பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 30, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை – 11


ஒரு பிரபல நூடுல்ஸ் விளம்பரம் ஒன்றில்…
அம்மா கடைக்கு சென்றிருக்கையில், எதையாவது சாப்பிட நினைக்கும் பதின்ம வயது மகள், அந்த நூடுல்ஸ் பாக்கெட்டை எடுத்து, நூடுல்ஸ் உணவைத் தயாரித்து விடுகிறாள்.கடையிலிருந்த வந்த அம்மா அதை ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்க்கிறாள்.

மேற்கூறிய விளம்பர நூடுல்ஸ் போணியாகவே இல்லை. காரணம் இந்திய அம்மாக்களின் மைண்ட் செட். ”அதெப்படி, நான் இல்லாம என் குழந்தை, தானாகவே ஒரு சிற்றுண்டியை சமைப்பது?”
அப்புறம், அந்த விளம்பரத்தை, அம்மா, பசிக்குது என்று மகள் கேட்பது போலவும், இரண்டே நிமிடத்தில் அம்மா நூடுல்ஸைத் தயாரித்துக் கொடுப்பது போலவும் மாற்றியதும், விற்பனை படு ஜோராக உயர்ந்தது.

இப்போதும் நிறைய அம்மாக்கள், தனது பள்ளி, கல்லூரி செல்லும் மகள், மகன்களுக்கு காலை உணவை ஊட்டுவதிலிருந்து, ஷீ, சாக்ஸ் எடுத்து வைப்பது வரை எல்லாமே செய்கிறார்கள்.( நான் இல்லேன்னா அவ(னு)ளுக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.


ஆனால், நம் குழந்தைகளை சுயசார்புடையவர்களாக மாற்றுவது,,வெற்றிகரமான குழந்தை வளர்ப்பில் ஒரு முக்கியமான இலக்காகும்,பச்சிளம் குழந்தைகளாக இருக்கையில், போஷாக்கு, சுத்தம், நகர்தல் போன்ற எல்லாவற்றிற்கும் பெற்றோரையே சார்ந்திருக்கின்றனர்.ஆனால், வளர, வளர, குழந்தைகள் வாழ்வின் அடிப்படை விஷயங்களான உணவு உண்ணுதல் போன்றவற்றைத் தாமே செய்யப் பழகினாலும், அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல், ஒத்துழைப்பு போன்றவைகளுக்கு பெற்றோரையே சார்ந்து இருக்கின்றனர்.

குழந்தைகளை எல்லா முடிவுகளையும் எடுக்க வைத்து,அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுப்பது அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதுடன், சிலசமயம், தவறான முடிவுகளுக்கு வழிகோடலாம்.அதே சமயம், பெற்றோர்களாகிய நாம், நமது அனுபவத்தை மட்டுமே முன்னிறுத்தி, அவர்கள் எல்லா விஷய்ங்களுக்கும் நம்மையே சார்ந்திருக்குமாறு செய்வது,அவர்களுக்காக நாமே எல்லா விஷய்ங்களையும் செய்வது அவர்களது முடிவெடுக்கும் திறனையும், சுயசார்புத் திறனையும் வளர விடாது நசுக்கி விடும்.

இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு சமநிலைத் தன்மையைக் கடைப்பிடிப்பது, அந்தந்த வயதுக்கேற்ற சுயசார்புத் தன்மையைப் பயிற்றுவிப்பது உங்கள் குழந்தையை ஒரு சுயசார்புள்ள, வெற்றியாளராக உருவாக்க உதவும்.
ஒவ்வொன்றாகக் கற்பிக்கவும்:

உங்கள் குழந்தைகளுக்கு செய்யும் எந்த ஒரு விஷயத்தையும், நீங்கள் மெதுவாக , குழந்தை அதை நன்கு கவனித்துக் கற்றுக் கொள்ளும் வகையில் நிதானமாக செய்யவும். உதாரணத்திற்கு, சாக்ஸ் அணிவிக்கிறீர்கள் எனில், நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பதை உங்கள் குழந்தை கவனிக்க ஊக்குவியுங்கள். சாக்ஸின் உள், வெளி பக்கத்தை விரித்துக் காட்டி, சரியான, பக்கத்தைக் காட்டவும். சாக்ஸை மெதுவாக அணிவித்து, அடுத்த முறை உங்கள் குழந்தையையே அணியச் சொல்லவும்.
பொறுமையுடன் இருக்கவும்:

ஷீ லேஸை உங்கள் குழந்தை கட்டுகையில், அவனருகில் நின்று கவனிக்கவும்.மெதுவாக, பொறுமையாக அவன் கட்டி முடிக்கும் வரை அமைதி காக்கவும். தவறாக செய்தால் மட்டும், எப்படி சரியாக செய்வது என்று சொல்லிக் கொடுங்கள்.இன்னொரு முறை நீயாகவே செய்கிறாயா? என்று கேட்டு மீண்டும் செய்யச் சொல்லவும்.
கவனிக்கவும்:

இப்படியாக குழந்தையை , பல்விளக்குவது, உடைகள் அணிவது, சாப்பிடுவது, என்று ஒவ்வொரு விஷயமாக செய்யச் சொல்லி ஊக்குவித்து, அவன் அதை செய்கையில் கவனித்து வரவும். தவறாக செய்கையில் அதைத் திருத்துவதை விட, முதலிலேயே, அதை எப்படி சரியாக செய்வது என்று நீங்கள் ஒரு முறை பொறுமையாக சொல்லிக் கொடுத்தால், குழந்தை அதை சுலபத்தில் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

முதல் பனிரெண்டு மாதங்களில், குழந்தை, பொம்மையைப் பிடிக்கையில், புரண்டு படுக்கையில்,கிலுகிலுப்பையை அசைக்கையில், சப்தம் எழுப்ப முயற்சிக்கையில், உட்கார முயல்கையில், பிடித்துக் கொண்டு எழுகையில் உண்மையான உற்சாகத்துடன் அதைப் பெருமிதமாக ஊக்குவிக்கவும்.

இரண்டு வயதுக்கு மேலான குழந்தைகளை செருப்பு,ஷீ அணியச் சொல்வது, தானாக உணவு உட்கொள்வது, சிறிய பிளாஸ்டிக் பாத்திரங்களை, அதனிடத்தில் வைக்கக் கற்றுக் கொடுப்பது உடைகளை அணியச் செய்தல் போன்ற செயல்களை நம்முடைய கண்காணிப்பில் செய்யச் சொல்லலாம். முதலில் தடுமாறும் குழந்தைகள், அடுத்தடுத்த முறைகளில் தேர்ச்சி பெற்று, எளிதில் இவைகளை செய்ய இயலும். இம்மாதிரி செயல்களில், சின்னச் சின்ன ஏமாற்றங்கள் நிகழலாம். பரவாயில்லை என குழந்தை அதை அனுபவிக்க அனுமதிக்கவும்.

மூன்று /நான்கு வயதிற்கு மேல் ஆன குழந்தைகள் தினசரி செயல்களான, பல் விளக்குதல், உடைகளை அணிதல், பொம்மைகளை எடுத்து வைத்தல், பழங்களைக் கழுவுதல் துணிகளை எடுத்துப் போடுதல் போன்ற சின்னச் சின்ன வேலைகளை எளிதில் செய்வர்.இதை வேலையாக செய்யச் சொல்லாமல், அவர்களது செயல்திறனை வளர்க்கும் பயிற்சியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்,. ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்னரும் அவர்களைப் பாராட்டி உற்சாகப் படுத்துங்கள்
உங்கள் குழந்தை, ஏதேனும் உதவிக்கு, உங்களை அழைக்கையில், அதைச் செய்வதற்கு முன், ”என் உதவி இல்லாமல் இதை அவன் வேறு ஏதும் முறையில் செய்ய முடியுமா?” என்று கேட்டுக் கொண்டு , மாற்று வழிகளைப் பற்றி யோசிக்கவும்.
வெவ்வெறு வகையான விருப்பத் தேர்வுகளை (choices) உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கவும். என் ஒன்றரை வயது மகனிடம், எந்த ரைம்ஸ் வேண்டும் என்றால், முதலில் சொல்வது ”இலா லா” என்பான். (நிலா நிலா ஓடி வா) அடுத்து என்ன வேண்டும் என்று கேட்டால், ”பஃப்” என்பான் (the wheels on the bus) ”பஸ்” என்று இன்னும் சொல்லப் பழகவில்லை. எந்த விளையாட்டு விளையாடலாம், எந்த நர்சரி பாடல் பாடலாம், மிருகக் காட்சிச் சாலைக்குப் போனால், அவனுக்கு இஷ்டமான எந்த விலங்கை முதலில் பார்க்கலாம், பெட் டைம் ஸ்டோரியாக எந்தக் கதைப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று இப்போதிருந்தே பல சாய்ஸ்கள் கொடுத்து தேர்ந்தெடுக்கச் சொல்லவும்.

இன்னிக்கு ப்ளூ சர்ட்டா, க்ரீன் ஷர்ட்டா?. தோசை வேணுமா? சப்பாத்தி வேணுமா? என்கிற கேள்விகளைக் கேட்டு அவனையே முடிவெடுக்கச் சொல்லுங்கள். இது போன்ற சமயங்களில் நாம் கொடுக்கும் சாய்ஸ்களை இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும். நான்கைந்து சாய்ஸ்கள் அனாவசியம் மற்றும் தேவையற்ற குழப்பத்தைக் கொடுக்கும்.
குழந்தையிடம் நடத்தும் உரையாடல்கள் மூலம் அவனது சிந்தனையைத் தூண்டி விட்டு சின்னச் சின்ன விஷய்ங்களில் முடிவெடுக்கும் திறனை மெல்ல மெல்ல வளர்க்கவும்.முக்கியமாக,.

வளரும் குழந்தை முடிவெடுக்கும் ஒவ்வொரு சாய்ஸிலும் இருக்கும், நன்மை, தீமை, சாதக பாதகங்களை அறியக் கற்றுக் கொடுக்கவும்.

குழந்தை வளர வளர, நீங்கள் அதற்குக் கொடுக்கும் சுதந்திரத்தின் அளவையும் அதிகரிக்கலாம்.
பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த குழந்தைகளை, அவர்கள் செய்ய இருக்கும் பல்வேறு செயல்களை ஒரு லிஸ்ட் போடச் சொல்லி, ஒவ்வொன்றாக அவர்கள் அதை செய்து முடிக்கையில் அதை டிக் பண்ணச் சொல்லுங்கள்.

தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின் விளைவுகளை குழந்தைகளை உணருமாறு செய்யவும்.
சுயசார்புத் தன்மையை வளர்க்கையில் உங்கள் சட்ட திட்டங்களை தெளிவாக சொல்லி விடுங்கள். உதாரணத்திற்கு, சாலையைக் கடக்கையில் என் கையை கண்டிப்பாகப் பிடித்துக் கொள்ளவும்.இந்த ரூல்ஸ்களில் எந்த மாற்றத்தையும் எதிர் பார்க்க முடியாது என்று உங்கள் குழந்தைக்கு தெளிவாக உணர்த்தி விடவும்,
சுயசார்புத் தன்மையை வளர்க்க, குழந்தைகளின் மொழித் திறனை நன்கு வளர்க்க வேண்டும். பள்ளியிலோ, நண்பர்களுடன் விளையாடுகையிலோ, தனக்கு வேண்டிய உதவியை ஆசிரியர்களிடமோ, நண்பர்களிடமோ, கேட்பதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், இது எல்லா நேரங்களிலும் அம்மாவையே எதிர்பார்க்கும் சார்புத் தன்மையைக் குறைக்க உதவும்
”இந்த செயலை செய்தால், உனக்கு இதைத் தருகிறேன்” என்று எல்லா விஷயங்களுக்கும் திருமங்கலம் ஃபார்முலா டீல்களை குழந்தைகளிடம் போடாதீர்கள். நல்ல விஷயங்களைச் செய்து முடிப்பதால் வரும் நேர்மறை உணர்வும், வெற்றிகரமான மனநிலையுமே எப்போதும் சிறந்த ஊக்குவிப்பாக இருப்பது நல்லது.

சுயசார்புத் தன்மையுள்ள குழந்தைகள் பின்னாளில், தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்க்கவும், தாங்கள் மேற்கொள்ளும் விருப்பத் தெரிவின் பின் விளைவுகளை அறிந்து நல்ல தீர்மானங்களை எடுப்பவர்களாகவும் வளர்கின்றன.
தீர்மானங்கள் சின்னதோ, பெரியதோ, வீட்டிற்கோ, நாட்டிற்கோ அதனதன் அளவில் நம்மை பாதிக்கின்றன.
டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in

தமிழ் நாட்டில் வயசான குழந்தைகள் இன்று கூட எல்லாத்துக்கும் அம்மாவையே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் ;)

Read More...

ராமனின் பாதையில் - சோ - வேளுக்குடி பேட்டி


வாசகர் விருப்பம்

Read More...

Sunday, April 28, 2013

சன்டேனா இரண்டு (28-4-13) செய்திவிமர்சனம்


இந்த வாரம்..... ஒரு தனியார் பள்ளியின் உலக சாதனைகள், அரசுப்பள்ளியில் மாற்றங்கள்.

செய்தி # 1

மதிப்பெண்களை தாண்டி வேறு எதைப்பற்றியும் இன்றைய பள்ளிகள் சிந்தித்துக்கூடப் பார்ப்பதில்லை. மாணவர்களை வெறும் மனப்பாட இந்திரங்களாக உருவா​​க்குதலில் தனியார் பள்ளிகளிடையே ஒரு பெரும் போட்டியே நடைபெற்று வரும் சூழலில், புதுச்சேரியில் இயங்கிவரும் தனியார் பள்ளியான ஆச்சாரியா சிக்ஷா மந்திர் ஒரு புதிய சாதனை(களை) படைத்து இருக்கிறது.

இந்த பள்ளியின் மாணவர்கள் எலைட் நிறுவனம் நடத்திய சோதனைகளில் கலந்துகொண்டு, 154 விதமான உலக சாதனைகளை படைத்து இருக்கிறார்கள். அந்த பள்ளியில் படிக்கும் எனது நண்பர் ஒருவரின் மகன் எட்டு உலக சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஒரு பார்வையாளனாக அந்த பள்ளிக்கு சென்று, சாதனைகளை நேரில் கண்டு பிரமித்து போனேன்.



பத்தாம் வகுப்பு படிக்கும் எனது நண்பரின் மகன் கே.பிரித்வியின் பதினாறு வயதிற்க்கு உட்பட்டவருக்கான சாதனைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

ஒரே அளவுள்ள பென்சில்களை இரண்டாக உடைக்கும் போட்டி. பத்து நிமிடங்களில் 400 பென்சில்களை உடைக்கவேண்டும். பிரித்வி உடைத்தது அந்த பத்து நிமிடங்களில் 617 பென்சில்கள்.

பேப்பர் ஏரோ செய்யும் போட்டி. மூன்று மணி நேரத்தில் 400 ஏரோக்கள் செய்யவேண்டும், ஆனால், இவர் செய்து முடித்தது 1076 பேப்பர் ஏரோக்கள்.

டிஷ்யு பேப்பர்களை கொண்டு தரையில் உருவம்(மொசைக்) உருவாக்குதல். கொடுக்கப்பட்டது ஆறு மணிநேரம். மூன்றரை மணி நேரத்தில் 25 ஸ்கொயர் மீட்டர் அளவில் சாதனையை நிகழ்த்திவிட்டார் பிரித்வி.

உலகிலேயே நீளமாக செப்டி பின்களை கோர்க்கும் சாதனை. மூன்று மணி நேரத்தில் 40 மீட்டர் நீளத்திற்க்கு செயினை உருவாக்கவேண்டும். 71.65 மீட்டர் நீளமுள்ள செயினை, செப்டி பின்களை கொண்டு உருவாக்கிவிட்டார் இவர்.

உலகிலேயே உப்பினை கொண்டு, தரையில் உருவம் உருவாக்கும் சாதனை. எலைட் நிறுவனத்தின் லோகோவை 16 ஸ்கொயர் மீட்டர் அளவில் உருவாக்க கொடுக்கப்பட்ட கால அளவு ஆறு மணி நேரம். சாதனையை நிகழ்த்த இந்த மாணவர் எடுத்துக்கொண்ட கால அளவு 5.15 மணி நேரம் மட்டுமே,

உலகிலேயே குறைந்த மணி நேரத்தில் அதிக ஒவியங்கள் வரையும் சாதனை (poster colours in cloth of 50cm x 35 cm). பத்து மணி நேரத்தில் 40 ஒவியங்களை வரையவேண்டும், 45 ஒவியங்களை வரைந்து அசத்திவிட்டார் பிரித்வி,

அடுத்ததாக மெழுகுவர்த்திகளை உலகிலேயே மிகப் பெரிய உருவம் உருவாக்குதல். 10.5 மணி நேரத்தில் 9 ஸ்கொயர் மீட்டர் அளவில் உருவத்தை உண்டாக்கினார் இவர்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, மூன்று நாட்களில் இந்த 7 உலக சாதனைகளை செய்து இருப்பதும் ஒரு சாதனையாக எலைட் நிறுவனத்தால் அங்கீகரிப்பட்டுள்ளது.

இது போன்றே மற்ற 147 உலக சாதனைகளும் இந்தப்பள்ளியில் கடந்தவாரம் நடந்தேறி உள்ளன.

"முழுக்க முழுக்க உப்பினை கொண்டு உருவம் உருவாக்கும் போது மகனின் நக்கண்களில் இருந்து ரத்தமே வந்துவிட்டது" என்றார் என் நண்பர்.

பதிவின் படத்தில் இருப்பது அவர் குடும்பமே. மாணவர் பிரித்தியுடன் கைகுலுக்குபவர் அரவிந்தன், அந்தப்பள்ளியின் இயக்குனர்.

எதற்காக இவ்வாறு விலாவரியாக எழுதினேன் என்றால், இதை பார்த்தாவது மற்றப்பள்ளிகள், படிப்பு படிப்பு என்று மாணவர்களை எந்திரங்களாக்காமல், அவர்களின் விளையாட்டு,கலை போன்ற திறமைகளுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்பதற்க்காகத்தான். பெற்றோர்களுக்கும் சேர்த்து இது பொருந்தும்.

செய்தி # 2



"பொதி சுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா?"

- இது ஒரு பாடல் வரி.

மாணவர்கள் கல்வி கற்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருவதாக பின்வரும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் திரு.பொன்.குமார்.

பொன்.குமார், ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராகப் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) பணிபுரிந்தவர்.

காலந் தோறும் கல்விமுறை என்பது மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் முன்பாகக் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் சொல்லக்கூடியவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வுகளில் முறைபிறழாமல் எழுதுவது என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இத்தகைய படைப்பூக்கமற்ற கல்விமுறையை மாற்றும் முயற்சிதான் செயல்வழிக்கற்றல் முறை.

தொடக்கக் கட்டச் சுணக்கத்தைக் கடந்து தற்போது நம் கல்விமுறையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த முறை.

வசீலி கெம்லன்ஸ்கியின் ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்னும் ரஷ்யப் புத்தகம் குறிப்பிடுவதைப் போல் குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் ஒரு கல்விமுறையாகக் கல்விச் செயல்பாடுகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன.


பள்ளிக்கு வந்தவுடன் வானவில் செயல்பாடு என அழைக்கப்படும் ஓர் அட்டையை எடுத்துவந்து ஒன்றாகக் கூடி அதிலுள்ள பாடல்களைப் பாடத் தொடங்குகின்றனர் மாணவர்கள். கற்றல் இப்படித்தான் ஒரு கொண்டாட்டமாகத் தொடங்குகிறது. பிறகு அவர்களுக்குரிய குழுவில் அமர்கின்றனர். ஒவ்வொரு குழுவுக்கு முரிய பாடங்கள் அட்டைகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அவரவர் தேவைக்கேற்றபடி பாடங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர்.

பழைய கல்விமுறையில் ஆசிரியர் தன் திட்டப்படி ஒரு பாடத்தை நடத்தத் தொடங்குவார். மாறுபட்ட ஏற்றத் தாழ்வான கற்கும் திறன்களைக் கொண்ட அனைத்துக் குழந்தைகளும் அந்தப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருப்பர். கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும்போது ஆசிரியரும் மேம்பட்ட கற்றல் திறன் கொண்ட குழந்தைகளும் அடுத்த பாடத்துக்கு நகர்ந்து சென்றிருப்பர். செயல்வழிக்கற்றல் முறை இதிலிருந்து முற்றாக வேறுபட்டது. மேம்பட்ட கற்றல் திறன்கொண்ட குழந்தைகள் அடுத்த பாடத்தைக் (அதாவது அட்டையை) கற்கத் தொடங்குவர்.

மெதுவாகக் கற்பவர்கள் பதற்றமின்றி, தமக்கான பாடங்களைக் கற்பர். ஆசிரியர்கள் இவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். முன்னர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதும், ஆசிரியர் அடுத்த பாடத்துக்குச் சென்றுவிடுவார். இப்போது கற்பிக்கும் முறை கற்றல் திறனில் குழந்தைகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைச் சமன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. குறைவான கற்றல் திறன் கொண்ட மாணவனுக்காக ஆசிரியர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்பதே இதன் பொருள்.

முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் ஒரே குழுவாக உட்காரவைக்கப்படுகிறார்கள். இதேபோல்தான் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களும். இது அவர்களுக்குள் தோழமையுணர்வையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்கிறது.

தொடக்கக் கல்வியின் இன் னொரு முக்கிய அம்சம் கணிதம் கற்பிக்கும் முறைகள். ஒவ்வோர் அரசுப் பள்ளிக்கும் ஒரு கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கணிதப் பயிற்சிப் பெற்றுவருகின்றனர். முக்கோணம், செவ்வகம், சதுரம், மணிச்சட்டங்கள், ஒன்று, பத்து, நூறு இலக்கங்கள் எளியமுறையில் இதில் போதிக்கப்படுகிறது. இத்தகைய உப கரணப் பெட்டிகள் தனியார் மழலையர் பள்ளிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்க வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம் முதலான கலைச் செயல்பாடுகள் பாட அட்டையிலேயே இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் வில் இசைத்துப் பாடுகின்றனர். பொம்மலாட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களது நினைவாற்றலை, ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுகிறது. குறுந்தகடுகள் மூலம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் நடைமுறை பல பள்ளிகளில் இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதில் பல அரசுப் பள்ளிகள் பின்பற்றி வரும் நவீன அணுகுமுறை அந்த மொழியின் பயன்பாடுகளை விரிந்த அளவில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்றாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடியும்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (Simplified Active Learning Method) அறிமுகப்படுத்தப்பட்டு அது ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையிலும் ஒன்பதாம் வகுப்பில் (Active Learning Method) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தைப் படிக்கும்போது அதிலுள்ள கடினமான வார்த்தைகளை இனங்கண்டு உரிய அர்த்தத்துடன் முதலில் ஒரு பக்கத்தில் எழுதுகின்றனர். அதைத் தொடர்ந்து படம் வரைகின்றனர். கடின வார்த்தைகள், கடினப் பகுதிகளையும் சேர்த்துப் படங்களாக வரைகின்றனர். பிறகு இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் தொகுத்து மூன்றாம் பக்கத்தில் எழுதுகின்றனர். இறுதியாக மதிப்பிடுதல் என்று வினா விடை பகுதியாக எழுதுகின்றனர்.

இதன் வாயிலாக மாணவர்கள் ஒரு பாடத்தை நான்கு வழிகளில் கற்கின்றனர். இதனால் அவர்கள் மனத்தில் சிறப்பான கருத்துகளும் கடின வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் பதிவதுடன் இது பின்னாளில் அவர்களுக்கு நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. மேலும் கணிதப் பாடத்திற்கு ஜிமிநிணிஸி முறை என்னும் வகையில் கணிதம் எளிமையாகக் கற்பிக்கப்படுகிறது. இதுவும் கணிதச் செயல்பாடு கற்பிக்கும் முறையில் ஒரு புதிய முயற்சி.

மாறி வரும் சூழலுக்கேற்பத் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்குக் கணிப்பொறிகளும் மடிக் கணினிகளும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகவும் தொடக்கக் கல்வித் துறை மூலமாகவும் வழங்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படுகிறது. கணினி வழிக் கல்வி மையங்கள் (Computer Aided Learning) பெரும்பான்மையான பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தொலைதூர மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும்-உதாரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாணவர்களையும் - கணிப்பொறிக் கல்வி எட்டியுள்ளது. இது தொடக்கக் கல்வித் துறையில் மிகப் பெரிய சாதனை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், தளவாடச் சாமான்கள் தேவையான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 900 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டம்.

தற்போது ஆர்வம் மிகுந்த குழந்தைகளும் செயலாற்றத் துடிக்கும் ஆசிரியர்களும் சமூக நலமிக்க அலுவலர்களும் நவீன ஆலோசனை தரும் வட்டார வளமையர்களும் அதிகரித்துள்ளனர். பொதுக்கல்வி சார்ந்து நிலவிவரும் அவநம்பிக்கைகளை இந்தப் போக்கு மதிப்பிழக்கச் செய்துவருகிறது எனலாம்.

இது போன்று கல்வி முறையில் பின்பற்ற வேண்டிய பலவேறு புதிய உத்திகளை முன்மொழிகிறார் இந்தக் கடடுரையில் திரு.பொன்.குமார்.

மாற்றம் வருமா????



(நன்றி, இனி, அடுத்தவாரம்)

-இன்பா

Read More...

Friday, April 26, 2013

வியாபாராமாயணம்


Read More...

Thursday, April 25, 2013

மைக்கேல் ஜாக்ஸன் கூப்பிட்டாக ...ஜாக்கிசான் கூப்பிட்டாக



இந்த வார விகடனில் கனிமொழி பேட்டி

கேள்வி: சமீபகாலமாக அரசியல் அரங்கில் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று முன்மொழிகிறார்கள். நீங்கள் ஏன் உங்கள் தலைவர் கருணாநிதியை பிரதமர் பதவிக்கு முன்னெடுக்கவில்லை? பதில்: எனக்குத் தெரிந்து, தலைவரை ஜனாதிபதி பதவியேற்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்கு தமிழ்நாட்டை விட்டுச் செல்ல விருப்பம் இல்லை. அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள்... இருப்பார்கள். அவரை நீங்கள் என்ன விமர்சித்தாலும் அவர் உங்களோடுதான் இருப்பார்!


வீடியோவை பார்க்கவும் :-)

Read More...

இருடீஇருக்குஉனக்கு !


நீங்களும் என்னை கட்டிபிடிக்கலாம் நிகழ்ச்சி என்ற பதிவில் கமலுக்கு 50 கோடி என்று தவறாக எழுதியதை பலர் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கமல், மற்றும் தொகுப்பாளினிகள் செய்த கூத்தை பற்றி பலர் ஒன்றும் சொல்லவில்லை.

இந்த மாதிரி பெரிய இடத்து பஞ்சாயத்துக்கு சரியான நபர் ஜெயஸ்ரீ தான் அதனால் அவருடைய கருத்தை இட்லிவடை கேட்டது. சில நாட்களுக்கு முன் புதிதாக இன்னொரு ஜெயஸ்ரீ முளைத்திருக்கிறார் - பெயர் ஜெயஸ்ரீ சாரநாதன்!. அவருடைய கருத்து கீழே..

நீங்கள் எந்த ஜெயஸ்ரீயைக் கேட்டீர்களோ தெரியாது, நானும் ஜெயஸ்ரீதான், அதனால் சொல்கிறேன். தொகுப்பாளினிகள் செய்தது பயங்கர வழிசல். (நான் DD செய்ததை மட்டும்தான் பார்த்தேன்.). அதற்கு மேல் பார்க்கப் பொறுமை இல்லை. என் கட்டுரைகளே தேவலாம், கமலஹாசன் பேச்சைக் கேட்டால் கண்டிப்பாகத் தூக்கம் வந்து விடும். காதல் இளவரசன்னு ஒரு பட்டம் வேறு இருக்கே, அதற்கு ஒப்பேத்த அப்படி சீன் போட்டுருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆர்ட்டிபிஷியலா இருந்தது.

இப்படிச் சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீபத்தில் சென்னை டைம்ஸில் சுருதி ஹாசன் பேட்டி அளித்திருந்தார். அதில் கமலது ரசிகர்கள் டிக்னிடியுடன் நடந்து கொள்பவர்கள் என்று சொல்லியிருந்தார். அதாவது கமலுடன் வெளியில் செல்லும் போது, அவரைப் பார்க்கும் ரசிகர்கள், ஏதோ காணாததைக் கணட மாதிரி நடந்து கொள்ளாமல், இயல்பாக முகமன் கூறிச செல்வார்கள் என்றிருக்கிறார். உண்மையான ரசிகர்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். டிவியில் கண்டது ஒரு ஷோ. உண்மையில் கமலுக்குப் பெண் ரசிகர்கள் குறைவு என்பது என் கருத்து - probably except Gauthami. மூன்று முடிச்சு காலத்தில் இருந்திருக்கலாம், இப்பொழுது இல்லை என்று நினைக்கிறேன்.


வழக்கம் போல ஜெயஸ்ரீ மாமி அவர்கள் சொன்ன பதிலை கீழே தந்துள்ளேன். ( நன்றி ஃபேஸ் புக் )

இடையில் ஒரு காட்சியில் இந்தப் "பழங்காலத்து"ப் ப்ரியா கண்ணீர் விட்டபோதே இந்த எழவைப் பார்க்கக்கூடாதென்றிருந்தேன். இருந்தாலும் பதிவு செய்திருந்ததை அழிக்காமல் விட்டது என் தவறு. கமல் அறத்தை முன்னெடுக்கிறார், பாரு பாரு என்று என்னைத் தொணப்பிப் பார்க்கவைத்த Priya Sivashankaran னிலிருந்து ஆரம்பிக்கிறது என் கடுப்பு. :) :இருடீஇருக்குஉனக்கு:

சேர்ந்து வாழ்கிறேன் என்று கௌதமி சொல்லியிருந்தால் சேர்த்துக்கொண்டுவிடுவதா?

ஒளிவெள்ளத்தில் 500 பேர் பார்த்துக்கொண்டிருக்க, கோடிக்கணக்கானவர் வீட்டில் டிவியில் பார்க்கப்போகிறார்கள் என்பது தெரிந்தும்...

என் கணவரை போகச் சொல்லிவிட்டு கமலுடன் வாழ்ந்துகொள்வேன் என்பேன் என்று ப்ரியா சொல்லக்கூட முடியாமல் வார்த்தை அடைக்க ஓடோடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டால் தானும் ஹாட்சீட்டிலிருந்து இறங்கிவராமல், ஒரு நல்ல தமிழனாக, இதெல்லாம் தமிழ்க் கலாசாரமில்லை என்று அறிவுறுத்தித் திருத்தி அனுப்பாமல்,

DD என்கிற கலாசாரக் காவல் தேவதை, கட்டிப்பிடித்தலோடு எனக்கு முத்தமும் போனஸாக வேண்டும் என்று கேட்டால், இது தவறு, இங்கு பணம்வெல்லவே வந்திருக்கிறேன், இவை எல்லாம் தவறு என்ற புரிதலை அவருக்கு வழங்காமல்...

இப்படி அயோக்யத்தனங்கள் செய்த கமலைக் கடுமையாகக் கண்டித்து, அந்தப் பெண் தெய்வங்களுக்கு ஏற்பட்ட இழுக்கைப் போக்க வேண்டிய பொறுப்பை அவருக்கு நினைவூட்டுவதோடு...

இதுபோன்ற பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்திருத்தம் வரவேண்டும் என்றும் சொல்லி அமைகிறேன். :சோடா:

பிகு: அறத்தை கடைசியில் ஒருவழியாக முன்னெடுத்ததையும், நல்நோக்கத்திற்காக் 50 லட்சம் வெற்றிபெற்றதையும் தவிர இந்த விஜய் டிவி நிகழ்ச்சி மஹா செயற்கையானதும் கேவலமானதும்..

ஒரு ஜெயஸ்ரீக்கே இந்த உலகம் தாங்காது, இரண்டு டூமச். தேவுடா

Read More...

Tuesday, April 23, 2013

லால்குடி ஜெயராமன் - அஞ்சலி



அஞ்சலி

Read More...

'நகை'ச்சுவை


முன்பு ஏதோ ஒரு எஸ்.வி.சேகர் நாடக கேசட்டில் லலிதா ஜுவல்லரி விளம்பரத்துக்கு பணம் தராமல் ஏமாத்திவிட்டார்கள்(?) என்று சொல்லுவார். தற்போது பணம் தந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் !


தங்கம் விலை குறைய இது கூட காரணமாக இருக்கலாம்

Read More...

Friday, April 19, 2013

இன்று ஸ்ரீ ராம நவமி !


ராமநவமி வாழ்த்துகள்

Read More...

Wednesday, April 17, 2013

பாஸ்டன் குண்டு வெடிப்புப் பாடங்கள்

சமீபத்தில் பாஸ்டன் மராத்தன் ஓட்டப்பந்தயத்தில் நடந்த குண்டு வெடிப்பிலிருந்து சில முக்கியப் பாடங்களை இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக் கொள்ளும் என்று நம்பிக்கை இல்லாவிட்டாலும் சிலவற்றை குறிப்பிடுகிறேன்,

1. பொதுமக்கள் நடந்து கொண்ட விதம்.

கூட்டம் கூடி, உதவி செய்ய வருபவருக்கு இடைஞ்சல் பண்ணாமல் இருந்தது. குண்டு வெடிப்பில் காயமடைந்தவருக்கு உதவி செய்தது, நிலைமை chaotic-ஆகாமல் பார்த்துக் கொண்டது என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

2. காவல் துறை, மருத்துவக்குழு நடந்து கொண்ட விதம்

மிக மிக துரிதமாக குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு வந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆச்சரித்தை அளித்தது. அவர்களின் பயிற்சியும், தங்கள் பணியின் மேல் அவர்களுக்கிருந்த மரியாதையுமே அதற்குக் காரணம்.

3. அரசியல்வாதிகள், அரசு முக்கியஸ்தர்கள் நடந்து கொண்ட விதம்

காங்கிரஸ், பிஜேபி இன்னபிற கட்சி சார் அரசியல்வாதிகள் போல, ஒருவரை ஒருவர் வசை பாடாமல், அரசியல் செய்யாமல், ஜனநாயக, குடியரசுக் கட்சித் தலைவர்கள் நடந்து கொண்ட விதம், நாம் ஏன் இப்படி இருக்கிறோம், அமெரிக்கா ஏன் அப்படி இருக்கிறது என்று புரிய வைத்தது. குடியரசுக் கட்சித் தலைவர்கள் யாரும் ஓபாமாவோ, ஜனநாயகக்கட்சியோ தான் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று ஓலமிடவில்லை. பொதுவாக, குண்டு வெடிப்பை வைத்து மலிவு அரசியல் செய்யாமல், அதற்குக் காரணமானவர்களை கண்டு பிடிப்பது, மீண்டும் நிகழாமல் தடுப்பது ஆகியவையே முக்கியம் என்று புரிந்து நடந்து கொண்டதற்குக் காரணம், பொது நன்மை மேல் அவர்களுக்கிருந்த அக்கறை. யாரும் குண்டு வெடித்த இடத்துக்கு வந்து photo op-க்கு முயற்சிக்கவில்லை. 26/11 தாக்குதல் போது நடந்த கூத்து வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

4. மீடியா நடந்து கொண்ட விதம்

இந்திய மீடியாவுக்கும் இதில் பாடமிருக்கிறது. நமது அரசியல்வாதிகள், இது போன்ற சமயங்களில், மலிவு அரசியல் செய்வதற்கு மீடியாவும் ஒரு காரணம். பேனல் டிஸ்கஷன் என்ற பெயரில், அவர்களை ஏற்றி விடுவது, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை ஒளிபரப்பி, தங்கள் டிவி சேனலின் TRP-யை ஏற்றிக் கொள்ள முயற்சிப்பது, எதையும் sensationalize செய்து வெளியிடுவது என்று அலம்பல் செய்யாமல் இந்திய டிவி நியூஸ் மீடியா நடந்து கொண்டால் புண்ணியமாகப் போகும்.

இதை எழுதும்போது, பெங்களூர் மல்லேஸ்வரத்தில், குண்டு வெடித்த செய்தி டிவியில் வந்து கொண்டிருந்தது. காங்கிரஸின் ஷகீல் அஹமதின் பிரச்சினைக்குரிய ஒரு டிவீட்டை வைத்துக் கொண்டு, சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். பிஜேபி காங்கிரசுக்கு 3 கேள்விகளை முன் வைத்து எதிர் தாக்குதலைத் தொடங்கி விட்டது. ஆங்கில நியூஸ் மீடியா சேனல்கள் அந்த ஒரு டிவீட்டை வைத்துக் கொண்டு, குளிர் காய்வதையும் பார்க்க முடிந்தது. இவர்கள் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கையில்லை !

- எ.அ.பாலா

கடைசி பாடம்: எ.அ.பாலா ஐபிஎல் பற்றி எழுதினால் பின்னூட்டதில் அடுத்த குண்டு வெடிக்கும் :-)

Read More...

Tuesday, April 16, 2013

நீங்களும் என்னை கட்டிபிடிக்கலாம் நிகழ்ச்சி

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சிறப்பு நிகழ்ச்சியில் 'கமல்-கவுதமி' சகிதம் வந்திருந்தார். கமல் 50 கோடியும், அவரை சுற்றி வட்டமாக வயசான டிவி அறிவிப்பு செய்யும் பெண்கள் கமலை கட்டிப்பிடித்து சிலர் முத்தம் கூட கேட்டு வாங்கிக்கொண்டு போனார்கள்.

சிக்னலில் ஒருவன் வண்டி ஆஃப் ஆகும் போது பல நூறு எதிரிகளை சம்பாதிக்க நேரிடுவது மாதிரி கமல் செய்த இந்த கட்டிப்பிடி டிவி பார்த்த பல ஆண்கள் பலருக்கு எரிச்சலை தந்தது. பெண்கள் பொறாமைப்பட்டார்கள்.

இட்லிவடைக்கு இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு சில டவுட்டுகள் வந்தது.

* கமலுக்கு பதில் விடிவேலு அல்லது விஜயகாந்த வந்திருந்தால் இதே மாதிரி அலை மோதி கட்டிப்பிடுத்திருப்பார்களா ?

* கமலுக்கு பதில் அங்கே ஒரு பெண் பிரபலம் வந்திருந்தால் ஆண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கேட்டால் சமுகம் என்ன சொல்லும் ?

* ஜெ பதில் என்ன ? ( ஜெயமோகன் இல்லைப்பா ஜெயஸ்ரீ )

* * * 

தினமணியில் வரும் மதியின் கார்டூன் நாளுக்கு நாள் ஒரு படமும் கீழே ஒரு முழத்துக்கு கட்டுரையும் வருகிறது. இதை கார்டூன் என்பதற்கு பதில் கட்டுரைடூன் என்று சொல்லலாம். சமீபத்தில் தமிழக மின்சார வாரியம் பற்றி ஒரு கார்டூன் கண்ணில் பட்டது கார்டூனுக்கு இதுவே சிறந்த உதாரணம்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் PB ஸ்ரீநிவாஸ் அஞ்சலியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நடுவர் புகழ் ஸ்ரீநிவாஸ் பற்றி எழுதியது காமெடி. விடுவார்களா ஃபேஸ் புக், டிவிட்டர் மக்கள் ? போட்டு தாளித்து எடுத்துவிட்டார்கள். மாண்டலின் ஸ்ரீநிவாஸ் எல்லாம் இவர்களுக்கு தெரியாமல் போனது விந்தை. சரி கடைசியாக அவர்களும் மன்னிப்பு கேட்டு விட்டார்கள். விட்டுவிடலாம்.

* * *


நேற்று சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் துவங்கிய புத்தக கண்காட்சியின் முதல் நாள் மிகக் குறைந்த தொகைக்கான விற்பனையில் உயிர்மை சாதனை படைத்தது. நேற்றைய விற்பனை 700 ரூபாய் என்று கவிஞர், எழுத்தாளர், டிவி விவாகஸ்தர், பதிப்பாளர், ஃபேஸ்புக் ஸ்டேடஸ் புகழ் மனுஷ்யபுத்திரன் சோகமாக தன் ஃபேஸ் புக்கில் ஸ்டேடஸ் போட்டிருக்கிறார். போன வார குமுதம் இதழில் வாசகர் கடிதத்திலும் இவர் பெயர் வந்திருந்தது. இங்கேயும் வந்துவிட்டாரா என்று குமுதம் ஆபிஸுக்கு போன் செய்த போது அவர்கள் அது மனுஷ்யபுத்திரன் இல்லை கடிதம் எழுதியவர் அமானுஷ்ய புத்திரன் என்றார்கள். நான் தான் 'அ' பார்க்கவில்லை

அ என்றவுடன் அஞ்சலி தான் நினைவுக்கு வருகிறார். கண்ணீர் அஞ்சலி சரி, ஆனால் அஞ்சலியே கண்ணீராக ... இப்ப தான் பார்க்கிறோம். 

Read More...

Monday, April 15, 2013

கடவுள் வந்திருந்தார் - நாடகம் - அறிவிப்பு

இட்லிவடை நண்பர்களே,

இதோ.....சென்னை அரங்கம் மேடையேற்றும் ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகத்தின் அழைப்பிதழ் உங்கள் கையில். மேள தாளத்தோடு, வெற்றிலை பாக்கு சகிதம் உங்களை அன்போடு அழைக்கிறேன். நாடக ஆர்வலர்கள் அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.

IPL கிரிக்கெட், குழந்தைகள் பரீட்சை, டி.வி.யின் ’விடுமுறை தினக்கொண்டாட்டங்கள்’ அனைத்தையும் மறந்து, வரும் 23, 24-ம் தேதி மாலை ம்யூசியம் தியேட்டரை நிரப்ப வாருங்கள். உங்கள் உன்னதமான மன மகிழ்ச்சிக்கு நாங்கள் ‘கேரன்டீ’! எண்பதுகளில் நான் தில்லியில் பலதடவை போட்ட எனக்குப்பிடித்த நாடகம். சுப்புடு ”60 Laughters a Minute!” என்று தலைப்பிட்டு தில்லி ஸ்டேட்ஸ்மனில் விமர்சனம் எழுதினார். முப்பது வருடத்திற்குப்பிறகும் அதே கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறேன்.

ஒரு நல்ல நாடகம் போடுவது ஒரு கல்யாணம் பண்ணிப்பார்ப்பதையும், வீடு கட்டுவதையும் விட சிரமமான காரியம்!

அனைவரும் வாருங்கள்!............ஊர் கூடி தேர் இழுப்போம்!

அன்புடன்,

பாரதி மணி




Read More...

Sunday, April 14, 2013

பி.பி. ஸ்ரீனிவாஸ் - அஞ்சலி



அஞ்சலி

Read More...

Saturday, April 13, 2013

விஜய வருஷம் ஜெகத் உலக பலன்கள்

வெற்றிகளைக் குவித்து நினைத்தது நடந்து இனிக்கும் விஜய வருஷம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறக்கிறது. பிறக்கப் போகும் புத்தாண்டில் செல்வங்கள் சேரவும், சிறப்புடன் வாழ்ந்து மகிழ்ச்சியான தருணங்களை எதிர்கொள்ளவும், இயற்கை அன்னை சீற்றம் எதுவும் கொள்ளாமல் இருக்கவும், நலமும், வளமும் நாட்டில் மேலோங்கவும், புத்தாண்டின் தொடக்க நாளில் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டை மேற்கொள்வது அவசியமாகும்.


விஜய வருஷம் ஜெகத் உலக பலன்கள்


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/02.html


பொது ராசி பலன்கள்:


மேஷம்:

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ இராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள்.

மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/03.html
விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 03 - மேஷ ராசி பலன்கள்




ரிஷபம்:
சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! நீங்கள் இராப்பகல் பாராமல் உழைப்பதில் வல்லவர். காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்பவர். தன்னை விட தங்கள் குழந்தைகள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புபவர்கள்.


மேலும்:விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 04 - ரிஷப ராசி பலன்கள்
http://kuppuastro.blogspot.in/2013/04/04.html





மிதுனம்:

எதிலும் நிதானத்தைக் கடைபிடித்து காரியங்களை கரை சேர்க்கும் மிதுன ராசி வாசகளே நீங்கள் எதிலும் உங்கள் அறிவை வெளிக்காட்டுபவர். உங்களுடைய சாதுர்யத்தால் காரியங்களை சாத்த்துக் கொள்வீர்கள். இன்முகம் காட்டாது அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள்.

மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/05.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 05 - மிதுன ராசி பலன்கள்






கடகம்:
எதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடும் கடக ராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கி விரோதமான காரியத்தை செய்யமாட்டீர்கள் நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்குமுன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள்


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/06.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 06 - கடக ராசி பலன்கள்




சிம்மம்:
எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/07.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 07 - சிம்ம ராசி பலன்கள்







கன்னி:

எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/06_9.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 08 - கன்னி ராசி பலன்கள்





துலாம்:

எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அதிகம் சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் சின்ன சின்ன பிரச்சனைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/09.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 09 - துலாம் ராசி பலன்கள்







விருச்சிகம்:

எதிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெற்றிகளைக் குவிக்கும் விருச்சிக ராசி வாசகர்ளே நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள தயங்குவீர்கள். உங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்வீர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/10.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 10 - விருச்சிகம் ராசி பலன்கள்







தனுசு:

எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும் உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/11.html




விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 11 - தனுசு ராசி பலன்கள்





மகரம்:

எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின் மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள்.



மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/12.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 12 - மகரம் ராசி பலன்கள்





கும்பம்:

கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கும் கும்ப ராசி வாசகர்களே நீங்கள் புது தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/13.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 13 - கும்பம் ராசி பலன்கள்



மீனம்:

கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/14.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 14 - மீனம் ராசி பலன்கள்


பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

எல்லோருக்கும் 'தமிழ்' புத்தாண்டு வாழ்த்துகள்

Read More...

Wednesday, April 10, 2013

போஸ்டர் தமாஷ்



செய்தி: தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி’, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆர்’ ஆகிய இரண்டுக்கும் நிழல் யுத்தம் நடக்கிறது. சட்டசபை வளாகத்துக்கு வரும் ஸ்டாலினை அவரது கட்சியினர் வரிசையில் நின்று வரவேற்கும் ஒரு புகைப்படத்தை நாளிதழ் ஒன்று வெளியிட்டது. அதைப் பார்த்து கோபப்பட்ட முரசொலி, ஜெயலலிதா வரும்போது மந்திரிகள் எப்படி வணங்கு​வார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'தலைநிமிர்ந்து வணக்கம் சொல்வது இங்கே. தலைகுனிந்து வணக்கம் சொல்வது அங்கே’ என்று தலைப்பிட்டு வம்புக்கு இழுத்தது. 'நமது எம்.ஜி.ஆர்.’ சும்மா இருக்குமா? கருணாநிதியை குஷ்பு குனிந்து வணங்கும் படத்தையும் மாற்றுத்திறனாளி ஒருவர் கருணாநிதியின் காலடியில் உட்கார்ந்து கோரிக்கை வைக்கும் காட்சியை வெளியிட்டு 'எத்தர்களை வணங்கும் இது எந்த வகை வணக்கம்???’ என்று தலைப்பு கொடுத்​துள்ளது.



முதல்ல அஞ்சலியை காப்பாத்துங்க

Read More...

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 10


குழந்தையின் வெவ்வேறு திறன்களை பல்வேறு வகையான விளையாட்டுக்கள், எப்படி மேம்படுத்துகின்றன என்று பார்த்தோம். சூப்பர் குழந்தைகளை உருவாக்குவதில் கதைகள் சொல்வதின் பங்கு பற்றி இனி பார்ப்போம்.


இன்று நேற்றல்ல, கதை சொல்வதென்பது பல ஆயிரம் ஆண்டுகளாக, எல்லா நாடுகளிலும் இருந்து வருகிற ஒரு நல்ல விஷயம். குழந்தை சிவாஜியும், மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியும் அவர்களது வீரத்தையும், சத்தியத்தையும் கதைகளின் மூலமே பெற்றார்கள். நான் குழந்தையாய் இருந்த போது பாட்டி எனக்குச் சொன்ன கதைகளுடனேயே பெரும்பாலும் எனது இரவு உறக்கம் துவங்கும்.அரக்கர் கதை, ராஜாக்கள் கதை, விலங்குகள், பறவைகள் பற்றின கதை என்று வற்றாத அமுதசுரபியைப் போல பாட்டியிடம் இருந்து கதைகள் வந்து கொண்டே இருக்கும். குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லும் பழக்கமே இப்போதெல்லாம் அருகி வருகிறது.வேலைக்குப் போகும் பெற்றோர்கள், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நேரம் இல்லாததால், குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களைப் போட்டு, அவர்களை உட்கார வைத்து விடுகின்றனர்.ஆயிரம் தொலைக்காட்சிச் சேனல்கள், ஒரு கதை சொல்லும் தாய்க்கு ஈடாகா. நாம் சொல்லும் கதைகள் குழந்தைகளின் மூளையை முடுக்கி விட்டு, சிந்திக்கும் திறன், யூகிக்கும் திறன், கேள்வி கேட்கும் திறன்,படைப்பூக்கம் ஆகியவைகளை வளர்க்கும். தொலைக்காட்சிச் சேனல்கள் மூளைத் திறனை மந்தமாக்கும். தொலைக்காட்சி, வீடியோ கேம் போன்றவைகளை, அதிக பட்சம் ஒரு நாளைக்கு அரை மணி நேரத்திற்கு மேல் பார்க்க அனுமதிக்க வேண்டாம்.தீராத பட்சத்தில், அம்மா அல்லது அப்பா, கூடவே இருந்து அவர்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் காட்சிகள் பற்றி விளக்கவும், கேள்விகள் கேட்கவும், அதனுடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றிக் கூறவும் வேண்டும்.


கதை சொல்வதென்பது, குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களை, அவர்களுக்கு வாசித்துக் காட்டுவது, தம் நினைவில் இருந்து கதைகளை சொல்வது, பொம்மைகளைக் கொண்டு கதைகள் சொல்வது என்று இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். கதைகளை விரும்பாத குழந்தைகளும் உண்டோ? குரங்கு குல்லா எடுத்த கதை, காக்காயிடம் இருந்து நரி வடை பறித்த கதை, சிங்கத்தை முயல் ஏமாற்றிய கதை இவையெல்லாம் என் குழந்தைக்கு மிகவும் பிடித்த கதைகள்.
பல பெற்றோர்கள் நினைப்பதைப் போல, கதை சொல்வதொன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை.குழந்தை சிறியதாக இருக்கும் போதே, சிறிய மிக எளிய கதைகளை சொல்லத் தொடங்கலாம். அவர்களுக்கு வயதேற ஏற, சற்றுப் பெரிய,சிக்கலான கதைகளைச் சொல்லலாம்.

எளிதான பயிற்சிகள் மூலம் சிறந்த கதை சொல்லியாக உங்களை வளர்த்துக் கொண்டு உங்கள் குழந்தையின் அறிவுத்திறனையும் வளர்க்கலாம்.கதை சொல்லும் முன், அந்தக் கதையை நன்கு தெரிந்து கொள்ளவும்.தேவையான புத்தகம், பொம்மைகள் அல்லது படக்கதையை எடுத்து வைத்துக் கொள்ளவும். கதையைஆரம்பிக்கையிலேயே ஒரு சஸ்பென்சோடு அல்லது எஃபெக்டோடு துவக்கவும்.உங்கள் குரலை சற்று சத்தமாக, ஏற்றத் தாழ்வுடன் ட்யூன் செய்து கொள்ளவும். குழந்தையை, உங்கள் அருகிலே அமர/படுக்கச் சொல்லி, கதை சொல்லவும்.நீங்கள் படித்த, பார்த்த கதையை மட்டுமல்ல, உங்களது வாழ்வில் நிகழ்ந்த சுவையான விஷயங்களையும், நீங்கள் கதைகளாகச் சொல்லலாம்.

கதை கேட்கும் குழந்தைகளின் கற்பனா சக்தி பெருகுகிறது.கவனிக்கும் திறன் வளர்கிறது.கதைகள் பெற்றோரையும் குழந்தைகளையும் இன்னமும் நெருக்கமாக்குகின்றன. எப்போதும் ஓடித் துள்ளித் திரிந்து கொண்டிருக்கும் குழந்தைகள், ஒரு இடத்தில் அமர்ந்து கதை கேட்கையில்,கவனிப்பதற்கும், அமைதியாக மனதை கதையில் ஈடுபடுத்தவும் பழகுகின்றனர்.
அன்பு, கருணை, ஒத்திசைவு, அழகு, அமைதி போன்றவற்றை அறிய உதவும் கருவிகளாக, கதைகள் விளங்குகின்றன. கதை கேட்பது,கற்றலுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கிறது.புத்தகத்தில் பார்க்கும் படங்களையும், நாம் சொல்லும் கதையையும் தொடர்புப் படுத்த, குழந்தைகள் கற்கின்றனர்.இந்த விஷீவலைஸேசன் திறன், குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, அவர்களை மகிழ்விக்கவும், ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
கதைகள் கேட்பது, கதைகளில் இன்னமும் ஆர்வத்தை அதிகப்படுத்தி, பின்பு புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கும் அடிப்படைத் தளம் அமைக்கிறது.

கதை சொல்கையிலேயே, அவர்களைக் கேள்விகள் கேட்டு, முந்தின நாள் பாதியில் அந்தக் கதையை எங்கே நிறுத்தினீர்கள் என்றெல்லாம் கேட்பது, அவர்களது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.கதையில் அடுத்து என்ன நிகழும், எவ்விதமாக முடியும்? என்று அவர்களைக் கேட்பது, அவர்களது யூகிக்கும் திறனை வளர்த்து, படைப்பூக்கத்திற்கு வழி வகுக்கும். புதிய இடங்கள், புதிய கதாபாத்திரங்கள், செயல்கள் என்று கதைகள், குழந்தைகளுக்குப் புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தி, அறிவை விரிவாக்குகின்றன.பெரும்பாலான கதைகளில் நல்லது மற்றும் தீயவை இடம் பெறுவதால், கடைப் பிடிக்க வேண்டிய மற்றும் விலக்க வேண்டியவைகளைப் பற்றி அறிகின்றனர்.நம் தலைமுறையிலிருந்து, நமது அடுத்த தலைமுறையினருக்கு, நம் பண்பாடு, கலாச்சாரம் போன்றவைகளைக் கடத்தும் சங்கிலியின் கண்ணிகளாகக் கதைகள் உள்ளன.புதிய வார்த்தைகள், உணர்ச்சிகளைக் கதைகளில் இருந்து பெறும் குழந்தை, அவைகளைப் பயன்படுத்த முற்படுவதால் மொழித் திறன் வளர்கிறது
கற்கும் நேரம், விளையாடும் நேரம் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பது நாம் தான். குழந்தைகளுக்கு எல்லா நேரமும் விளையாட்டு நேரம் தான். எனவேதான், கதை சொல்லல் நிகழும் வேளையில் தான் அதிக பட்ச மொழியறிவை, குழந்தைகள் கற்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

குழந்தைகளுக்குக் கதை சொல்ல சில எளிய டிப்ஸ்:
• கதைகள் சொல்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். இரவு படுக்கைக்கு முன் என்பது சரியாக இருக்கலாம்.தினமும் அந்த நேரத்தில் கதை சொல்வதென்பது ஒரு பழக்கத்தையும் ஒழுங்கையும் கொண்டு வரும். நாளெல்லாம் ஓடி விளையாடிக் களைத்த குழந்தைக்கு அது ஒரு நல்ல புத்துணர்வூட்டும் நிகழ்வாக இருக்கும்.கதையில் ஒருமுகப் பட்டு அமைதியான குழந்தையை, ஒன்றிரண்டு தாலாட்டுப் பாடல்களால் உறங்க வைப்பதும் சுலபம்
• குரலை வெவ்வேறு அளவுகளில் வேறுபடுத்தி, உயிர்ப்புடன், மாடுலேஷன் செய்யுங்கள்.ஒரே விதமான குரல் ஒலி சலிப்பையூட்டி, கதையை போரடிக்கச் செய்து விடும்.கதையில் வரும் மிருகம், பறவை, மனிதரகள் போல உங்கள் குரலை மிமிக்ரி செய்ய முயற்சிக்கவும்.

• ஒரு பெரிய திருப்பத்திற்கு முன் கொஞ்சம் நிறுத்தவும் (pause).இது, குழந்தைகளின் எதிர்பார்ப்பைத் தூண்டி, கதையின் மேலிருக்கும் ஆவலை அதிகரிக்கும்.

• கதைகளில் வரும் உணர்ச்சிகளான கோபம், பயம், அமைதி, மகிழ்ச்சி, ஏமாற்றம் போன்றவைகளை உங்கள் முகத்தில் காண்பிக்கவும்.உங்கள் குரலும், முக பாவனைகளுமே, குழந்தைகளை, கதை உலகத்திற்கு அழைத்துச் சென்று கதையை உயிர்ப்பிக்கின்றன.

• கதாபாத்திரங்களின் உடையை, முகமூடியை அணியுங்கள். கரடிக் கதை சொல்கையில், கரடியின் முகமூடி இருந்தால் அதை அணிந்து கொண்டு சொல்லுங்கள்.

• கதையில் வரும் செயல்களை, முடிந்தவரையில் நடித்துக் காட்டுங்கள். காக்கா, வடையை எடுக்கப் பறந்து வந்தது என்று என் கைகளை சிறகுகளாகப் பறக்க வைக்கையில், என் குழந்தையின் கைகளும் சிறகைப் போல ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். குரங்கு குல்லாவை எடுத்த கதையில் குல்லாவை நான் போட்டுக் கொண்டு சொன்னால், பக்கத்திலிருந்த பிளாஸ்டின் பாத்திரத்தை குல்லா போல அவனும் போட்டுக் கொள்வான்.

• கடல் பற்றிய கதைகள் என்றால், கடலில் இருந்து எடுத்த முத்து, சிப்பி, சங்கு போன்றவைகளைக் காண்பிப்பது,சங்கின் ஒலியைக் கேட்க வைப்பது, கடலின் அலையோசையைக் கேட்க வைப்பது, உங்கள் கதைக்கு மேலும் உயிரோட்டமாக இருக்கும்.இரவு நேரத்தில் காட்டில் நிகழும் ஒரு கதை என்றால், இரவு விளக்கை மட்டும் போட்டு விட்டு, வனத்தில் கேட்கும் விலங்கு, பறவை சத்தங்களை ஒலிக்கும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களைக் கூடப் பயன்படுத்தலாம்.

• உண்மைக்கும், புனைவு கதைகளுக்கும் அதிகம் வித்தியாசம் தெரியாத சிறு குழந்தைகளிடம் பெரும்பாலும் உண்மையான கதைகளையே, அல்லது உண்மைக்கு ஒட்டி வருகின்ற நிகழ்வுகளையே சொல்வது நல்லது. குழந்தைகளின் மனோ மாதிரி (mental model)உண்மையை அடித்தளமாகக் கொண்டு வளர்வதே சிறந்தது. குழந்தையின் மனது ஒரு பெரிய உறிஞ்சும் ஸ்பாஞ்ச் போல. நாம் சொல்லும் அனைத்து விஷயங்களையும் எந்த வடிகட்டியும் இல்லாது உண்மையென்று நம்பி விடும்.எனவே, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

• கூறிய கதைகளையே மீண்டும் கூறலாம். தவறில்லை; மேலும், “எந்தக் கதை சொல்ல?” என்று குழந்தைகளையே கூட கேட்கலாம்.

• கதையைக் கூறி முடித்த பின், ”இதனால் அறியப் படும் நீதி யாதெனில” என்றெல்லாம் சொல்லாமல், கதையின் படிப்பினையை அவர்களாகவே புரிந்து கொள்வதற்கு விட்டு விடவும்.
கதைகளைக் கேட்பது குழந்தைகளின் உரிமை. அதற்குத் தகுந்த நேரம் ஒதுக்கி, அவர்களுக்குக் கதைகள் சொல்வது, பெற்றோர்களாகிய நம் கடமை.

உங்க கதை என்ன?
டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in


Read More...

Monday, April 08, 2013

எனக்கு இட்லி ரொம்ப பிடிக்கும் - ஹன்சிகா

வட மாநிலங்களில் இருந்து, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வரும் நடிகைகளுக்கு, பெரும் தலைவலியாக இருப்பது, உணவு விவகாரம் தான். வட மாநிலங்களில், சப்பாத்தி சாப்பிட்டு பழக்கமான நடிகைகள், இங்கு வந்ததும்,இட்லியையும்,தோசையையும் சாப்பிட வேண்டியிருக்கும். பெரும்பாலான நடிகைகளுக்கு, இட்லி, தோசையின் சுவை, ஒத்து வருவது இல்லை. ஆனால், கோடம்பாக்கம், பப்ளிமாஸ், ஹன்சிகாவுக்கு இந்த பிரச்னையே இல்லை. ஹன்சிகா, இட்லி பிரியை. சுவையான சட்னி வகையறாக்களுடன், மல்லிகைப் பூ போன்ற இட்லிகளை, சுடச் சுட, பரிமாறினால்,ஒரு சில நிமிடங்களிலேயே, ஏகப்பட்ட இட்லிகளை காலி செய்து விடுவாராம்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "சின்ன வயதில் இருந்தே, இட்லி என்றால், எனக்கு கொள்ளை பிரியம். என் தோழிகள் கூட, கிண்டலடிப்பர். என் தாயாரும், "நீ, தமிழ் நாட்டில் பிறந்திருக்க வேண்டிய பெண் என்பார். எனக்கும், இட்லிக்கும் உள்ள தொடர்பு, இப்போது ஏற்பட்டதல்ல, அது, என், பள்ளி பருவ காலத்திலேயே ஏற்பட்டது என்கிறார், ஹன்சிகா.
( தகவல் உதவி: தினமலர் )
வடை பிடித்த நடிகைகள் யாராவது இருக்கிறார்களா என்று தேட வேண்டும்.

Read More...

Wednesday, April 03, 2013

இன்று IPL


IPLல் யார் வருவார்கள் என்று தெரியாது ஆனால்...

Read More...

Tuesday, April 02, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 9

நேற்று பெங்களூரில் பழை பெய்தது. மெலிதான தூறலின் முதல் துளிகள் வெளியே நின்று கொண்டிருந்த என் குழந்தையின் மேல் விழத் துவங்கியதும் “வாவா” “வாவா” என்றான். வாவா என்றால், அவன் மொழியில் தண்ணீர் என்று அர்த்தம்.வானத்தில் இருந்து “வாவா” விழுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இயற்கையில் இருந்து ஏராளமான விஷயங்களை, குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.ஒரு சிறிய நடைப் பயிற்சியோ, ஒரு பூங்கா விஜயமோ உங்கள் குழந்தைக்கு மிக நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும்.

மரங்களை அவர்களுக்குக் காட்டுங்கள். இலைகள், கிளைகள், காய், வேர், உதிர்ந்து விழுந்த காய்ந்த இலைகள் இப்படி ஒவ்வொன்றாக அறிமுகப் படுத்துங்கள்..தென்னை,மாதுளை, செம்பருத்தி என்று வேறுபடுத்திச் சொல்லிக் கொடுங்கள்.
ஒரு பூ, இலை, சிறிய கல் போன்றவற்றைக் காட்டி, இதே போல் இன்னொன்றைக் கொண்டு வா என்று சொல்ல, குழந்தை அதைக் கொண்டு வரும் முயற்சியில் மற்ற அழகான, வித்தியாசமான விஷயங்களையும் கண்ணுற்று ஆச்சரியத்தில் மகிழ்கிறது.. ஒரு பூந்தொட்டியில் உங்கள் குழந்தையை விதையை விதைக்கச் சொல்லி, அவனையே தினமும் தண்ணீர் எடுத்து ஊற்றச் செய்யுங்கள். விதை முளைத்து மேலெழும்புகையில், குழந்தைகள் அவர்களின் தினசரி செயலின் விளைவை, அந்தச் செடியில் கண்டு குதூகலிப்பார்கள்.அந்தப் பூந்தொட்டிக்கு உங்கள் குழந்தையின் பெயரையே நீங்கள் சூட்டலாம்.


பூங்கா, அல்லது பண்ணைக்கு செல்கையில் குழந்தை பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும், சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும், விலங்கையும் படம் பிடித்து, ஒரு ஆல்பத்திலோ, நோட்டிலோ ஒட்டி, அதைக் காண்பிக்கவும்.தான் ஏற்கெனவே ரசித்துப் பார்த்த அனுபவம் என்பதால், குழந்தை அதை நன்கு விரும்புவான். தன்னை, ஆல்பத்தில் காணுகையில், குழந்தையின் சுயமதிப்பும் உயரும்.

ஒரு மழை நாளில் குடை பிடித்து, உங்கள் குழந்தையை நடத்திச் செல்லுங்கள்.மழை பெய்து முடிந்தவுடன் பொருள்கள், கட்டிடங்கள், மரங்கள், வானம் எப்படித் தோற்றமளிக்கின்றன என்பதை குழந்தை உணருவான்..மழையென்றால், ஓடி ஒதுங்கிக் கொள்வதை விட, மழைப் பொழுதில் ரசிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி குழந்தை அறிந்து கொள்கிறது.
விளையாட்டுகளின் மூலம் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் வரிசையில் அடுத்து, ஐம்புலன்களைப் பயன்படுத்தி, புலன்களின் திறனை, அறிவுத் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பார்ப்போம்.

சிந்திக்கும் திறன் இன்னும் வளர்ச்சியடையாத குழந்தைப் பருவத்தில், புலன் அனுபவங்களின் மூலமே எல்லா புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்கிறது. எனவே, அதன் மூளையை “Sensory Processing Machine” என்றும் அழைக்கலாம். புலன் அனுபவ விளையாட்டு (sensory play) என்பது, தொடுதல், நுகர்தல், பார்த்தல்,ருசித்தல் மற்றும் கேட்டல் எனப்படும் ஐம்புலச் செயல்களில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களையோ பயன்படுத்தி விளையாடுவதாகும்..நம் புலன்களே இந்த உலகைப் பற்றி நாம் அறிய உதவும் கடவுச் சொல் என்றும் கூறலாம். ஐம்புலன்களைப் பயன்படுத்தும் விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு எண்ணற்ற அனுபவங்களைக் கொடுக்க வல்லது.

ஒரு புதிய கலர் பொம்மையைப் பார்த்தலும்,ஒரு பறவையின் ஓசையைக் கேட்பதும், ஒரு பூவை முகர்ந்து பார்ப்பதும்,ஆரஞ்சு ஜீஸை ருசித்துப் பார்ப்பதும், கரடி பொம்மையைத் தொட்டுப் பார்ப்பதும், குழந்தையின் புலன்வழிக் கற்றலைப் பெரிதும் ஊக்குவிக்கின்றன. புலன் அனுபவ விளையாட்டுக்கள், குழந்தைகளின், காக்னிடிவ் திறன், மொழித் திறன், சமூக மற்றும் உணர்ச்சித் திறன் (social and emotional skilaa) உடல் வளர்ச்சித் திறன்களை மேம்படுத்துகின்றன.

சிறிய,பெரிய பாத்திரங்களில் நீரை ஊற்றி, அதை மாற்றி விளையாடுதல், பொட்டுக்கடலை, பீன்ஸ், தக்காளி, வாழைப்பழம் போன்ற பல்வேறு வடிவ பொருள்களைத் தொட்டு விளையாடுதல், அரிசி, காய்கறிகள், பழங்கள், பொம்மைகளை வகைப் படுத்துதல் போன்ற விளையாட்டுகள், காகிதக் கப்பல் செய்து நீரில் விடுதல் போன்றவை, குழந்தைக்கு, அதிகம்/குறைவு, நிரம்பி இருத்தல் / காலியாக இருத்தல், மிதத்தல்/மூழ்குதல் போன்ற அடிப்படைத் தத்துவங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. மேலும், இவை, கணிதத் திறனையும், காக்னிடிவ் திறனையும் மேம்படுத்துகின்றன.

சென்சரி விளையாட்டுக்கள், குழந்தையின் மொழித் திறத்தை வளர்க்கின்றன. வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும், அரைகுறையாகத் தெரிந்த வார்த்தைகளை நன்கு வெளிப்படுத்தவும், புதிய வார்த்தைகளைப் பேசவும் ஊக்குவிக்கின்றன.. பக்கத்து வீட்டு தியா, நான்காவது வீட்டு சின்சினா இவர்களுடன் என் மகன் அவர்களது கைகளைப் பிடித்துக் கொண்டு, வட்டமாகச் சுற்றிச் சுற்றி ரிங்கா ரிங்கா ரோசஸ் விளையாடியவுடன் அளப்பரிய சந்தோஷத்தில், புதிது புதிதாக வார்த்தைகளைப் பேசி, அவனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறான்..தான் ரசித்த அனுபவத்தை வார்த்தைகளாக வெளிப்படுதுகையில் மொழித் திறன் வளர்கிறது. மேலும், குழுவாக விளையாடுகையில், இன்னொருவர் பக்கக் கோணம் பற்றி புரிதல் வருகிறது. விட்டுக் கொடுத்தல் , முறை வைத்து விளையாடுதல் போன்றவைகளுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

சென்சரி விளையாட்டுக்கள் குழந்தைகளின் க்ரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பூக்கத்தைத் தூண்டுகின்றன.பொருள்களை அவர்களிடம் கொடுத்து, என்ன செய்கிறார்கள் என்று கவனித்தால், அவர்கள் புதிது புதிதாக விளையாட்டுக்களை ஆடுவர்.எனவே, அவர்களுக்காக நாம் யோசிக்காமல், அவர்களையே யோசிக்க வைப்பது அதிக பலன்களைக் கொடுக்கும். கோடு மட்டும் நீங்கள் போடுங்கள், மீதி ரோடை உங்கள் குழந்தை போட்டுக் கொள்ளும்.

புலன் அனுபவ விளையாட்டுகளுக்குக் கீழ்க்கண்ட பொருள்களைத் தேர்வு செய்யலாம்
தண்ணீர்
மணல்
அரிசி,
மக்ரோனி,
சோயாபீன்ஸ்,
மரத்தூள்
களிமண்
ஃபிங்கர் பெயிண்ட்
ஜல்லடை
செண்ட்
ஷேவிங் க்ரீம்
நுரை, சோப்பு நீர்க் குமிழிகள்
ஐஸ் க்யூப்கள்
பிளாஸ்டிக் ட்யூப்கள் (நிறுத்துக் குமிழிகளுடன்)
பல்வேறு அளவில் பாத்திரங்கள்
புனல்
ஸ்பூன்கள், கப், டம்ளர்
பொம்மை வீடு ஃபர்னிச்சர்கள்
பிங்-பாங் பந்துகள்
ஸ்ட்ரா குழல்கள்
மீன் தொட்டிக் கூழாங்கற்கள்
வாளி மற்றும் டப்பா
மற்றும் உங்கள் வீட்டில் இருக்கும் பொருள்கள், உங்கள் வசதியைப் பொறுத்து…

ஐம்புல விளையாட்டுக்களுக்கு சில உதாரணங்கள்:
தொடுதல்:

தசைகளைப் பயன்படுத்தும் விளையாட்டுக்கள், மெத்தையில் குதிப்பது, குழுவாக விளையாடுவது, (ரிங்கா ரிங்கா ரோசஸ், பிஸ்கட் பிஸ்கட் என்னா பிஸ்கட்)
கயிறு இழுப்பது,,முயல், தவளை மாதிரி நடிப்பது, ஆணை ஏறுதல், ஐஸ் க்யூப்ஸ்களைத் தொடுதல், சோப்பு நுரையைத் தொடுதல், பல்வேறு வகையான பொம்மைகளைத் தொட்டு உணருதல்.

பார்வை:
பல்வேறு வகையான வெளிச்சங்களை அறிமுகப் படுத்துதல், மெழுகுவர்த்தி வெளிச்சம், டார்ச் வெளிச்சம், இருட்டில் கைகளைக் கொண்டு பொம்மை , விலங்கு உருவங்கள் காண்பித்தல், கலர் கலரான நைட் லேம்ப்கள்,வண்ணங்களைக் கொண்டு விளையாடுதல், கலர்க் கரைசல்கள் விளையாட்டு, பார்வைத் திறனை சோதிக்க, பலூன், பந்தைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கச் செய்தல், பில்டிங் ப்ளாக்ஸ் எனப்படும் சேர்க்கும் விளையாட்டுக்கள், புதிர்கள், ஒளிந்து விளையாடுதல்

கேட்டல்:
இசையை, பாடலைக் கேட்டல், இசைக் கருவிகளை இசைக்க வைத்தல், விலங்கு, பறவைகளைப் போல மிமிக்ரி செய்தல், அமைதியாக அமர்ந்து வெளியில் இருந்து கேட்கும் ஒவ்வொரு சத்தத்தையும் என்னவென்று வகைப் படுத்தச் சொல்வது, ஒலி அளவைக் குறைத்து, பின் மிகுதியாக்கி, வேறுபாட்டை உணரச் செய்தல்
மியூசிக்கல் சேர் விளையாட்டு

நுகர்தல்:
சமையலறையில் இருக்கும் மணமிகு பொருட்களை அடையாளம் காணச் செய்தல், வெங்காயம், பூண்டு, ஏலக்காய், எலுமிச்சை போன்றவை. பாதுகாப்பான செண்ட், கற்பூரம் இவைகளை நுகரச்செய்தல்,
தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பயிர்களின் வாசனையை நுகரச் செய்தல், பூக்கள், இலைகளின் வெவ்வேறு மணத்தை அறியச் செய்தல்

ருசித்தல்:
குளிர்ந்த உணவு மற்றும் மிதமான சூடாக இருக்கும் உணவு, ஸ்ட்ரா வைத்து உறிஞ்சும் ஜீஸ், முறுக்கு போன்ற கடித்து சுவையறியும் உண்டி, பழ வகைகள் மற்றும் கேரட் போன்ற காய்கறிகள்,,இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, காரம் போன்றவைகளுக்கு உதாரணங்கள் கொடுத்து, அவர்க்ளை இனங்கண்டறியச் செய்தல்
புலன் அனுபவ விளையாட்டுக்களை மேற்கொள்கையில் சில முக்கிய முன்னெச்சரிக்கைகள்:
• அபாயகரமான, ஆபத்தான கூரான பொருள்கள், குழந்தை விழுங்கி விடக்கூடிய அபாய பொருள்களைத் தவிர்க்கவும்.
• தண்ணீர் விளையாட்டு, திரவங்க்ளை மாற்றுதல் போன்றவைகளின் போது ஒரு பெரிய சாக்கு அல்லது வெளிப்புற மேட் போட்டுக் கொள்ளவும்.
• வெப்பம், குளிர் வகை உணவு வகைகளை முதலில் நீங்கள் தொட்டு உணர்ந்து விட்டு, பின் அவர்களை செய்ய அனுமதிக்கவும்.
• உடையும் பொருள்களைத் தவிர்க்கவும்.
• எல்லா விளையாட்டுகளையும் ஒரே சமயத்தில் விளையாடாமல், பகுதி பகுதியாக பிரித்து விளையாடலாம்.
• எல்லாவற்றையும் நீங்களே சொல்லிக் கொடுக்காமல், அவர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை கவனியுங்கள்
• முதலில் இருந்து கடைசி வரை நீங்கள் ,குழந்தை கூடவே இருப்பது எந்த வித அசம்பாவீதங்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

டாக்டர்.பிரகாஷ்.
www.rprakash.in

குழந்தைகளுக்கு முக்கியமாக நிறங்களைப் பார்க்க சொல்லித் தர வேண்டும். குறிப்பாக மஞ்சள் கலர்

Read More...

Monday, April 01, 2013

ஏப்ரல் - 1







நன்றி: குங்குமம்

நாம் பிளாக் எழுதிவிட்டு பெரிய சாதனை செய்வதாக நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மையான சாதனை வேறு.

Read More...