பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 28, 2012

ராசிபலன் மார்ச் 1-15 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ணன்


நீண்ட நாட்களுக்கு பிறகு ராசி பலன் மார்ச் 1-15 வரை.. கணிப்பவர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம். உழைப்பால் உயரும் மேஷ ராசி வாசகர்களே ராசியில் சுக்கிரன், குரு, இரண்டில் கேது, ஐந்தில் செவ்வாய், ஏழில் ராகு, எட்டில் ராகு, பதினொன்றில் சூரியன், பன்னிரெண்டில் புதனுமாக கிரக நாயகர்களின் சுழற்சி அமைந்துள்ளது. மார்ச் 12ம் தியதி 11ம் இடத்திற்கு வக்ரகதியில் புதனும், 14ம் தியதி விரையஸ்தானத்திற்கு சூரியனும் பெயர்ச்சியாகிறார்கள்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். ஐந்தில் அமைந்துள்ள செவ்வாயால் சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். நிலம், வீடு போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தையின் ஆதரவும் உண்டு. இரண்டு, ஏழுக்குரிய சுக்கிரன் ஒன்றில் அமைந்துள்ளதால் வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.

மூன்றாம் வீட்டுக்குரியவர் பன்னிரெண்டில் உலவுவதால் இளைய சகோதரர் சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.

கலைத்துறையினருக்கு மிக சிறந்த காலகட்டமிது. வாய்ப்புகள் தேடி வரும். அரசியலில் குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சியினைக் காண்பார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 14, 15

பரிகாரம்: செவ்வாய்க் கிழமை தோறும் அம்பாளுக்கு இளநீர், பன்னீர் அபிஷேகங்கள் செய்யலாம். ஏதேனும் ஒரு அம்பாள் கோவிலுக்கு நல்லெண்ணை சமர்ப்பிக்கவும்.


ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம்
அனைவரையும் தனது நேர்மையால் கவர்ந்து இழுக்கும் ரிஷப ராசி வாசகர்களே ராசியில் கேது, நான்கில் செவ்வாய், ஆறில் சனி, ஏழில் ராகு, பத்தாமிடத்தில் சூரியன், பதினொன்றில் புதன், பன்னிரெண்டில் வியாழன், சந்திரன், ராசிநாதன் சுக்கிரனுமாக நவநாயகர்கள் வலம் வருகிறார்கள். மார்ச் 12ம் தியதி புதன் வக்ரமாகி பத்தாம் இடத்திற்கும், மார்ச் 14ம் தியதி பதினொன்றாம் ஸ்தானமாகிய லாபஸ்தானத்திற்கு சூரியனும் பெயர்ச்சியாகிறார்கள்.

ராசியில் கேது இருப்பினும் சுகஸ்தானம் வலிமை பெற்றிருப்பதால் சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய அரசியல் கட்சி அல்லது அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

குல தெய்வ ஆராதனைகளிலும், புனிதப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும் காலமிது. உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். விளையாட்டுதுறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும்.

நான்காமிடத்தை குரு பார்ப்பதாலும், நான்காம் வீட்டிற்குடையோன் நான்காம் வீட்டைப் பார்ப்பதாலும் நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டம நாட்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ சுதர்சனரை வழிபடுவது.


மிதுனம்: (மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 ,3ம் பாதம்) - எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் மிதுன ராசி வாசகர்களே மூன்றில் செவ்வாய், ஐந்தாமிடத்தில் சனி, ஆறாம் இடத்தில் ராகு, ஒன்பதாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் ராசிநாதன் புதன், பதினொன்றில் சுக்கிரன், வியாழன், சந்திரன், பன்னிரெண்டில் கேதுவுமாக கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். 12ம் தியதி ராசிநாதன் புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்றில் செவ்வாய் உலவுவது சிறப்பில்லாமல் இருந்தாலும் சுகம், பாக்கியம், தொழில், லாபம் ஆகியவை நன்றாக உள்ளன. லாபஸ்தானத்தில் குரு சந்திர யோகம் உண்டாவதால் பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.

ஆறாமிடத்து அதிபதியாகிய செவ்வாய் மூன்றில் அமர்ந்து ஆறைப் பார்ப்பதாலும், ஆறாமிடத்தில் ராகு இருப்பதாலும் நெஞ்சு சம்பந்தப்பட்ட சிறு சிறு உபாதைகள் தோன்றலாம். எனினும் கவனம் தேவை. ராசிநாதன் பத்தில் உலவுவதால் உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். இசையில் உள்ள திறமையை காட்டுவதற்கு மிக சரியான காலகட்டமிது. உங்கள் திறமை பளிச்சிடும். ஆன்மீக, மத நம்பிக்கைகள் அதிகரிக்கும். பேச்சுதிறமையால் வழக்குகளில் வெற்றிகள் காண்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம்.

கலைத் துறையினர் பெரும் பொருள் ஈட்டுவர். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டம தினங்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ மகாவிஷ்ணூவையும், கணபதியையும் வழிபடுங்கள். பசுவுக்கு ஆகாரம் தாருங்கள்.

கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் - இயல்பிலேயே தலைமை தாங்கும் பண்புடைய கடக ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் செவ்வாய்
, நான்காமிடத்தில் சனி, ஐந்தில் ராகு, எட்டாமிடத்தில் சூரியன், ஒன்பதாமிடத்தில் புதன், பத்தாமிடத்தில் வியாழன், சுக்கிரன், சந்திரன், பன்னிரெண்டாமிடத்தில் கேது என கோள்களின் இயக்கம் நிலவுகிறது. 12ம் தியதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி தன வாக்கு குடும்பாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

தன வாக்கு குடும்ப ஸ்தானம் வலுப்பெற்றிருந்தாலும் தனஸ்தானத்தில் செவ்வாய் உலவுவது சிறப்பில்லை. எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். எனினும் அவர் யோககாரகர் என்பதனால் காரிய வெற்றி மற்றும் பெரும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும் இன்னலின்றி முடியும். உடன் இருப்பவர்களால் எற்பட்ட தொல்லைகள் மறையும். சுப காரியங்களில் இதுவரை இருந்த சுணக்க நிலை மாறும்.

விரையஸ்தானாதிபதி புதன் பாக்கியத்திஸ்தானத்தில் உலவுவதால் சில விரையங்களை கொடுக்கத்தான் செய்யும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் மாறும். தந்தையின் வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை. பத்தாமிடத்தில் நிகழும் கிரக சேர்க்கையினால் மிகுந்த நன்மை உண்டாகும். வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு மனதிலுள்ள எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கையை வழிபடவும். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள்

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1 ) எடுத்த காரியத்தில் உறுதியாக இருக்கும் சிம்ம ராசி வாசகர்களே ராசியில் செவ்வாய், மூன்றில் சனி, நான்கில் ராகு, ஏழில் ராசிநாதன் சூரியன், எட்டாமிடத்தில் புதன், ஒன்பாதமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், பத்தாமிடத்தில் கேது என கிரக நாயகர்கள் அமர்ந்துள்ளனர். 12ம் தியதி தன வாக்கு குடும்ப லாபாதிபதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி ராசிநாதன் சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் ஏழில் வீற்றிருக்க, ராசியை குரு பார்க்க தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெரும் பொருள்வரவை எதிர்பார்க்கலாம். எட்டாமிடத்தில் உள்ள புதனாலும் ஒன்பதாமிடத்தில் உள்ள கிரக சேர்க்கையாலும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செல்வம் உங்களிடம் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் உங்களிடம் வந்து சேர்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

நான்காம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதாலும், ஒன்பாதமிடத்தில் சந்திரன் சஞ்சரிப்பதாலும் பெற்றோர்களின் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் தேவை. உடன்பிறப்புகள் இடையே பாசப் பிணைப்பு அதிகரிக்கும். பேசும் பேச்சில் இனிமையும் நளினமும் அதிகரிக்கும். வீர தீர விளையாட்டுகளில் பாராட்டப்படுவீர்கள். பயணங்களினால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு எதிர்பார்த்திருந்த வெளிநாடு பயணம் கைகூடி வரும். திருமணக் கனவுகள் நனவாகும்.

ஐந்திற்குரியவர் ஒன்பதில் இருப்பதினால் புகழ் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழக்குகளை சிலர் சந்திக்க வேண்டி வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபார முன்னேற்றத்தை முன்னிட்டு சிலர் வெளிநாடு பயணம் செல்வர். புது முயற்சிகளில் வெற்றி பெற நண்பர்கள் உதவுவர்.

கலைத் துறையில் உள்ளவர்களுக்கு திசை மாறிச் சென்ற வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அரசியலில் பொறுப்புகள் மாறும். மாணவர்களுக்க்கு படிப்பில் சற்று கூடுதல் கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: இல்லை

பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் திருமுருகனை வழிபடவும். தினமும் கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்யவும்.

கன்னி: (உத்திரம் 2, 3 ,4, ஹஸ்தம், சித்திரை 1, 2) உழைப்பினை உலகிற்கு சொல்லும் கன்னி ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சனி, மூன்றாமிடத்தில் ராகு, ஆறாமிடத்தில் சூரியன், ஏழில் ராசிநாதன் புதன், எட்டாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஒன்பதாமிடத்தில் கேது, பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாய் என கிரக நிலவரம் உள்ளது. 12ம் தியதி ராசிநாதன் புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

தன விரையஸ்தானமும் சுகஸ்தானமும், குருவின் பார்வையைப் பெறுகின்றன. எனவே பொருள் வரவு நிறைந்திருக்கும். குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். எனினும் குரு பார்வை இருப்பதால் உடனடியாக மறையும். மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதாலும், மூன்றாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதாலும் உடன் பிறந்தோரிடம் மனக்கசப்பு ஏற்படலாம். எனவே அவர்கலை அனுசரித்து செல்லுங்கள். சுற்றியிருப்பவர்கள் உங்கள் சொல்லை செயலாக்க உங்களுக்கு உதவி புரிவர். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். குறுகிய பிரயாணமோ நீண்ட பிரயாணமோ எதுவாகினும் கவனமுடன் இருங்கள்.

பூமி யோகம் உண்டு. பழைய வீட்டை புதுப்பிக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உதவிகள் வந்து சேரும். தாய் வழி ஆதரவு அதிகரிக்கும். வாகன் மாற்றம் செய்யும் சூழல் ஏற்படும். வாகனங்களை பிரயோகபடுத்தும் முன் சரி பார்த்து பின்னர் உபயோகப்படுத்தவும். இல்லம் தேடி வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆடை ஆபரணங்களுக்கு செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்ரம் நிகழும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் பாராட்டும் பரிசும் பெறுவதற்கு ஏற்ற காலமிது.

சந்திராஷ்டம் தினங்கள்: இல்லை

பரிகாரம்: திருமாலை புதன் தோறும் வழிபடுங்கள். வராஹி தேவியை தரிசனம் செய்யுங்கள்.

துலாம்: (சித்திரை 3, 4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3) யாரையும் எளிதில் நம்பிவிடாமல் ஆராய்ந்து பேசும் துலாம் ராசி வாசகர்களே, ராசியில் சனி, இரண்டாமிடத்தில் ராகு, ஐந்தாமிடத்தில் சூரியன், ஆறாமிடத்தில் புதன், ஏழாமிடத்தில் சந்திரன், குரு, ராசியாதிபதி சுக்கிரன், எட்டாமிடத்தில் கேது, லாபஸ்தானமான பதினொன்றில் செவ்வாய் என கோள்கள் நிலவுகின்றனர். 12ம் தியதி பாக்கிய விரையஸ்தானாதிபதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி லாபாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்று ஆறுக்கு உடைய துர்ஸ்தானாதிபதி குருவின் பார்வை ராசியில் ஏற்படுகிறது. எனினும் சுகஸ்தானாதிபதி ராசியில் இருப்பதாலும் ராசியாதிபதி சுக்கிரன் ஏழில் இருப்பதாலும் வரவுக்கு ஏற்றவாறு செலவுகளும் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். தனாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. எதிர்பார்த்திருந்த பண வரவுகள் தேடி வந்தடையும். ராகு கேதுவின் நிலையால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல்கள் ஏற்படலாம்.

மூன்றாம் வீட்டிற்குடையவர் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் கை கூடி வரும். மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டி வரும். வீடு, நிலம் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சென்ற நாட்களில் நடைபெறாத சில காரியங்கள் முக்கியஸ்தர்கள் மூலமாக இனிதே நிறைவேறும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்களோடு சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு சில வாய்ப்புகள் தவறக் கூடும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய தொல்லைகள் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனம் தேவை.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 01

பரிகாரம்: திருமகளை ஆராதியுங்கள். முன்னோர்களை தினமும் வழிபடுங்கள்.

விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிலும் நேர்படப் பேசும் விருச்சிக ராசி வாசகர்களே ராசியில் ராகு, நான்காமிடத்தில் சூரியன் ஐந்தாமிடத்தில் புதன், ஆறாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஏழாமிடத்தில் கேது, பத்தாமிடத்தில் செவ்வாய், பன்னிரெண்டாமிடத்தில் சனி என கிரக அமைப்பு உள்ளது. 12ம் தியதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி கர்மாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் அமர்ந்திருந்து ராசியைப் பார்க்கிறார். தனஸ்தானத்தை குரு பார்க்கிறார். எனவே தடை பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பொருள்வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் தொடரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். இனிமையாக பேசுவதில் வல்லவரான நீங்கள் காரியங்களை சாதித்து கொள்வீர்கள்.

தன வாக்கு குடும்ப பூர்வ புண்ணியஸ்தானாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். பயணங்களால் பயன் கிடைக்கும். வங்கிகளில் சேமிப்புகள் உயரும். விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்களை வாங்குவீர்கள்.

ராசியாதிபதி பத்தில் இருப்பதால் தெய்வ காரியங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களிடம் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நிலம் வீடு சம்பந்தமாக உள்ள முயற்சிகள் கைகூடும். பெண்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு நிரந்தமாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவார்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 01, 02, 03

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் தரிசனம் செய்யுங்கள்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) எதிலும் தெய்வநம்பிக்கையுடன் போராடும் தனுசு ராசி வாசகர்களே மூன்றாமிடத்தில் சூரியன், நான்காமிடத்தில் புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், ராசிநாதன் குரு, சுக்கிரன், ஆறாமிடத்தில் கேது, ஒன்பதாமிடத்தில் செவ்வாய், பதினொன்றில் சனி, பன்னிரெண்டாமிடத்தில் ராகு என கிரகங்கள் பவனி வருகிறார்கள். 12ம் தியதி சப்தம கர்மாதிபதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி பாகியஸ்தானாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதனின் பார்வை, தன குடும்பஸ்தானாதிபதியின் பார்வை என அனைத்து விதங்களிலும் நன்மைகளையே பெறும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். கவனம் தேவை.

பாக்கியஸ்தானம் வலிமை பெறுவதால் தந்தையின் தொழில் வளம் பெருகும். குடும்ப பிரச்ச்னைகளும் முடிவுக்கு வரும். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மையை தரும். நற்செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள்.

நான்குக்கு உடையவர் ஐந்தில் இருப்பதால் வீடு நில புலன்கள் உங்களை வந்தடையும். அதிலுள்ள பிரச்சனைகளும் தீரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். ஐந்தில் குருவும், ஆறில் கேதுவும் இருப்பதால் பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. வியாபாரிகள் வெளிநாட்டு பயணம் செல்வார்கள்.

கலைதுறையினர் அயல்நாடு செல்வார்கள். அரசியலில் நல்ல வாய்ப்புகள் தேடி வரலாம். மாணவர்கள் போட்டிகளில் பரிசுகள் வாங்குவார்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 04, 05, 06

பரிகாரம்: அனுமனை வணங்குங்கள். ஷஷ்டி தோறும் குமரனை வணங்குங்கள்.

மகரம்: (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2) அடுத்தவரின் உணர்வுகளையும் உணரும் மகர ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சூரியன், மூன்றில் புதன், நான்காமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஐந்தாமிடத்தில் கேது, எட்டாமிடத்தில் செவ்வாய், பத்தாமிடத்தில் ராசிநாதன் சனி, லாபஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வீற்றிருக்கிறார்கள். 12ம் தியதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி அஷ்டமாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்றுக்கும் ஐந்துக்கும் ஏழுக்கும் உடையவர்கள் நான்கில் அமர ராசியாதிபதி பத்தில் இருக்க உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூர்யன் அமர அவரை செவ்வாய் பார்ப்பது சரியல்ல. குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து வந்து மறையும். எனினும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு சந்திர யோகத்தால் பாராட்டும் புகழும் கிடைக்கும். பிள்ளைகளின் மீது தனி கவனம் தேவை. சிலருக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

வாகன வசதிகள் பெருகும். தாய்க்காக எந்த தியாகத்தையும் செய்து அதற்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். மூன்றில் இருக்கும் புதனால் சகோதர சகோதரிகளிடையே பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அதற்கான பாராட்டுதல்கள் பரிசுகளை ஆகியவற்றைப் பெறுவீர்கள். லாபத்தில் இருக்கும் ராகுவினால் இயந்திரம் சம்பந்தமான வியாபாரத்தில் செல்வம் பெருகும்.

சிலருக்கு பரம்பரை தொழிலில் லாபம் கிடைக்கும். உலக வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார். மன நல ஆலோசகர்களாக இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குறிப்பாக மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

கலைஞர்கள் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 07, 08, 09

பரிகாரம்: சூரிய ஆராதனையும், சுப்பிரமணிய ஆராதனையும் செய்யுங்கள்.

கும்பம்: (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3) எதிலும் முழுமையாக ஈடுபடும் கும்ப ராசி வாசகர்களே ராசியில் சூரியன், இரண்டாமிடத்தில் புதன், மூன்றாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், நான்காமிடத்தில் கேது, ஏழாமிடத்தில் செவ்வாய், ஒன்பாதமிடத்தில் சனி, பத்தாமிடத்தில் ராகு என கிரக இயக்கம் காணப்படுகிறது. 12ம் தியதி புதன் உங்கள் ராசிக்கும், 14ம் தியதி சூரியன் உங்கள் ராசியிலிருந்து மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் சனி சுக்கிரன் வீட்டில் அமர அவரை யோககாரரான சுக்கிரன் பார்க்க மிகவும் சாதகமான நிலையில் உள்ளது. எனினும் ராசியில் சூரியன் இருப்பது உகந்த இடமல்ல. எனவே உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பஸ்தானத்தில் அஷ்டமாதிபதி புதன் இருக்க அவரை செவ்வாய் பார்ப்பதும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டியதை காட்டுகிறது. மூன்றாமிடத்தில் குரு இருப்பதால் சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.

மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகளும் விருகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். புதிய உத்தியோகம் கிடைக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். ஏழில் இருக்கும் செவ்வாயால் எதிரிகள் உங்கள் முன் அடங்குவர். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 09, 10, 11

பரிகாரம்: சனிபகவானுக்கு விளக்கு ஏற்றுவதும், ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் செய்வது நன்மையைத் தரும்.

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) நட்புக்காக உதவிகள் புரியும் மீன ராசி வாசகர்களே ராசியில் புதன், இரண்டாமிடத்தில் சந்திரன், ராசிநாதன் குரு, சுக்கிரன், மூன்றாமிடத்தில் கேது, ஆறாமிடத்தில் செவ்வாய், எட்டாமிடத்தில் சனி, ஒன்பதாமிடத்தில் ராகு, பன்னிரெண்டாமிடத்தில் சூரியன் என கிரக நிலை உள்ளது. 12ம் தியதி புதன் உங்கள் ராசியிலிருந்து கும்பத்திற்கும், 14ம் தியதி சூரியன் உங்கள் ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் குரு இரண்டில் அமர ராசியை செவ்வாய் பார்க்க குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குரைபாடு வரலாம். இரண்டாம் வீடு பத்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடாக அமைவதால் நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். எனினும் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பது சிறிய அளவிலான குழப்பத்தை தரலாம். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும்.

பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும்.

பிள்ளைகளின் மேல் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 11, 12, 13

பரிகாரம்: சனீஸ்வரரை வலம் வாருங்கள். தினமும் சிவாலயத்திற்கு சென்று வாருங்கள். (வைணவர்கள் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லுங்கள்)

------------------ * ------------------- * --------------------------
ஆறில் இருக்கும் கிரகங்கள்

ஆறாம் வீடு (பாவம்) ரண ருண ரோகஸ்தானம் எனப்படும். தாய்மாமன் பற்றியும் இந்த வீடு உணர்த்தும். கீழா விழுதல், தடைகள், சறுக்கல், சண்டைகள், மனநோய், சிறைவாசம் முதலியவை பற்றியும் இந்த இடத்திலிருந்து அறிய முடியும்.

நல்ல அமசங்களைப் பொறுத்தவரை லாபம், பணி செய்தல் இரண்டையுங்கூட இந்த இடத்திலிருந்த நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த வீட்டுக்குரிய கிரகம் பலம் பெற்றிருந்தால் நலல்து. ஆனால் லக்னாதிபதியை விட ஆறாம் வீட்டதிபதி பலம் பெற்றிருப்பது நல்லதல்ல.
லக்னம் என்பது ‘தான்’ ஆறாம் வீடு என்பது ‘பகைவன்’. இதிலிருந்து ஓர் உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம். தன் பகைவனை காட்டிலும் தான் பலமாக இருந்தால்தானே பகைவனை முறியடிக்கவும், வெற்றி காணவும் முடியும். ஆறாம் வீட்டதிபதி வலுத்து லக்னேசன் வலுவிழந்து இருந்தால் பகவரிடம் தோற்று அவரது அடிமையாகவும் நிலைகூட ஜாதகருக்கு ஏற்படலாம். அதே போல் நோய் சுமையை தாங்கும் சக்தியை கூட ஜாதகர் இழக்கக்கூடும். அதே வேளையில் லக்னாதிபதி ஆறாம் வீட்டு அதிபதியை காட்டிலும் ஆற்றல் பெற்றிருந்தால் ஜாதகருக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து காணப்படும். ஆறாம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுப பார்வை பெற்றிருந்து லக்னாதிபதியும் வலுப்பெற்று இருந்தால் ஜாதகருக்கு நோயற்ற சுக வாழ்வு அமையும். ஆனால் ஆறாம் வீட்டு அதிபதியுடன் பாபக்கிரஹங்கள் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் காயம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆறாம் வீட்டு அதிபதி மறைந்திருந்தாலோ அஸ்தங்கம் ஆனாலோ ஜாதகருக்கு பகைவரை வெல்லும் பராக்கிரமம் ஏற்படும்.

முதலில் ஆறாம் வீட்டில் இருக்கும் கிரகங்களைப் பற்றிய விளக்கங்களைப் பார்போம். அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.


6-ல் சூரியன்:
ஜாதகருக்கு பலமுண்டாகும். பகைவரால் அச்சம் உண்டாகும். ஆனால் பகைவரை வெல்லும் ஆற்ற்ல் ஏற்பட்டுவிடும். உயர்வாழ்வு அமையும். செல்வம் சேரும். சிற்றின்ப நாட்டம் அதிகமாகும். கௌரவமான பதவி, அரசு அந்தஸ்து கிடைக்கும். மனைவியின் நலம் சிற்சில நேரங்களில் பாதிக்கப்படும். கடுஞ்செலவு ஏற்படக்கூடும்.

6-ல் சந்திரன்:
ஜாதகருக்கு பகைவர்கள் அதிகமாவார்கள். வயிற்றிவலி காரணமாக உபாதைகள் ஏற்படலாம். பலவீனமான சந்திரன் என்றால் மற்றவகளின் சொற்களுக்கு அடிபணிய வேண்டி வரும். இந்த நிலையில் உள்ள ஜாதக்ருக்கு பொருத்தமான ஊழியர்கள் அமைவார்கள். இளமையில் ஜாதகருக்கும் சந்தோஷம் உண்டாகும். பலமான சந்திரன் என்றால் ஜாதகருக்குப் பெருமை, புகழ், பெருந்தன்மை, சுகவாழ்வு எல்லாம் அமைய வாய்ப்புண்டு.

6-ல் செவ்வாய்:
ஜாதகருக்கு சரீர பலம் ஏற்படும். பகைவரை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். சிற்றின்ப இச்சை அதிகமாக இருக்கும். ஜீரணசக்தி சரியாக இருக்கும். புகழ் பொருள் சேரும். கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பணம் நிரைய செலவாகும். உச்சம் அல்லது ஆட்சி செவ்வாய் என்றால் ஜாதகரை செவ்வாய் உயர்த்துவார். உத்தியோகம் முறையாக பார்த்து ஜீவனம் செய்வார்கள்.

6-ல் புதன்:
ஜாதகருக்கு பொதுவில் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் வாதப்பிரதிவாதங்கள் சச்சரவுகளுக்கு இடமுண்டு. பேச்சு கூர்மையானதாக இருக்கும். சோம்போறித்தனம் உண்டு. சரீர நோய் உண்டு. க்ஷயம் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். பலமுள்ள புதனாக இருந்தால் 6ல் இருப்பது நன்மையே. இந்த நன்மை முழுமையாக கிடைப்பதற்கு சுபகிரஹங்களின் பார்வை அவசியம். பலன் பெற்ற புதனால் ஒருவர் தொழிலதிபர் ஆவதற்கு கூட வழியுண்டு.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
இணையம்: http://kuppuastro.in/
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

தொடரும்.....

Read More...

சும்மா டெஸ்ட் :-)





கேள்வி பதில்: அரசு பதில்கள், குமுதம்

Read More...

Tuesday, February 21, 2012

ஜெயலலிதா சொன்ன இட்லி கதை

சென்னையில் 64 ஜோடி திருமண விழாவில் முதல்மைச்சர் ஜெயலலிதா சொன்ன இட்லி கதை !

’’புரிதல் என்கிற ஒரு வார்த்தையில்தான் மண வாழ்க்கையின் வெற்றி என்பது உறுதியாகிறது. அந்தப் புரிதலைத் தருவது அன்பு. உண்மையான அக்கறையில் எழுகின்ற அன்பு. இதற்கு ஒரு சிறு கதையை இங்கே நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12 இட்லிகள்தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது.



சரி, கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான்.

அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் 'எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா' என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள்.

அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கண வனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.


மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் 'எனக்குப்போதும்.

நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?' என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது! அந்த நேரத்தில் இவளோ 'அண்ணா உங்களுக்கு...' என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க, 'போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...' என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.


கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்றபோது 'மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு' என்று கணவன் சொல்ல, தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே, தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

ஜெயலலிதா சொன்ன தோப்பு கதை
அதே விழாவில் அவர் சொன்ன இன்னொரு கதை..

’’ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே, என்ற வரிகளை மனதில் வைத்து நீங்கள் ஒற்றுமையுடன் இருந்தால் அது வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும்.


ஒரு சமயம் சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழில் மிகுந்த ஓர் இடத்தை பார்வையிட்டு சென்று கொண்டிருந்தனர். பயண வழிகாட்டி ஒருவர், ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களிடம் விரிவாக எடுத்துக் கூறினார்.

அப்போது, மிக உயரமான பெரிய மரங்கள் நெருக்கமாக அடர்த்தியாக வளர்ந்திருப்பதை சுற்றுலாப் பயணிகள் கண்டு வியப்புடன் நின்றார்கள். அது குறித்து வழிகாட்டியிடம் வினவினர்.


அதற்கு அந்த வழிகாட்டி, “வானம் தொடும் வரை வளரும் இம்மரங்கள் பெரு மழை மற்றும் சூறாவளிக் காற்று அடித்தாலும் விழுந்து போகாமல் அப்படியே இருக்கும். இந்த மரங்களின் வேர்கள் பூமியில் ஆழமாகக் கூட செல்வதில்லை; சில அடி தூரம் தான் செல்கின்றன என்று கூறினார்.


அது எப்படி முடியும்? இவ்வளவு பெரிய உயரமான மரத்தை அந்த சிறிய வேர்கள் எப்படி தாங்கிக் கொள்ளும்? சூறாவளிக் காற்று அடித்தால் நிச்சயமாக மரம் வேரோடு சாய்ந்து விடும் என்று ஒரு சுற்றுலாப் பயணி கூறினார். அதற்கு அந்த வழிகாட்டி அந்த மரம் தனித்தனியே வளருவது இல்லை.


அருகருகே வளர்ந்து ஒரு தோப்பை போன்று காட்சி தருகின்றது. ஒவ்வொரு மரமும் பார்ப்பதற்கு தனி மரமாக தெரிந்தாலும் அதன் வேர்கள் ஒன்றுடன் ஒன்று, பின்னிப் பிணைந்து இருக்கின்றன. அதனால் சூறாவளிக் காற்று வீசினாலும் ஒவ்வொரு மரத்தின் வேர்களும் தன் அருகில் இருக்கும் மரங்களின் வேர்களை அணைத்து இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றன என்று கூறினார்.


இந்த இயற்கையின் படைப்பாற்றலை நீங்கள், உங்கள் இல்லங்களில் பின்பற்றினால்; ஒற்றுமையை நிலைநாட்டினால்; அன்புடன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்; சோதனைகள் சாதனைகளாகும்; தடைக் கற்கள் படிக்கற்களாகும்; உங்களுடைய வாழ்க்கை அமைதியானதாக, மகிழ்ச்சிகரமானதாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு;

எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் இந்த ஒற்றுமையை, இந்த அன்பினை உங்களுடைய பொது வாழ்க்கையில் அரசியல் வாழ்க்கையில் கடைபிடித்து மக்கள் பணியாற்றினால்;

வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தருவார்கள் என்பதைத் தெரிவித்து; அதற்கான பணியினை நீங்கள் இப்பொழுதே துவக்க வேண்டும் என்று உங்களை யெல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு; முதியோருக்கு தேவையானவற்றை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு செய்து கொடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறினார்.

கடைசி செய்தி: விஜயகாந்த், அதிமுக Patch up நடந்துக்கொண்டு இருக்கிறது. நடத்துபவர் சோ !. படத்தில் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரியாது, இட்லியாக கூட இருக்கலாம் :-)

Read More...

Saturday, February 18, 2012

சம்மந்தமில்லா ரெண்டு செய்திகள்

(1) பெங்களூரு கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று ஆஜரான சசிகலா வங்கிக் கணக்குகளை தானே பார்த்ததாகவும், ஜெயலலிதாவுக்குச்சம்மந்தம் இல்லை என்று சன்னமான குரலில் கூறி அழுதுள்ளார்.
(2) காங்கிரஸ் தயவு (ஆதரவாமாம்!) இருப்பதால்தான் தான் அமைச்சராக இருப்பதாக முக அழகிரி கூறியுள்ளார்.



படம் மட்டும் ஏன் சம்மந்தமா இருக்கணும்? :-)

அப்டேட்:
சற்று முன் வந்த சம்மந்தமான செய்தி: சசிகலா கணவர் நடராஜன் கைது, நில அபகரிப்பு ஊழல் சம்மந்தமாக.


Read More...

Friday, February 17, 2012

"இ'லக்கி'ய போட்டி" முடிவு

இரண்டு பேருக்கு பரிசு :


தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னூட்டங்கள்
1. அழிந்து வரும் தேசிய இனமாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள் - முரளிகண்ணன்

2. எட்டு மணி நேரம் என்ன பத்து மணி நேரம் கூட கரண்ட் கட் பண்ணிக்குங்கன்னு இருப்பாங்கல - Muthu

தங்கள் தொலைப்பேசி எண்ணுடன் முகவரியை idlyvadai2007@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும் புத்தகம் அனுப்பிவைக்கிறேன். சாட்டிலும் சொல்லலாம். நன்றி

அடுத்த போட்டி விரைவில்..

Read More...

(ஓசி)முனிமலர் 17-2-2012

முன்குறிப்பு:
"சடைத்தனமாக இருப்பதால் இது அநங்கன் எழுதியது என்று நினைக்கிறேன்" என்ற கமெண்ட் வந்தவுடன் அநங்கன் டென்ஷன் ஆகி இவ்வாறு எழுதியிருந்தார்...

அடப்பாவி அநானி. இதை நான் எழுதவில்லை. நான் எழுதியதை தூக்கக் கலக்கமாக இருந்ததால் இட்லி வடை போடவில்லை. இனிமேல் போடுவாரா என்றும் தெரியாது. இட்லிவடை ஏரியாவில் அடிக்கடி ஃபீஸைப் பிடுங்கி விடுகிறார்களாம், பாவம். :-(

அது சரி, எழுத்தின் ஸ்டைலை வைத்து அதை யார் எழுதியிருப்பார்கள் என்று கூட உங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் நான் என்னத்தச் சொல்ல?

அவர் எழுதிய முனி மலர் ( சில வாரங்களுக்கு முன் எனக்கு அனுப்பியிருந்தார் கொஞ்சம் எடிட் செய்து, சில இடங்களில் மாற்றம் செய்து இங்கே... )

நிச்சயம் நான் எழுதிய முனி மலரைக் காட்டிலும் நன்றாக இருக்கும். திட்டுவதாக இருந்தால் என்னை திட்டவும்
நன்றி
இட்லிவடை



முனிமலர் ஆசிரியர் : முனி - பொறுப்பாசிரியர், வெளியீட்டாளர் : இட்லிவடை
சிறப்புச் செய்தியாளர்: அநங்கன்


செய்திகளில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே அல்ல; இறந்தோர் இருப்போர் என எவரையும் குறிப்பன ஆகா ஆகும்.

ஸ்டாலின் திமுக தலைவராகிறார்!
சென்னை: பிப்ரவரி 3 அன்று திமுகவின் பொதுக் குழு கூட இருக்கிறது. அன்று என்ன நடக்கும் என நாடே எதிர்பார்த்திருக்கும் சூழலில் பொதுக்குழுவில் எடுக்கப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. பெயர் வெளியிட விரும்பாத கலக முன்னணித் தலைவர் ஒருவர் மூலம் கசிந்துள்ள இத்தகவல்கள் உறுதியானதுதான் என்கிறது நம்பத்தகாத வட்டாரம். இதன்படி ஸ்டாலின் திமுக தலைவர் ஆகிறார். இதுவரை தலைவராக இருந்த கருணாநிதி ஓய்வு பெற இருக்கிறார்.

அழகிரி பொதுச் செயலாளர் - உதய நிதி இளைஞர் அணித் தலைவர்
அழகிரி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். உதய நிதிக்கு இளைஞர் அணித் தலைவர் பதவி வழங்கப்பட இருக்கிறது.




குஷ்பு கொபசெ
கட்சி வளர்ச்சிக்கு தீவிரமாக உழைத்து வரும் குஷ்புவின் “பணிகளை”ப் பாராட்டும் வகையில் அவருக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட இருக்கிறது.

கனிமொழிக்குக் கல்தா
கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும் என கருணாநிதி நினைத்தாலும் குடும்ப எதிர்ப்பால் தற்போது அதைக் கைவிடும் நிலையில் இருக்கிறார். இதற்குப் பதிலாக மத்திய அமைச்சர் பதவி அல்லது ஊழல் ஒழிப்புத் துறையின் தலைவர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தோழிகள் சந்திப்பு?
பிரிந்தது பிரிந்தது தானா, மீண்டும் இணைய மாட்டார்களா, நாம் எப்படிப் பிழைப்பு நடத்துவது என்றெல்லாம் பல குப்பாச்சு-குழப்பாச்சுக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த வேலையில் உடன்பிறவா தோழிகள் சந்திப்பு இன்று அதிகாலை நிகழ்ந்ததாக தோட்டத்து வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை ரகசியமாக நடந்த சத்ரு-சம்ஹார யாகத்தில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு ஒருவர் வந்து கலந்து கொண்டதாக நம்பத்தகாத வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அது யார் என்ற ஆர்வத்தால் ஐந்து வயது பையன் முக்காடை எடுக்க எல்லோருக்கும் அச்‘சோ’ என்று ஆகிவிட்டது. சென்னையில் அதிக பனி பெய்ததால் அவர் அப்படி முக்காடு போட்டுக் கொண்டு வந்து கலந்து கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.


இந்தியா முழுவதும் அணு உலைகளை மூட வேண்டும் - வைகோ போராட்டம்
கல்பாக்கம்: கூடங்குளத்தைத் தொடர்ந்து கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தையும் மூட வேண்டும் என வைகோ போராட்டம் நடத்தினார். இந்தியா முழுவதும் உள்ள அணுமின் உலைகள் பாதுகாப்பாற்றவை. அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர் கூறினார். உடன் இருந்த ராமதாஸூம் அதனை வரவேற்றுப் பேசினார். அப்படியானால் ஏற்கனவே இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழகம் முற்றிலும் இருளில் ஆழ்ந்து விடுமே என்று நிருபர்கள் கேட்டதற்கு ராமதாஸ், “ ரொம்ப நல்லது. டி.வி. இண்டர்நெட், ஃபேஸ் புக், ஈமெயில் எதையும் பார்க்க முடியாது. மக்கள் ரொம்ப நிம்மதியா இருக்கலாம். இனி எல்லோரும் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் படுத்து விட வேண்டும். எட்டு மணிக்கு மேல் யாராவது வெளியே தலைகாட்டினால் அவர்களை சவுக்கால் அடிக்க வேண்டும். எட்டு மணிக்கு மேல் வீட்டிற்கு வருபவர்கள், ஒவ்வொரு தெரு முனையிலும் நின்று கொண்டிருக்கும் பாமக தொண்டர்களிடம் வாயை ஊதிக் காண்பித்து, ’குடிக்கவில்லை’ என்று உறுதிப்படுத்தப் பட்ட பிறகுதான் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

“உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சில பெண்களே குடிப்பதாக பேப்பரில் புகைப்படத்துடன் செய்தி வந்ததே என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, ராமதாஸ் ஆத்திரத்துடன் “அது விஷமிகளின் சதி. குடிப்பது மாதிரி அந்தப் பெண் சாராயத்தை வாயில் ஊற்றிக் காண்பித்தார். அவர் துப்புவதற்குள் புகைப்படக்காரர் படம் எடுத்து விட்டார்” என்றார். ராஜ்யசபாவிற்கு அன்புமணி போன்றவர்களை அனுப்பினால் தமிழர்களின் அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கி விடும்” என்றார் அவர் உறுதியுடன்.

நித்யானந்தா ஆசிரமத்தில் திவாகரன்?
நாடெங்கும் வலைவீசித் தேடப்பட்டு வரும் திவாகரன் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பதுங்கி உள்ளதாகத தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் போலீஸ் படை அங்கு விரைந்துள்ளது. அதே சமயம் அவர் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது என்றும் கூறப்படுகிறது.போலீஸ் தேடும் வேட்டையில் ஈடுப்படுத்தப்பட்ட போது அங்கே கர்நாடகாவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் பதுங்கி இருந்ததாக தெரிகிறது.

நானும் எம்பி ஆக வேண்டும் - செந்தில் கோரிக்கை
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் அதிமுக தலைவர் ஒருவருக்கு கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார்.

“தங்கத்தாரகை, பாரதத்தின் வருங்காலப் பிரதமர் அம்மாவுக்கு என் அன்பு கலந்த நன்றி கலந்த மரியாதை கலந்த வணக்கங்கள். அண்ணன் எஸ்.எஸ். சந்திரனை எம்பி ஆக்கினீங்க. அவரு போய் ’எல்லாத்தையும்’ ’பாத்துட்டு’ வந்ததாச் சொன்னார். அண்ணன் ராமராஜனை எம்பி ஆக்கினீங்க. அவரு நான் வாஜ்பாயைப் பாத்தேன்; சோனியா காந்தி அம்மாவைப் பார்த்தேன். லல்லு பிரசாத் யாதவ் வீட்டுல விருந்து சாப்பிட்டேன்னுல்லாம் சொல்றாரு. எனக்கும் அவங்களை எல்லாம் பக்கத்துல இருந்து பாக்கணும்னு ஆசையா இருக்கு. நானும் டெல்லி, ஆக்ரா, தாஜ்மகாலை எல்லாம் பாக்கணும்னு ஆசைப்படறேன். என்னையும் எம்பி ஆக்குங்க” என்று அதில் கோரிக்கை வைத்துள்ளார்.
இது பற்றி நடிகர் கவுண்டமணியிடம் கேட்டதற்கு “அட்ரா சக்கை அட்ரா சக்கை.. ஊஊ.. ஊ... ஊ...” என்றவர், “பார்லிமெண்ட் மண்டையனே பார்லிமெண்ட் போனா வெளங்குமா?” என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டார்.

மக்கள் பிரச்சனைகளுக்காக மொட்டை அடித்துக் கொள்ள நடிகர்கள் தயாரா? - ராமதாஸ் சவால்
சினிமாவில் நடிப்பதற்காக மொட்டை அடித்துக் கொள்ளும் நடிகர்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக மொட்டை அடித்துக் கொள்ளத் தயாரா? என்று ராமதாஸ் சவால் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் போதிதர்மன் மக்கள் பேரவை சார்பாக அன்புமணி ராமதாஸூக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட ராமதாஸ், “நாம்தான் போதி தர்மரின் உண்மையான வாரிசுகள் என்பது சீனாக்காரனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இங்குள்ள மடத்தமிழர்களுக்கு அது தெரியவில்லை. நாம் அதைத் தெரியப்படுத்த உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் போதிதர்மனின் ஆட்சி மலரப் பாடுபட வேண்டும். சினிமாவில் துட்டு வாங்கிக் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் நிஜவாழ்வில் முல்லை பெரியாறு, கூடங்குளம் அணுமின் பிரச்சனை, கச்சத் தீவுப் பிரச்சனை போன்றவற்றிற்காக போராடத் தயாரா? நாம் நேற்று இங்கே அந்தப் பிரச்சனைகளை வலியுறுத்தி கோவண ஊர்வலம் நடத்தினோம். தைரியமிருந்தால் நடிகர்கள் இந்தப் பிரச்சனையை வலியுறுத்தி மொட்டை அடித்துக் கொண்டு கோவண ஊர்வலம் போகத் தயாரா?” என்று சவால் விட்டார். மேடையில் இருந்த கோ.க. மணி, காடு வேட்டி குரு, சோடா புட்டி ரவி ஆகியோர் ராமதாஸின் இந்தக் கேள்வியை கை தட்டி ஆரவாரித்தனர்.

ரஜினி ”நச்” பேட்டி
சென்னை விமான நிலையத்தில் நேற்று திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. நிருபர்களின் கேள்விகளும் அவரது பதில்களும்

கே: கோச்சடையான் எப்போது?

ப: விரைவில்

கே: உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது?

ப: ஹா.ஹ்ஹா.. ஹா.. நன்றாக இருப்பதால் தானே உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

கே: தனுஷை உலக நாயகன் என்று சிலர் சொல்கிறார்களே!

ப: தனுஷ் நல்ல நடிகர். சிறந்த பாடகர் என்பதை நிரூபித்திருக்கிறார். உலகம் முழுவதும் அவர் புகழ் பரவியிருப்பது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது.

நிரு 1: நீங்கள் ரசிகர்களைச் சந்திப்பது எப்போது...
நிரு 2: தனுஷுக்கும்....

(கேள்வியை முடிக்கும் முன்பே) ஹே.. ஹே.. அவர் நல்ல நடிகை. நன்றாகப் பாடுகிறார். என் இனிய நண்பரின் மகள். புலிக்குப் பிறந்தது பூனையில்லை என்று நிரூபித்திருக்கிறார்.அவர்களுக்கு என் வாழ்த்துகள். நிச்சயம் 3 படம் வெற்றி அடையும். ரசிகர்களை விரைவில் நேரில் சந்திப்பேன். எல்லோருக்கும் நன்றி. வணக்கம் என்று சொல்லி விட்டு வேகமாக விமான நிலையத்தினுள் சென்று விட்டார். அடுத்த பிளைட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகிறார் என்ற பலர் பேசிக்கொண்டார்கள்

எழுத்தாளர்கள் சந்திப்பில் அடிதடி - பிரபல எழுத்தாளர்கள் கட்டிப் புரண்டு சண்டை
சென்னை: சமீபத்தில் பிரபல எழுத்தாளருக்கு வழங்கப்பட்ட விருதை ஒட்டி அவருக்கு பிரபலங்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது திடீரென மேடை ஏறிய ”குட்டி” எழுத்தாளர் ஒருவர் ”இந்த எழுத்தாளர், விருது பெறுவதற்குத் தகுதியானவர் இல்லை; என்னுடைய ஒன்று விட்ட சித்தப்பாவின் தாத்தாவினுடைய ஆவணங்களைக் காப்பி அடித்து புத்தகமாக எழுதி விட்டார்” என்று குறை கூறியதுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைத் தூக்கித் தாறுமாறாக வீசினார். அது சில வாசகர்கள் தலையில் விழுந்து பலத்த காயத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மற்றொரு பிரபல எழுத்தாளருக்கும் ’குட்டி’ எழுத்தாளருக்கும் சண்டை மூண்டது. கட்டிப் புரண்டு இருவரும் போட்ட சண்டையில் பிரபல எழுத்தாளரின் முட்டி உடைந்தது. ’குட்டி’ எழுத்தாளரின் சட்டை கிழிந்தது. ஆத்திரத்தில் பிரபல எழுத்தாளர் குட்டி எழுத்தாளரின் காதைக் கடித்து விட்டதால், குட்டி எழுத்தாளர் ”அய்யோ.. அன்னா.. அயல்... இயல்... கயல்.. காவல்..” என அலறிக் கொண்டே வெளியே ஓடித் தப்பித்தார். இதனால் சில மணி நேரம் நிகழ்ச்சி தடைப்பட்டுப் பின் தொடர்ந்தது. இதை எல்லாம் தன் ஐ.போனில் படம் பிடித்துக்கொண்டு இருந்த மற்றொரு எழுத்தாளர் கூடிய சீக்கிரம் இந்த காட்சிகளை தன்னுடைய சீரியலில் சேர்ப்பார் என்று தெரிகிறது.

”மேதை” டிக்கெட் இலவசம்
தான் நடித்த ”மேதை” படத்தின் டிக்கெட்டுகளை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக நடிகர் ராமராஜன் தெரிவித்தார். நேற்று சேலத்தில் இலவச ஆடு, மாடு வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாடுகளை வழங்கிய ராமராஜன், பள்ளி மாணவர்கள் மாடு மேய்க்கப் போகக் கூடாது என்று தான் மிகவும் விரும்புவதாகவும், அதற்காக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தான் நடித்த ”மேதை” படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். அதனைக் கேட்ட மாணவர்கள் சிலர், “ அந்தப் படத்தைப் பாக்கறதுக்கு பதிலா மாடு மேய்க்கவே நாங்க போயிடறோம். எங்களை விட்டுடுங்க..” என்று கதறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினர்.

வள்ளுவர் கோட்டம் இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
இன்றைக்கு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்படுவதாவது... ”தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகியவற்றை இணைக்கும் மையப்பகுதியாக வள்ளுவர் கோட்டம் இருக்கிறது. ஆனால் அது அங்கு இருப்பதால் பேருந்துகள் சுற்றிச் செல்ல நேரிடுகிறது. சிக்னலுக்காக பேருந்துகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு வள்ளுவர் கோட்டம் இடிக்கப்பட்டு அங்கே புதிய நான்கு வழி மேம்பாலம் அமைய இருக்கிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளூவர் கோட்டம் இடிப்பு பற்றி துக்ளக் சோவிடம் கேட்டதற்கு ஆண்டு விழா நடந்துவிட்டது அதனால் எனக்கு கவலை இல்லை. அடுத்த வருடம் இதை பற்றி கவலைப்படுகிறேன் என்று நக்கலாக பதில் அளித்தார்.

சாலை வரி!? - நமது நிருபர்
தமிழக அரசு தற்போது பெரும் வருமானப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. சமாதிகளைச் சீர் செய்வது, எம்.எல்.ஏக்களுக்கு லேப்-டாப், மக்களுக்கு ஆடு, மாடு, கோழி, மிக்சி, கிரைண்டர் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிவித்தபடி செயல்படுத்த போதிய பணம் இல்லை. பேருந்து, மின் கட்டணத்தை உயர்த்தினாலும் வரும் வருவாய் இருக்கும் நிலைமையைச் சீர் செய்யவே போதாது என்பதால் அரசு வருமானத்தைப் பெருக்க அதிரடியாகச் சில திட்டங்களை அறிவிக்க இருக்கிறது. சமீபத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் என அறிவிப்பு வந்ததைப் போலவே சாலை விதிகளிலும் மாற்றம் செய்யப்பட இருக்கிறதாம். எப்படி முக்கிய இணைப்புச் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் ”சுங்க வரி” செலுத்துகிறார்களோ அதுபோல இனி முக்கியச் சாலைகளில் நடப்பதற்கும் வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதன்படி இனி ரங்கநாதன் சாலை, உஸ்மான் சாலை, அண்ணா சாலை, பாண்டி பஜார், மெரீனா போன்ற இடங்களுக்குச் செல்பவர்களில் குழந்தைகள் ரூ 1/, பெண்கள், ரூ. 3/- ஆண்கள் ரூ. 5/- செலுத்த வேண்டி வரலாம் எனத் தெரிகிறது. ”இது மிகவும் அநியாயம். 3/- ரூபாய் என்றால் பரவாயில்லை” என சில பொதுமக்கள் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வள்ளுவர் கோட்டம் இடிப்பு பற்றி கருணாநிதி
வள்ளுவர் கோட்டம் இடிப்பு பற்றிய அரசின் அறிவிப்பு குறித்து கருணாநிதியை நிருபர்கள் இன்று சந்தித்தனர். நிருபர்களின் கேள்விகளும் அவரது பதில்களும்

நிரு : வள்ளுவர் கோட்டத்தை இடிக்கப் போவதாக ஜெ. கூறியுள்ளாரே!

கரு: தமிழனுக்கு சுரணை என்ற ஒன்று இருந்தால், அவன் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுவதாக இருந்தால் இந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டு அவன் சும்மா இருக்கலாமா? போயஸ் கார்டன் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது?

நிரு : நீங்கள் செய்த ஒவ்வொரு சிறப்பான பணியையும் ஜெயலலிதா கிடப்பில் போடுவது ஏன்?

கரு: [edited] அடையாளமே தமிழ் மண்ணில் இருக்கவே கூடாது என்பதற்காக சில ஆரியர்கள், தீய சக்திகள், பார்ப்பனப் பதர்கள், கோமாளித் தலையர்கள், ஆரியப் புல்லுருவிகள், சொட்டை மண்டையர்கள் சேர்ந்து சதி செய்கின்றனர். தமிழ் உணர்வுள்ளோர் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடாக உள்ளது.

நிரு : தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எதிர்பார்த்தபடி மத்திய அரசு உதவவில்லையே!

கரு: நான் நேற்றுக் கூட கடிதம் எழுதியிருக்கிறேன்.

நிரு : பரிதி இளம் வழுதிக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுப்பீர்களா?

கரு : தம்பி வித்தகக் கவிஞர் பா. விஜய் நடிக்கும் படத்திற்கு வசனம் எழுத இருக்கிறேன்.

(காதில் விழவில்லையோ என நினைத்த நிருபர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார்.)

நிரு : பரிதி இளம் வழுதிக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுப்பீர்களா?

கரு : வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அந்தப் படத்தில் தம்பி வைரமுத்துவை பாடல்கள் எழுதச் சொல்லியிருக்கிறேன்.

நிருபர்கள் ஒட்டு மொத்தமாக : பரிதி இளம் வழுதிக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுப்பீர்களா?

கரு: பொறுப்பு என்றாலே அது முக்கியம் தானே ?

மேற்கொண்டு நிருபர்கள் பொதுக்குழு, ஸ்டாலின், கனிமொழி, பதவி என்று கேட்க முனையும் போதே கையாட்டி விட்டு காரில் சென்று விட்டார் கருணாநிதி.


பாராட்டு அநங்கனுக்கு, திட்டு இட்லிவடைக்கு :-)

Read More...

Thursday, February 16, 2012

முனி மலர் 15-2-2012


தமிழருக்கு நோபல் பரிசு!
ப.சிதம்பரத்துக்கு நோபல் பரிசு. நேற்று முன் தினம் டெல்லியில் இஸ்ரேலியத் தூதரக அதிகாரியின் கார் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என கண்டுபித்த இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாமா என்று நோபல் பரிசுக் குழு தீவிரமாக யோசிக்கிறது. இந்தப் பரிசு அடுத்த பிலிம் பேர் அவார்ட் கொடுக்கும் நிகழ்ச்சியில் பல நடிகர்கள் முன்னிலையில் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

பார்லிமெண்ட்டில் சோனியா அழுகை!
தன் மூத்த அமைச்சர் ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படும் செய்தி கேட்டு சோனியா ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று குர்ஷித் தெரிவித்தார். ஆனால் இந்த செய்தியை முழுமையாக மறுத்த காங்கிரஸ் தலைவர்கள், வெடிகுண்டு வெடிப்பு நடந்த போது புகை வந்தது. அதனால் கண் எரிச்சலில் தண்ணீர் வந்தது என்று எரிச்சலுடன் தெரிவித்தார்கள்.

சோனியா அழுகை, கலைஞர் ஆறுதல்!
சோனியா பார்லிமெண்டில் அழுத செய்திக்கேட்டு கலைஞர் போஸ்ட் கார்ட் ஒன்றில் ஆறுதல் கவிதை எழுதி அனுப்பினார்.
"நேரு" பரம்பரை அழலாமா?
வேர்பட்டுப் பிளக்கின்ற பூமியிலே மழை
நீர் அழுத குடிதண்ணீர் உப்பு கரிக்கும்
தேர்தல் நாடகம் நடத்திப் பார்த்து; ஏமாந்த காரணத்தால்
இரு விழி மூடிக் கொண்டு அழுதுவிட்டார்!
நல்லாட்சி நடக்கும் தமிழகத்தில்
உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்ததம்மா!
நீ அழுததைப் பார்த்து நாடு அழுதது
அதனால் கொடுத்தேன்
உங்கள் நினைவாக
இலவச கர்சீப்
அன்பு உடன்பிறப்புகாள், அதற்குள் துள்ளிக் குதிக்காமல் -
அடுத்து வரும் வெற்றிகட்கு இது அச்சாரமென அயராது உழைத்திடுக!
கொடுத்த கர்சீப்பில் மூக்கைச் சிந்தித் தூக்கிபோடுங்க.



தோனி சிக்ஸர் அடித்த ரகசியம்!
போன கிரிக்கெட் போட்டியில் தோனி சிக்ஸர் அடித்துப் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். நீங்கள் கடந்த இரண்டு போட்டிக்களில் அபாரமாக விளையாடும் ரகசியத்தை சச்சினிடம் சொன்னால் அவரும் அடிப்பார் இல்லையா என்று கேட்டதற்கு தோனி சொன்ன பதில்: "விளையாடும் போது பிசிசிஐ-ஐ நினைத்தேன். அவர்கள் மீது உள்ள கோபத்தில் அடித்தேன்" என்று பதில் சொன்னார். இதைக் கேட்ட சச்சின் பிசிசிஐ படத்தை கிரிக்கெட் மட்டையில் ஒட்டி விட்டு விளையாடலாம என்று யோசிக்கிறார். மட்டையில் பிசிசிஐயின் படத்தை இந்திய அணியினர் மட்டுமே ஒட்டலாம் என்றும் மற்றவர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படு என்று ஐசிசி அறிவித்துள்ளது.

ஆங்கில ஹிந்து மீது முட்டாள்கள் அமைப்பு போராட்டம் தமிழ் ஹிந்து ஆதரவு?
ஆங்கில நாளேடான ஹிந்து தன் விளம்பரத்தில் டைம்ஸ் பத்திரிக்கை படிப்பவர்கள் முட்டாள்கள் என்று கூறியுள்ளது. ஆங்கில ஹிந்துவை அதிகமாக படிக்கும் தமிழகள் அடிக்கடி போராட்டம் நடத்தும் நடிர்களுடன் முட்டாள்கள் அமைப்பு என்ற அமைப்புடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளார்கள். இதற்கு இடையில் தமிழ் ஹிந்துவிற்கும் ஆங்கில ஹிந்துவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது மற்ற மதத்தினர் செய்யும் சூழ்ச்சி என்று கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். கூடிய சீக்கிரம் இந்த மாதிரி கட்டுரையின் தொகுப்பை ஆங்கிலத்திலும் பிறகு தமிழில் மொழிபெயர்த்தும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்தப் புத்தகத்தின் விமர்சனத்தை சரக்கு மாஸ்டர் ஆழம் இதழில் எழுதுவார். அது தான் மரபு.

உலகில் பெரிய பணக்காரர் ஆனார் மிஸ்டர் குடிமகன்!
உலக பணக்கார தரவரிசையில் குடிமகன் என்ற தமிழன் அம்பானியை விட 100 கோடி அதிகம் சம்பாதித்து முதல் இடத்தை பெற்றார். இவர் உலகில் 7ஆம் இடத்தில் இருக்கிறார். 1992ல் இவர் ஒரு பைக் வைத்திருந்தார், பிறகு 2002ல் கார் வாங்கினார், பிறகு 2012 இவர் வீட்டில் 24மணி நேரம் கரண்ட் இருந்த காரணத்தால் இவர் தான் பெரிய பணக்காரர் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் தொடர்ந்து கரண்ட் கட் நடைபெற்றால் இந்த குடிமகன் உலக வரிசையில் முதல் இடத்தை பெற்றிவிடுவார் என்று சொல்லுகிறார்கள்.

அல்வா கொடுத்தால் சாப்பிடுவீர்களா?
நேற்று மத்திய அமைச்சர் ஒருவர் மலேசியாவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பிறகு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். அவரிடம் பிளைட்டில் என்ன சாப்பிட கொடுத்தார்கள் என்று கேட்டதற்கு "நூடுல்ஸ், மற்றும் ஜாங்கிரி" என்றார். அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர் "அல்வா" கொடுத்தால் சாப்பிடுவீர்களா என்று கேட்டதற்கு "கொடுத்தால் சாப்பிடுவேன்" என்றார். மாம்பழம் என்றால் தம்பியுடன் பங்கு போடலாம் அல்வாவை பங்கு போட முடியுமா? என்று பதில் கேள்வி கேட்டுவிட்டுப் போனார்.


எங்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள் -குரங்குகள் போராட்டம்!

இந்து முன்னணி மாவட்ட செயலாளர், ஒன்றிய தலைவர், ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் முன்னிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கழுதை, நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைப் பார்த்த ஹிந்துக் குரங்குகள் எங்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் சில குரங்குக் குட்டிகளையும் பார்க்க முடிந்தது. இதைப் பார்த்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் பால்ய விவாகம் கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.


கோச்சடையானிலிரிந்து ஏன் சிநேகா நீக்கம்?

வை திஸ் கொலைவரி டியின் மாமனார் நடிக்கும் கோச்சடையானிலிரிந்து நடிகை சிநேகா ஏன் நீக்கம் என்ற கவலையளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பட கதை விவாதத்தின் போல பலர் 'புல்'லாக இருந்த போது நடிகை சிநேகவிடம் நீங்கள் நடிக்கும் விளம்பரத்தில் அந்த சப்பாத்திக்கு பேர் என்ன என்று அசிஸ்டண்ட் கேட்க அவர் அது 'புல்'கா என்று பதில் சொல்லியுள்ளார். மூத்த இயக்குனர் காதில் வெறும் புல் மட்டும் காதில் விழ தன்னை தான் கிண்டல் அடிக்கிறார் என்று நினைத்து அவரை நீக்கியுள்ளார். கோச்சடையான் படம் வர இன்னும் பல வருடங்கள் ஆகும். அதனால் நான் நிச்சயம் அதே ஹீரோவுக்குப் பாட்டியாகவாவது நடிப்பேன் என்று சிநேகா நம்பிக்கை தெவித்துள்ளார்.


விஜயகாந்த் அதிர்ச்சி!

அதிமுக தொண்டர் ஒருவருக்கு நேற்று ஒன்பது மாசத்தில் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு "ஜெயா" என்று பெயர் வைத்த அந்தத் தொண்டர் அளித்த பேட்டி "அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்" என்று சில நாட்களுக்கு முன் சட்டசபை முன்பு விஜயகாந்த் பேட்டி அளித்தார். இப்போது எனக்கு 9 மாசத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு விஜயகாந்த் என்ன பதில் கூறுவார் என்று ஆவேசமாக கேட்டுள்ளார். பன்னும் ரொட்டியும் சாப்பிட்டுக்கொண்டு இருந்த விஜயகாந்திடம் இதை பற்றி கேட்டதற்கு "அதிர்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் மின்வெட்டால் நடந்த விபரீதம் இது" என்று கூறியுள்ளார்!


பச்சை சைடில்..

Read More...

Tuesday, February 14, 2012

காதலர் தின வாழ்த்துகள்

Read More...

Sunday, February 12, 2012

எழுத்து அரசியல்! - ஞாநி

அண்மைக்காலமாகக் கடுமையாகத் தாக்கிப் பேசுவது, நையாண்டி செய்வது, போட்டி விளம்பர உத்திகளைக் கையாள்வது என்று சில எழுத்தாளர்களும் அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பது வியாபாரத்துக்கு உதவும் என்று கருதும் சில பதிப்பாளர்களும் களமிறங்கியிருக்கிறார்கள். இந்தச் சர்ச்சைகளில் இப்போது அடிபடும் பெயர்கள் எஸ்.ராம கிருஷ்ணன், சாரு நிவேதிதா, சு.வெங்கடேசன், மனுஷ்ய புத்திரன், பத்ரி சேஷாத்ரி (ஜெயமோகன் சமண தலயாத்திரை போய் விட்டதால், அவர் தொடர்பான சர்ச்சை எதுவும் இந்த சீசனில் எழவில்லை).

இந்த சீசனில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கக்கூடியவர் இதுவரை சர்ச்சைகளில் சிக்காத எஸ்.ராமகிருஷ்ணன்தான் (எஸ்ரா). சங்கீத சீசனுக்கு முன்பாக இலக்கிய சீசன் ஒன்றைச் சென்னையில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற கருத்தில் அவர் உலகப் புகழ்பெற்ற சில படைப்புகள் பற்றிய இலக்கியப் பேருரையை ஒரு வாரம் தொடர்ந்து நடத்தினார். அதில் அவர் காந்தி- டால்ஸ்டாய் பற்றிச் சொன்னதில் சர்ச்சை ஏற்பட்டது. டால்ஸ்டாய், காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளையும் வள்ளுவரையும் குறிப்பிட்டிருப்பதாகவும் அதிலிருந்து தான் காந்திக்கு குறள் மீது கவனம் ஏற்பட்டதாகவும் எஸ்ரா பேசியிருந்தார். அடுத்து காந்திக்கு கணிதத்தில் பேரார்வம் இருந்ததாகச் சொல்லியிருந்தார். தன் வாழ்நாளில் காந்தி சத்திய சோதனை, ஹிந்த் ஸ்வராஜ் இரு நூல்கள் மட்டுமே எழுதியதாகவும் தெரிவித்தார்.இந்த மூன்று கருத்துக்களுக்கும் கடுமையான மறுப்புகள் வந்தன. ஆனால் எஸ்ரா பல வாரம் பதில் சொல்லவே இல்லை.

கடைசியாக தம் இணைய தளத்தில், “பொதுவாக நான் அவதூறுகள், அருவருப்பான கேலிகளுக்குப் பதில் சொல்வதே கிடையாது, ஒரு நண்பர் தினமணியில் காந்தி பற்றிய எனது உரை தவறானது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இது போன்ற அவதூறுகள் எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்லத் தயங்கி விட்டு விட்டேன். அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும்போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது,” என்று எழுதி பதில் சொன்னார். தான் வாசித்த ஒரு கட்டுரையில் இருந்துதான் டால்ஸ்டாய் திருக்குறளை வாசித்த தகவலைத் தெரிவித்ததாகச் சொன்னவர், அது என்ன கட்டுரை, யார் எழுதியது, எப்போது எழுதியது என்பதையெல்லாம் சொல்லவில்லை.

ஆனால் தம் மீதான அவதூறுகள் “எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்லத் தயங்கி விட்டுவிட்டேன்” என்று எஸ்ரா சொன்னது மிகவும் தவறானது. ஏனென்றால் தினமணியில் எஸ்ராவை மறுத்து விவரமாக எழுதியவர் காந்தியின் எழுத்துகள் அனைத்தையும் தொகுக்கும் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய ஆசிரியர் குழு உறுப்பினர் லா.சு.ரங்க ராஜன். காந்தியும் டால்ஸ்டாயும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் எத்தனை, ஒவ்வொன்றிலும் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற விவரங்களுடன், ஒரு இடத்தில் கூட டால்ஸ்டாய் வள்ளுவரையோ, குறளையோ சொல்லவில்லை என்பதை நிறுவியிருந்தார் லா.சு.ரா. காந்தியின் கணித ஆர்வத்துக்கு ஆதாரமாக எஸ்ரா காட்டிய ஒரே சான்று 1944ல் வீட்டுச் சிறையில் இருந்தபோது மனு காந்திக்குக் கற்பிப்பதற்காக காந்தி வரைந்த ஜியாமெட்ரி படம். இந்த லாஜிக்படி ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குடும் பத்திலும் கணிதத்தில் பேரார்வம் உடையவர்கள் நிறைந்திருப்பதாகச் சொல்லி விடலாம்.

எஸ்.ராமகிருஷ்ணன் தன் எழுத்திலும் பேச்சிலும் உலகின் பல மூலைகளிலும் இருக்கக்கூடிய நூல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் இருந்து மேற்கோள்களை அள்ளிக் குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அது அவர் எழுத்துக்கு மெருகூட்டுபவை. எனவே அதில் ஒரு சிலவற்றில் கடும் தவறுகள் ஏற்படும்போது, அவர் எழுத்தின் முழு நம்பகத்தன்மையே குலைந்து போய்விடுகிறது. இந்த ஆபத்தை அவர் சரியாக உணரவில்லை என்பதையே காந்திடால்ஸ்டாய் சர்ச்சையில் அவர் எதிர்வினை காட்டுகிறது.

இலக்கியப் பேருரை சீசன் முடிந்து சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிய சமயத்தில் சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.

தம் முதல் நாவலான காவல் கோட்டத்துக்காகப் பரிசைப் பெற்ற சு.வெங்கடேசன், எஸ்ராவின் பழைய நண்பர். நாவல் வெளியான சமயத்தில் அதைக் குப்பை என்று கடுமையாக விமர்சித்தார் எஸ்ரா. இல்லை, அது ஒரு முக்கியமான படைப்பு என்று பதில் கட்டுரை எழுதினார் ஜெயமோகன். அது ஒரு திருட்டுப் படைப்பு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடன் சுற்றிக் கொண்டிருந்த நண்பனும் எழுத்தாளனாக மாறி பெரிய நாவல் எழுதிவிட்டான் என்பதைத் தாங்கமுடியாத உளவியல் சிக்கலில் எஸ்ரா இருப்பதாக வெங்கடேசன் சொன்னார்.

உளவியல் சிக்கலில் எழுத்தாளர்கள் இருப்பது உண்மைதான். பல எழுத்தாளர்கள் இப்போது பாராட்டு விழாக்கள், வெளியீட்டு விழாக்களை பிரம்மாண்டமாகவும் கட் அவுட், ப்ளெக்ஸ் பலகைகளோடும், சினிமா மீடியா பிரபலங்களின் ஆசியோடும் நடத்துவது என்பது வாடிக்கையாகிவிட்டது. மதுரையில் வெங்கடேசனுக்கு நடத்திய பாராட்டில் மலர் கிரீடம் சூட்டப்பட்டு கையில் வீரவாள் தரப்பட்டதாக அதைக் கண்டித்து பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவர் இணையதளத்தில் எழுதியிருக்கிறார். ஒரு மார்க்சிஸ்ட் இப்படியெல்லாம் செய்யலாமா என்பது அவர் கேள்வி.

இன்னொரு பக்கம் சென்னையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து முதலிய பிரபலங்கள் இயல் விருது பெற்றதற்காக எஸ்ராவைப் பாராட்ட அழைக்கப்பட்டனர். எஸ்ராவைப் பாராட்ட ரஜினி அழைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை இணையதளத்தில் ஏற்படுத்தியது. ரஜினியை அழைப்பதில் எனக்கு எந்த எதிர்ப்புமில்லை. ஒரு எழுத்தாளனை சமூகத்தில் யார் வேண்டுமானாலும் பாராட்டலாம். ரஜினியும் பாராட்டலாம். ஆனால் அழைப்பிதழில் ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு எஸ்ரா படத்தைச் சிறியதாக அச்சடித்தது எழுத்தாளனைச் செருப்பாலடிப்பது போல அவமானப்படுத்துவதாகும் என்று நான் எழுதியிருந்தேன்.

ரஜினியை அழைத்து எஸ்ராவைப் பாராட்டியதை சாரு நிவேதிதாவால் தாங்கவே முடியவில்லை. நான் கலந்து கொண்ட அவருடைய எக்ஸைல் புத்தக விமர்சனக் கூட்டத்தில் அவர் தன் நாவல் பற்றிப் பேசாமல் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இணையதளத்திலும் எழுதித் தள்ளினார். “ரஜினி... இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா? கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு, தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா?

மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள். என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி... கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாகச் சொல்லிக் கொள்ளலாமா? கொண்டு, பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் அளவுக்கு, தமிழ் இலக்கியவாதிகள் தரம் தாழ்ந்து வருகிறார்கள். இலக்கியம் சார்ந்த அறம் வீழ்ச்சியடைந்துவிட் டது.”

பதிலுக்கு மனுஷ்யபுத்திரன் எழுதினார், “ஜோதிர்மயி என்று ஒரு கவிஞர் ஒரு முறை சாருவின் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு இலக்கியச் சொற்பொழிவாற்றினார். குஷ்பு என்ற ஒரு நாவலாசிரியர் சாருவின் ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஊரெல்லாம் பத்திரிகை வைத்து, கடைசி நிமிடத்தில் வராமல் போனார். சாரு நிவேதிதா என்ற நடிகர் ஒரு படத்தில் தனது விரல்கள் பத்து செகண்டுகள் நடித்ததற்காக அந்த இயக்குனரைப் புகழ்ந்து பத்துப் பதிவுகள் எழுதினார்...அதிகப்படியான குடி மட்டுமல்ல, அதிகப்படியான வயிற்றெரிச்சலும் கடும் memory loss ஏற்படுத்தும்...”

சர்ச்சைகளும் விழாக்களும் எழுத்தாளர்கள் திட்டமிட்டே விளம்பரம் தேடுகிறார்கள் என்பதன் அடையாளம்தான். ஏன் இப்படி? இது பற்றிப் பதிப்பாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். கவிஞர் அய்யனார் கேட்டார்: “கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது மதுரையில் ரகசியமாகக் கொடுக்கப்பட உள்ளது. கவிஞர் தேவதச்சன் நூல்களை வெளியிட்டு வருவது மனுஷ்யபுத்திரனின் வெளியீட்டு நிறுவனம்தான். அவருக்கும் ஒரு பிரபல சினிமா நடிகரின் தலைமையில் பாராட்டு விழா நடத்தலாமே.” எஸ்ராவின் பதிப்பாளர் உயிர்மை மனுஷ்யபுத்திரன் பதில்: “இதுவும் வெளி நாட்டு விருதுதான். ஆனால் அதைக் கொடுப்பவர்கள் பிரபலமில்லாதவர்கள். தேவதச்சனும் பிரபலமில்லாதவர். அவருக்கு எந்த சினிமா நடிகரையும் தெரியாது. கூட்டம் போட்டால் 50 பேருக்குமேல் வரமாட்டார்கள். என் பதிப்பக நூல்களை விற்க முடியாது. ராமகிருஷ்ணன் ஸ்டார் எழுத்தாளர். அவர் புத்தகம் மட்டுமல்லாது, என் பதிப்பக நூல்கள் எல்லாவற்றையும் விற்க ஒரு வாய்ப்பு.”

சாருவின் பதிப்பாளர் கிழக்கு பத்ரி சேஷாத்ரி எழுதிய ஒரு கட்டுரையில் அப்பட்டமாகவே சொல்கிறார்: “நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத் தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். காசு கொடுத்துப் பெரும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது ஒரு பதிப்பாளனுக்கு இயலாத காரியம். அப்படிச் செய்யும் செலவை, விற்பனையால் ஈடுகட்டவே முடியாது. எனவே வேறு வழிகளையே ஒரு பதிப்பாளனும் எழுத்தாளனும் கையாள வேண்டியுள்ளது.அங்குதான் இணையம் வருகிறது. தமிழின் சில எழுத்தாளர்களே இதனை ஒழுங்காகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராம கிருஷ்ணன் ஆகியோரைச் சொல்வேன். அதிலும் சாரு நிவேதிதா, ஃபேஸ்புக் தளத்தை மிக அற்புதமாகப் பயன்படுத்திவருகிறார். அவருடைய வாசகர்கள் தம் சொந்த செலவில் சமீபத்தில் அவருடைய எக்ஸைல் நாவல் வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் வைத்துக்கொண்டாடினார்கள். அதேபோல ஜெயமோகன் வாசகர்கள் தீவிரமான ஒரு குழுவாக இயங்குகிறார்கள். இலக்கியக் கூட்டங்கள், விருது வழங்கும் விழா என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். இம்மாதிரியான நிகழ்வுகளே நாற்பது, ஐம்பது என்பதிலிருந்து நானூறு, ஐந்நூறு என்று வாசகர் வட்டத்தை விரிவாக்குபவை. நான் பதிப்பிக்கும் சில எழுத்தாளர்களை (சேத்தன் பகத் போன்ற) பிராண்டுகளாக ஆக்குவதற்கு எந்த வகையில் பங்களிக்கலாம் என்று முயற்சி செய்வதே என் வேலை. அப்போதுதான் தமிழில் 25,000 அல்லது 50,000 என்று புத்தகங்களை விற்க வைக்க முடியும். நானும் பணம் பண்ணமுடியும்.”

நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தச் சிக்கல்கள் இல்லை. சர்ச்சைகள் இருந்தன. ஜெயகாந்தன் கதையையும் இந்திரா பார்த்த சாரதி கதையையும் பத்திரிகைகள் பாதியில் நிறுத்தியபோது நடந்த சமரசங்கள் பற்றி வெங்கட் சாமிநாதன் “யாருக்காக அழுவது ?” என்று எழுதினார். அதற்கு அசோகமித்திரன் “யாருக்காகவும் அழவேண்டாம். வாயை மூடிக்கொண்டு இருந்தால் போதும்” என்று பதில் எழுதினார். பிரமிளும், செல்லப்பாவும், வெ.சாவும் க.நா.சு.வும் ஜெய காந்தனும் நிறைய சர்ச்சித்திருக்கிறார்கள். அவையெல்லாம் கோட்பாடு, மதிப்பீடு, ரசனை பற்றிய விவாதங்கள்.

இப்போது நடப்பவை முழுக்க முழுக்க வணிக நோக்கம் சார்ந்தவை. ஏனென்றால் இப்போது எந்தக் கோட்பாடு, கொள்கை பிரச்னைகளும் எழுத்தாளர்களுக்கு முக்கியமாக இல்லை. உலகமயமாக்கலும் தாராளப் பொருளாதார அமைப்பும் சினிமா உலகப் பிரவேசமும்தான் இந்தச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றின் அரசியல் கலாசாரம் எழுத்துலகின் அரசியலைப் பாதித்திருக்கிறது.

ஞாநி
நன்றி: கல்கி, ஓ-பக்கங்கள்

தமிழ் எழுத்தாளர்களுக்கு சட்டசபை மாதிரி ஒரு அரங்கத்தை யாராவது கட்டிதந்தால் நம்மக்கு பொழுதுபோகும் :-)

Read More...

Friday, February 10, 2012

மாணவனின் கொலைவெறி

அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் "வகுப்பறையில் இந்திய மாணவன் சுட்டு கொலை" "பள்ளியில் ஆசிரியர் சுட்டு கொலை" பொன்ற செய்தி நேற்று சென்னையில் நடந்திருக்கிறது. பள்ளிக்கு பெற்றோர்கள் வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போகும் முன் மீடியா உள்ளே நுழைந்து இதை மேலும் பரபரப்பாக்கிவிட்டார்கள். எல்லா ஆங்கில சேனல்களிலும் பிளாஷ் நியூஸ் என்று அமர்க்களப்படுத்துவிட்டார்கள். நேற்று பள்ளியில் நுழைந்த பெற்றோர்கள், மீடியா தான் இந்த கொலைக்கே காரணம் என்று சொல்லுவேன்.

ஒரு வாரமாக டிவியில் வரும் 'செங்காத்து பூமியிலே' என்ற படத்தின் ட்ரைலரை பார்த்திருப்பீர்கள், அவ்வளவு ரத்தம் அந்த ட்ரைலரில். இந்த மாதிரி படங்களை பார்த்து வளரும் குழந்தைகள் தங்களுக்கு கட்டுக்கடங்காத கோபம் வரும் போது, வீட்டில் இருப்பதை தூக்கி எறிவதற்கு பதில் சமையல் அறையில் இருக்கும் கத்தியை எடுப்பார்கள். முன்பு தாத்தா பாட்டி இருந்த இரவு நேரங்களில் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்லுவார்கள். ஆனால் தற்போது அவர்களுக்கு இரண்டு பொண்டாட்டி கதை சீரியல் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. சீரியலை மிஸ் செய்துவிட்டால் அடுத்த நாள் மத்தியானம் நினைவு வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். சின்ன பாட்டிகள் யூ டியூபில் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படி இருந்தால் குழந்தைகள் எப்படி உருப்படும்?

பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஆசிரியர்கள், இண்டர்னலில் கை வைத்துவிடுவேன், பிராக்டிகளில் கம்மி செய்துவிடுவேன் என்று மாணவர்களை பயப்பட செய்வது அவர்களுக்கு மன அழுத்ததையும் மனநிலை பாதிப்பையும் கொடுக்கும். சமீபத்திய சினிமா படங்களில் அழுக்காகவும் தாடி வைத்துக்கொண்டு பெண்கள் பின்னால் சுற்றும் பொறுக்கிக்களாகவும் ஹீரோக்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். வீட்டிலிருந்து திருடும் பணத்தை கொண்டு குடித்து கும்மாளம் போடும் பொறுக்கிக்கள். இவர்களை பாக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள் ?

இந்த மாணவன் கடைசியாக பார்த்த `அக்னிபத்` என்ற இந்தி படத்தில் வரும் காட்சிகள் கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளது என்று போலீஸில் தெரிவித்துள்ளான். நாம் பார்க்கும் சீரியல்களில் தினமும் விஷம் வைத்து கொலை செய்யும் காட்சி ஏதாவது ஒரு சீரியலில் வந்துவிடுகிறது. அவர்கள் பேசும் வசனங்கள் நல்ல ஒழுக்கமாக குடும்பத்தில் யாரும் பார்க்க, கேட்க மாட்டார்கள். நம்முடன் சீரியல் பார்க்கும் நம் குழந்தைகள் கொஞ்ச நாளில் அதே மாதிரி முகபாவம், வார்த்தைகள், வசனங்களை பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

மாணவர்கள் தங்கள் வாழ்கைக்கு 99 மார்க் பின்னாடி ஓடுவதை காட்டிலும், ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் உபதேசிக்க வேண்டும். பெற்றோர்கள் ட்விட்டரிலும், பிளாகிலும் செலவு செய்யும் நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்ய வேண்டும். முதல் காரியமாக வீட்டில் சீரியல் பார்ப்பதை நிறுத்தினால் நல்ல சமுதாயம் உருவாகும்.

திருட்டு விசிடி என்றாலும் பரவாயில்லை. "I am Kalam" போன்ற படங்களை உங்கள் குழந்தைகளுக்கு போட்டு காண்பியுங்கள்.

நிச்சயம் 15 வயது மாணவன் தப்பு செய்ய மாட்டான், இந்த கொலைக்கு அவன் காரணம் இல்லை. நல்ல வேளை அது என் குழந்தை இல்லை என்று மற்ற பெற்றோர்கள் ஆறுதல் அடையலாம். இது தற்காலிகமான ஆறுதல் தான்.

படம்: செங்காத்து பூமியிலே என்ற படத்தின் ஸ்டில்! இது வீரம் இல்லை ரவுடித்தனம்.

Read More...

Wednesday, February 08, 2012

இ'லக்கி'ய போட்டி

இந்த மாத போட்டி தற்கால தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்டது.

கேள்வி: இணையம், கூகிள் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள் ?

சுவாரஸியமான உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நல்ல பதிலுக்கு வழக்கம் போல புத்தகம் பரிசு..

Read More...

Tuesday, February 07, 2012

ஹே லெக்ஷ்மன் !!

கர்நாடகாவில் இரண்டு பிஜேபி அமைச்சர்கள் சட்டசபையில் செல்போனில் செக்ஸ் படங்களை பார்த்து ரசித்த காட்சியை மீடியா வெளிச்சம் போட்டு காட்ட அவர்களை என்ன செய்யலாம் என்று பிஜேபி யோசித்துக்கொண்டு இருக்கிறது. அதில் ஒருவர் பெயர் லக்ஷ்மண் இன்னொருவர் சிசி.பாட்டீல் இவர் கொஞ்ச நாளுக்கு முன் "பிறரை கவர்ந்து இழுக்கும் ஆடையை பெண்கள் அணிவதற்கு தனிப்பட்ட ரீதியில் தான் எதிரானவன். பெண்கள் தாங்கள் அணியும் ஆடையைக் குறித்து பூரண விழிப்புணர்வு உடையவர்களாக இருத்தல் அவசியம். தங்களின் கலாச்சாரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற கண்ணியமான ஆடையை தேர்வுச் செய்யவேண்டிய பொறுப்பு பெண்களுக்கே உள்ளது" என்று சொல்லியுள்ளார். இவர் தான் கர்நாடகாவின் குழந்தைகள்-மகளிர் நலதுறைஅமைச்சர்!.

சட்டசபையில் பரபரப்பாக கர்நாடகாவில் எங்கோ பாகிஸ்தான் கொடியை ஏற்றியதை பற்றி விவாதம் நடந்துக்கொண்டு இருந்த போது இவர்கள் சைலண்டாக பார்த்துள்ளார்கள். இவர்களுடைய அடிபொடிகள் பெண்களை காதலர் தினம், அல்லது பப்புக்கு போனால் அடிப்பது என்று தங்கள் வீரத்தை நிருபிக்க தான் லாயக்கு.

ஆபாசப் படம் பார்ப்பது தப்பில்லை, ஆண்களில் 95% பேர் பார்க்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்லுகிறது, ஆனால் அதை எங்கு பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. அவர்களும் என்ன செய்வார்கள், வீட்டில் பார்த்தால் அடி விழும், சட்டசபையில் பார்த்தால் பிரச்சனை இல்லை என்று பார்த்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரை தான் இனிமேல் கையை வைத்து மறைத்துக்கொண்டு பாருங்கள். காங்கிரஸ் சின்னம் சில சமயம் உபயோகப்படும்.

Read More...

Monday, February 06, 2012

சரித்திர புனைவு

தமிழ் இலக்கியத்தில் யார் என்ன வேண்டும் என்றாலும் எழுதாலம், பேசலாம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்த வரிசையில் இரண்டு பதிவுகளை இங்கே உங்களுக்கு தந்துள்ளேன்.

முதல் பகுதி :

"படித்ததைப் படித்தபடி அல்லது தான் படித்ததை இன்னமும் மெருகேற்றி உண்மைக்கு அருகில் நின்று சொல்பவராய் யார் இருப்பார்கள் அல்லது இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம்? இலக்கியவாதியையா?......எஸ்.ரா போன்ற ஆழ்ந்த வாசிப்பை அவரிடம் எதிர்பார்க்க அவரென்ன இலக்கியவாதியா?"
மாமல்லன் எழுதிய பதிவை நிச்சயம் படிக்க வேண்டும்.

பகுதி இரண்டு:

சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல் பற்றிய விமர்சனத்தில் எஸ்.ரா எழுதியது...

சரித்திரம் என்பதே பெரிதும் கற்பனையானது. அது அதிகாரத்தில் இருப்பவன் தன்னை காத்து கொள்ள உருவாக்கிய ஒரு புனைகட்டு. மன்னர்களின் வாழ்க்கையும் அதிகார கைமாறுதல்களும் மட்டுமே சரித்திரமில்லை. மக்கள் வாழ்வு, சமூக கலாச்சார அரசியல் தளங்களில் ஏற்படும் மாறுதல்களும் நெருக்கடியும் விடுபடலும் மோதுதலும் புதுவரவும் இணைந்ததே சரித்திரம். பாடப்புத்தங்களுக்கு வெளியில் தான் சரித்திரம் ஒரளவு உண்மையாக இருக்கிறது என்கிறார்கள் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள்.

நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் சரித்திரத்தை அணுகும் போது முதலாக கவனிக்கவேண்டியது. சரித்திரத்தினை எப்படி உள்வாங்கியிருக்கிறோம். எப்படி கற்பனை செய்கிறோம் என்பதே. முன்பு எழுதப்பட்ட சரித்திர குப்பைகளை விலக்கி உண்மையை அறிய முயற்சிப்பதே இலக்கியத்தின் பிரதான நோக்கம். சரித்திரம் என்பது முடிந்து போன கடந்தகாலமல்ல. அது முடிவில்லாத காலத்தொடர்ச்சி என்ற பிரக்ஞையே இலக்கியத்தின் பிரதான பணி.

வரலாற்றை மீள் ஆய்வு செய்யும் வரலாற்று அறிஞர்கள் சரித்திரச் சான்றுகள், கல்வெட்டுகள், ஆவணகாப்பக தகவல்கள், நேரடி ஆய்வுகள் போன்றவற்றின் வழியே சரித்திரம் உருவான சரித்திரத்தை ஆராய்கிறார்கள். அதில் மறைக்கபட்டதும் தவிர்க்கபட்டதையும் வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள். அத்துடன் சரித்திரத்தை எப்படி பார்க்க வேண்டும் என்ற புதிய பார்வையை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் நாவலாசிரியன் சரித்திரத்தின் ஒற்றை வரியிலிருந்து தன் கற்பனையை உருவாக்க துவங்குகிறான். அவன் வரலாற்றை அதன் பெருமிதங்களுக்காக இன்றி சிதைவுகளுக்காக வாசிக்கிறான். வரலாற்றில் மறைக்ககபட்ட பகுதிகளை, இடைவெளிகளை அடையாளம் கண்டு கொள்கிறான்.

நாவல் எழுதுவதற்கு களஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால் அப்படி எவரெவரோ தந்த செய்திகள், தகவல்கள், சம்பவங்கள், ஆய்வை அப்படியோ போட்டு நிரப்பி அதற்கு நாவல் என்று பெயர் சூட்டினால் என்ன செய்வது. அந்த கொடுமை தான் காவல்கோட்டமாக உருக் கொண்டிருக்கிறது.



தமிழ் இலக்கிய சூழலில் என்ன அபத்தம் வேண்டுமானலும் நடக்கலாம். அதை யார் தடுக்க முடியும். ( இதை சொன்னவரும் எஸ்.ரா தான் அவருக்கு நன்றி ). இந்த இரண்டு பதிவுகளில் எது சரித்திர புனைவு ?

Read More...