பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 31, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 31-12-2012

அன்புள்ள முனி,
என்னை நினைவிருக்கிறதா? இருக்குமென்றே நம்பறேன். உனக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று பல மாசமாக யோசித்துக்கொண்டு இருக்கேன் டைம் கிடைக்கவில்லை என்று பொய் சொல்லுவதைவிட உண்மையைச் சொல்லி விடுகிறேன். எழுத ஆரம்பிக்கும் போது கரண்ட் கட் ஆகிவிடுகிறது. என்ன செய்ய? ஆனால், லெட்டர் போடாததால் ஏதோ நான் ஓய்வெடுக்கிறேன் என்று தப்பாக நினைக்காதே.

என்னுடைய மனைவிகள் இருவரும் என்னை 'ஒய்வெடுத்துக்கொள்ளுங்கள்.. ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள். என்னால் தான் ஓய்வு பெற முடியவில்லை என்று இந்த வருடம் ஒருவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. அவரே ஓய்வு எடுக்காமல் இருக்கும் போது கல்யாணமே ஆகாத நான் எப்படி ஓய்வெடுப்பேன்? அப்படியே ஓய்வு எடுக்க வேண்டும் என்று சமயத்தில் எனக்குத் தோணினாலும் கூட கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. அப்படியே ஒரு வேளை தூங்கினாலும் கனவில் "நான் டெங்குக் கொசுவைவிட ஆபத்தானவன் கடித்தால் தாங்க மாட்டீர்கள்" என்று கெஜ்ரிவால் வந்து கொல்லுகிறார். தூக்கத்திலும் ஓட ஓட விரட்டறார்.

ஓடி ஓடி உழைத்தவர்கள் என்றால் இந்த வருஷம் அது போலீஸ்'துறை' மட்டும்தான். 'துரை'யைத் தேடு தேடு என்று தேடிக்கொண்டே இருந்தார்கள். பெங்களூர் முதல் நேபால் நேபாள் வரை பல இடங்களிலும் முழுவதும் சுற்றிவிட்டு, கடைசியில் அவரே வந்து சரண்டர் ஆனார். ராவணன் விடுதலை ஆகும் போது ராசா விடுதலை ஆக கூடாதா? என்று தலைவர் கேட்ட கேள்வி தான் ஞாபகம் வருது. எது எப்டியோ. கரண்ட் இல்லாத ஊரில் கிரானைட் முதல் ஈமு கோழிகள் பிரச்சினைகள் சௌக்யமாக ஜொலித்தன

எழுத்தாளர்கள் பலரும் இந்த ஆண்டு அதே போலத் தான் ஜொலித்தார்கள். சிலர் எழுதுவதை எழுதுவதை விட்டு விட்டு தினமும் டிவிக்கு போய் சமூக பிரச்சனை பற்றி அலசினார்கள். என்னுடைய நண்பர்கள் பலர் நீயா ? நானாவில் முகம் காட்டினார்கள். நெருங்கிய நண்பர்கள் நியா நானாவில் சிறப்பு விருந்தினர்களாக வந்தார்கள். பேயோன் விகடனில் பக்கம் எழுதுகிறார். டைம் கிடைக்கும் போது சில புத்தகங்களுக்கு முன்னுரையும் எழுதுகிறார். சிலர் சீரியலில் குடும்பக் குத்து விளக்குகளை என்டர்டைன் செய்த நேரம் போக, டச் விட கூடாதே என்று ஸ்லேட்டில் எழுதுதுகிறார்கள். சில பதிப்பகங்கள் கூகிள் இருக்க எதற்கு புத்தகத்தைப் பதிப்பிக்க வேண்டும்? என்ற ஞானம் பெற்று மற்றவர்கள் புத்தகத்தை விற்பதே மேல் என்று சிலர் முடிவு செய்தார்கள்.

பத்திரிக்கைகள் ? கல்கி இன்னுமும் கிராமம் ரவுண்டப் செய்துக்கொண்டு இருக்கிறது. விகடன் மதனின் பழைய கார்ட்டூன்களை தனது பொக்கிஷம் பகுதியில் Avoid செய்கிறது. குமுதம் திரும்பவும் சிறுகதை போட ஆரம்பித்துள்ளார்கள். நடிகைகளின் படத்தை போட தனியாக விகடன் தாத்தா டைம்பாஸ் கடலை போட ஆரம்பித்துள்ளார். சிவன் வந்து இவர்கள் கனவில் ஏதாவது சொன்னால் தான் 2013ல் எதாவது மாற்றம் வரும். இல்லை என்றால் பெரிதாக வராது.

மதுரை ஆதீனமாக நித்தியை ஏன் அருணகிரிநாதர் நியமித்தார் என்பது புரியாத புதிராக இருந்தது. சிவன் கனவு என்று உடான்ஸ் விட்டது ஒரு புறம் என்றால் தமிழக அரசு, நீதிமன்றம் என்று போன பிறகு நித்தியை மடத்தை விட்டு இரவோடு இரவாக பேக்கப் செய்தார். அதே போல தமிழ் புத்தாண்டு பேக்கப் செய்து மீண்டும் சித்திரை 1க்கு மாற்றினார் ஜெ. எங்களுக்கு எல்லாம் ஜனவரி 1 தான் புத்தாண்டு அன்று தான் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி கோயிலுக்கு போய்க் கடவுளைக் காண்போம் என்று தமிழர்கள் அடம்பிடிக்கிறார்கள்.

கடவுள் இல்லை என்று அடம்பிடிக்கும் கமல் அதே போல விஸ்வரூபத்தை டிடிஹெச்சில் ரிலீஸ் செய்ய போகிறேன் என்று அடம்பிடிக்க பலர் என்ன நடக்க போகிறது என்று ஆவலுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டர்கள். ஏது எப்படியோ படத்தை சீக்கிரம் போடுங்கப்பு என்று பலருக்கு அலுக்கவும் ஆரம்பித்துவிட்டது.

படம் எப்படி இருந்தாலும் நாங்கள் பார்த்துவிடுவோம் என்று தமிழகம் காத்துக்கொண்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர் சமாதியில் இருப்பது குதிரையின் இறக்கை. அது இரட்டை இலைக் குதிரை இல்லை என்று நம்பும் நமக்கு வக்கீலைப் போல பயாலஜியா தெரியும்?

ரெக்கை கட்டி பறக்குது அண்ணாமலை சைக்கிள் என்று முன்பு ஒரு படம் வந்தது. நடித்தவர் பெயர் மறந்துவிட்டது!. அவர் நடித்த இன்னொரு படத்தில் ஹீரோயின் வம்பு செய்ய உடனே உதட்டோடு உதடு கிஸ் அடித்து அவளை வீழ்த்துவார் இந்த ஹீரோ. அப்போது எல்லாம் கை தட்டி விசில் அடித்துவிட்டு இப்போது மெழுகு வத்தி ஏற்றுவது எந்த விதத்தில் நியாயம்? 12.12.12 அன்று உலகம் அழியாமல் காத்த சூப்பர் ஸ்டார் மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டு விடுங்கள் என்றார். இவர் அரசியலை விட்ட மாதிரி நாமும் அதை விடுவது தான் நல்லது.

அரசியல் என்று சொல்லிட்டு தேதிமுக செய்தி இல்லாம இருந்தா நல்லாவா இருக்கும்? கொஞ்ச நாட்கள் முன்பு வரை தேமுதிகவில் இருந்து தினமும் யாராவது கேப்டனை விட்டு விட்டு அதிமுக பக்கம் வந்தார்கள். முதலில் பரபரப்பாக இருந்த இந்த நியூஸ் தினமும் யாராவது வந்ததால் அட போங்கப்பா என்று ஆகிவிட்டது. கடைசியாக மதிமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் அதிமுகவிற்கு வந்து சர்பத் ஆனார். வைகோ வழக்கம் போல தன் கட்சிக்கு ஏதாவது நோய் வந்தால் உடனே வாங்கிங் போவார். திரும்பவும் ஆரம்பித்துவிட்டார். மீடியா இதைக் கண்டுக்கொள்ளவே இல்லை பாவம். இதுக்குதான் கட்சிக்கு ஒரு சேனல் அல்லது மீடியா சப்போர்ட் இருப்பது நல்லது என்று நம் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

மக்கள் டிவி, டைம்ஸ் நவ் போன்ற மீடியாவிற்கு பயங்கர தைரியம் என்று நாம் நினைப்போம் ஆனால் தர்மபுரி ஜாதிப் பிரச்சனையில் 'குறிப்பிட்ட ஜாதி' என்று மட்டும் எழுதி பேடியாகக் கட்டுரை போட்டது அதே மீடியா ராமதாஸ், திருமா வழக்கம் போல அரசியல் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் தமிழ் நாட்டில் ஜாதிகள் இன்னும் இருக்கிறது என்பது இந்தச் சம்பவத்திலிருந்து தெரிகிறது. பரமக்குடி தேவர் குரு பூஜை சமயம் யாரோ ஏதோ பேசப் போய் பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சு.. உயிர் பலி என்று நடந்தேறியது. பஸ் டிரைவர்கள் ஹெல்மெட் அணிந்து ஓட்டினார்கள்!. சட்டம் இருக்கிறது. ஆனால் ஒழுங்கு?

சட்டம் ஒழுங்குக்கு எவ்வித இடையூறும் இன்றி ரத்தம் சிந்தாமல் வெற்றிகரமாக கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்றார் அம்மா. உதயகுமாரை இந்த வருட ஹீரோவாக சிலரும் சிலர் வில்லனாக சிலரும் பார்த்தார்கள். அமெரிக்காவிலிருந்து இவருக்கு பணம் வருகிறதா என்பது தான் இன்னும் புதிரான விஷயம்.

புதிருக்கத் தமிழ்நாட்டில் பஞ்சம் இல்லை. சட்டமன்ற வைர விழாவில் கலைஞர் பெயர் ஏன் விடுபட்டது? நாக்கை துருத்தி ஆவேசம் காட்டியதால் வியகாந்தை சஸ்பெண்ட் செய்த சபாநாயகரையே ஏன் ஜெ மாற்றினார் என்று பல புதிர்கள் நிறைந்த நன்நாடு நம் தமிழ்நாடு!

புதிர்களைப் போல வழக்கம் போல தமிழ்நாட்டில் கடித போக்குவரத்து அதிகரித்தது. கலைஞர் மன்மோகன் சிங்கிற்கும், ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கும் பல கடிதங்கள் எழுதினார். சில சமயம் ஸ்டாம்ப் செலவு குறைப்பதற்கு டெல்லிக்க்கு சென்று அங்கேயே எழுதிப் போட்டார். பேசப் 10 நிமிஷம் தான் கிடைக்கும் என்ற நிலையில் கடிதம் எழுதுவது தான் ஒரே தீர்வு என்று நம்ப வைத்துவிட்டார். அடுத்த சட்டமன்றத்துக்கு திண்டுக்கல் லியோனி, சாலமன் பாப்பையா போன்றவர்கள் சென்று மந்திரிகள் ஆகும் வாய்ப்புகள் இருக்கிறது. பெல் அடித்துப் பேச்சை நிறுத்துவதில் இவர்களுக்குத்தான் அனுபவம் அதிகம்.

எவ்வளவு அனுபவம் வந்தாலும் சிலர் அப்படியே தான் இருப்பார்கள் என்பதற்கு காவிரிப் பங்கீடு நல்ல எடுத்துக்காட்டு. பல பேச்சுவார்த்தை, நீதிமன்ற அட்வைஸ் என்று நடந்த பின்னும் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. அதே போல்தான் சிவகாசி பட்டாசு விபத்தும். வருடத்துக்கு ஒரு முறை நடந்துவிடுகிறது. இது எல்லாம் பெரிய பிரச்சனையே இல்லை. பெரிய பிரச்சனை என்றால் அது சென்னை மெட்ரோ ரயிலுக்கு அண்ணா வளைவை இடித்துவிட்டு பாதியில் திமுக அதிமுக அறிக்கை போரில் திரும்ப சீரைமக்க ஆரம்பித்துவிட்டார்கள் நம்முடைய காசில். இது மாதிரி பெரிய லிஸ்ட் இருக்கு!


மம்தா, முலாயம் சிங், மாயாவதி - சிபிஐ வழக்கு,
ராகுல் காந்தி மோடி தேர்தல் பிரச்சாரம்,
வடிவேலு, மன்மோகன் சிங், காமெடி,
சினேகா பிரசன்னா - டிவி திருமணம்,
எடியூரப்பா, கட்கரியின் நேர்மை,
சசிகலா, ஜெ - கோர்ட் விஜயம்,
டெசோ மாநாடு ஐநா தீர்மானம்,
நயந்தாரா பிரபுதேவா - காதல்,
சச்சின் ரிடையர்மெண்ட்,
ட்விட்டர் மொக்கைகள்,
ஏர் டெல் சூப்பர் சிங்கர்,
அப்சல் குரு தூக்கு,
அனிருத் ஆன்டரியா,
குஷ்பு புடவை,

என்று பலதைப் பற்றியும் எழுதத்தான் விருப்பம். ஆனால் அதற்குள் விடிந்து நியூ இயர் வந்துவிடும்.

Happy New year 2013.


2013 என்ன பெரிசாக நடந்துவிட போகிறது என்று கேட்பவர்களுக்கு. ஏழைகள் ரேஷன் கடைக்கும், மிடில் கிளாஸ் வால்மார்ட்டுக்கும் போய் அரிசி பருப்பு வாங்கி பொங்கல் வைப்பார்கள். நாம் பிளாக் எழுதிக்கொண்டும், சினிமா பார்த்துக்கொண்டும், கழகங்களும் காங்கிரசும், பிஜேபியும் சொல்லும் புரட்டை நம்பிக்கொண்டும் இருக்கப் போகிறோம். இந்திய அரசியலில் மோதி மேலே வந்தா நாடு கொஞ்சமானும் உருப்படும். தமிழ்நாட்டில் ? கரண்ட் வந்தாலே பெரிய விஷயம்!

உனக்கும், நம் கடைக்கு வரும் அனைவருக்கும் 2013 நல்லவிதமாக எல்லா வளங்களுடனும் அமைய வாழ்த்துகள்.


இப்படிக்கு,
இட்லிவடை

Read More...

Sunday, December 30, 2012

சன்டேனா இரண்டு (30-12-12) செய்திவிமர்சனம்

இந்த வாரம்...இரண்டு 'துணிச்சல்' அறிவிப்புகள்



செய்தி # 1



சமிபத்தில் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குருநாதன் அவர்களுடைய பேட்டி ஒன்று பார்த்தேன்.



இவர் பெயரை இப்படிச் சொன்னால் பலருக்கு தெரியாது. பாட்டளி மக்கள் கட்சியின் முதுகெலும்பான வன்னியர் சங்கத்தின் தலைவர், "மாவீரன் காடுவெட்டி குரு" என்றால்தான் இவரை தெரியும்.





வன்னியர் சமுதாய பெண் - தலித் இளைஞன்.காதல் கலப்பு மணத்தை தொடர்ந்து தருமபுரியில் நடந்த கலவரங்களுக்கு, "வன்னிய இனப் பெண்களை காதலிக்கும் தலித் இளைஞர்களின் கையை வெட்ட வேண்டும்" என்ற ரீதியில் இவர் ஒரு வன்னியர் சங்க விழாவில் பேசிய பேச்சுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.



"இந்த இருபதாம் நூற்றாண்டில் காதல்,கலப்பு மணம் போன்றவற்றை எதிர்ப்பது ஏன்?"



"வன்னியர்களின் ஜாதி வெறியை தூண்டிவிடும்படி பேசியது ஏன்"



"தருமபுரியில் தலித் கிராமங்களில் வீடுகள் எரிக்கப்பட்டதற்க்கு நீங்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?"



"தலித் மக்களுக்கு எதிராக மற்ற சாதி அமைப்புகளை ஒன்று திரட்டுவதன் காரணம்"



- இது போன்ற நடுநிலமையான கேள்விகளை பாரபட்சமில்லாமல் அவரிடம் கேட்டது, 'அவர்களின்' சொந்த தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சி.



குரு அவர்கள் சொன்ன விளக்கங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.



"இன்று நடப்பதெல்லாம் காதல் அல்ல. வெறும் காமம். திருமாவளவனின் தூண்டுதலால் தலித் இளைஞர்கள் திட்டமிட்டு வன்னிய இனப் பெண்களை காதலிக்கிறார்கள்.



கொஞ்சநாள் குடும்பம் நடத்திவிட்டு, 'எல்லாம்' முடிந்தபின் நடுரோட்டில் விட்டுவிட்டு ஒடிவிடுகிறார்கள். அல்லது பெண்ணின் தந்தையிடம்,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சிபிரமுகர்களை கொண்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கிறார்கள்"



"21 வயதுக்கு மேல் உள்ள ஒரு வன்னிய பெண், தலித் சமுதாயத்தை சேர்ந்த சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்தால் அதை நாங்கள் எதிர்க்கவில்லை. காரணம், அந்த வயதில் முடிவு எடுக்கும் பக்குவம் பெண்களுக்கு இருக்கும். ஆனால், பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் காதலிப்பது தவறு என்றும், அது வெறும் இனக் கவர்ச்சி என்றும் கூறிய குரு.



"தலித் இளைஞசர்களால் வட மாவட்டங்களில் உள்ள வன்னிய பெண்கள் மட்டுமல்லாமல், மற்ற சாதிப் பெண்களும் பாதிக்கபட்டு இருக்கிறார்கள்" என்றார் அவர்.



சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள், அடங்கமறு, அத்துமீறு ,திமிரு என்பதை தனது தாரக மந்திரங்களாக சொன்னதும், "அடுத்த சாதி பெண்ணிண் அடிவயிற்றில் ஆதிதிராவிடன் கரு வளரவேண்டும்" என்று பொதுக்கூட்டங்களில் முழங்கியதும்தான் எல்லா கலவரங்களுக்கும் மூலக்காரணம் என்கிறார் குரு.



குரு பேச்சில் நியாயம் இருக்கிறது என்று என்னிடம் தெரிவித்தார் கடலூரில் வசிக்கும் வன்னியரல்லாத வேறு ஒரு சமுதாயக் கட்சியை சேர்ந்த ஒருவர்.



ஆனால், அப்பாவி மக்களின் வீடுகளை கொளுத்தியது சிறிதும் மனிதாபிமானம் அற்ற செயல்தானே.



இதே குரு, ஒரு காலத்தில் கட்டப்பஞ்சயாத்துக்கள் மற்றும் ரவுடியிசம் என கொடிக்கட்டி பறந்தவர் என்பது கும்பகோணம் முதல் விழுப்புரம் வரை இருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று.




செய்தி # 2



"யார் எதிர்ப்பு குறித்தும் கவலையில்லை. எதிர்ப்பவர்கள் பின்னர் என் நிலையைப் புரிந்துகொள்வார்கள். 5 டிடிஎச் நிறுவனங்கள்... திட்டமிட்டபடி விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம்"



என்று இறுதி முடிவாக அறிவித்து விட்டார் கமல்.



"இந்தியாவுக்கே இது புதிய பரிணாமத்தை தரும் விஷயமாக இருக்கும். திரை அரங்க உரிமையாளர்கள் யாருக்காவது இதனால் நஷ்டம் வந்தால் நான் பொறுப்பை ஏற்கிறேன்".



என்றும் கூறி இருக்கிறார்.



கமலின் இந்த திட்டத்திற்க்கு திரையரங்க அதிபர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


390 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் என்று கமல் அறிவித்துள்ளதால் அப்படிப்பட்ட தியேட்டர்கள் எவை எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, விஸ்வரூபம் படத்தை திரையிடும் தியேட்டர்களில் வெளியாகும் இதர படங்களை மற்ற தியேட்டர்களில் திரையிடுவதில்லை என பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க இருக்கிறார்கள்.


இப்படி வெளியாகும் படத்தை யாரும் காப்பி அடிக்கமுடியாது. இந்த டி.டி.எச்.ஒளிப்பரப்புகளில் அதற்க்கான வாயப்பு இல்லை என்ற கமல்ஹாசன், இரண்டு விஷயங்களில் மட்டும் கமல் கோட்டை விட்டு இருக்கிறார்.


ஒன்று, படத்தின் பாடல்கள். 90 கோடி ருபாய் பட்ஜெட், சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் ஆடியோ வெளியிடு என எக்கச்சக்க 'பில்டப்' செய்யப்பட்ட இந்த படத்தின் எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் தவிடுபொடி ஆக்கியிருக்கிறது படத்தின் மொக்கை பாடல்கள். இவ்வளவு பெரிய படத்துக்கு ரகுமான் அல்லது ராஜா அல்லவா அவசியத் தேவை?

இரண்டு, டி.டி.எச்.சில் படத்தின் டைட்டில் வரும்போதே விமர்சனம் என்று ”'பிரித்துமேய” நம்மை போன்ற வலைப்பதிவர்கள் லேப்டாப்போடு டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள் என்ற செம சீரியஸ் பிரச்சனையை.


(நன்றி, இனி,அடுத்தவாரம்)



-இன்பா

Read More...

Tuesday, December 25, 2012

'புது' டெல்லி

23 வயதுப் பெண் பாலியல் வன்முறை செய்தி கடந்த ஒரு வாரமாக எல்லா டிவியிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் ஊர்வலம் என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஞாயிறு அன்று நடைபெற்ற ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த சுபாஷ் சந்த் தோமர் என்ற காவலர் மருத்துவமனையில் இன்று மரணம் அடைந்தார்.

சில கேள்விகள்:

1. இந்த போராட்டத்துக்கு காரணம் மீடியா தான். நேற்று, அதற்கு முன் தினம், ஏன் என்று கூட இந்த மாதிரிச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் மீடியா இந்த ஒரு சம்பவத்தை மட்டும் ஏன் எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது? மீடியாவில் ஜீன்ஸ் டீஷர்ட் போடும் மேல்தட்டு நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்மணிகள் மட்டுமே வந்து பெண்ணுரிமைக்குக் கூவியதற்கு பதிலா பட்டி தொட்டிகளில் இருக்கும் சிலபல ஆம் ஆத்மிகளை ஏன் கூப்பிடலை?

2. ஏன் குஜராத் தேர்தல் முடிவு அன்று மட்டும் மீடியா இந்த செய்தியைக் கண்டுக்கொள்ளவில்லை ?

3. மாணவர்கள் இந்த மாதிரி போராட்டம் நடத்தும் போது அதில் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து ஏதாவது அசம்பாவிதம் நடத்தினால் என்ன ஆகும்? யாரை குறை சொல்லுவார்கள் ?

4. போலீஸ் தங்கள் கடமையை செய்கிறார்கள். ஆனால் போலீஸை ஏதே ஒரு வில்லன் போல ஏன் மீடியாக்கள் சித்தரிக்கிறது ? உதாரணம் சர் தேசாய் போலீஸ் உயர் அதிகாரியை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்டது. போலீஸ் மீது எப்படி நமக்கு மதிப்பு வரும்?

5. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதில் மற்றுக் கருத்து இல்லை ஆனால் பஸ், கார்களில் இந்த மாதிரி தப்புகள் நடக்கும் போது அங்கே போலீஸ் இருக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியம் ? குற்றத்துக்கு முக்கிய காரணம் நாம் தான்.

6. அப்படியே போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் - பெண்கள் பாதுகாப்புக்கு என்ற தீமுக்கு பதில் நல்ல கல்விக்காகவும் , மதுஒழிப்புக்காகவும் நடத்த வேண்டும். நகரங்களில் யுவதிகள் சம உரிமை என்ற போர்வையில் சரக்கடிப்பதையும், தம்மடிப்பதையும் கண்டித்துத் திருத்த வேண்டும். சும்மா ஃபேஸ்புக்கில் கருத்து சொல்லி 'லைக்' போடுவதால் தீர்வு காண முடியாது.

7. எல்லாத்துக்கும் மேலாக நீதித் துறையில் அரசியலோ போலீசோ தலையீடு கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். செய்வார்களா ?

டெல்லி சி எம் அடக்கமா ஷிண்டேக்கு லெட்டர் எழுதின மாதிரி எல்லாப் பெண்களும் அடக்கமாக இருக்க வேண்டும் என்றால் நம்பளை பிற்போக்கு வாதிகள் என்பார்கள்.


Read More...

Sunday, December 23, 2012

சன்டேனா இரண்டு (23-12-12) செய்திவிமர்சனம்



இந்த வாரம்...கொஞ்சம் ஆன்மிகம் பேசுவோம்.


செய்தி # 1



இன்று ஆன்மிகவாதி என்றாலே, போலித்தனமும், ஆடம்பரமும், பகட்டும்தான் நம் நினைவுக்கு வருகிறது. எளிமையாக வாழ்ந்து,எளிமையான முறையில் ஆன்மிகத்தை பாரபட்சமின்றி மக்களிடம் கொண்டு செல்ல நம்மிடம் இப்பொது கிருபானந்த வாரியார் அவர்கள் இல்லை.







விபுதி மணம் - நான் இட்லிவடையில் எழுதி, எனக்கே மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. வாரியாரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.



அவரது நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.



அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.



'கம்' முனு இரு: "கம்முனு சும்மா ஒரு. எல்லாம் தானே நடக்கும்" என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் "கம்" எனபது

விநாயகரின் பீஜ மந்திரம். "ஓம் கம் கணேசாய நம" எனபதாகும். 'கம்' என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.



உலாவ இடமா இல்லை : "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச்,

பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.



வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.



அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?



கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. 'கள்' என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். "நீ" என்பதற்க்கு பதில் நீங்'கள்' என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த 'கள்' செய்யும் வேலைதான்.



சினிமா: இப்போதைய சினிமாக்களை (கவனியுங்க!) பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள்.



பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.


சாமியார் பட்டம்: கலெக்டரிடம் சினேகம் பண்ணுபவனுக்கு மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள் அதுபோல, கடவுளிடம் பழகுபவனுக்கும் மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள்.ஆனால், தினமும் விபுதி கொடுப்பவனையே சாமியார் ஆக்கி விடுகிறார்களே!.



நாத்திகவாதிகள் வாழ்க: இறைவனை எதிர்த்து பேசி வருவதால், இறைவனின் புகழ் மேலும் வளரும். ஆதலால், இறைவனை எதிர்ப்பவரும் இறைத்தொண்டுதான் செய்கின்றனர். குடையை விரித்து யாரும் சூரியனை மறைத்து விட முடியாது.



கோவில் எதற்கு? : இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், கோவிலில் உள்ள திரு உருவத்தில் விளங்கித் தோன்றுகின்றான். பசுவின் உடம்பில் பாலைப் பெற முயற்சி செய்கின்ற ஒருவன், பசுவின் கொம்பையோ, காதுகளையோ,வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பசுவின் பால் பெற விரும்புவோன், பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப் பெற விரும்புவோன், கோவில் சென்று இறைவன் திருமுன் நின்று வழிப்பட்டு திருவருளைப் பெறுதல் வேண்டும்.



வாரியாரின் அர்த்தமிக்க, அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய வார்த்தை விளையாட்டுகள்தான் மக்களிடம் ஆன்மிகம் எளிதாக சென்றடைய காரணம் என்பது உங்களுக்கு விளங்குகிறது அல்லவா?



தன் குரலை வைத்து 'மிமிக்ரி" செய்பவர்களை (செய்துவருபவர்களை) பற்றி வாரியார் பின்வருமாறு கூறி இருக்கிறார்.



"என் குரலை நிறைய பேர் "மிமிக்ரி" கிண்டல் பண்ணுகிறார்களே. அதை நான் கிண்டல் என்று சொல்லமாட்டேன். கஷ்டப்பட்டு பயிற்சி செய்து என்னைப் போலவே பேசுகின்றார்களே. அதை எண்ணி ஆச்சரியப்படுவேன். பேசினால் பேசட்டுமே. "முருகா,முருகா" என்று அவர்கள் சொல்லித்தானே ஆக வேண்டும். அது அவர்களுக்குப் புண்ணியம் அல்லவா? "



செய்தி # 2




சித் என்றால் அறிவு, அம்பலம் என்றால் வெட்டவெளி. முன்பு தில்லை என்று வழங்கப்பட்ட இத்தலம் இப்போது சிதம்பரம் என்று அழைக்கபடுகிறது. அப்பர்,சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் என அனைவராலும் பாடல் பெற்ற, சைவர்களின் தலைமை கோவிலாக விளங்குகிறது.

'ஓம்' என்னும் பிரணவ நாதத்தின் வடிவாக நடராஜர் ஆனந்த கூத்தாடும் மூலவரின் பெயர் சபா நாயகர்.தில்லை திருகோவிலுக்கு மேரு என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

: கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என நான்கு ராஜகோபுரங்கள். இவை நான்கும் ஒரே உயரத்தில் இருப்பது ஒரு சிறப்பு அம்சம் ஆகும். ஒவ்வொன்றும் 135 அடி உயரம்.இந்த கோபுரங்களுக்கு, ஏழு தளங்கள், பதிமூன்று செப்பு கலசங்கள், 40 அடி அகலம் கொண்ட கோபுர வாயில்கள் என்று பொதுவாக அமைந்து இருக்கின்றன. ராஜ கோபுர வாசல்களில், நடராஜ முத்திரை எனப்படும் பரத கலை சிற்ப்பங்கள் காணப்படுகின்றன. நடராஜர் தெற்கு முகமாக திருநடம் புரிவதால், தெற்கு கோபுர வாசலில், கொடி ஏற்றப்பட்டு உள்ளது.புனித மரம் தில்லை மரம்.

நடராஜர் சந்நிதியை பொன்னம்பலம் என்றும் அழைக்கிறார்கள். இக்கூரையின் மீது, ஒன்பது சக்திகளை குறிக்கும் ஒன்பது தங்க கலசங்கள் அமைந்து உள்ளன.மேலும், இதில், 64 கலைகளை குறிக்கும் வகையில் 64 கைம்மரங்கள், ஒரு நாளில் வெளிவரும் மனிதனின் சுவாசங்களை குறிக்கும் வகையில் 21600 ஓடுகள், மனிதனின் நாடிகளின் எண்ணிக்கையை உணர்த்தும் வகையில் 72000 ஆணிகள் ஆகியவை பொருத்த பட்டு உள்ளன.


மனிதனின் இருதயத்தில் இருக்கும் இறைவனே, இந்த பொன்னம்பலத்தில் இருக்கிறான் என்று உணர்த்தும் விதமாக மனித உடல் போல இந்த பொன்னம்பலம் அமைக்க பட்டுஉள்ளது.

: ஆலயத்தின் சித்சபையில், நடன கோலத்தில் இறைவன் காட்சி தர, அவர்க்கு இடப்பக்கம் சிவகாம சுந்தரி அம்பாள் வீற்று இருக்கிறார். வலது பக்கம் திரை போட்ட வாயில் உள்ளது. அங்கு தங்கதினால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்க விட பட்டு உள்ளது. நடராஜருக்கு, ஆரத்தி எடுக்கப்படும் போது, அந்த வாயிலின் திரை விளக்கப்படும். இதன் அர்த்தம், இறைவன் ஆகாய உருவில் அங்கு இருக்கிறார் என்பது. இதையே சிதம்பர ரகசியம்என்கிறார்கள்.

மூலவரே வீதி உலா வரும் இரு பெரும் திருவிழாக்கள் மார்கழி திருவதிரையிலும், ஆணி உத்தரதிலும் நடை பெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் கடந்த புதன் அன்று கொடியேற்றத்துடன் துவங்கி இருக்கிறது.



வரும் டிசம்பர் 27 வியாழன் அன்று தேர் உத்ஸவமும், வெள்ளி அன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.



விழாக்கோலம் பூண்டு உள்ள சிதம்பரம் சென்று, மார்கழி மாதத்தின் சிறப்பு மிக்க ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசனம் கண்டு வாருங்கள்.



(நன்றி, இனி அடுத்தவாரம்)



-இன்பா

Read More...

Friday, December 21, 2012

உலகம் இன்னும் அழியவில்லை


இந்த படத்தில் இருப்பவர் உங்கள் கண்களுக்கு தெரிந்தால் நீங்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் இருப்பதை பின்னுடத்தில் உறுதி செய்யுங்கள்

Read More...

Thursday, December 20, 2012

வாழ்த்துகள் மோடி



வாழ்த்து பிரதமர் ஆவதற்கு..!

Read More...

Wednesday, December 19, 2012

எழுத்தாளர்கள், பாடகர்கள்

நண்பர் ஒருவர் பாக்கியம் ராமசாமி FBல் இப்படி எழுதியிருக்கிறார் என்று என்னிடம் அனுப்பினார்.


எழுத்தாளர்கள் சங்க்கீதக்காரர்களைவிட ஒரு விதத்தில் உயர்ந்தவர்கள்.
சக எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதியிருந்தால் மற்ற எழுத்தாளர்கள் பாராட்டுவார்கள்.

சுஜாதாவை ரா.கி.ர . பாராட்டுவார். என்னை சுஜாதா பாராட்டியுள்ளார் நான் பாராட்டாத எழுத்தாளரே இல்லை.

ஆனால் பாருங்கள், சங்கீதக்காரர்கள் சக பாடிகளை பாராட்டுவது அபூர்வம். விமரிசனம் வேண்டுமானால் மானாவாரியாகச் செய்வார்கள். பாராட்ட மனசே வராது. வேறென்ன. பொறாமை, கர்வம்னு அவசரப்பட்டுச் சொல்லி விடாதீர்கள்.

அவர்களுக்கு குருகுல வாசத்தில் குரு சொல்லித் தந்த பாடம் அது. குரு யாரையும் புகழவே மாட்டார். அப்படியே புகழ்ந்தாலும் மற்ற மாணவர்களுக்கு எரிச்சலாகிவிடும் .
இதனால் புகழ்வது என்றால் என்ன என்றே க்ளாஸ் பாடகர்கள் அறியமாட்டாதவர்கள்!



குமுதம் விகடனை புகழாது, கல்கி குமுதத்தை புகழாது அதே போல தான் இதுவும். ஆனால் சங்கீத வித்வான் இறந்து போன பிறகு வண்டி வண்டியாக புகழ்வார்கள்...அஞ்சலி கட்டுரை எழுதுவார்கள்!

Read More...

ஆட் மேன் அவுட் - பரிசு

[ Vikram is Odd man out.Viyay,Surya,Illayaraja and prabhu appreared in Jewelleries advertisement wherease Vikram appreared in Jewellery loan Advertisement :-) ] என்று சொன்ன Rajesh RVக்கு வாழ்த்துகள் ! உங்க முகவரியை எனக்கு அனுப்புங்கள். புத்தகம் அனுப்பிவைக்கிறேன்.

பலர் இளையராஜா என்றார்கள். ஆனால் "தை பிறந்தால் வழி பிறக்கும் 'தங்கமே தங்கம்' என்பது தான் க்ளு. அதனால் விக்ரம் தான் சரியான விடை.

பெண்கள் விஷயம் எங்கே ஆண்களுக்கு தெரிய போகிறது என்று நினைத்தேன், ஆனால் பலர் விடையை சரியாக சொல்லியுள்ளார்கள். பலர் இரண்டு முறை ஒரே விடையை சொல்லியுள்ளார்கள். அவர்கள் ஆர்வத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது.


அடுத்து பட்டுபுடவை விளம்பரங்களுக்கு ஆண்களை ரெடி செய்யலாம் !

Read More...

Tuesday, December 18, 2012

ஆட் மேன் அவுட் - புதிர்



போன புதிர் ரொம்ப கஷ்டம் என்று சொன்னதால் இந்த வாரம் சுலமபான ஒரு புதிர். Who is the odd man out ?

தை பிறந்தால் வழி பிறக்கும்...அதனால் பரிசு(புத்தகம்) தை மாசம் அனுப்பி வைக்கப்படும் !

Read More...

Monday, December 17, 2012

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ஹிந்தி புத்தகம் - சுமதி


ரூபிக் க்யூப் பற்றி ஒரு முறை விகடனில் மிகக்குறைந்த நேரத்தில் சால்வ் செய்பவர்கள் பற்றி கட்டுரை வந்த சமயம். அதைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் வாங்கித் தருமாறு கேட்டேன். அங்கே இங்கே விசாரித்து விட்டு நம் ஊரில் கிடைப்பதில்லைன்னு சொல்லிவிட்டார். ஆனால் என் நச்சரிப்பு தொடர்ந்தது.

ஒரு முறை அப்பா டெல்லிக்கு போய்விட்டு வரும்போது க்யூப் வாங்கி வந்தார். அதை வைத்துக்கொண்டு விதவிதமாக முயற்சி செய்து பார்த்தேன். ம்ஹூம்... ஒரு சைடு போட முடிந்தது, ரெண்டு சைடு போட முடிந்தது. அவ்வளவுதான். ஏமாற்றமாகப் போய்விட்டது.

வீட்டுக்கு வருபவர்களிடம் கேட்பது, பள்ளியில் தோழிகளிடம் அப்பப்போ இதைப் பற்றி கேட்டு பார்ப்பது. யாருக்கும் தெரியவில்லை. ஒருத்தி மட்டும் அது ரொம்ப சுலபம் என்று சொல்ல, ஏய் எனக்கும் சொல்லிக்கொடு ன்னு கெஞ்ச, அவள், அதை ஃபுல்லா கழட்டி உள்ளே ஸ்க்ரூ இருக்கும், அதை அட்ஜெஸ்ட் செய்தால், நமக்கு வேண்டிய மாதிரி ஒரே கலர் கொண்டு வந்து விடலாம் என்றாள்.. சப்பென்று ஆகிவிட்டது.


ஆனாலும் வீட்டுக்கு வந்து அவள் சொன்ன மாதிரி கழட்டப்பார்த்தால் , முடியவே இல்லை தம்பி அதை உடைக்க ரெடி ஆகிவிட்டான். ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும் போது குறி பார்த்து வீட்டு ஜன்னல்களை பல முறை உடைத்து அனுபவம் பெற்றவன். உடைத்து விட்டு திரும்ப சேர்க்க முடியலைன்னா அப்பா கிட்டே வாங்கி கட்டிக்கணுமே என்ற பயத்தில் அவனை அடக்கி அதை பத்திரமாக ஷோ கேஸில் வைத்துப் பூட்டி விட்டேன். இனி நானும் எடுக்க மாட்டேன், நீயும் எடுக்கக் கூடாது என்ற ஒப்பநதம் செய்து கொண்டோம். கண்ணில் படும் போதெல்லாம் நமக்கு சால்வ் பண்ண வரவில்லையே என்று ஏக்கமாக இருக்கும்.

ஒரு லீவு நாள் மதியம் ரொம்ப சுவாரசியமா தம்பியுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன். வாய் சண்டை முற்றி அடுத்த கட்டத்துக்கு தயாரான போது அப்பா எங்கள் இருவரையும வெளியே கூட்டிக் கொண்டு போகிறேன் என்று கிளப்பினார். கூட்டிக்கொண்டு போன இடம் காய்தே மில்லத் கல்லூரியில் நடந்த புத்தகக் கண்காட்சி.

ஏற்கனவே படிக்கிறதுன்னா ( அதாவது கதை புத்தகம் !!) பசி தாகம் எடுக்காது. புது புத்தகத்தின் வாசனை அவ்வளவு பிடிக்கும். கையில் ஒரு புத்தகம் கிடைத்தால், முதலில் வாசனையை மோப்பம் பிடித்து விட்டு தான் படிக்கவே ஆரம்பிப்பேன். சண்டையை ஒத்திப் போட்டு விட்டு உடனே கிளம்பினோம்.

வீட்டிலிருந்து அண்ணாசாலை வழியாக போகும் பேருந்தில் ஏறி .( "அண்ணா சாலை மட்டும், சொன்னால் அழகு சொட்டும்" என்று பக்கத்து வீட்டு குழந்தை தமிழ் ரைம்ஸ் ஒன்றை கத்திக் கொண்டே இருக்கும் !! ) வழியெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்தோம்.

வரிசையாய் பல ஸ்டால், அதில் பலப்பல புத்தகங்கள். அடேயப்பா...

வியந்து கொண்டே போன போது ஒரு ஸ்டால் வாசலில் நாங்கள் வாங்கிய அளவு பெரிய க்யூப் படம் போட்ட சிவப்பு அட்டை புத்தகம் கண்ணில் பட்டது. அவ்வளவுதான் அங்கேயே நின்று விட்டோம். க்யூப் சல்யூஷன்ஸ் என்று போட்டிருக்க, அப்பாவிடம் அதை வாங்கித் தரச் சொன்னோம்.

அப்பாவுக்கோ அதில் ஹிந்தி யில் எழுதி இருந்ததை பார்த்து அது ஹிந்தி, வேண்டாம் என்று அந்த ஸ்டாலை தாண்டிப் போக முயல, தம்பி எங்களுக்குத்தான் ஹிந்தி தெரியுமே ன்னு சொல்ல. ( என்ன தைரியம் !!! எழுதியது ஒரே ஒரு பரீட்சை அதிலும் ஒரு எழுத்துக்கு ஐந்து எழுத்து என்பது மிகவும் அநியாயமா பட்டதால், பல எழுத்தை அவுட் ஒப் போர்ஷன் பண்ணி எதையோ எழுதி விட்டு வந்து இப்போது ஹிந்தி தெரியும் என்றால்) அப்பா காதில் போட்டுக்கொள்ளாமல் போய்க் கொண்டே இருக்க, ஸ்டாலில் இருப்பவர் எட்டிப் பார்த்து அது இங்கிலீஷ் தான் என்று சொன்னார்.

அதை வாங்கியவுடன் பெரிய சாதனை செய்து விட்ட சந்தோஷம் ; அப்பவே அதை முழுவதும படித்து புரிந்து ஆறு பக்கமும் போட்டு விட்ட மாதிரி பெருமை. அந்த நொடியே புத்தகக் கண்காட்சியை நேசிக்கத் தொடங்கி விட்டேன்.

அடுத்தடுத்த ஸ்டாலை இன்னும் உற்சாகமாக பார்த்து சுஜாதா புத்தகம் இரண்டு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

அப்புறம் அந்தப் புத்தகத்தில் இருந்த ,ஃபார்முலா, ஈக்வேஷன் எல்லாம் படித்து கான்செப்ட் புரிந்து ஒரு நிமிஷத்துக்குள் போட வந்து விட்டதும் , பின்னர் வேலைக்காக வெளியூர் சென்று தங்கியிருந்த காலகட்டத்தில் அக்கம்பக்க குட்டீசிடம கொடுத்து கலைக்கச் சொல்லி, நிமிஷத்தில் போட்டு " ஹை சூப்பர் " என்று அவர்கள் வியந்ததும் .... உறைந்த நிரந்தரமாய் (சுஜாதா :-) ) நெஞ்சில் தங்கி விட்ட தருணங்கள்.

நமக்கு பிடித்த ஒருவர் வருகையை எவ்வளவு ஆவலாக எதிர்பார்ப்போமோ அந்த அளவு புத்தகக் கண்காட்சியை எதிர்பார்ப்பதும் வருடா வருடம் புத்தகக் கண்காட்சிக்கு போவதும் வழக்கமாகி விட்டது.

சுமதி
இதுக்கு தான் கண்காட்சியில் ஹிந்தி/ஆங்கில புத்தகம் வாங்க வேண்டும் :-)

Read More...

Sunday, December 16, 2012

நாயன்மார்கள் புதிர் விடை

சிமுலேஷன் மட்டும் தான் சரியான விடை அளித்துள்ளார்

மூவருக்கும் பொதுவான விஷயம் "மஹதி". நாரதர் கையில் உள்ள யாழின் பெயர் "மஹதி". பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கண்டு பிடித்த ராகத்தின் பெயர் "மஹதி". ஜேசுதாஸ் அவர்கள் பாடிய "அதிசய ராகம்" பாடலின் துவக்க ராகம் "மஹதி"

நாயன்மார்கள் மொத்தம் 63 தலைவருக்கு வயது 63 இந்தப் பதிவு வெளியான நாள் 12-12-12 - ரஜினி படம் என்ற க்ளு வை சிலர் கண்டுப்பிடுத்துள்ளார்கள். ஆனால் விடையை சரியாக சொல்லவில்லை.

நண்பர் சிமுலேஷனுக்கு வாழ்த்துகள். அவருக்கு புத்தம் ஒன்று அனுப்பிவைக்கப்படும்

கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி

The ages of 3 celebrities as follows: Rajini=63=Number Nayanmargal KJYesudas=73 Balamuralikrishna=83 என்று ஒருவர் சொன்ன விடையை ரசித்தேன் நாரதரை விட்டுவிட்டார் ... நாராயணா இந்த ... :-)

Read More...

சன்டேனா இரண்டு (16-12-12) செய்திவிமர்சனம்



இந்த வாரம் : முதல் செய்தியில்..ஒரு புடவையில் காயப்பட்ட கடவுள். இரண்டாவதில்.... கல்லினுள் உள்ள கடவுள் காயப்டுவதில்லை.


செய்தி # 1



குஷ்பு - வடமாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய சமூகப்பெண்ணான நக்கத், குஷ்பு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நடிகையாகி, இயக்குனர் சுந்தர்.சியை கைப்பிடித்து இந்துவாக மாறி,பின்னர் கருணாநிதி முன்ணணியில் திமுகவில் இணைந்து, தற்போது அக்கட்சியின் "பிரச்சார பீரங்கி" என்று வடிவெடுத்துவிட்டவர்.


இவரை திமுகவில் சேர்த்துக்கொள்ள, அப்போது கருணாநிதி அவர்கள் சொன்ன காரணம், "பெரியார் படத்தில் குஷ்பு, மணியம்மையாக சிறப்பாக நடித்து இருந்தார்" என்பதே.

சில வருடங்களுக்கு முன்னால், சென்னையில் நடந்த ஒரு சினிமா பூஜையில், ஒரு அம்மன் சிலையின் முன்பு கால் மீது கால் போட்டு உட்கார்ந்துகொண்டார். அதுவும் செருப்பு கால்களோடு. இந்து மத கடவுள்களை அவர் அவமதித்துவிட்டதாக, இந்து முண்ணனி போன்ற அமைப்புகள் கொதித்து எழுந்தன. இது சம்பந்தமாக அவர் மீது வழக்கும் அப்போது தொடரப்பட்டது.

"பஸ்ஸில் கடவுள் படம் இருக்கிறது என்பதற்க்காக, காலில் செருப்பு இல்லாமல் இவர்கள் பயணம் செய்வார்களா?" என்று அவருக்கு வக்காலத்து வாங்கின திராவிட கழகத்தினர்.

மீண்டும் குஷ்பு இது போன்ற ஒரு "அவமதிப்பு" விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்.

ரசிகர்களால் கோயில் கட்டி கும்பிடப்பட்ட முதல் நடிகை என்ற உலக சாதனைக்கு உரித்தான குஷ்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உடுத்தி இருந்த புடவைதான் சர்ச்சைக்கு காரணம்.

அவர் அணிந்து இருந்த புடவையில், கிருஷ்ணபகவான், ராமர் மற்றும் ஹனுமான் ஆகிய கடவுளின் உருவங்கள் இருந்தன.

"திட்டமிட்டே குஷ்பு இந்த புடவையை அணிந்து வந்து இருக்கிறார். யாருமே ராமர் மற்றும் பிரம்மசாரிய கடவுளான அனுமார் ஆகிய உருவங்கள் படைத்த சேலையை அணிவது இல்லை. இப்படி இந்து கடவுள்களை அவமதித்தற்க்காக, அவர் மக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால்,அவருக்கு எதிராக போராட்டாங்கள் நடத்துவோம்" என்று அறிவித்து இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

"இது போன்ற எதிர்ப்புகளை நான் பொருட்படுத்தவில்லை" என்கிறார் குஷ்பு.

"இந்த பிரச்சினையை நான் கண்டு கொள்ளவே இல்லை. வேலை வெட்டி இல்லாதவர்கள் இதை பெரிதுப்படுத்துகிறார்கள். சிலர் என் மூலமாக விளம்பரம் தேட முயற்சிக்கின்றனர்," என்றார் குஷ்(!).

ஆனால், குஷ்பு சொன்னது நமக்கு அப்படியே 'உல்டா'வாக தெரிகிறது.

குஷ்பு, 'சீப் பப்ளிசிட்டி' க்காக திட்டமிட்டே, எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே, இந்த புடவையை உடுத்திவந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

முதல் காரணம், ஏற்கனவே அவர் இது போன்ற காரியத்தை செய்து இருக்கிறார். இரண்டாவது காரணம், தற்போது அவர்,

"வாழும் பெரியார்" அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் "கொள்கை பரப்புச் செயலாளர"’.



செய்தி # 2
சென்ற வாரத்தில் குமுதம்,விகடன் போன்ற பத்திரிக்கைகளின் கவர்ஸ்டோரி தொடங்கி, சன் டிவி தனது வழக்கமான அழுமூஞ்சி சீரியல்களுக்கு எல்லாம் முழுக்கு போட்டுவிட்டு


இந்த கொண்டாட்டத்தில் ஒரு ஒரத்தில் கூட செய்தி வராமல் முடங்கிப்போனவர்....கடந்த 11 ஆம் தேதி பிறந்த நாள் கண்ட மகாகவி பாரதியார்.


இதைவிட கொடுமையான சம்பவம் இவரது பிறந்த நாளில், புதுச்சேரி நகரில் நடந்து இருக்கிறது.

புதுவையில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதியில் இருக்கிறது பாரதி அவர்கள் வசித்த வீடு. அந்த வீடு பின்னாளில்,"பாரதி அருங்காட்சியகம்" என்று விளங்கியது. மகாகவி அவர்கள், புதுவையில் வாழ்ந்த காலக்கட்டங்களில் அவர் பயன்படுத்திய பேனா, புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு அங்கு வைக்கப்பட்டன.

ஐந்து வருடங்களுக்கு முன், பராமரிப்பு என்ற பெயரில் இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது. பாரதியாரின் பிறந்த நாள் மற்றும் அவரது நினைவு நாள் ஆகிய நாட்களில் மட்டுமே அதன்பிறகு திறந்து விடப்பட்டது.

ஆனால், கடந்த 11, அவரது பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தும்பொருட்டு, இந்த வீட்டிற்க்கு வந்த உள்ளூரை சேர்ந்த பாரதி மன்றம் என்ற அமைப்பினர் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இந்த தினத்தில் கூட, அந்த வீடு நாள் முழுவதும் பூட்டப்பட்டே இருந்தது.

'இதெல்லாம் ஒரு பிரச்சினையா?' என்னும் அளவுக்கு போய்விட்டது மக்கள் மனமும், அரசும்.

“எல்லாமே தெய்வீகம் என்பதால் சக மனிதரைக் கொல்வதோ ஏன் அடிப்பதோகூடத் தெய்வக் குற்றமும் பாவமுமாகும்.


ஆனால் ஒரு கல்லை உடைப்பதென்பது பாவமன்று. ஏனெனில் மனிதருள் உள்ள கடவுள் காயப்படுவார்; கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை. எந்த ஒரு சிருஷ்டியையும் தார்மீகமற்றதெனக் கூறக் கூடாது. எல்லாமே தெய்வீகமானதால், அனைவரும் கடவுளைப் போல் சிந்தித்து, பேசி, செயல்பட வேண்டும். “

-சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 2 மார்ச் 1919 ஞாயிற்றுக்கிழமையன்று, மகாகவி அவர்கள் முதன்முதலாக ஆற்றிய உரையில் இருந்து.


மகாகவியின் சிந்தனைப்படி, கல்லை உடைத்தாலும் 'உள்ளே' உள்ள கடவுள் காயப்படுவது இல்லை. கேவலம், ஒரு முன்ணாள் சினிமா கவர்ச்சி நடிகையின் புடவையா அவரை காயப்படுத்திவிடும்??


(நன்றி, இனி அடுத்தவாரம்)



-இன்பா

Read More...

Wednesday, December 12, 2012

சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர்

அஞ்சலி

Read More...

நாயன்மார்கள்

புத்தகம் பரிசு

Read More...

Tuesday, December 11, 2012

புத்தகக் கண்காட்சி புத்தக லிஸ்ட்

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 4 முதல் 21 வரை.
வழக்கம் போல இதை பற்றி டிவிட்டர், வலைப்பதிவு என்று பதிவுகள் வர ஆரம்பித்துவிட்டது.
என்ன புத்தகம் வாங்கலாம் என்று மக்கள் லிஸ்ட் போட ஆரம்பித்துவிடுவார்கள்.என்ன புத்தகம் வாங்கலாம் என்று நீங்கள் முடிவு செய்திருக்கீறீர்கள் என்று பின்னூட்டதில் சொன்னால் என்னை போல நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.

பின்னூட்டத்தை உடனே பிரசுரிக்க போவதில்லை... :-) ஆனால் கடைசியில் டாப் 10 புத்தகங்கள் என்று போட உத்தேசம் !




Read More...

Monday, December 10, 2012

விகடனின் வலைபாயுதே

பத்திரிகையாளர் ஞாநி அவர்களுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கார்.

முக்கியமான அறிவிப்பு இது:

தங்கள் நிறுவன ஊழியர்கள் சமூக தளங்களில் கருத்து சொல்லக் கூடாதென்று ஆனந்த விகடன் குழும நிர்வாகம் அவர்களுக்கு அண்மையில் ஒரு விதியைப் பிறப்பித்திருப்பதாக் அறிகிறேன். அதன் பின்னர் வழக்கமாக இங்கே அதிகம் உலவும் சில விகடன் ஆசிரியர் குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். இந்த விதி தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் அத்து மீறல் என்பதும் இதைப் பிறப்பிக்க விகடன் குழுமத்துக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என்பதே என் கருத்து. தங்கள் இதழில் வெளியாகும் விஷயங்களையே இது பத்திரிகையின் கருத்தல்ல என்று நீதிமனறத்தில் சொல்லி நழுவக்கூடிய பத்திரிகைகள் , தங்கள் ஊழியர்கள் வலை தளங்களில் சொல்லும் கருத்துகள் பத்திரிகையின் கருத்துகள் என்று கருதப்பட்டுவிடும் என்று சாக்கு சொல்வது அபத்தமானது; அநீதியானது. பதுங்கியிருக்கும் அனைத்து விகடன் ஆசிரியர் குழுவினரையும் திரும்ப வந்து வழக்கம் போல இங்கே இயங்கும்படி வேண்டுகிறேன். விகடன் நிர்வாகம் போட்டிருக்கும் விதி நீதிமன்றத்துக்குச் சென்றால் அடிபட்டுவிடும். அதற்கு அஞ்சவேண்டாம்.

ஞாநி சொல்லுவது சரி என்று ஒத்துக்கொண்டாலும், நடைமுறையில் இது சாத்தியம் இல்லை. விகடனில் வேலை பார்ப்பவர்கள் ஒன்றாம் தேதி சம்பளம் வாங்குபவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் இருக்கு ஃபீஸ் கட்ட வேண்டும், மின்சாரம் இல்லை என்றாலும் அதற்கு கட்டணம் கட்ட வேண்டும். யார் நீதிமன்றம் போக போகிறார்கள் ? போன வாரம் ராம் ஜெத்மலானி கட்சிக்கு எதிராக பொதுவில் பேச அவரை வெளியே துரத்தினார்கள்.... தனி நபர் கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இருக்கு ஆனால் தங்கள் பத்திரிக்கைக்கு எதிராக அது இருக்க முடியாது என்பது தான் நிதர்சனம்.

விகடனில் ஒரு தலையங்கம் அல்லது விகடன் தயாரிக்கும் ஒரு டிவி சீரியலை பற்றி விகடன் டீமில் இருக்கும் ஒருவர் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் தலையங்கம் தனக்கு உடன்பாடு இல்லை என்றோ சீரியல் மொக்கை என்றோ பொதுவில் எழுதினால் அவருக்கு பல 'லைக்' வரும் ஆனால் விகடன் நிர்வாகம் அவருக்கு 'டிஸ்லைக்' அனுப்பிவிடுவார்கள். லைக் போட்டவர்கள் அவருக்கு சம்பளம் கொடுக்க போவதில்லை.

பத்திரிக்கை ஜாம்பவான்கள் அவர்கள் பத்திரிக்கையில் வேலை செய்தவர்களை எங்காவது பொது நிகழ்ச்சி அல்லது வேறு எதிலாவது எழுத வேண்டும் என்றால் இவர்களிடம் பர்மிஷன் வாங்கிய பிறகே செய்யலாம் என்ற ரூல் இருந்திருக்கிறது. ஏன் தங்கள் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் கூட அவர்களிடம் கேட்க வேண்டியிருந்திருக்கிறது.

விகடன் ஏன் இந்த முடிவை எடுத்தது என்று தெரியவில்லை... ஏதாவது காரணம் இருக்கலாம். தெரிந்தவர்கள் ஆந்தையார், கழுகார் பின்னூட்டத்தில் சொல்லலாம்..

எனக்கு உள்ள ஒரே பயம் இட்லிவடை மாதிரி பொங்கல் வடை, மசால் தோசை, ஆனியன் ரவா என்று இவர்கள் வந்தால் என் பிழைப்பு பாதிக்கப்படும் :-)

அப்டேட்:

ரவி பிரகாஷ் ஞாநிக்கு சொன்ன பதில் இது

அரைகுறையாகத் தெரிந்துகொண்டு இப்படிப் பதிவிட்டிருக்கும் திரு.ஞாநி அவர்களுக்கும், அவருக்கு ஆதரவாக இங்கே கமெண்ட் போட்டிருக்கும் மற்றவர்களுக்கும் இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமூக தளங்களில் கருத்து எதுவும் சொல்லக்கூடாதென்று விகடன் குழும நிர்வாகம் தன் ஊழியர்களுக்குக் கட்டளை எதுவும் இடவில்லை. சொல்கிற கருத்துக்கள் தனது சொந்தக் கருத்துக்களே, விகடன் குழுமத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுறச் சொல்லுமாறுதான் உத்தரவு பிறப்பித்துள்ளது. விகடனுக்குச் சொந்தமான புகைப்படங்கள், தகவல்கள் எதையும் தங்கள் தனிப்பட்ட முக நூலில் பகிர வேண்டாம் என்றுதான் அறிவுறுத்தியுள்ளது. தவிர, புரொஃபைலில் விகடன் ஊழியர் என்கிற முகவரியோடு கருத்து பதியும்போது அது விகடனின் கருத்தாகவே பலரால் பார்க்கப்படும் என்பதால் (பலமுறை அப்படியொரு துரதிர்ஷ்டம் எனக்கே நடந்துள்ளது. விகடனின் கருத்து வேறு, அதில் பணிபுரிகிறவர்களின் கருத்து வேறு என்கிற தெளிவு இங்கே பலருக்கு இன்னும் ஏற்படவில்லை. இங்கே கமெண்ட் போட்டிருக்கும் ஏபி ராஜசேகரனின் ஆதங்கமே அதற்கு ஒரு உதாரணம்.) தங்கள் புரொஃபைலில் இருந்து அந்த அடையாளத்தை நீக்கும்படி சொல்லியிருக்கிறது. மற்றபடி கருத்துக்களைப் பகிரவேண்டாம் என்று விகடன் உத்தரவிடவில்லை. எனவே நீங்கள் சொல்லும் அத்துமீறலோ, தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையீடோ ஏதும் நடந்துவிடவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

Read More...

Sunday, December 09, 2012

சன்டேனா இரண்டு (9-12-12) செய்திவிமர்சனம்


இந்த வாரம்....சன்டே "சூப்பர் ஸ்டார்கள்"னா இரண்டு.

செய்தி # 1

12 - 12 - 12 ; இப்படி ஒரு நாள்,மாதம்,வருடம் இனி அமையப்போவது சாத்தியமே இல்லை. இந்த தேதியில் பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டாருக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சமிபத்தில் ஒரு டிவி சேனலில் 'நீங்கள் விருப்பும் பாடல்" சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு குடும்பத்திடம் பிடித்த நடிகர் குறித்து கேள்வி கேட்டார்கள். அந்த குடும்பத்தில் உள்ள ஒரு ஐந்து வயது குழந்தை தனக்கு மிகவும் பிடித்த நடிகராக சொல்லி குறிப்பிடப்பட்டவர்....ரஜினி அவர்கள்.

யோசித்து பாருங்கள். இந்த வயதுக்குள் அது எத்தனை படங்களை பார்த்து, புரிந்து கொண்டிருக்கும்? அதற்க்கு எப்படி,எதனால் ரஜினியை பிடித்து இருக்கிறது?


அதுதான்...எத்தனை நடிகர்கள் வந்தாலும் தலைமுறைகள் கடந்து அசைக்கமுடியாத இடத்தில் இருக்கும்.....நம் தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார்.


இனி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை யாருமே சூட்டிக்கொள்ள முடியாது. லிட்டில் சூப்பர்ஸ்டார் என தொடங்கி இன்று யங் சூப்பர்ஸ்டார் என்று டைட்டிலில் போட்டுக்கொண்டாலும், நடிகர் சிம்பு இன்னும் கொஞ்சம் வருடங்கள் கழித்து நேரடியாக சூப்பர் ஸ்டார் என்று தன்னை சொல்லிக்கொள்ள முடியுமா என்ன??


நம் தமிழ்சினிமாவுக்கு ஒரே ஓரு சூப்பர் ஸ்டார்.. ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே.

சில வருடங்களுக்கு முன்னால், மும்பையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில்,ராகுல் காந்தி, ஷாருக் உள்ளிட்ட பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் கோட்சூட் சகிதம் படுபந்தாவாக கலந்து கொள்ள, அதில் புகழ் பெற்ற நடிகருக்கான விருது பெற சாதாரண கதராடையில்,எந்தவித மேக்கப்பும் இல்லாமல் வழக்கம்போல வந்த ரஜினியை பார்த்து வியந்துபோனார்கள் அதில் கலந்துகொண்ட அனைவரும்,வட இந்திய மீடியாவும்.

ரஜினிகாந்த் - இன்று ஆசியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக கூறப்படுபவர். "ரஜினி குறைவாகதான் சம்பாதிக்கிறார்.மொத்தமாக பார்த்தால் கடந்த ஆறு வருடங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த(குசேலன் தவிர்த்து) ரஜினியை விட,வருடத்திற்க்கு மூன்று படங்களில் நடிக்கும் நடிகர் விஜய் சம்பாதித்தது அதிகமாகவே இருக்கும். " என்றார் ஒரு நண்பர்.


"என்னை வாழவச்சது தமிழ்ப்பாலு", "என் உடல்,பொருள்,ஆவியை தமிழுக்கும்,தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா". என தொடர்ந்து "இப்போ நான் பச்சைத் தமிழன்" என தமிழக சூப்பர் ஸ்டாராக இவரின் பட பாடல்கள் அடையாளப்படுத்தினாலும்,தமிழகம் தாண்டி தென்னிந்தியாவின் நம்பர்.ஓன் நடிகராக அனைத்து மாநில ரசிகர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்.

இந்த உயரம் சும்மா வந்துவிடவில்லை. இனி ஒரு நடிகருக்கு இப்படி ஒரு உயரத்தை சினிமா ரசிகர்கள் தருவார்களா என்பது சந்தேகம்.

"இந்த நிலையில் இருக்கும் ஒருவர் தன்னை ஆன்மிகவாதி என்று அடையாளப்படுத்திக்கொள்ள தனி துணிச்சல் வேண்டும்" என்பார் அவரது நண்பரான சோ.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை.


ரஜினியின் சறுக்கல் என்றால் அது அரசியல் குறித்து அவரின் கருத்துகள். அவரின் அரசியல் ஆர்வத்தை, வாய்ஸ் அல்லது வசனங்களை ரஜினியின் தனிப்பட்ட ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட அளவுக்கு,பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே இதுவரை நிதர்சனம். ஒவ்வொரு முறை தனது படம் ரீலீஸாகும் சமயங்களில் மட்டுமே அவர் 'அரசியல்' குறித்து பேசுவது ஏன் என்று தெரியவில்லை?


சென்னையில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திவரும் "ஆஸ்ரம்" பள்ளியின்.பெயரை பார்த்து அது எதோ ஏழை,எளிய மாணவர்களுக்கான பள்ளி என்று முன்பு நான் தவறாக நினைத்து இருக்கிறேன்.

ஆனால், அது சென்னையில் அதிக நன்கொடை வாங்கும் பள்ளிகளில் ஒன்று என்றும், மேல்தட்டு மற்றும் மேல் நடுத்தர வர்க்க மாணவர்கள் மட்டுமே அங்கு படிக்கமுடியும் என்றும் பிற்பாடுதான் எனக்கு தெரியவந்தது.

ரஜினிகாந்த் - சினிமா சூப்பர் ஸ்டார். மிக எளிமையான மனிதர், ரமணர், இமயமலை என வாழும் ஒரு நல்ல. ஆன்மிகவாதி. இத்துடன் அவர் ஒரு சிறந்த வியாபாரியும் கூட. ஆனால், 'அரசியல்வாதி அவதாரம்' மட்டுமே அவரால் எடுக்கமுடியாது என்பது கடந்தகால சம்பவங்கள் மூலம் நமக்கு புலனாகிறது.


செய்தி # 2


தஞ்சாவூர் அருகே அய்யம்பேட்டையில் இருந்து நான் ஒரு முறை கணபதி அக்ரகாரம் கோவிலுக்கு போகும் போது, வழியில் மகாளிபுரம் என்று ஒரு ஊர் வந்தது. அங்கு உள்ள ஒரு திரைஅரங்கில் பெரும் அளவிலான கூட்டம் திரண்டு இருந்தது. நான் ரஜினி,கமல் போன்ற முன்ணணி நடிகர்கள் அல்லது எம்.ஜி.ஆர் நடித்த படம் போலும் என்று என்னுடன் வந்த நண்பரிடம் பேசிக்கொண்டு வந்தேன். தியேட்டர் அருகே வந்தபோதுதான் தெரிந்தது...அது ஜாக்கிசான் நடித்த “WHO AM I”:

இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நமது முண்ணனி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டவர் ஜாக்கி. இன்டோ ஓவர்சீஸ், கோல்டன் ஹார்வெஸட் என்ற நிறுவனங்களின் பெயர் வரும்போதே ரசிகர்களின் விசில் சத்தம் திரை அரங்குகளை அதிரவைக்க தொடங்கிவிடும்.

காமெடி ஆக்க்ஷன் என்னும் அவர் உருவாக்கிய ஃபார்முலாவே, அவரது இந்த வெற்றிக்கு காரணம்.

அவருக்கு பெரும் திருப்புமுனையை தந்த படங்களில் ஒன்று.....ஆர்மர் ஆஃப் காட்(Armour of God).

ஐந்து கவர்ச்சிப் பெண்களுடன் கிளைமாக்ஸில் அவர் மோதும் சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்.அதன் இரண்டாம் பாகமாக வெளிவந்த படம்.. "ஆபரேஷன் கான்டோர்" (Operation Condor). ராட்சத காற்றாலைகள் வீச,ஜாக்கிசான் அந்தரத்தில் பறந்துகொண்டு வில்லன்களோடு அவர் போடும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிதான் இதிலும் ஹைலைட்.


இந்த வரிசையில். “ஆர்மர் ஆஃப் காட்”படத்தின் மூன்றாம் பாகமாக இந்த டிசம்பரில் வெளிவர இருக்கும் அவரது புதிய படம்.... "சைனீஸ் சோடியாக்". இதை CZ12 என்று குறிப்பிடுகிறார்கள்.

சீன அரசின் பொக்கிஷத்தை ஸ்பெய்ன் மற்றும் பிரிட்டிஷ் படைகளிடம் இருந்து மீட்கும் முந்தைய படங்களின் கதைதான் இதுவும். படத்தை தயாரித்து,இயக்கியவரும் ஜாக்கிதான்.

இந்த படத்திலும் ஹைலைட்டான விஷயம்....கிளைமாக்ஸ் என்கிறார்கள். இந்த இறுதிக்காட்சிக்கு மட்டும் சுமார் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாம்.

இரண்டு, முக்கிய செய்திகள். 58 வயதான ஜாக்கிசான் இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் வழக்கம்போலவே 'டுப்' போடாமலே நடித்து இருக்கிறார்.

இன்னொன்று, அவருக்கு இதுதான் கடைசி ஆக்க்ஷன் படம்.

"சினிமாவில் வன்முறை அதிமாகிவிட்டது. இனி, என் வயதுக்கு தந்த மென்மையான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்" என்று அறிவித்துவிட்டார் அவர்.

ஒரு சிறு செய்தி : இப்படத்தின் தமிழ் பதிப்பில், சில கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் தந்து இருக்கிறார் நமது இட்லிவடை வாசகர் லாரன்ஸ் பிரபாகர்.

ஜாக்கிசானின் கடைசி காமெடி ஆக்க்ஷன் கலாட்டாவை காண நிறைய எதிர்ப்பார்ப்போடும், அவரின் 'ரிட்டையர்மென்ட்"அறிவிப்பால் வருத்ததோடும் நாம் "சைனீஸ் சோடியாக்" படத்தின் வெளியிட்டுக்காக காத்திருப்போம்.

(நன்றி, இனி அடுத்தவாரம்)
-இன்பா

ஏம்பா கமல் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டது நியாமயா ?


Read More...

Saturday, December 08, 2012

விஸ்வரூபம் ஆடியோ லாஞ்ச்

"சார் ஒரு கேள்வி கமல் அவர்களே நீங்க ஹாலிவுட் போக போறீங்க , இனிமே கிஸ் எல்லாம் ஏஞ்சலினா ஜூலி, ஜெனிபர் லோபஸ் , போன்றவர்களோட தான் இருக்கும் இல்லையா?"
ஜெயராம் கேள்வி

"ஏங்க இது உங்களுக்கே நியாயமா இருக்கா -. முதல் முறையா அங்க போறேன் - போற எடத்துல எச்சல் பண்ணவா போறேன் - நடிக்க போறேன் சார்"  கமல் பதில்

படம் 3Dல் இருந்தா நாங்களும்... :-) 


Read More...

ரமணி சந்திரன் - சுமதி

Fairy tales பிடித்த எல்லோருக்கும் ரமணி சந்திரன் கதைகள் பிடிக்கும். தேவதையின் குணங்கள் கொண்ட கதாநாயகி , அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றிலிருந்து வெளியே வர உதவும் கதாநாயகன் , (சில சமயம் பிரச்னைகளின் மூல காரணமே கதானாயகனாக இருப்பான்) , எப்படி அவள் அவற்றை எதிர்கொண்டு மீண்டு வந்து இறுதியில் இருவரும் இணைகின்றனர் என்ற ஒரு தங்க முடிச்சு தான் கதைக்கான outline.

ஆனால் கதைக்களன், நாயகி மற்றும் நாயகன் குடும்பம், கதையில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவை வேறுபடும். அவற்றின் சுவாரசியம் ஒவ்வொரு நாவலிலும் ( 150 நாவல்கள் தாண்டியாயிற்று) புத்தம்புதிதாக இருப்பது அவருடைய மேஜிக் என்பதா வெற்றியின் ரகசியம் என்பதா !

"அப்புறம் இளவரசனும் இளவரசியும் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்" என்ற fairy tales ன் முடிவுதான் பெரும்பாலும். மொத்தத்தில் படித்து முடித்தவுடன் கிடைக்கும் திருப்தியும் நிறைவும் தனிதான்.

கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் பெயர் வைப்பதே மிகுந்த ரசனையுடன் பொருள் நிறைந்த பெயராக இருக்கும்.

திருக்குறளும் பாரதியும் மேற்கோள் காட்டப்படுவார்கள். கல்கியின் "பொன்னியின் செல்வனை நாயகி, வீட்டுப்பெரியவர்களுக்கு படித்துக்காண்பிப்பாள்.

முக்கியமாக அவருடைய எழுத்து நடை-- சீரான ஆற்றோட்டம் போன்ற நடை , ஆங்கிலக்கலப்பில்லாத அழகு தமிழில், இருவர் பேசிக்கொள்ளும் போது பெரும்பாலும் அவற்றை பேச்சுத்தமிழில் இல்லாமல் இலக்கண நடையிலேயே எழுதுவார்.

க்ரெடிட் கார்ட் புழக்கத்தில் வந்த சமயம்.
க்ரெடிட் கார்ட்டை மையமாக வைத்து ஒரு நாவலில் வெளியுலகம் அறிந்திராத ஒரு இளம் பெண் கார்டைத் தொலைப்பதும் அதைத் தொடர்ந்து அவள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள், அவள் மேற்கொள்ளும் இரவுப்பயணம், அதுவும் முன் பின் தெரியாத வாலிபனுடன் அதுவும் காரில், என்று மிகமிக சுவாரசியமாக எடுத்துக்கொண்டு போவார்.

இன்னொரு நாவலில் சுற்றுலா செல்லும் கலலூரி மாணவி வம்பு செய்யும் வாலிபனை கீழே தள்ளி விட்டு தன்னைக்காப்பாற்றிகொள்ள, அவனோ பழி வாங்கவே ( சில பல வருடங்கள் கழித்து )அவளை திருமணம் செய்ய ஒவ்வொரு தடவையும் அவனிடமிருந்து அவள் தப்பிப்பது, த்ரில்லர் மாதிரியே போகும்.

புதிய நாவல் வந்து விட்டதா என்று கடைக்குப் போவதே ஒரு ஜாலி அனுபவம்தான். முதலில் எல்லாம் கடைக்காரர் அலுத்துக் கொள்வார் "நீங்க கேக்கற புத்தகம் நம்ம ஏரியாவுல வரதில்ல' என்று. இதற்காக தி.நகர் போக முடியுமா, வாங்கி வையுங்கள் என்று தினம் சொல்லிச் சொல்லி, இப்போது எடுத்து வைத்து வீட்டுக்கே அனுப்பி வைக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்.

எனக்குத் தெரிந்த, புதிதாய் திருமணமான குடும்பத்தில் மாமியார் மருமகள் இருவருமே ரமணி சந்திரன் ரசிகைகள் என்பது தெரிந்த வுடன் முதலில் இருந்த சண்டை சச்சரவு குறைந்து ராசியாகி விட்டார்கள். போதாக்குறைக்கு மாமியார் படிக்காமல் விட்ட புத்தகங்களை அவர் பிறந்த நாளுக்கு ப்ரசெண்ட் பண்ணி கதையில் வருகிற மாதிரியே "அப்புறம் பல காலம் சந்தோஷமாய்" வாழ அச்சாரம் போட்டுக்கொண்டு விட்டாள். :-)

- சுமதி

Read More...

இது கேலிக்கூத்து

சில சமீபத்திய நிகழ்வுகள் நமது ஜனநாயகத்தை எவ்வளவு கேலிக் கூத்தாக அடித்துக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். அந்நிய நேரடி முதலீடு, இது தேசத்திற்கு நன்மையா தீமையா என்ற விவாதங்கள் ஒருபுறமிருக்க, இது நமது அரசியல்வாதிகளின் நம்பகத்தன்மையை மிகவும் தெளிவாகத் தோலுரித்துவிட்டது. அந்நிய நேரடி முதலீடு குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்று, வாக்கெடுப்பும் அரங்கேறியது, கூடவே கேலிக்கூத்தும். அந்நிய நேரடி முதலீட்டில் உடன்பாடில்லாத கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுதான் அந்த கேலிக்கூத்து!



உத்திரப் பிரதேசத்தின் இருபெரும் ஊழல் கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும், அந்நிய நேரடி முதலீட்டைக் கடுமையாக எதிர்த்த கட்சிகள். மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி, இரு கட்சிகளுமே இத்திட்டத்திற்கெதிராகத்தான் பேசினார்கள். இன்னொரு கட்சி, ஸாக்ஷாத் நமது தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம். இக்கட்சியின், தலைவரின் திடீர் நிலைபாடுகள் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இக்கட்சியும் அந்நிய நேரடி முதலீட்டைக் கடுமையாக எதிர்த்தது. இவ்வாக்கெடுப்பில் இரு அவைகளிலுமோ, அல்லது ஏதேனும் ஒரு அவையிலோ, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிடில், அரசு கவிழும் நிலையோ அல்லது அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலையோ தோன்றக் கூடும்.



அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் தமது முடிவைத் தெரிவிப்பதாகத் தெரிவித்திருந்தது; மாயாவதியும் அவ்வாறே தெரிவித்திருந்தார். கருணாநிதி அவர்கள் வழக்கம்போல் சஸ்பென்ஸ் அது, இது என்றார், முடிவாக அவர் அரசை ஆதரிக்கப்போவதாகத் தெரிவித்து, அதற்குக் கூறிய விளக்கம் அவர் பாணியிலான விசித்திரமான ஒன்று. “வாக்கெடுப்பில் தோற்று, மதவாத சக்திகள் ஆட்சியைப் பிடித்து, பாபர் மசூதி இடிப்பு, கரசேவை போன்ற அசம்பாவிதங்கள் மறுபடியும் நிகழாமல் தடுக்கவே, இதில் உடன்பாடில்லையாகிலும், அரசைக் காப்பாற்ற ஓட்டுப் போடப் போவதாக நீட்டி முழக்கினார்; தவிர தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் அந்நிய நேரடி முதலீட்டிற்கெதிரான நிலைபாட்டிலுள்ளதால், தமிழ்நாட்டில் எப்படியும் இத்திட்டம் செயல்படுத்தப்படாது, என்றும் தன்னுடைய தன்னிலை விளக்கத்திற்கு சமாதானமும் அளித்தார்.



விவாதம் நடைபெற்று, மக்களவையில் வாக்கெடுப்பின்போது, இதனை எதிர்ப்பதாகக் கூறிய சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் வெளிநடப்பு செய்து, வாக்கெடுப்பைப் புறக்கணிக்க, திமுக ஆதரவாக வாக்களிக்க, பாஜக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியது. ராஜ்யசபையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், ராஜ்யசபை வாக்கெடுப்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு மாயாவதியும், திமுகவும் ஆதரவாக ஓட்டளிக்க, இங்கும் சமாஜ்வாதி வெளிநடப்பு செய்து, வாக்கெடுப்பைத் வெற்றிகரமாகத் தோல்வியுறச் செய்தன.



மறுபடியும், அந்நிய நேரடி முதலீடு தேசத்திற்கும், விவசாயிகளுக்கும் நன்மை விளைவிக்குமா என்பது ஒருபுறமிருக்க, சில அரசியல்கட்சிகள் எவ்வாறு தங்கள் சுயலாபத்திற்காக தங்களுக்கு வாக்களித்தவர்களைப் பரிகசிக்கிறார்கள் என்பதே இங்கு விஷயமாகிறது. இங்கு குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்னவென்றால், திட்டதைக் கடுமையாக எதிர்த்து, வாக்களிப்பைப் புறக்கணித்தோ அல்லது ஆதரவாக வாக்களித்த மூன்று கட்சிகளுக்குமே பலவிதங்களில் காங்கிரஸின் தயவு மிகவும் அவசியம், காரணம் ஊழல் புகார்களில் சிக்கி சிபிஐ விசாரணைகளின் கீழ் இம்மூன்று கட்சிகளுமே இருக்கின்றன.



மாயாவதியின் தாஜ் வணிக வளாக வழக்கு, திமுகவின் ப்ரசித்தி பெற்ற 2G ஊழல், முலாயம் மீது இதென்று சொல்லவொணாது, சொத்துக்குவிப்பு, அது இதென்று சிலபல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. திமுகவின், கனிமொழி, ராசா மற்றும் தயாநிதி மாறனின் முறைகேடாக தொலைபேசி எக்ஸேஞ்ச் அமைத்த வழக்குகள் என மும்முனைத் தாக்குதல். இவையெல்லாம்தான் அரசை ஆதரிக்கக் காரணம் என வெளிப்படையாக இவர்கள் சொல்ல வேண்டிய தேவையில்லை, இவைகளே காரணம்! கழகத்திற்கு ராசாவைப் பற்றிய கவலை இல்லையாகிலும், கனிமொழி மற்றும் மாறனை முன்னிட்டு அரசை ஆதரித்தே ஆக வேண்டிய கட்டாயம், அதிலும் மாறனின் முறைகேடான தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் விவகாரத்தில் சிபிஐ கொஞ்சம் மும்முரமாகவே இருப்பதாகத் தெரிகிறது.



முன்பு ப்ரதிபா பாட்டிலை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் மாயாவதியின் தாஜ் வணிக வளாக வழக்கில் காட்டிய சலுகையால், மாயாவதி ப்ரதிபா பாட்டீலுக்கு ஆதரவளித்தார். அதனை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். மேலும், பாராளுமன்றத்தில் எந்தக் கூட்டணி ஆட்சியமைக்கவும், உத்திரப் பிரதேசக் கட்சிகளின் ஆதரவு நிச்சயம் தேவை. அதற்காக ஜனநாயகத்தையும், அதனை நம்பியுள்ள மக்களையும் முட்டாள்களாக்க இக்கட்சிகள் புறப்பட்டுள்ளன. இந்த அரசியல்வாதிகளின் பிடியிலுள்ள இத்தேசம் உருப்படும் என நாமும் கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

- யதிராஜன் 

பேசாம நான் காபி குடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்திருக்கலாம்.

Read More...

Friday, December 07, 2012

இந்தக் குளத்தில்....


எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிக்கும் விஷயம்?


அவரது அறச் சீற்றம்.

ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.

வணக்கம்; வைரமுத்து பேசுகிறேன்.

என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.

அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.

'பொன்மணி மாளிகை' பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.

'கட்டாயம் வருகிறேன்' என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே' என்று நெளிந்தாராம்.

விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?' என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.

இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.

கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?

விகடன் மேடையில் கவிஞர் வைரமுத்து


பழைய சரக்கு

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

---

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.

---

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.

---

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.

நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.

நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

---

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

---

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

---

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

---

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

---

நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

- இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.

அவர் சிங்கமாக இருக்கலாம் ஆனால் செய்தி அசிங்கம்

Read More...

Why blood same blood !

கர்நாடகாவில் மாநில கட்சிகள் வெற்றி பெற்றதில்லை என்ற கருத்து உள்ளது. ஹெக்டே, தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கி தோற்றுப்போய் விட்டார்கள். அவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை. ஆனால் எனக்கோ, தி.மு.க., தலைவர் கருணாநிதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோரைப் போன்று அனுபவம் உள்ளது. எனவே எனது முயற்சிகள் தோற்காது - எடியூரப்பா

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு

Read More...

Thursday, December 06, 2012

டிவியில் விஸ்வரூபம் !

விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். தனது இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.

கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டிடிஎச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டிடிஎச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

டிடிஎச்சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம். இதில் இன்னொரு நன்மை... முதலிலேயே படம் டிவியில் காட்டப்பட்டுவிடுவதால் பிளாக் டிக்கெட் பிரச்சினையும் இருக்காது.

டிடிஎச்சில் படம் வெளியிடும் தனது முடிவைத் தெரிவிக்க நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தார் கமல். அங்கே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களிடம் தனது பிரச்சினையை விளக்கினார்.

தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு என்பதை மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தெரிவித்துவிட்டு சென்றாராம் கமல்.

- செய்தி

குஜராத்தில் புது மின்சார மீட்டர் போட்டவர்கள் இதை வீட்டிலிரிந்தே பார்க்கலாம். பார்த்த பிறகு திரும்ப மீட்டர் எரிந்துவிட்டது என்று சொல்ல கூடாது !

Read More...

Wednesday, December 05, 2012

திருட்டு டிவிடி பார்க்கலாமா ?

ஐகாரஸ் பிரகாஷ் ஃபேஸ் புக்கில் எழுதியது...


திரு. மனுஷ்யபுத்திரன், இது சரி அல்ல.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து நடத்தும் ஏழுநாள் சொற்பொழிவின் முதல் நாள் நிகழ்வு பற்றி, அதில் பங்கேற்ற சுரேஷ் கண்ணன், தன் வலைப்பதிவில் எழுதி இருந்தார். அதில் இருந்து ஒரு பகுதி இங்கே. ( http://pitchaipathiram.blogspot.in/2012/12/blog-post_5.html )

********
தனஞ்செயன் அத்தோடு மேடை இறங்கியிருந்தால் நல்லதாகப் போயிருக்கும். அரங்கின் வெளியில் உலக சினிமாக்களின் டிவிடிகள் ரூ.50·-விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. "உயிர்மை நடத்தும் விழாவில் எப்படி இவ்வாறு Pirated டிவிடிக்களை அனுமதிக்கலாம்?..உயிர்மை பதிப்பக நூற்களை எவரேனும் நகல் செய்து விற்றால் எப்படியிருக்கும்?" என்று பொறிந்து தள்ளி விட்டார். அவர் மேடையிறங்கின பிறகு மனுஷ்யபுத்திரன் இதற்கு அமைதியாக ஆனால் சரியான பதிலடி தந்தார். "தமிழ்த் திரை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்கள் எந்தெந்த உலக சினிமாக்களிலிருந்து நகல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும். கோடிகளில் இயங்கும் தமிழ்த் திரை இந்த அறத்தை காப்பாற்றுவது முக்கியமானது." என்கிற ரீதியில் பேச அரங்கில் ஓரே ஆரவாரம்.

எஸ்.ராவும் தனது உரையில் இந்த விஷயத்தை தொட்டுச் சென்றார். "நானும் அப்படியாக குறைந்தவிலையில் டிவிடி பார்த்தவன்தான். துரதிர்ஷ்டவசமாக இங்கு உலக சினிமாவை அரங்கில் அனுமதிச் சீட்டு பெற்று பார்க்கும் சூழலே இல்லை. அதற்கான அரங்குகளும் இல்லை. உலக சினிமா குறுந்தகடுகளும் நியாயமான விலையில் கிடைக்கும்படியாகவும் இல்லை. இவையெல்லாம் முறைப்படுத்தப்பட்டால் கள்ள நகல்களின் அவசியமிருக்காது. அது தவறுதான், நியாயப்படுத்த முயலவில்லை."

***********

பைரேட்டட் டிவிடி விற்கக் கூடாது என்று சொன்ன தனஞ்செயனுக்கு, மனுஷ்யபுத்திரன், 'நீங்க கதையைச் சுடலாம்... நாங்க திருட்டு டிவிடி விற்கக் கூடாதா?' என்று 'counter' குடுத்தாராம். கூட்டத்தில் செம்ம க்ளாப்ஸாம்.

மனுஷ்யபுத்திரன் கோபத்துக்கான லாஜிக்கே எனக்குப் பிடிபடவில்லை. ஒருத்தன் உங்களைப் பப்ளிக்ல பளார்னு ஒரு அறை விட்டான்னா, அந்த அவமானத்துல, அவனைக் குத்திக் கொலை செய்துவிடணும் போல வெறி வரலாம். ஆனா, அப்படிச் செஞ்சிட்டீங்கன்னா, , அந்த ரெண்டுமே சம அளவிலான குற்றங்கள் ஆகிடாது. இதுக்கு அது சரியாப் போச்சு என்றும் சொல்ல முடியாது

கள்ள டிவிடி விற்பது தவறு என்றே பலருக்குப் புரியவில்லை.

எல்லாரும் என்ன கேக்கறாங்ன்னா,

1. எல்லா பொது இடத்திலும் விற்கிறது. நாங்க வித்தா மட்டும் தப்பா?

பொது இடங்களில் நடக்கும் தவறுகளைக் காவல்துறை பார்த்துக் கொள்ளும். நீங்க காசு குடுத்து ஏற்பாடு செய்யும், நிகழ்வுகளில் நடக்கும் தவறுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு.

2. தனஞ்செயன் மட்டும் கதையைச் சுட்டு படம் எடுத்துக் காசைக் கொள்ளையடிக்கிறாரே, அது மட்டும் தவறு இல்லையா?

அவர் செய்வது தவறு தான். அதற்கு என்ன தண்டனையோ அதைக் கொடுப்பதற்கு பதில், அவர் கொள்ளையடித்துச் சம்பாதித்ததாகச் சொல்லப்படும் பணத்தை பதிலுக்கு நீங்கள் கொள்ளையடிக்க முடியாது.

3. உலகப்படங்களைப் பார்ப்பதற்கு வேறு என்னதான் வழி?

நியாயமான வழிமுறை என்ன உண்டோ அதைச் செய்யுங்கள். அல்லது திருட்டு டிவிடியை விட்டால் வேறு வழியில்லை என்றால், நாம் கள்ளத்தனம் செய்கிறோம் என்ற பிரக்ஞையாவது இருக்கட்டும்.

4. உங்களைப் போன்ற ஆசாமிகளால் தான் நம் ரசனை லெவல் ஏறவே மாட்டேன் என்கிறது. எவ்வளவு உயர்ந்த விஷயம் இது? இதுல கொள்ளையடிச்சு நாங்க கோட்டையா கட்டப் போறோம்?

சும்மா சீன் போடாதீங்க. பிறருடைய, அறிவு, பொருள், காப்பிரைட்டட் மெடீரியல் எதுவாக இருந்தாலும், அதற்குரிய விலையைக் கொடுக்காமல் எடுத்துக்கொண்டால் அது திருட்டுதான். தண்ணியடிப்பதற்காக நூறு ரூபாய் ஆட்டையைப் போடுகிறவனை விட, அறிவுப் பசிக்காக திருட்டுத்தனம் செய்யும் ஒருவன் எந்தவிதத்திலும் தாழ்ந்தவன் அல்ல.

தியேட்டரில் இருந்து ஓடியே போய்விட்டதால், 'அம்மாவின் கைப்பேசி' என்கிற அதி அற்புதமான மாற்றுச் சினிமாவை நிறையப் பேர் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையாம். அந்த அற்புதமான காவியத்தை நான் நெட்டில் இருந்து டவுன்லொட் செய்து, குறுந்தகடுகளாக ஆக்கிக் குடுக்கிறேன். அதையும் விற்றுத் தரமுடியுமா? சரி, அது வேண்டாம்... என் நண்பர்கள் அனேகம் பேருக்கு உயிர்மை பதிப்பகம் போடும் புஸ்தகங்களை வாங்கும் வசதி இல்லை. நான் அவற்றை வாங்கி, பிடிஃப் கோப்பாக்கி, இலவசமாக - அனைவருக்கும் கூட அல்ல - அந்த நண்பர்களுக்கு மட்டும் விநியோகம் செய்யட்டுமா?

திரு. மனுஷ்யபுத்திரன், நான் கூட இணையத்தில் இருந்து, திருட்டுத்தனமான படங்களை இறக்கிப் பார்த்திருக்கிறேன். ஆனால், குற்ற உணர்ச்சியுடன், மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற அச்சத்துடன், பார்த்ததுடன் டெலிட் செய்யவேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வுடன், வெளியே தெரிந்தால் அசிங்கம் என்ற வெட்கத்துடன் இக்காரியத்தைச் செய்திருக்கிறேன்.

ஆனால்,

ஆமா, பாத்தேன்.. அப்படித்தான் பாப்பேன்...பாக்கறது மட்டுமில்லே, பப்ளிக்கா விக்கவும் செய்வேன் என்கிற உங்களது தெனாவட்டு, ஆச்சர்யமாக இருக்கிறது.

நன்றி: இது கூட திருட்டு பதிவு தான், மன்னிக்கவும்

Read More...

Tuesday, December 04, 2012

நாஞ்சில் சம்பத்



ஒரு டவுட்: நாஞ்சில் சம்பத் கையில் வாட்ச் ஓடுகிறதா அல்லது அதுவும் நின்றுவிட்டதா ? பிகு: வாட்ச் ஓடவில்லை என்றால் அதில் இருக்கும் ஸ்பிரிங் வேற எங்காவது பொருத்தப்பட்டிருக்கும்!

Read More...

கல கல பேட்டி எஸ்.வி.சேகர்


நன்றி: தினமலர்

Read More...

Monday, December 03, 2012

கராச்சியில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் இந்துக்கள் வழிபட்டு வந்த 100 ஆண்டுகள் பழமையான கோயில் இடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சோல்சர் பஜாரிலுள்ள ஸ்ரீராம் மந்தீர் என்ற கோயிலை தொழிலதிபர் ஒருவர் இடித்துவிட்டதாக அங்கு வசிக்கும் இந்துக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கோயில் அருகே உள்ள வீடுகளும் இடிக்கப்பட்டதால் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். போலீசாரின் துணையோடு திடீரென கோயிலுக்குள் புகுந்த அவர்கள் சாமி சிலைகளை உடைத்துவிட்டு நகைகளையும் எடுத்து சென்றதாக கோயிலிருந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்துக்களின் கோயில் இடிக்கப்பட்ட செயல் சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் செயல் என்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப போவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளிலிருந்து வீடுகளையே இடித்ததாக கூறிய போலீசார் வீடுகளில் சிலர் சாமி சிலை வைத்து வழிபட்டு வந்ததாக கூறினார். கோயில் இடித்த சம்பவத்தை இந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எந்த வித நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான் அரசு, தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

- செய்தி

டெயில் பீஸ்: இச்செய்தி ஒன்றும் அத்தனை பெரிய விஷயமில்லை தான்.  பாகிஸ்தானில்  இந்து பெண்களை கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து, அநியாயமாக மணம் செய்து வைப்பதற்கே இந்திய அரசு பெரிய அளவில் கண்டனமோ நடவடிக்கையோ எடுத்ததாகத் தெரியவில்லை.  இன்னொன்று, ஆக்ஸ்ஃபோர்டில் பயின்ற, செக்யூகரிஸ்ட் என்று பெருமளவு இந்தியர்களால் மதிக்கப்படும் இம்ரான் கான், தீவிரவாதி அஜ்மல் கசாப் இந்தியாவில் தூக்கிலப்பட்டதற்கு எதிராக, (இந்திய உளவாளி என்று கருதப்படும்) சரப்ஜித் சிங்கை உடனடியாக பாக் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.   பாகிஸ்தானில் 14 வயது சிறுமி மலாலா தலிபன் தீவிரவாதியால சுடப்பட்டதற்கு இம்ரான் கண்டனமும் தெரிவிக்கவில்லை!  என்ன மாதிரியான விசுவாசம் / நேர்மை இது?  இஸ்லாமுக்கு எதிரான வீடியோவுக்காக அமெரிக்காவை கண்டனம் செய்ததை போல இந்த அக்கிரம கோயில் இடிப்பை இந்திய (போலி + நிஜ) செக்யூலரிஸ்ட்களும், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டிக்கும் என்று நம்புவோம்.

- எ.அ.பாலா

இது தினமலர் செய்தியல்ல, தினகரன் செய்தி

Read More...

நார்வேயில் இந்திய தம்பதியர் கைது

நார்வே நாட்டில் மகனை கண்டித்த இந்திய பெற்றோருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஏழு வயது மகனை கண்டித்த இந்திய பெற்றோரை நார்வே போலீசார் கைது செய்தது. தந்தைக்கும், தாய்க்கும் சிறை தண்டனை விதிக்க காவல் துறை நீதிமன்றத்திடம் பரிந்துரைத்துள்ளனர்.

 இந்த சட்டம் இந்தியாவில் இருந்தால் 90% பெற்றோர்கள் சிறைக்கு போக வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். இதனால் இதை  ஒரு சாதாரண நிகழ்வாக நினைக்க தோன்றுகிறது.அந்தந்த நாட்டு கலாச்சாரம் பற்றி ஒழுங்காக தெரிந்துக்கொண்டு போக வேண்டும். பணம் சம்பாதிக்க செல்லும் பலர் தங்கள் குழந்தைகள் 'ஆங்கிலத்தில் பேசு' என்று வற்புறுத்துவதை பார்த்திருக்கிறோம்.  ஆனால் முக்கியமான சில விஷயங்களை மறந்துவிடுகிறோம். குழந்தைகளை பூச்சாண்டி கிட்ட பிடித்து தந்துவிடுவேன் என்று இனிமேல் வெளிநாட்டுக்கு போகும் பெற்றோர் சொல்ல முடியாது.  வெளிநாட்டில் வாழ்விற்கு கொடுக்கப்படும் விலை இது அவ்வளவு தான்.

மத்திய அரசு இதை பற்றி ஒன்றும் பேசாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

Read More...

இன்னொரு சிவகாசியகப்போகிறதா திருமங்கலம்?.

இட்லிவடைக்கு வந்த கடிதம்.

மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலத்தில் மிக ஆபத்தான முறையில் வீடுகளுக்கு உபயோகப்படுத்தப் படும் LPG சிலிண்டர்களை கமர்சியல் சிலிண்டர்களில் அடைத்து கொடுக்கும் வேலை நடந்து வருகிறது. அதுவும் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள அரசு ஆண்கள் பள்ளிக்கு மிக அருகில் நடப்பதுதான் வேதனை. தினமும் குறைந்தபட்சம் 50 முதல் 60 சிலிண்டர்கள் வரை வியாபாரம் நடக்கிறது.

அருகில் உள்ள கிராமங்களிலிருந்து 450 முதல் 500 ரூபாய் வரை வாங்கப்படும் சிலிண்டர்கள் மாருதி வேனில் வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. பின்பு அதனை தண்ணீர் இறைக்கப் பயன்படும் பம்ப் உதவியுடன் மிக ஆபத்தான வகையில் கமர்சியல் சிலிண்டர்களுக்கு மாற்றப்படுகிறது. இவை அங்குள்ள கடைகளுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை இலாபம் வைத்து விற்கப்படுகிறது. இவையனைத்தும் எல்லோரும் பார்க்கும் வகையில் வீட்டின் வாசல் பகுதியில் நடப்பதுதான் ஆச்சர்யம். அருகில் இருக்கும் வீடுகளுக்கு இந்த ஆபத்து எதுவும் தெரியவில்லை. ( அதே தெருவில் வசிப்பவர்களுக்கு 50 ரூபாய் அதிகம்). அங்குள்ள IOC முகவர் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விடுவதால் எந்த தடையும் இல்லை.

நான் LPG தொடர்பிலான ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதால் இந்த கொள்ளையின் அபாயம் நன்றாக அறிந்தவன் என்ற முறையில் என்னால் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. சிவகாசியில் சமீபத்தில் நடந்த தீ விபத்தை போல பலமடங்கு அதிகம் ஆபத்து உள்ள ஒரு செயல் இங்கு கவனிக்கப்படாமலேயே உள்ளது.

நாளை எதாவது வெடிவிபத்து நடந்த பிறகு அனைவரும் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று புலம்பி என்ன பயன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த அபாயத்தை தடுத்து நிறுத்துவார்களா?.

Read More...

Sunday, December 02, 2012

என் பேரு

வைர விழாவில்... ஆளுநர் கே.ரோசய்யா தமிழக முதல்வராக இருந்தவர்களின் பெயர்களை எல்லாம் வரிசைப்படுத்திச் சொன்னார்.

ஆனால் என் (கருணாநிதி) பெயரை மட்டும் விட்டுவிட்டார். அவர் நல்ல மனிதர். யாருக்கும், எதற்கும் பயப்படாதவர். வேண்டும் என்று விட்டிருக்க மாட்டார். - கலைஞர்


இதற்கு ஏற்ற சரியான வடிவேலு வசனம் எது ?

Read More...

சன்டேனா இரண்டு (2-12-12) செய்திவிமர்சனம்



கடந்த இரண்டு வாரங்களாக 'சென்சிடிவ்' விஷயங்களா எழுதிட்டிங்க..இந்த வாரம் கொஞ்சம் அடக்கி வாசிங்க. என்ற என் அன்பான(?) வேண்டுகோளுக்கு இணங்கி இந்த வார சன்டேனா இரண்டு... சென்சிடிவானவர்களை பற்றியது - எழுத்தாளர்கள் ஸ்பெஷல்.





செய்தி # 1


முன்பெல்லாம் ஆங்கில,இந்தி,தெலுங்கு,மலையாள படங்களை உல்டா பண்ணியது போய், இப்பொதெல்லாம் முன்பு வந்த நமது தமிழ்ப்படங்களையே உல்டா பண்ணும் அளவுக்கு கடும் கதைப் பஞ்சம் நிலவி வரும் கோடம்பாக்கத்தில், முன்பு எப்பொதும் இல்லாத அளவுக்கு எழுத்தாளர்களுக்கு மரியாதை ஏற்பட்டு இருக்கிறது.



இன்றைய தமிழ்சினிமாவில் முன்ணணியில் இருக்கும் எழுத்தாளர்களின் “ஹிட் லிஸ்ட்” இங்கே.



1. சுபா :-

"சுபா" என்ற பெயரில் எழுதும் இரட்டையர்களான சுரேஷ் அண்ட் பாலகிருஷ்ணன் - இன்றைய தேதியில் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் எழுத்தாளர்கள்.



இவர்கள் எழுதிய ஜெய்ஹிந்த் என்ற கிரைம் நாவல் எனக்கு பிடித்தமானது. நாவலின் கரு கிட்டத்தட்ட "ரோஜா" படக்கதை போன்றது. அந்த நாவலின் அட்டைபட போட்டோகிராபர்தான் தேசிய விருது பெற்ற கே,வி,ஆனந்த். சுபா - கே,வி,ஆனந்த் கூட்டணியில் உருவான முதல் படம் "கனா கண்டேன்". அதன் பிறகு அயன்,கோ என தொடங்கி மாற்றான் வரை தமிழ்சினிமாவின் மெகா கூட்டணியில் இடம் பெற்றுவிட்டார்கள் சுபா.



நடுவே விஜய் நடித்த வேலாயுதம் படத்திற்க்கும் வசனம் எழுதிய சுபா, அமரர் சுஜாதா அவர்களின் வெற்றிடத்தை ஷங்கருக்கு நிரப்பி இருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் "ஐ" இவர்களின் எழுத்தில் உருவாகிவருகிறது.


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்திற்க்கும் இவர்கள்தான் வசனம். "வழக்கம்போல வரும் பஞ்ச் வசனங்கள் இதில் இடம் பெறாது” என கூறும் சுபா இதுவரை எத்தனையோ நாவல்கள்,தொடர்கள் எழுதி இருக்கிறார்கள்.


ஆனால், முக்கால்வாசி படம் முடிந்தும் அஜித் - விஷ்ணு படத்திற்க்கு சரியான 'டைட்டில்' எழுதுவதற்க்குதான் திணறிவருகிறார்கள்.




2. ஜெயமோகன் :-

உங்களில் பெரும்பாலானவர்களுக்கு இவர் பரிச்சயம்தான். இவரது 'விஷ்ணுபுரம்" படித்து(பார்த்து) விட்டு மிரண்டு(!) இருக்கிறேன். இவர் எழுதியதில் என் சிற்றரிவுக்கு பிடித்தது அல்லது புரிந்தது "ரப்பர்" என்ற நாவலாகும்.

மறைந்த மலையாள இயக்குனர் லோகிததாஸ் இயக்கிய "கஸ்தூரி மான்" படத்திற்க்கு வசனம் எழுதி,சினிமாவில் காலடி வைத்த ஜெயமோகன், தனது நாவலான "இரண்டாம் உலகத்தை" தழுவி எடுக்கப்பட்ட பாலாவின் "நான் கடவுள்" மூலம் தனி கவனம் பெற்றார்.

தொடர்ந்து "அங்காடித் தெரு" , தற்போது வெளியாகி இருக்கும் சீனு ராமசாமியின் "நீர்ப்பறவை" என தொடர்கிறது இவர் திரைப்பயணம்.

அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை படமாக்க மணிரத்னம் முயற்சி செய்தபோது, அவருடன் விவாதத்தில் இணைந்தார் ஜெ. இந்த வருடத்தின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான மணிரத்னத்தின் "கடல்" படத்தில் இவரது கைவண்ணம் இருக்கிறது.

கூடுதலாக, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்க்கும் இவர்தான் வசனம் என்கிறது ஒரு செய்தி. "தல" படத்திற்க்கு இவர் எப்படி பொருந்துவார் என்று தெரியவில்லை.

3. எஸ்.ராமகிருஷ்ணன் :- ரஜினியுடன் "பாபா" கதை விவாதம் மூலம் தமிழ்சினிமாவில் நுழைந்த எஸ்.ரா, லிங்குசாமியின் கமர்ஷியல் ஹிட்டான "சண்டைக்கோழி" மூலம் பெரும் கவனம் பெற்றார். தொடர்ந்து "தாம்தூம்", பாலாவின் "அவன் இவன்" என படங்களுக்கு வசனம் எழுதினார். அவன் இவன் படத்தில் இவர் போட்ட மொக்கையால் தற்போது படம் எதுவும் 'புக்' ஆகவில்லை என்று நினைக்கிறேன்.

சண்டைக்கோழி படத்தில், ஒரு கதாபாத்திரற்க்கு சக கவிஞ்சரான ஒருவருடைய பெயரை அப்படியே வைத்து, "ஆளும்,மூஞ்சியும், பெயரை பாரு " என்கிற ரீதியில் கடுமையாக விமர்சனம் எழுதியது ஏன் என்றும், சினிமாவில் சேர்ந்தது முதல் இவர் எழுத்தின் தரம் தாழ்ந்தது குறித்தும் இவர்தான் விளக்கவேண்டும். தற்போது சினிமா சொற்பொழிவு நடத்திக்கொண்டு இருக்கிறார்.


4. ஜேடி குருஸ் :- அதிகம் அறியப்படாதவர். அடிப்படையில் ஒரு மீனவர். இவரது முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டு, எழுத்துலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் மதன் அவர்கள். இவரது 'கொற்கை" நாவலை படித்து பாருங்கள். குமரிபக்கம் ஒரு விசிட் போகும் எண்ணம் உங்களுக்கு வருவது திண்ணம்.

தற்போது , 'வந்தே மாதரம்" ஆல்பத்தை இயக்கிய பரத்பாலாவின் இயக்கத்தில்,ஏ.ஆர்.ரகுமான் இசையில், தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் "மரியான்" படத்தின் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் காலடி வைக்க போகிறார் குருஸ்.



5. இ.ரா.முருகன் : - இந்த லிஸ்டில் அடுத்து நம்ம முருகன்தான். "உன்னைப்போல் ஒருவன்" படத்திற்கு இவருடைய வசனம் கமலின் பிம்பத்திற்க்கு பின்னாலும் இணையத்தில் பேசப்பட்டது. அடுத்து, அஜித்தின் "பில்லா 2" படத்திற்க்கு சில பளிச் வசனம் எழுதானாலும், அப்துல் ஜாப்பர் என்ற வேறு ஒரு நபருடன் இவர் பெயர் பங்கு போடப்பட்டது. போதாகுறைக்கு படமும் சரியாக போகவில்லை.


மீண்டும் கமல் இவரை சேர்த்துக்கொள்வரா என்று தெரியவில்லை. ஒருவேளை இவரின் ஆஸ்தான இயக்குனர் சக்ரிடோலடிக்கு இனி படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இவருக்கும் வசனம் எழுத வாய்ப்பு வரலாம்(!!).


செய்தி # 2


இவ்வளவு எழுத்தாளர்கள் பற்றி எழுதிவிட்டு, "எழுத்துலகின் பவர்ஸ்டார்" (எப்புடி?) சாரு நிவேதிதாவை பற்றி நான் எழுதாமல் போனால், புத்தக பரிசு பெற்ற வாசகர் dr_செந்தில் போன்ற அவரது ரசிகர் மன்றத்தினர் என்னை அடிக்க வந்துவிடுவார்கள்.


அகில உலக நாவல் வரலாற்றில், தான் எழுதிய "எக்ஸல்" என்ற நாவலுக்கு, நாவல் வெளிவரும் முன்பே ஒரு 'டிரைலர்' ரிலீஸ் செய்த ஒரே எழுத்தாளர் சாரு அவர்கள்தான்.


"எக்ஸல்" நாவலின் டிரைலரை இயக்கியவர் நம்ம இட்லிவடை வாசகரான லாரன்ஸ் பிரபாகர் .(சாப்பா குருஸ் விமர்சனம்). நாவல் குறித்து இயக்குனர் சீனுராமசாமியின் பாராட்டுக்கள்(முடியல!) அதில் இடம் பெற்று இருந்தன,


இந்த டிரைலருக்கு, ஆனந்தவிகடன் உபயத்தில் கிடைத்த மெகா வெற்றியை(!?) தொடர்ந்து, தான் எழுதும் சிறுகதை,துணுக்கு இவ்வளவு ஏன், வலைப்பதிவுக்கு(!) கூட இப்படி ‘டிரைலர்’ போடுவதற்க்கு சாரு முடிவு செய்ய, இந்த செய்தி அறிந்தவுடன் தனது குடும்பத்திற்க்கு கூட சொல்லாமல் ராவோடு ராவாக துபாய்க்கு பிளைட் ஏறிவிட்டார் லாரன்ஸ்.



இது ஒரு பக்கம் இருக்க, யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல்' (Yari-sugi ko-ji -Urban Legends Special) எனும் தலைப்பில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஓளிபரப்புக்காக இந்தியாவுக்கான அழகியாக கடந்த நவம்பரில், நடிகை நமீதாவை தேர்வு செய்தது டேக்கியோ தொலைக்காட்சி.



இது குறித்து, யாரோ ஒரு செய்திக்கு அலையும் பத்திரிக்கை நிருபர், நம்ம சாருவிடம் வந்து அவரது பொன்னான கருத்தை கேட்க, அதற்க்கு சாரு அளித்த பதில் இதுதான்.



"தாய்லாந்தில் 'மங்கீஸ் ஐலண்ட்' என்று ஒரு குட்டித்தீவு இருக்கிறது. பொதுவாக கடல் சார்ந்த இடங்களில் குரங்குகளை காண்பது அரிது. ஆனால் அந்த தீவில் குரங்குகள் நிறைய இருக்கும். எனவே அந்த தீவு மக்களுக்கு விநோதமாக தெரிகிறது. அதுபோல டோக்கியோ சேனல்காரர்களுக்கு நமீதா வித்தியாசமாக தெரிந்திருப்பார் போல".




சரி.அது கிடக்கட்டும். டிரைலர் வெளியிட்ட அளவுக்கு அந்த "எக்ஸல்" நாவலில் அப்படி என்னய்யா இருக்கு என்பவர்களுக்கு,

வேலை மெனக்கெட்டு அந்த நாவலை படிப்பதற்க்கு பதில், நீங்கள் பேசாமல் ஷகிலா நடித்த "கிண்ணாரத் தும்பிகள்" படத்தை 'டவுன் லோட்' செய்து பார்த்துவிடலாம்.



இரண்டில் இருப்பதும்....ஹி...ஹி..ஒரே "சமாச்சாரம்"தான்.







(நன்றி, இனி அடுத்தவாரம்)



-இன்பா

பதிவு எடிட் செய்யப்பட்டது.



Read More...

Saturday, December 01, 2012

மணிரத்தினம் Vs கோவைத் தம்பி





பென்குவின் பதிப்பகம்,மணிரத்னத்திடம் எடுத்திருக்கும் நீண்ட பேட்டியை தொகுத்து 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

அதில்,'முதல் தோல்வி?’ என்ற கேள்விக்கு," தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன் படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப் படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.

நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின் கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’ படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு காப்பாற்றியது.

குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது 'பியாஷா’ குருதத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான் 'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது. மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!” என்று மணி ரத்னம் குறிப்பிட்டுள்ளார்.

கோவைத் தம்பி குமுதத்தில் மணியை...






ராமர், சீதை, ராவணன் என்ற கதாபாத்திரம் வைத்து படம் எடுக்கமால் கமல், மணி, முக்தா, கோவை படம் எடுத்தால் சுவாரஸியமாக இருக்கும் போல இருக்கு!




Read More...

நோ கமெண்ட்ஸ்




மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.

Read More...

Friday, November 30, 2012

நோ கமெண்ட்ஸ்


Read More...

Thursday, November 29, 2012

பெருமாளுக்குத் தீட்டு


கடலூரில் உள்ள வைணவ திவ்யதேசமான திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி எழுந்தருளியிருக்கிறார். நேற்று பதினெட்டு வயது பெண் ஒருத்தி பக்திப் பரவசத்தில், “கோவிந்தா கோவிந்தா” என்று உரக்க சொல்லியபடி பெருமாளின் சன்னதிக்குள் சட்டென்று நுழைந்து, உத்சவ மூர்த்தியை தொட்டு வழிபாடு செய்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயிலின் மூத்த அர்ச்சகர், கோயில் நிர்வாகிகள் அப்பெண்ணை போலீசிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அப்பெண்ணின் செய்கையால், தீட்டு ஏற்பட்டு கோயிலின் பவித்திரத்திற்கு தோஷம் உண்டானதால் கோயிலை உடனடியாக மூடி விட்டதாகவும் தெரிவித்தார்!

கோயிலின் நிர்வாக அதிகாரி, அப்பெண்ணின் மீது திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், புலவனூரில் இருக்கும் கண்ணன் பட்டாச்சாரியர் என்பவரை வரவழைத்து, பவித்திரோத்சவ காரியங்களை மேற்கொண்டதாக அவர் கூறினார் (இவ்விஷயத்தில் கண்ணன் வாத்தியார் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கக்கூடும்!). ஒரு 2 மணி நேர ஜல சம்ரோக்‌ஷண பூஜைக்குப் பின்னர் 4.45 மணி அளவில் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.

சன்னதிக்குள் நுழைந்த பெண்ணுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்ததாகவும், ஒருவித மோன நிலையில் அப்பெண் அப்படி செய்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருப்பதிக்கே லட்டா என்பது போல பெருமாளுக்கே தீட்டா (அவன் அண்டசராசர அதிபதி என்பதால், அந்த 2 மணி நேரம் சகல லோகங்களும் தீட்டு தோஷத்தில் இருந்திருக்க வேண்டும் அல்லவா?) என்பது ஒரு புறமிருக்க, ஒரு சாதாரண விஷயத்தை போலீஸ் வரை எடுத்துச் சென்று ஒரு பெரிய செய்தியாக்க வேண்டுமா என்பதும் தொக்கி நிற்கிறது! ஆண்டாள் என்ற சிறுமி அணிந்த மாலையை (விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) அதை தவறான செயலாக கருதியபோதும்) மனமுவந்து ஏற்றுக் கொண்டவன் அந்த திருவரங்கப் பெருமாள்! வைணவ வாழ்த்தே, “அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ” என்று அடியார்களுக்கு முதல் மரியாதை செய்கிறது!

அதே நேரம், பக்தியில் மனமுருகி ஒரு அடியவர் தன்னைத் தொடும்போது, கருணாகர மூர்த்தியான பெருமாளுக்கு மனம் குளிர்வதோடு, தீட்டும் தோஷமும் ஏற்படும் என்பதை வைணவ அடியார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!

- எ.அ.பாலா

Read More...

ரிக்கி பாண்டிங்

வாழ்த்துகள்

Read More...

66(A)

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இறந்த பிறகு நடந்த கடையடைப்பைக் கண்டித்து, ஒரு பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இட்ட கமெண்டினால், கைது செய்யப்பட்ட சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லாத நிலையில்,
சமூக வலைத்தளங்களில் ஆர்வலர்களை ஒடுக்கும் விதமாக 66 A சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் பரவால அடிபடுகின்ற நிலையில், ஷ்ரேயா சிங்கல் என்ற ஒரு மாணவி, இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்
சமீபகாலமாக, 66 A சட்டம் கருத்து சுதந்திரத்திற்கெதிராக மிகவும் பரவலாக அரசாங்க இயந்திரத்தால் பயன்படுத்தப்படுவதால், இதன் முக்கியத்துவம் கருதி, இவ்வழக்கை உடனே விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளார், இந்தியாவின் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர். மேலும் கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி, இவ்வளவு நாளாக ஏன் இதுபோன்ற ஒரு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது எங்களுக்கே ஒரு ஆச்சர்யகரமான விஷயம் என்று குறிப்பிட்டார் இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் எடுக்கும் நிலைபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



Read More...

Wednesday, November 28, 2012

லைப் ஆப் பை


கீழே....



பேக்ஸ் ஆப் லைப்!... வேண்டாம் பிளாஸ்டிக் கேரி பேக்!



Read More...

Tuesday, November 27, 2012

'கசப்பான' முடிவு

அன்னிய முதலீடு பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இன்னமும் இருந்தாலும், உடனடியாக இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டால், அதன் காரணமாக ஏற்படக் கூடிய எதிர்மறை விளைவுகளை எண்ணிப் பார்த்து, கசப்பான நிலையில் இந்தப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தர முடிவு செய்கிறது - கருணாநிதி


வால்மார்டில் சக்கரை கிடைக்குமா ?

Read More...

பவர் ஸ்டார் பரிசு


முதல் பரிசு: 
dr_senthil said...
இரண்டு கமெண்ட் போட்டிருக்கேன் எதாவது பார்த்து போட்டு குடுங்க.. தயவு செய்து சாரு புக் அனுப்பிராதீங்க அதுக்கு இவர் படத்தையே பத்து வாட்டி பார்க்கலாம்
இரண்டாம் பரிசு:
கிரி said...
டேய்! நான் சலங்கை ஒலி கமல் போஸ் மாதிரி கேட்டா.. என்னை "கண்ணா! இரண்டு லட்டு தின்ன ஆசையா! விளம்பரத்திற்கு மாதிரி நிக்க வைத்துட்டீங்களேடா!!
இரண்டாவது இரண்டாம் பரிசு.
நீச்சல்காரன் said...
மூட்டு வலிகளுக்கான சிறந்த ஆசனம் லட்டாசனம்
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். தங்கள் முகவரியை அனுப்பினால் புத்தகம் அனுப்பப்படும்

Read More...