரப் ப்ரயத்தனப்படுகிறது. அது முடியாமல் கஷ்டப்படுகிறது.

அம்மா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே வேட்பாளர் பட்டியலை அறிவித்து, சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இடது வலது என்று யார் வந்தாலும் வரட்டும் வராமல் போனால் போகட்டும் என்று போகும் இடம் எல்லாம் காங்கிரஸ் மற்றும் திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறார். பிஜேபியைப் பற்றி இதுவரை ஒன்றும் சொல்லவில்லை.  இனி விஜய்காந்த் அந்த பக்கம் சாந்த பின் அம்மாவின் தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றம் இருந்தாலும் இருக்கலாம்.

அப்படியே தாக்கினாலும், விஜயகாந்த் பற்றி சொல்லி அனாவஸ்யமாக அவரைத் தூக்கிவிட அம்மா தயாராக இருக்க மாட்டார். அவருடைய பர்மனென்ட் எதிரி கலைஞர் தான்!.

விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்று தினமும் அவர் பலரையும் யோஜிக்க வைக்கிறார். ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்குப் காங்கிரஸ் கூட்டணிக்காக பிரதமரைச் சந்திக்கிறார். பிறகு பிஜேபி தலைவரைச் சந்திக்கிறார். அவர் சந்தித்துக்கொண்டு இருக்கும் போது அவர் கட்சி எம்.எல்.ஏக்கள் அவரை விட்டு பிரிந்து அதிமுக பக்கம் போகிறார்கள். அவருடைய படத்தில் கூட இந்த அளவு திரைக்கதை இருக்காது ஆனால் அவருடைய தேட்தல் கூட்டணி சினிமாவில் கேப்டனின் திரைக்கதை செம விறுவிறுப்பு.

தற்போது விஜயகாந்த் தலைமையில் பிஜேபி கூட்டணி என்ற காமெடி தாங்க முடியவில்லை. தமிழக பிஜேபின் நிலமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இன்று பொன் ராதாகிருஷ்ணன் எந்த கட்சிகளும் ஒத்த கொள்கைகளை கொண்டவை அல்ல. ஆனால், அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் கூட்டணி சேர்வது வழக்கமான ஒன்று. எனவே, எங்கள் கூட்டணியில் தே,மு,தி.க., பா.ம.,க., கட்சிகள் சேர்வதில் எந்த குழப்பமும், பிரச்னை இல்லை. தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று சொல்லும் போது கொங்கு நாடு கட்சி பிஜேபி கூட்டணிலேந்து விலகல் என்ற நியூஸும் சேர்ந்து வருகிறது. கொங்கு நாடு என்ற கட்சிக்கு இவ்வளவு ரோஷம் இருந்தால், பாமகவிற்கு எவ்வளவு இருக்க வேண்டும்? தேமுதிக தலைமை என்றால் பிஜேபியே கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும்.

விஜயகாந்த் கட்சி இருக்கும் இடத்தில் பாமக ஓட்டுப் போடாது, அதே போல பாமக நிற்கும் இடங்களில் தேமுதிகவின் ஓட்டு விழாது. காங்கிரஸ் கட்சி, பிஜேபிக்கு என்று தனியாக பெரிய ஓட்டு வங்கி இல்லை. தற்போது இருக்கும் நிலைமையில் அதிமுகவிற்கு சான்ஸ் அதிகம் என்று தோணினாலும் கொள்கையில்லாக் கூட்டணிகள், கொசுறு கம்யூனிஸ்ட்கள் என்று பல வகையிலும் பிரியும் ஓட்டுகளும், ஏப்ரலில் சனி-குரு சஞ்சாரமும் அம்மாவின் ஆசைக்கு முடிவு சொல்லும்.


தமிழக தேர்தல் கூட்டணி சாராயமும் சக்கரைபொங்கலும் சேர்ந்த காக்டெய்ல் இனி இரண்டு மாதத்துக்கு நமக்கு கொண்டாட்டம் தான் !

Read More...

Wednesday, March 05, 2014

வந்துவிட்டது


கோச்சடையான் தேர்தலுக்கு முன் வருமா அதற்கு பின் வருமா ?

Read More...

Tuesday, March 04, 2014

40 தொகுதிகளுக்கும் திமுகவில் வேட்பாளர் நேர்காணல் முடிந்தது



“இன்னிக்கு வீட்டுல என்ன ஸ்பெஷல்”
“பருப்பு சோறு, மீன் குழம்பு”
“உங்க வீட்டில ?”
“தெரியாது இனிமே தான் போய் சாப்பிடணும்”
“நீங்க செலக்டட்... சீக்கிரம் போய் சாப்பிடுங்க.”

Read More...