பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 31, 2013

சன்டேனா இரண்டு (31-3-13) செய்திவிமர்சனம்




இந்த வாரம்.... ஒரு படம், ஒரு கடிதம்.

செய்தி # 1



பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான படங்கள்தான் இன்றைய மாணவர் போராட்டம், மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது,அதிமுகவின் சட்டசபை தீர்மானம் போன்ற தொடர் நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம்.

பாலச்சந்திரனுக்கு முன்பே இது போன்ற ஒரு நம் தமிழ் நாட்டின், உலகின் கவனத்தை இலங்கையின் போர்குற்றங்கள் மீது திருப்பி இருக்கவேண்டியவர்.. இசைப்பிரியா.

மனிதர்கள், மிருக இனத்தைவிட மிகவும் கொடூரமானவர்கள் என்பது மட்டும் இந்த சேனல் 4 வெளியிட்டு இருக்கும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் வீடியோ ஆதாரத்தின் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது.

அப்போது,அந்த வீடியோவில் வெளியான ஒரு செய்தி....இசைப்ரியாவின் கோர மரணம்.



ஷோபா - ஒரு அழகான,எதையாவது சாதிக்கவேண்டும் என்கிற பெண். இலங்கையில் உள்ள யாழ்ப்பணத்தில் 1982 ஆம் வருடம் பிறந்தவர். பின், அவரது குடும்பம் வன்னிக்கு குடிபெயர்ந்தது.

அங்கேயே தனது படிப்பை முடித்த அவர், இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி நிறுவனமான tamilnet என்ற நிறுவனத்தில் நிருபராகவும், செய்தி அறிவிப்பாளாராகவும் பணியில் சேர்ந்தார்.அழகிய பெயரில், இசைப்ரியா என்று தன்னை அழைத்துகொண்டார்.

2007 - ஆம் வருடம், புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து, ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆனார்.

அப்போதுதான், அவர் வாழ்வில் முதல் புயல் தாக்கியது. பிறந்து ஆறே மாதங்கள் ஆன அவர் குழந்தை குண்டு வீச்சில் பலியானது.

ஆனாலும், மனம் தளராத இசைப்ரியா, செய்தி வாசிப்பாளாராக, ஈழ தமிழ் மக்களின் மனசாட்சியாக ஒலித்தார்.

சேனல் 4 வீடியோவின் உச்ச கட்ட கொடுரம் இதுதான்...கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக கற்பழிக்கபட்டு, பிணமாக கிடந்தார் இசைப்ரியா.

ஆனால், பாலச்சந்திரனின் ஒரே படம் ஏற்படுத்திய தாக்கத்தை, ஏனோ இதற்க்கு முன்பு வெளிவந்த சேனல் 4 வீடியோ படங்கள் நம்மிடம் உண்டாக்காமல் போய்விட்டன.

காஷ்மீரில், தீவிரவாதிகள் தேடல் என்ற பெயரில் அங்கு உள்ள பெண்களிடம் நமது இந்திய ராணுவம் தகாத முறையில் நடந்து கொண்டதாக,காஷ்மீர் மாநில பெண்கள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்குவது இன்றும் வாடிக்கை.

இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையும், தமிழ் பெண்களை கற்பழித்தது என்கிறார் மட்டகளப்பை சேர்ந்த என் நண்பர் ஒருவர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு ஆதிவாசி பெண்ணை, இந்திய ராணுவ வீரர்கள் கற்பழித்துவிட, ராணுவ தலைமை அலுவலகம் முன்பு 'நிர்வாண போராட்டத்தில்' ஈடுபட்டார்கள் ஆதிவாசி பெண்கள்.

இவ்வளவு ஏன்?

வீரப்பனை தேடுகிறோம் என்று சென்ற நம் தமிழக காவல் படைகள், வாசாத்தி இன பழங்குடி இன பெண்களை சூறையாடியது நம் நினைவுக்கு வருகிறது.

இன்றும் அந்த வழக்கு நடந்து கொண்டே...இருக்கிறது.

இந்த பழங்குடி இன பெண்களை கற்பழித்த தமிழக காவலர்களை சட்டம் தூக்கில் போட்டதா?

அன்று ஆட்சியில் இருந்தவர்களை போர்குற்றவாளியாக அறிவித்தா?

அதைப்போலவே, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே அவர்களை 'போர்க்குற்றவாளி' என்று அறிவித்து, சர்வதேச சமுகத்தின் முன் அவரை நிறுத்துவது என்பதெல்லாம். சாத்தியமே இல்லாத விஷயம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இராக் பெண்களை, ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்திய அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளிடம் இதற்க்கு எப்படி தீர்வு கேட்க முடியும்??

செய்தி # 2



"எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே" எக்காலத்துக்கும், இலங்கை போன்ற எந்த நாட்டுக்கும் பொதுவான தத்துவம் இது.

குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு அருமையான தொடர் எழுதி, இட்லிவடை மூலம் நல்ல காரியம் செய்து வரும் டாக்டர்.ப்ரகாஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். பெற்றோரை போன்று ஒரு நல்ல மனிதனை வளர்ப்பதில் அவனது ஆசிரியருக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது.

தனது மகனின் பள்ளித்தலைமையாசிரியருக்கு ஒரு தந்தை எழுதிய கடிதம் உலக அளவில் கவனம் பெற்றது.

அந்த தந்தை....அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள்.

ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார் திரு.ஆபிரகாம் லிங்கம். ஒரு சிற்றிதழில் நான் படித்த அந்தக்கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே.



மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,

ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.

அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கம்.

ஒரு கொசுறு செய்தி: சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், பல தனியார் பள்ளிகள் தங்களின் மாணவர்களுக்கு நொட்ஸ் கொடுத்து தேர்வுமையத்தில் உதவி(!?) புரிந்து பெரும் கல்விச்சேவை செய்து இருக்கிறார்கள்.

(நன்றி, இனி, அடுத்தவாரம்)



-இன்பா

Read More...

Thursday, March 28, 2013

இலங்கை பிரச்சனை - மாணவர் போராட்டம் - சோ

ஒரு பேட்டி சில கேள்வி பதில்கள் !

Cho Ramaswamy, editor of the Tamil political weekly Thuglaq, is the most admired political analyst in Tamil Nadu. In this exclusive interview to Shobha Warrier, he talks about the Sri Lankan Tamil issue, the Dravida Munnetra Kazhagam walking out of the United Progressive Alliance and also his thoughts on the next Lok Sabha elections.
Click here!

When the DMK threatened to pull out of the UPA, many thought they were enacting one more drama. But they eventually did withdraw support. Did you expect them to come out of the UPA this time?

I am still not sure Karunanidhi is happy with the decision because as far as elections are concerned, he always takes even the smaller parties that get one or one and half percent votes. The Congress still is a party which could help him in the present circumstances -- the cases against the party, etc. Whether the Congress helps the DMK or not, the other parties are not going to do it.

And, he cannot go with the Bharatiya Janata Party  because of his earlier stance and also his faith that he commands the Muslim votes. Whether he has it or not is another matter.

So, after sometime, the Congress may do something to placate him like coming out with a face saving formula where they may say something on Sri Lanka . After all, he has been projecting himself as the real votary of the Tamils wherever they are.

TESO (Tamil Elam Supporters Organisation) which he is flaunting now was given a decent burial years ago. Now, he has pulled it out of its samadhi, and it is the skeleton of TESO that is dancing now in the media. The public doesn't care. Nobody is taken in by his postures on Sri Lanka. When he was in power, he didn't do anything for them. When the war was going on, he didn't do anything. I don't call it a war; military action against the rebels. Now, he is asking for a post-mortem report.

The war in Sri Lanka ended in 2009. Why has the issue has become alive in Tamil Nadu all of a sudden?

Karunanidhi always thought he was the saviour of Tamils wherever they lived. Now that the platform has been stolen from him by J Jayalalithaa , he has been left in the lurch. She is doing all the fighting now and appears to be an Iron Lady as far as the Tamils are concerned. He now wants to compete with her and take back his glory.

Do you think the ordinary people of Tamil Nadu are really worried about what is going in Sri Lanka when they have so many other problems like power shortage, water shortage, etc?

I have always been saying this. The Sri Lankan Tamil issue has never been an electoral issue in Tamil Nadu. They have never voted on the issue. If people are so much worried about the situation over there, then Vaiko would not have got just 2 percent votes. Many other marginal parties that talk on this issue, have not been able to win a constituency on their own.

Of course, the Tamils here are concerned about them. They want Sri Lankan Tamils to live with honour, peace and dignity with equal status as the Sinhalese.

It is only the marginal groups that are creating the noise and the media is sensationalising it. It is made out as there is a huge public upsurge.

What about the protests started by the students?

How many students are demonstrating? If there are 3,000 students in a college, 150 are protesting. The others go home and enjoy the holidays. It is not that the entire student community is upset about it.

Newspaper reports say that young professionals have also joined students in the protests...

Tell me how many are protesting? Only very few.

There was an interview with Valautham Dayanidhi, former spokesperson for the LTTE in which he said that Sri Lankan Tamils feel that political parties in Tamil Nadu are using their names for political gains. Do you feel so?

Yes, the Sri Lankan Tamils know it fully well now. Even the Tamil National Alliance created by the Tigers have not made any big noise about the Sri Lankan President being declared a war criminal, about the use of the word genocide and all that. But some marginal groups in Tamil Nadu are doing it. Maybe they are funded by some overseas organisations; I don't know.

What about the Colombo Tamils; the Tamils of Indian origin? What about the plantation Tamils? They are also Tamils; they are as Tamil as we are here. They are not creating protests in Colombo, in the plantation areas, or in the east.

What they want now is rehabilitation. The displaced Tamils of Jaffna, leave alone the plantation Tamils or the Colombo Tamils or the eastern Tamils, want rehabilitation and some kind of an autonomy like we have in India

Will the noise made here create problems between the Sri Lankan Tamils and Sinhalese there?

Definitely, it will create bad blood between the Sinhalese and the Tamil population. This has not been helping them at all.

In fact, I would say the so called champions of the Tamils here were the cause for the total annihilation of the LTTE because they made the LTTE believe that India would intervene and prevent Sri Lanka from taking action.

The DMK wanted a resolution in Parliament against Sri Lanka. When the Pakistan parliament passed a resolution against the hanging of Afsal Guru, India condemned it saying it was an internal matter, and Pakistan had no right to interfere. Can India do the same against another country?

Yes, India objected to what Pakistan did and said, it was none of your business. The same way, it is not the business of Indian Parliament to pass a resolution against Sri Lanka. It will set a bad precedent which will affect us in Kashmir . Pakistan may demand in some forum that India must be made accountable about all the complaints against them on Kashmir; whether they are true or not is another matter. But there is grounds for noise making and Pakistan will make noise.

The Congress consulted the opposition parties about the resolution against Sri Lanka to please the DMK...

I don't think the Congress really wanted it. They did not want a resolution. That is why they spoke about consulting the others.

The problems Sri Lanka faced was aggravated by the training given by India to the LTTE and the other Tamil militant groups during Indira Gandhi's  regime. They were trained, armed and funded by India.

Fortunately, Rajiv Gandhi  saw things differently and wisely and brought about the accord with Sri Lanka. If the LTTE had cooperated and the Jaffna Tamils had cooperated, the situation would have been much better for them now. Under the accord, there was a kind of autonomy, there was an attempt to create a federal structure, there was an attempt to give equal status to Tamils along with the Sinhalese. All those were sabotaged by V Prabhakaran and the people here supported him.

We had been doing disservice to the cause of the Tamils there. We are continuing to do that.

It is said that India voting against Sri Lanka in the UN resolution made China closer to Sri Lanka. What kind of impact will it have on this region?

China will execute their contracts in Sri Lanka quicker now. They will be prepared to spend more money because they want to spread their range of influence.

Is India not responsible for such a situation?

As far as the central government is concerned, it didn't have the moral conviction of standing up to the strident voices of Tamil Nadu which are only marginal. It is not the opinion of the Tamil people here.

Is it coalition politics that is responsible for the situation?

I don't think so. The central government has always been like that. They lack the moral courage to take a determined stance and tell the Tamil marginal parties when and where to stop.

Let these parties come together and form an alliance and face the constituency and get defeated and probably lose their deposit. The Centre should have stood up to them.

India now has bad relations with all its neighbours and does not have a single friendly neighbour around. Is there something wrong with the foreign policy of the country?

I don't think it is the fault of India that Pakistan and Bangladesh are not friendly with it. As far as Sri Lanka is concerned, India erred. India should have been more helpful to Sri Lanka.

Now that the DMK has come out of the UPA, do you foresee immediate general elections?

I feel somehow the government will go and manage the numbers. There will not be any immediate elections.

Do you think the DMK will fight the next Lok Sabha elections alone?

I think both the Congress and the DMK will try to woo Vijayakant's Desiya Murpokku Dravida Kazhagam. He may even go with the Congress in which case, there will be three fronts and that will help Jayalalithaa. If there is a Congress front, a DMK front and an AIADMK front, the AIADMK will gain.

Or, there may be some face saving formula and the DMK may go back to the Congress.

The entire media is talking about a Modi vs Rahul match in 2014 though Rahul Gandhi  said he was not in the race. Do you see it happening?

I think Rahul Gandhi was serious when he said he was not in the race. I am taking his words at face value. He may not like to lead a weak government. He may want a strong Congress government which will give him confidence. That is why he says he doesn't want to be in the race. Anyway, it is going to be very difficult for the Congress.

Then, will it be Modi vs somebody else from the Congress?

It will be good for the BJP if they project Modi. Then, he will be the issue and he will win on that.

Like many say, will the Muslims in India vote against the BJP if it projects Modi as the PM?

If the Muslims in Gujarat are with Modi, it can happen all over India. Leave alone that, the BJP will perform well under Modi because of his performance in Gujarat. People are looking for an honest politician to lead the country and he fits the bill.

Do you think a third front will come to power?

Who is there in the Third Front? Other than Mulayam Singh, who else? Mayawati will be not be with him. Mamata Banarjee will not be with the Communists. It is going to be difficult. A third front is always an anomaly.

The Congress and the BJP together can be expected to get more than 276 seats. So, any such arrangement has to remain either with the Congress support or the BJP support if at all there is going to be such a front. Otherwise, there will be no government. If the BJP or the Congress are in it or giving support from outside, how can you call it a third front?
நன்றி: http://www.rediff.com/news/interview/we-are-doing-a-disservice-to-tamils-in-sri-lanka/20130326.htm

துக்ளக் கேள்வி பதில்கள்

கே : இலங்கைப் பிரச்னையில், இப்போது மாணவர்களும் இணைந்து கொள்வது பற்றி?

ப : இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது எதுவும் நடந்து விடாது. ஆனால் இங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்திற்கு இது தீமை செய்யும். இந்த மாதிரி போராட்டங்கள் சாதிக்கப் போவது இவ்வளவுதான்.



கே : டெஸோ அமைப்பு வலிமை பெற வாய்ப்புண்டா?


ப : தி.மு.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இதில் அக்கறை காட்டவில்லை. தேர்தல் ஓட்டுக்காகவே கூட மற்ற பல கட்சிகளின் கூட்டணியை நாட வேண்டிய நிலையில் உள்ள தி.மு.க., இந்த தனி டெஸோவிற்கு என்ன வலிமையைச் சேர்க்கப் போகிறது? முதல் டெஸோ மறைந்தது போல, இரண்டாம் டெஸோவும் நாளடைவில் மறைந்து போகும்.



கே : இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா தனிக் கட்சி துவங்கியுள்ளாரே! ஜெயிப்பாரா?

ப : ஜெயிக்க மாட்டார். ஏதாவது ஒரு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள கட்சியைக் கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்துவாரோ, என்னவோ! அதற்கு மேல் அவருக்குப் பலம் கிட்டும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.



கே : இலங்கைப் போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோருவது தொடர்பாக, இந்தியா ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறது?

ப : இலங்கை விரோதி நாடு அல்ல; அந்த நாட்டுடன் இந்தியாவிற்கு தொழில் ரீதியாக, வர்த்தக ரீதியாக உறவுகள் இருக்கின்றன; அங்குள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் சம உரிமை பெறுவதற்கு வழி இந்திய – இலங்கை விரோதம் அல்ல; இன்று இலங்கைக்கு நாம் செய்வதை, நாளை காஷ்மீர் தொடர்பாக நமக்குச் செய்ய பாகிஸ்தான் முனையும்.... என்பது போன்ற பல காரணங்களினால்தான், இந்தியா இவ்விஷயத்தை ஜாக்கிரதை உணர்வுடன் அணுகுகிறது.



கே : ‘தலைவர் கலைஞர் நடத்தும் போராட்டங்களை அரசியல் தந்திரம் என்று கூறுவது வருந்தத்தக்கது’ – என்கிறாரே கனிமொழி எம்.பி.?


ப : நியாயம்தானே! கலைஞரின் நடவடிக்கைகளை ‘அரசியல்’ என்று கூறலாமே தவிர, ‘தந்திரம்’ என்று எப்படிக் கூறுவது? தந்திரம் என்றால், அதைச் செய்பவர்களுக்கு அது உதவ வேண்டுமே? அவருடைய அரசியல் நடவடிக்கைகள் அவருக்கோ, அவருடைய கட்சிக்கோ உதவுகிற மாதிரியா இருக்கின்றன? அதைத்தான் கனிமொழி சுட்டிக்காட்டியிருக்கிறார்.



கே : இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் நிலையைத் தாங்கள் ஆதரிக்கிறீர்களா?

ப : அநேகமாக.



கே : சுப்ரமண்யம் ஸ்வாமி இலங்கையில் அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியது சரியா, தவறா?

ப : ஒரு நட்பு நாட்டின் அதிபரை, இங்குள்ள ஒரு அரசியல்வாதி சந்திப்பதால் ஒரு தவறுமில்லை.



கே : ‘இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், அதன் விளைவாக பெரிதும் பாதிக்கப்படப் போவது இலங்கைத் தமிழர்கள்தான். அவர்களுக்கு நாம் தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளை வழங்க முடியாத நிலையும் ஏற்படும்’ – என்கிறாரே ஞானதேசிகன்! இது மிரட்டல்தானே?

ப : இதில் என்ன மிரட்டல் இருக்கிறது? ஞானதேசிகன் ஒரு நடைமுறை உண்மையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு நாம் பிரச்னைகளை உருவாக்கி விடக் கூடாது என்கிற பொருளில் அவர் பேசியிருப்பதில் தவறு காண்பது சரியல்ல.

கே : காவிரிப் பிரச்னையிலும், இலங்கைப் பிரச்னையிலும் கலைஞர் குழப்பியது போல், வேறு எந்த அரசியல் தலைவரும் குழப்பியது உண்டா! இப்படிக் குழப்புவதற்கு காரணம் என்ன...?

ப : குழப்புவது என்பது மற்ற பலருக்கு ஒரு தவறு; வேறு வழியில்லாமல் நிகழ்ந்து விடுவது. கலைஞருக்கு அது ஒரு கலை; அவர் பாடுபட்டுக் கற்று வந்தது அது. இடைவிடாத பயிற்சியின் மூலம் அந்தக் கலையில் அவர் வெகுதூரம் முன்னேறி விட்டார்.



கே : மார்ச் 12-ஆம் தேதியன்று டெஸோ போராட்டத்தில் பங்கேற்ற திருச்சி தி.மு.க.வினர் கைகளில் இருந்த பேனர்களில், பிரபாகரன் மகனின் பெயர் ‘பாலகிருஷ்ணன்’ என்று படு அபத்தமாக அச்சிடப்பட்டிருந்தது பற்றி? (தினமலர் 13.3.13 புகைப்படத்துடன் செய்தி)

ப : போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம், நமது நாட்டு அரசியல் போராட்டங்களில் கிடையாது.



கே : ‘டெஸோ சார்பில் ஈழத் தமிழர் நலன்களுக்காக நடத்தப்பட்ட பொதுவேலை நிறுத்தம், பிரமாதமான வெற்றி அடைந்துள்ளது’ – என்று கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது பற்றி?


ப : படுதோல்வியையே, வெற்றி என்று கருதுகிற பக்குவத்தை அவர் அடைந்திருப்பது பாராட்டத்தக்கது. இதே மாதிரி மகிழ்ச்சியை பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. பெறட்டும். அது தமிழகத்திற்கும், நாட்டிற்கும் நல்லது.

நன்றி: துக்ளக்

Read More...

புதிய தலைமுறை

ஆரம்பத்திலிருந்து கோர்வையாகப் பேசிவந்த இளங்கோவன் போர்க்குற்றங்களுக்காக பிர்பாகரன், ராஜபக்‌ஷே இருவரையும் கடுமையாகக் கண்டித்தார். ராஜபக்‌ஷே விசாரிக்கப்பட்டு தண்டனை தரப்படவேண்டும் என்றார். தனி ஈழத்தீர்மானம், பொது வாக்கெடுப்பு பேச்செல்லாம் ஈழத் தமிழர்களுக்கு உதவாது என்றும் டிப்ளமசி மூலம்தான் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தமுடியும் என்றும் சொன்னார். கடைசியில் தமிழகத்தில் தன் மாறுபட்ட் கருத்தினால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதா என்று சேனல் செய்தியாளர் குணா கேட்டபோது கோபமடைந்தார். புதிய தலைமுறை சேனல் தீவிரவாதிகளுட்ன தொடர்பு உடையது விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உடையது, அவர்களை ஆதரிப்பது, வேண்டுமென்றே காங்கிரசுக்கு எதிரக தொடர்ந்து பிரசாரம் செய்வது, அதற்காக மாணவர்களை ஊக்குவிப்பது என்றும், இந்த சேனலை நடத்தும் பல்கலைக்கழகம் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் ொள்ளை அடிப்பது பற்றியெல்லாம் விரைவில் சி.பி.ஐ விசாரணை வரும் என்று இளங்கோவன் சொன்னார். அதை சேனல் செய்தியாளர் குணசேகரன் மறுத்தார். காங்கிரஸ் கருத்தை தெரிவிக்கவும் வாய்ப்பு தந்துவருவதைக் குறிப்பிட்டார். ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததால், குழப்பமாகவே, நிகழ்ச்சி முடிவுரை எதுவும் இல்லாமல் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது. - ஞாநி தன் ஃபேஸ் புக் பக்கத்தில்

இன்று புதிய தலைமுறையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றி நடந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இள்ங்கோவன் மிகக்கேவலமான முறையில் நடந்துகொண்டார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு தமிழகத்தில் உள்ள சில தீவிரவாத இயக்கங்கள் அந்தக் கருத்தை பரப்பி வருவதாகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர்களோடு தொடர்பு இருக்கிறது என்றார். நிகழ்ச்சியை நடத்திய குணசேகரன் அதை மறுக்க முற்பட்ட போது உன் முதலாளியை வந்து பதில் சொல்லச் சொல்லு என்றார். இது வெளிப்படையான ஒரு மிரட்டல்.பத்திரிகையாளர்கள் ஞாநியையும் சேகரையும் பேச விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். இடையில் கு.ப.கிருஷ்ணன் என்ற காமெடியன் வேறு.

கடந்த ஒரு மாதமாக சேனல் சேனலாக செருப்படி வாங்கிய காங்கிரஸ்காரர்கள் என்று உத்தியை மாற்றுகிறார்கள். யாரையும் பேச விடாமல் பொய் சொன்னால் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. இன்று அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவ்வளவு தன்னம்பிக்கையுடன் வெளியே போயிருக்க முடியாது.

கருடபுராணத்தில் காங்கிரஸ்காரர்களுக்கான தண்டனை ரொம்ப தெளிவாக் குறிக்கப்பட்டிருக்கிறது. - மனுஷ்யபுத்திரன் தன் ஃபேஸ் புக் பக்கத்தில்

அந்த வீடியோ :



இன்று வந்த செய்தி: இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள். ( செய்தி இங்கே )

இதுவே புதிய தலைமுறை !

Read More...

Wednesday, March 27, 2013

ஐ.பி.எல் இலங்கை வீரர்கள் பிரச்னை - பத்ரி சேஷாத்ரி



தமிழகத்தில் இப்போது தமிழ் ஈழ அலை மோதுகிறது. யாரெல்லாம் ஈழத் தமிழர்களுக்கு எப்படியெல்லாம் ஈழத்தை வாங்கித் தந்தே தீர்வது என்ற யோசனையில் உள்ளனர். மாணவர்கள் வேறு கல்லூரிகளை விடுத்து ஈழம் பெற்றுத்தருவதில் இறங்கிவிட்டார்கள்.

பட்டினிப் போராட்டம், தெருவில் இறங்கிப் போராட்டம், இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சுக்கள்மீது சென்னையில் தாக்குதல் என்று தொடங்கி, போராட்டத்தில் அடுத்தக் கட்டமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழ்நாட்டில் ஐ.பி.எல்லில் விளையாடக்கூடாது என்று ஜெயலலிதா அறிவித்தார்.

ஒரு வாரமே இருக்க, ஐ.பி.எல் நிர்வாகம் அவசரமாகக் கூடி முடிவெடுக்கவேண்டிய கட்டாயம்.
இலங்கை வீரர்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வதா? அல்லது சென்னையில் நடைபெறப் போகும் போட்டிகளில் மட்டும் அவர்கள் விளையாடாமல் பார்த்துக்கொள்வதா? வேறு வழியின்றி இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆனால் ஜெயலலிதாவின் கோரிக்கை நியாயமானதா?

என்னைக் கேட்டால், இலங்கை அரசையும் இலங்கை மக்களையும் பிரித்துப்பார்க்கவேண்டும் என்பேன் நான்.

உலகிலேயே இதுவரை நடந்த மிகக் கொடுமையான நிகழ்வு ஹிட்லரின் ஆட்சியும் யூதப் படுகொலையும். இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் நடைபெற்ற நியூரம்பர்க் வழக்கு விசாரணை மிகத் தெளிவாக யார்மீது குற்றம் சாட்டப்படலாம் என்று முடிவெடுத்தது. நியூரம்பர்க் தவிர்த்து ஜெர்மனியிலும் பிற நாடுகளிலும் ஜெர்மானியர்கள் பலர்மீதும் நடத்தப்பட்ட வழக்குகளும் இதைத் தெளிவாகப் பின்பற்றின. ஜெர்மன் ராணுவத்தினர் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. அப்பாவிகளைக் கொன்றவர்கள், கொல்ல முடிவெடுத்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என்று தெளிவான சாட்சியம் இருப்பவர்களை மட்டும்தான் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை கொடுத்தனர்.

மாபெரும் போர்க்குற்றம் நடக்கும்போது அதற்கான காரணத்தை ஒரு நாட்டின் அனைத்து மக்கள்மீதும் வைப்பது அறத்துக்கு எதிரானது. சிங்களவர்கள் மோசமானவர்கள் என்று தொடர்ந்து தமிழகத்தில் ஒட்டப்படும் போஸ்டர்கள் இனவெறியைத் தூண்டுபவை. அபாயகரமானவை. ராஜபக்‌ஷேயைக் கடுமையாகச் சாடி அதன் காரணமாகத் தன் உயிரை இழந்த லசந்த விக்ரமசிங்கே ஒரு சிங்களவர்தான். இன்று ஜெனீவாவில் இருந்தபடி இலங்கைமீது போர்க்குற்ற விசாரணைகள் நடைபெறவேண்டும் என்று எழுதிவந்த நிமல்கா ஃபெர்னாண்டோ ஒரு சிங்களவர்தான்.

இலங்கை என்னும் அரசு குற்றவாளி என்று நாம் கருதும்போது, அந்த அரசை எதிர்ப்பது நியாயமானது, அந்த அரசைக் கண்டிப்பது நியாயமானது. இலங்கையை காமன்வெல்த்திலிருந்து விலக்குவது, இலங்கையின் அதிகாரபூர்வ விளையாட்டு அணிகளோடு விளையாடாமல் இருப்பது, இலங்கைமீது பொருளாதாரத் தடையை விதிப்பது ஆகியவை முக்கியமான ஆயுதங்கள். இவற்றின்மூலம் ஓர் அரசை அடிபணிய வைத்து, தன் குற்றத்தின்மீதான நியாயமான விசாரணையை முன்னெடுத்துச் செல்வது சரியான பார்வை.

ஆனால் இலங்கையில் உள்ள பல இனங்களில் குற்றவாளி என்று நாம் பொதுவாகக் கருதும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில்/இந்தியாவில் எச்செயலிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்பதும் அதைச் செயல்படுத்துவதும் ரேசிசம் - இனவாதம்தான். இன்று தமிழகத்தில் நாம் கேட்கும் குரல்கள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன?

* சிங்களர்கள் தி.நகரில் வந்து பொருள்களை வாங்கக்கூடாது.
* சிங்கள கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் கிரிக்கெட் விளையாடக் கூடாது.
* சிங்கள பௌத்தர்கள் இந்தியாவுக்கு வரக்கூடாது.

நிறவெறி (அபார்த்தீட்) உச்சத்தில் இருந்தபோது, தென் ஆப்பிரிக்காவுக்கு பிற நாடுகள் விளையாட்டு அணிகளை அனுப்ப மறுத்தன. தடையை மீறி தென் ஆப்பிரிக்கா சென்று விளையாடிய வீரர்களை அந்தந்த நாடுகள் தடை செய்தன. ஆனால் அதே நேரம், இந்த நாடுகள் எவையும் தென் ஆப்பிரிக்காவின் வெள்ளை இன வீரர்கள் தத்தம் நாடுகளுக்கு வந்து உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதைத் தடை செய்யவில்லை.

இதனைப் பிரித்துப் பார்க்க ஒரு nuanced approach தேவை. நீங்கள் யாரை எதிர்க்கிறீர்கள்?
தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசையா அல்லது தென் ஆப்பிரிக்க வெள்ளை மக்களையா?
நிறவெறியினால் அந்த வெள்ளை மக்கள் பயன்பட்டிருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் அனைவரும் நேரடியாக அந்தக் குற்றச் செயலுக்குக் காரணமானவர்கள் இல்லை. ஒருவேளை அவர்களில் சிலர் நிறவெறிக்கு எதிரானவர்களாகவும்கூட இருக்கலாம்.

ஹிட்லரை ஜெர்மானியர்கள் தடுத்து நிறுத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்பதைப் பிற ஐரோப்பியர்கள் புரிந்துகொண்டனர். அதனால்தான் இரண்டாம் உலகப்போருக்குப்பின் சாதாரண ஜெர்மானியரைக் குற்றவாளியாக்கித் தூக்கில் போடவில்லை.

ஆனால் நாம்தான் சிங்கள மக்களையும் இலங்கை அரசையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் குழம்புகிறோம். வெறுப்பும் வேதனையும் சேர்ந்து நம் கண்களை மறைக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக்கூடாது, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வரக்கூடாது என்ற ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் நான் அதனை ஏற்பேன். ஆனால் இலங்கையின் எவ்வினத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபடத் தடை விதிக்கப்படவேண்டும் என்று சொன்னால் அதனை நான் வன்மையாக எதிர்ப்பேன். பாகிஸ்தானுக்கும் இதே விதி பொருந்தும்.

முன்னது அரசியல்ரீதியான எதிர்ப்பு. நியாயமானது. பின்னது இனரீதியான வெறுப்பு.
நியாயமற்றது.

- பத்ரி


Read More...

ஹாப்பி ஹோலி




ஹாப்பி ஹோலி


Read More...

Tuesday, March 26, 2013

சுகுமாரி - அஞ்சலி



1938 - 2013 
 அஞ்சலி

Read More...

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 8

விளையாட்டுக்களின் உதவியுடன் குழந்தைகளின் பல்வேறு திறன்களை மேம்படுத்துவது எப்படி என்று பார்த்து வருகிறோம்.காக்னிடிவ் டெவெலப்மெண்ட் எனப்படும் சிந்தனை மேம்பாட்டுத் திறனை எப்படி வளர்ப்பது என்று இப்போது பார்க்கலாம்.


குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப் போல மூளை வளர்ச்சியை நாம் அறிய முடியாது;ஆனால், அவர்கள் புதிதாக என்னென்ன விஷயங்கள் செய்கிறார்கள் என்று அறிய முடியும்.


Piaget என்கிற குழந்தை உளவியல் அறிஞர், குழந்தையின் காக்னிடிவ் வளர்ச்சியை நான்கு பருவங்களாகப் பிரிக்கிறார்.
First cognitive development stage: Sensory motor period (0-24 months)
Second cognitive development stage: The preoperational period (2-7 years)
Third cognitive development stage: (Concrete operations (7-12 years)
Fourth cognitive development stage:Formal operations (12 years plus)


சிந்தனை மேம்பாட்டுத் திறன் என்பது, புலன்களை அறிதல்,(sensory exploration) செயல் விளைவை அறிதல்,(cause and effect) கருவிகளை உபயோகித்தல், (using tools) பொருள்களின் இயக்கம் ,(object performance) அளவு, வடிவம் மற்றும் வெளி அறிதல்,(size, shape and space)குறியீடுகளை உபயோகித்தல்,(using symbols) கணிதக் கருத்தாக்கம்,(math concepts)மற்றும் காலம் பற்றிய புரிதல் (concept of time) போன்றவைகளை உள்ளடக்கியது.


இந்த வகையான காக்னிடிவ் விளையாட்டுக்கள், பாவனை செய்தல் (imitation)ஆர்வ உந்துதல், (curiosity) வகைப்படுத்துதல்(classification) என்கிற மூன்று முக்கியமான சிந்தனைத் திறன்களை மேம்படுத்துகிறது,
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பிளாஸ்டிக் பாட்டிலில் சோப்புக் கரைசலுடன், வண்ண வண்ண சிறு சிறு மணிகள், பாசிகள் போன்றவற்றைப் போட்டு, பாட்டிலைக் குலுக்கினால் அதனுள் ஏற்படும் நகர்வுகள், சோப்புக் குமிழிகள் தோன்றுதலைக் காட்டலாம். இதன் மூலம், குழந்தைகள்,செயல் விளைவுத் தத்துவத்தைப் புரிந்து கொள்கின்றன.மேலும், இது அவர்களின் புலன்களையும் கவர்ந்து அவர்களை மகிழ்விக்கிறது. பொம்மையின் சிறு பகுதி மட்டும் தெரியுமாறு வைத்திருந்து விட்டு, பொம்மை எங்கே என்று கேளுங்கள். குழந்தை, பொம்மையைச் சுட்டிக் காட்டுகையில், கை தட்டி, பாராட்டுக்களைத் தெரிவியுங்கள். ஒரு பொருளின் முழுமைத்தன்மைக்கும், அதன் பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பை குழந்தை உணர முடிகிறது.


குழந்தையின் கண்களை உங்கள் கைகளால் மூடி, பின் கைகளை எடுத்து சிரிக்கவும்.உங்கள் முகத்தை புத்தகத்தின் பின்னோ, செய்தித் தாளின் பின்னோ, மறைத்துக் கொண்டு, திடீரென்று தோன்றவும். பொம்மையைக் காட்டி, பின் அதை மறைத்து, பின் பொம்மை எங்கே என்று கேட்கவும். மெலிதான துணியில் பொம்மையை சுற்றி, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கவும்.சிறிய அட்டைப் பெட்டிக்குள் பொம்மையைப் போட்டு, பொம்மை எங்கே என்று கேளுங்கள்.இவ்விதமான விளையாட்டுகளால், குழந்தைக்கு, ”பொருள்கள் மறைக்கப்பட்டாலும், கண்களில் படாவிட்டாலும், அவைகள் இருக்கின்றன” அவற்றின் நிலைப்புத் தன்மை பற்றிய ஒரு புரிதல் ஏற்படுகிறது.


ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, பல்வேறு வடிவத்துடன் கூடிய ஸ்ட்ரா போன்ற பிளாஸ்டிக் குழாய்களைக் கொடுக்கவும். அவைகளை எவ்வாறு ஒன்றினுள் ஒன்றை நுழைக்க முயல்கிறது என்று பாருங்கள். ஷீ அட்டைப் பெட்டி மேலே வெவ்வேறு வடிவங்களில் சதுரம், செவ்வகம், முக்கோணம் என்று துளைகளைப் போட்டு, குழந்தையை, அதனதன் வடிவ மூடியை அது சரியாகப் பொருத்துகிறதா என்று பார்க்கவும்.இது போன்ற விளையாட்டுக்கள் அளவு, வெளிக்கு இடையே உள்ள தொடர்பை குழந்தைகள் கற்க உதவும்.


இரண்டு வருடக் குழந்தைக்கு,தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களின் வடிவத்தையும், பழங்கள் காய்கறிகளின் வடிவத்தையும் பற்றிக் கூறவும். உணவு உண்ணுகையில் முன்பிருந்த வடிவம் எப்படி மாறுகிறது என்பதையும் சொல்லவும்.
இரண்டு வெவ்வேறு வகை பொம்மைகள் செட்களை ஒன்றாகக் கலந்து வைக்கவும். உம்: விலங்கு பொம்மைகள் & வாகன பொம்மைகள். இரண்டு வகைகளையும் தனித் தனியே பிரித்து, வெவ்வேறு பெட்டிக்குள் போடச் சொல்லவும்.இதன் மூலம், ஒரே மாதிரி, வெவ்வேறாக இருக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதுடன், பொருள்களின் பண்புகளைப் பற்றியும் அவர்கள் கற்க முடிகிறது.

காலையில் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டு அவர்களை பதில் சொல்ல வைப்பது,
வானம் மஞ்சளாக இருக்கிறது-சரியா தவறா? என்று கேட்டு பதில் பெறுவது,
ரைம்ஸ்களின் முதல் பாதியை மட்டும் சொல்லி, இரண்டாவது பாதியை அவர்களையே சொல்ல வைப்பது
(உ.ம்) அம்மா இங்கே __________
ஆசை முத்தம்_____________
குழந்தையின் கண்களை மூடிக் கொண்டு, பழங்கள் காய்கறிகள், பருப்பு வகைகளை அவர்கள் கைகளால் உணரச் செய்து கண்டறியச் செய்தல்
Puzzle toys எனப்படும் புதிர் பொம்மைகளை, குழந்தைகளின் வயதுக்கேற்ப வாங்கிக் கொடுத்து, அவர்களை அந்தப் புதிர்களை விடுவிக்கச் செய்யலாம்.

நினைவிருக்கட்டும்- காக்னிடிவ் திறனை நீங்கள் வளர்க்க முனைகையில், குழந்தையின் சிந்திக்கும் திறனைத் தான் மேம்படுத்துகிறீர்கள். பொருள்களை நினைவு கூற அல்ல. நம் நோக்கம்- நிறைய செய்திகளை குழந்தைக்கு வழங்குவது அல்ல- இருக்கும் செய்திகளை எப்படிப் பகுப்பாய்வது,ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துவது, அதன் மூலம் ஒரு முடிவுக்கு வருவது என்பதேயாகும். எனவே, காக்னிடிவ் திற மேம்பாட்டுக்கு, நீங்கள் தெரிவு செய்யும் விளையாட்டுக்கள் (What and why? So what? Is it good? Putting information together) மேற்கண்டவைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.


பெரும்பாலான காக்னிடிவ் திறன்கள், மொழித் திறன்களுடனே இணையாக வளர்கின்றன. இன்னும் சரியாகப் பேச்சு வராத மூன்று வயதுக்கு உட்பட்ட பருவத்திலேயே குழந்தைகள் காரண காரியத்தை அறிய முற்படுகின்றன.இதைத் தூண்டுவதற்கு, பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் கேட்கும் கேள்விகள் துணை புரிகின்றன. இதை நாம் மறந்து விடாமல் இருக்க, who/what/where/when/why/ என்று நினைவில் கொள்ளவும்.


இரண்டு மூன்று வயதிலேயே இவ்வகை காக்னிடிவ் விளையாட்டுக்களை விளையாடிய குழந்தை, ஐந்து வயதிலேயே, அந்த வயதொத்த குழந்தைகளை விட நல்ல புத்திசாலியாக வளர்ந்து வருவது நிரூபணமாகி உள்ளது
இன்னும் ஒன்று.All problems are opportunities. எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக புதிர்களை விடுவிக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களது சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது.பொதுவாக,குழந்தைகள் ஞாபகத் திறன் மூலமாகவும், திரும்பத் திரும்ப நிகழும் அன்றாட நிகழ்வுகளின் மூலமும் (routine)நிறையக் கற்றுக் கொள்கின்றன. வழக்கத்திற்கு மாறாக நிகழும் எந்த ஒரு நிகழ்வும், குழந்தைக்குள் கேள்விகளை எழுப்பி, சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. உம்: கரண்ட் கட் ஆகுதல்- ஏன் விளக்கு அணைந்து விட்டது? அதன் பின் என்ன செய்வோம்? என்று கேள்விகளை எழுப்பலாம்.


குழந்தைகளின் காக்னிடிவ் திறன்களை மேம்படுத்த, சில எளிய வழிமுறைகள்
• அனுதினமும், குழந்தைகள் அவர்களின் தினசரி நிகழ்வுகளில் இருந்து நிறைய விஷயத்தைக் கற்றுக் கொள்கின்றன.அவர்களது கற்றல், அவர்களது நேர வசதிப் படியே நிகழ்கிறது; நமது நேர வசதிப்படி அல்ல. எனவே, குழந்தையின் கற்றல் நேரத்தில் மிகச் சரியாக நாம் அவர்களுடனே இருந்து அவர்களை நெறிப் படுத்த வேண்டும்.

• எல்லா விதிமுறைகளையும், செயல் முறைகளையும் நூறு சதவீதம் விளக்கி விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்காமல், சில எளிய சிக்கலான தருணங்களில், சின்னச் சின்ன இடர்ப்பாடுகளில், சரியான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் என்ன விதத்தில் அதை எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள் என்று பாருங்கள்.

• குழந்தைகளை பாதிக்காத சிறிய தவறுகளை செய்ய அனுமதியுங்கள்;அதிலிருந்து அவர்கள் நிறையக் கற்றுக் கொள்வர்.சில சமயங்களில் அவர்களது உள்ளுணர்வின் படி அவர்கள் செய்யும் சில செயல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
• சில அன்றாட நடவடிக்கைகளை முதலில் இருந்து கடைசி வரை ஒரு முழுசெயலாகக் கற்பிக்கவும்.

உம்: கடைக்குப் புறப்படுவது, கடையில் சாமான்கள் வாங்குவது, வீட்டுக்கு வந்து சாமான்களை அதனதன் இடத்தில் வைப்பது.

உணவுக்கான பொருள்களை எடுத்து வைப்பது, உணவு தயாரிப்பது, அதை உட்கொள்வது இது சற்று அதிக நேரமெடுத்தாலும், குழந்தைகள் இதில் கற்றுக் கொள்வது அதிகம்.
• ஏதாவது ஒன்று சரியில்லை என்றால், அதை அவர்களிடம் என்ன? என்று கேட்டு, அவர்களையே யூகிக்கச் சொல்லவும். உம்: நாம தூங்கப் போகலாமா? தூங்குறதுக்கு என்ன செய்யணும்? மெத்தை, தலையணை எல்லாம் போடணும்

• எல்லா சந்தர்ப்பங்களிலும், “அடுத்து என்ன? நீ என்ன செய்வாய்? நமக்கு இன்னும் என்ன வேணும்?” என்று கேள்விகளைக் கேட்கவும். மூன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைகள் தாங்கள் சிந்திப்பதை வாய் விட்டுச் சொல்லும் பழக்கமுடையவை. நம்முடைய கேள்விகளினால் வரும் அவர்களது பதிலைக் கொண்டு அவர்களின் மூளை எப்படி சிந்திக்கிறது என்று நாம் அறிந்து கொண்டு, அதற்கேற்ப மாதிரி அவர்களை சரியான கோணத்தில் சிந்திக்க வைக்க, வழிகாட்ட முடியும்.
குழந்தையின் காக்னிடிவ் டெவலப்மெண்ட் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

ஆரோக்கியமான குழந்தையின் நடவடிக்கைகள் பற்றி நாம் அறிந்து, நம் குழந்தை அதன் வயதிற்கேற்ப சிந்திக்கும் திறன், செயல்படும் திறனுடன் விளங்குகிறதா அல்லது, அதே வயதுடைய மற்றக் குழந்தைகளை விட பின் தங்கியுள்ளதா என ஒப்பு நோக்கி அறியலாம்.

குழந்தையின் காக்னிடிவ் வளர்ச்சி பற்றி அறிந்து கொண்டால், அதற்கேற்ற வகையில் அவர்களுக்கான விளையாட்டுகளையும், பொம்மைகளையும் நாம் தெரிவு செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

குழந்தை செய்யும் செயல்களின் காரணத்தை நாம் அறிந்து கொள்வதன் மூலம் இது, இன்ன காரணத்தால் இப்படி செய்கிறான் என்கிற தெளிவு நமக்குக் கிடைப்பதோடு, தேவையற்ற பயமும் நீங்குகிறது.

டாக்டர் பிரகாஷ்.
www.rprakash.in

அடிக்கடி கண்ணாமூச்சி விளையாடிய குழந்தைகள் தான் பின்னாளில், அனானி கமெண்ட்களாகப் போட்டுத் தள்ளுகிறார்களா? ;)

Read More...

தமிழ்நாடு - அமைதிப் பூங்கா

சென்னை ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். - செய்தி.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் இதை வரவேற்க மாட்டார்கள். விளையாட்டையும் அரசியலும் கலக்க கூடாது என்று நினைக்கிறேன். இந்த மாதிரி செயல்கள் எல்லாம் வீண் பகையையே உருவாக்கும். காங்கிரஸை எதிர்க்கலாம் ஆனால் அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

உங்கள் ஓட்டை சைடுல் போடலாம்.

Read More...

Monday, March 25, 2013

Leave Letter

24.3.2013
To
The Principal
DMK University
Chennai


Respected Sir,

As I am not feeling well tomorrow. Grant me one day leave.

yours sincerely,
obedient Sr.Student,
.......
Madurai
Tamil Nadu

Read More...

Saturday, March 23, 2013

காங்கிரஸ் படா தோஸ்து - அழகிரி பேட்டி

ராஜினாமா கடிதத்தை தனியாக கொடுத்தது தொடர்பாக யூகங்கள் வருகின்றன. ஆனால் எனது அமைச்சகம் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்கவே பிரதமரை சந்தித்து பேசினேன். கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டில் சி.பி.ஐ., சோதனை நடத்தியதாக தகவல் வந்தது. சி.பி.ஐ., அதிகாரிகள் வந்து சென்ற பிறகு தான், சோதனை குறித்து தெரிய வந்தது. என்னிடம் வெளிநாட்டு சொகுசு கார்கள் எதுவும் என்னிடம் இல்லை. சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தங்களது கடமையை செய்துள்ளனர். இதை நான் பிரச்னையாக்க விரும்பவில்லை.

காங்கிரசில் எனக்கு நண்பர்கள் அதிகம் உள்ளனர். எனவே அவர்கள் உறவை நான் துண்டிக்க முடியாது, இந்த உறவை யாராலும் தடுக்க முடியாது
திமுக(அழகிரி), திமுக(ஸ்டாலின்) கட்சி சீக்கிரம் உதயம் ஆகும் என்று நினைக்கிறேன்

Read More...

How student protests against Sri Lanka grew


நண்பர் நாகராஜன் எழுதிய கட்டுரையை நேற்று NTDV பக்கம் பார்த்தேன். அவருக்கு வாழ்த்துகள்.

ஆங்கிலத்தில் அழகாக எழுதியிருந்தாலும், உள்ளே அவர் சொன்ன கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த போராட்டமே ஒரு வைரஸ் போன்றது. முதலில் ஒரு காலேஜில் ஆரம்பிக்கும் பிறகு பரவும். அரசு உடனடியாக ஏதாவது Antibiotics கொடுக்க வேண்டிவரும்.

நிச்சயம் இந்த போராட்டங்களில் கலந்துக்கொள்ள தங்களின் பிள்ளைகளை பெற்றோர் விரும்ப மாட்டார்கள். முதலில் தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு நல்ல டாய்லெட் , சுவற்றில் நோட்டிஸ் ஒட்டாமல் இருக்க, பஸ்டே போன்ற கூத்தில் ஈடுபட மாட்டோம் என்று இவர்கள் போராட்டம் செய்ய வேண்டும் பிறகு மற்றவற்றுக்கு செய்யலாம். ஐ.நா தீர்மானம் பற்றி போராட்டம் செய்யும் இந்த மாணவர்களுக்கு அதை பற்றி முழுமையாக தெரியுமா ? டிவிட்டர், ஃபேஸ் புக் மக்களுக்கு இது பொழுது போக்கு , ஆனால் மாணவர்களுக்கு படிப்பு இருக்கிறது அதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

How student protests against Sri Lanka grew

MDMK Chief Vaiko has just finished his fortnight-long 450-km padayatra demanding that the Tamil Nadu Government close all liquor shops. PMK Supremo Ramadoss has long been vocal against TASMAC (state owned corporation that has a monopoly over selling of liquor in the state) culture in Tamil Nadu. These two have one more thing in common: their support for the Sri Lankan Tamil issue. They and a few political activists have been saying for a long time that the students in Tamil Nadu are becoming victims of TASMAC culture and are indifferent to the social and political problems around them.

But, the students in Tamil Nadu have surprised everyone. They have proved that they can pressurise the political parties and the state and central governments on the Sri Lankan Tamil issue which Vaiko and Ramadoss could not accomplish all these years.

But, will it have any immediate impact? The protests have resulted in the immediate withdrawal of support to the UPA government by DMK. It may also have a long term impact on students' participation in political and social issues. 1965 anti-Hindi movement produced many political leaders. 2013 can do so too.



It all started when the British television broadcaster Channel 4 released photographs of Balachandran, 12-year-old son of the slain LTTE Chief Velupillai Prabhakaran. The pictures showed the small boy with some eatables in his hand before he was shot dead at close range. It revealed a lot about the deadly war and the human rights abuses that took place towards the end of the final war between the Sri Lankan army and LTTE. A Human Rights Watch report also indicated that the Sri Lankan security forces used rape as a means to torture suspected members of LTTE for years after the end of the war.

A group of Loyola College students in Chennai who are part of the All India Catholic University Federation (AICUF) suddenly started an indefinite hunger strike on March 8th, 2013 with a charter of demands. They demanded that Sri Lanka be declared a genocidal regime for its role in the 2009 war, at the upcoming UNHRC meet. Though protests are not new to the students belonging to this federation, the sudden hunger strike by these eight students surprised the other members of the AICUF.

It would have remained an intra-college affair as they started their hunger strike within the Loyola campus. But they were advised to shift the venue from the college campus, citing the location of the Sri Lankan deputy high commission nearby.

The change of venue attracted more visitors including politicians from across the parties. The temperature was increasing at the strike venue after visits by the members of Congress and DMK. Social media played an important role in reporting the happenings at the venue and spreading the news across the world. With the deadline for their demands more than 10 days away from the scheduled meeting of UNHRC, no one had a clue about the logical end of the hunger strike. With the students not allowing the politicians to guide them, there came a turning point in the form of the Tamil Nadu Police. On Sunday night (10th March 2013), the Police forced the evacuation of the students from the strike venue and forcibly admitted them to the government hospital.

This news spread across social media. Though a few more colleges were planning to show solidarity with the Loyola students on Monday, the Police act triggered students of many more colleges to come to the streets. Even as the Loyola students withdrew their hunger strike after the intervention from Loyola management (which was not happy with the developments since the venue shifted from their campus), the movement they had started continued to pick up force.

Arts and science colleges from around the state joined in. Law colleges joined next. Then it was the turn of IIT Madras. Then followed the Engineering Colleges and the Medical Colleges. The State Government declared indefinite holiday for all the colleges from 18th March.

This is uncommon in Tamil Nadu in the present times. People were angry not only about the Sri Lankan Tamil issue, but also about the continuous attack on Tamil Nadu fishermen by the Sri Lankan navy. The non-political society was not reacting to any of this till the Loyola students started their protest. After that, it has been a chain reaction.

The AIADMK government must be happy with that midnight police act, even though they might not have expected this to grow. Most of the slogans in the protest venues are against Congress and DMK. Other parties have been spared so far.

The protests have started late. It may have negligible or zero impact on the upcoming UNHRC resolution. Even if the Indian government wishes to change its attitude on the Sri Lankan Tamil issue, it may be of no immediate use.

But, the tremors are felt elsewhere. DMK is already out of the UPA. Congress feels the pressure to at least bring a resolution in the parliament condemning the Rajapakshe regime. The main political parties, Congress and BJP, will be careful about the implications of the parliamentary resolution on J&K.

At the ground level, students should be more careful on what they are protesting for. They must be careful whether they are fighting for justice for the Sri Lankan Tamils or whether they are protesting against the Central government. They must differentiate between a party, a government or the nation.

Few forces will have their own agenda in infiltrating the student movement. Prabhakaran's pictures have entered the protest venues. This will certainly irritate the law enforcement agencies and divert the attention from the actual cause.
Few forces will try to inject anti-Indian ideas and thoughts of an independent Tamil nation. Few others will take another extreme position and question the credibility of the protestors. They may want us to believe that Rajapakshe is the only saviour of the Sri Lankan Tamils.

Students must have their agendas clear. The protest is an attempt to change the mindset and attitude of the centre. It is to force the centre to take a foreign policy stand to persuade UNHRC members to bring a resolution condemning the Sri Lankan government's role in genocide and to have push for a referendum so that the Sri Lankan Tamils can decide their own future. With respect to Tamil Nadu, the aim of the protests is to force the Central government to protect the Tamil Nadu fishermen from the attacks of Sri Lankan navy.

Students must gain more political insight and more social awareness. They have to streamline their energy towards social and political causes. Flash strikes cannot help them every time. There are other channels like lobbying, writing, grassroots political activism and direct participation in political parties.

Let them not be bottled into a TASMAC stereotype anymore!

(The author is the Chief Technical Officer for lndic Labs)

நன்றி: http://www.ndtv.com/article/south/blog-how-student-protests-against-sri-lanka-grew-345004

முதலில் ஆர்ட்ஸ் காலேஜில் ஆரம்பிக்கும் இந்த போராட்டங்களை பற்றி யாராவது ஆராய்ச்சி செய்யலாம் !

Read More...

Thursday, March 21, 2013

முக்கிய செய்திதான்



காலை ஆறுமணிக்கு வந்தா டாய்லெட்போக என்று குழந்தை கூடச் சொல்லலும்

Read More...

சிபிஐ

சிபிஐ சோதனை குறித்து நாங்கள் கவலையடைந்தோம் - பிரதமர்


மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்க கூடாது. சம்பந்தப்பட்ட துறை மந்திரியிடம் எனது கண்டனத்தை தெரிவித்து உள்ளேன். - ப.சி

இந்த சோதனை குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில் இத தமது கட்சிக்கு எதிரான சதி என கூறியுள்ளார் - செய்தி

சிபிஐ ரெய்ட் அரைகுறையாக நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டனர் - செய்தி

Congress President Sonia Gandhi also spoke to Mr Narayanasamy and discussed the matter. ( திட்டு விழுந்தது என்று படிக்கவும் )





இந்த சோதனை குறித்து சிபிஐ விசரணை செய்யும் என்ற செய்தி தான் இன்னும் வரலை. வந்துவிடும்...

Read More...

ஸ்டாலின் - இரண்டு செய்திகள்



இன்றைய செய்திகள்
1. சென்னையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை
2. “Stalin threatened to quit if DMK did not snap UPA ties”

“Mr. Stalin prevailed on his father to take a final decision on the night of March 18. By announcing withdrawal of support in the forenoon of Tuesday, Mr. Karunanidhi also pre-empted any attempt by the Congress leadership to come up with a compromise formula to convince him into staying with the UPA,” party sources said.

“Mr. Stalin’s insistence was the final straw. He convinced our leader that reconsidering our position will be political suicide and that we will lose our credibility among the people,” said a senior leader.

Party sources said that after the three Union Ministers — P. Chidambaram, A.K. Antony and Ghulam Nabi Azad — held parleys with Mr. Karunanidhi and left for Delhi, Mr. Stalin stayed back with his father and persuaded him to snap ties without any delay.

“At one point, he even threatened to quit his position in the party since as a future leader he has to shoulder more responsibility than anyone else,” said leaders who were close to Mr. Stalin.

DMK’s Parliamentary party leader T.R. Baalu, former minister A. Raja, senior DMK leaders, including E.V. Velu, K. Ponmudi and Duraimurgan, were other leaders who firmly supported the move.

நன்றி - ஹிந்து

கலைஞர் தாமதிக்காமல் அடுத்த திமுக தலைவராக ஸ்டாலினை கொண்டு வர வேண்டும்.

இனி மாயாவும் முலாயமும் சும்மா இருப்பார்கள்!. அழகிரி திமுகவிற்கு வெளியிலிருந்து ஆதரவு தருவார் !

Read More...

Wednesday, March 20, 2013

இட்லிவடை வாசகியின் வேண்டுகோள்

அன்புள்ள இட்லி வடைக்கு,

உங்கள் வாசகர்களின் அனுபவக் கருத்துக்களை எதிர்பார்த்து இட்லிவடை வாசகியின் வேண்டுகோள்.
Environmental engineering, Visual Communication துறைகள் குறித்த தகவல்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் என் மகனுக்குத் தேவைப்படுகிறது.

1. இந்தத் துறையில் சிறப்பாக இருக்கும் சென்னைக் கல்லூரிகள்
2. வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் : தனியார் மற்றும் அரசுத் துறைகள், சுய வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள்
3. மேற்படிப்புக்கான வாய்ப்புகள்

இணையத்தில் சுலபமாகக் கிடைக்கக் கூடிய சில இணைய தளங்களின் குறிப்புகள் அல்லாமல் துறை சார்ந்த அதில் குறைந்தபட்ச அனுபவம் உள்ளவர்களின் கருத்துகள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி
இட்லிவடை வாசகி


Read More...

கண்ணா லட்டு தின்ன ஆசையா ? புதிய காப்பி



நேற்று கூட்டணியிலிருந்து வெளியே வந்த செய்தி கேட்டு திமுக தொண்டர்கள் லட்டு வழங்கி கொண்டாடினார்கள். என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க மக்களுக்கு நல்ல சந்தர்ப்பம். இந்த லட்டு கொண்டாட்டம் கடந்த 9 வருடங்களாக ஏன் நடைபெறவில்லை என்று லட்டு கொடுக்கும் தொண்டர்கள் கேட்க மாட்டார்கள். திமுகவின் இந்த நாடகத்தால் பரதேசி இணையத்தில் பரதேசி விமர்சனங்கள் குறைந்துள்ளது.

திமுக திரும்ப கூட்டணியில் சேர்ந்தால் கொடுத்த சாப்பிட்ட லட்டுவை வாந்தி எடுப்பாகளா ?

Read More...

Tuesday, March 19, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 7

Motor skills என்பது தசைகளின் செயல்திறன்களைக் குறிப்பதாகும். gross motor skills and fine motor skills என்று இவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். Gross motor skills என்பவை புஜங்களின் அசைவுகள், கால், பாதம் அல்லது ஒட்டு மொத்த உடலின் அசைவைக் கொண்டவை. உடலின் பெரிய தசைகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டு நாம் செய்யும் செயல்களான ஓடுதல், ஊர்தல், நடத்தல், நீச்சலடித்தல், பேலன்ஸ் செய்தல்,பந்து எறிதல் போன்றவைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

fine motor skills எனப்படுபவை, துல்லியமாக - கைகள், மணிக்கட்டு, கை விரல்கள், பாதங்கள், உதடுகள், நாக்கு போன்றவற்றைக் கொண்டு செய்யப் படும் சிறிய நுண்ணிய அசைவுகள்/செயல்கள்… விரல்களைக் கொண்டு சிறு பொருட்களை எடுப்பது, ஸ்பூன், ஃபோர்க் உபயோகித்து உணவு உண்ணுதல்,பென்சில், பேனாவை உபயோகித்து எழுதுதல், வரைதல் போன்ற தினசரி செயல்களைச் சொல்லலாம்.குழந்தைகளிடம் இந்த இரண்டு மோட்டார் திறன்களும் ஒன்றிணைந்தே வளர்கின்றன. மற்றும் இவை இரண்டுக்கும் இடையில் ஒருங்கிணைப்பும் உள்ளது.


குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும், இந்த இரண்டு திறன்களுமே படிப்படியாக வளர்ந்து, ஆறு முதல் 12 வயது வருகையில் குழந்தை ஏறக்குறைய இந்த எல்லா திறன்களிலும் தேர்ச்சி பெற்று விடுகிறது.
fine motor skills ஐ மேம்படுத்தும் விளையாட்டுக்கள்:

இரண்டு மாதக் குழந்தைகளுக்கு அருகில் கலர் கலரான கைக்குட்டைகளை பரப்பி வைத்தால், அதை கையினால் தொட்டு எடுக்க முயற்சிக்கையில் fine motor வளர்ச்சி ஏற்படுகிறது.குழந்தையின் கைக்கெட்டுமாறு சிறு சிறு பொம்மைகளைத் தொங்க விட்டு, அவைகளைத் தொட முயற்சிக்கையில், கைகளைக் கொண்டு ஆட்டுகையில், சத்தம் வருகையில் செயல்-விளைவுத் தத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்வதோடு, அவர்களின் காக்னிடிவ் வளர்ச்சியும் மேம்படுகிறது.

ஆறு மாதக் குழந்தை சப்தமிடும் பொம்மைகளை இயக்க முயற்சிப்பதன் மூலம் இத் திறன்களை வளர்த்துக் கொள்கிறது.
எட்டு மாதக் குழந்தையிடம் கீழே கிடக்கும் பொம்மைகளை அதற்குரிய பெட்டியில் போடச் சொல்வதன் மூலமும்,இரண்டு பொருள்களை ஒன்றுடன் ஒன்று மோதி சப்தமேற்படுத்த வைத்து (இரண்டு ஸ்பூன்கள், இரண்டு தட்டுக்கள்) கைகளைத் தட்டி ஓசை எழுப்பச் சொல்லியும் இத்திறனை வளர்க்கலாம்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையிடம், பேப்பரைக் கிழித்துப் போடச் செய்யலாம். இதைச் செய்வதில் அவர்களுக்கு ஒரு அலாதி சுகம்தான்.

பதினெட்டு மாதக் குழந்தையிடம் ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு தண்ணீரை மாற்றச் சொல்லவும்.
இரண்டு வயதுக் குழந்தையானது ஒரு டம்ளரிலிருந்து இன்னொரு டம்ளருக்கு தண்ணீரை சிந்தாமல் முழுவதும் மாற்றி விட்டதென்றால், அதன் ஃபைன் மோட்டார்த் திறன்கள் நன்கு வளர்ச்சியடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.
என் பதினைந்து மாதக் குழந்தை ஸ்ரீவத்சனிடம் ஒரு தட்டில் கடலைப் பருப்பைக் கொடுத்து அதைக் கொஞ்சமாக எடுத்து ஒரு சிறு டபராவில் போடச் சொன்னோம். ஓரளவு முயற்சிக்குப் பின் கொஞ்சம் கடலைப் பருப்பு டபராவிலும், மீதி அவனது வாய்க்குள்ளும் போனது. கவனம்- இதனால் அவனுக்குக் கொஞ்சம் வயிற்று வலி வந்தும் சிரமப் பட்டான்.
Gross motor skills மேம்படுத்தும் விளையாட்டுக்கள்:

ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் வண்ணங்களாலான பொம்மைகளை அருகில் வைத்து, அவர்கள் நகர்ந்து, தவழ்ந்து பொம்மையை நோக்கிச் செல்வதை ஊக்குவிக்கலாம்.

எட்டு மாதங்கள் ஆன குழந்தையை சேர், அல்லது அட்டைப் பெட்டிகளை சுரங்கம் போல வடிவமைத்து, அதற்குள் ஊருந்து வரச் செய்யலாம்.குட்டிக் குட்டி அட்டைப் பெட்டிகளை கயிற்றினால் ஒன்றன் பின் ஒன்றாகக் கட்டி, ட்ரெயின் போல அவைகளை இழுக்கச் செய்யலாம்.வித விதமான வண்ணங்களில் பந்துக்களைக் கொடுத்து அவர்கள் அதை எப்படிக் கையாளுகிறார்கள் (தள்ளுதல், உதைத்தல், எறிதல், உருட்டுதல்) என்று பார்த்து பயிற்சி கொடுக்கலாம்.

ஒரு வயதுக் குழந்தைகளுக்கு, கலர் கலரான பிளாஸ்டிக் வளையங்களைக் கொடுத்து, அவர்களை அதனுள், வெளியே, சுற்றி, வட்டமடித்து என்று பலவாறாக விளையாட வைக்கையில் பல க்ராஸ் மோட்டார் திறன்கள் மேம்படுகின்றன.இரண்டு வயதான குழந்தைகளை, பூங்காவில் இரும்புக் கம்பியைப் பிடித்துத் தொங்கப் பழக்கலாம்.மெத்தையிலோ, பார்க், மால் போன்ற இடங்களில் குவிக்கப் பட்டுள்ள பந்துக்களின் மேலோ குதிக்கச் செய்கையில் கால் தசைகளுக்கு நல்ல பயிற்சி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பேலன்ஸ் செய்வதற்கும் கற்றுக் கொள்கின்றனர்.

குழந்தை வளர்ப்பில், இந்தத் திறன்கள் இன்றியமையாதவையாகும். குழந்தை, பிறந்தது முதல் தலை, கை, கால்களை ஆட்டி,அவைகளின் மீது கண்ட்ரோலைக் கொண்டு வந்து, பின்னர், கொஞ்சங் கொஞ்சமாக குட்டி விரல்களை இயக்கி எழுத, சிறிய பொருள்களை எடுக்கக் கற்றுக் கொள்கிறது. மேற்சொன்ன விளையாட்டுக்களை எவற்றை குழந்தை விரும்புகிறானோ அதை அடிக்கடி செய்யச் சொல்லி, பயிற்சி தரவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விளையாட்டுக்களை விளையாடுகையில் சலிப்பு வருவதில்லை.
பள்ளிக்குச் செல்லும் முன்பே குழந்தைகளின் இவ்விதத் திறன்களை சரியாக மேம்படுத்தினால், பள்ளியில் அவர்கள் நன்கு செயல்புரிய ஏதுவாக இருக்கும்.புதிய செயல்களின் மூலம் புதிய மோட்டார்த் திறன்களைக் கற்கையில் அவர்களது மூளையில் புதிய புதிய நரம்புத் தொடர் இணைப்புகள் உருவாகி, அவைகள் பழக்கமாக வளர்கின்றன.

பொதுவாகவே, நகர்தலை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளை குழந்தைகள் நன்கு விரும்பிச் செய்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில், குழந்தைகள் செல்ஃபோன்கள், கம்ப்யூட்டர் வீடியோ கேம் போன்றவைகளையே அதிகம் விரும்புகின்றன. இவைகள் எல்லாம் ஃபைன் மோட்டார் இயக்கத்திற்குப் பயன்படும். ஆனால், இதற்கெல்லாம் முன்னோடியாக இருக்கும் பெரிய தசைகளை இயக்கி செயல்படுகிர க்ராஸ் மோட்டார் இயக்கங்களையும் அவர்கள் கற்றுத் தெளிய வேண்டும்.
தவழ்ந்து நடக்கத் துவங்கிய குழந்தை வீடெங்கும் சுற்றி, கைக்கு என்ன கிடைக்கிறதோ, அதை எடுத்து விளையாடப் பார்க்கும்.அதில் தவறேதுமில்லை. ஆனால், அபாயகரமான பொருட்களான, கத்தி, கூரான சமையல் பாத்திரங்களை அவர்கள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பெரிய பாத்திரத்தை எடுக்க முடியாமல் எடுத்து கீழே போடும் குழந்தை, நாளடைவில் அதை பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொள்கிறது.

நாம் அதை அவன் காலில் போடாமல் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு காய்கறிகளை எடுத்து வைத்தல் போன்ற குட்டிக் குட்டி வேலைகளை அவர்களை செய்யச் சொல்லவும். குடிநீர் கேனை அடிக்கடி திறந்து விட்டு நீரை வீணாக்கும் என் குழந்தைக்கு, வாட்டர் பாட்டிலை வைத்துக் கொண்டுதான் நீர்க் கேனைத் திறக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தோம். ஒவ்வொரு முறை நீர் நிரப்புகையிலும், வாட்டர் பாட்டிலை நாங்கள் பிடித்துக் கொண்டு, அவனை குமிழைத் திறக்கச் சொன்னோம். முக்கால் வாசி நிரம்பியவுடன் அவனயே மூடச் சொல்லிப் பழக்குகிறோம். இதில் அவனுக்கும் ஒரு சந்தோசம் , மற்றும், ஒரு புதிய செயலைக் கற்றுக் கொடுப்பதும் முடிகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர், நடக்கத் தெரிந்த தன் குழந்தை, தவறிப் போய்க் கீழே விழுந்து அடிபட்டு விடக் கூடாது என்கிற எண்ணத்தில், வீடு முழுவதும் கார்ப்பெட் போட்டுள்ளார். இது சரியான அணுகுமுறை அல்ல.அவரால் தெருவனைத்திற்கும், ஊர் முழுவதும் கார்ப்பெட் போட முடியுமா? பின் எப்போதுதான் அவர் குழந்தை விழுந்து எழுந்து மீண்டும் விழாமல் பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொள்ளும்?

எனவே, குழந்தைகளை ஓவராகப் பொத்திப் பொத்தி வளர்க்காமல் அவர்கள் இயல்பில் போய், அவர்களுக்கு நார்மலாக என்னென்ன அனுபவங்கள் கிட்டுமோ, அதையெல்லாம் கிடைக்கச் செய்யுங்கள்

பிகு: படங்களில் தோன்றுவது குழந்தை ஸ்ரீவத்சன்.

டாக்டர் பிரகாஷ்.
www.rprakash.in

குழந்தைக்கு சுத்திப் போடுங்க !

Read More...

மங்காத்தா புதிய பிரிண்ட்


விளையாட்டு ஆரம்பம் !

Read More...

Monday, March 18, 2013

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 18-03-2013

அன்புள்ள முனி,

வாட்டிகன் நகரத்தில் வெள்ளைப் புகை வந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இத்தாலியுடன் இந்தியாவிற்கு ஒரு புகைச்சல் வந்தது கூட சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இந்தியா-இத்தாலி இடையே இப்படியொரு 'திடீர்' சிக்கல் வேண்டும் என்றே முளைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களோடு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா கூறினால், அவர்களும் எந்த ஆவணமும் தர மாட்டார்கள். சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் விசாரணைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிடும்.

ஆனால் அம்மா முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய சம்பவம் ஒன்று நேற்று நடந்தது. தஞ்சாவூருக்கு வந்திருந்த ஆய்வு மாணவர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தஞ்சையில் தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தின. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். முதலமைச்சர் இதை வளரவிடக் கூடாது. இவர்களை அடித்து விரட்டிவிட்டால் இவர்கள் நோக்கம் நிறைவேறிவிடுமா? அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று சொல்லும் இவர்கள் முன்பு அதே ஐ.நா. சபை மனித உரிமை மீறல் விஷயமாக விடுதலைப் புலிகளையும் கண்டித்த போது இவர்கள் என்ன லாலிபப் சப்பிக்கொண்டு இருந்தார்களா? அவர்கள் சிவிலியன்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்பதும், சிவிலியன்கள் தங்களிடமிருந்து தப்பித்துப் போகாமல், அவர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்பதும் கூட அந்த அறிக்கையில் வந்திருக்கிறதே!

அறிக்கை என்றாலே கலைஞர் தான் நினைவுக்கு வருகிறார். விகடனில் தற்போது கலைஞரை தாக்குவது உச்சகட்டத்துக்கு போய் உள்ளது. விகடனில் தொடர்ந்து விடுதலைபுலிகள் பற்றிய பிரச்சாரம் தொடர்ந்து வந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு பின் பெரிய அஜெண்டா ஒன்று இருப்பதாக நினைக்கிறேன். கானடா போன்ற நாடுகளில் விகடனுக்கு நல்ல விற்பனை. எல்லோருக்கும் வியாபாரம் தான் பெரிசு. சும்மா தமிழர் சப்போர்ட் எல்லாம் சும்மா ஹம்பக். இன்று கலைஞரை சந்திக்க வரும் மத்திய மந்திரிகள் கூட சும்மா வந்து போவார்கள். திமுகவிற்கு 2G வழக்கு இருக்கும் வரை காங்கிரஸை பகைத்துக்கொள்ள முடியாது. இந்த சந்திப்பு அடுத்த ஹம்பக்.

ஆனால் இந்தச் செய்தி ஹம்பக் கிடையாது. டாக்டர் கொடுக்கும் மாத்திரையை எப்போது சாப்பிட வேண்டும் என்று மறந்து போவதுண்டும். ஆனால் அமெரிக்காவில் தற்போது பேசும் மாத்திரைகள் வந்துள்ளது. காலை சாப்பிட வேண்டிய மாத்திரையை இரவு சாப்பிட்டால் "என்னை இப்போது சாப்பிட கூடாது, நான் ராத்திரி சாப்பிட வேண்டிய மாத்திரை" என்று தெளிவாகச் சொல்லுமாம். எனக்கு ஒரு டவுட் வயாக்ரா மாத்திரையைச் சாப்பிடும் போது அது என்ன சொல்லும்?

அடுத்து இன்னொரு அதிரும் செய்தி. இட்லிவடை மாதிரி பிழையுடன் எழுதுவததைத் தடுக்க ஜெர்மனி நாட்டில் ஒரு பேனா தயாரித்துள்ளார்கள். ஒருவர் எழுதும் போது எங்காவது டைப்போ, இலக்கணப் பிழை இருந்தால் பேனா உடனே எழுதுபவரின் கைவிரல்கள் உணரும்படி அதிர்வை ஏற்படுத்துமாம். ரொம்ப தப்பாக எழுதினால், நீங்கள் எழுதியது மாடர்ன் ஆர்ட் மாதிரி ஆகிவிடும்.. நம்ம மக்கள் அதையும் வால் பேப்பர் மாதிரி ஆக்கி கிழக்குப் பக்கத்தில் இருந்து புஸ்தகமாப் போட்டுவிடுவார்கள்.

உத்தர பிரதேசத்தில் முதலாம ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கினார் அகிலேஷ் யாதவ். மாணவர்கள் லேப்டாப்பை ஆன் செய்த வுடன் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் சிரித்துக்கொண்டு இருக்கும் வால்ப்பேப்பர் வந்தது. அதை உடனே பல மாணவர்கள் மாற்ற முயற்சி செய்தார்கள், ஆனால் அப்படி மாற்ற முயன்ற மாணவ்ர்களின் லேப்டாப் வேலை செய்யாமல் போய்விட்டது! மாணவர்களுக்கு அரசியல் புரியாது.

ஆனால் அரசியல் புரிந்த ஒரு நபரின் பேட்டியைப் போன வாரம் படித்தேன். இருபது வருடங்களாக தீவிரமாக தி.மு.க. அரசியலில் இயங்கி வருபவரும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வசந்தி ஸ்டான்லி பேட்டியிலிருந்து முதல் இரண்டு கேள்விகள்.

உங்களுக்குப் பிடிச்ச ஆண் கடவுள் யார்?

கிருஷ்ணன்.

நெறைய பொண்ணுகளோடு இருந்த கிருஷ்ணனா?

அப்படி ஏன் பாக்கறீங்க? அலங்காரப் பிரியனா, குறும்புக்காரனா, யுத்த தந்திரங்களைக் கையாண்டு ஒப்புக்கு யுத்தம் நடத்தி வெற்றி பெற்ற கிருஷ்ணனா பாருங்க... கலைஞருக்கு பின் அரசியல் பாடம் கற்றுத் தருபவன் கிருஷ்ணன்தான்.

கடைசி வரியை பாருங்க. கலைஞருக்கு பிறகு! இவருக்கு தெரிந்த இந்த அரசியல் கூட நம் பாராளுமன்றத்துக்கு தெரியவில்லை.

பயங்கரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சும்மா உசுப்பு ஏற்றுகிறது. அதை பெரிய விஷயமாக நாம் கண்டனம் எல்லாம் தெரிவிப்பது தேவை இல்லாத ஒன்று. தினமும் ஒருவர் தன்னுடைய ஃபேஸ் புக்கில் ஏதாவது பிதற்றிவிட்டு, அடிக்கடி டிவி சானலுக்கு சென்று விவாதம் செய்வார். அவரை எப்படிக் காமெடியாக நாம் எடுத்துக்கொள்கிறோமோ அதே போல பாகிஸ்தான் அறிக்கையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓமர் அப்துல்லா அப்சல் குருவை ‘sahib’ என்கிறார் சட்டசபையில்!. இவர் இந்தியாவில் இருக்க லாயக்கே இல்லை. இனம் இனத்தோடு தான் சேரும்!

தமிழர்கள் பற்றி இவ்வளவு கண்டனமும் ஆர்பாட்டமும் போடும் மீடியாவும், மக்களும் பாகிஸ்தான் எல்லையில் போன வாரம் உயிர்விட்ட அந்த வீரர்களுக்கு என்ன செய்தார்கள்? அதில் ஒரு தமிழரும் இருக்கிறார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாலா தன் பரதேசியில் அடித்து சொல்லித்தருவது போல அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஞாநி தன்னுடைய ஓ பக்கக் கட்டுரையில் "பாலா, நடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டு நடிகர்களைக் குச்சியாலும் கையாலும் காலாலும் அடித்திருப்பது நிச்சயம் அவருடைய மனப்பிறழ்வைக் காட்டுகிறது. அவருக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தம்மன வக்கிரங்களை ஒரு கலைஞன் கலையாக வடித்து அவற்றிலிருந்து விடுதலை பெற முயற்சிப்பது பொதுவாக நடப்பதுதான் என்றாலும் அந்த முயற்சி இதர மனிதர்களை வதைப்பதாக இருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

படம் பார்த்த போது அதில் வரும் காட்சிகளையே அவர் அப்படி நடித்து காட்டியுள்ளார் என்பது புரிகிறது. ஏதோ நடிப்பு வரலை அதனால் அடிக்கிறார் என்று நினைக்க கூடாது. இப்படி நடிக்க வேண்டுன் என்று செய்து காண்பித்துள்ளார். ஞாநி இதை ஆராய்ந்து எழுதியிருக்கலாம். பள்ளிக்கூடத்தில் சில சமயம் ஆசிரியர் கணக்கு வரவில்லை என்றால் வாத்தியார் ஒரு தட்டு தட்டுவார். முன்பு இது தப்பாகத் தெரியாது ஆனால் இப்போது அது பெரிய தப்பாகத் தெரிகிறது. அதே போல தான் இதுவும்.

சில செய்திகளுக்கு விஸ்வரூபம் (படம். நாவல் அல்ல) போல அதிக கவனம் கிடைக்கிறது. ஆனால் சில செய்திகளை யாருமே கண்டுகொள்வதில்லை. தில்லி மருத்துவக் கல்லூரி பாலியல் கொலையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராம்சிங் தற்கொலைக்கு அடுத்த வாரம் ஒரு பெண் அதே சிறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மீடியா அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை!.

அதே போல பாரதிய ஜனதா மீதும் மக்களுக்கு அதிருப்தி உள்ளது என்று அத்வானி ஒத்துக்கொண்ட செய்தி பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் "எனக்கு இப்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. நான் திருமணம் செய்து கொண்டு இருந்தால், குழந்தைகள் இருக்கும். அதனால் மற்ற கட்சித் தலைவர்களைப் போல நானும் எனது குழந்தைகளை எனது பதவிக்குக் கொண்டுவர விரும்பும் நிலைக்குத் தள்ளப்படுவேன்" என்று ராகுல் சொன்னதை எல்லோரும் பெரிய நியூஸாக போட்டார்கள்!.

இன்று மாலை முதல் ஜாதிகள் எதுவும் தமிழ்நாட்டில் இருக்காது. பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் கோவைக்கு சென்று ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பேச போகிறார்கள். கோவையில் பிரபலம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பா !

இப்படிக்கு அன்புடன்,
இட்லிவடை

Read More...

Sunday, March 17, 2013

சன்டேனா இரண்டு (17-03-13) செய்திவிமர்சனம்



இந்த வாரம்.... இரண்டு சம்பவங்கள்





செய்தி # 1



சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.


அது புனே நகருக்கு சற்றுதள்ளி இருக்கும் ஒரு ஆசிரமம். ஒரு மலைஅடிவாரத்தில், ஒரு பெரும் நிலப்பரப்பை அழகான நந்தவனம்போல உருவாக்கிஇருந்தார்கள். ஆங்கங்கே சிறு, சிறு மண்டபங்கள் மொசைக் தரையுடன். தியானம் செய்வத்தற்கு ஏற்றாற்போல்.



சுமார் பத்து இளைஞர்கள் ஒரு புல்தரையில் வட்டமாக அமர்ந்துஇருக்க (நானும்தான்!), நடுவே அமர்ந்துஇருந்த ஆசிரமத்தை சேர்ந்த,சுடிதார் அணிந்து இருந்த ஒரு பெண்மணி படுசரளமான ஆங்கிலத்தில் இப்படி பேசினார்.



"நம் சுவாமிகள் நேற்றுதான் அமெரிக்காவில் இருந்து வந்தார். ஆறு மாதம் இந்தியாவிலும், ஆறு மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிலும் இருப்பார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இமயமலையில் இருந்து இருக்கிறார். அதன்பிறகு, உருவாக்கியதுதான் இந்த ஆசிரமம் " என்றார் பக்தி பரவசத்துடன் அவர்.



"சுவாமிகளால் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி உங்கள் மனதை பக்குவப்படுத்தும். மனபதட்டம் இன்றி ஒரு விளையாட்டு போல உங்கள் அலுவலக பணிகளை செய்யவைக்கும். ஒரு மழைநேரத்தில், சூடான டீ குடிப்பது போன்ற தியான பயிற்சி இது " என்று எப்படி சொன்னால் இளைஞர்களுக்கு புரியுமோ,பிடிக்குமோ அந்த மொழியில் தொடர்ந்தார் அவர்.





"இந்த பயிற்சி முகாம் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கிறது. அதுவும், உங்களுக்கு ஏற்றார்போல வார இறுதி நாட்கள் மட்டும் " என்று முடித்த அவர்."உங்களுக்கு வேறு எதாவது கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்றார்.



நாங்கள் சில கேள்விகளை கேட்டோம்.



'மனபதட்டம் இன்றி ஒரு விளையாட்டு போல உங்கள் அலுவலக பணிகளை செய்யவைக்கும்' இந்த வாக்கியம் எங்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது.

"சுவாமிகளை இன்று நேரடியாக சந்திக்க முடியுமா "



" நீங்கள் முதலில் இந்த முகாமில் கலந்துகொள்ள வேண்டும், பயிற்சி முடிந்ததும் அதன் இரண்டாம் கட்டமாக தீட்ச்சை தரும் ப்ரோக்ராம் இருக்கிறது. சுவாமிகளே உங்களுக்கு ஆசி வழங்கி, தீட்ச்சை தருவார்"



"இந்த பயிற்சி எத்தனை கட்டங்கள். ஆசிரமத்திற்கு தொடர்ந்து வர இயலுமா"



"ஸி. இது வேலைநெருக்கடியில் சிக்கிதவிக்கும் உங்களை போன்ற இளைஞர்களுக்காகவே உருவாக்கபட்ட சிறப்பு தியானமுறை. தீட்ச்சை எடுத்து கொள்பவர்கள் மட்டுமே தொடர்ந்து இங்கு வரலாம். நீங்கள் விரும்பும்வரை தங்கவும் செய்யலாம். இங்கு நல்ல வசதிகளுடன் உள்ள ரூம்கள் உள்ளன.அங்கே பாருங்கள். அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள்.இங்கு கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்து, தியானத்தில் ஈடுபடுகிறார்கள்"



அவர் சுட்டிகாட்டியதை கண்ட, ஒரு மரத்தடியில் அமர்ந்து எங்களை பார்த்துகொண்டிருந்த அந்த அமெரிக்க தம்பதிகள் எங்களை நோக்கி புன்னகையுடன் கைஅசைத்தார்கள்.



"இந்த வாரமே நாங்கள் உங்கள் பயிற்சி முகாமுக்கு வருகிறோம்"



"நல்லது. இத்தைகைய நல்ல விஷயங்கள் எளிதில் பிறருக்கு கிடைத்துவிடாது. சுவாமிகள் இங்கு இருக்கும்போது, இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்"



"உங்கள் பெயர்களை ஆபீஸ் ரூமில் பதிவு செய்யவேண்டும். இரண்டு நாள் தியான முகாமுக்கு கட்டணம் வெறும் 5000. சுவாமிகள் தீட்ச்சை தரும் ப்ரோக்ராம் அட்டென்ட் பண்ணவிரும்புவர்களுக்கு தனியாக 5000 கட்டவேண்டும் ".



நான், மற்றும் ஒரு நண்பரை தவிர மற்ற அனைவரும் பயிற்சி முகாமுக்கு சென்றுவிட்டு, இரண்டு நாளும் 'சூப்பர் மீல்ஸ் மேன்' என்று சொன்னார்கள்.



இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்...அவர்கள் அனைவரும் ஐ. டி நிறுவன ஊழியர்கள் என்பதுதான்.



இன்றைக்கு இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஆசிரமங்களுக்கும், யோகா போன்ற சென்டர்களுக்கும் வருமானத்தை தரும் கஸ்டமர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஐ. டி. நிறுவன ஊழியர்களே.



.ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93 சதவீதம் பேருக்கு மகிழ்ச்சி இல்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹெல்த்டிராக் என்ற நிறுவனத்திற்காக பீப்பிள்ஹெல்த் என்ற ஆ‌ரோக்‌கிய நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பு, ஐ.டி. நிறுவன ஊழியர்கள் குறித்து எடுக்கப் பட்டது.



பெங்களூரை சேர்ந்த ஏழு முன்னணி ஐ.டி., நிறுவனங்களை சேர்ந்த 2106 ஊழியர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப் பட்டது.



இதன்படி, 93 சதவீத ஊழியர்கள் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது, ஊதிய உயர்வு, தூங்கும் நேரம், பயண தூரம், தாறுமாறான வேலை நேரம் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர்கள் சோகமாகவே உள்ளனர் என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது



எல்லாரும் நினைத்து கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கில் சம்பளத்துடன், பகட்டான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை.



கூலி தொழிலாளியோ, பாரத பிரதமரோ....அவரவர் தொழில்களுக்கு உரிய பிரச்சினைகளுடனும், போராட்டங்களுடன்னும்தான் மனிதர்கள் எல்லாரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.


I.T.ஊழியர்கள் I.D. இழந்தவர்களாக மாறிவருகிறார்கள் என்று தெரிவிக்கிறது பீப்பிள்ஹெல்த்.


செய்தி # 2







ஓரு புத்தகம் ஒன்றில் அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் பழைய பேட்டி ஒன்றைப் படித்தேன். அவர் தனது இயக்கத்தில் உருவான "நாடோடி மன்னன்" உருவான விதம் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தெரிவித்து இருக்கிறார்.



அதிலிருந்து, நான் ரசித்த சில கேள்வி,பதில்கள் உங்கள் பார்வைக்கு.



கேள்வி : உங்கள் பிறப்பு மற்றும் வளர்ப்பு பற்றி கூறுங்கள்.

பதில் : நான் 1917ல் இலங்கை என்னும் தமிழர்கள் வாழும் கண்டியில் பிறந்தேன். பிறந்த மூன்று வருடத்திற்குள் எனது தந்தையும் என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் நோய்வாய்ப்பட்டு அடுத்து அடுத்து இறந்து விட்டார்கள். பிறகு 1920ல் என்னையும் எனது அண்ணன் சக்ரபாணியையும் அழைத்துக் கொண்டு என் தாயாருடைய நெருங்கிய உறவினர்களின் உதவியோடு தமிழ்நாடு கும்பகோணம் வந்து உச்சிப் பிள்ளையார் கோவில் தெரு என்ற இடத்தில் குடியிருந்தோம். பிறகு, கும்பகோணத்தில் மூன்றாம் வகுப்பு, படித்து நான்காம் வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடியாமல் கும்பகோணத்தில் எனது தாயாரின் உறவினர் ஒருவரின் உதவியால் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்னும் நாடகக் கம்பெனியில் நானும் எனது அண்ணனும் நடிகராக சேர்ந்தோம்.

என் தாயார் உடைய பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர் பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.

என்னைத் தமிழ்நாடு மக்களும், அயல் நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.



கேள்வி : "நாடோடி மன்னன்" கதை எப்படி உருவானது?

பதில் : 1937-38 ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா " படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போனேன். "இப் ஐ வெர் கிங்" (If I were king) என்ற படம் அது. ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது….அதில் ஒரு காட்சியில் நான் மன்னனானால்? என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் "நான் மன்னனானால்?…" என்று.

இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றிவிட்டது. அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக் கொண்டிருந்தவன் என்பதே பொருந்தும். நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,?அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்? என்பதே….ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே தான், நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன்.

இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் ; அவர்களும் நம்மோடிருப்பவர்கள்தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்….? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்…. மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான். ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்துவிடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்தரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றி நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல" என்ற எண்ணத்தில் வாழ்ந்து, தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில் ஈடுபடவும் தாயராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட,அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன். இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்".

‘மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன… அவைகளை தமதாக்கி கொண்டால் நாடு நலம் பெறும்’ என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் ‘நாடோடி மன்னன்’ கதை. என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி,அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்பாடுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே? அதோடு புதிய, ஆனால் தேவையான,சிலசட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடிமன்னன் " கதை.

கேள்வி : உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கின்றனரா?

பதில் : நானே இருக்கிறேனே, போதாதா?

கேள்வி : உண்மை அழிந்த பின், நிலைத்திருப்பது என்ன?

பதில் : உண்மை தான்! ஏனென்றால், அது அழிவது கிடையாது.

கேள்வி : நீங்கள் எதை நம்புவதில்லை?

பதில் : நடிகர்களுக்குக் கிடைக்கும் புகழ் நிரந்தரமானது என்பதை!

கேள்வி : எதிர்ப்புகளைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி பெற்றீர்கள்?

பதில் : என் வளர்ச்சியாலோ, எனக்குக் கிடைக்கிற ஆதரவாலோ அல்லது என்னையும் அறியாமல் நான் செய்கிற தவறுகளாலோ இன்று எனக்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லாமலேயே, பல துன்பங்களையும், துயரங் களையும் தாங்கி, பரிதாப நிலையில் வாழ்ந்தவன் நான். அதை எண்ணிப் பார்க்கும் போது, இந்தத் தாக்குதல்களும், எதிர்ப்பும் எனக்கு மிகச் சாதாரணமாக தோன்றுகிறது.



(நன்றி, இனி அடுத்த வாரம்)



-இன்பா

Read More...

Friday, March 15, 2013

பரதேசி - FIR

நல்ல புகைப்படம் எடுக்க விலை உயர்ந்த கேமரா மட்டும் இருந்தால் போதாது. அதுபோலத்தான் சினிமாவும். மாஸ் ஹீரோ, தடபுடல் செலவு... என்று மட்டும் இருந்தால் போதாது. பாலா மீண்டும் ஒரு முறை ஓட்டைக் கேமராவை வைத்து நல்ல படத்தை எடுத்துள்ளார்.

பாலா படங்கள் இப்படி தான் இருக்கும் என்று தெரிந்தாலும் அவரின் படங்களைப் பார்க்க ஆவலாகச் செல்ல வைப்பது அவரின் உண்மையான உழைப்பு. தமிழ் பட இயக்குனர்கள் டிவியில் தோன்றி அடிக்கடி சொல்லும் வித்தியாசமான கதை இவர் படங்களில் இருக்கும்.


படத்தில் யார் ஹீரோ என்று முதலில் பார்த்துவிடலாம் - வறட்சியான கிராமம், தேயிலைத் தோட்டம், மூட்டை முடிச்சுகளுடன் வரும் அந்த ஊர்க் கூட்டம். முதல் ஹீரோ.

நாஞ்சில் நாடான் வட்டார மொழியில் எழுதிய வசனம். முதலில் ஏதோ வேறு மொழி மாதிரி இருந்தாலும் பிறகு நாம் கதைக்குள் சென்றவுடன், இடைவேளையின் போது கேண்டினில் "எலேய் கொஞ்சம் காப்பி தண்ணி குடுலே" என்று கேட்க தோன்றுகிறது. நாஞ்சில் நாடானும் இந்த படத்தில் ஒரு ஹீரோ தான்.

அதர்வா நடிப்பு என்று சொல்ல முடியாது அவர் நிஜமாகவே வாழ்துள்ளார். அவர் அப்பத்தாவாக வரும் அந்த கிழவியின் நடிப்புக்கு உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தளபதி யாரும் போட்டி போட முடியாது. சிங்கிள் ஆளாக ஒரு பெரிய கிராமத்தையே பிரதிபலிக்கிறார். வடிவுக்கரசி போன்ற சினிமாக் கிழவிகளைப் போடாமல் இந்த மாதிரி நிஜ கிராமத்து மக்களைப் போட்டது பாலாவின் பிளஸ் பாயிண்ட்.

பஞ்சம் பிழைக்க தேயிலை தோட்டத்தை தஞ்சமடையும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை பார்க்கும் போது படத்தில் விஜய், அஜித் இல்லையே என்ற ஏக்கம் வர செய்கிறது. அவர்கள் இருந்தால் எல்லோருக்கும் 1930லேயே இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும். காந்தி கூட தேவைப்பட்டிருக்க மாட்டார்.

இசை ஜி.வி.பிரகாஷ். பேர் போடும் போதே யாருப்பா இசை என்று கேட்க வைக்கிறார். படத்தில் ஒரு பாடல் இளையராஜா பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது ஆனால் பாடியவரின் குரலே கிட்டதட்ட இளையராஜா மாதிரி தான் பாடியிருந்தார். இசை அடுத்த ஹீரோ.

கொத்தடிமைகள், குடிசைகள், வெள்ளைக்கார துரை என்றால் கூடவே ஏழைகள் வாழும் சூழல், வெள்ளைக்கார துரை பெண்களிடம் பாலியல் பலாத்காரம், வியாதிகள், ஒவ்வொருக்கும் ஒரு சின்ன கதை... எப்போது தப்பிபோம் என்ற ஏக்கம்... என்று எல்லாம் நமக்கு தெரிந்த காட்சிகள் தான்.... ஆனால் படத்தில் அதை எல்லாம் காட்டியிருப்பதில் உள்ள நிஜம் எல்லா கிராம மக்கள் கண்களிலும் அந்த பயத்தை உண்டு செய்துள்ளார்... இயக்குனர் பாலா என்ற படத்தின் ஹீரோ.

யாராவது வந்து காப்பாத்த மாட்டார்களா என்ற உணர்வு நமக்கு வந்துவிடுகிறது ஆனால் வருவதற்குள் படம் முடிந்துவிடுகிறது. நல்ல வேளை படம் முடிந்தது என்று நினைக்க தோன்றுவது தான் பாலாவின் வெற்றி.

குறை என்றால் - படத்தில் வரும் ஹீரோயின்(வேதிகா) முகத்தில் கருப்பு அடித்துக் காண்பித்தது; ஆரம்பத்தில் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் கடுப்பாக இருக்கிறது. அதே போல ஆரம்ப காட்சிகளில் அதர்வா சின்னதம்பி பிரபு மாதிரி செய்வது எல்லாம் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கடைசியாக அந்த டாக்டர் ஆடும் அந்தக் கூத்துப் பாடலை தயவு செய்து எடுத்துவிடுங்கள் பாலா. அதைப் பார்த்தால் எங்களுக்கு சோகம் இன்னும் அதிகமாகிறது !

கொசுறு:
கிறிஸ்தவ டாக்டர் வந்து தாழ்த்தப்பட்ட மக்களை கிறுஸ்துவ மதத்துக்கு மாற்றுவது பற்றி இணையத்தில் விவாதம் நடக்க போகிறது.

அலக்ஸ் பாண்டியன் போன்ற காவியங்கள் வரும் தமிழகத்தில் இந்த மாதிரியும் படம் வருவது தமிழ் நாட்டின் சாபக்கேடு. :-)

இட்லிவடை மார்க் 8.5/10


சுதந்திரத்துக்கு பின் இந்த மாதிரி கொத்தடிமைகள் இன்னும் நம் நாட்டில் இருக்கிறார்கள். அரசியல் கட்சி தொண்டர்களாக

Read More...

Thursday, March 14, 2013

சர்வாங்கம்

இந்த வார குங்குமத்தில் வந்த இந்த கட்டுரை மிக முக்கியமானது என்று எனக்கு தோன்றுகிறது.

 



  

 




எல்லோருக்கும் படிப்பை கொடுப்போம் !

Read More...

Tuesday, March 12, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 6


விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு இயல்பான ஒன்று. நாடு, கலாச்சாரம் என்கிற பாகுபாடுகள் ஏதுமின்றி உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளும் விளையாட்டில் வெகு ஆர்வமாக இருக்கும்.உலகின் புராதன பொம்மைகள் களிமண், குச்சி, பாறைகளால் செய்யப் பட்டிருந்தன.சிந்து சமவெளிக் காலத்திலிருந்தே(கி.மு.3000-1500) குழந்தைகள் சிறிய தேர் பொம்மைகள், பறவைகள் வடிவில் செய்யப் பட்டிருந்த விசில், குரங்கு பொம்மைகளைக் கொண்டு விளையாடி இருப்பதாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானதும் நன்மை பயப்பது என்பதையும் பெற்றோர்களாகிய நாம் உணர வேண்டும்.விளையாட்டில் குழந்தைகள், தங்களை பிஸியாகவும், களிப்புடனும் வைத்துக் கொள்கின்றனர்.நம் குழந்தைகள் சிரித்து, மகிழ்வுடன் விளையாடுவதைப் பார்க்கையில் நமக்கும் அளவற்ற மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகிறது.ஆனால், இந்த விளையாட்டுக்க்கள், குழந்தையின் வளர்ச்சியில் எத்தகைய இன்றியமையாத பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அறிவதேயில்லை.கடந்த முப்பது வருடங்களில், குழந்தைகள் விளையாட்டுக்கு செலவிடும் நேரம் வெகுவாகக் குறைந்து உள்ளதாக, குழந்தை நல அறிவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


குழந்தையின் வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு முக்கியக் காரணியாகும்.பல்வேறு வகையான திறன்களை (skills) வளர்த்துக் கொள்வதற்கும், பின்னாளில் அவைகளைத் திறம்படப் பயன்படுத்துவதற்கும் விளையாட்டு அவசியம். விளையாட்டின் மூலமே, குழந்தைகள் கற்கின்றன; இந்த உலகைப் புரிந்து கொள்கின்றன; தாம் இந்த உலகில் எவ்வாறு பொருந்துகிறோம்(fit) என்பதை உணர்கின்றன.
நகர்தல், பார்த்தல், தொடுதல், நகர்த்துதல், ருசி பார்த்தல், நுகர்ந்து பார்த்தல், கேட்டல் போன்ற செயல்பாடுகளின் மூலம் சிறு குழந்தைகள் நிறையக் கற்றுக் கொள்கின்றன. “விளையாட்டு” (play) என்பது, நன்றாக நடக்க, ஓடத் தெரிந்த குழந்தைகளுக்குத்தான் என்று நாம் நினைப்பது முற்றிலும் தவறு.பச்சிளம் குழந்தைப் பருவத்திலேயே, அவர்களுக்கு, அவர்களது செயலின் விளைவு பற்றித் (feedback) தெரிய ஆரம்பிக்கிறது. அழுதால் பால் கிடைப்பதும், ஈர ஜட்டி மாற்றப் படுவதும்,பந்தை எறிந்தால், பிடிக்க ஆள் வருவதும்,கிலுகிலுப்பையை அசைத்தால் சத்தம் வருவதும் அவர்களுக்கு என்று ஒரு சக்தி இருப்பதைப் பற்றியும், அவர்களால் செயலாற்ற முடியும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்கின்றனர்.
பின்னர், தவழ்ந்து, நகரத் துவங்கி, வீட்டின் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்த்து, ஆராய்கின்றனர்.சற்று வளர்ந்த குழந்தையானது, பெற்றோர்கள் மற்றும் மற்ற குழந்தைகளின் செயல்களை நடிப்பதில் (imitate) சமூகத் திறன்களைக் (social skills)கற்கிறது..

பள்ளியில் சேர்ந்தவுடன், விளையாட்டு என்பது சட்ட திட்டங்களுடன் ஒரு ஃப்ரேமுக்குள் இருக்கக் கூடிய , போட்டிகளுடன் கூடிய வேறு ஒரு வடிவம் எடுத்து விடுகிறது.விளையாட்டின் மூலமே பெரும்பாலும் அவர்கள் தங்கள் நண்பர்களை சந்திக்கவும், அவர்களுடன் பழகவும் வழி வகை செய்கிறது.

குழந்தைகளைச் சுற்றி, பல்வேறு விதமான பொம்மைகள் இருப்பது நல்லது..பொம்மைகளும், விளையாட்டு சாதனங்களும் விலையுயர்ந்தவைகளாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. புத்தகங்கள், க்ரேயான், பென்சில், பேப்பர், பில்டிங் ப்ளாக்ஸ் பொம்மைகள்,என்று என்னென்ன முடியுமோ, எல்லாவற்றையும் அவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள்.
விளையாட்டுகளில் பல்வேறு வகைகள் உண்டு. ஒவ்வொரு விளையாட்டுமே குழந்தை, கற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்புதான். ஒவ்வொரு வயதிலும், குழந்தைகள் என்னென்ன விளையாட்டுகள் விளையாடுகின்றன, அவைகளை என்னென்ன விதமாக விளையாடுகின்றன, அவைகளின் மூலம் குழந்தைகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்று விளையாட்டுக்களைப் பற்றி பல்வேறு கோணங்களில் விரிவாகப் பார்க்கலாம்.

மொழி வளர்ச்சி மற்றும் குழந்தைப் பருவக் கற்றல்:

குழந்தைகளுக்கு மொழி வளர்ச்சி என்பது , ஏறக்குறைய இந்த வரிசையில் நடைபெறுகிறது.
• அழுவது,சத்தமிடுவது,தோராயமாக ஓசை எழுப்புவது
• உளறுவது, இரண்டு/ மூன்று முறை அதே ஒலியை திரும்பச் செய்வது-3 மாதங்கள்
• கவனிக்கும் திறன் – 8 மாதங்கள்
• வார்த்தைகளைப் புரிந்து கொள்வது -1 வயதில்
• ஒரு சொல் பேச்சு- 1 வயதில்
• இரண்டு வார்த்தைகளை / தந்தி வார்த்தைகளை சொல்வது – 2 வயதில்
• மொழி இலக்கணம் கற்றல்
மொழி வளர்ச்சிக்கும், குழந்தைப் பருவக் கற்றலை வளர்க்கவும் உதவும் விளையாட்டுகள்:

டெமோ டேப்: (வயது: 6 வாரங்களுக்கு மேல்)

குழந்தையின் சப்தங்களை தேதி வாரியிட்டு டேப் ரெகார்டரிலோ, செல் போனிலோ ரெகார்ட் செய்யவும்.
இது குழந்தையின் மொழி வளர்ச்சியின் முன்னேற்றங்களை நாம் எளிதில் உணர வகை செய்யும்.
மற்றவர் குரலை பின்பற்றுதல்: (வயது: 3 மாதங்களுக்கு மேல்)

உங்கள் குழந்தை ஒலி எழுப்புகையில், நீங்களும் அதே ஒலியை தொடர்ந்து எழுப்பவும்.பின்பு, நீங்கள் அதே ஒலியை மீண்டும் எழுப்பி, குழந்தை எதிர்வினை புரிய,ஒரு இடைவெளி தரவும்.இந்த செய்கையானது, குழந்தைகள் அடிப்படை மொழித் திறன்களைப் பழகவும்,ஒலியைக் கொண்டு மற்றவர்களுடன் உரையாடவும் இது கற்றுத் தருகிறது.
டெடி பொம்மை எங்கே? (வயது: 6 மாதங்களுக்கு மேல்)

குழந்தை நன்கறிந்த பந்து, மற்ற பொம்மைகள்,கரடி பொம்மை எல்லாவற்றையும் அவைகளைக் குறிப்பிட்டு, குழந்தையை அடையாளம் காணச் செய்யவும்.சரியாகக் காட்டியவுடன்,கை தட்டி உற்சாகப் படுத்தவும்.இந்த விளையாட்டில் இருந்து, தெரிந்த நபர்கள், பொருட்களை இனங்கண்டறிந்து அவைகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், சமூக இணைப்புகள் (social ties) பற்றிக் கற்றுக் கொள்கின்றனர்.

குழல் வழியே பேசுதல் (வயது: 10 மாதங்களுக்கு மேல்
ஊதுபத்திக் குழல், அல்லது ட்யூப் போன்ற குழல் வழியாக சற்று பலமான மற்றும், மெதுவான ஒலியை எழுப்புதல்.
இதை கவனிப்பதன் மூலம், வெவ்வேறு வகையான ஒலிகளை எழுப்புவது மற்றும் ஒலியைப் பயன்படுத்துவதைப் பற்றியும் குழந்தை கற்றுக் கொள்கிறது

மூக்கு எங்க இருக்கு? கால் எங்க இருக்கு? (வயது: 10 மாதங்களுக்கு மேல்)
குழந்தையின் பல்வேறு உடல் பாகங்களான மூக்கு, கண், வாய், காது, கால் பற்றிக் கேட்கவும். குழந்தை பல்வேறு சொற்களைப் பற்றிக் கற்றுக் கொள்ளவும், சரியாக அடையாளம் சொல்வதால், அதன் சுய மதிப்பும் கூடி, இது போன்ற விளையாட்டுகளில் மேலும் ஆர்வம் அதிகரிக்க ஏதுவாகவும் இருக்கும்.

எடுத்து வைக்க உதவு: (வயது: 12 மாதங்களுக்கு மேல்)
கடைக்குப் போய் வாங்கி வந்த சாமான்களை, காய்கறிகளை ஒவ்வொன்றாக அவைகளின் பெயர்களைச் சொல்லி எடுத்து வைக்கவும்.பின் அந்த சாமான்களின் பெயரைச் சொல்லி, குழந்தையை சரியாக எடுத்து மீண்டும் பையில் போடச்சொல்லவும்.
இதன் மூலம் புதிய புதிய சாமான்களின் பெயர்களைக் கற்றுக் கொள்வதோடல்லாமல், குழந்தை,ஒரு செயலை இன்னொருவருடன் சேர்ந்து செய்யும் இயல்பு பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.

விலங்குகள் மிமிக்ரி: (வயது: 12 மாதங்களுக்கு மேல்)

விலங்குகளின் படங்களைப் புத்தகத்திலோ அல்லது சார்ட்டிலோ காட்டி, அவைகளைப் போல சப்தமிடவும்.
குழந்தை இதை நன்கு ரசித்து மகிழ்வான். மொழியைக் கேளிக்கையாக (fun) கற்றுக் கொள்வது துவங்குகிறது
அப்புக் குட்டி சொல் புத்தகம்: (வயது: 12 மாதங்களுக்கு மேல்)
உங்கள் குழந்தை என்னென்ன சொற்களைச் சொல்கிறானோ, அதன் படங்களைக் கத்தரித்து ஒரு நோட்டில் ஒட்டவும். மீண்டும் மீண்டும் அந்தப் படங்களைக் காட்டி அவனை சொல்ல வைப்பது,அவனுக்குப் பயிற்சியையும், சரியாகச் சொல்வதால், மிகுந்த மன மகிழ்ச்சியையும் தரும்.

போட்டோ எக்ஸ்பீரியன்ஸ் புத்தகம்: (வயது: 18 மாதங்களுக்கு மேல்)
குழந்தையைப் பற்றிய ஒரு சிறு போட்டோ ஆல்பக் கதைப் புத்தகத்தை உருவாக்கவும்.உதாரணமாக, குழந்தையை பூங்காவிற்கு அழைத்துச் செல்கையில் ஒவ்வொரு விளையாட்டின் போதும் புகைப்படங்கள் எடுக்கவும்.அவைகளை ஒரு ஆல்பத்தில் / நோட்டில் ஓட்டி, குழந்தையை அருகில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு, அந்தப் படத்தைக் காட்டி அவ(ள்)ன் என்ன செயல் செய்கிறா(ள்)ன் என்று கதை போல சொல்லவும்.போட்டோவைக் காட்டி நீங்கள் கூறும் ஒவ்வொரு மொழி வளமும்,(vocabulary) குழந்தைக்கு மிகுந்த அர்த்தமுள்ளதாக விளங்கும்.ஏனென்றால், அவைகளை குழந்தையே உணர்ந்து அனுபவித்து இருக்கிறது.ஒவ்வொரு புகைப்படமும், குழந்தை ஏற்கெனவே செய்த செயலின் ஒரு அடையாளமாக இருக்கிறது.குழந்தைகளின் சுயமதிப்பு இதன் மூலம் கூடவும், அவர்கள் தங்களை புகைப்படத்தில் அடையாளப் படுத்திக் கொள்ளவும் முடிகிறது.வாசிப்பு அனுபவத்திற்கான மிகச்சிறந்த முன்னோட்டமாக இந்த விளையாட்டு திகழ்கிறது

சோஷியல் மற்றும் எமோஷனல் டெவலப்மெண்ட், ஃபைன் மோட்டார் மற்றும் க்ராஸ் மோட்டார் டெவலப்மெண்ட், சென்ஸரி டெவலப்மெண்ட்,காக்னிடிவ் டெவலப்மெண்ட் போன்ற பல்வேறு விதமான உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கான விளையாட்டுக்கள் பற்றி இனி வரும் வாரங்களில் பார்ப்போம்..

டாக்டர்.பிரகாஷ்
www.rprakash.in

இந்த வழிமுறை எல்லாம் டிவி இல்லாத வீட்டில் :-) டிவி இருக்கும் வீட்டில் சீரியல், சினிமா, வடிவேலு/விவேக் நகைச்சுவை என்று பல விஷயங்களை மறை முகமாக சொல்லித் தருகிறோம் .

Read More...

இன்று டெசோ பந்த்


டெசோ அமைப்பின் பொது வேலை நிறுத்தம் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது அதனால் வழக்கம் போல் பேருந்துகள், ஆட்டோக்கள், ரயில்கள் ஓடுகிறது. குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளார்கள். கலைஞர் டிவியில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.

Read More...

Monday, March 11, 2013

யார் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள் ?




இந்த படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள். ( அந்த நபரின் பெயரை கிசுகிசு பாணியில் குறிப்பிடவும் :-)

Read More...

Sunday, March 10, 2013

சன்டேனா இரண்டு (10-3-13) செய்திவிமர்சனம்



இந்த வாரம்.... ஓதுக்கப்பட்ட ஒதுவார்கள், தாழ்த்தப்ட்ட பக்தர்கள்.



செய்தி # 1





சிவராத்திரி என்றாலே என் நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோயில்தான். தற்சமயம் இந்த கோயில் நிர்வாகம் அரசு நிர்வகிக்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறி இருப்பது நீங்கள் அறிந்ததே.



ஆனால்,சமிபத்தில் நான் இந்த கோயிலுக்கு சென்றபோது, அது இன்னும் தீட்சதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும், அரசு நிர்வாகம் என்பது பெயரளவில் மட்டுமே என்றும் புரிந்தது. தங்களின் எதிர்காலத்தை நினைத்து தீட்சதர்கள் பயந்துபோய் விட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு தொட்டதெற்க்கெல்லாம் வசூல் வேட்டை, கீழ சன்னதியில் தங்களுக்கென்று தனியாக ஒரு பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு என்று செட்டில் ஆகும் முயற்சிகள் தெரிகின்றன,



நான் இங்கு எழுதவந்தது தீட்சதர்களை பற்றி இல்லை.



சைவத்தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் ஒதுவார்களை பற்றி.
ஒரு ஆய்வில் படித்த,மேலும் ஓரு ஒதுவாரிடம் இருந்து அறிந்தகொண்டவை இங்கே.



உலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் மிகவும் தொன்மையான சமயம் சைவ சமயம். சைவ சமயத்துக்கு அடிப்படையான நூல் பன்னிரு திருமுறைகள்.




இப் பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தவர்கள் 27 அருளாளர்கள். அவர்கள் 4,286 பாடல்களை அருளியுள்ளனர். தமிழகம் செய்த தவப்பயனால் கிடைத்தவை பன்னிரு திருமுறைகள். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேந்தனார் உள்பட இருபத்தேழு அடியார்களால் அருளிச் செய்யப்பட்டவை.


"எனதுரை தனதுரையாக' என சம்பந்தர் கூறுவதால், திருமுறைகள் யாவும் இறைவன் வாக்காகும். கல்லா மாந்தரையும் வன்னெஞ்சரையும் கசிவிக்க வல்லவை.


"மெய்யன்போடு காதலாகிக் கசிந்து ஓதுபவர்கட்கு' இம்மைச் செல்வங்கள், மறுமைப் பயன்கள், வீடுபேறு ஆகிய நலன்களையும் செம்மையாக அளிக்க வல்லவை.


பல லட்சம் பாடல்களில் செல்லுக்கும், மண்ணுக்கும் உணவானவை போக 796 பதிகங்கள்தான் எஞ்சியிருக்கின்றன. சைவ சமய நூல்களில் பன்னிரு திருமுறைகள் "தோத்திரங்கள்' என்றும், பதிநான்கு மெய்கண்ட நூல்கள் "சாத்திரங்கள்' என்றும் வழங்கப்படுகின்றன.


தோத்திரங்கள் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. சாத்திரங்கள் அறிவை அடிப்படையாகக் கொண்டவை என வரலாறு கூறுகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டது தமிழ். ஆனால், தமிழ்ப் பண்ணிசை பாடும் ஓதுவாமூர்த்திகளின் நிலை பரிதாபத்துக்குரியது.


பித்தா பிறைசூடி பெருமானே என தமிழ்ப் பாடல் பிறந்த ஊர்களில் ஓதுவாமூர்த்திகளின் எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் குறைந்து வருகிறது.



நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஓதுவாமூர்த்திகள் உலகோர் யாவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழப் பாடுகிறார்கள். பண்ணாங்கம், சுத்தாங்கம், சரிதம், முகவுரை, தாளம் இவை அனைத்தும் முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் தமிழ் இசையைப் பரப்பியவர்கள் ஓதுவாமூர்த்திகள்.


ஊர்தோறும் சென்று அங்குள்ள திருக்கோயில்களில் தேவார, திருமுறைகளைப் பாடி, சமயத் தொண்டு செய்து தமிழ் வேதத்தின் அற்புதங்களை உலகறியச் செய்தவர்கள்.


திருத்தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்று கூறுகிறோம். ஆனால், அப்பாடலாகிய தமிழிசைக்கு உரிய பண்ணிசை பாட ஓதுவாமூர்த்திகள் இல்லை. அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையினரால் எவ்விதப் பலன்களும் கிடைக்கவில்லை.


திருவிழாக் காலங்களில் திருக்கோயில்களில் தமிழ்ப் பண்ணிசை பாட வாய்ப்பளிக்க வேண்டும். அறநிலையத்துறையில் உள்ள சில அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளால் திருமுறைகளின் அருமை, பெருமை அறியாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓதுவாமூர்த்திகளே கோயில்களை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற அதிக வருவாய் உள்ள கோயில்களில்கூட ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலை தொடர்கிறது.


சென்னை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட 16 இடங்களில் உள்ள அரசு இசைப் பள்ளிகளில் தேவார இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, அரசு பல லட்சம் செலவு செய்கிறது. ஆனால், மாணவர்கள் தேவார இசைப் பயிற்சிக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.



நிலைமை இப்படியிருக்க, ஒவ்வொரு கோயில்களுக்கும் தகுந்தவாறு தமிழ்ப் பண்ணிசை ஓதுவார்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் ஓய்வுபெற்றால் மாதம் ரூ.750 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதுவும், ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே இந்த ஓய்வூதியம். அவர்களில், பலருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதில்லை.


அனைவரும் மண்ணில் நன்கு வாழ்வதற்காக தமிழ்ப் பண்ணிசை பாடியவர்களின் நிலை வேதனையாக உள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் ஓதுவாமூர்த்திகளே இல்லாத நிலை ஏற்படும். இது தமிழுக்கு நேரும் இழுக்கல்லவா? இந்நிலை வருவதற்கு முன் அரசு கண் விழிக்க வேண்டும்.


ஓதுவாமூர்த்திகள் இல்லாத திருக்கோயில்களில் ஓதுவார்களைக் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். காலநிலை கருதி போதிய ஊதியம் வழங்க வேண்டும்.



தமிழ், தமிழ் என கூக்குரலிட்டால் போதாது. கோயில்களில் தமிழில் வழிபாடு நிகழ்த்த ஓதுவாமூர்த்திகள் வேண்டாமா? இதற்கு உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், பிறகு சம்ஸ்கிருதம் தானே கோலோச்சும். இதை நாம் உணர வேண்டாமா?



தமிழுக்காகத் தொடர்ந்து வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஓதுவாமூர்த்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்ற பின் ரூ.3 ஆயிரமாவது ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணி செய்தால் மட்டுமே ஓய்வூதியம் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, பணிசெய்த ஓதுவார்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


திருவிழாக் காலங்களில் தமிழ்ப் பண்ணிசை வாணர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். தேவாரப் பாடசாலையில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பயிற்சி பெற்றவுடன் கோயில்களில் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும்.



இவற்றையெல்லாம் உடனடியாகச் செய்யும்பட்சத்தில் தமிழைப் பரப்பும் ஓதுவாமூர்த்திகளின் எதிர்காலம் சிறக்கும், தமிழும் வளரும்.



இப்படி சொல்கிறது ஆய்வுக்கட்டுரை.


தமிழை காக்கும் ஓதுவார்களுக்கு நிரந்திர பணி வழங்க நம்ம அறநிலையதுறை உடனே நடவடிக்கை எடுக்கணும். இல்லையென்றால் அடுத்த தலைமுறைக்கு தேவாரம், திருவாசகம் என்றால் என்னவென்று தெரியாமல் போய்விடும்.



செய்தி # 2





எவிடன்ஸ் என்னும் அரசுசாரா நிறுவனம் கோவில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி விவரம் ஒன்றை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த புள்ளிவிவரம் இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும்,இந்த கணிணி யுகத்திலும் தொடர்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது..



85 ஊராட்சிகளில் உள்ள 69 கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கோயில்களின் சன்னிதானமும் 56 கோயில்களில் அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கோயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.



52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள் வடம் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில் தலித்துகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்ற சடங்குகளின்போது 60 கோயில்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.



பாதிரியார்கள், பூசாரிகளால் பாகுபாடு காட்டப்படும் கோயில்கள் 65 என்கிறது அப்புள்ளிவிவரம்.



இது போன்ற சாதிய பாகுபாடுகள் நமது இந்து கோவில்களில் மட்டும் அல்ல, கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் இருக்கின்றன என்பதும் உண்மை.



'தலித்' என்று ஒரு வரியில் சொன்னாலும், பள்ளர்,பறையர் என்று சாதிய வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியிலும் இருக்கின்றன.இத்தைகைய வேறுபாடுகளை களைவதற்கு பதில், ஒவ்வொரு பிரிவும் ஒரு 'தலைவருடன்' , தங்களுக்குள்ளாகவே மேலும் பிளந்து இருக்கிறார்கள்.



கிராமப்புற தலித் மக்களுக்கு அரசு தரும் பல்வேறு சலுகைகளையும், இடஒதுக்கிடு போன்ற வாய்ப்புகளையும் பற்றி, அவர்களுக்கே முழுமையாய் தெரியவில்லை என்பதும், அதற்க்கான வாய்ப்புகள் பற்றி மருந்துக்கு கூட தெரியவைக்காமல், அந்த மக்களை வெறும் 'வாக்கு வங்கி'களாக முன்னேற்றுவதில் பெரும்வெற்றி கண்டிருக்கிறார்கள் நமது அரசியல் தலைவர்கள் அனைவரும். தங்களை தலித் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியவாதிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்.



(நன்றி, இனி, அடுத்தவாரம்)



-இன்பா

Read More...