பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 31, 2013

தனக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயம்

முதலில் அந்தப் படம் வரக்கூடாதுன்னு பெரிய கலாட்டாவே நடந்தது. நான் இந்திராகாந்திவரை தந்தியெல்லாம் கொடுத்து ஒரு வழியா படம் ரிலீஸ் ஆச்சு. முஸ்லீம்கள இந்தபடத்துக்கு எதிரா கெளப்பிவிட பெரிய சதியே நடந்தது. தியேட்டரில் பெரிய கூட்டம். ஒவ்வொருத்தரும் கலாட்டா பண்ணணும்னு காத்துட்டு இருந்தாங்க. உடனே டைட்டில் சாங் 'அல்லா அல்லா'ன்னு ஆரம்பிச்சது பாருங்க. ஒரே கைத்தட்டுதான். விஸ்வநாதன் பாடியிருக்கிறார். அந்தப் பாட்டு படத்தையே காப்பாத்திடுச்சு. - வாலிப வாலி புத்தகத்தில் சோ

...திமுகவினர் கோபம் மேலும் அதிகமாகவே தியேட்டரிகளில் ரகளைக்கு ஏற்பாடு செய்தார்கள். இஸ்லாமுக்கு விரோதமான படம் என்ற ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு சில இயக்கங்களை கழகத் தலைவர்கள் தூண்டினார்கள். ஆனால் ஆதாரமே இல்லாத இந்தப் புரளி ஒரு சில நாட்களிலேயே பொடிப் பொடியாகி வீழ்ந்தது - அதிஷ்டம் தந்த அனுபவங்கள் - சோ

விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில், மாநில அரசு எடுத்த நடவடிக்கை சரியே, ஒரு அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை ஏற்றுக் கொள்ள முடியாது...பொதுமக்கள் நலன் உள்ள பக்கமே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு திரைப்படம் சிலரது நம்பிக்கைகளுக்கு விரோதமாக இருக்கிறது என்றால், அந்தப் படத்தை தடை செய்வதில் தவறில்லை" - டிவி நிகழ்ச்சியில் சோ



ஒரே குட்டையில்...

Read More...

Wednesday, January 30, 2013

கல்கியின் புதிய அவதாரம்


இந்த வார கல்கி விகடன் சைஸுக்கு வந்திருக்கிறது. "பெரிதினும் பெரிது கேள்" என்று விளம்பரப்படுத்தி. தன்னைப் புதுப்பித்துக்கொள்ள கொண்டுள்ளது என்று சொன்னாலும், Content கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இருக்கிறது.

கையில் எடுத்தால் ரத்னா கபே இட்லி மாதிரி மெல்லிசாக இருக்கிறது. அப்படி தான் இருக்கும், ஆனால் உள்ளே பரப்பளவு அதிகம் என்று சொல்லுகிறார்கள்.இட்லி மெல்லிசு ஆனால் நிறைய சாம்பார் என்று சொல்லுவது மாதிரி !

பல நாள் கல்கி வாசகன் என்ற முறையில் எனக்கு இந்த மாற்றம் வருத்தமே. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதே போல தான் கல்கிக்கும். உள்ளே இருக்கும் பகுதிகளை பார்க்கும் போது அட்டையை கழட்டிவிட்டால் எந்த பத்திரிக்கை என்று சொல்ல முடியாதபடி தான் இருக்கிறது.

கொஞ்ச நாளில் பழகிவிடும் என்றாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. 

ஞாநி ரொம்ப நாள் கழித்து தன்னுடைய ஓ-பக்கங்களில் ராகுல் காந்தி பற்றி நகைச்சுவை கட்டுரை எழுதியுள்ளார் :-)


பிகு: கல்கியின் டிரேட் மார்க் பிள்ளையார் பத்திரிக்கை முழுவதும் தேடினால் கிடைக்கவில்லை. எங்கே சார் ?






Read More...

Tuesday, January 29, 2013

கமலை கிருஷ்ணர் காப்பாத்துவார்

ஜெயலலிதா கமலை சந்திக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி டிவியில் வந்துக்கொண்டு இருக்கிறது. கர்நாடகாவில் போலீஸ் பாதுகப்புடன் ரிலீஸ் என்று செய்தி வந்துவிட்டது.

"கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை"
"சென்சார் போர்டில் முறைகேடு நடந்துள்ளது"

என்று தமிழக அரசு விஸ்வரூபம் தொடர்பாக தன் வாதங்களை நீதிமன்றத்தில் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.

சோ தன்னுடைய பத்திரிக்கையில் இதை கடுமையாக சாட வேண்டும். முடிந்தால் அட்டைப்பட கார்ட்டூன் போட வேண்டும். முன்பு துக்ளக் படத்துக்கு இதே மாதிரி தான் கழக தோழர்கள் ஆர்பாட்டம் செய்தார்கள். தற்போது விஸ்வரூபத்துக்கும் தமிழக அரசு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


கமல் நிச்சயம் ஜெயிப்பார். படத்தில் அடி வாங்கும் போது "கிருஷ்ணா" என்று சத்தமாக கத்துவார். அது அவரை காப்பாத்தும். ஜெயித்தால் எதிர் அணிக்கு பிரியாணி வாங்கி தருவார்.

Read More...

விஸ்வரூபம் கோர்ட் சீன்


கமலுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

Read More...

விஸ்வரூபம் - தப்பும் தீர்ப்பும்


கமலுக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் ஈடு செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. 30 கோடி என்று செய்திகள் சொல்லுகிறது. பணத்தைவிட பெரிய இழப்பு அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள டென்ஷன் தான்.

பாரதிராஜா, ரஜினி, அஜித் என்று பலர் குரல் கொடுத்தாலும், ஒட்டு மொத்த சினிமாக்காரர்கள் யாரும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. விஜய், சூர்யா, மற்ற இயக்குனர்கள் எல்லாம் வாய் மூடி மௌனமாக இருப்பதற்கு காரணம் நாளை அவர்கள் படங்கள் பிரச்சனை இல்லாமல் ஓட வேண்டும் என்ற கவலையும் பயமும் தான். கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற பிரச்சனைக்கு ஒரு மாநிலத்தையே எதிர்த்து ஒட்டுமொத்தமாக உண்ணாவிரதம் இருந்தவர்கள் இன்று சின்ன self made குழுக்களுக்கு பயந்துக்கொண்டு சும்மா இருப்பது வேதனை கலந்த வேடிக்கை. ரஜினி, கலைஞருடைய அறிக்கைகள் கூட ஜாக்கிரதையாக எழுதப்பட்டிருக்கிறது. பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று அறிவுரை. இதற்கு இவர்கள் பேசாமலே இருந்திருக்கலாம்.

சென்னை உயர்நீதி மன்றம் டைம் எடுத்துக்கொண்டு திங்கள் அன்று தீர்ப்பு வழங்கும் என்று சொன்னது. ஆனால் படத்தை பார்த்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்காதது பலருக்கு வியப்பாக இருந்தது. பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியுமா என்று பாருங்கள் என்று சின்ன அட்வைஸ் கொடுத்துள்ளார். நீதிமன்றம் சட்டம் என்ன சொல்லுகிறது என்று பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும் ஏன் அவ்வாறு வழங்க வில்லை என்பது கமலை பிடிக்காதவர்கள் கூட கேட்கும் கேள்வி. சின்ன குழுக்கள் செய்யும் இது போன்ற பிளாக் மெயில்களுக்கு நீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுக்க வேண்டும். அதையும் மீறி பொது மக்களுக்கு பாதிப்பு வரும் என்றால் அரசு மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் இந்த குழுக்களுக்கு இல்லை.

இரண்டு நாட்களுக்கு முன் பாரதிராஜாவையும் பார்த்து உன் குடுமபத்தை வைத்து விபச்சாரம் செய்கிறாயா ? என்றும் ஸ்ருதி ஹாசனை நோக்கி ’’நீ அப்பனுடன் படுக்க விரும்புகிறாயா?’’ என்று ஆபாசமாக பேசிய பி.ஜைனுலாபிதீன் தன் பேச்சை குரானின் வாசகங்களுடன் தன் பேச்சை ஆரம்பிக்கிறார். எல்லா இஸ்லாமிய சகோதர்களும் இதை கண்டிக்க வேண்டும். இதுவும் ஒரு வித தீவிரவாதமே. இது போன்ற செயல்களுக்கு அரசும், நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இன்று கமலுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பாக்கிறேன். வரவில்லை என்றால் கமல் தன் தரப்பு நியாயத்தை எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். 15 நாள் தடை, தீர்ப்பை தள்ளி போடுவது எல்லாம் Just buying time.

மும்பை தாக்குதலில் கசாப் மற்றும் பல தீவிரவாதிகளை நாம் 'லைவாக' பார்த்தோம். அதற்கு ஏற்பாடாத Law and Order பிரச்சனை எப்படி ஆப்கான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க வீரர்களுக்கு நடக்கும் சண்டையை காண்பிக்கும் போது ஏற்படும் ?

கமல் தப்பே செய்யவில்லை என்று சொல்ல மாட்டேன். நிறைய செய்யவில்லை என்றாலும் ஒன்றை செய்தார். அது படம் வருவதற்கு முன் அதை முஸ்லீம் தலைவர்களுக்கு போட்டு காண்பித்தது. இது ஒரு ஆபத்தான ப்recedent. இந்த பிரச்சனைக்கு அது தான் முக்கிய காரணம்

மற்றபடி இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கொஞ்சம் ஈகோ நிறைய அரசியல்.

Read More...

எச்சரிக்கை

சரக்கு மாஸ்டர் கேட்டுக்கொண்டதால் 'ஃபேஸ் புக்கில்' ஒரு கிளை திறந்திருக்கிறேன்.

 அங்கேயும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அட்ரஸ்: http://www.facebook.com/idly.vadai

Read More...

Monday, January 28, 2013

சன்டேனா இரண்டு (27-1-13) செய்திவிமர்சனம்




இந்த வாரம்....விஸ்வரூப விவகாரங்கள்.



செய்தி # 1





கே..ஜவாஹிருல்லா - தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் முகமான மனித நேய மக்கள் கட்சியின் தலைவர். ராமனாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

எல்லாவற்றும் மேலாக இன்று எல்லா மீடியாக்களிலும் 'விஸ்வரூபம்' பேசப்படுவதற்க்கு மூலக்காரணமாக இருப்பவர். அப்படத்தின் தடைக்கல் இவர்தான்.


“விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர். இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன்.

இஸ்லாமியர்கள் கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள்,தீவிரவாதிகளின் தலைவர் 'மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள்' என்று கூறுவது” என குற்றச்சாட்டுக்ளை அடுக்குகிறார் ஜவாஹிருல்லா.


"கமலின் விஸ்வரூபத்தை எதிர்ப்பதன் மூலம் நீங்கள் விளம்பரம் அடைய முயற்சி செய்கிறீர்களா?" என்ற கேள்விக்கு,

"என் முகம் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களால் அறியப்பட்டது. கமல் மூலம் பிரபலம் அடைய எனக்கு எந்த அவசியமும் இல்லை"
என்கிறார் ஜவாஹிருல்லா.



"விஜயகாந்தின் பல படங்களில் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அப்போது ஏன் இது போன்ற எதிர்ப்பை காட்டவில்லை." "துப்பாக்கி படத்தை எதிர்த்து ஏன்" போன்ற கேள்விகளுக்கு,



"அவையெல்லாம் கமர்ஷியல் படங்கள். துப்பாக்கி பார்த்துவிட்டு, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் எங்களிடம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தயாரிப்பில் மன்னிப்பு கேட்டார்கள். நாங்கள் குறிப்பிட்ட காட்சிகளை உடனே நீக்கிவிட்டார்கள்." என்று 'புதிய விளக்கம்' அளித்து இருக்கிறார் இவர்.
ஹேராம் படத்தில் முஸ்லீம்கள் கமலின் மனைவியாக வரும் ராணி முகர்ஜியை கூட்டமாக சேர்ந்து கற்ப்பழிப்பதாக வரும் காட்சியையும் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார் ஜவாஹிருல்லா.




கமல் வேலை மெனக்கெட்டு இவருக்கு பிரிமியர் ஷோ காட்ட, அதை பார்த்துவிட்டு படத்தை பற்றி ஒரு வரியில் விமர்சனம் செய்து இருக்கிறார் ஜவா.

"படத்தில் பாடல்கள் இல்லை. காமெடிக் காட்சிகள் இல்லை.அதனால் இஸ்லாத்துக்கு எதிரான ஆவணப்படம் போல இருக்கிறது. மக்கள் பொறுமையாக இப்படத்தை உட்கார்ந்து பார்ப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது".

படத்தில் குத்து பாடல்கள் எதையாவது எதிர்பார்த்து ஜவாஹிருல்லா பெரிதும் ஏமாந்துவிட்டார் என்று தோன்றுகிறது.

"தொலைக்காட்சிப் பெட்டி சாத்தானின் பெட்டி" - இது இவர் அடிக்கடி மத பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் டயலாக். "இஸ்லாமிய மதப்படி டிவி, சினிமா பார்ப்பது போன்றவை பெரும் குற்றமாகும்" - இதுவும் இவரின் கூற்றுதான். .

இதே ஜவாஹிருல்லா, 'ஹே ராம்" படத்தில் வரும் 'அந்த மாதரி' காட்சிகளை கண்டு இருக்கிறார். கஜோல் அகர்வால ஆட்டம் போட்ட 'துப்பாக்கி' பார்த்து இருக்கிறார். 'விஸ்வரூபம்' பார்த்துவிட்டு எதிர்க்கிறார். போதாகுறைக்கு படத்தை விமர்சனம் வேறு செய்கிறார்.

இஸ்லாமிய அமைப்புகளின் தலைமைப்பொறுப்பில் இருந்துகொண்டு சினிமா பார்ப்பது, அதை விமர்சிப்பது போன்ற இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட இவர்களுக்கு இஸ்லாமிய மதப்படி என்ன தண்டனை? இவர்களுக்கு எந்த "ஜமாத்" தண்டனை தரப் போகிறது?


செய்தி # 2







விஸ்வரூபம் படத்தில் வருவது போலவே ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மத உணர்வு முஸ்லீம் குழந்தைகளிடம் தீவிரமாக உருவாக காரணமாக இருப்பவை...மதரசா எனப்படும் இஸ்லாமிய கல்விக்கூடங்கள். நம்முடைய வேத பாடசாலை போன்றது எனக்கூறலாம்.


மதரஸாவின் அடிப்படை நோக்கம்....குரானின் வழிப்படி மனிதனை நெறிப்படுத்துவது, மார்க்க கல்வி மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை ஆகும். மேலே சொன்ன நாடுகளில் சில பகுதிகளில் மதரஸாக்கள் தீவிரவாதம் வளர்க்கும் பாசறைகளாக இருப்பது நாம் அறிந்ததே.


நம் இந்தியாவில் முதல்முதலாக மதரஸாக்களை கொண்டு வந்தவர்....மௌலானா அப்துல்பாரி.


மேற்கத்திய கல்வி முறைகளுக்கு எதிராக இஸ்லாமிய மதரசாக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் இஸ்லாமிய அறிஞர் மௌலானா அப்துல்பாரி.


மௌலானா அப்துல்பாரி, காந்தி அவர்களின் சிறந்த நண்பர். நூறுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை உருது மொழியில் எழுதியவர்.. கிலாபத் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். காந்தியுடன் இணைந்து இந்து, முஸ்லிம் ஒற்றுமை குறித்து பிரச்சாரம் செய்தவர்.


இந்து - முஸ்லிம் உறவுகள் குறித்து காந்திஜி எழுதிய கடிதங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னால் லண்டன் நகரில் ஏலம் விடப்பட்டன. இந்த கடிதங்களை ஏலம் எடுத்தவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த சர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோர்.



மௌலானா அப்துல்பாரிக்குக் காந்தி இந்தியிலும், உருது மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் ஜெயிலில் இருந்த போது எழுதிய கடிதங்களும் இதில் அடங்கும்.


இந்து - முஸ்லிம் கலவரங்களுக்கு எதிராக, காந்திஜி நவகாளி யாத்திரையை மேற்கொண்ட போது, காலில் செருப்பு அணிவதை தவிர்த்தார்.


அதற்க்கு அவர் சொன்ன விளக்கம்,”நாம் கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது மாதாகோவிலுக்கோ செல்லுமுன் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு நுழைகிறோம். அதாவது புனித இடங்களில் நாம் செருப்பு அணிவதில்லை.

நானோ தரித்திர நாராயணர்களைப் பார்க்கச் செல்கிறேன். அவர்களுடை உற்றார் உறவினர்கள் சூரையாடப்பட்டனர். அவர்களுடைய குழந்தைகள், மனைவிமார்கள் கொலை செய்யப்பட்டனர். மானத்தைக்காப்பாற்றிக்கொள்ள போதிய ஆடையும் அவர்களிடத்தில் இல்லை. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கத்தான் இந்த மண்ணில் நடந்து போக இருக்கிறேன். எனவே என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு இது புனித யாத்திரையாகும். அப்படியிருக்க இந்த யாத்திரையில் நான் எப்படிக் காலணியை அணிய முடியும்?”
என்று கூறினார் காந்தி.


அண்டை நாடுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும், எத்தனை பயங்கரவாதிகளை காஷ்மீர் வழியாக அனுப்பினாலும், பரந்துப்பட்ட நமது இந்தியாவை மத/இன ரீதியாக துண்டாடி விடலாம் என்று யார் நினைத்தாலும் அது கானல் நீரே. அதற்கு காரணம்...காந்திஜி அவர்களின் கட்டமைப்பு.


கமல்ஹாசன் தனது "ஹே ராம்" படத்தில் அடி நாதமாக சொல்லி இருப்பதும் இந்த கருத்தைதான்.



(நன்றி, இனி, அடுத்தவாரம்)



-இன்பா

இந்த வாரம் ஒரு நாள் டிலே. மன்னிக்கவும்.

Read More...

Friday, January 25, 2013

விஸ்வரூபம் - FIR


அன்புள்ள இட்லிவடை,

முதலில் எனக்கு FIR எழுத வாய்ப்புக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நான் கமல் ரசிகன். அதனால் கொஞ்சம் பயாஸ் இருக்கும்.

படம் ஆரம்பிக்கும் போது இளகிய மனம் படைத்தவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி நம்மைத் தயார்படுத்தியிருக்கிறார்கள். சரி ரத்தம் கொஞ்சம் அதிகமாக வரும் போல என்று சுதாகரித்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தால்...


டான்ஸ் மாஸ்டராக கமல் ஆடும் நடனம், அவர் செய்யும் முக பாவம் எல்லாம் நாம் கமலுடன் தமிழ்நாட்டில் பிறந்தோம் என்று பெருமை கொள்ள செய்கிறது. தன் மனைவி அனுப்பும் டிடெக்டிவ்வை கமல் டாபாய்க்கும் காட்சி, அதற்கு பிறகு வில்லன் கும்பலிடம் மாட்டிக்கொள்ளுவது... தொழுவதற்குக் கைக்கட்டை அவிழ்த்த பிறகு கமல் போடும் சண்டை விவரிக்க ஒரே ஒரு வார்த்தை - பிரமாதம். அதே ஷாட்டை கொஞ்சம் ஸ்லோ மோஷனில் திரும்ப காட்டும் போது நம்மை அறியாமல் கை தட்டுகிறோம். கமல் என்ற நடிகருக்கு விழும் கைத்தட்டல்

'அட கமலா இப்படி?" என்று நமக்குத் தோன்றும் சந்தேகத்தை உடனே புரிந்துக்கொண்டு ஃபிளாஷ் பேக். கதை ஆப்கானிஸ்தான், ஜிகாத், நாட்டோ.. அமெரிக்க தாக்குதல் என்று ஆங்கிலப் படத்துக்கு நிகராக எடுத்துள்ளார். ஆனால் அங்கே எல்லாம் கமல் என்ற கலைஞரின் மேதாவித்தனம் வந்து அதைக் 'கமல்'படமாக்கி நம்மை சலிப்படையச் செய்கிறது. இதற்கு பிறகு இயக்குனர் கமல் வந்துவிட்டார்...

கமலின் தோற்றம் ஹே ராம் படத்தில் ஷாருக்கான் தோற்றதை நினைவுபடுத்துகிறது. அமெரிக்கக் கருவியைப் பற்றித் தன் தோழருடன் பேசுவது குருதிபுனலை நினைவுப்படுத்துகிறது. வில்லன் தொண்டை கரகரப்பாகப் பேசுவது ஆளவந்தான் படத்தில் அவர் கேன்சர் மாமா தொண்டை சரியில்லாமல் பேசுவதை நினைவுப்படுத்துகிறது. FBIவிட தான் புத்திசாலி என்று காண்பித்துக்கொள்ளுவது வேட்டையாடு விளையாடை நினைவுப்படுத்துகிறது. ஆங்காங்கே கடவுள் பற்றி வரும் வசனங்கள் பல கமல் படங்களை நினைவுப்படுத்துகிறது.

புறா நல்ல கதாப்பாத்திரம். ஆனால் அதை வேஸ்ட் செய்துவிட்டார். அதை வைத்துக்கொண்டு நிறைய செய்திருக்கலாம்.

சரி இஸ்லாமியர்கள் பிரச்சனைக்கு வரலாம். துப்பாக்கி படத்தில் ஏதோ ஒன்று இரண்டு சீன் வந்ததற்கு பல இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்கிறார்கள் என்று பலர் சொன்னார்கள். அடிக்கடி விவாதங்களில் வரும் கவிஞர் கூட இது கண்டிக்க வேண்டிய செயல் என்றார். விஜய்யும் அவர் அப்பாவும் பயத்தினால் மன்னிப்பு கேட்டார்கள்.

ஆனால் இந்த படத்தில் முழுவதும் இஸ்லாமியர்களை வைத்து எடுத்துள்ளார். அவர்கள் பழக்க வழக்கங்கள், துப்பாக்கியுடன் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதைப் போலக் காண்பித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இப்படித்தான் இருக்கும் என்பது போலக் காண்பித்துள்ளார். தற்கொலை தாக்குதலுக்கு முன் தொழுவது, காட்டுமிராண்டிகளைப் போலத் தப்பு செய்தவர்களை தூக்கில் போடுவது என்று பல காட்சிகள். மனிதர்களின் கழுத்தை அறுப்பது, பெண்கள் முகத்தை முழுவதும் மூட வேண்டும்... தங்கள் குழந்தைகளின் ஆசைகளை மதிக்காமல் அவர்களை தீவிரவாதிகளாக ஆக்குவது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.


இதனால் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று சொல்லுவது எல்லாம் பேத்தல். ஆப்கானிஸ்தானில்தான் இப்படி நடக்கிறது என்று கமல் தெளிவாகச் சொல்லிவிட்டார். இஸ்லாமியர்கள் இந்த நிஜத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இது தான் தீவிரவாதிகளின் உண்மையான முகம்.

பின்லேடன் வரும் காட்சிகள் சிரிப்பு வருகிறது. அட அவ்வளவு முட்டாளா அந்த ஆசாமி என்று!. தமிழர் ஒருவர் அங்கே இருக்கிறார் என்று நம் மனசு நம்ப மறுக்கிறது. வில்லன் மாதிரி வரும் ஒத்தைக் கண் ஆசாமி ஒரு வருஷம் தமிழ்நாட்டில் இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டார் என்று சொல்லுவது எல்லாம் நல்ல தமாஷ். ஆனால் அவர் இருந்த இடங்கள் மதுரை, கோவை, அகமதாபாத் - எல்லாம் இஸ்லாமியர்கள் குண்டு வைத்த இடம்.


FBI விசாரணையின் போது 'எங்க கடவுளுக்கு நாலு கை' என்று கமல் மனைவி பேச அதற்கு அந்த பெண் அதிகாரி 'அப்படி என்றால் எப்படி சிலுவையில் அறைவார்கள்' என்று கேட்க அதற்கு அப்படி எல்லாம் செய்ய வேண்டாம் அவரைத் தண்ணீரில் முழுகடித்துவிடலாம் என்ற பதில்... இந்தக் காட்சியை எடுக்கும் போது 95 கோடி செலவில் படம் எடுக்கிறோம் என்று அவர் நினைவில் இருந்ததா என்று தெரியவில்லை.


சொல்ல மறந்துவிட்டேன் ஆண்டரியா, நாசர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, மியூசிக் எல்லாம் நன்றாக இருக்கிறது. சொல்ல மறந்த இன்னொன்று. இது ஒரு த்ரில்லர் படம். ஆமென்.



என்னுடைய மார்க் 6.5/10

(இட்லிவடை வேண்டும் என்றால் கூடவோ குறைத்தோ போட்டுக்கொள்ளலாம்)

நன்றி
இப்படிக்கு
ஒரு கமல் ரசிகன்
UK


விஜயின் அப்பா தன் மகன் அடுத்த படத்தில் இஸ்லாமியராக நடிப்பார் என்று வாக்கு கொடுத்தார். கமல் விஸ்வரூபம் பார்ட்-2வில் இஸ்லாமியாராக நடிக்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வேண்டும் !



Read More...

விஸ்வரூபம் - ரஜினி அறிக்கை




அடுத்து யார் ?

Read More...

விஸ்வரூபம் தடை சரியா ?

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்புக்கள் மறியலில் ஈடுபடும் அதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று பயந்து தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. இன்று வந்த ஹிந்து தலையங்கம் இந்த தடை ஏன் தப்பு என்று அழகாக சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் கூடவே DAM 999 என்ற படத்துக்கு தடை சரி உச்ச நீதி மன்றம் தீர்ப்பும், ஞாநி அவர்கள் நாடகங்களுக்கு போலீஸ் அனுமதி பற்றிய தீர்ப்பும் வந்துள்ளது.

உலகில் பயங்கிரவத செயல் நடக்கும் போது அதையும் இஸ்லாமியர்கள் இந்த மாதிரி கண்டிக்க வேண்டும். பாகிஸ்தான் எல்லையில் நம் ராணுவ வீரர்கள் தலையை துண்டிக்கும் போது இவர்கள் எங்கே போனார்கள் ? ஆனால் துப்பாக்கியில் விஜய் தீவிரவாதிகளை வீழ்த்தும் போது உடனே பொங்கி எழுகிறார்கள்.

ஆந்திரா மாநிலத்தில் ஓவைசி என்ற ஒரு பயங்கிரவாதி இந்துக்களை அழித்துவிடுவேன் என்று சொன்ன போது எங்கே போச்சு சட்டம் ஒழுங்கு ? ஆனால் அவர் ஜாலியாக வெளிநாடு, ஆஸ்பத்திரி என்று சுத்துகிறார். அவரை பற்றி தினமும் டிவியில் விவாதிக்கும் எழுத்தாளர்கள் கண்டுகொள்ளுவதே இல்லை.

மேலே சொன்ன செய்திகள் எல்லாம் நிஜம். ஆனால் கற்பனையாக சினிமா எடுத்தால் ( இத்தனைக்கும் சென்சார் சான்றிதழ் கொடுத்திருக்கிறது ) சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று சொல்லுவது காமெடியாக உள்ளது.

விஜய் மாதிரி அடுத்த படத்தில் கமல் தன்னுடைய பிள்ளையை நடிக்க வைப்பேன் என்று சொல்லி சமாதனமும் செய்ய முடியாது.

நம் முன்னாள் முதலைமைச்சர், பெரியார், கமல் ... இந்துக்களின் உணர்வுகளை பல முறை ஒரு ஃபேஷனுக்காக தங்களை முற்போக்கு என்று காண்பித்துக்கொள்ள புண்படுத்தியுள்ளார்கள்.

கமல் என்ற 'கலைஞரை' இட்லிவடை சப்போர்ட் செய்கிறது.

இந்து மதத்தினரின் சகிப்புத்தன்மைக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்

எச்சரிக்கை: பிற்பகம் FIR வரலாம் !

Read More...

Thursday, January 24, 2013

விஸ்வரூப தரிசனம் கிடைக்குமா?

முழுதாக நிறைவுற்றும் வருமா வராத என்ற நிலையில்.....
 டம்  நாளைக்குக் கண்டிப்பா வெளிவரும் என்று நம்பறேன். லண்டனில் இருக்கும் நண்பர் FIR அனுப்பறேன் என்று சொன்னதைச் செய்வார் என்றும் நம்பறேன். :-)
 

இந்தக் கலைஞனை எல்லாக் கலைஞர்களும் சப்போர்ட் பண்ணனும்.

Read More...

Tuesday, January 22, 2013

பா.ஜ.க தலைவராகிறார் ராஜ்நாத் சிங்

ஆர்.எஸ்.எஸ் ஆதரவால் கட்காரிக்கு இரண்டாவது சான்ஸ் வரும் என்று நினைத்தார். ஆனால் தற்சமயம் அது முடியாது என்று தெரிகிறது. மக்களிடம் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மீது இருந்த மதிப்பு போய் ரொம்ப நாளாகிவிட்டது. ஒரு காலத்தில் அத்வானி போல பெரிய தலைவர்களினால் மரியாதையாக இருந்த கட்சி, ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் அதிகமாக குட்டிச்சுவர் ஆனது.

கட்காரிக்கு எதிராக போட்டியிடப்போவதாக ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி ஒரு கூத்து நடத்தினார். இன்று மாலையில் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா சார்பில் வேட்பு மனு வாங்கப்பட்டுள்ளது. அத்வானிக்கு ஏற்கனவே கட்காரி இரண்டாவது முறையாக வர எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எடியூரப்பா, கட்காரி என்ற ஊழல் பெருச்சாளிகளுக்கு எப்படி ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தருகிறது ?

நல்ல வேளையாக இன்று ராஜ்நாத் சிங் வர போவதாக செய்திகள் வருகிறது. 


டிரவுசர் பாண்டிகளுடன் சகவாசம் இல்லாமல் இருந்தால் தான் பிஜேபி 2014ல் நல்ல எதிர்கட்சியாக வர வாய்ப்பு உள்ளது.

Read More...

புத்தகக் காட்சியில் ஒரு பூம் பூம் மாடு - அநங்கன்


36வது புத்தகக் காட்சிக்குப் போக வேண்டுமென அது ஆரம்பித்தபோதே முடிவு செய்து விட்டாலும் சமீபத்தில்தான் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. வீட்டை விட்டுக் கிளம்பும் போதே வெயில் கொளுத்தியது. புக்ஃபேர் நடந்த YMCA வளாகத்தை அடைந்த போது பயங்கரக் கூட்டமாக இருந்தது. ரொம்ப்ப்ப தூரம் நடந்ததில் வேர்த்து விறுவிறுத்து விட்டது. என்னை மாதிரி வயசான ஆட்கள் ரொம்பவே பாவம் என்று நினைத்துக் கொண்டேன். நீண்ட க்யூவில் நின்று டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும் போது மணி 1ஐக் கடந்திருந்தது. நிறைய பேர் குழந்தைகளை எல்லாம் அழைத்து வந்திருந்தனர். அவை அங்கும் இங்கும் அழுது கொண்டே ஓடிக் கொண்டிருந்தன. எந்த வழியாக நுழையலாம் என யோசித்தபோது முதலில் கண்ணில் பட்டது ’நிவேதிதா’ என்ற பெயர். உடனே அங்கே சென்று வெளியில் நின்றவாறே பார்வையிட்டேன். நண்பர் சொல்லியிருந்த புத்தகத்தைக் காணோம்.

அங்கிருந்தவரிடம் ”ஸ்ரீவில்லிபுத்தூர்’ வந்திருச்சா?” என்றேன்.

அவர், ”ஆன்?” என்றார்.

”ஸ்ரீ வில்லிபுத்தூர் சார், சாருநிவேதிதாவோடது”

”சாரு நிவேதிதாவா? அது யாரு?”



“இது அவரோட பப்ளிகேஷன் இல்லையா? இங்க்லீஷ், தமிழ்ல நிறைய அவரோட புக் வந்திருக்குன்னும், ஸ்ரீ வில்லிபுத்தூர்னு ஆண்டாள் கதையை எழுதியிருக்கிறார்னும் சொன்னாங்களே?”

இப்படிச் சொன்னதும் மிகக் கடுமையாக என்னை முறைத்தவர், ““இங்க அப்படி எதுவும் இல்லீங்க. இது எங்களோடது. நீங்க வேற எங்கயாவது போய் கேட்டுப் பாருங்க” என்று விட்டு, “சார், புக்கை எடுத்தீங்கன்னா அதே இடத்துல வைங்க சார். மாறி மாறி வக்காதீங்க” என்று யாரையோ கடுப்படித்தார்.

என்னிடம் தகவல் சொன்ன நண்பர் வகையாக என்னை கலாய்த்திருக்கிறார் அல்லது அவர் யாரிடமோ ஏமாந்திருக்கிறார் என்பது புரிந்தது. இனியும் இங்கிருந்தால் நம்மையும் ஏதாவது சொல்லி திட்டக் கூடும் என எண்ணியவாறே நகர்ந்தேன். அடுத்து எப்படிப் போவது என்று தெரியாமல் சற்று நேரம் நின்று குழம்பி, பின் இடப்புறம் கடைசியிலிருந்து தொடங்குவோம் என்று அந்தப் பகுதியை நோக்கிச் சென்றேன்.

அதற்குள் வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்தது. கண்ணாடியில் வழிந்த வியர்வையைத் துடைத்து மாட்டினேன். தண்ணீர் குடிக்கலாம் என்று பார்த்தால் வெறும் கேன் மட்டும் தான் இருந்தது. கொசுறாக சங்கிலி கட்டி ஒரு டம்ளர். ”சே” என்று கடுப்பாகி, பையில் கொண்டு வந்திருந்த நீரை எடுத்துக் குடித்தேன். வழியெல்லாம் மக்கள் உட்கார்ந்திருந்தார்கள். சின்னக் குழந்தைகள் வேறு கையில் பலூனுடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. பெண்கள் வழக்கம் போல் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். நான் நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு ஸ்டாலில் கொஞ்சம் பளபளப்பாகப் புத்தகங்கள் தெரிந்தன. சரி என்று உள்ளே போய்ப் பார்த்தேன். ”சிலம்பில் மக்கள் வாழ்வியல்”, ”எனக்கான ஆகாயம்”, ”காற்றில் மிதக்கும் நீலம்”, ”குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல்”, ”கூப்பிடுவது எமனாக இருக்கலாம்” போன்ற தலைப்புகளைப் பார்த்ததும் பிடரி பின்னங்காலில் படும்படி ஓட ஆரம்பித்தேன். என்னிடம் யாராவது புஸ்தகம் எழுதச் சொன்னால் “பென்ஷன்காரர்களின் வாழ்வியல்” என்று அற்புதமானதொரு காவியத்தை என்னால் படைக்க முடியும். பட், யாரும் வாய்ப்புத் தரதே இல்லை.

என் ஓட்டம் ”நாயக்கர்” என்ற தலைப்பிலான கடையைப் பார்த்ததும் நின்றது. பெரியார் பெண்கள் பற்றி எழுதியிருக்கும் நூல் ஏதாவது இருக்குமா என்று உள்ளே சென்று பார்த்தேன். இல்லை, “மாந்த்ரீக மர்மம்”, “மரணச் சுவடி”, ”ஜாதக பூர்வம்”, “காலக் கண்ணாடி” போன்ற தலைப்புகள் என்னை மிரண்டு ஓட வைத்தன. பின்னர் கடைப் பெயரை முழுமையாகப் பார்த்தபோதுதான் தெரிந்தது, இது ராமசாமி நாயக்கர் கடை இல்லை; ரத்தினநாயக்கர் கடை என்பது.

அடுத்து அங்கும் இங்குமாகச் சுற்றினேன்.

ஓரிடத்தில் வற்றல், வடகம், ஊறுகாய் எல்லாம் பாக்கெட் பாக்கெட்டாக விற்றுக் கொண்டிருந்தார்கள். ரொம்ப சல்லிசு. 25 ரூதான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றாக 5, 6 வாங்கிப் போட்டேன். மனைவியிடம் நல்ல பேர் வாங்கலாம் என்ற நப்பாசை தான். ஒருவேளை சரக்கு சரியில்லை என்றால் வசவு விழுமே என்ற கவலையும் ஏற்பட்டது.

வெளியே சேர், டேபிள் போட்டு உட்கார்ந்திருந்த பெண்ணிடம் ”காய்கறி எல்லாம் எங்கே கிடைக்கும்?” என்றேன்.

“என்ன, காய்கறிகள் பத்தின புக்ஸா?”

“இல்லை. அப்பளம், வற்றல், ஊறுகாய் எல்லாம் விக்குறாங்களே, அதான் காய்கறிக்கடை, பழக்கட்டை எல்லாம் இருக்குதா, எங்க இருக்குதுன்னு கேட்கறேன்”

எரித்து விடுவது போல் பார்த்த அந்தப் பெண் ”நீங்க ஆபிஸ்ல போய் கேளுங்க சார்” என்று சொல்லி எதிரே ஓரிடத்தைக் கை காட்டினார்.

சரி, இந்த தடவை இல்லாவிட்டாலும் அடுத்த தடவையாவது பபாஸிக்காரர்கள் கீரைக் கடை, காய்கறிக்கடை, பழக்கடை வைக்க ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை நான்-வெஜ் ப்ரியர்கள் சண்டைக்கு வருவார்கள் என்றால், அதையும் விற்பனை செய்ய ஒரு ஸ்டால் அமைக்கலாம் என்று நான்-வெஜ் ப்ரியர்கள் சார்பாக பபாஸிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அடுத்து நான் ஆய்ந்து ஓய்ந்து நடந்து சென்றபோது “டயல் ஃபார் புக்ஸ்” என்ற ஸ்டால் கண்ணில் பட்டது. அங்கே ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்தவர், வரும் ஒவ்வொருவரிடமும் ஒரு பேப்பரைக் கொடுத்து, ”இந்தியாவில் எங்கிருந்தாலும் போன் மூலமே புக்ஸை வாங்கலாம்” என்று சொல்லிக் கொண்டே வேறு ஒரு ”முக்கியமான பணி”யையும் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஏனோ “இட்லிவடை” ஞாபகம் வந்தது. நீங்கள் தானே ”இட்லிவடை” என்று கேட்க நினைத்து, “இ” என்றேன்.

“ஆமா. ஈஸியா போன் பண்ணி புக்ஸ் வாங்கலாம்” என்று என்னிடமும் சொல்லி, நோட்டீஸ் கொடுத்து விட்டு அவர் தன் “பணி”யைத் தொடர்ந்தார்.

”நந்தி மாதிரி நாம் ஏன் இருப்பானேன்” என்று நினைத்து அவ்விடம் விட்டு அகன்றேன்.

பக்கத்தில் இருந்த ஸ்டாலில் பேய், பிசாசு, பூதம், ”மோகினி”, புத்தகங்கள் இருந்தன. எதிரே ஒரு ஜப்பான் ஸ்டால் இருந்தது.

இவர்கள் இங்கு வந்து என்ன செய்கிறார்கள் என்ற எண்ணத்துடன் அங்கே போய் ”ஹலோ” என்றேன்.

உடனே அங்கிருந்த ஒரு பெண், “சயே ஷிகே உதானோ..” என்று ஆரம்பிக்க எஸ்கேப்.

விகடன், உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு, தமிழினி, வானதி, பழனியப்பா என மாறி மாறி பல ஸ்டால்களைக் கடந்தேன். நிறைய சாமியார் ஸ்டால்கள். சி.டி. ஏதாவது வாங்கலாம் என்று நித்தியானந்தா ஸ்டாலை தேடிப் பார்த்தேன். காணோம். அதனால் மனம் நொந்து ரொம்பவே களைப்பாகி விட்டது. ஒரு ஸ்டாலில் “யாளி”, “டினோசர்” என்ற தலைப்பில் ஏதோ சுவாரஸியமாக எழுதியிருந்தார்கள். வாங்கலாம் என்று பார்த்தேன். விலையைப் பார்த்ததும் மூடி வைத்து விட்டேன். இந்த புத்தகச் சந்தையில் பல நூல்களின் விலை ரொம்பவே அதிகம். விலைவாசி ஏறியிருக்கறதைக் காரணமாச் சொல்கிறார்கள். ”கூட்டம் கூட்டமா மக்கள் வராங்க. ஆனா விற்பனை டல் தான்” என்று ஒருவர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ”கூட்டம் கூட்டமா மக்கள் வர்றது பொழுது போக்க, வேடிக்கை பார்க்கவும், காபி, டிபன் சாப்பிடவும் தானே, புக் வாங்கவா வராங்க?” என்று நான் நினைத்துக் கொண்டேன்.

மற்றபடி இந்த அருமையான, சுகமான, குளுகுளுவான, ஜிலுஜிலுவான புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புக் லிஸ்ட் கீழே:

கேட்டவரம் - அநுத்தமா - அல்லயன்ஸ்

மோர்க்குழம்பு வைப்பது எப்படி? - மோகனா சின்னச்சாமி - அம்புஜா பதிப்பகம்

சுப்ரமண்ய அய்யர் சரித்திரம் - பாவை பப்ளிகேஷன்ஸ்

ஒரு போகியின் சரித்திரம் - அரூப குரூப அவதூதன் - அவதூதா பப்ளிகேஷன்ஸ்

ராஜாம்பாள் - ஜே.எஸ். ரங்கராஜூ - அல்லயன்ஸ்

கடல் பறவைகளின் கள்ள மவுனம் - கலேஷியஸ் மிருகா - மேற்கு பதிப்பகம்

Make hay while sunset - James zhon caliper - baico publications

குஞ்ஞாலி - சாணன் - சணல் பதிப்பகம்

உடைக்கப்படும் இந்தியா - மணி சுப்ர மௌன காதலன் - ஜீரா பப்ளிகேஷன்ஸ்

நான் ஏன் போகியானேன் - ஆங்கில மூலம் : மகேஷ் வாசுதேவ். தமிழில் : மன்னார்சாமி மடேஸ்வரன்

குழந்தைகளைக் கிள்ளுங்கள் - வடக்கு பதிப்பகம்

ஒரு கட்டில் கால் உடைந்த போது (கவிதைகள்) - அசுர குமாரன் - ஒற்றளபெடை பதிப்பகம்.

- இவற்றை எல்லாம் படிக்க பொறுமையையும், நிரந்தரமான மின்சாரத்தையும் அளிக்குமாறு எல்லாம் வல்ல மகர நெடுங்குழைக் காதரை வேண்டி வணங்கி, வெளியே வந்தேன்.

ஸ்டிக்கர் விற்பவர்கள், பபிள்ஸ் பாக்ஸ் விற்பவர்கள், சாணைக் கத்தி மிஷன் விற்பவர்கள், சுண்டல் விற்பவர்கள் என்று பலரும் சூழ ஆரம்பித்தனர். ”வேண்டாம் வேண்டாம்” என்று பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி , எப்படியோ தப்பி வெளியே வந்து ஆட்டோ பிடித்தேன்.

இவர் இட்லிவடையாக இருக்க நிறைய சான்ஸ் இருக்கு !

Read More...

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



அஞ்சலி

Read More...

Monday, January 21, 2013

இராக்கில் ஒரு இந்தியரின் மரணம் - ஜெயக்குமார்

கடந்த மாதம் 29ம் தேதி இரவு எனது கம்பெனியில் இருந்து தொலைபேசி.. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் மேலாளர் ஒருவர் இராக்கிற்கு வேலை விஷயமாய் வந்ததாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து கடந்த 4 நாட்களாக தொலைபேசியோ, ஈமெயிலோ இல்லை எனவும், அவரது தொலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் அவரைக் குறித்து ஏதும் தகவல் சேகரிக்க முடியுமா எனவும் கேட்டு வந்தது. நான் இருப்பது பாஸ்ரா எனும் இடத்தில். அவர் இருப்பதோ தலைநகரான பாக்தாதில்.

மறுநாள் காலை கிளம்பி பாக்தாதை 30ம் தேதி இரவு அடைந்தேன். நான் அங்கு செல்வதற்குள் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறை கண்டுபிடிக்கப்பட்டு உடைத்து திறந்து பார்த்ததில் இறந்து கிடந்திருக்கிறார்.


அவர் ஹோட்டல் காரர்களுடன் இறுதியாகப் பேசியது 25ம் தேதி மாலை. அடுத்த ஒரு வாரத்திற்கான பணம் கொடுத்துவிட்டு அறைக்குள் சென்றவர். நான்கு நாட்களாக அறையில் தங்கி இருப்பவர் தண்ணீரோ, உணவோ கேட்கவில்லையே எனக்கூட ஹோட்டல்காரர்கள் சிந்திக்கவில்லை. அறையில் மேஜையில் அமர்ந்து கம்யூட்டரில் வேலை செய்துகொண்டிருந்துகொண்டு உட்கார்ந்திருந்த தோரணையில் இறந்து கிடந்திருக்கிறார். மாரடைப்புதான் காரணமாக இருக்க முடியும்.


வெளிநாட்டில் குறிப்பாய் இதுபோன்ற குழப்பங்கள் நிறைந்த நாட்டிற்கு வரும்போது தொடர்ந்து அலுவலகத்திடமும், குடும்பத்திடமும் தொடர்பில் இருப்பது எவ்வளவு அவசியம் என இந்த சம்பவம் உணர்த்துகிறது.


அதன் பின்னர் நடந்ததுதான் கொடுமை. கிட்டத்தட்ட 26ம் தேதி இறந்திருக்கிறார். 30ம் தேதி காலை 11 மணிக்கு போலிஸ் உடலை வெளியே எடுத்திருக்கின்றனர். தற்சமயம் இராக்கில் குளிர்காலம் என்பதால் ஹோட்டல் அறைகளின் குளிர்பதன சாதனம் சுடுகாற்றை அனுப்பிக்கொண்டிருக்கும். இறந்த உடனே ஐஸ் பெட்டியில்வைத்தாலே இரு தினங்களில் வாடை வர ஆரம்பித்து விடுகிறது. இவரது அறையில் 30 டிகிரி காற்றில் உடல் நான்கு நாட்களாக இருந்துள்ளது. உடலெல்லாம் ஊதி, தோல்கள் எல்லாம் உரிந்து, கருத்துப்போய்தான் அவரை பிணக்கிடங்கில் பார்க்க முடிந்தது.


அவரது குடும்பத்திற்கு அவரது கம்பெனி ஆட்கள் தகவல் சொல்லிவிட்டு என்னால் ஆன உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

சட்ட ரீதியாக அடுத்து ஆகவேண்டிய காரியங்களை செய்ய ஆரம்பித்தபோதுதான் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன என்பது புரிந்தது.

முதலில் போலிஸ் தரவேண்டிய அறிக்கை.

உடலை முதலில் பார்த்தவர் மற்றும் ஹோட்டல் மேலாளரின் அறிக்கை

மருத்துவமனையின் முதல் தகவல் அறிக்கை

போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடல்கூறு சோதனை

தடயவியல் சோதனை..

இவைகள் எல்லாம் முடிந்த பின்னர் இந்த அறிக்கைகளைக் கொண்டு முதலில் மருத்துவமனை ஒரு இறப்புச் சான்றிதழ் வழங்கும். அந்த சான்றிதழில் மருத்துவத் துறை கையொப்பமிடும்.

அதனைக் கொண்டுபோய் இராக்கின் வெளியுறவுத்துறையில் கொடுத்தால் ஒரு சர்வதேச இறப்புச் சான்றிதழும், உடலை நம் நாட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதியும் வழங்கும்.


அதனை எடுத்துக்கொண்டு இந்திய தூதரகம் சென்றால் அவர்கள் வெளியுறவுத்துறை வழங்கிய சான்றிதழை அடிப்படையாக வைத்து இன்னொரு இறப்புச் சான்றிதழை இந்தியாவில் செல்லத்தக்கதாக வழங்குவர்.


அதன் பின்னர் உடலை இந்தியா எடுத்துச் செல்லவேண்டிய வேலைகளை விமானக் கம்பெனியுடன் இணைந்து செய்யவேண்டும். இது பெரிய விஷயமில்லை.


இராக்கில் இறந்தவர் விஷயத்தில் உடலை இந்தியா கொண்டு செல்லும் அளவில் உடல்நிலை இல்லாத காரணத்தால் நஜஃப் என்றழைக்கப்படும் ஷியா முஸ்லிம்களின் புனித நகரில் அடக்கம் செய்தோம். நஜஃப் நகரம் ஒரு கல்லறை நகரம். அந்த ஊரின் பொருளாதாரமே கல்லறைக்கும், இமாம் அலியின் மசூதிக்கு வருபவர்களாலும்தான். உலகின் மிகப்பெரிய கல்லறைத்தோட்டமாக நஜஃப் நகரம் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் உள்ள பணக்கார ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் நஜஃபில் தங்களது உடலைப் புதைக்க சொல்கிறார்கள். இறந்தவரும் ஷியா பிரிவு இஸ்லாமியர். எனவே கெட்டதிலும் ஒரு நல்லதாக அவரது உடல் அவரது மதப்பிரிவினரின் கடைசி ஆசையான நஜஃபில் புதைக்கப்படுதல் நடந்துள்ளது. அவரது குடும்பத்தினரும் இதை சொல்லிக்கொண்டே இருந்தனர். கர்பெலாவில் உள்ள இமாம் ஹுசைனின் 40வது நாள் எனும் திருவிழாவும் அந்த சமயத்தில் நடந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் இறந்ததையும் குடும்பத்தினர் அதிருஷ்டவசமாக கருதினர். உள்ளூர் நபர் ஒருவர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்கினார்.

இறந்தவர் விஷயத்தில் கிட்டத்தட்ட இராக்கின் முக்கிய புள்ளிகள் பலரும், என்னைப்போன்றவர்களும் இடைவிடாமல் செய்த முயற்சியின் பலனாக இந்த மாதம் 7ம் தேதி உடல் கையில் கிடைத்தது. அதுவும் இராக்கிலேயே அடக்கம் செய்வதாக திட்டமிட்டதால். இல்லையெனில் தடயவியல் சோதனைகள் முடிந்த பின்னரே உடல் வழங்கப்படும். இந்த கேஸ் விஷயத்தில் போன வியாழக்கிழமைதான் தடயவியல் சோதனை முடிவுகள் கிடைத்தன.

இவ்வளவு ஆள், அம்பு, சேனையுடன் நாங்கள் தொடர்ச்சியாக முயன்றதில் கிட்டத்தட்ட 9 நாட்களுக்குப் பின்னர் சோதனை முடிவுகள் வரும் முன்னரே உடலைப்பெற முடிந்தது. ( தடயவியல் சோதனை முடிவுகள் எப்படி இருந்தாலும் நாங்கள் எதுவும் கோரப்போவதில்லை என எழுதிக்கொடுத்திருந்தோம்)


ஒரு சாதாரண இந்தியன் இப்படி ஒரு சூழ்நிலையில் இறந்தால் என்ன ஆகும் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

இந்தியத் தூதரகத்தைப் பொருத்தவரை ஒரு சாதாரண மத்திய அரசு அலுவலகம் மட்டுமே. நாங்கள் காட்டிய முயற்சியில், ஒரு சதவீதம்கூட அவர்கள் முயலவில்லை. முயலவில்லை என்பதைவிட அவர்களுக்கு உள்ளூர் சட்டம் குறித்த எந்தப் புரிதலும் இல்லை. மேலும் புரிந்துகொள்ள முயலவே இல்லை.

ப்ரொசிஜர் அல்லது புரோட்டோக்கால் எனப்படும் எதுவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் முழுக்க முழுக்க உள்ளூர் மொழிபெயர்ப்பாளரின் தயவில் வாழ்ந்து வருகின்றனர். மொழிபெயர்ப்பாளர் இவ்வளவு சீக்கிரம் நடக்காது என்று சொன்னால் அதை நமக்கு திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை மட்டுமே அவர்கள்.

ஒரு இந்தியத் தூதரகம் நமக்கு என்னென்ன செய்ய முடியும்?


முதலில் இறந்தவரின் குடும்பத்திற்கு தகவல் சொல்ல முடியும். ( காவல்துறை முதலில் இந்திய தூதரகத்திற்கே தகவல் தெரிவிக்கிறது)


இறந்தவர்களின் குடும்பத்தினர் இராக் வருவதற்கான வழிமுறைகளை சொல்லித் தருதல். சிக்கல் இருப்பின் தனது பலத்தை உபயோகித்து, அவர்களுக்கு விசா வாங்கித் தருதல்.


அடுத்து செய்ய வேண்டிய வழிமுறைகளை குடும்பத்தினருக்கு சொல்லித் தருதல். உள்ளூரிலேயே புதைப்பதற்கும், அல்லது நம் நாட்டிற்கு உடலை எடுத்துச் செல்வதற்கும்.

சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள உதவுதல்.

இதில் இந்தியாவிற்கு தகவல் சொன்னது தவிர வேறு எந்த விதமான உதவியையும் எங்களால் தூதரகத்திலிருந்து பெற முடியவில்லை.


இறந்தவரின் கம்பெனி இந்தியாவில் பெரிய கம்பெனி என்பதாலும், இறந்தவரின் உறவினர் ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாலும் துணை ஜனாதிபதி, இரு மத்திய அமைச்சர்கள், 4 எம்.பிக்கள் என அரசு எந்திரமே சுறுசுறுப்பாய் இயங்கினாலும், தூதரகத்தினர் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதைத்தவிர வேறு எதையும் செய்யவில்லை.

இந்த சூழ்நிலையில் சாதாரண இந்தியனின் கதி என்னவாய் இருக்கும் என்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

வெளிநாட்டில், அதிலும் குறிப்பாய் அலுவல் விஷயமாக தனியாக பயணம் செய்யும்போது மறக்காமல் குடும்பத்துடனும், அலுவலகத்துடனும் தொடர்பில் இருங்கள்.


தங்கி இருக்கும் ஹோட்டலின் பெயர், அமைந்திருக்கும் இடம், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை குடும்பத்திற்கும், அலுவலகத்திற்கும் தெரியப்படுத்துங்கள்.


எந்தப் பிரயோசனமும் இல்லையெனினும், இந்தியத் தூதரகத்தில் உங்கள் வருகையினை பதிவு செய்யுங்கள். குறைந்தபட்சம் உங்களைப் பற்றிய தகவலாவது தெரியலாம்.


உங்களின் மருத்துவ சம்பந்தமான விஷயங்களையும், மருந்துகளையும் கையில் எடுத்துச் செல்லுங்கள். இராக்கில் பாரசிட்டமாலில் ஆரம்பித்து விக்ஸ் வரை எல்லாமே போலிகள். தேடித்தேடி வாங்க வேண்டும்.

என்ன நடக்கிறது நம்மைச் சுற்றி என்பதைப் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

இந்த சோகத்திலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவெனில் இராக்கியர்களின் அன்பு. தங்கள் கைக்காசை செலவழித்து ஒவ்வொரு இடமாக எங்களுடன் அலைந்தது. தொடர்ச்சியாக விடுமுறையாக இருந்தாலும் அலுவலர்களுக்கு நிலைமையைச் சொல்லி வேண்டிய இடத்தில் கையெழுத்து வாங்கிக் கொடுத்தது. உடலைப் புதைக்கத் தேவையான எல்லா உதவிகளையும் செய்தது. அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்திருந்தால் எப்படி வேலை செய்வார்களோ அப்படி வேலை செய்தது. இறுதிவரை உடனிருந்தது என இராக்கின் மக்கள்,தங்கள் உதவியால் திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.


புதைக்க இடம் ஒருவர் இலவசமாய் தந்தது, மௌல்வி இறந்த சடங்குகள் செய்ததற்கு பணம் வாங்காமல் செய்தது, சில டாக்சிகள் விஷயத்தைக் கேள்விப்பட்டு பணம் வாங்காமல் மருத்துவமனைக்கும், ஹோட்டலுக்கும் அழைத்துச் சென்றது என இறந்த சோகம் தவிர வேறு எதுவும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர்.


Read More...

Sunday, January 20, 2013

சன்டேனா இரண்டு (20-1-13) செய்திவிமர்சனம்


இந்த வாரம்.... மது,மாது.


செய்தி # 1



மங்காத்தா படத்தில் நடிகை திரிஷா மது குடித்துவிட்டு தள்ளாடுவது போல ஒரு காட்சி வரும். படத்தின் பெரிய வெற்றிக்கு 'தல' யை விட தலையாய காரணமே நான் தண்ணி அடிப்பது போன்று வரும் இந்த காட்சிதான் என்கிறார் திரிஷா.

தற்போது திரை அரங்குகளில் ஒடிகொண்டிருக்கும் "சமர்" படத்திலும் அது போன்ற, அவர் குடிக்கும் காட்சி இடம் பெற்று இருக்கிறது.

மங்காத்தா படத்தில் நடிகை திரிஷா மது குடித்துவிட்டு தள்ளாடுவது போல ஒரு காட்சி வரும். படத்தின் பெரிய வெற்றிக்கு 'தல' யை விட தலையாய காரணமே நான் தண்ணி அடிப்பது போன்று வரும் இந்த காட்சிதான் என்கிறார் திரிஷா.



தற்போது திரை அரங்குகளில் ஒடிகொண்டிருக்கும் "சமர்" படத்திலும் அது போன்ற, அவர் குடிக்கும் காட்சி இடம் பெற்று இருக்கிறது.




"நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் கூறினர். அதை நான் இயக்குனர் திருவிடம் தெரிவித்தேன். அதன் பிறகு தான் சமர் படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன்" என்றார்.



"மாடர்ன் பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா என்று கேட்டதற்கு அவர், அது அவரவர் இஷ்டம். அதில் நாம் தலையிடக் கூடாது என்றார் அவர்.



நிஜவாழ்க்கையில் அவர் மது அருந்தும் வழக்கம் உள்ளவர் எனபது தெரிந்ததே. ஒரு புத்தாண்டு கொண்ட்டாடத்தில் ரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு, காவல்துறையினரிடமே அவர் தகராறு செய்து இருக்கிறார்.



சமிபகாலமாக இளம்பெண்கள் மற்றும் கல்லூரிமாணவிகள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் நம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விவரம் பார்த்தேன்.



ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் லேடீஸ் ஹாஸ்டலுக்கு ஒரு மருத்துவ கல்லூரி மாணவியின் பிறந்த நாள் கொண்ட்டாத்திற்க்கு, ஒரு ஆட்டோ முழுவதும் திணறும் அளவுக்கு பீர் பாட்டில்கள் மற்றும் விஸ்கி பாட்டில்கள் ஆர்டர் செய்யப்பட்தை நானே நேரில் அறிந்து இருக்கிறேன்.



எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கி தொடங்கப்பட்ட திராவிட கழகங்கள் "எங்கும் குடி யாவரும் குடி" என்று ஒரு மிகப் பெரிய புரட்சியை(?) நடத்தி, அடுத்த தலைமுறையின் அஸ்திவாரத்தையே அரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.



“விடிந்தும்
தொடரும் இருட்டு
பெண்ணுலகில்.
பண்பாட்டிற்க்கும்
பெண் விடுதலைக்கும்
அர்த்தம் புரியாத காரணத்தால்”.



திராவிட கழகங்கள் வழிமொழிந்த மது கலாச்சாரத்தை பெண் சமுதாயத்தில் முன்மொழிகிறார்கள் த்ரிஷா போன்ற பணத்தில் கொழுத்த சினிமா நடிகைகள்.



வாழ்க திராவிடம்! வளர்க தமிழ்நாடு.


செய்தி # 2







எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி" என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.

தனது கவிதை நூலுக்கு "முலைகள்" என்று தலைப்பு வைத்து கவனம் எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.

இவர்களை போன்று, கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.


ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

- அனார்


கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி

சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.

- மாலதி மைத்ரேயி.



"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."

- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?' என்று கேட்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??



(நன்றி, இனி,அடுத்தவாரம்)



-இன்பா

Read More...

Saturday, January 19, 2013

KLTA


Read More...

Wednesday, January 16, 2013

புத்தகக் கண்காட்சி போய் வந்தேன் ! - சுமதி

பல வருட காலமாக காயிதே மில்லத் கல்லூரியிலும், கடந்த சில வருடங்கள் அதை விடப் பெரிய வளாகமான ஸெயிண்ட் ஜான் பள்ளியிலும் நடந்த புத்தகக் கண்காட்சி, இந்த வருடம் இன்னும் பெரிய இடமான நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு இடம் மாறியிருக்கிறது.

உள்ளே செல்ல பல நுழைவு வாயில்கள். ஒவ்வொரு வாயில் அருகிலும் டிக்கெட் கவுண்டர் என்று நல்ல வசதி. பார்க்கிங்குக்கும் நிறைய இடம். பார்க்கிங் ஏரியா தாண்டி தூரத்தில் அடுத்த கட்டடம் . அங்கே மான்களைப் பார்த்தோம். வரிசையாக எங்கோ போய்க் கொண்டிருந்தன.


எல்லா வரிசைக்கும் ரசனையாக எழுத்தாளர்கள் பெயர் வைத்திருந்தார்கள். இவர்களின் எல்லாப் புத்தகமும் படித்து அவர்கள் காட்டிய பாதையில் நடக்கிறேனோ இல்லையோ, புத்தகக் கண்காட்சியில் பல பிரபலங்களின் பாதையில் நடந்து விட்டேன். முதலில் கவிஞர் ஷெல்லி பாதையில் சென்றேன் . அதனாலோ என்னவோ முதலில் கவிஞர் திரு மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம் தென்பட்டது. அவர் தன் முன்னால் இருந்த கேமராவுக்கு சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றியும் உயிர்மையின் பங்கு பற்றியும் விவரமாக சொல்லிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு தொலைக்காட்சியில் வருவதற்கு சற்று முன்னதாகவும் லைவ்வாகவும் அந்தத் அழகான உரையைக் கேட்ட திருப்தியுடன் என் புத்தக வேட்டையைத் தொடங்கினேன்.


பல பதிப்பகங்கள் ப்ளாஸ்டிக் கவருக்குப் பதிலாக துணிப்பையில் வாங்கும் புத்தகங்களைப் போட்டுத் தருகிறார்கள். அதுவும் விகடனில் வஞ்சனையில்லாமல் பெரிய பை ( நிறைய புடவை வாங்கினால் கடையில் கொடுப்பார்களே, அது மாதிரி ) கொடுத்ததால் வாங்கின எல்லா புத்தகங்களையும் அதிலேயே போட்டுக் கொண்டு சுற்ற முடிந்தது.

இட்லிவடை வாசகியாக இருந்து கொண்டு இ.வ பரிந்துரை செய்த புத்தகம் வாங்க வேண்டாமா !! ஜாலியா தமிழ் இலக்கணம் மற்றும் நகர் வலம் வாங்கினேன்.

Zee டிவி அவர்கள் லோகோ போட்ட பலூன்களை குழந்தைகளுக்குக் கொடுக்க, ஸ்டால் அருகிலேயே சில வாண்டுகள் அதைப் பிரித்து மேல் பகுதியை மட்டும் பந்தாகத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தது படு சுவாரசியம்.

புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பும் போதே, வாங்க வேண்டிய புத்தக மற்றும் கண்டிப்பாக போக வேண்டிய ஸ்டால் லிஸ்ட் எடுத்துக்கொண்டு போவது வழக்கம். அப்போதுமே சில புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று திண்டாடி விடுவேன். இது சம்பந்தமாக புத்தகக் கண்காட்சி பொறுப்பாளர்களிடம் சில வேண்டுகோள் / எதிர்பார்ப்புகள் உள்ளன.

1 .நாம் கேட்கும் புத்தகங்கள் எந்த பதிப்பகம் வெளியீடு / எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்ற விவரம் சொல்ல , எழுதியவர் பெயர் மட்டும் தான் தெரியும் என்று சொன்னால், அவர் எழுதிய அனைத்து புத்தகங்களும் அவை எந்தெந்த பதிப்பகம் என்ற விவரம் கொடுக்க ,

ஒரு மே ஐ ஹெல்ப் யூ கவுண்டர் மாதிரி இருந்தா ல் உதவியாக இருக்கும்.

எல்லா பதிப்பகங்களும் கேட்டலாக் வைத்திருக்கிறார்கள். அவற்றை மொத்தமாக கம்ப்யூட்டரில் ஒரு கன்ஸாலிடேடட் ஃ பார்மில் வைத்துக் கொண்டு உதவினால் எவ்வளவு நன்றாக இருக்கும். நமக்கு வேண்டிய புத்தகம் ஏதோ ஒரு ஸ்டாலில் நமக்காகக் காத்திருக்க, நாம் அதைத் தேடி விட்டுக் கிடைக்கவில்லை என்று விட்டு விட, ப்ச், நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.


2. இந்த வருடம் புதிதாக வந்த அனைத்துப் புத்தகங்கள், ( மொத்தமாக வருடம் முழுவதும் தின , வார, மாத இதழ்களில் என்று எதில் புது புத்தகம் பற்றிய விவரம் வந்திருந்தாலும் அவற்றின் தொகுப்பு). நாம் அவ்வப்போது படிக்கிற பத்திரிக்கையில் ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருப்பார்கள். எழுதி வைத்துக் கொள்ள மறந்திருப்போம். வாங்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது கண்டிப்பாக விவரம் மறந்து விடும். புத்தகக் கண்காட்சியில் புதுப் புத்தகங்கள் அனைத்துக்கும் ஒரு லிஸ்ட் வைத்துக்கொண்டிருந்தால் நன்றாக இருக்கும்.

ஒரு புத்தகம் அதன் சரியான வாசகரைச் சென்றடையத் தானே எவ்வளவோ பொருட்செலவில் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள். இவற்றையும் மனதில் வைத்து செயல்படுத்தினால் நலம்.


வழக்கம் போல் வெளியே வருவதற்கு முன்பு டிக்கெட்டில் பெயர், முகவரியை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு குலுக்கல் பெட்டியில் சேர்த்து விட்டு வந்தேன். பார்க்கலாம், இந்த தடவையாவது அதிர்ஷ்டம் அடிக்கிறதா என்று.

ஆனால், வேறு ஒரு அதிர்ஷ்டம் அடித்தது. NHM ஸ்டாலில் NHM ரீடரைப் பற்றித் தெரிந்து கொண்டு வீட்டுக்கு வந்தபின் இன்ஸ்டால் செய்தோம். அதில் திரு சாவியின் "வாஷிங்டனில் திருமணம்" மற்றும் சில புத்தகங்கள் இலவசமாக படிக்கக் கிடைக்கிறது. மேலும் அவர்கள் ஸ்டாலில் ஆழம் பிரதி வேறு இலவசமாகக் கொடுத்தார்கள். சும்மா சொல்லக் கூடாது, நல்ல வழவழன்னு தாள்கள், இப்பவே படி என்று தூண்டுகிறது.

விடுமுறை நாள் என்பதால் வீட்டிலிருந்து மதியமே கிளம்பி விட்டேன். அப்படி கிளம்பியது எவ்வளவு நல்லதாகப் போனது என்று திரும்பி வரும் போது எல்லா கவுண்டரிகளிலும் நீண்ட க்யூக்களைப் பார்த்ததும் தோன்றியது.

இதில் எனக்கு விகடனிலும் கிழக்கிலும் கிடைத்த உதவி பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

திரு மெரினாவின் நாடகங்கள் படித்திருக்கிறேன். அவரது வாழ்க்கை பற்றி மிக சுவாரசியமான புத்தகம் எப்போதோ படித்திருந்தேன். தலைப்பும் நினைவில்லை. விகடனில் கேட்கவே தயக்கம். அவ்வளவு கூட்டம் . மெதுவாக ஒர் இளைஞரிடம் விசாரித்தேன். அல்லையென்ஸில் கேளுங்கள் என்றார். எனக்கு என்னவோ விகடன் பிரசுரம் என்று நினைவு என்று இழுத்தேன். நான் மற்ற புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த நேரத்தில் எங்கிருந்தோ திரும்ப வந்து அந்தப் புத்தகத்தை என் கையில் திணித்து விட்டார்.

அதே போல் கிழக்கு பிரசுரம் அல்லாத ஒரு புத்தகம் அங்கு கிடைக்கும் என்று கேள்விப்பட்டு (அங்கும் கூட்டம்தான்) கேட்க, பொறுமையாக உள் வரிசையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். இருவருக்கும் இ.வ மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். :-)


வீடு திரும்பும்போது சரியான கால் வலி ஆனால், கை நிறைய புத்தகம், மனசு முழுக்க சந்தோஷமாய் வந்து சேர்ந்தேன்.


திரும்பி வரும் போது எல்லோருக்கும் ஜண்டு பாம் கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும் ? கால்/கை வலி - புத்தகம் படித்த பின் தலை வலி அனைத்தையும் நொடியில் போக்கிவிடும் !

Read More...

Tuesday, January 15, 2013

துக்ளக் 43ஆம் ஆண்டு விழா ஆடியோ


அன்பான வாசகர்களுக்கு,
Coveritlive.com மூலம் துக்ளக் ஆண்டு விழாவை நேரடி அப்டேட் செய்ய முடிவு செய்தேன். ஆனால் ஓசியில் சில பிரச்சனைகள் இருப்பது பிறகு தான் தெரிந்தது. 100 பேர் வந்த பிறகு பணம் கட்ட சொல்லிவிட்டது. அதனால் பலருக்கு நான் போட்ட அப்டேட் தெரியவில்லை என்று தெரிகிறது. அரங்கில் இருந்துக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த முறை ஏனோ அவ்வளவு சுவாரஸியமாக இல்லை. துக்ளகில் பணிபுரிபவர்களை அறிமுகம் செய்தது ஏதோ செய்ய வேண்டுமே என்று செய்தது போல இருந்தது. ஆரம்பத்தில் சோ அவர்கள் ஸ்வெட்டர், குல்லா எல்லாம் போட்டுக்கொண்டு வந்தது கலகலப்பாக இருந்தது!

இந்த முறை பெரிசாக ஒன்றும் இல்லை. துக்ளக் ஏன் நமது எம்.ஜி.ஆர் போல செயல்படுகிறது என்ற கேள்விக்கு சோ தன்னுடைய விளக்கத்தை தந்தார். நிச்சயம் திமுக தமிழ்நாட்டில் தலையெடுக்க கூடாது என்று அழுத்தமாக சொன்னார்.

கலைஞர்/அழகிரி திமுக சங்கர மடம் இல்லை என்று சொன்னது சரி தான். மன்மோகன், சிதம்பரம் பற்றி நிறைய ஜோக். FDI, மாயவதி, சோனியாவின் மருமகன், மீடியாவின் தாக்கம்... என்று பல விஷயங்களை தொட்டார்.

என் பக்கம் இருந்தவர் என் வழி தனி வழி அது உருப்படாத வழி என்று ரஜினியை டார்கெட் செய்து கத்திக்கொண்டு இருந்தார். சோ கொஞ்சம் டென்ஷனாகி பேசுவதாக இருந்தால் இங்கே வந்து பேசவும். இது 'அந்த' மாதிரி மீட்டிங் இல்லை என்றார் கடுப்பாகி.

சுமார் ஒரு மணி நேர ஆடியோ கீழே கொடுத்திருக்கிறேன். கடைசி 30 நிமிடம் சரியாக வரவில்லை. அதை இன்னும் இரண்டு நாளில் ஏற்பாடு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். இந்த ஆடியோவிலேயே சில பகுதிகள் நடுவில் விடுபட்டு ஒரு continuity இல்லாமல் இருக்கும். மன்னித்துவிடுங்கள்.

அன்புடன்,
இட்லிவடை


டவுன்லோட் செய்ய இங்கே


Read More...

Monday, January 14, 2013

துக்ளக் 43வது ஆண்டு விழா அப்டேட்



அப்டேட் விரைவில்...


Read More...

பொங்கல் நல்வாழ்த்துகள்




கலைஞர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடலாம். மற்றவர்கள் பொங்கல் செய்து சாப்பிடலாம்.

Read More...

Sunday, January 13, 2013

சன்டேனா இரண்டு (13-1-13) செய்திவிமர்சனம்



சன்டேனா இரண்டு (13-1-13) செய்திவிமர்சனம்

இந்த வாரம்....இன்றைய பட்டிமன்றங்களின் நிலை மற்றும் ஜல்லிக்கட்டின் கதை.



செய்தி # 1








திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் ஒன்று சமிபத்தில் பார்த்தேன். நகைச்சுவை என்ற பெயரில், வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அதிமுகவை விமர்சித்துக்கொண்டிருந்தார் லியோனி.



பட்டிமன்றத்தின் அடிப்படை மரபுகளில் ஒன்று .."பட்டிமன்றத்தில் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது" என்பார் அவ்வை நடராஜன் அவர்கள்.



அவ்வை நடராஜன்,தி.ராஜகோபால்,நெல்லைக்கண்ணன் போன்றோர் மரபுப்படி பட்டிமன்றங்களை நடத்துவதற்க்கு முன்னோடிகள் என்கிறார்கள்.



ஆழமான தலைப்பு. பங்குபெற்றவர்கள் மட்டுமில்லாமல், பார்க்கவருவோரையும் ஆர்வத்தோடு ஒன்றிப்போக வைக்ககூடியதான தலைப்பு. அதை அறிவித்து நடுவராய் இருப்பவர் விளக்கி, பேச்சாளர்களை அறிமுகம் செய்யவேண்டும். இரண்டு அணிகள். அவற்றுக்கு தனித்தனியே தலைவர்கள்.


தலைவராக இருப்பவர்கள் பேச்சை முதலில் தொடங்கி, பின் மற்ற பேச்சாளர்கள் அனைவரும் வாதித்து முடித்தப்பின், இறுதியில் சில நிமிடங்களில் முத்தாய்பபாய் முடித்து, ந்டுவரை தீர்ப்பு கூற அழைக்க வேண்டும். நடுவர் அவர்கள் இருதரப்பு விவாதங்களையும் சீர்தூக்கிப்பார்த்து, நடுநிலமையோடு எது சிறந்து என தீர்ப்பு கூறவேண்டும்.


இன்றைய பட்டிமன்றங்கள் மசாலா சினிமாக்கள் போன்று ஒரு பார்முலாவை வைத்து இருக்கிறார்கள். நாலு பாட்டு, அஞ்சு ஜோக்கு இதுதான் இப்போது பட்டிமன்றங்களின் போக்கு.



சாலமன் பாப்பையா அண்ட் கோவும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை. ஒரு இடத்தில் சொன்ன மொக்கை ஜோக்கை மற்றொரு இடத்தில் சொல்லுவது. கணவன் - மனைவி கடி ஜோக்குகள், அதை கேட்டு நான்கைந்து காயந்துபோனவர்கள் சிரிப்பது, பட்டிமன்ற விவாததுக்கு நடுவே சன் டிவியில் வரும் டிவி தொடர்கள் பற்றி பேசி விளம்பரம் செய்வது என ஒரு பண்டிகை என்றால் டிவியில் பட்டிமன்றம் என்று இவர்கள் படுத்தும் தொல்லை தாங்க முடியவில்லை.


பட்டிமன்றங்களை ஒளிபரப்பு செய்யும் சேனல்களுக்கு தகுந்தார்போல பட்டிமன்றங்களை நடத்தும் அருவருப்பான நிலை தொடர்கிறது.



நான் சென்று பார்த்த ஒரு சிறப்பு பட்டிமன்றம் புதுச்சேரி நகரில். "குடும்ப அமைதிக்கு பெரிதும் துணை நிற்பது மனைவியின் அன்பா? கணவனின் ஆளுமையா? " என்பது தலைப்பு. உள்ளூரில் உள்ள மொழி ஆர்வலர்கள்,பேராசிரியர்கள் எல்லாம் இணைந்து பட்டிமன்ற மரபுகள் மாறாது நடத்தியபோது, பட்டிமன்றத்தின் சிறப்புகள் எனக்கு புரிந்தது.



இறுதியில் குடும்ப அமைதிக்கு துணை நிற்ப்பது மனைவியின் அன்பே என்று தீர்ப்பளித்தார் நடுவராய் இருந்தவர்.


இது போல, சிரிப்புக்கும் சிந்தனைக்கும் விருந்தாகும் நல்ல பட்டிமன்றங்களை கேட்கும்/பார்க்கும் ஏக்கம் இருக்கிறது. ஆனால், விருந்தளிக்கதான் இன்று ஆளில்லாமல் போய்விட்டார்கள்.



செய்தி # 2






ஜல்லிக்கட்டு பற்றிய சுவாரசியமான சில தகவல்களை படித்தேன்.ஏற்கனவே என் ஒரு பதிவில் நான் இதை பற்றி விரிவாக எழுதியும் இருக்கிறேன்.



4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது என்கிறது ஒரு குறிப்பு
.
நமது கலித்தொகை போன்ற பழந்தமிழ், சங்க இலக்கியங்களிலும் ஜல்லிக்கட்டு "ஏறு தழுவுதல்' என்று குறிப்பிட படுகின்றன. முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு கால்நடைகளை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தது. மாட்டை அடக்கிப் பெண்ணை மணப்பது என்ற இனக் குழு நிலையில் இருந்த ஏறு தழுவுதல், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அரங்க விளையாட்டாக, ஜல்லிக்கட்டாக உருப்பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இதைத் தடை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனாலும் மக்களின் உணர்வே அப்போதும் வென்றது.


""உண்மையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பாமர மக்கள் அளவுக்கு மாட்டின் மீதும், விலங்குகள் மீதும் அக்கறை செலுத்துபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். தினசரி வாழ்க்கையும் அவர்களுக்கு மாடுகளுடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது. மாட்டுக்கு நன்றி செலுத்தி மாட்டுப் பொங்கல் நடத்தும் எளிய மனிதர்கள், கவனித்துப் பார்த்தால், ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பவர்கள் பெரும்பாலும் இறப்பதில்லை. பார்வையாளர்கள்தான் இறந்து போகின்றனர். இவற்றை முறைப்படுத்தி, பார்வையாளர்களையும் மாடுபிடி வீரர்களையும் தனித்தனியாகப் பிரித்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் எந்த உயிரிழப்பும் இல்லை!

மது அருந்திட்டு மாடு பிடிக்கிறதும், மாட்டுக்கு மது கொடுக்குறதும் தப்பு'ன்னு சொல்றது நியாயம். ஆனா, ஜல்லிக்கட்டே வேண்டாம்னு சொல்றது, கலாசாரத்தையே காலால உதைக்குற மாதிரி.கோயிலுக்குப் போறதையும், மொட்டை அடிக்கிறதையும், நல்ல நேரம் பார்க்குறதையும் விட்டுடலையே! அது போலத்தான் இதுவும். 400, 500 வருஷப் பழக்கத்தை எல்லாம் பொசுக்குனு மூட்டை கட்டிட முடியாது"

- இது ஒரு தரப்பு வாதம்.

"ஒரு மாட்டை ஒருத்தன் அடக்குறதுதான் வீரம். அஞ்சறிவுள்ள மாட்டை 20,30 பேர் சேர்ந்து அமுக்குறதுல என்னங்க வீரம் இருக்கு? நாட்டுல வெட்டுக்குத்தும் வன்முறையும் ஏற்கெனவே அதிகமாகிட்டு இருக்கு. இந்த நிலையில் மாடுகிட்ட குத்துப்பட்டு இளைஞர்கள் ரத்தம் சிந்துறதையும், சாகுறதையும் கைதட்டி, விசிலடிச்சு ரசிக்கிறது, வன்முறை மன நிலையை ஊக்குவிக்காதா? "இது வீரம், பண்பாடு, பாரம்பரியம்'னு சொல்லி, வேடிக்கை பார்த்துட்டு நீங்க போயிடுவீங்க. மகனை. கணவனை, தகப்பனை இழந்து வாழ்க்கை முழுக்க நிராதரவா இருக்கிற அந்த குடும்பங்களை யாரு காப்பாத்துவா? அரசியல் கட்சிகள் எல்லாத்துக்கும் ஒரு அணி வெச்சிருக்கிறது மாதிரி, "மாடு பிடி அணி'ன்னு வெச்சு அதுல உள்ளவங்களை மாடு பிடிக்க அனுப்பட்டும். அப்ப தெரியும், அதோட வலி என்னன்னு. பழைய காலம் மாதிரி திறந்தவெளி அரங்கத்துல ஒரு மாட்டை ஒரு நேரத்துல ஒரு மனிதன் அடக்கினா, அதை ஆதரிக்கலாம். இப்போ நடக்குறது இளைஞர்களின் உயிர் குடிக்கிற விளையாட்டு. இதை ஏத்துக்க முடியாது!"

-இது ஒரு இன்னொரு தரப்பு வாதம்

ஜல்லிகட்டு - ஒரு கோணத்தில் பார்த்தால் மிருகவதை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் இன்றும் தொடரும் ஒரே பழந்தமிழர் வீர விளையாட்டு.



விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



வாசக நண்வர்களுக்கும், இட்லிவடைக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



(நன்றி, இனி,அடுத்தவாரம்)



-இன்பா

Read More...

Thursday, January 10, 2013

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 10-01-2013


அன்புள்ள ஸ்ரீமான் முனி அவர்களுக்கு,

"நீங்க ஏன் ஃபேஸ் புக் பக்கம் வருவதில்லை ? அங்கே நிறைய விஷயம் இருக்கு... நீங்க வந்தா நல்லா இருக்கும்" என்றார் அந்த இட்லிவடை நலம் விரும்பி.
இதை எழுதும் போது இட்லிவடை இதை பரிசீலித்து வருகிறது. ஃபேஸ் புக் மக்களுக்கு இது எச்சரிக்கை.

சரி பேஸ் புக் பக்கம் சென்று பார்த்த போது அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. டிவிட்டர், பிளாகில் அடிக்கும் அதே கும்மி தான் அங்கேயும் அடிக்கப்படுகிறது. இருந்தாலும் கண்ணா லட்டு தின்ன ஆசையா ? என்று உள் மனது கேட்கிறது.

தனது இன்று போய் நாளை வா படத்தைத்தான் சந்தானமும் ராம நாராயணனும் மோசடி செய்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற தலைப்பில் படமாக எடுத்துவிட்டனர் என இயக்குநர் கே பாக்யராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்திமழை பத்திரிக்கையில் நவம்பர் மாசம் ஒரு கட்டுரை படித்தேன். எப்படி நம்ம மக்கள் வெளிநாட்டு படங்களை காப்பி அடிக்கிறார்கள் என்று விரிவாக போட்டிருக்கிறார்கள். அதே போல கமலின் கலப்படங்கள் என்ற புத்தகத்தில் 'கமல்சார்... கமல்சார்' என்று வரிக்கு வரி போட்டுவிட்டு கமலை துவைத்து எடுத்திருக்கிறார்கள். நம்ம மக்கள் ஏன் வெளிநாட்டு படங்களையே காப்பி அடிக்கிறார்கள் ? இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை ஏன் சொந்த நாட்டிலேயே எடுக்காமல் வெளிநாட்டினரைப் தேர்ந்தெடுக்கிறார்கள் ? அதே காரணம் தான்!.

இதில் கூத்து என்ன என்றால் ராம நாராயணன், பாக்யராஜ் இருவரும் இப்ப திமுகவில் இருக்கிறார்கள். முறையாக தலைவரிடம் தான் போய் இவர்கள் முறையிடவேண்டும் ஆனால் தலைவரே இப்ப லட்டு பிரச்சனையில் இருக்கிறார். அங்கே நடப்பதும் கண்ணா லட்டு தின்ன ஆசையா ? பிரச்சனை தான்!.

2 முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.


பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னா

என்ன சிரிச்சாசா ? சரி இதைவிட பெரிய முட்டாள் நாம தான். திமுக தலைமைக்கு வேறு யாரும் வந்து விட கூடாது என்பதற்காக நடத்தும் நாடகமாகக் கூட இருக்கலாம் இந்த அண்ணன் தம்பி சண்டை!. ஆனால் நிச்சயம் இந்த பிரச்சனை ஒரு நாள் விஸ்வரூபம் எடுக்கும்.

நாளை விஸ்வரூபம் இல்லை, வலைப்பதிவில் விமர்சனம் எழுத தயாராக இருந்தவர்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட். கமலிடம் டென்ஷன், குழப்பம் இரண்டும் இருக்கிறது. இது புதிய யுத்தி என்று கமல் பேட்டியில் சொல்லியுள்ளார். கேபிள் வந்த சமயம் புது படங்களை உடனுக்கு உடன் நாம் வீடுகளில் பார்த்தோம். அதையே காசுக்கு குவாலிடியாக தர போகிறார்கள். அவ்வளவு தான். கமல் நடிப்புடன் வியாபாரியாகியிருக்கிறார். எனக்கு தெரிந்த DTH நண்பர்களிடம் போன வாரம் பேசிய போது மொத்தம் 61 பேர் Subscribe செய்திருக்கிறார்கள் என்றார். அதில் என்னுடையது ஒன்று.

கமல் இப்ப செய்ய வேண்டியது ஒன்று தான் கடவுளை நம்ப வேண்டும்!.

ஷாரூக் நடிக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் போஸ்டரில் வேட்டி சட்டையில் ஷாரூக்கும் லுங்கியில் தீபிகாவும் சூப்பராக இருக்கிறார்கள். லுங்கி பெண்களுக்கு தான் நல்லா இருக்கு என்பது படத்தை பார்த்தால் தெரிகிறது.

தமிழ் நடிகர் கமல் மும்பை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்தார். மும்பை நடிகர் சென்னை எக்ஸ்பிரஸில் நடிக்கிறார். இதற்கு புக்கிங் IRTCல் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். கடவுளுக்கே டிக்கேட் கிடைக்காது.

கடவுளை நம்பாமல் நம்ம மக்கள் இன்னும் சாமியார்களை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். லேடஸ்ட் நியூஸ் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிஷ்யர்கள் 300 பேர் உடன் வர, நவீன சொகுசுக் கப்பலில் தென்கிழக்கு ஆசியக் கடலில் சுற்றி வருகிறார் நித்தியானந்தா! ஒரு லட்ச ரூபாய் கட்டணம் கொடுத்து ஒவ்வொரு சிஷ்யரும் இருபது நாட்கள் பயணம் போகிறார்கள். காலையில் யோகா, தியானம் பின்பு ஆட்டம் என்று உற்சாகமாக நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தா.

விகடன் விருதுகள் அறிவித்திருக்கிறார்கள். பல விருதுகளை வழக்கு என் 18/9க்கு தந்துள்ளார்கள். ஆண்டவா !


சேவை வரி விதிப்பால் நாட்டில் கருப்புப் பணம் அதிகரிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மற்றவர்களுக்கு சேவைவரி விதிக்கும்போது கருப்பு பணம் அதிகரிக்கும் என்பது ரஜினிக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம். இவர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்கிறார்கள் ? லெமன் சேவையா ?

இப்படிக்கு,
இட்லிவடை

கடைசி தகவல்: விஸ்வரூபம் 25 ரிலீஸ் தியேட்டரில். DTHல் எப்போது என்று தெரியாது தியேட்டரில் ரிலீஸ் செய்த பிறகு இருக்கும் என்பது என் எண்ணம் !

Read More...

Wednesday, January 09, 2013

விஸ்வரூபம் ரிலீஸ் எப்போது ?





Moral of the story: நமக்கும் நம்மவருக்கும் குழப்பமாக இருக்கிறது

Read More...

Monday, January 07, 2013

இட்லிவடை புத்தக லிஸ்ட்

புத்தகக் கண்காட்சி போது என்ன புத்தகம் வாங்கலாம் என்ற லிஸ்ட் போஸ்ட் பல காலமாக வந்துக்கொண்டு இருக்கிறது.

போடுபவர் ரசனைக்கு ஏற்ப இது இருக்கும். 'புத்தகக் கண்காட்சி புத்தக லிஸ்ட்' வாசகர்களை பரிந்துரைக்க சொல்லியிருந்தேன். நிறைய பேர் லிஸ்டை சீக்கிரம் போடுங்க என்று தான் பின்னூட்டம் போட்டிருந்தார்கள். அவ்வளவாக பரிந்துரை செய்யவில்லை.

இப்போதைக்கு இட்லிவடையின் பரிந்துரைகள் இவை.

1. மௌனியின் மறு பக்கம் - விகடன் பிரசுரம் - 75/-
2. தமிழ்நாடு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரை - ஏ.கே.செட்டியார் - சந்தியா பதிப்பகம் - 180/-
4. கடைசிப் பக்கம் - மணற்கேணி - நிதர்ஸனா - 90/-
5. ஜாலியா தமிழ் இலக்கணம் - கிழக்கு - இலவச கொத்தனார் - 75/-
6. நகர் வலம் - ஞாநி - ஞானபாநு பதிப்பகம்

பட்ஜட் இருந்தால்
1. தென்னாட்டுச் செல்வங்கள் - விகடன் பிரசுரம் - 650/-
2. சித்திர பெரிய புராணம் - ஓவியம் - நூலாசிரியர் எஸ்.ராஜம், உரைநடை வடிவம் அ.ச.ஞானசம்பந்தன் - ஸ்ரீராம கிருஷ்ண மடம் - 275/-
3. வாலிப வாலி - நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம் - 250/-


மீது பணம் இருந்தால் ரஜினி ரசிகர்கள் இந்த புத்தகத்தை வாங்கி கமல் ரசிகர்களுக்கு தரலாம்.

1. கமலின் கலப்படங்கள் - நிழல் பதிப்பகம்


வேறு ஏதாவது புத்தகம் நினைவுக்கு வந்தால் இங்கே அப்டேட் செய்கிறேன்

Read More...

Sunday, January 06, 2013

சன்டேனா இரண்டு (6-1-13) செய்திவிமர்சனம்

....இந்த வாரம்... இரண்டு ஆவேசங்கள்.




செய்தி # 1


இந்த படத்தில் இருப்பவரின் மகள்....புதுச்சேரியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ப்ளஸ் டு படிக்கும் மாணவி. கடந்த புத்தாண்டு அன்று ஒரு மாதா கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில், ஒரு தனியார் பேருந்து மூலம் அந்த பேருந்தின் ஒட்டுனர் உட்பட மூன்று நபர்களால் மயக்கமருந்து தரப்பட்டு,கடத்தப்பட்டு,.கற்ப்பழிக்கப்பட்டு, பின் டெல்லி போல விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இற்க்கிவிடப்பட்டுவிட்டார்.



இந்த தனியார் பேருந்தின் ஒட்டுனர் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவரையும் கைது செய்து இருக்கிறார்கள் புதுவைப் போலிசார்.



டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி போல இல்லாமல், பாண்டிச்சேரி மா நிலம் தாண்டி இந்த விவகாரம் ஏனோ (அ) ஏன் பெரிதாக பேசப்படவில்லை. தமிழ்ப்பெண்தானே என்று நினைத்து விட்டார்கள் போலும்.



"டெல்லியில் ஒரு மாணவி கற்ப்பழிக்கப்பட்டதற்க்கு ஒட்டுமொத்த வடமாநிலங்களும், அரசியல்வாதிகளும் இப்படி கொந்தளிக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான தமிழ்பெண்கள் இலங்கையில் கற்ப்பழிக்கபட்டபோது இவர்கள் எங்கே போனார்கள்" என்ற ரீதியில் நாம் தமிழர் சீமான் பேசி இருப்பது அர்த்தம் உள்ளதாகவே இருக்கிறது.


இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு காரணம், பெண்கள் அணியும் உடை என்றும், வெளியில் வரும் பெண்கள் "பர்தா" போன்று உடை அணிய வேண்டும் என்று மதுரை ஆதினம் கருத்து கூற, அதற்க்கு பெண்கள் அமைப்புகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.


"டெல்லி கேங் ரேப்.... 'குற்றவாளிகளை கொடுரமாக கொல்ல வேண்டும். தூக்கில் வேண்டும்." என்று நாட்டின் எதோ மூலையில் இருந்து அரசியலே அறியாமல் கூப்பாடு போடுபவர்கள்தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்கு காரணம். கார்ப்பரேட் சூழல் அதர்மம்,பணம் என மாறிவிட்டதால் பெண்களை போகப் பொருளாகவும், ஆபாசத்தை அள்ளித் தெளிக்கும் விற்பனை சரக்காகவும் மட்டுமே பார்க்கிறார்கள். இன்று சினிமாவில், சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பெண்களை காம உணர்வுகளை தூண்டும் பட்சியாக பார்க்கிறார்கள்" - என்று கூறி இருக்கிறார் சமூக சேவகர் மேதா பட்கர்.


பெண்கள் நாகரிகம் என்று தனது அழகை முன்னிறுத்தும் ஆடைகளை அணிந்து, இது போன்ற குற்றங்கள் நடக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.


“டெல்லி மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.


இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்போதும் ஏற்றுகொள்வதோ அல்லது மன்னிப்பதோ கூடாது”


-இப்படி சொன்னவர் வேறு யாரும் இல்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை,கற்ப்பழிப்பு கொலைகளை,கொடுரங்களை எல்லாம்

“விளையாட்டாக” எடுத்துக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூன்.



செய்தி # 2




"தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல" என்று முன்பு கருணாநிதி கூறியதை திரும்பவும் மாறி,மாறி கூற ஆரம்பித்து விட்டார்கள் அவரது இரண்டு வாரிசுகளும்.



"வாழ்நாள் முழுவதும் தமிழ் சமுதாய மேன்மைக்காக நான் பாடுபடுவேன். எனக்கு பின் மு.க.ஸ்டாலின் பாடுபடுவார்" என்று கருணா அறிவிக்க, "கட்சி ஒன்றும் சங்கர மடமல்ல. இதையே கருணாநிதியும் கூறி இருக்கிறார். ஸ்டாலினும் கூறி இருக்கிறார்" என்று ஆவேசமாக பதில் அளித்து இருக்கிறார் மு.க.அழகிரி.



காவேரி உடன்பாட்டில் துரொகம். கச்சத் தீவை தாரை வார்த்தது. முதல்வர் பதவியில் தானே இருக்க, ஒரு மகன் துணை முதல்வர், இன்னொரு மகனும், பேரனும் மத்திய அமைச்சர்கள், மகள் ராஜ்யசபா உறுப்பினர். இவ்வளவு இருந்தும் இலங்கையில் ஒட்டுமொத்த தமிழினமும் அழியும் போது உட்கார்ந்த இடத்தில் இருந்து கடிதம் எழுதியது..


இது போல அவர் தமிழ் சமுதாய மேன்மைக்காக மேலும் மேலும் பாடுபடவேண்டும் என நாம் வாழ்த்துவோம்.



இவர்கள் கட்சி ஒன்றும் மடம் இல்லை என்பதன் அர்த்தம் என்ன?



அதாவது, கட்சியில் உள்ள செயற்க்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம், ஜன நாயக முறைப்படி ஒட்டளித்து, தங்களின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்பதே.



எப்படி தேர்வு செய்தாலும், திமுகவில் அடுத்த தலைவர் ஒன்று கருணாநிதியின் மூத்த மகன் அல்லது இளைய மகன் இருவரில் ஒருவர்தான் இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தை தவிர, கட்சியில் எத்தனை வருடங்களாக உழைத்து இருந்தாலும் வேறு ஒருவருக்கு இந்த பதவி கிடைக்கும் என்பது சாத்தியமே இல்லை.



அப்புறம் எதற்கு, கட்சி ஒன்றும் மடமல்ல என்று திரும்ப, திரும்ப கூறுகிறார்கள்?



சங்கர மடத்தில் வாரிசாக, குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களாவது வேத பாட சாலையில் படித்து இருக்க வேண்டியது அவசியம். மதுரை ஆதினத்தின் நித்தி நியமனத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கில், மதுரை ஆதினமாக சைவ சிந்தாத்தில் புலமை பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படை தகுதியே நித்திக்கு இல்லை என்பது புலப்பட்டது.



ஆனால், திமுகவில் அடுத்த தலைவராக, ஒரே ஓரு தகுதிதான் தேவை. அது உங்களுக்கே தெரியும்.

இந்த ஆவேசப் பேச்சுக்கள் எல்லாம் படிக்கும் போது ஏதோ குடும்ப சண்டையை பற்றிய நியூஸ் படிப்பது போலவே இருக்கிறது. அண்ணன் எதற்கு ஆவேசப்பட வேண்டும் ?


(நன்றி, இனி,அடுத்தவாரம்)



-இன்பா

Read More...

Thursday, January 03, 2013

பவர் ஸ்டார் குஷ்பு

’மக்கள் எல்லா மீடியாக்களையும் பார்க்கின்றனர். இதில் சினிமாவை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்? சினிமா என்பது பொழுது போக்கு துறையின் ஒரு பகுதி. நூறு ஆண்டுகள் சினிமா இருக்கிறது. குற்றங்கள் நடக்கும்போது அதன்மேல் பழிபோடக் கூடாது.

இளைஞர்கள் வீட்டில் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் பெண்கள் மீதான அவர்களின் பார்வைகள் தீர்மானிக்கப்படுகிறது.

திரைப்படங்கள் காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஒரு காலத்தில் முத்தக் காட்சிக்கு இரண்டு பூக்கள் முத்தமிடுவதுபோல் சினிமாவில் காட்டினார்கள். இப்போது நேரடியாகவே உதட்டோடு உதடு முத்தமிட்டு நடிக்கின்றனர்.


சினிமா காட்சிகளை வரை முறைபடுத்த திரைப்பட தணிக்கைகுழு உள்ளது. படங்களுக்கு அவர்கள் தரங்களை நிர்ணயித்து சான்றிதழ் அளிக்கின்றனர். 'யு' சான்றிதழ், வரிவிலக்கு போன்றவை அளித்து நல்ல படங்களை ஊக்குவிக்கின்றனர்.

குழந்தைகள் எந்த படங்கள் பார்க்கலாம் என அனுமதி அளிப்பதில் பெற்றோருக்கு பொறுப்பு இருக்கிறது. சில படங்களை பெற்றோருடன்தான் பார்க்க வேண்டும் என்று 'யு/ஏ' சான்றிதழ் அளிக்கின்றனர். எனவே தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி சினிமா மேல் பாய்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.




இதில் எது அதிக காமெடி ?

Read More...

அப்புசாமி சீதாப்பாட்டி கார்ட்டூன் ! - சுமதி


சென்ற வாரம் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது தோழி வீட்டுக்குச் சென்றிருந்தேன். நான் போயிருந்த நேரம், என் தோழியின் மகளுக்கு, ஏழெட்டு வயதிருக்கும், பாட்டி கதை சொல்லிக் கொண்டு இருந்தார். கதையில் மூர் மார்க்கெட் எல்லாம் வரவே, ஆச்சரியத்துடன் கவனித்தேன். பார்த்தால் அப்புசாமி கதை ஒன்றை மிக சுவாரசியாகவும் சந்தோஷமாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். குழந்தையும் "மால் ஃபார் ஓல்ட் புக்ஸ் !?, சீதாப்பாட்டி ரீட்ஸ் இங்கிலிஷ் புக்" என்றெல்லாம் கேள்வி கேட்டு இன்வால்வ் ஆகியிருந்தது.

பாட்டிக்கு ரொம்ப சந்தோஷமாகி, தான் வைத்திருந்த பழைய பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்து அதில் வந்த அப்புசாமி சீதாப்பாட்டி படங்களைக் காட்டி விவரித்து கொண்டிருந்தார். அதை பேத்தி தானும் கண் இமைக்காமல் கேட்டுக் கொண்டுருந்தாள்.

பிறகு நான் என் தோழியுடன் பேசி விட்டு, வீடு திரும்ப மின்சார ரயில் பிடித்து அமர்ந்து பயணிக்கும் போது 
குழந்தைகளுக்கு அனிமேடட் காரக்டர்கள் எவ்வளவோ இருக்கின்றன. டோரா, பென்டன், பால் ஹனுமான், சோட்டா பீம்,......அது போல் அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளை அனிமேஷனில் கொண்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுவும் ஓவியர் ஜெ. யின் கைவண்ணத்திலேயே.... என்று நினைத்துக்கொண்டேன்.

ஜாக்கி சான் மற்றும் ஆங்கிலப் படங்களுக்கும் மிருகங்களுக்கும் மிக அழகாய் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்கள் நம் அப்புசாமிக்கும் சீதாப்பாட்டிக்கும் பொருத்தமாய் குரல் கொடுக்க மாட்டார்களா என்ன..?

குழந்தைகள் இமை கொட்டாமல் கார்ட்டூன் சேனல்களை ரசிப்பதை கவனிக்கிறோம். எங்கள் உறவினர் குழந்தை இடையில் விளம்பரம் வந்தால், என் சேனல் எங்கே என்று அழவே ஆரம்பித்து விடுவாள். புத்தகங்கள் படிப்பது குறைந்து வருவதைக் கண்டு வருத்தப்படுகிறோம்.

ஹாரி பாட்டர், மிஸ்டர் பீன் பார்த்து ரசிக்கும் நமக்கு, நம்மூர் தாத்தா பாட்டியைப் பார்க்கக் கசக்குமா..?

.அதுவும் அப்புசாமி ப்யூட்டி பார்லருக்கு அவ்வை ஷண்முகியாய் சென்று மணப்பெண்ணுக்கு (கோர) அலங்காரம் செய்யும் கதை, வித்தைக்காரனிடம் அகப்பட்டுக் கொண்டு நடு ரோட்டில் அழுக்கு கம்பளிக்குள் பதில் சொல்லும் கதை போன்ற பல கதைகள் எல்லாம் பார்க்கவும் நன்றாக இருக்கும்.இளவரசி இடீலி சிரிக்கும் அழகு, அதனால் நேரும் விபரீதங்கள் எல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அல்லவா. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். அந்த சிரிப்புக்கு உத்தரவாதம் தருபவை அப்புசாமி கதைகள்.

இதை, அனிமேட் செய்தால், குழந்தைகளும் என்ஜாய் செய்யும். அப்புசாமி சீதாப்பாட்டியை அடுத்த தலைமுறைக்கு கடத்த இதை விட சிறந்த வழி உண்டா? புது வருடத்தில் யாரேனும் முனைவார்களா??

நடக்கும் என்ற எண்ணத்துடன் எனது ஸ்டேஷனில் இறங்கினேன்.

சுமதி

வெளிநாட்டு ஆசாமிகள் யாராவது செய்தால் அதற்கு நம்ம மக்கள் நல்லா டப்பிங் தருவார்கள்.

Read More...

Wednesday, January 02, 2013

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - நூல் வெளியீடு


எனக்கு வந்த மடல்:

வணக்கம்,

பெங்களூரில் கவிதை நூல் வெளியீடு. ஜனவரி 6 மாலை 4-6 மணி.

இந்த நிகழ்வை இனி மாதாந்திர நண்பர்கள் சந்திப்பாக தொடரவிருக்கிறோம்.

தங்கள் வலைப்பதிவில் ஒரு குறிப்பு வெளியிட்டால் பரவலான கவனம் பெறும். செய்ய இயலுமா?

நன்றி.
வா.மணிகண்டன்.
www.nisaptham.com




வாழ்த்துகள் வா.மணிகண்டன்.

Read More...

பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை !


கடந்த ஒரு வாரமாக எல்லா பாலியல் குற்றங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அதை எல்லாம் மீடியா தோண்டி எடுத்து பிரசுரம் செய்து வருகிறது. வீதிக்கு வீதி இந்தியாவில் இது நடக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள்.

ஜெயலலிதா கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்குவதுடன் அவர்களுக்கு ரசாயான முறையில் ஆண்மை நீக்கம் ( காயடிப்பு ) செய்யப்பட வேண்டும் என்றும் நேற்று அறிக்கை விட்டுள்ளார்.

துக்ளக் கேள்வி பதிலில் சோ இந்த குற்றத்தை பற்றிய கருத்து கூறியுள்ளார்.


கே: டெல்லியில் பேருந்து ஒன்றில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் கண்டனத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறித்து...?

ப: இந்த நிகழ்ச்சி, மனிதர்கள் சில சமயங்களில் எவ்வளவு காட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள் என்பதைக் காட்டுகிற ஒரு அராஜக நிகழ்ச்சி. பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமை மிகவும் கண்டனத்திற்குரியது. பலர் கூறுகிற மாதிரி இதற்கெல்லாம் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை.

ஆனால், இந்த நிகழ்ச்சியைப் பற்றி டெலிவிஷன் சேனல்களிலும், பத்திரிகைகளிலும் வரும் செய்திகளைப் பார்த்தால், இந்தியாவில் இது மிகவும் வழக்கமாக நடக்கிற நிகழ்ச்சி போலவும், உலகில் வேறு எங்கும் இல்லாத கொடூரம் இங்கே அனுதினமும் நடப்பது போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு பிரபல பத்திரிகையில் ‘தங்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கவனித்துக் கொண்டு செல்கிற பெண்களை, கூட்டமாகச் சேர்ந்து கற்பழிப்பது என்பதை இந்திய இளைஞர்கள் ஏன் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்பது ஒரு விசாரணைக்குரியது’ - என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த மாதிரி மிருகத்தனமாக நடந்து கொள்வது இந்திய இளைஞர்களின் வழக்கம் என்பதுபோல் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகை எழுதுகிறது என்றால், நாம் எவ்வளவு தூரம் நிதானம் தவறுகிறோம் என்பதுதான் நிரூபணமாகிறது. உலகில் சுமார் 130 நாடுகளை எடுத்துக் கொண்டால், அதில் நடக்கிற கற்பழிப்புப் பற்றிய விவரங்களைப் பார்க்கிறபோது, இந்தியாவை விடக் குறைவான அளவில் கற்பழிப்பு நடக்கிற நாடுகள் 12 தான். அதாவது 130 நாடுகளில் சுமார் 118 நாடுகளில் நம்மை விட அதிகமான அளவில் கற்பழிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ்,ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமது நாட்டில் நடந்து வரும் கற்பழிப்புச் சம்பவங்கள் மிக மிகக் குறைவு (சுமார் பதினைந்தில் ஒரு பங்கு).

இதனால் கற்பழிப்பு நியாயம் என்றோ, அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றோ நான் சொல்வதாக அர்த்தமாகி விடக் கூடாது. நடக்கிற குற்றத்தை ஒரேயடியாக மிகைப்படுத்தி, அது ஏதோ நம் நாட்டின் இன்றைய கலாசாரம் என்பது போல் சித்தரிப்பது, நமக்கு நாமே செய்து கொள்கிற அநீதி.

சில எண்ணங்கள்

சோ சொல்லுவது போல மற்ற நாடுகளை காட்டிலும் பாலியல் குற்றங்கள் நம் நாட்டில் குறைவாக இருக்கலாம். அதற்கு காரணம் அவை ஒழுங்காக பதிவு செய்யப்படுவதில்லை, அல்லது போலீஸ், மற்றும் ஊர் பெரியவ்ர்கள் அதை மூடி மறைக்கிறார்கள். பாதிக்கப்படுபவர் போலீஸுக்கு போவதில்லை என்று பல காரணங்களை இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஜெயலலிதாவின் அறிக்கையை பலர் பாராட்டியுள்ளார்கள். ஆனால் கடந்த ஒரு வாரமாக வந்த செய்திகளை பார்த்தால் அதில் குற்றம் புரிந்தவர்கள் 80% பேர் இந்த குற்றத்தில் ஈடுப்படும் போது குடிபோதையில் இருந்திருக்கிறார்கள். மரண தண்டனை, ஆண்மை நீக்கம் செய்யும் முன் பூரண மதுவிலக்கு என்று சொல்லியிருந்தால் இன்னும் பாராட்டலாம். அப்படி இல்லை என்றால் அரசே இந்த குற்றத்துக்கு துணை போகிறது என்று தான் அர்த்தம்.

Read More...

Tuesday, January 01, 2013

2013



Read More...