பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 29, 2014

டி.ஆர்ர்ர்ர்ர்ர்

டிசம்பர் செய்தி:
வெள்ளிக்கிழமை காலை தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி என்னை சந்தித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அழைப்பை ஏற்று நான் கருணாநிதியைச் சந்தித்தேன்.

என்னிடம் மனம் விட்டு அவர் பேசினார். தன் கூடவே இருக்க வேண்டுமென்று அன்பு கட்டளையிட்டார். உன் லட்சியமே தி.மு.க.வில் இருப்பதுதான். ஆகவே, தி.மு.க-வில்தான் நீ இருக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை. இப்போது அவரின் வார்த்தையை மீறும் சக்தி எனக்கு இல்லை.

சிறு வயதில் நிலவைக் காட்டி குழந்தைகளை வளர்ப்பதைப் போல, கருணாநிதியைக் காட்டிதான் என்னை எனது பெற்றோர் வளர்த்தனர். அரசியல் உட்பட எல்லாத் துறைகளிலும் கருணாநிதிதான் எனது குரு. ஆகவே, தி.மு.க-வில் நான் சேர வேண்டும் என்ற அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சியின் தலைவரான கருணாநிதிதான் முடிவு செய்வார். எனது பிரசாரம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்குமா அல்லது பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் இப்போது எந்த முடிவும் செய்யவில்லை'

ஜனவரி செய்தி:
கேள்வி:– கருணாநிதியை சந்தித்தீர்களே? தி.மு.க.வில் சேர்ந்து விட்டீர்களா?

பதில்:– கலைஞரை நான் சந்தித்தது ஒரு காட்சி. அதன் பிறகு நடப்பதற்கு பல காட்சிகள் உள்ளன. எல்லா காட்சிகளையும் இப்போதே சொல்லி விட முடியாது. மூன்று ரூபாய் கொடுத்து தி.மு.க. அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை என்பதற்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அந்த அட்டையை வாங்கினால்தான் தி.மு.க.வில் சேர்ந்ததாக அர்த்தம்.

பாரதீய ஜனதா கட்சியில் சேர என்னை அழைத்தனர். நான் மறுத்து விட்டேன் என் அரசியல் குரு ஆற்காடு வீராசாமி கையை பிடித்து அழைத்து போய் கலைஞரை சந்திக்க வைத்தார். காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததால் நானும் போனேன்.

இரண்டு படங்களுக்கும் குறைந்தது 10 வித்தியாசம் இருக்கிறது. அது என்ன ?

Read More...

Tuesday, January 28, 2014

மஹாபாரத சீசன்



இது மஹாபாரத சீசன் என்று நினைக்கிறேன். விஜய் டிவியில் மஹாபாரதம் புதிதாக வருகிறது. சன் டிவியிலும் வருகிறது என்று நினைக்கிறேன். ஜெயமோகன் 10 வருஷத்துக்குத் தொடர் ஆரம்பித்துள்ளார்...... ஆனால் இதை எல்லாம் கோபாலபுரத்து மஹாபாரதம் தூக்கி சாப்பிட்டுவிடும் என்று நினைக்கிறேன்.

இன்றைய அத்தியாயத்தில் அழகிரி சொன்ன வார்த்தைகள் தந்தையை மிகவும் நொந்து போகச் செய்துள்ளது. கலைஞருக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்து. போன தேர்தலில் ஸ்டாலினை முன்நிறுத்தியிக்கலாம் செய்யவில்லை. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு, அழகிரிக்கு டெல்லி என்று பிரித்துப் பார்த்தார். முடியவில்லை.

ஞாநி கலைஞர் ஒய்வு எடுக்க வேண்டும் என்று எழுதிய போது “பூணூல் ஆசாமி” என்று மைக் பிடித்து வசைப்பாடினார்கள். அப்போது கூட்டத்தில் கலந்துக்கொண்டு வசைப்பாடினவர்கள் இன்று சின்னதாக ஃபேஸ்புக் ஸ்டேடஸ் ஒன்று போட்டுவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.

அழகிரி ஸ்டாலின் பற்றி அப்படிச் சொன்னாரா என்று தெரியாது. ஆனால் அப்படியே சொல்லியிருந்தாலும், அதைப் பொதுவில் போட்டு கலைஞர் உடைத்திருக்க வேண்டாம். குடும்பச் சண்டையை ஏன் பொதுவில் சொல்ல வேண்டும்? உணர்ச்சிவசப்படும் பலர் ஏன் அவர் பொதுவில் போட்டு உடைத்தார் என்று யோசிக்கவில்லை. நிச்சயம் வரும் நாளில் ஏதோ ஒரு முக்கிய அறிவிப்பு வர போகிறது என்று மட்டும் ஊகிக்கலாம். இப்போது ஸ்டாலினிடம் பதவியை கொடுத்தால் தொண்டர்கள் அனுதாபத்தால் கேள்வி கேட்க மாட்டார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால், வரும் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. திமுக ஸ்டாலின் தலைமையில் திரும்ப ஒரு ரவுண்ட் வர (வருமா?) இன்னும் ஒரு மாமாங்கம் ஆகலாம். எதுக்கும் அதுக்கும் இப்பவே வாழ்த்துகள் சொல்லிவைக்கலாம்.
படங்கள்(பழசு): நன்றி கூகிள்.

Read More...

Monday, January 27, 2014

கோழி மிதித்து குஞ்சு சாகுமா ?

”திமுக தோற்கும். திமுகவுக்கு எதிராக நான் செயலபடவேண்டியதில்லை. திமுகவே தோற்கும் நிலையில் தான் உள்ளது” - அழகிரி ( நேற்று )

வீட்டிலே ஒரு பிள்ளையை கண்டிக்கிறோம் என்றால், ஒரு தாயும், தந்தையும் பிள்ளையைப்பார்த்து, ‘நீ உருப்படாம போ’ என்று சொன்னால், அதுக்காக குழந்தை உருப்படாம போகவேண்டும் என்ற அர்த்த அல்ல. மாணவர்களை ஆசிரியர்கள், நீ உருப்பட மாட்ட என்று திட்டுவார்கள். அவன் உருப்படாம போகணும் என்கிற எண்ணத்தில் அல்ல. அவன் நல்லா வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அப்படி திட்டுவார்கள். அதுபோலத்தான் நானும் கட்சி தோற்கும் என்று கூறினேன். கட்சி என்னை தற்காலிகமாக நீக்கம் செய்திருக்கிறது. பிறந்த நாள் முடியட்டு. அதன்பிறகு உரியவர்களிடம் பேசி, ஆகவேண்டியதை பார்க்கலாம்’’ - அழகிரி ( இன்று )
கோழி மிதித்து குஞ்சு சாகுமா ?

Read More...

Sunday, January 26, 2014

டவுட் - போட்டி !

எனக்கு ஒரு டவுட். கீழே உள்ள படத்தில் அண்ணனுக்கு சல்யூட் அடிக்கும் நபர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவாரா ?


இந்த படத்துக்கு வந்து சேரும் நல்ல கமெண்டுக்கு ஒரு புத்தகம் பரிசு.

Read More...

Friday, January 24, 2014

அழகிரி - வீரமணி




கலைஞர் கைது போது வீரமணி என்ன சொன்னார் யாருக்காவது தெரியுமா ?

Read More...

அழகிரி - கலைஞர் பேட்டி

* அழகிரி நீக்கம் கட்சியை பாதிக்குமா?

பாதிக்காது.

* இந்த நடவடிக்கை தேமுதிகவை இழுக்கும் முயற்சியா?

அது உங்கள் கற்பனை

* இந்த நடவடிக்கை திமுகவின் தேர்தல் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

அது ஊடகங்களின் கற்பனை, உண்மை நிலை அல்ல

* அழகிரிக்குப் பதிலாக தென்மண்டல அமைப்புச் செயலராக வேறு யாரையேனும் கட்சி நியமிக்குமா?

அது அவருக்காக உருவாக்கப்பட்ட பொறுப்பு; வேறு யாரும் அதற்கு நியமிக்கப்பட மாட்டார்கள்.

* அழகிரி வருத்தம் தெரிவித்தால் அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்வீர்களா?

அது அவரைப் பொறுத்தது. அவரிடம் சென்று கேளுங்கள்.

* திமுகவில் இருந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தேமுதிக தரப்பில் இருந்து எந்த வித பதிலும் வரவில்லையே?

அதற்கு நான் பொறுப்பாளி இல்லை.


இது ஒரு பேட்டியா ?
ஆமாம் அதில் என்ன சந்தேகம் ?

Read More...

அண்ணன் அழகிரி

'' 'தம்பி ரஜினிகாந்த், தம்பி திருமாவளவன், தம்பி விஜயகாந்த்...’ என கலைஞர் பாசமழை பொழிகிறாரே!''

ஏண்டா அண்ணா பிறந்தோம் என்று வருத்தப்பட கூடாது. மதுரை தி.மு.க., தொண்டர்கள் அமைதி காத்திட வேண்டும் என்று அழகிரி சொன்னதால் இட்லிவடையில்  பின்னூட்டம் போடாதீங்க :-) 

சைடுல ஓட்டு பெட்டி இருக்கு !

படம்: நன்றி விகடன்

Read More...

Tuesday, January 21, 2014

சுனந்தா! - யதிராஜ சம்பத் குமார்

கடந்த இரு தினங்களாக அரசியலை அவ்வளவாக உற்று நோக்காதவர்களுக்குக் கூட அதிர்ச்சியாக அமைந்த சம்பவம், மத்திய அமைச்சர் சஷி தரூரின் மனைவி சுனந்தா தரூரின் திடீர் மரணம்., குறிப்பாக அம்மரணத்தின் பின்னணி.

காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தாவை சஷி தரூர் கடந்த 2010 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி மாலை 7.30 மணி அளவில் சுனந்தா தரூர் திடீர் மரணம் என செய்திகள் வரத் துவங்கின. தில்லியிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியொன்றின் அறையில் சுனந்தா தரூரின் சடலம் இருந்ததாகத் தகவல்கள் வெளிவந்தன. சஷி தரூரின் தொடர்ந்த அலைபேசி அழைப்புகளை சுனந்தா ஏற்காகததால், ஹோட்டல் ஊழியர்களிடம் சுனந்தாவின் அறையைப் பார்க்குமாறு சஷி தரூர் கூறியதாகவும், ஹோட்டல் ஊழியர்கள் தொடர்ந்து முயற்சித்தும் அறைக்கதவு திறக்கப்படாததால், ஹோட்டல் நிர்வாகமே கதவை வேறு சாவி மூலம் திறந்து பார்த்தபோது சுனந்தா இறந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, சில தினங்களுக்கு முன்னர், சஷி தரூருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து, எனது கணவருக்கும் பாகிஸ்தானிய பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருக்கும் தொடர்பு என்பதாகவும், மெஹர் தரார் தன் கணவர் சஷி தரூருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் எனவும் சில நிலைத்தகவல்கள் வெளியாகின. உடனடியாக, தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதில் வரும் நிலைத்தகவல்கள் போலியானவை எனவும் சஷி தரூரிடமிருந்து அறிக்கை வந்தது. அதைத் தொடர்ந்து, சஷி தரூருடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்படவில்லை, தாமே அவருடைய கணக்கில் அத்தகவல்களை வெளியிட்டதாக சுனந்தாவின் ட்விட்டர் கணக்கிலிருந்து நிலைத்தகவல் வெளியாகவும், சஷி தரூர், தன்னுடைய ட்விட்டர் கணக்கை மூடுவதாக அறிவித்தார்.

இதனிடையே சுனந்தா தரூர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியிலும், தனது கணவருக்கு பாகிஸ்தானிய பத்திரிகையாளர் மெஹர் தராருடன் அந்யோந்யமான தொடர்பு இருப்பதாகவும், இதனால் விவாகரத்து பற்றி சிந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். வேறொரு தொலைக்காட்சி சானலுக்கு அளித்த தொலைபேசி வாயிலான பேட்டியில், மெஹர் தரார் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவு அமைப்பைச் சார்ந்தவர் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வளவு களேபரங்கள் நடந்த மறுதினம், சஷி மற்றும் சுனந்தா தரூர் ஆகிய இருவர் பெயரிலும் வெளியான அறிக்கையில், தங்களுக்குள் எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும், மகிழ்ச்சியாகவே இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் ஏற்பட்டுள்ள சுனந்தாவின் திடீர் மரணம் பலவாறான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. முழுமையான பிரேத விசாரணை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், சுனந்தாவின் உடலில், கழுத்து மற்றும் மணிக்கட்டு பகுதிகளில் சில கீறல் காயங்கள் இருப்பதாகவும், ஆனால் அது பற்றி மேலும் கருத்து கூற இயலாத நிலையிலிருப்பதாகவும் அவர் பிரேதத்தை ஆய்வு செய்த மருத்துவக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுனந்தா, அதற்கான மருந்துகளை எடுத்து வருவதாகவும், அதை அதீதமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்திருக்கலாமெனவும் செய்திகள் வெளியானபடியுள்ளன. பாஜக, இடதுசாரிகள், மற்றும் சஷி தரூர் உள்ளிட்டோர் அனைவருமே சுனந்தாவின் மரணத்தில் விசாரணை கோரியுள்ளனர்.

சப்-டிவிஷனல் மாஜிஸ்த்ரேட் தலைமையிலான விசாரணைக் குழு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை செய்து, அவற்றைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, நளினி சிங் என்ற பத்திரிகையாள நண்பியிடம், தான் உயிரிழப்பதற்கு முதல்நாளிரவு அலைபேசியில் தொடர்பு கொண்ட சுனந்தா மிகவும் மனமுடைந்த நிலையில் பேசியிருக்கிறார், அவருடைய வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, திருனவந்தபுரத்தில் சுனந்தாவிற்கு கடந்தவாரம் சிகிச்சை செய்த மருத்துவர் குழு, அவருடைய உடல்நிலையில் உடனடி மரணத்தைத் தழுவும் அளவிற்கு எந்த சிக்கலான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்திருப்பதாலும், பிரேத விசாரணையில், உடனடி மற்றும் இயற்கைக்கு விரோதமான மரணம் என்று வந்திருப்பதாலும் இம்மரணம் பலவிதமான சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது, தவிர இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும், அவர் ஐ எஸ் ஐ உளவாளி என்று சுனந்தா வெளிப்படையாகக் குற்றம் சாட்டிய மறுதினமே இம்மரணம் நிகழ்ந்துள்ளதாலும், இவருடைய இறுதிப் பிரேத விசாரணை அறிக்கையில் வெளியாகப் போகும் தகவல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

- யதிராஜ சம்பத் குமார்

இன்னும் இரண்டு மாதத்தில் இந்த செய்தியும் கேஸும் காணாமல் போகும்

Read More...

Saturday, January 18, 2014

37வது புத்தகச் சந்தையில் அநங்கன்

”உண்ட மயக்கம் குண்டருக்கும் உண்டு” என்று சும்மாவா சொன்னார்கள்!

”மார்கழிப் பொங்கல்
மடி நிறையப் பொங்கல்
சுடச் சுடப் பொங்கல்
சுந்தரப் பொங்கல்” - என்று கன்னா பின்னாவாக அபார்ட்மெண்ட்டின் எல்லார் வீட்டுப் பொங்கலையும் தின்று ’பேஸ்த்’ அடித்துக் கிடந்த எனக்கு, புத்தகக் காட்சிக்குப் போனால் என்ன என்று திடீரெனத் தோன்றியது. உடன் புறப்பட்டு விட்டேன்.

புத்தக ஆசையில் தெருக்கோடிக்கு வந்ததும் ஆட்டோ ஒன்று கண்ணில் பட்டது.

”வாங்க சார்” என்ற ஆட்டோ ட்ரைவர் பலத்த போதையிலிருப்பதாகப் பட்டது. தயங்கியவாறே ஏறி உட்கார்ந்தேன். ஆட்டோவில் எல்லாம் சாமிப் படங்களின் ஸ்டிக்கரையும் ஒட்டி வைத்திருந்தார். ”நீதான் சார் ஃபர்ஸ்ட்” என்றவாறே ஆட்டோவைக் கிளப்பினார். உடன் நான் சொல்லாமலே மீட்டரையும் போட்டு விட்டு, ”எங்க சார் போகணும்?” என்றார்.

YMCA மைதானத்திற்கு வந்து இறங்கியபோது மீட்டர் 110.00 காட்டியது. மனதுக்குள் ஆச்சரியப்பட்டவாறே பர்ஸைத் திறந்தேன்.

“எதுனா போட்டுக் கொடு சார், பொங்கலு அதுவுமா?” என்றவருக்காக ஒரு 10 ரூபாயை சேர்த்துக் கொடுத்தேன்.

ஏதோ முணுமுணுத்தவாறே வாங்கிக் கொண்டார். (வேறென்ன, சாவுக்கிராக்கி என்று திட்டியிருப்பார்..)

சாரி Sarei ஆகக் கூட்டம் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. நானும் பின்பற்றி நடக்கத் துவங்கினேன்.



கொஞ்ச தூரம் நடந்ததுமே கால் வலிக்க ஆரம்பித்தது. மூச்சிரைத்தது. அட, க்யூவில் வேறு நிற்க வேண்டும், அப்புறம் உள்ளே ஸ்டால் ஸ்டாலாக நடக்க வேறு வேண்டுமே என்று சலிப்பாக இருந்தது.

பொம்மை விற்பவர்கள், பபிள்ஸ் விற்பவர்கள், ஸ்டிக்கர், பொட்டு, பிளாஸ்டிக் சாமான் விற்பவர்கள், தேங்கா, மாங்கா பட்டாணி சுண்டல் விற்பவர்களைக் கடந்து அரங்கம் அருகே சென்றேன்.

டிக்கெட் கவுண்டரில் கூட்டமே இல்லை. ஆச்சரியமாக இருந்தது. அப்புறம் தான் தெரிந்தது, வந்த கூட்டம் எல்லாம் உணவகத்தை நோக்கியும், அதற்கு அப்புறமும் சென்று கொண்டிருக்கிறது என்பது. சிலர் மாங்கா, தேங்கா, பட்டாணி சுண்டலை வாங்கி ஆங்காங்கே நிழலில் உட்கார்ந்து கொண்டனர்.

”கலகம் வாள வேண்டும்; களகம் வால வேண்டும்” என்று எங்கிருந்தோ சப்தம் வந்தது. திரும்பிப் பார்த்தபோது அது பக்கத்தில் இருந்த அரங்கிலிருந்து என்பது தெரிந்தது. அங்கே சென்று பார்த்தேன். மேடையில் கருப்புச் சட்டை அணிந்து 4, 5 பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிரே 5, 6 பேர் அமர்ந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பேச்சாளர், “ கலகத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். களகத்தை வளர்க்க வேண்டும். கரை வேட்டியை விட்டா தமிழ்நாட்டுக்கு யார்யா இருக்கா?” என்று பேசிக் கொண்டிருந்தார். திடீரென ”இந்தப் புத்தகச் சந்தையைக் கொண்டு வந்தது யார், இங்கே சீரும் சிறப்புமாக இந்தப் புத்தகச் சந்தை நடக்க யார் காரணம்?” என்று கேள்வி எழுப்பினார். ”வேறு யார்? நல்லிச் செட்டியாரும் பபாஸியும் தானே”என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, “இங்கே இவ்வளவு சிறப்பாக இந்தப் புத்தகச் சந்தை நடக்கக் காரணம் பெரியார். பெரியார் இல்லாவிட்டால் இந்தப் புத்தகச் சந்தை ஏது?” என்று அவர் உரத்த குரலில் கத்த ஆரம்பித்ததும் எனக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது.

உடன் சற்றுத் தள்ளி இருந்த, கூண்டு போன்ற பகுதிக்குப் போனேன். அங்கே சிலர் க்யூவில் நின்று கொண்டிருந்தனர். “அட, இதற்கும் க்யூவா? ஒரு வேளை கட்டணக் கழிப்பிடமோ என நினைத்து எட்டிப் பார்த்தபோதுதான் அது ஏடிஎம் என்பது புரிந்தது. ’சே’ என்று என்னையே நொந்து கொண்டு, செக்யூரிடியிடம் விசாரித்து எதிர்த்த பக்கம் நகரத் துவங்கிய போதுதான் அவரைப் பார்த்தேன்.

ஒயிட் அண்ட் ஒயிட் நல்லப்பன்... sorry இவர் அவரல்ல. ஒயிட் அண்ட் ஒயிட்டில் இருந்த இவரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவரைப் பார்த்த அந்தக் கணத்திலேயே ”இஞ்சிச்சாறு” குடித்த மாதிரி என் வயிற்றுவலியும் உடன் சரியாகி விட்டது. அவர் அவசர அவசரமாக கவுண்டரில் டிக்கெட்டை வாங்கிச் செல்ல, நானும் டிக்கெட்டை வாங்கி அவரைப் பின் தொடர்ந்தேன். ”அட, இவர் ஓரிரு நாள் முன்பு டிவியில் வந்தாரே, எழுத்தாளர் அல்லவா, நல்ல பேராயிற்றே” என்று நினைத்தேன். ஞாபகத்திற்கு வரவில்லை. ”அட இவருடன் சேர்ந்து ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ளலாம். மனைவியிடம், பேரன்களின் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்ளலாமே” என்று நினைத்து “சார், சாரே.. சாரூ..”என்று அவரைக் கூப்பிட நினைத்தேன். ஆனால் அவர் அதற்குள் ’சர்’ன்று உள்நுழைந்து ‘சரக்கென்று’ காணாமல் போயிருந்தார். எந்த வரிசையில் நுழைந்தார் என்பது தெரியாததால் அவரைப் பின் தொடர்வதை விட்டு விட்டு நான் ஸ்டால்களைப் பார்வையிட ஆரம்பித்தேன்.

ஸ்டால்களுக்கெல்லாம் நல்ல தமிழில் “ வ.சுப. மாணிக்கனார் பாதை”, ”மா. இராசமாணிக்கனார் பாதை”, “காவியக் கவிஞர் வாலி பாதை” என்றெல்லாம் தூய தமிழில் பெயர் வைத்திருந்தார்கள். ஆனாலும் எனக்கென்னவோ அது சற்று ஓர வஞ்சகமாகப் பட்டது. (அடுத்த முறை பெயர் வைக்கும்போது கி.வா.ஜ. பாதை (அ) உ.வே.சா. பாதை, வீரமாமுனிவர் பாதை, வள்ளல் பாண்டித்துரை பாதை, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பாதை, சார்லஸ் டிக்கன்ஸ் பாதை, கல்கி பாதை, பாப்லோ நெரூடா பாதை என்றெல்லாம் வைக்க வேண்டும் என்று பபாஸிக்கு இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்)

மக்கள் கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இருபுறம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார்களே தவிர, யாரும் ஸ்டாலுக்குள் செல்லவில்லை. அப்படியே சென்றவர்களும் உடன் வேகமாகத் திரும்பி வந்து விட்டனர். இதற்கு புத்தகங்களின் விலை காரணமா அல்லது அவர்கள் தேவைக்கேற்றவாறு புத்தகங்கள் இல்லாதது காரணமா என்பதை பதிப்பாளர்களும் எழுத்தாளர்களுமே முடிவு செய்யட்டும்.

மனுஷ்யபுத்திரன் உயிர்மை ஸ்டாலில் சில அழகான பெண்களுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி சிலர் நின்று அதை உற்சாகமற்று (அல்லது பொறாமையுடன்) கவனித்துக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே சில திரைப்படத்துறையினரை, இளம், முதும் எழுத்தாளர்களை, அரசியல்வாதிகளைப் பார்க்க முடிந்தது.

மற்றபடி இந்த முறை பபாஸியின் ஏற்பாடுகள் எதையும் குறை சொல்ல முடியவில்லை. ஆங்காங்கே தண்ணீர் கேன்களை வைத்திருந்தனர். அதை மாற்றிப் பராமரிக்கவும் ஆட்கள் இருந்தனர்.

பாதைகள் நல்ல அகலமாக இருந்தன. ஓரமாக உட்கார்ந்து கொள்ளவும், குழந்தைகளைத் தூங்கப் பண்ணவும் முடிந்தது.

ஒரே ஒரு குறை அரங்கினுள் காற்று இல்லாததுதான். மேலே சுழன்று கொண்டிருந்த மின்சிறிகளுக்கும் அரங்கிற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. (அதனால்தான் மக்கள் வியர்க்க விறுவிறுக்க ஸ்டாலில் நிற்காமல் வெளியில் வந்து விட்டார்களோ?)

கிழக்கு ஸ்டாலில் ஏனோ கூட்டமே இல்லை. ஹரன் பிரசன்னா ‘ஹாயாக’ அமர்ந்திருந்தார். அவர் இப்படி அமர்ந்து இதுநாள்வரை நான் பார்த்ததே இல்லை என்பதால் ஒரே ஆச்சரியமாக இருந்தது. கை கொடுக்கப் போனவன் ஏனோ தயங்கி கடந்து சென்று விட்டேன்.

உயிர்மை, காலச்சுவடு, கிரி ட்ரேடிங், அல்லயன்ஸ், நர்மதா, மணிமேகலை, விகடன் போன்ற ஸ்டால்களில் கூட்டம் இருந்தது.

ஒரு ஸ்டால் வாசலில் ‘டாய்லெட் க்ளீன்’ செய்வதை வீடியோவில் காட்டிக் கொண்டிருந்தனர். அதற்கும் புத்தகச் சந்தைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

போன தடவை மாதிரி வற்றல், வடகம், ஊறுகாய் ஸ்டால்கள் எல்லாம் இல்லாதது நிம்மதியாக இருந்தது.

”கூட்டம் கூட்டமா மக்கள் வாராங்க. ஆனா போன தடவை விட இந்த தடவை விற்பனை ரொம்பக் கம்மி தான்” என்று ஒரு ஸ்டால்காரர் மற்றொருவரிடம் அலுத்துக் கொண்டார். ”சரிதான். மக்கள் கூட்டம் கூட்டமா வாறது பொழுது போக்கவும், வேடிக்கை பார்க்கவும், காபி, டிபன் சாப்பிடவும் தானே தவிர புக் வாங்கவா வாராங்க?” என எனக்குள் நான் நினைத்துக் கொண்டவாறே வெளியேறினேன்.

இப்போது வெளியே அரங்கில் ’பளபள தொளதொள’ சட்டைப் போட்ட வேறு யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். கூட்டம் கூட்டமாக மக்கள் சேர்களில் அமர்ந்து ஆர்வமாக சுண்டல் சாப்பிட்டுக் கொண்டும், சமோசா, சுக்குக் காபி குடித்துக் கொண்டும், தங்களுக்குள் உரக்கப் பேசிக் கொண்டுமிருந்தனர்.

நான் வாங்கிய புக் லிஸ்ட் :

சோட்டா பீம் கலரிங் புக் : (பேரப் பிள்ளைகளுக்காக)
உணவே மருந்து - காலச்சுவடு

இரவில் நான் உன் குதிரை - காலச்சுவடு

இன்றைய தலைமுறைக்கான உணவு வகைகள் - நர்மதா

10 நிமிடங்களில் எந்த ஜாதகத்தையும் எழுதுவது எப்படி - நர்மதா

நாடி சொல்லும் கதைகள் - மணிமேகலை பிரசுரம்

கர்ணனின் கவசம் - சூரியன் பதிப்பகம்

விவேகானந்தர் ஒரு வாழ்க்கை - கிழக்கு பதிப்பகம்

பட்டினத்தார் - கிழக்கு பதிப்பகம்

கடைசி பக்கம் - சூரியன் பதிப்பகம்

அரசு பதில்கள் - 1977 - குமுதம்

அரசு பதில்கள் - 1980 - குமுதம்

குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை - மணிவாசகர் பதிப்பகம்

பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள் - கயல் கவின் பதிப்பகம்

இந்த உண்மைகள் ஏன் மறைக்கபடுகின்றன - உயிர்மை

அம்புட்டுதான். இதற்கே கொண்டு போன பணமெல்லாம் காலியாகி விட்டது. பபாஸின் இலவச ஊர்தி என்னை ”பார்க்கிங், பார்க்கிங்” என்று சொல்லி ஏற்றிக் கொள்ளாததால் நம்ம ஆட்டோ பிடித்து ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன்.

சுபம்.

ஹரன்பிரசன்னா பெரியார் கட்சியில் செர்ந்துவிட்டார் என்று சொன்னார்கள் அப்படியா ?

Read More...

Thursday, January 16, 2014

வீரம்

இவர்களுக்கு இருக்கும் தைரியம்கூட ராஹுல் காந்தியிடம் இல்லை போல :-)

Read More...

Wednesday, January 15, 2014

44வது துக்ளக் ஆண்டு - ஆடியோ


44வது துக்ளக் ஆண்டு விழா ஆடியோ பதிவு
முதல் பகுதி: வாசகர் கேள்வி பதில், ஊழியர்கள் அறிமுகம்.


சிறப்பு பேச்சாளர்கள், ஆசிரியர் சோ உரை. ( இதில் உரை முடிந்தபின் ”>|” அழுத்தினால் அடுத்த பகுதிக்கு செல்லும் )


:-)

Read More...

Saturday, January 11, 2014

சந்திப்பு செய்திகள்


சந்திப்பு - 1

மதவாத, வகுப்புவாத கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என விஜயகாந்தை கேட்டுக்கொண்டார் திருமா !



சந்தித்துவிட்டு வெளியே வந்த அழகரி “சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் எனது ஆதரவாளர்கள் அல்ல” என்றார்.
இந்த வருட ஆஸ்கர் யாருக்கு ?

Read More...

Monday, January 06, 2014

அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகள்

"கலைஞரே கூப்பிட்டு ஸ்டாலின் தான் தலைவர் என்றாலும் நான் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள மாட்டேன்... " அழகிரி அதிரடிப் பேட்டியை பார்த்த ஸ்டாலின் ”.... தேவையற்ற கேள்விகளுக்கு தான் பதிலளிப்பதில்லை... தேவையற்ற பேச்சுக்களையும் செய்திகளையும் தான் கேட்பதும் இல்லை, படிப்பதும் இல்லை... ” என்று சொல்லியுள்ளார்.










பொங்கலோ பொங்கல்!

நன்றி: புதிய தலைமுறை

Read More...

Sunday, January 05, 2014

மன்மோக குறிஞ்சி சிங் பூ

குறிஞ்சிப் பூ பூத்திருப்பதாக செய்தி வந்திருந்தது, கூடவே பிரதமரும் திருவாய் மலரப் போகிறார் என்ற செய்தியும் வந்தது.

பிரதமர் பேசப் போகிறார் என்றதுமே சில முன்னணி வட இந்திய ஆங்கில செய்திச் சானல்கள், பிரதமர் ராஜினாமாவா? ராகுல் புதிய பிரதமரா என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டன. ஆனால் எதிர்பார்த்தது போல், பதவிக் காலம் முடியும்வரை ராஜினாமாவுக்கே இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார். அதாவது இதற்கு மேலும் கெட்ட பெயர் எதுவும் வரும் ஆனால் அதுவும் பிரதமரையே சாரும். இன்னும் சொல்லப் போனால், பிரதமர் ராஜினாமா செய்வார் என்பதைத்தான் காங்கிரஸ் மேலிடமும் எதிர்பார்த்திருந்தது, ஆனால் அவர்களுக்கும் இது அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

நான்கு மாநிலத் தேர்தல் வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்க வேண்டுமென பிரதமரைக் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டதாக ஒரு பதிவர் எழுதியிருந்தார். தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனையில் எதற்கு நெறியேற வேண்டுமென பிரதமர் திரும்பக் கொக்கி போட்டார் என்றும் கேள்வி. பண வீக்கமும், விலைவாசி உயர்வும் மட்டுமே சமீபத்திய தோல்விகளுக்குக் காரணம் என்பது பிரதமரின் வாதம்; ஆனால் உட்கட்சிப் பூசல்தான் காரணமென்று ஷீலா தீக்ஷித் கூறுகிறார். பிரதமர் தில்லியில் கலந்துகொள்ளவிருந்ததாகயிருந்த பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது குறிப்பிடத்தக்கது, அவர் கலந்து கொள்ளவிருந்ததை ஷீலா தீக்ஷித் விரும்பவில்லையென்றும், அதனாலேயே ரத்து செய்யப்பட்டதென்றும் கூறப்படுகிறது. எஸ்.வி.சேகர் நாடகத்தில் ”வெளிநாட்டு சதி” என்பார் அதை போல காங்கிரஸ் மன்மோகன் சிங் கூட்டாளிகள் எதற்கு எடுத்தாலும் இதே காரணத்தை சொல்ல ஆம்பித்துவிட்டார்கள். ஆக பண வீக்கம், விலைவாசி உயர்வு என்று இவரே கூறிவிட்டு, பொருளாதாரத்தில் இந்தியா கடந்த பத்தாண்டில் மிகவும் முன்னேறியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எழுபதைத் தொட்டு வந்த பிறகும் கூட. இன்னும் இந்தோனேஷிய ருபியா ஒன்று மட்டும்தான் இந்திய ரூபாயின் மதிப்பிற்கெதிராக உயரவில்லை.

நரேந்திர மோதிக்குக் கூடும் கூட்டம், ஆம் ஆத்மி கட்சியின் திடீர் உதயம் மற்றும் அதற்கு இல்லாத ஒரு க்யாதி இருப்பதாகக் காட்டும் மீடியா மற்றும் சமீபத்திய நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் திமுகவின் அறிவிப்பு, மஹராஷ்டிரத்தில் ஆதர்ஷ் விசாரணைக் கமிஷன் அறிக்கை தாக்கல், ஷரத் பவாரின் ரெண்டுங்கெட்டான் நிலை இவற்றால் காங்கிரஸின் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கிறது. அதனால் பிரதமரை ராஜினாமா செய்யச் சொல்லி, ராகுலைத் திடீர் பிரதமராக்கி, இரண்டு மூன்று அதிரடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி எப்படியாவது வெற்றி பெற முயல வேண்டும் என்பது காங்கிரஸின் திட்டம். இதற்கு மேலும் மெருகூட்ட, நரேந்திர மோதியின் பெயரை எப்பாடுபட்டேனும் சீரழிக்க வேண்டும். கோத்ரா கலவரம் எத்தனை நாட்களுக்குத்தான் கை கொடுக்கும்? அதற்காகத்தான், ஒரு பெண்ணை உளவு பார்த்த விவகாரத்தில் ஒரு கமிஷன் ஒன்றை மத்திய அமைச்சரவை அமைத்திருக்கிறது.

ஏற்கனவே இவ்விவகாரத்தில் குஜராத் அரசாங்கம் ஒரு கமிஷன் அமைத்திருக்கும் நிலையில், இன்னொரு கமிஷன் செல்லுபடியாகாது. ஆனால் இதிலும் ஒரு புதுமையைப் புகுத்தி, ஒரே விவகாரத்திற்கு இரண்டு கமிஷன்கள். இதில் மத்திய அமைச்சரவையின் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தாக்கல் செய்யப்படுமெனத் தெரிகிறது. ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் ஒரு அறிக்கையை, கமிஷன் தயாரித்ததாகச் சொல்லி, தேர்தலுக்கு சமீபமாக மோதியின் பெயரை ரிப்பேராக்கும் ஒரு நாலாந்தர முயற்சியைக் காங்கிரஸ் கைகொண்டிருக்கிறது. தன்னுடைய பத்தாண்டு ஆட்சியின் சாதனை என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லாத நிலையில், எதிரியின் இடுப்பிற்குக் கீழ் அடிப்பதுதான் ஒரே வழி என்பதுதான் காங்கிரஸின் இப்போதைய நிலை. அதற்கு அச்சாரம்தான் பிரதமரின் பேட்டி.

ஐந்தாண்டுகளில், இரண்டாவது பேட்டியாம் இது. பேச்சின் தரம் ஒரு பிரதமர் பேசுவதாக இல்லை, வெற்றி கொண்டானோ அல்லது எஸ்.எஸ். சந்திரனோ பேசுவதைப் போல்தான் இருந்தது. "அஹமதாபாத்தின் வீதிகளில் மக்கள் படுகொலையை முன்னின்று நடத்திய நரேந்திர மோதி இந்நாட்டின் அடுத்த பிரதமராய் வருவது இந்திய ஜனநாயகத்திற்கே பேரழிவாக முடியும்" இது பிரதமர் உதிர்த்த ஒரு முத்தின் சாம்பிள், இதைப் போன்ற ரகம்தான் மற்ற பேச்சுக்களும். குஜராத்தில் மக்களின் அமோக ஆதரவோடு, நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பின் பிரதிநிதியைக் கொலைகாரன் என்று வர்ணிக்கிறார் இத்தேசத்தின் பிரதம மந்திரி. அரசாங்கம் நியமித்த SIT, மற்றும் குஜராத் உயர்நீதிமன்றம் ஆகியவையே நரேந்திர மோதியை குஜராத் கலவரத்தில் குற்றவாளியாக்க முகாந்திரமே இல்லை என்று உத்தரவிட்ட பின்னரும், தேசத்தின் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஒருவர் இப்படி அபத்தமாக, மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவரைப் பற்றி அவதூறு பேசுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

இதுவரை வெளிவந்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பு, திருப்பதி வேங்கடவன், குபேரனிடம் பட்ட கடனை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. இன்னும் வெளிவராத ஊழல்கள் எத்தனையுள்ளனவோ? 2G, நிலக்கரி ஊழல், CWG போன்றவற்றின் கதி இன்னும் முழுவதுமாக நிர்ணயிக்கப்படாத நிலையில், அடுத்து பாஜக அரசாங்கம் அமையுமானால், அதில் எத்தனை பேர்களின் தலைகள் உருளுமோ என்ற பயம் மட்டுமே காங்கிரஸிடம் தெரிகிறது.

அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா ஆகிய அனைத்து நாடுகளும் நம்மை ஏதோ ஒருவகையில் சீண்டி வரும் நிலையில், எவற்றுக்கெதிராகவும் தக்க நடவடிக்கை எடுக்கத் திராணியில்லாத ஒரு அரசாங்கத்தை நடத்தி வரும் இவர்தான் தன்னை வலுவான பிரதமர் என்று பிரகடனப் படுத்திக் கொள்கிறார். மீனவர்கள் தொடர்ந்து இலங்கையால் கைது செய்யப்படுவதாகட்டும், காஷ்மீரில் பாகிஸ்தானின் அத்து மீறலாகட்டும், சீனாவின் ஆக்கிரமிப்பு, எவற்றிலும் ஸ்திரமில்லாத வெளியுறவுக் கொள்கையின் காரணமாக எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், ஊழல்கள் மீது நடவடிக்கை எடுத்ததால்தான் மக்கள் இரண்டாவது முறையும் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார். இது அப்பட்டமான பொய்! 2G ஊழலின் முழுப் பரிமாணமும் வெளிப்பட்டதே 2009 நவம்பரில்தான், அதாவது மக்களவைத் தேர்தல்களுக்குப் பிறகு. காமன்வெல்த், ஆதர்ஷ், நிலக்கரி ஊழல் போன்றவையும் இவரது இரண்டாவது ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள். இதில் எதிலொன்றிலும் இதுவரை எவரும் தண்டிக்கப்படாத நிலையில், என்ன நடவடிக்கை எடுத்ததாகச் சொல்கிறார்? தவிர, அனைத்து ஊழல் தொடர்பான கோப்புகளும் காணாமல்போய், தொடர்புடைய முக்கியமானவர்கள் அனைவருமே காப்பாற்றப்பட்டுள்ளனர் என்ற ஒரு சாதனையைத் தவிர, மன்மோகன் சிங் ஒரு சாதனையையும் நிகழ்த்திவிடவில்லை, கடந்த பத்தாண்டுகளில்.

அப்பறம் பேட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும் முன்பே கேட்க வேண்டிய கேள்விகளை தயாரித்து கேட்ட மாதிரி இருந்தது. இருந்தும் பிரதமர் பல கேள்விகளுக்கு "I'm sorry I haven't thought that through, but..” என்று தன் பதிலை ஆரம்பித்தார். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது அவரை பற்றி அவரே பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறார் - ஐயோ பாவம்.

மோடி மாதிரி ஒருவர தேவை இல்லை, சாதாரண ஆள் பிரதமராக வந்தாலுமே, இவரை விட இந்நாடு சுபிக்ஷமாக இருக்குமென்பதே, இவரது பத்தாண்டு ஆட்சியின் லட்சணம்.
மதுரையில் திமுக கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது... இதே மதிரி காங்கிரஸ் கட்சியையும் கலைத்துவிட்டால் நன்றாக இருக்கும்.

Read More...

Saturday, January 04, 2014

சென்னை புத்தகக் காட்சி 2014 - என்ன புத்தகம் வாங்கலாம்

சென்னை புத்தகக் காட்சி 2014ல் என்ன புத்தகம் வாங்கலாம் - உங்க டாப் 5 புத்தகங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Read More...

Friday, January 03, 2014

என்றென்றும் புன்னகை – பாமக ஆர்ப்பாட்டம் செய்யுமா? - ஹரன்பிரசன்னா


ஹரன் பிரசன்னா இட்லிவடைக்கு ஸ்பெஷலாக அனுப்பிய இந்த கட்டுரை Spam folderக்கு சென்றுவிட்டது. அதனால் இந்த பிரசித்தி பிற்ற இந்த கட்டுரை இட்லிவடையில் வரவில்லை. உடனே கடுப்பாகி பிரசன்னா இந்த கட்டுரையை அவருடைய சைட்டில் பிரசுரம் செய்துவிட்டார். இருந்தாலும் இட்லிவடைக்கு அனுப்பிய கட்டுரை இட்லிவடையில் வராமல் இருந்தால் நல்லா இருக்குமா ? அதுவும் பிரசன்னா அனுப்பிய கட்டுரை... ?


என்றென்றும் புன்னகை திரைப்படத்தைக் கடந்த வாரம் பார்த்தேன். விமர்சனம் எழுதும் அளவுக்குப் படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். படத்தின் முதல் பாதியில், மூன்று ஆண்கள் நட்பின் போர்வையில் அடித்துக் கொள்ளும் கூத்துகள் ஆபாசமானவை. ஆனால் தமிழ்த் திரையுலகத்துக்கு ஆபாசம் ஒன்று புதிதல்ல என்பதால், அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆபாசத் திரைப்படங்களுக்கு மத்தியிலேயே வளர்ந்ததால், சிறிய முகச்சுளிப்போடு இவற்றைக் கடந்துசெல்ல பழகிவிட்டதால், இதெல்லாம் ஆபாசமா என்ற எதிர்க்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திராணி இல்லாமல் அமைதியாக இருக்கப் பழகிவிட்டதால், இப்படத்தையும் அப்படியே கடந்தேன். இரட்டை அர்த்த வசனமெல்லாம் மலையேறிப்போய், பார்த்திபன் பாணியில் – ஒரே அர்த்தம்தான், அது அதுதான் – என்று இன்றைய தமிழ் வணிக சினிமா மாறிவிட்டிருக்கிறது. இதில் என்றென்றும் புன்னகையை மட்டும் வைத்து வருத்தப்படத் தேவையில்லை என நினைத்தேன்.

டிவிட்டரில் ஒருவர், அது மருத்துவர் ராமதாஸின் தயாரிப்பில் வந்த படம் என்று சொல்லியிருந்தார். முதலில் அதைப் பகடி என்று நினைத்துவிட்டேன். பின்னர் கூகிளிட்டபோதுதான் தெரிந்தது, படத்தை தயாரித்தவர் பாமக அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் மகன் என்பது! அப்படியானால் என்றென்றும் புன்னகை முன்வைக்கும் ஆபாசங்களைப் பற்றியும் அதன் தொடர்ச்சியான அரசியலைப் பற்றியும் பேச வார்த்தைகள் இருக்கின்றன. படத்தை இயக்கியவர் அஹ்மத். அவர் இப்படி இயக்கியது பற்றி எனக்குப் பொதுவான கருத்துகள் உண்டென்றாலும், தனியாகச் சொல்ல எதுவுமில்லை.

பாபா திரைப்படம் வந்தபோது அதில் குடிக்காட்சிகளும் சிகரெட் புகைக்கும் காட்சிகளும் வருவதால் அதனைத் தடைசெய்ய அராஜகமான வழியில் போராடியது பாமக. குடிக்காட்சிகள் வரக்கூடாது, புகைக்கும் காட்சிகள் வரக்கூடாது என்று பாமக போராட சகல உரிமையும் உள்ளது. ஆனால் அது பயமுறுத்தும் வன்முறையைக் கைக்கொள்ளும் வகையிலும் மிரட்டும் தோரணையிலும் அமையக்கூடாது. ஆனால் அன்று பாபா திரையிடப்பட்ட திரையரங்குகளில் கலாட்டா செய்வோம் என்று பாமக மிரட்டியது. அதிகார பலம் தன் பக்கம் இருப்பதால் தான் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஜாதி ஓட்டுக்காக அரசு வாய்மூடி இருக்கும் என்று பாமக நம்பியது. அதுதான் நடக்கவும் செய்தது. இதனாலும் (வேறு காரணங்களாலும்) பாபா தோல்வி கண்டது. ரஜினி தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்தார். இதற்கெல்லாம் காரணம், சமூக அக்கறை என்று காட்டிக்கொண்டது பாமக.

இன்று பாமகவின் அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் புதல்வர் ஜி.கே.எம். தமிழ்குமரன் எடுத்திருக்கும் படம் முன்வைக்கும் கருத்துகள் என்ன என்று பார்ப்போம். மூன்று இளைஞர்கள் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். பப்பில் ஆபாச நடனம் ஆடுகிறவர்களுக்கு மத்தியில் குடிக்கிறார்கள். ஒருவர் ஆண்குறியை இன்னொருவர் பார்ப்பது சகஜம் என்பதுபோல பார்த்துக்கொண்டே பேசுகிறார்கள். ஹோமோ போல நடந்துகொள்கிறார்கள்.

பொதுவாகக் காதல் திரைப்படங்களில் காதலர்கள் உறவுகொள்வதைக் காண்பிப்பதில்லை. ஆனாலும் பார்வையாளர்கள் தேவையெனில் அவர்கள் உறவுகொண்டதாகவே நினைத்துக்கொள்வார்கள். அதேபோல் இதில் ஹோமோ என்று நேரடியாகக் காண்பிக்காவிட்டாலும், அவர்கள் ஹோமோ என்று பார்வையாளர்கள் நினைத்துக்கொள்ளும் அளவிலேதான் காட்சிகள் உள்ளன. அதில் ஒரு காட்சியில் இந்த மூன்று நண்பர்களுள் ஒருவர், மற்ற இருவரை ஹோமோ என்று சொல்லிக் கலாய்க்கும் காட்சியும் உண்டு. (இந்தக் காட்சியில் ஹோமோ என்ற வசனத்தின் ஒலி நீக்கப்பட்டுள்ளது.) ஹோமோ பற்றித் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது என் நிலைப்பாடு அல்ல. அதை எப்படி எந்த சீரியஸ் உணர்வுடன் படமாக்கிறோம் என்பது முக்கியமானது. அதைவிட அதை யார் படமாக்குக்கிறார்கள், கடந்த காலங்களில் அவர்கள் செயல்பாடு என்ன என்பதும் எனக்கு முக்கியமானதே. இன்று இப்படி கலாய்க்கத் தொடங்கினால்தான் நாளை இதைப் பற்றி அலசும் முக்கியமான திரைப்படங்கள் வரும் என்றும் இங்கே நம்புவதற்கில்லை. ஏனென்றால் இன்றுவரை திருநங்கைகள் பற்றி ஒரு உருப்படியான திரைப்படமும் வந்ததில்லை. (சந்தோஷ் சிவன் ஒரு படம் எடுத்ததாக நினைவு, அதை நான் இன்னும் பார்க்கவில்லை.) ஆனால் திருநங்கைகள் தொடர்ந்து இப்படி திரைப்படங்களில் கேவலமாகக் கலாய்க்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். எனவே தமிழ்த் திரையுலகம் ஹோமோக்களைப் பற்றிய உருப்படியான படத்தை எடுத்துவிடும் என்றும் நம்புவதற்கில்லை.

என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் எப்போதும் ஆண்கள் குடித்துக்கொண்டே இருப்பதோடு, ஒரு காட்சியில் ஹீரோயினையும் குடிக்க அழைக்கிறார்கள். ஐடி கல்ச்சரைக் காண்பிக்கிறார்களாம். இதுதான் யதார்த்தம் என்றால், பாபா படத்தில் ஒரு ரௌடி குடிப்பது போலவும் புகைப்பது போலவும் காட்டுவது யதார்த்தம் இல்லையா? பொதுவாகவே தமிழ்த் திரையுலகம் கருப்பு-வெள்ளைக் காட்சிப்படுத்தலிலும், மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் கருத்துகளை அப்படியே படமாக்குவதால் அவர்களோடு எளிதில் நெருங்கமுடியும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளக்கூடியதுதான். எனவேதான் பாபா படத்தில், பின்னாளில் திருந்தி குடி இன்றி புகையின்றி இருக்கப்போகும் ஒருவனைக் காண்பிக்க, அவன் திருந்துவதற்கு முன்னால் குடி சீட்டு புகை என்று இருக்கிறான் என்று காட்டப்பட்டது. ஆனால் கலாசாரக் காவலர்களான பாமகவினருக்குப் பொறுக்கவில்லை. படத்துக்கு எதிராக வன்முறையை அரங்கேற்றினார்கள். ஆனால் இன்று அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரின் மகன் தயாரித்திருக்கும் படம், புதிய தமிழ்க் கலாசாரத்தைக் காட்டுகிறது. கூத்தடிக்கும் நண்பர்கள், கடைசி காட்சியில் குடிக்க மறுப்புத் தெரிவிக்காத கதாநாயகி, இஷ்டப்பட்ட பெண்களுடன் சுற்றும் ஒரு கதாபாத்திரம் என என்றென்றும் புன்னகைத் திரைப்படத்தை பாமகவும் ராமதாஸும் அன்புமணியும் ஏற்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இல்லையென்றால் அப்படத்தை அவர்கள் பகிரங்கமாக எதிர்க்கவேண்டும். (இந்த முறையாவது ஜனநாயக ரீதியில் வன்முறை இல்லாமல் யாரையும் மிரட்டாமல் எதிர்க்கட்டும்!) அப்படி எதிர்க்கமுடியவில்லை என்றால், பாபாவை எதிர்த்த தவறுக்கு ரஜினியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.


குடிக்காட்சிகளும் புகைக்காட்சிகளும் தவறு என்பதை ஏற்று, தனது அடுத்த படத்தில் ரஜினி சுவிங்கத்தை மென்றுகொண்டு வந்தார். அந்தப் பண்பாவது இவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

- ஹரன்பிரசன்னா

ரஜினி பற்றி பிரசன்னா கடைசியில் சொன்னதால்...கீழே உள்ளவை எல்லாம் சும்மா ஒரு தகவலுக்கு...

என்றென்றும் புன்னகை படத்துக்கு விகடன் கொடுத்த மார்க் 43.
மற்ற ரஜினி படங்களுக்கு விகடன் கொடுத்த மார்க் கீழே...
சிவாஜி – 41
சந்திரமுகி - 40
பாபா – 35
படையப்பா - 44
பாட்ஷா – 43
முத்து – 42
வீரா – 43
எஜமான் – 40
எந்திரன் - 45
என்றென்றும் புன்னகை பார்த்தால் பாட்ஷா பார்த்த மாதிரி !

Read More...

Thursday, January 02, 2014

தேவ்யானி கோப்ரகாடே கதை - எ.அ.பாலா

இந்திய நியூஸ் மீடியாவும் (பொதுவாக) அரசியல்வாதிகளும் தேவ்யானியின் கைதை ஒரு தேசிய அவமானமாக உருவாக்கி, பொதுமக்களின் நாட்டுப்பற்றை வெளிக்கொணர்ந்து, ரத்தத்தை சூடாக்கி குளிர்காய்ந்த நிலையில், வெகு சிலரே பொதுப்புத்திக்கு எதிராக கருத்துகளை முன் வைத்துள்ளனர். சுவாரசியமான கோப்ரகாடே கதையில், சில புள்ளிகளைத் தொடுவோம். டிவிட்டரில் இது குறித்து ஏற்கனவே கொஞ்சம் பேசியிருக்கிறேன்.

IMF நிறுவனத்தின் தலைவராக இருந்த (பிரதமராக வாய்ப்பிருந்த) பிரென்ச் நாட்டு ஸ்ட்ராஸ் கானை, சாதாரண ஒரு ஓட்டல் சிப்பந்தியின் சாதாரணப் புகாரின் பேரில், விமானத்திலிருந்து இறக்கி, பொது இடத்தில் விலங்கு மாட்டி கூட்டிச் சென்றதும் இதே அமெரிக்காவில் தான் நிகழ்ந்தது. இந்தியாவில் ஒவ்வொரு sexual harassment கேஸிலும், பல நாட்கள்/வாரங்கள் கழித்து, மீடியா கூத்துகளின் முடிவில் தான் சம்பந்தப்பட்ட நபர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும்! எ.கா: தருண் தேஜ்பால். அமெரிக்காவில், ஒரு இல்லினாயி கவர்னர், ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஜூனியர், மைக்கல் டக்லஸ் மகன் என்று பல விவிஐபிகள், நம்மூர் லெவலில் ”சின்ன” குற்றங்களுக்காக சிறையில் காலம் தள்ளுகிறார்கள். இது போன்றதை இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது, ஒன்றிரண்டு exceptions இருக்கும் போதிலும்! தேவ்யானி கைது நடவடிக்கையால், இங்கு சிலபலரின் ரத்தம் கொதிப்பதற்கு இது தான் முக்கியக் காரணம்.



தேவ்யானியின் Diplomatic Immunity பற்றிப் பேசும் இந்திய அரசு, பாலியல் குற்றத்துக்காக, ப்ரென்ச் தூதரக அதிகாரி பாஸ்கலை, நிர்வாணச் சோதனைக்கு உள்ளாக்கி, ஜெயிலில் போட்டது. இத்தாலியத் தூதரை வீட்டுக்காவலில் வைத்து நாட்டை விட்டு நகரக்கூடாது என்று கட்டளையிட்டது! அதாவது, (அந்தந்த நாட்டில்) தீவிரமாக கருதப்படும் குற்றங்களை மனதில் வைத்து Diplomatic Immunity-ஐ பார்க்க வேண்டும். அமெரிக்க நீதிமன்றங்கள், தொழிலாளர் ஊதிய முறைகேடுகள் சார்ந்த குற்றங்களை தீவிரமானதாக பார்க்கின்றன. அடுத்து, சி.ஐ.ஏ ஏஜெண்ட் ரேமாண்ட் டேவிஸ் 2 பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்றதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் இரட்டை வேடத்தை தோலுரித்ததாக சிலர் கூறுவதையும் தமாஷாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானிய சட்டப்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிளட் மனி (Blood money) வழங்கப்பட்டதின் தொடர்ச்சியாகத் தான் டேவிஸ் தண்டனையிலிருந்து தப்ப முடிந்தது.

தேவ்யானி கேஸின், அமெரிக்க பப்ளிக் பிராசிக்யூட்டர் ப்ரீத் பராரா மேல் கொதித்தெழுந்து வசை பாடும் பலர், அதே ஆள் தான், மில்லியன்களைச் சுருட்டிய கள்ளப் பேர்வழிகள் ராஜரத்னத்தையும், ரஜத் குப்தாவையும் உள்ளே தள்ள காரண கர்த்தாவாக இருந்த நேர்மையாளர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதே போல, அழுக்கு ஆதர்ஷ் கட்டடத்தில் (தகிடுதத்தம் பண்ணி வாங்கிய) ஒரு ஃப்ளாட் வைத்திருக்கும் தேவ்யானி, தனது பணியாளர் சங்கீதாவை ஏமாற்றி அமெரிக்காவுக்கு வீட்டு வேலைக்கு அழைத்து வந்திருக்க வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்! அதோடு, தேவ்யானி தலித் என்பதால் தான், இந்திய அரசு (இன்னும்) அதி விரைவாக அமெரிக்காவுக்கு எதிராக செயல்படவில்லை என்று மாயாவதி கூறியிருப்பதை வடிவேலு காமடியாக மட்டுமே பார்க்க வேண்டும் :)

சங்கீதாவுக்கான இலவச தங்கும் இடம், விமான கட்டணம் ஆகிய செலவுகளையும் அவரது ஊதியத்தின் ஒரு பகுதியாக பார்க்கவேண்டும் என்று சில புத்திசாலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரச்சினை அது அல்ல. தெரிந்தே சட்டத்துக்கு முறைகேடாக ஒரு தூதரக அதிகாரி நடந்து கொண்டது தான் பிரச்சினை. இதற்கு முன்னும், பணியாளர் ஊதியம் தொடர்பாக 2 இந்திய தூதரக அதிகாரிகள் மீது புகார் எழுந்தும், பிரச்சினை பெரிதாகவில்லை. சங்கீதாவின் குடும்பத்துக்கு விசா, டிக்கெட் வாங்கிக் கொடுத்து, அவர்கள் அமெரிக்கா சென்ற பின் தான், தேவ்யானி கைது நிகழ்ந்தது என்று ஒரு குற்றச்சாட்டு! ஆமாம், திட்டம் போட்டுத் தான் அமெரிக்கர்கள் செய்துள்ளனர். ஏனெனில், இந்திய சட்டத்தையும் வளைக்க முடியும், ஓட்டைகளும் உள்ளன.


முக்கால்வாசி வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட முக்கியமான ஒருவரே, சாட்சிக்கு வேண்டி அப்ரூவர் ஆகி விடுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இங்கு நிலவுகிறது! பணம், பதவி பலத்தினால் சங்கீதாவின் குடும்பம் இங்கே அலைக்கழிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தான் அவர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. சாட்சி பாதுகாப்பு (Witness protection) என்பதை அமெரிக்கா தீவிரமாக கடைபிடிக்கும் ஒரு நாடு. தேவ்யானியை நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்தியது 100% உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில், யாரை (விஐபிகள் தவிர்த்து!) வேண்டுமானாலும், சந்தேகத்தின் பேரில், போலீஸ் தொட்டுச் சோதனை இடுவதும், கடுமையாகப் பேசுவதும் சாதாரணமாக நடக்கும் விஷயம் தான்! அமெரிக்க ஹிப்பக்ரஸி பற்றி பேசுவதற்கு முன் இந்திய ஹிப்பக்ரஸிகளையும் (இவற்றை அலசினால் விடிந்து விடும்!) நினைத்துப்பார்த்தல் நலம் பயக்கும்! தேவ்யானி கைதுக்கு எதிராக, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அரண்களை நீக்கியது போன்றவை இந்தியாவுக்கு மரியாதை தரும் விஷயங்கள் அல்ல.

தன் மேல் அமெரிக்க நடவடிக்கையை தடுக்கும் விதமாக (நினைத்துக் கொண்டு!) தேவ்யானி, இந்திய நீதிமன்றத்தில் சங்கீதாவுக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்து வைத்தார். ஆனால், கைதை எதிர்பார்க்கவில்லை! அது தான் உண்மை. தற்போதைய சூழலில், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொண்டு,தேவ்யானி அமெரிக்காவிலிருந்து வெளியேறுவது தான் பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர உதவும்.

இப்போது தேவ்யானிக்கும் முன்னால் ஷாருக் கானுக்கும் ஆதரவாக கொடி பிடித்த இந்திய அரசு, அதே அளவுக்கு அப்துல் கலாம் விஷயத்தில் நடந்து கொள்ளவில்லை. மேலும், ஒரு இந்திய மீனவர் துபாய் அருகில் அமெரிக்க கடற்படையினரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்தியா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இறுதியாக, தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு பல ஆண்டுகளாக செய்யும் கொடுமைகளை இந்திய அரசோ, பிற இந்தியர்களோ வலிமையாக தட்டிக்கேட்டதே கிடையாது என்று தாராளமாகக் கூறலாம்! அமெரிக்கா போல இலங்கை, இந்தியாவின் மிக முக்கியமான ராணுவ / தொழில் கூட்டாளி நாடு இல்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்!

எ.அ.பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ், Rediff.com
prima facie, it appears that the officer violated the law...prime face, top people including Modi just supported her :-)

Read More...