பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 30, 2011

2011 டாப் 10+1 படங்கள்



1.



2.


3.


4.


5.




6.


7.


8.


9.


10.


11.

எல்லோருக்கும் 2012 புத்தாண்டு வாழ்த்துகள் !

12. வாசகர் விருப்பம்

Read More...

Tuesday, December 27, 2011

சசிகலா - சோ பேட்டி


பலர் இந்த பேட்டியை படித்திருக்க மாட்டீர்கள்..அதனால் இங்கே..

நன்றி: தினமலர்

Read More...

Monday, December 26, 2011

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் இளையராஜா

இந்த வாரம் நடைபெற இருந்த இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. மலபார் கோல்டு ஹவுஸ் என்ற கேரளா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்வதால் சர்ச்சை. சர்ச்சை செய்பவர்கள் பெரியார் திகவினர்.
தமிழர் என்ற உணர்வு தேவைதான். ஆனால் அதுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்தின் முதல் வார்த்தை என்ன என்று ஆப்ஷன் A,B,C,D என்று எஸ்.எம்.எஸ் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளுவது நல்லது.


இந்த சர்ச்சைக்கு இளையராஜாவின் பதில் "இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பது எனக்கும் தெரியும். அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை ஒத்திப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லியுள்ளார். அவரின் மனசாட்சி இதை நிச்சயம் சொல்லியிருக்காது.

இசைக்கு மொழி கிடையாது என்று சொல்லுவார்கள், ஆனால் முல்லை பெரியாறு பிரச்சனையினால் இசைக்கு மொழி உண்டு என்று இளையராஜாவே நிருபித்துவிட்டார்.

நாளைக்கே கன்னடர்களிடம் ஏதாவது பிரச்சனை என்றால் பெரியார் திகவினர் என்ன செய்வார்கள் ? பெரியார் கன்னடர் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா ?


அச்சமில்லை அச்சமில்லை என்ற தமிழ் கவிஞர் பாரதியார் "கேரள நாட்டிளம் பெண்களுடனே" என்று பாடினார். இன்று கேரளாவை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் அதிக பெண்கள் இருக்கிறார்கள் என்று பலர் நிருபிக்கிறார்கள்.


பிகு: இளையராஜாவை பற்றி சில வரிகள் இங்கே எடுத்திருக்கிறேன். அவரை விமர்சிக்கும் எண்ணத்தில் பதிவு எழுதவில்லை - இட்லிவடை

Read More...

ராஜபாட்டை விமர்சனம்

ராஜபாட்டை சில குறிப்புகள்

1. இந்த படத்தின் மூலம் ஒஸ்தி சிம்புவிற்கு தான் சளைத்தவர் இல்லை என்று நிருபித்துள்ளார் விகரம். தமிழ் சினிமா உலகத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

2. 'வாப்பா' என்ற முஸ்லீம் கேரக்டர் 2G பாட்ஷாவை குறிப்பது போல உள்ளது. அப்ப அந்த 'அக்கா' காதாபாத்திரம் யார் ?

3. விக்ரம் படத்தில் ஏன் பெண் வில்லியே வருகிறார்கள் ? விக்ரமுக்கு வயதாகிவிட்டதால் இந்த ஏற்பாடா ? மார்கழி மாதம் வீட்டு வாசலில் கலர் கோலம் போடுவார்கள், இயக்குனர் அதை விக்ரம் தலையில் போட்டுள்ளார்

4. வழக்கமாக தீவிரவாதிகளாக முஸ்லீகளை காட்டி வந்த தமிழ் சினிமா, இதில் மாஃபியா கும்பலாக காட்டியுள்ளது. படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் இதில் வரும் அருவாள் தான்.

5. தசாவதாரம் கமல் போல விகரம் இந்த படத்தில் ஒரு காட்சியிலும், பாடல்களிலும் பல வேஷங்களை போட்டு தன் ஆசயை நிறைவேற்றிக்கொண்டுள்ளார். படம் பார்க்கும் நமக்கே இவர் விக்ரம் என்று தெரியும் போது வில்லனுக்கு தெரியாதது காமெடி !

6. ஸ்ரேயா, ரீமாவுடன் பாடல் எடுத்துவிட்டதால் எங்கே போடுவது என்று குழம்பிய இயக்குனர் கிளைமாக்ஸ் முடிந்த பின் நமக்கு போட்டு காண்பித்துவிட்டார், அதை வீணாக்காமல்.

7. கமலுக்கு நான் தான் நடிப்பு சொல்லித்தந்தேன் என்ற வசனம் பேசிக்கொண்டு கே.விஸ்வநாத் படம் முழுக்க பரிதாமகாக வருகிறார். சினிமாவில் நல்லவர்கள் அனாதை இல்லம் நடத்துவார்கள், இவரும் நடத்துகிறார். வில்லன் இவர் நடத்தும் அனாதை இல்லத்தை அடித்து நொறுக்கும் போது இவரை போலவே நமக்கும் நெஞ்சு வலி வருகிறது, மொக்கை படத்துக்கு டிக்கெட் எடுத்து பார்த்தன் விளைவு.

8. வடிவேலு, சந்தானம் காமெடி டிராக் இல்லை, பாவம் விக்ரம் ஓவர் டைம் செய்ய வேண்டியுள்ளது. ஹீரோயின் கடத்தப்படும் காட்சி காமெடி டிராக் இல்லாத இந்த ஒரே காட்சி தீர்க்கிறது.

9. ராஜபாட்டை நம் முகத்தில் போடும் பட்டை !

10. உங்களுடைய சனி சனி பெயர்ச்சி பலன்கள் பொறுத்து ஒஸ்தியா ? ராஜபாட்டையா ? என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் !

Read More...

Saturday, December 24, 2011

கிருத்துமஸ் வாழ்த்துக்கள் !!

பல்வேறு கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே மக்களவையில் லோக்பால் மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மீடியா வழக்கம் போல இதை ஊதிப் பெரிசாக்கியது. தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் உள்ளே சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்ற டைம் பாம் வைத்து லாலு திரியை கொளுத்த, நன்றாகவே வெடித்தது.

தமிழ் மேட்ரிமோனி டாட் காமில் வருவது போல எல்லோருக்கும் இடஒதுக்கீடு வழங்கிவிடலாம். ஊழல் பெருச்சாளிகளை விசாரிக்க எதற்கு இடஒதுகீடு தேவை? ஊழல் செய்த ராசாவை கலைஞர் தலித் அதனால் தான் எல்லோரும் அவரை டார்க்ட் செய்கிறார்கள் என்று ஜோக் அடித்தார்.

காங்கிரஸ் நாங்களும் ஜோக் அடிக்கிறோம் என்று 50% இடஒதுக்கீடு தேவை என்று சொல்லிவிட்டது. அவர்களுக்கு தேவை இந்த மசோதா நிறைவேறக்கூடாது அதே சமயம் சிறுபான்மையினருக்கு நாங்கள் நண்பேண்டா என்று கூற வேண்டும். ஓட்டு தேவை இல்லையா?

இந்தக் காமெடி பாராளுமன்றத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் போது அன்னா சும்மா இருப்பாரா? காங்கிரஸுக்கு போட்டியாக நானும் காமெடி செய்கிறேன் என்று மைதானத்தைக் குத்தகைக்கு எடுத்து உண்ணாவிரதம் இருக்கத் தயாராகிவிட்டார். 2G ஊழலுக்கு பின் தான் அன்னா பிறந்தாரா? அதற்கு முன் பீரங்கி ஊழல், லாலு செய்த உர ஊழல், சுடுகாடு ஊழல் எல்லாம் நடந்த போது எங்கே போனார் இவர்? இவர் குழுவில் உள்ள ஒருவர் நீதிமன்றம் போக...

ஒரே ஆறுதல் மும்பை நீதிமன்றம் இவருக்கு எதிராக கூறிய கருத்துக்கள் தான். உங்களுக்கும் (ஜெயமோகன் போன்றவர்களுக்கும்) அது சத்தியாகிரகமாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்குத் தொல்லைதான் என்று சொல்லிவிட்டது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் அதே நேரத்தில், மசோதா இன்னும் நிறைவேறவில்லை. அதில் என்ன அம்சங்கள் இடம்பெறப் போகிறது என்பதும் யாருக்கும் தெரியாது.அப்படி இருக்க எப்படிப் போராட்டம் நடத்தலாம்? உங்கள் போராட்டம் நாடாளுமன்ற நடவடிக்கையில் தலையிடுவதுபோல் இல்லையா? இவர்களுக்கு சேரும் கூட்டதின் பிரதிநிதிகள் தான் பாராளுமன்றத்தில் இதை விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சட்டம் வகுக்க தெரிந்தவர்களுக்கு இது கூட தெரியாதது வெட்கக்கேடு!

அன்னா குழுவினருக்கு கொஞ்சமாவது தலையில் மசாலா இருந்தால் நீதிமன்றம் கூறிய கருத்துக்குத் தலைவணங்கி பாராளுமன்றக் கூட்டம் முடிந்த பின் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது இல்லாததால் அன்னா "சிறையில் உண்ணாவிரதம் இருப்பேன். ஆசாத் மைதானத்தில் ஒரு லட்சம் பேருக்கு இடம் போதாது. எனவே, எம்எம்ஆர்டிஏ மைதானத்துக்கு வேண்டிய கட்டணத்தை செலுத்த, பொதுமக்களிடம் நன்கொடை வசூலிப்பேன்‘‘ என்கிறார். அதுவும் கேஷ் என்றால் வேண்டாம், செக் என்றால் ஓகே என்கிறார்.

இவர் எதற்குக் கூட்டம் சேர்க்க வேண்டும்? மைதானமும், மீடியாவும் இல்லாமல் இவரால் உண்ணாவிரதம் இருக்க முடியாதா? மொத்தத்தில், குளிர்கால கூட்டத்தொடர் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலேயும், ரெண்டுமே மகாகாமெடி.
குளிர் அதிகம் என்பதால் ஹசாரேயின் உடல் நலம் காரணமாக தில்லி ராம்லீலா மைதானத்தில் அவரால் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பது கிரன் பேடி சொன்ன தகவல்!

எஸ்.வி.சேகர் திரும்பவும் அம்மா பக்கம் போவாரா, பாராவின் குற்றியலுகரம் புத்தககண்காட்சியில் டிமாண்ட் இல்லாமல் கிடைக்குமா ? ..கொக்கரகோ என்று கூவுவது எல்லாம் சேவலா, சாருவா ? .. பேச ஆயிரதெட்டு சமாசாரம் நமக்கு...... இதில இந்த லோக்பால் வேற. அனைவருக்கும் கிருத்துமஸ் வாழ்த்துக்கள்.

Read More...

Monday, December 19, 2011

சென்னை திரைப்பட விழா - A Separation

அந்த தாத்தாவிற்கு எப்போதும் வீட்டில் ஒரு மரியாதை உண்டு. டைட்டில் போட்டு முடிக்கும் போது அவர் இறந்து விட குடும்பத்தில் கடுமையான குழப்பம் ஏற்படுகிறது. அந்த வீட்டில் இருக்கும் ஹீரோயின் கடுமையாக பாதிக்கப்படுகிறார். அப்போது இவருக்கு துணையாக ஒரு பெண்மணி தோழியாக படத்தில் நுழைகிறார்.


இந்த இடத்தில் இசையோடு வரும் "நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற..." என்ற பாட்டு தாளம் போட வைக்கிறது.

கொலைவெறியுடன் அடித்துக் கொண்ட குடும்பமும் கொஞ்ச நாளில் முன்பு போல ஒன்று சேர, குடும்பத்தில் தோழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறர் ஹீரோயின். இதனால் குடும்பத்தில் உள்ள சின்ன பசங்க கடும் கோபத்தில் இருக்க அதை எல்லாம் கவலை படாமல் ஹீரோயின் தோழியுடன் இருக்க பலர் விமர்சிக்கவும், கிண்டலுக்கும் பயப்படாமல் தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டுகிறார். கோவில் கோர்ட் குளம் என்று எங்கே போனாலும் சின்ன பசங்களை விட்டுவிட்டு தோழியுடனேயே போகிறார்.

ஒரு காட்சியில் பிடிவாதத்தைக் காட்டுவதற்கு தோழியின் உறவினரை தன்னுடைய பிள்ளையாகப் பாவித்துத் தத்து எடுக்கிறார். இந்த இடத்தில் இந்த தீடீர் திருப்பம் யாரும் எதிர்பார்க்காத போது வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். இந்த திருமணத்தை காட்டியவிதம் பலரை ஆச்சரியப்பட வைக்கிறது. ஷங்கர் படம் போல பிரமாண்டமாக இந்த திருமணத்தை எடுத்துள்ளார். திருமணத்துக்கு போடப்பட்டிருக்கும் செட் பிரமாதமாக இருக்கிறது - ஆர்ட் டைரக்டருக்கு சபாஷ்!.
விதவிதமான நகை, செருப்பு என்று கம்பியூட்டர் கிராபிக்ஸில் காண்பித்துள்ளார்கள்.

சில வருடங்களுக்குப் பிறகு சின்ன சண்டை வர சில பல சின்னப் பசங்க எல்லாம் பக்கத்துவீட்டு மஞ்சள் துண்டு தாத்தாவை சப்போர்ட் செய்ய குடும்ப சொத்து அவருக்கு போகிறது. பிறகு அந்த வீடு அலங்கோலமாகிறது. வீட்டை காண்பித்துவிட்டு அப்படியே கூவத்தை காட்டியது பல வசனங்களுக்குச் சமானம்.

சில மாதங்களில் தாத்தாவின் பசங்கள் வீட்டை மூன்றாக பிரிக்க, சின்ன பசங்க விளையாடும் இடம், அவர்களுடைய பொம்மை செல்போன் ஆகியவற்றை இவர்கள் அபகரிக்க, மீண்டும் சண்டை வர குடும்பத்தில் ஹீரோயின் தலைவர் ஆகிறார். சுபம் என்று போடும் இடத்தில் இயக்குனர் யாரும் எதிர்ப்பாக்காத திருப்பதை வைக்கிறார். ஹீரோயின் தோழியை வீட்டை விட்டு விரட்டுகிறார்

குணசித்திர நடிகராக வரும் நம்பர் ஓபி சில காட்சியிலே வந்தாலும் தன் பார்த்திரம் உணர்ந்து அடக்கமாக நன்றாக நடித்துள்ளார். இவருக்கு தமிழ் திரைப்பட உலகத்தில் நல்ல எதிர்காலம் இருக்கு. டென்ஷனான வில்லன் போல எப்போதும் நட நட என்று நடக்கும் ராஜனுக்கு சரியான ரோல் கொடுக்காமல் படத்தில் அவரை வீண் செய்துள்ளார்கள்.

வீடியோ கடை வைத்திருப்பது போல ஹீரோயினுடைய தோழியை காண்பித்தது லாஜிக்கில் பெரிய ஓட்டை. இந்த காலத்தில் எல்லோரும் டவுன்லேட் செய்து தான் படம் பார்க்கிறார்கள், அப்படி இருக்க வீடியோ கடை எல்லாம் வைத்திருப்பது என்ன லாஜிக் ?

காமெடி டிராக் என்று தனியாக படத்தில் இல்லை என்றாலும், அடிக்கடி எல்லோரும் எங்கோ இருக்கும் ஒரு சிங்கிற்கு தந்தியும், கடிதமும் எழுதுவது நல்ல தமாஷ்! படம் ஆரம்பிக்கும் போது சிங் வீட்டில் இருக்கும் குப்பை தொட்டி இங்கிருந்து போகும் கடிததிற்கு பிறகு பெரிதாவதாக காண்பிப்பது வயிறு குலுங்க வைக்கிறது.

பாலிவுட் கிழவர் 6 விக்கெட் எடுத்தால் கோலிவுட் அம்மா 12 விக்கெட்டை எடுக்க முடியும் என்ற வசனத்துக்கு தியேட்டரில் பலத்த கைத்தட்டல் !


இட்லிவடை மார்க் - (-)/(:>)
A separation - விரைவில் கூடல் :-)

Read More...

அதிரடி செய்தி - சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினார் ஜெ


அதிமுகவில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 12 பேர் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Read More...

வடிவேலு சொன்ன குட்டி கதை !

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சினை வரத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் யாராவது உண்டா? உங்களை எல்லாம் சிரிக்க வைக்கும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கு. எந்த நேரமும் சிரிச்சுக்கிட்டே இருந்தா சரியாகுமா? சில நேரம் பிரச்சினையும் வரத்தான் செய்யும். அப்படித்தான் எனக்கும் பிரச்சினை வந்துள்ளது. எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்று செய்தி வெளியிடுகிறார்கள். நிறைய வாய்ப்புகள் இப்பவும் வரத்தான் செய்கிறது. நான்தான் அந்த வாய்ப்புகளை மறுத்து வருகிறேன்.
அவர் சொன்ன குட்டி கதை கீழே...

ஒருத்தர் மருத்துவர்கிட்ட போய், ஐயா எனக்கு தூக்கம் வரல. ரொம்ப மன உளச்சலா இருக்கு மருந்து கொடுங்கன்னு கேட்டாராம். அதுக்கு மருத்துவரோ, சனி, ஞாயிற்றுக்கிழமைன்னா எனக்கும் அப்படித்தான் வருது. இன்னிக்கு சனிக்கிழமை, அதனால நீங்க போயிட்டு திங்கட்கிழமை வாங்க. உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்னு சொன்னாராம்.

அவரோ, ஐயா எனக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைலதான் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மற்ற நாட்களில் எனக்கு வேலை அதிகம். எனக்கு இன்னிக்கு ஏதாவது வைத்தியம் பாருங்கண்ணு சொன்னாராம்.

சிறிது நேரம் யோசிச்ச மருத்துவர் ஐயா, நான் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல தூக்கம் வராம மன உளைச்சலில் அவதிப்படுகிறதால பக்கத்தில் வாராவாரம் நடக்கிற ‘பபுன்’ நிகழ்ச்சிக்கு போயி மனம் விட்டு சிரிச்சிட்டு வந்துடுவேன். அப்பத்தான் நிம்மதியாக தூங்க முடியும். இந்த வாரமும் அந்த நிகழ்ச்சிக்குத்தான் கிளம்பிட்டு இருக்கிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் நுழைவு சீட்டு வாங்கி இருக்கேன். வேணும்னா இன்னிக்கு மனைவியை விட்டு விடுகிறேன். உங்களுக்கு ஒரு சீட்டை தருகிறேன். வாங்க அந்த ‘பபுன்’ பார்த்துட்டு வந்தாலே கவலை எல்லாம் பறந்து போயிடும்னு சொன்னாராம்.

அப்போ இடைமறித்த அவரோ, ஐயா நான் தாங்க அந்த ‘பபுன்’ என்றாராம். மருத்துவர் அதிர்ந்து போய் பார்த்தாராம். அந்த ‘பபுன்’ நிலைதாங்க என்னோட நிலையும் என்றார் வடிவேலு.
பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு :-)

Read More...

Sunday, December 18, 2011

ஒஸ்தி விமர்சனம்

ரஜினியின் சிவாஜி படத்துக்கு விகடன் 41 மார்க் தந்தது; ஒஸ்திக்கு 40 மார்க். ஒரு மார்க் தானே கம்மி என்று நேற்று இந்தப் படத்தைப் பார்த்தேன்.

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே "சிவாஜி தி பாஸ் ஒஸ்தி தி மாஸ்" என்ற வசனம் வர, படம் சூப்பரா இருக்கும் போல என்று பார்த்தால்....

'நான் கண்ணாடி மாதிரிலே' என்று அடிக்கடி வசனம் பேசும் சிம்பு போலீஸ் டிரஸ் போட்டுக்கொண்டு கண்ணாடியில் ஏன் அதை ஒரு முறை கூடப் பார்க்கவில்லை என்ற எண்ணம்தான் முதலில் நமக்கு வந்தது. ஸ்கூல் பசங்க ஃபேன்ஸி டிரஸ் போட்டுக்கொண்டு வந்து "மை நேம் இஸ்... ஐயம் ஏ போலீஸ்' என்று சொல்லும் குழந்தை போல படம் முழுக்க வருகிறார்.

இயக்குநர் தரணி சிம்புவிடம் இது 3D படம் என்று சொல்லியிருப்பாரோ என்னவோ படம் முழுக்க கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டே வருகிறார். போலீஸ் டிரஸுடன் சரி மஃப்டியில் வரும் போதும் கூட ஏன் பாட்டு டான்ஸ் ஆடும் போதும் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு வந்து... படத்தை குறைந்த செலவில் 3D படமாக்கிவிட்டர்கள். சபாஷ்!. கிளாஸுக்கு கீழே விழும் கண்ணீரை ஒரு விரலால் தட்டிவிடுவது ... முடியலடா சாமி.

சரி 'லே' விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன்லே. உடனே புரிந்திருக்குமே இது திருநெல்வேலியின் கதை என்று...

திருநெல்வேலி என்றால் உடனே அங்கே இருக்கும் போலீஸும் பொறுக்கி என்ற தமிழ் சினிமா ஃபார்முலாவின் படி இவரும் பொறுக்கி போலீஸாக வருகிறார்.

டைட்டில் போது சின்ன வயது அண்ணன் தம்பி சண்டையிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. உடனே நாம் என்ன புரிந்துக்கொள்ள வேண்டும்? டைட்டில் ஆரம்பித்த சின்ன வயது சண்டை டைட்டில் முடியும் போது இவர்கள் பெரிதாகி, சண்டையும் பெரிதாகி, அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி பிறகு அப்பாவோ, அம்மாவோ ஆஸ்பத்திரியில் இருக்க, வில்லன் இவர்களை அடிக்க பழைய உண்மை ஏதாவது வெளியே வர உடனே அண்ணன் தம்பி ஒன்று சேர, இந்தத் தறுதலைகளுக்கு நல்ல, பார்க்க அழகான காதலிகள் அமைய - சுபம்!

முதலில் வில்லன் சோனு எண்டரி. நமக்கு நல்ல அறிமுகமானவர் தான். விஜயகாந்த படத்தில் தீவிரவாதியாகவும், பல தமிழ் படங்களில் சின்ன சின்ன நடிகர்களிடமும் சளைக்காமல் அடிவாங்கியவர். சிம்புவிடம் அடிவாங்குவது ஒன்றும் அவருக்கு பெரிது இல்லை. முதலில் அவரை கொடூர வில்லன் என்று காண்பிக்க ஏதோ ஒரு சிஐடி போலீஸை ஒரே அடியில் வீழ்த்திவிட்டு பணத்தை கூட்டளிகளிடம் கொடுத்து அனுப்புகிறார். சோனுவை இன்னும் ரொம்ப கொடூரமாக காண்பிக்க வேண்டும் என்று தரணி நினைத்திருப்பார் போல. அதனால் அவரையும் திருநெல்வேலி பாஷை பேச வைத்துள்ளார்.

வில்லன் கூட்டளிகள் டாட்டா சுமோவில் சோனு கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு பறக்க, நடுவில் டயர் பஞ்சராகி நிற்க டயரில் ஆணியா என்று பார்க்க 'ஆணி' இல்லை சின்ன புல்லட். உடனே கூட இருக்கும் வில்லன் இது 'ஒஸ்தி வேலன்' தான் என்று முடிவு செய்யும் போது போலீஸ் சைரனுடன் ஒஸ்தி சிம்பு ரோடு எல்லாம் இருந்தும், சுவரை உடைத்துக்கொண்டு டிரைவர் சீட்டிலிருந்து அப்படியே ஓடும் ஜீப்பிலிருந்து வெளியே குதித்து
வண்டி மீது ஏறி உட்காருகிறார் ...ஸ்லோமோஷனில். வேகமாகச் செய்தால் விழுந்துவிடுவார். தலை கூடக் கலையாமல், கண்ணடி மட்டும் லைட்டாக அசைய ஸ்டைலுக்கு அதை ஒத்தை விரலால் சரி செய்கிறார். காலை அனுராதா டின்ஸ் ஆடும் போது எடுத்துப் போடுவாரே அதே போல எடுத்துப் போட்டுவிட்டுக் கீழே இறங்குகிறார். ஹீரோ எண்டரியாம். :-)

ஒரு எடுபிடி வில்லன் அவருக்கு நேராக துப்பாகியைக் காண்பிக்க சிம்பு கவலையேபடாமல் வசனம் பேச ஆரம்பிக்கிறார். அவர் வசனம் பேசி முடித்தவுடன் பார்க்கும் நாமளே டையர்ட் ஆகி இருக்க துப்பாகி வைத்துக்கொண்டு அவர் பக்கம் இருக்கும் எடுபிடி டையர்ட் ஆகாமலா இருப்பார்? அவரும் டையர்ட் ஆன சமயம் பார்த்து சிம்பு அதே துப்பாகியை வைத்து அவரை சுடுகிறார். சுடுவதற்கு முன் .. வேற என்ன வசனம் தான்... "நான் கண்ணாடி மாதிரி என்னைப் பார்த்துச் சிரிச்சா நான் சிரிப்பேன், முறைச்சா முறைப்பேன்... " என்று சொல்லிவிட்டு எடுபடியைச் சுட அவர் இந்த வசனம் கேட்பதிலிருந்து விமோசனம் பெறுகிறார். அவரைப் பார்த்தால் நமக்குப் பொறாமையாக இருக்கிறது.

அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று நடக்கிறது. ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒரு துப்பாக்கிக் குண்டு வந்து பாய குண்டை பார்த்த சிம்பு லைட்டாக தலையை அசைக்க குண்டு கார் கண்ணாடியை உடைக்கிறது. உடனே சிம்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்கிறார். கண்ணாடியைக் கழட்டுகிறார் கழட்டி இரண்டு மூன்று முறை சுற்றி மேலே போடுகிறார் அது நேராக அவர் காலர் பின்பக்கம் வந்து மாட்டிக்கொள்கிறது. அப்போது இரண்டு எடுபிடிகள் சிம்புவை "எப்படி அண்ணாச்சி இவ்வளவு பேரை சத்தமே இல்லாமல் அடித்தீர்கள்?" என்று கேட்க, தரணி நமக்கு படத்தை ரிவைண்ட் செய்து சிம்பு எப்படி பலரை சத்தமே இல்லாமல் அடித்தார் என்று காண்பிக்கிறார். மீதம் இருப்பது இரண்டு பேர்தான். சரி அவர்களை

அடித்துவிட்டு அடுத்த சீனுக்கு போவார்கள் என்று பார்த்தால் உடனே நிறைய டாட்டா சுமோக்கள் புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து சிம்புவைச் சூழ, இப்ப என்ன செய்ய போகிறார் என்று நாம் பரிதவிக்க "மாப்பிள்ளைகளா இப்ப நடந்தது குஸ்தி ஃபைட் - இனிமே காட்ட போவது ஒஸ்தி ஃபைட்" என்று அவர்களை அடித்து நொறுக்குகிறார். குரங்கு கூட வெட்கப்படும் அளவிற்குத் தாவுகிறார், குதிக்கிறார், பறக்கிறார்... கடைசியாக எல்லோரையும் அடித்துவிட்டு ஏதோ பஞ்ச் வசனம் பேசுகிறார். அப்போது தரணி என்று தன் பெயரை பெருமையாகப் போட்டுக்கொள்கிறார் டைரக்டர்.

சண்டைக்கு பிறகு காமெடி வரவேண்டுமே என்று நினைக்க உடனே.. சந்தானம், மயில்சாமி குழுவினர் வந்து சேருகிறார்கள். வில்லனுக்கு எடுபிடிகள் ரவுடியாக இருந்தால், ஹீரோவிற்கு எடுபிடிகள் காமெடியன்களாக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா மரபின் படி காமடி பட்டாளம் போலீஸ் ஏட்டாக வருகிறார்கள். (காலெஜ் ஸ்டுடண்ட் என்றால் கூட இருப்பவர்களும் ஸ்டூடன்ஸ் அது மாதிரி).

காமெடிக்குப் பிறகு பாடல் வர வேண்டும்.. அச்சுபிச்சு வசனம் பேசி காமெடி என்று சொல்லிவிட்டு சிம்பு ஜீப்பை விட்டு இறங்கி ஓடுகிறார். போலீஸ் டிரஸை கழட்டி போட்டுவிட்டு டான்ஸ் காஸ்டியூமிற்கு மாறுகிறார். ஆனால் டான்ஸில் கூட கண்ணாடியை மட்டும் கழட்ட மறுக்கிறார்.

இதே மாதிரி கதையை முழுக்க இங்கே சொன்னால் அப்பறம் யாரும் படம் பார்க்கமாட்டாகள். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்று தெரியலை, ஆனால் கடைசியில் ஃபைட் கோபம் வர சிம்புவின் தசைகள் முறுக்கேற அவர் சட்டை அப்படியே கிழிந்து பறக்கிறது. 6 பேக் என்பது பேண்டுக்கு மேல் காமிக்கும் சமாசாரம் அதனால் பேண்ட் அப்படியே இருக்கிறது. சிம்புவும் தமிழ் சினிமாவின் ரீசன்ட் டிரண்ட்படி 6 பேக் காண்பிக்கிறார். 6 பேக் காண்பித்தால் அதுவே கடைசி சண்டை என்ற முடிவுக்கும் நாம் வருகிறோம்.

ரிச்சா படம் முழுக்க தன் இடுப்பையும் முதுகையும் ரிச்சாகக் காட்டிவிட்டுப் போய்விடுகிறார். இந்த எவர்சில்வர் யுகத்திலும் அவர் பானை வியாபாரியாக இருப்பது பாராட்டத்தக்கது.

படத்தில் எல்லோரும் காமெடி செய்துக்கொண்டு இருக்க, நாசர், ரேவதி மட்டும் இந்த படத்தில் எதற்கு நடித்தார்கள் என்று தெரியவில்லை. துளிக்கூட ஒட்டவே இல்லை. படம் முழுக்க எல்லோரும் திருநெல்வேலி பாஷை பேசி காமெடி செய்ய சந்தானம் மட்டும் பேசாமல் காமெடி செய்கிறார்.


இந்தியில் 'டபாங்' என்ற படத்தை தமிழுக்கு கொன்று வந்துள்ளர்கள். படத்தின் பெயரை 'டப்பா' என்று வைத்திருந்தால் இன்னும் ஒஸ்தியாக இருந்திருக்கும்.

சிவாஜி தி பாஸ். ஒஸ்தி தி மாஸ். நல்ல தமாஸ்(லே)


இட்லிவடை மார்க் 2.95/10

தாடி .. கில்லாடி பற்றி விவாதம் இங்கே...



Read More...

Wednesday, December 14, 2011

முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! - ஞாநி, சோ

பலர் முல்லைப் பெரியாறு பற்றி வலைப்பதிவிலும், ட்விட்டரிலும் விவாதிக்கிறார்கள். விவாதிப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியுமா என்று கூட தெரியாது. சும்மா ஜெயும் உம்மன்சாண்டிக்கும் நடக்கும் அறிக்கை யுத்ததை வைத்து நடக்கும் விவாதம் என்றே தோன்றுகிறது.

இந்த வார கல்கியில் வந்த ஞாநியின் ஓ-பக்கங்களிலிருந்தும், துக்ளக் பத்திரிக்கையிலிரிந்தும் வந்த சில தகவல்கள். பலருக்கு சரியான தகவல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த பதிவு, அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.




முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை என்பது என்ன?

‘தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க வேண்டும்’ என்பது கேரள அரசின் நிலை. ‘அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் விவசாயம் பாதிக்கப்படும்’ என்பது தமிழக அரசின் நிலை.



இரண்டில் எது உண்மை?

அணை பலவீனமாகிவிட்டது என்று 1979ல் கேரள அரசு சொல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்தப் பிரச்னை வளர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்காக வைக்கப்பட்டது. நிபுணர் குழுவை அமைத்து, பிரச்னையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அணை பலவீனமாக இல்லை என்றும் தற்காலிகமாகக் குறைத்துத் தேக்கிய நீரின் அளவை, பழையபடி அதிகரிக்கலாமென்றும் 2006ல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கேரளத்திலிருந்து தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

அப்படியானால் விஷயம் ஏற்கெனவே முடிந்து போய்விட்டதே? ஏன் மறுபடியும் பிரச்னை?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்துத் தோல்வியடைந்தபின், அணைகள் பாதுகாப்புக்கென்று ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படவிடாமல் தடுத்தது. காவிரி நீர் பிரச்னையிலும் இதே போல உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம் சட்டம் கொண்டு வந்தபோது, அந்தச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி கேரள அரசின் சட்டமும் செல்லாது என்று தமிழக அரசு போட்ட வழக்கில் தொடர்ந்து இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை வருவதற்கு, சற்று முன்னதாக கேரளத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்ட ‘டேம் 999’ படம் வெளியானது. அணை உடைந்து மாபெரும் விபத்து ஏற்படுவது பற்றிய படம் இது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் எதிர்காலத்தை, தீர்மானம் செய்யக் கூடிய இடைத் தேர்தல் நடக்கும் சமயம். எல்லாமாகச் சேர்ந்து கொண்டு கேரள மக்களின் பயத்தைக் கிளப்பிவிட்டு அரசியல் லாபமடையும் நோக்கத்தில் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்ற பிரசாரம் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்த அணை யாருக்குச் சொந்தம்? கேரளாவுடையதா? தமிழ்நாட்டுடையதா?

முல்லைப் பெரியாறு அணை ஒரு விசித்திரமான அணை. கட்டப்பட்ட அணை தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் கட்டியிருக்கும் இடம் கேரளாவுடையது என்ற அடிப்படையில் தமிழக அரசுக்கு 999 வருட குத்தகையில் தரப்பட்டிருக்கிறது.

அணை கட்டி நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால், அது பலவீனமாகியிருக்க வாய்ப்பு உண்டுதானே?

பராமரிப்பு இல்லையென்றால் கட்டி இரண்டே வருடத்தில் கூட ஒரு வீடு நாசமாகப் போகும். தொடர்ந்து சீரான பராமரிப்பு இருந்தால் பல நூறு வருடம் கழித்தும் ஒரு கட்டுமானம் பலமாகவே இருக்க முடியும். கரிகாலன் கட்டிய கல்லணை 1900 வருடமாகியும் பலமாகவும் பயன்பாட்டிலும் இருந்துவருகிறது. காரணம் தொடர்ந்து பழுதுபார்த்துப் பராமரித்து வருவதுதான். பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய சமயத்தில் கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் காட்டன். அவர் ஆட்சியில் முல்லைப் பெரியாறுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட, கோதாவரி, தௌலேஸ்வரம், கிருஷ்ணா அணைகள் எல்லாம் தொடர்ந்த பராமரிப்பினால் பலமாகவே இருந்து வருகின்றன. முல்லைப்பெரியாறு அணையையும் அவ்வப்போது பலப்படுத்தும் பராமரிப்பு வேலையை தமிழகப் பொறியாளர்கள் செய்துவந்துள்ளனர். உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த வட்டாரத்தின் நில அதிர்ச்சித் தன்மை உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே அணைக்கு ஆபத்தில்லை என்று கூறியிருக்கிறது.

அப்படியானால் ஏன் கேரளம், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இப்படி பீதியைக் கிளப்பிவிடுகிறது?

இந்தப் பிரச்னையின் வேர் தொடக்கத்திலேயே இருக்கிறது. பென்னிகுயிக் அணை கட்ட திட்டம் போட்டபோது, அங்கே திருவிதாங்கூர் அரசும் இங்கே பிரிட்டிஷ் அரசும் இருந்தன. அணைப் பகுதி அமையவேண்டிய தேவிகுளம் - பீர்மேடு பகுதிகள் 90 சதவிகிதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள். ஆனால் பிரிட்டிஷ் அரசு தவறாக அந்தப் பகுதிகளை, திருவிதாங்கூருக்குச் சொந்தமானது என்று கருதியது. அந்த அடிப்படையில் ஒப்பந்தம் போட்டது.

ஆனால் திருவிதாங்கூர் மகாராஜா இருமுறை பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஆய்வாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். அணை இருக்கும் இடம் சென்னை ராஜதானிக்குச் சொந்தமானது. எனவே சுற்றிலும் இருக்கும் பகுதிகளையும் சென்னையே எடுத்துக் கொண்டு தனக்கு 6 லட்ச ரூபாய் தந்தால் போதுமானது என்று மன்னர் சொல்லியிருக்கிறார். அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளை, சென்னை தனக்குக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு முல்லைப் பெரியாறைச் சுற்றியுள்ள பகுதிகளையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை பிரிட்டிஷ் அரசு பொருட்படுத்தவே இல்லை. அப்போதே அப்படிச் செய்திருந்தால், பின்னாளில் மொழி வாரி மாநிலம் அமைக்கும்போது, 90 சதவிகித தமிழர்கள் இருக்கும் தேவி குளம் - பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடே இருந்திருக்கும்.

தங்கள் நிலத்தில் அணையை வைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தமிழகம் கையில் அணை தொடர்பான எல்லா அதிகாரமும் இருப்பதை கேரள அரசு விரும்பவில்லை. படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமாக அது பறித்துக் கொண்டது. 1979 எம்.ஜி.ஆர் - அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?

ஒரு வாதத்துக்காக, அணை பலவீனமாகிவிட்டதாகவும் ஒரு பூகம்பத்தில் உடைந்துவிடுமென்றும் வைத்துக் கொண்டால், 30 லட்சம் கேரள மக்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படத்தானே செய்யும்?

“இல்லை. இந்தக் கருத்தே கேரளத்தில் மலையாளிகள் ஆதரவைத் திரட்ட அவர்களிடையே பீதியைக் கிளப்ப சொல்லப்படும் கருத்துதான். அணை உடைந்து எந்த மக்களாவது பாதிக்கப்பட்டால், அதில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்த வட்டாரத்தில் அவர்கள்தான் இப்போதும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தவிர அணை உடைந்தால் அந்தத் தண்ணீர் நேராகக் கீழே உள்ள இடுக்கி அணைக்குத்தான் போய்ச் சேரும். இடுக்கி அணையே முல்லைப் பெரியாறிலிருந்து வரும் உபரி நீரைத் தேக்கக் கட்டப்பட்டதுதான். வழியில் இருக்கும் ஊர்கள் குமுளி, ஏலப்பாறா இரண்டு மட்டுமே. குமுளி கடல் மட்டத்திலிருந்து 3350 அடி உயரத்திலும் ஏலப்பாறா 4850 அடி உயரத்திலும் உள்ளது. முல்லைப்பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2890 அடி உயரத்தில்தான். எனவே அதிலிருந்து வெள்ளம் இந்த ஊர்களுக்கு மலையேறிச் செல்ல முடியாது.

இந்தப் பிரச்னையைத் திரும்பவும் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியாதா?

பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியாத நிலையில்தான் நீதிமன்றத்தை இரு தரப்புமே அணுகுகின்றன. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதுதான் முறை. ஆனால் கேரள அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறது. மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் உத்தரவை ஒப்புக்கொள்ள மறுத்து, அணைக்கு ஆபத்து என்று மக்களிடையே கலவரத்தைத் தூண்டிவிட்டு, தான் விரும்புவதை சாதிக்க நினைக்கிறது.

அப்படியானால் என்னதான் தீர்வு?

நிச்சயம் வன்முறை உதவாது. இங்கே நாயர் டீக்கடையையோ, மேனன் நகைக் கடையையோ தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். இதற்கு முடிவே இல்லை. கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு. இலக்கியவாதி பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையைப் பகிரங்கமாகப் பேசியவர்கள். ஜெயலலிதா போல மலையாளத்தில் நன்றாகப் பேசத் தெரிந்த தமிழகத் தலைவர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால் நேரில் கேரள நகரங்களுக்குச் சென்றும் மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க முயற்சிக்கலாம்.

தமிழக சினிமா கலைஞர்களுக்கு, கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன. தமிழ் சினிமா பாடல்கள் இல்லாத கேரள ஊரே இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஏற்க மறுத்தால், அந்த அரசை அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதைப் பயன்படுத்த முன்வரும்படி மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.

தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.

( நன்றி: கல்கி )

துக்ளக் பகுதிகள்
கேள்வி : ‘முல்லைப் பெரியாறு அணைக்கு நில அதிர்வால் பாதிப்பில்லை’ – என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளாரே! இதற்குப் பிரதமரின் முடிவு என்னவாக இருக்கும்?

பதில் : ‘நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவது 1974-ல் கேரள அரசினால் நிரப்பப்பட்ட இடுக்கி நீர்த்தேக்கத்தினால்தானே தவிர, முல்லைப் பெரியாறு அணையினால் அல்ல’ என்று சில விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். ‘ஒரு அணை கட்டி நூறு ஆண்டுகளைக் கடந்து, இந்த மாதிரி அதிர்வுகள் தோன்றாது. மஹாராஷ்டிரத்தில், கொய்னா அணை கட்டி சில ஆண்டுகளில், நில அதிர்வுகளும், அதைத் தொடர்ந்து விபத்தும் நேரிட்டன. கேரளாவிலும், இடுக்கி அணைக்குப் பக்கமாக உள்ள பகுதிகளில்தான் இந்த அதிர்வுகள் தோன்றுகின்றன. இடுக்கி நீர்த்தேக்கத்தில், உள்ள நீரின் அளவு அதிகமாகும்போதுதான் இந்த அதிர்வுகள் அதிகமாகின்றன. ஆகையால், இடுக்கி அணைக் கட்டில், நீர்த் தேக்கத்தின் அளவு குறைக்கப்பட வேண்டும்’ என்ற கருத்து அந்த விஞ்ஞானிகளால் கூறப்பட்டிருக்கிறது. இது சரியானதுதானா என்று சொல்லக் கூடிய தகுதி நமக்கு இல்லை. ஆனால், இந்த மாதிரி கருத்துக்களை விவரம் அறிந்தவர்கள் கூறுகிறபோது, அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆகையால், இந்தக் கருத்தை ஒட்டிய ஆய்வு நடத்தப்படுவது நல்லது.

கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள ‘டேம் 999’ திரைப்படம் பற்றி?

ப : ‘படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?’ என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்’ என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக ‘முல்லைப் பெரியாறு அணை கூடாது’ என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.


கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள ‘டேம் 999’ திரைப்படம் பற்றி?

ப : ‘படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?’ என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்’ என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக ‘முல்லைப் பெரியாறு அணை கூடாது’ என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.

உண்ணாவிரதம் இருக்கும் முன் இந்த தகவல் எல்லாம் குஷ்பு படித்திருப்பாரா ?

Read More...

Tuesday, December 13, 2011

குஜராத் முதல்வரைச் சந்தித்தோம் - – ‘டிவி’ வரதராஜன்

அஹமதாபாத்தில் கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் எங்கள் குழுவின் இரண்டு நாடகங்கள் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது. அஹமதாபாத்தில் இருக்கும்போது முதல்வர் நரேந்திர மோடியைச் சந்திக்க நானும், எங்கள் குழுவிலுள்ள மற்றவர்களும் விரும்பினோம். இ-மெயில் மூலமாகவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டோம். உடனேயே அப்பாயின்ட்மென்ட் கிடைத்து விட்டது! நம்மூரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. திருப்புகழ், நரேந்திர மோடியுடன் இருக்கிறார் என்பதால், அவரும் உதவ எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைப்பது மிகவும் சுலபமாகி விட்டது. ஒரு முதல்வரை இவ்வளவு எளிதில் சந்திக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.



13.11.2011 மதியம் 12 மணிக்கு நாங்கள் மோடி அவர்களைச் சந்தித்தோம். எங்களுடன் ஒரு ஃபோட்டோகிராஃபரையும், வீடியோ கிராஃபரையும் கூட அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்து விட்டார்கள். போகும்பொழுது எங்களுக்கு ஒரு சந்தேகம். பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எங்களுக்குப் பல சோதனைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

நாங்கள் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபொழுது ‘வணக்கம்’ என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எழுந்து நின்று திரும்பிப் பார்த்தால், மோடி சிரித்தபடியே வந்து கொண்டிருந்தார். ‘ஸ்வாகதம்’ என்று கூறினார். நாங்கள் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்கள் குழுவினர் எல்லோரையும் அறிமுகப்படுத்தினோம். அவர் முகத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கியது. தன்னுடைய சட்டசபைத் தொகுதியில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்றும், அவர்களுடைய பிரதிநிதியாக திகழ்வதில் தனக்கு எப்பொழுதும் மனமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

‘எங்களுடைய நாடகங்களுக்கு ஏராளமான தமிழர்கள் வருகிறார்கள். ஆகவே, தமிழ் நாடகங்களின் விழா ஒன்றை தமிழ்ப் புத்தாண்டு தின சமயத்தில் குஜராத் மாநில அரசின் சார்பாக நடத்த வேண்டும்’ என்று நாங்கள் கேட்டபொழுது, நிச்சயமாக அதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் உடனே கூறிவிட்டார். தனது சாணக்கியத்தனத்தாலும், சாதுரியத்தாலும், சீரிய தலைமையாலும் அனைவரையும் வென்று வரும் நரேந்திர மோடி அவர்கள், எங்களை அவருடைய ஆத்மார்த்தமான அன்பினால் வென்று விட்டார். மோடியை நாங்கள் சந்தித்தோம் என்று தெரிந்த பிறகு, குஜராத் மாநிலத்தில் நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு ஒரு தனி மரியாதை கிட்டியது. நரேந்திர மோடியுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, ‘நீங்கள் வருகிறபோது செக்யூரிட்டி காரணமாக பெரிய தொந்திரவுகள் எதுவும் இருந்தனவா?’ என்று கேட்டார், ‘நாங்கள் அப்படி எதுவும் இல்லை’ என்றோம்.

ஆனால் ‘என்னென்ன சோதனைகள் செய்யப்பட வேண்டுமோ, அத்தனையும் முறைப்படி செய்யப்பட்டன. அது உங்களுக்குத் தெரியாத வகையில் நடந்தது. அதுதான் இங்குள்ள அதிகாரிகளின் திறமையும், நிர்வாகத்தின் சாமர்த்தியமும்’ என்று அவர் விளக்கினார். நம் ஊரில் கார்ப்பரேஷன் கௌன்ஸிலரைக் கூட இவ்வளவு சுலபமாக, தொந்திரவு இல்லாமல் பார்த்து விட முடியாது என்று எங்களுக்குள்ளேயே நினைத்துக் கொண்டோம்.

ரயில் பயணத்தின்போது, குஜராத் எல்லையில் நுழைந்தவுடனேயே எங்களுக்குப் பெரிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. அதுவரை சாதாரணமாக ஒன்றும் குறிப்பிடத்தக்க நிலையில் இல்லாத கிராமங்களை ரயில் கடந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், குஜராத்தில் நுழைந்தபோதோ, எல்லா கிராமங்களிலும் விளக்கு வசதி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு தெருவின் இறுதிவரை, பிரகாசமாக விளக்குகள் எரிவதைப் பார்த்துக் கொண்டே சென்றோம். குஜராத்தில் நாங்கள் கார்களில் பயணம் செய்தபொழுது, அங்கு தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதையும், அங்கு சாலைகள் எவ்வளவு சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.

அஹமதாபாத்திலும் சரி, சூரத்திலும் சரி, நாங்கள் சென்ற கார்களை ஓட்டியவர்கள் அனேகமாக முஸ்லிம் இனமக்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள், ‘மோடியினால்தான் நாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம்’ என்று மனத் திருப்தியுடன் சொன்னது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் சொல்வதும்; நடைமுறை உண்மையும் வெவ்வேறாக இருக்கின்றன என்பதைக் கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம், புரிந்து கொண்டோம்.

நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் அங்கு மக்கள், ‘இந்த வசதி எங்களுக்கு மோடியால்தான் வந்தது... இந்த விஷயத்தை மோடிதான் உருவாக்கினார்... நாங்கள் செய்த புண்ணியம் மோடி எங்களுக்கு முதல்வராகக் கிடைத்திருக்கிறார்...’ என்றெல்லாம் பெருமிதத்தோடு கூறியது, குஜராத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் எங்களுக்கு உணர்த்தியது.

சூரத் நகரம் புடவைகள் மற்றும் வைரங்களுக்குப் பிரசித்தி பெற்ற இடம். அன்றாடம் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் புழங்குகின்ற இடம். தினமும் மூட்டை மூட்டையாகத் துணிகளை வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக, ஆயிரக்கணக்கானவர்கள் ரயில் மற்றும் லாரி நிறுவனங்களுக்கு தலையில் சுமந்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறார்கள். இது அனேகமாக நாள் முழுவதும் நடக்கிறது. அவ்வளவு வியாபாரம். அந்த மாதிரி மூட்டைகளைச் சுமந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம், வேறு ஒருவரின் உதவியோடு பேச்சுக் கொடுத்தேன். ‘மூட்டை தூக்குவதால் ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும்’ என்று கேட்டேன்.

‘சராசரியாக 500 முதல் 700 ரூபாய் வரை வரும்’ என்ற அந்த மூட்டை சுமப்பவர் பதிலளித்தார்.

“எவ்வளவு பணம் வீட்டுக்குச் செல்லும்’ என்று கேட்டேன்.

‘என் செலவுக்கு 100 ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதியை மனைவியிடம் கொடுத்து விடுவேன்’ என்றார்.

‘100 ரூபாய்தானா?’

‘ஆமாம், காலையில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன். பகலில் சாப்பிடவும், மற்றும் பான் பராக் போட்டுக் கொள்ளவும் 100 ரூபாய் போதாதா? போதும்’ என்றார்.

‘சரி, குடும்பம் எப்படி இருக்கிறது?’ என்றேன்.

‘மகன் பட்டப்படிப்பும், மகள் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். மனைவி ஒரு கடையில் வேலை செய்கிறாள்’ என்றார்.

இது ஒரு சாம்பிள்தான். அனேகமாக குஜராத்தில் பலரும் இதே ஸ்டாண்டர்டில்தான் வாழ்கிறார்கள். அப்புறம் அங்குள்ளவர்கள் விளக்கிச் சொல்லத்தான், இது இங்கே எப்படி சாத்தியமாயிற்று என்பது புரிந்தது. ‘இங்கு பரிபூரண மதுவிலக்கு இருக்கிறது. ஆகையால், பணம் பத்திரமாக வீடு செல்கிறது. மதுவிலக்கு இல்லாமல் இருந்தால், இது இவ்வளவு எளிதாக சாத்தியமாகி இருக்காது’ என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நம்மூரில் மாலை ஐந்து மணிக்கே கைக்கு வரும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுத்து தண்ணி அடித்து விட்டு வரும் கணவனை, ‘கள்ளானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன்’ என்று வீட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்லும் மனைவிகளுக்கு மத்தியில் – குடும்பத்துடன் வாரக் கடைசியில் ஹோட்டலில் வயிறார சாப்பிடும் கூலித் தொழிலாளர்கள் குஜராத்தில் இருப்பது, மதுவிலக்கின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம். குஜராத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். அங்கே அனேகமாக அதிகமாக ஜைனர்கள் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை, எல்லாமே சைவமாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அஹமதாபாத் - சென்னைக்கிடையே ஓடும் நவஜீவன் எக்ஸ்பிரஸில் அசைவம் சேர்ப்பதே இல்லை. அந்த வண்டியில் பயணம் செய்கிற சூப்பர்வைஸர், ‘காலையில் முட்டை போட்டுச் செய்யப்படும் ஆம்லெட் கூட கிடையாது’ என்று சொன்னார். காரணம், வியாபாரம் ஆகாதாம்.

நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது, எங்கள் குழுவில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு, அவர் காலில் விழுந்தார். மோடி அவரைத் தடுத்து, ‘தயவு செய்து என் காலில் விழாதீர்கள். உங்கள் தலை என் காலில் பட்டால் என் தலையில் கனம் ஏறி விடும்’ என்றார். தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பவன் அரசியல்வாதி; அடுத்த தலைமுறையைப் பற்றி நினைப்பவன் தலைவன். ஆனால், தன் தாய் திருநாட்டைப் பற்றிச் சிந்திப்பவர் மோடி.

- 'டிவி' வரதராஜன் ( நன்றி: துக்ளக் )

அடுத்த பிரதமர் ?

Read More...

Monday, December 12, 2011

பிறந்த நாள் வாத்துகள் !!



இரண்டாவது பிறந்தநாள் காணும் எங்கள் Angry birds.... வாழ்த்த வயது இருக்கிறது வாழ்த்துகிறோம் !

Read More...

Sunday, December 11, 2011

பாரதி யார் ?



பாரதி கண்ட புதுமைப் பெண் !

Read More...

கிரகணம் விலகியது !

கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டன. திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். வானம் உள்ளவரை இந்த பூமி உள்ளவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - ராமதாஸ் ( நேற்றைய தினம் தந்த பேட்டியிலிருந்து.. )

விட்ட கிரகணம் மீண்டும் பிடிக்கும் என்று அறிவியல் நிபுணர்கள் சொல்லுகிறார்கள்!

Read More...

Thursday, December 08, 2011

கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்!




:-)

Read More...

Saturday, December 03, 2011

துருவ நட்சத்திரம் - புத்தக வெளியீட்டு விழா


Read More...

சந்திப்பு செய்திகள்

1. கனிமொழியை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சந்திக்க செல்கிறார் திமுக தலைவர் கலைஞர்.

2. தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று காலை தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தார்.

3. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி பா.ம.கவிலிரிந்து நீக்கப்பட்ட வேல்முருகன் ஆகியோர் சந்திப்பு.

4. சரத்பவார், சரத்யாதவ் இருவரும் எடியூரப்பாவை டெல்லிக்கு வந்து தங்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்றைய பேனர்கள்:




இதை தவிர நில அபகரிப்பு வழக்கில் சட்டத்தை 'சந்திக்க' தயார் என்று பல திமுக முக்கிய புள்ளிகள் சொல்லியுள்ளார்கள்!

Read More...

Friday, December 02, 2011

அதிமுகவில் வடிவேலு ?


இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று வடிவேலுக்கு புரிந்துவிட்டது !

Read More...

கிளீனர் ஆன கால்பந்தாட்ட வீரர்கள் !

இந்தியாவில் ஒருபுறம் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்களுக்கு பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. கிரிக்கெட் வாரியம், ஸ்பான்ஸர்கள் இவை தவிர, ஏதேனும் பெரிய போட்டிகளில் வென்றாலோ அல்லது தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தினாலோ முறியடித்தாலோ, அந்தந்த மாநில அரசு, தவிர மத்திய அரசு என வீர்ர்களை பணக்ரீடை செய்கின்றன.

சமீபத்தில் பம்பாயில் நிகழ்ந்த டெஸ்ட் போட்டியில், டெண்டுல்கர் தனது நூறாவது சதத்தை நிறைவு செய்தாரானால் அவருக்கு நூறு தங்கக் காசுகள் வழங்கப்படுமென அகில இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்திருந்தது. இப்படி கொட்டும் பண மழை எல்லாம் போதாதென்பது போல சூதாட்டங்களில் வேறு ஈடுபட்டு கிரிக்கெட் வீர்ர்கள் அவ்வப்போது மாட்டிக் கொள்வதும் நிகழ்வதுண்டு. முன்னாள் கேப்டன் அஸாருதீன், நட்சத்திர வீரர் ஜடேஜா போன்றோர்கள் உதாரணம்.


இவை ஒருபுறமிருக்க இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எங்கிருக்கின்றன என பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு தேடினாலும் அகப்படாத அவலநிலை. இன்றைய தலைமுறையினருக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது தெரிந்திருக்க நியாயமில்லை, தெரியவில்லை என்று குற்றமும் சொல்ல முடியாது. இதன் கதியே இப்படியென்றால் கால்பந்தாட்டம் எம்மாத்திரம்?

ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் என கட்சி பேதமின்றி ஏதேனும் ஒரு கட்சித் தலைவர் ஏதேனும் ஒரு ஜில்லா கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ, அல்லது மாநில கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ தலைமை வகித்துக் கொண்டிருப்பார். எதுவுமே கிடைக்காவிடில், கூடுவாஞ்சேரி கிரிக்கெட் குழுவின் தலைவராகவேனும் பொறுப்பு வகித்துக் கொண்டிருப்பார். ஆனால் கால்பந்து, ஹாக்கி சம்மேளனத்திற்கு ஒரு வார்டு மெம்பர் கூட தலைவர் பொறுப்புக்கு வரத் துணிய மாட்டார். காரணம் அங்கு செல்லாத ஓட்டைக் காலணாவைக் கூடப் பார்க்க முடியாது.

இம்மாதிரியான பணப் பிரச்சனை மற்றும் ஸ்பான்ஸர் பிரச்சனைகளால் இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எதுவுமே சோபிக்கவில்லை. 120 கோடி ஜனத்தொகையுள்ள ஒரு நாட்டில் அதிகபட்சம் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்தாலே, ஒரு மாதத்திற்கு தலைப்புச் செய்தியாகின்ற கேவலம். இதையும் விட கேவலமான ஒரு நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கேவலம், அவமானம்! இதற்கும் கீழான வார்த்தைகள் கிடைக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அவ்வணி இந்தியாவுடன் மோதும் நான்காவது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாண்டுகளிக்கு இம்மைதானத்தில் நிகழவிருக்கும் சர்வதேசப் போட்டி என்பதால் மைதானத்தைச் சுத்தம் செய்யும் நிமித்தம், உள்ளூர் டிவிஷன் கால்பந்தாட்ட அணியினரை மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதில் என்னவொரு அதிர்ச்சி என்றால், இவ்வணியில் உள்ள சுமார் 7 பேர், மாநில அணி வீரர்களாவர். இதுவெல்லாம் கூட அதிர்ச்சி இல்லை, இனி வரப் போவதுதான் அதிர்ச்சி. சுமார் 26,000 இருக்கைகள் கொண்ட மைதானத்தில், ஒவ்வொரு இருக்கைக்கும் சுத்தம் செய்ய ரூபாய் 2.75 வீதம் கூலி கொடுக்கப்படுகிறது என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். ஒரு கப் டீ கூட இந்த விலைக்குக் கிடைக்காத நிலையில், ஒரு கால்பந்தாட்டக் குழுவை, அதிலும் மாநில வீர்ர்களைக் கொண்ட ஒரு குழுவை 2 ரூபாய் சொச்சத்திற்கு கூலியாட்களாக அமர்த்தியிருக்கிறது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சம்மேளனம். இது அவ்வணியினரைக் கேவலப் படுத்தும் செயல் அல்ல, ஒட்டு மொத்த கால்பந்தாட்ட்த்தையே கேலிக்குள்ளாக்கும் செயல். இந்தியாவைத் தவிர வேறு எங்குமே நடவாத செயல்.

இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, எங்களுடைய கிழிந்த ஷூக்களுக்குப் பதிலாக புதிய ஷூக்களும், இதர விளையாட்டு சாதனங்களையும் வாங்குவோம் என்கிறார் இந்த கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்.

இந்தியாவில் கால்பந்தாட்டம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. இவ்விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல பலம் பொருந்திய அமைப்போ, பணபலமோ நம்மிடம் இல்லை. இதனால் இவ்வாறு செய்யும் வேலைகளின் மூலமாக்க் கிடைக்கும் வருவாயைக் கொண்டு எங்கள் விளையாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம் என்கிறார் தேஜ் செளஹான் எனும் கால்பந்தாட்ட வீரர்.

மத்திய அரசாங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகம் என்று ஒன்று இருப்பதாகக் கேள்வி. அந்த அமைச்சகம் விளையாட்டுக்களை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும் கூட பரவாயில்லை; ஒரு விளையாட்டையும், அதன் வீரர்களையும் இவ்வளவு கீழான நிலைக்குத் தள்ளாமலிருக்கவேனும் ஆவன செய்ய வேண்டும்.

சச்சினுக்கு ஒரு வேண்டுகோள்: 100 அடித்த பிறகு ஒரு 100 ரூபாயை கால்பந்தாட்டதுக்கு நிதி உதவியாக தர வேண்டும்.

கசாப் போன்றவர்களை பாதுகாக்க செலவு செய்யும் அரசு அதில் 10% கால்பந்தாட்டத்திற்கு செலவு செய்யலாம். இந்திய கிரிக்கெட் அணி இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கே விளையட கூடாது. ஞாநி போன்றவர்கள் இதை பற்றி எழுதி சம்பந்தபட்டவர்களுக்கு கொண்டு போக வேண்டும்.

Read More...

Thursday, December 01, 2011

Mr. & Mrs Idly




திருவானைக்காவல் மெயின்ரோட்டில் Mr. & Mrs Idly என்ற புதிய ஹோட்டல் திறந்திருக்கிறார்கள் என்று சில நாட்கள் முன் ட்விட்டரில் பேசினார்கள். அந்த பிரசித்தி பெற்ற் ஹோட்டல் படம்

அனுப்பிய வடைக்கு நன்றி !

Read More...

Tuesday, November 29, 2011

கனிமொழி ஜாமீன் செய்திகள்

இன்றைய ஜாமின் செய்திகள்:

* கனிமொழி எம்.பி.க்கு ஜாமீன் கிடைத்தது - தினத்தந்தி ( அட இங்க எம்.பியா ? மறந்தே போச்சு )

கிடைத்தது கனிமொழிக்கு ஜாமீன் - தினமலர் ( கண்டேன் சீதையை போல )

கனிமொழி, 4 பேருக்கு ஜாமீன் - தினமணி ( அப்படியா ? )

Kanimozhi to walk free today, will father Karunanidhi reward her 'sacrifice'? - Times of India ( Sacrifice for whom ? )

Karunanidhi elated over Kanimozhi getting bail - The Hindu( ஓ! )

SC effect: Bail for Kanimozhi, 4 others ( அட அப்ப்டியா ? )

2G case: Kanimozhi, 4 others to walk out of Tihar today - Hindustan Times. ( பார்லிமெண்ட் மாதிரி இந்த நியூஸும் ஆகிவிட்டது )

Lawmaker Kanimozhi Gets Bail in Telecom Case - Wall Street Journal ( Lawmaker என்றால் என்ன சார் ? )

Smiles and hugs as Kanimozhi, four others get bail - India Today ( இருக்காதா பின்ன)

கனிமொழி ‘வாங்கிய’ ஜாமீன் - தமிழ் பேப்பர் மாயவரத்தான் ( சும்மா ஒரு விளம்பரத்துக்கு )

192 நாட்களுக்கு மேல் இருக்கும் ராசாவின் தியாகத்துக்கு எப்போது ஜாமீன் , அவருக்கு என்ன பதவி கிடைக்கும் ?

Read More...

Sunday, November 27, 2011

படமும் செய்தியும்


- நன்றி விகடன்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து வருகிற 30-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். சில வார காலம் அங்கிருந்தபடியே அரசு பணிகளை மேற்கொள்வார் - தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

படத்துக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லை!

Read More...

Friday, November 25, 2011

அன்னாவும் "THE"முகவும்

ஊழலை முற்றாக ஒழித்துக் கட்டுகிறேன் பேர்வழி என்று அன்னா ஹஸாரே என்ற காந்தியவாதி ஒருவர் கிளம்பினார். மீடியாக்கள் எல்லாமாகச் சேர்ந்து கொண்டு செய்த களேபரத்தால், எங்கு பார்த்தாலும் அன்னா அன்னா என்று ஸ்மரணையே இல்லாமல் ஜெபித்துக் கொண்டும், ஊழல் சாம்ராஜ்யம் வீழ்ந்து விட்டது போலவும் கற்பனை செய்து கொண்டு, சினிமா ஷூட்டிங் பார்க்கக் கிளம்பிய பட்டிக்காட்டு ஜனம் போல மக்கள் கூட்டம் திரண்டது.

விட்டால் ஊழலை ஒழித்தே விடுவார் போலிருக்கிறதே என்று காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளே மிரளும் வண்ணம் அத்தகைய கூட்டத்தைக் கூட்டினார். ஜன் லோக்பால் என்ற சட்ட வடிவை முன்னிறுத்தி, இதில் ஒரு எழுத்து குறைந்தாலும் ஏற்க மாட்டோம் என்று நிபந்தனை விதித்தார். சாகும் வரையிலான 15 நாள் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு அரசு பணிவது போல் பணிந்து, அன்னா சொல்வதை உணர்வுப் பூர்வமாக ஏற்கிறோம் என்று அரசுக்கும் புரியாமல், அன்னாவுக்கும் புரிந்து விடாமல், காங்கிரஸின் ட்ரபிள் ஷூட்டர் எனப்படும் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் எதையோ பேசப் போக, மீடியாவின் துணையுடன் அனைவரும் ஜெய ஜெய என ஜெய கோஷமெழுப்பி ஊழலை ஒழித்துக் கட்டினர். இதெல்லாம் கொஞ்சம் பழைய கதை.


“இந்தியாவிலேயே ஊழலற்ற மாநிலம் குஜராத்தான். நரேந்திர மோதி அப்பழுக்கற்றவர், மிகச் சிறந்த நிர்வாகி”, என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார். மோதியும், இப்படியெல்லாம் என்னைப் புகழ்ந்தால் உங்களைச் சிலர் களங்கப் படுத்த முயல்வர் என்று கடிதம் எழுதினார் ஹஸாரேவுக்கு. அதற்கெல்லாம் சளைத்தவன் நானல்ல என்று மார் தட்டினார் அன்னா. கடைசியில் என்னவாயிற்று? அன்னா ஹஸாரேயின் மதச்சார்பின்மை கேள்விக்குரியதாகிறது, அவர் பாஜக அனுதாபி, ஆர் எஸ் எஸ் ஸ்வயம்சேவக் போல் பேசுகிறார் என்று மதச்சார்பற்ற மாந்தர்கள் குரலெழுப்பவும், எதற்கு வம்பு என்று, “குஜராத்தைப் போல் ஊழல் மலிந்த மாநிலம் உலகிலேயே இல்லை” என்று ஒரே போடாகப் போட்டார். முன்பு அப்படிச் சொன்னீர்களே, பிறகு ஏன் இப்படி என்று மீடியாக்கள் இவரைக் கேட்கவில்லை, அதுவும் மதச்சார்பின்மைக்கு எதிராக முடியுமென்பதால்.

இவ்வாறாக காந்தியவாதி, சமூக சேவகர் என்ற பட்டங்களுடன் மீடியாக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த அன்னா தற்போது முக போல் முன்னுக்குப் பின் முரணாக தினமும் எதையாவது ஒன்றைப் பேசி வருகிறார். கூட்டம் கூட்டிக் காண்பித்தாயிற்று, மீடியாக்கள் மூலம் மக்கள் ஆதரவு இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியாயிற்று, இனி எது சொன்னாலும் எடுபடும் என்ற அளவில் அன்னாவின் பேச்சுக்கள் இருக்கின்றன.
மௌன விரதம் இருக்கிறேன் என்றால் உடனே ஒரு பேப்பர் பேனாவை கொடுத்து மீடியா பேட்டி எடுக்கும் நிலைக்கு வந்த பின்னர் என்ன செய்வது என்று அவருக்கும், மீடியாவிற்கு தெரியவில்லை.

காங்கிரஸை ஊழல் மலிந்த கட்சி என்றார். ஹிமாச்சலில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். ஏற்கனவே பாஜக கூட்டணி வசமிருந்த தொகுதியாதலால், பாஜக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றது. அன்னா ஹஸாரேவால் காங்கிரஸ் தோல்வி என மதச்சார்பற்ற மீடியாக்கள் வரிந்து தள்ளின. சற்று நேரத்திற்கெல்லாம், ஜன் லோக்பாலை அரசு நிறைவேற்றினால் காங்கிரஸுக்காகப் பணியாற்றுவேன் என்று அந்தர் பல்டியடித்தார்.


இவ்வாறாக அடித்த பல்டிகளில் லேட்டஸ்ட் பல்டி, நேற்றைய பல்டிதான். இந்த பல்டியில்தான் சற்றே சறுக்கி விட்டார். மீடியாக்கள் கூட கேள்வி கேட்க ஆரம்பித்த்தால், அன்னாவே நிலை தடுமாறித்தான் விட்டார். நேற்றைய தினம், மத்திய அமைச்சர் ஷரத் பவாரை ஹர்விந்தர் சிங் என்பவர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிபலிப்பு என்று எல்லோரும் நினைக்க அன்னாவும் அதையே நினைத்துவிட்டார்.

நேற்றைய தினம் மராட்டிய மாநிலம் புனேவில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட அன்னாவிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அன்னா சற்றே நக்கலான தொனியில், ஒரே ஒரு அறைதானா? என்று கேட்டார். பின்பு இது பற்றி மீடியாக்கள் பெரிது படுத்தவும், காந்தியவாதி என்ற பட்டத்திற்கு பங்கம் வந்துவிடும் என்பதால் உடனேயே வன்மையாக்க் கண்டிக்கத்தக்கது என்ற ரீதியில் ஒரு அறிக்கை வெளியிட்டார். முன்பு பேசியது எங்கு தவறாக எடுத்துக் கொள்ளப்படுமோ என்ற பதட்டத்தில், ஒரே அறைதானா அல்லது கடுமையாகத் தாக்கப்பட்டாரா என்ற ரீதியில்தான் அவ்வாறு கேட்டேன் என்றார், பிறகு மன்னிப்பு வேண்டுமானாலும் கோருகிறேன் என்றிருக்கிறார் சமீபமாக. முக கூட மஞ்சள் துண்டிற்கு இவ்வளவு விளக்கங்கள் கொடுத்திருக்க மாட்டார்.


இன்னமும் இவர் ஊழலை ஒழித்து, காங்கிரஸிடமிருந்து மக்களையும், இந்தியாவையும் காப்பாற்றி விடுவார் என விடாமல் பகல் கனவு காண்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாவை காந்தியவாதி என்கிறார்கள். அது ஏனென்று புரிபடவே இல்லை. ஷரத் பவாரை ஒரே ஒரு அறைதான் அறைந்தார்களா என்று ஆவலுடன் கேட்கிறார்; எங்கள் ஊரில் குடிப்பவர்களை எல்லாம் மரத்தில் கட்டி வைத்து அடிப்போம் என்கிறார். இதெல்லாம் காந்தியவாதி செய்யும் செயல்களாகத் தெரியவில்லை. அமைப்பிற்கு நன்கொடை என்ற பெயரில் வந்த பணத்தில் பேர்பாதி கணக்கில் வராத பணமாம், அதையும் திருப்பிக் கொடுக்கிறார்களாம். வாங்கும்போது அது தெரியவில்லையா? அல்லது பேசியதை மாற்றி மாற்றி பிறழ்ந்து பேசுபவர்களெல்லாம் காந்தியவாதிகளா?


இது தெரியாது மீடியா ஒருவரை கொஞ்சம் நேரம் காண்பித்தால் தமிழ் இலக்கிய உலகம் உடனே இன்ஸ்டண்ட் தொடர், கேள்வி பதில், அதை தொடர்ந்து புத்தகம் என்று நல்ல காமெடி!

Read More...

இன்று கிடைக்குமா ?



இன்று கிடைக்குமா ?

Read More...

Thursday, November 24, 2011

ஒன்லி ஒன்ஸ் !!

இன்று சரத் பவாரை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததை பல முறை எல்லா டிவிக்களும் போட்டு அவர் பல முறை அடி வாங்க வைத்துவிட்டார்கள். எல்லோருக்கும் உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும், அவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மீடியா சும்மா இல்லாமல், அன்னாவிடம் கருத்து கேட்க அவரும் நம்மளை போல சந்தோஷத்தில் "பவாருக்கு ஒரே ஒரு அடிதான் கிடைத்ததா?" என்று மஞ்சள் கமெண்ட் அடிக்க. காந்தியின் மறு உருவம், அகிம்சையைத்தான் பின்பற்றும் அன்னா எப்படி இப்படி பேசலாம் என்று மீடியா பிடித்துக்கொண்டது.

இந்த தாக்குதலுக்கு இதற்கு முக்கிய காரணம் நேற்று அந்த சீக்கிய இளைஞர் தனுஷ் பாடிய கொலைவெறி பாடலை கேட்டது தான் என்று பரவலாக நம்பப்படுகிறது


அன்னாவை பின்பற்றுகிறவர்களுக்கு இது பெரிய அறை என்பது வேறு விஷயம் !

Read More...

Wednesday, November 23, 2011

குட்டை பாவாடையும் கோவணமும்

நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது மரபு. இதனால் பிரிண்ட் மீடியாக்களும், வலைப்பதிவுகளும் காலத்தை ஓட்டுகிறது. ஸ்ரேயா சிவாஜி விழாவிற்கு வந்து சென்ற பிறகு மன்னிப்பு கேட்டார். நமிதா கையோடு ஒரு துண்டு எடுத்து வருகிறார். ஆனால் இந்து மக்கள் கட்சி போன்றவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த மாதிரி தமிழ்நாட்டின் முக்கியமாக பிரச்சனைகளுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பும், குஷ்பு கருத்தும் நமக்கு பழக்கப்பட்டது தான்...

குஷ்பு கருத்து:

நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார். ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன.

இந்து மக்கள் கட்சி கருத்து:

தமிழக கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக் கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.
கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா? அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அதற்கு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆக மொத்தம் இவர்களை போட்டு எனக்கு நான்கு நிமிட புகழ் வந்துவிட்டது

நல்ல படங்கள் கிடைக்கவில்லை, மன்னிக்கவும் :-)

Read More...

Tuesday, November 22, 2011

யார் அன்னா ?



லோனாவாலா அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்னா ஹசாரேயின் மெழுகு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதில் யார் உண்மையான அன்னா என்று சொல்லுங்கள் பார்க்கலாம் ?


மெழுகு உருவில் இருக்கும் அன்னா, வாழ்நாள் முழுவதும் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என்பது கூடுதல் சிறப்பு !

Read More...

Saturday, November 19, 2011

ஊர் சுற்றிப் புராணம்! - ஞாநி

இந்த வார கல்கியில் ஞாநி எழுதிய இந்த கட்டுரை, நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை....

சென்ற வருடம் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஒவ்வொரு விமான நிலையத்திலும் என் பாஸ்போர்ட் பெயரில் இருக்கும் பூர்விக ஊர் பெயரை அதிகாரிகள் கஷ்டப்பட்டுப் படிக்கும்போதெல்லாம், அந்த ஊரை இதுவரை நான் பார்த்ததே இல்லையே என்ற வருத்தம் மேலெழுந்துகொண்டே இருந்தது. எங்கள் குடும்பத்தில் என் அப்பாவைத் தவிர வேறு யாரும் அந்த ஊரைப் பார்த்ததில்லை.

அண்மையில் புரிசை கிராமத்தில் நடந்த புரிசை கண்ணப்ப தம்பிரானின் நூற்றாண்டுக் கலைவிழாவில் எங்கள் பரீக்‌ஷா குழுவின் நாடகம் நடத்த அங்கே செல்லவேண்டியிருந்தபோது, பயண வசதிகளை முடிவு செய்வதற்காக கூகுள் மேப்களை அலசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் புரிசையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் என் பூர்விக ஊர் நல்லூர் இருப்பதைக் கவனித்தேன். இரவு நாடகத்தை முடித்துவிட்டு, அதிகாலையில் நல்லூர் போகலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் நாடகம் முடியும்போது நள்ளிரவு ஒரு மணி. அந்த நேரத்திலும் சுமார் 100 பேர் நாடகம் பார்த்தார்கள். நாங்கள் சுமார் இரண்டு மணிக்கு புரிசை கிராமத்திலேயே ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கப் போனோம்.

நல்லூர் ஆற்காடு அருகே இருக்கும் கலவை என்ற சிறு நகரை ஒட்டிய கிராமம். நல்லூரை அடைந்ததும் எங்கே யாரிடம் என்ன சொல்லி எதை விசாரிப்பது என்று எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அந்த ஊரில் எங்கள் குடும்பத்துக்கு நிலம், வீடு எதுவும் இல்லை. உறவினர்கள் யாரும் இல்லை. என்னிடம் இருந்த இரண்டு தகவல்களில் ஒன்றால் எந்தப் பயனும் இல்லை.

என் தாத்தா முனுசாமி அந்த ஊரின் முன்சீப்பாக இருந்தவர். அடுத்து என் அப்பாவும் அந்தப் பரம்பரை முன்சீப் வேலையை ஓரிரு வருடம் பார்த்துவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டார். அப்பா ஊரை விட்டு வந்த வருடம் 1927! இன்னொரு தகவல் அப்பாவின் பங்காளி சகோதர உறவினரான நல்லூர் சோமசுந்தரம் என்பவர், விடுதலைப் போராட்ட வீரர் என்பதாகும்.

முதலில் ஒரு வீட்டு வாசலில் கண்ணில் பட்டவரிடம் கேட்டேன். அவர் எல்லாத் தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார். அவர் பெயர் முனுசாமி! பஞ்சாயத்து அலுவலக ஊழியர். சோமசுந்தரத்தின் வீடு இன்னும் இருப்பதாகவும் அவரது குடும்ப வாரிசுகள், உறவினர்கள் பலர் ஊருடன் தொடர்பில் இருப்பதாகவும் சொன்னார். ஊரில் இருக்கும் பழைய சிவன் கோயிலை அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருப்பதாகவும் சொல்லி என்னை அந்த சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று காட்டினார். சோமசுந்தரத்தின் வீட்டையும் சுற்றிக் காட்டினார்.

கோயிலும் வீடும் என் ஆர்வத்துக்குரியன அல்ல. அந்த அக்ரஹாரத் தெருவின் முடிவில் மிகப் பெரிய மரம் ஒன்று. அதன் வயது சுமார் 200 வருடங்கள் என்றார்கள். அதுதான் சுவாரஸ்யமான கற்பனைகளைத் தூண்டியது. இருபது வயது வரை இங்கே இருந்த என் அப்பா, அந்த மரத்தின் கீழ் விளையாடியிருப்பாரா, நண்பர்களுடன் அரட்டை அடித்திருப்பாரா என்றெல்லாம் யோசித்தேன்.

இப்போது ஊரின் மக்கள்தொகை சுமார் இரண்டாயிரம். சரிபாதி காலனியில் தனியே வசிக்கும் தலித்துகள். அப்பா காலத்தில் இதில் சரிபாதிதான் மொத்த மக்கள்தொகையாக இருந்திருக்கலாம்.

ஊருக்குள் நுழைந்து பஞ்சாயத்து ஊழியரைச் சந்தித்தது முதல், ஊரை விட்டுத் திரும்பி கலவை, ஆற்காடு வழியே சென்னை வந்தபின்னரும் கூட, எனக்கு நிறைய செல்பேசி அழைப்புகள் வந்தபடி இருந்தன. எல்லாரும் நல்லூரிலிருந்து தொலைதூர மாநிலங்கள், வெளியூர்கள் சென்று குடியேறியவர்கள். பெரும்பாலோர் சிவன் கோயிலைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பல நூறு வருடங்கள் முந்தைய பழைய கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய பெருமையும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்தது.

எனக்கு ஆர்வமில்லாத விஷயம் அது. என்னை இன்னமும் உறுத்தும் கேள்வி ஏன், தங்கள் சொந்த ஊரை விட்டு, தொழில் நிமித்தம் வெளியூர் சென்று வாழ்வோர் பலரும் (எல்லோரும் அல்ல), ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்போது, முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். படிப்பு தான் அவர்களை உலகம் சுற்ற வைத்தது. அந்தப் படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை?

கலவை பகுதியில் ஆண்களை விடப் பெண்களே மக்கள் தொகையில் அதிகம். ஆனால் பெண்களின் எழுத்தறிவு 59 சதவிகிதம்தான். நல்லூர் கிராமத்தில் ஒரு நூலகத்தைப் பார்த்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஒவ்வொரு வேளையும் ஒரு உறவினர் வீட்டில் போய் சாப்பிட்டுப் படிக்க வேண்டிய வறுமையில் இருந்த என் அப்பாவையும் அடுத்து எங்களையும் வறுமையிலிருந்து விடுவித்தது படிப்புதான்.

சொந்த ஊர் என்பது சிலருக்கு நெகிழ்வான உணர்வுகளை எழுப்புகிறது. எனக்கும் செங்கற்பட்டு அப்படிப்பட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனக்கு அதுதான் சொந்த ஊர். ஆனால் ஒவ்வொரு முறை செங்கற்பட்டுக்குப் போகும்போதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவது பழைய நினைவுகள்தான். இப்போதைய ஊரைப் பார்க்கும்போது அதிர்ச்சியும் கோபமும் வருத்தமும்தான் வருகின்றன. ஊரே கடை வீதியாக மாறிவிட்டது. சாலைகள் எல்லாம் யுத்தம் நடந்த பூமி போல இருக்கின்றன.

நண்பர்களோடு மகிழ்ச்சியாகச் சென்று உலாவிய ரேடியோ மலை மர்ம தேசமாகி விட்டது. வேறு எந்த ஊரிலும் எனக்குத் தெரிந்து ஊருக்கு நடுவே சிறு குன்று கிடையாது. அதன் மீது ஒரு பூங்கா, நகராட்சியின் வானொலி எல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. அதனால்தான் ரேடியோ மலை என்று பெயர். அண்மை யில் சென்றபோது குன்றேறிப் பார்த்தேன். அங்கே இருந்த அச்சுறுத்தும் தோற்றத்தில் சிலர் முறைத்த முறைப்பில் திரும்பிவிட வேண்டியதாயிற்று.

நான் தவறாமல் மாலை நேரங்களில் நண்பர்களுடன் சடுகுடு விளையாடிய வேதாசலம் நகர் அழகேசனார் தெரு பூங்காவும் விளையாட்டுத் திடலும் சிதிலமடைந்து கிடந்தன. அதை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருந்தார்கள். வருடம் முழுவதும் விதவிதமான விளையாட்டு வீரர்களுடன் உயிர்த்துடிப்போடு காணப்பட்ட சீர்திருத்தப்பள்ளி விளையாட்டுத் திடல் பாழடைந்து ரயில்வேயின் கோடவுனாகக் கிடக்கிறது. குளவாய் ஏரியைத் தூர்த்து ப்ளாட் போடவேண்டியது மட்டும்தான் பாக்கி. அதன் ஆயக்கட்டு வயல்கள் எல்லாம் பைபாஸ் சாலையினால் ஏற்கெனவே ப்ளாட்டுகளாகிவிட்டன.

ஒரு காலத்தில் நமக்குப் பெருமகிழ்ச்சி தந்த பல விஷயங்கள் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவை ஆகிவிடுகின்றன. இளம் வயதில் தினசரி மணிக்கணக்கில் அரட்டை அடித்த நண்பனை முப்பது வருடம் கழித்து சந்திக்கும்போது, பழைய சந்தோஷங்களின் தொடர்ச்சியாக இப்போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின் இருவருக்கும் பேச எதுவுமில்லை. பகிர எதுவுமில்லை. கால ஓட்டத்தில் இருவரின் மதிப்பீடுகளும் வெவ்வேறு திசைகளில் போய்விட்டதே காரணம். மாறாக ஒரு வாரம் முன்பு அறிமுகமான ஒருவருடன் மணிக்கணக்கில் பேசுகிறோம். இருவருக்கும் இடையில் பொது அக்கறைக்குரியவை நிறையவே இருப்பதே காரணம்.

உறவுகளைச் சடங்குகளாகவோ, அல்லது வெறும் பழக்கத்தினாலோ அல்லது வேறு வழியில்லாமலோ தொடரும் போது அவை சுமையாக மாறுவதுதான் நிகழும்.

உறவாடக் கற்றுக்கொள்வோம் என்பதுதான் நான் அண்மையில் குடந்தையில் நடத்திய ஒரு பயிலரங்கத்தின் செய்தி. லயன்ஸ் க்ளப் இதை ஏற்பாடு செய்திருந்தது. லயன்ஸ் மாவட்டம் 324ஏவின் இப்போதைய ஆளுநர் ராமராஜன் இந்த வருடம் வித்தியாசமான சில பயிலரங்குகளை நான் நடத்தித் தரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். நானும் என் தோழி பத்மாவும் அவற்றைச் செய்து தரப் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

லயன்ஸ் உறுப்பினர்கள் தம்பதிகளாக வந்து பங்கேற்கும் பயிலரங்கம் இது. அரசியல், கல்வி, மீடியா, வணிகம் எல்லாமே கடும் சிக்கல்களுடன் இருக்கும் சூழலில், தனி வாழ்க்கையில் உறவுகளும் எவ்வளவு சிக்கலாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர்ந்து என்ன செய்யலாம் என்ற கவலையிலும் ஏக்கத்திலும் இருக்கிறார்கள். போலி கௌரவமும் அதிகாரப் பார்வையும்தான் பல உறவுகளை நாசப்படுத்துகின்றன. அன்பும் பரஸ்பர மதிப்பும் மட்டுமே நம்மை மீட்கும்.

இன்னொரு பயிலரங்கம் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு, பத்து வாழ்க்கைத் திறன்களை அறிமுகப்படுத்துவதற்கானது. மாணவர்கள் துடிப்பாக இருக்கிறார்கள். ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வசதிகளும் வாய்ப்புகளும் மட்டும் தான் குறைவாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பயிலரங்கங்கள் அவர்களுக்கு நீந்திக் கரையேறக் கிடைக்கும் இன்னொரு துரும்பு.

மயிலாடுதுறையில், நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நூறாண்டுகளுக்கு மேலாக நடக்கும் அந்தப் பள்ளியின் வரலாறு பிரமிப்பானது. எழுத்தாளர்கள் கல்கி, துமிலன், சா.கந்தசாமி, தி.மு.க. தலைவர் பேராசிரியர் அன்பழகன், இன்னும் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகள் பலர் படித்த பள்ளி இது என்று அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்படிப்பட்ட பள்ளியில் ஒரு நூலகம் இல்லையென்று தெரிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இருநூறு கோடி ரூபாயில் ஒரு கனவு நூலகத்தை, சென்னையில் அமைக்கிறோம். இருநூறு ஊர்களில், இரண்டாயிரம் பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. அல்லது இருந்தும் இல்லாத நிலை. மயிலாடுதுறை பள்ளியில் ஆயிரக் கணக்கில் நூல்கள் உள்ளன. ஆனால் நூலகர் பதவிக்கு ஆள் நியமிக்கப்படவில்லை. பள்ளிகளில் காவலர் (வாட்ச்மேன்), துப்புரவுப் பணியாளர் பதவிகளெல்லாம் கூட அரசால் நியமிக்கப்படாத நிலைதான் பல பள்ளிகளில் இருக்கின்றன. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தொகுப்பு ஊதியத்தில் சிலரை ஒரு சில ஊர்களில் நியமிக்கிறார்கள்.

ஒவ்வொரு பயணமும் நம் சூழல் எவ்வளவு சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கூடவே அதையெல்லாம் தாண்டி எழுந்து வருவதற்கான துடிப்போடும் ஆர்வத்தோடும் தேடலோடும் இன்னொரு தலைமுறை உருவாகிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பையும் இந்தப் பயணங்கள் எனக்குத் தருகின்றன.

முசிறியில் மாணவர் பயிலரங்கம் முடிவில் அன்றைய அனுபவத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டதும் அலை அலையாக எழுந்து வந்து முதல் முறை மைக் முன்னால் பேசிய அத்தனை முகங்களும் குரல்களும் மறக்க முடியாதவை.

நன்றி: கல்கி, ஓ-பக்கங்கள்

Read More...

சென்னை புத்தககாட்சி - ஜனவரி 5-17 வரை !

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் இன்று(18.11.11) நடைபெற்றது. ஜனவரி 5 முதல் 17வரை 35 வது சென்னை புத்தககாட்சியை அமைந்தகரை, செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்த விண்ணப்படிவம் நவம்பர் 28 முதல் பாபாசி அலுவலகத்தில் கிடைக்கும். - ஞாநி

தகவலுக்கு நன்றி ஞாநி சார் !

Read More...

Friday, November 18, 2011

Why this கொலைவெறி ...



செய்தி: பஸ், பால் விலை உயர்வு, மக்கள் அதிர்ச்சி, எதிர்கட்சிகள் எச்சரிக்கை!
மக்களும், எதிர்கட்சிகளும் இந்த வீடியோவை பார்க்க சிபாரிசு செய்கிறேன்...

Read More...

துபாயில் பிளைட்டை விட்ட சீமாச்சு

அன்புள்ள இட்லிவடைக்கு,
I missed my flight (this is not a spam mail.. read ahead) in Dubai and staying in Copthorne Hotel Room #3003 (only for Nov 18th). I am safe here and no problems. Have absolutely nothing to do for next 16 hours. Flight is at 2 AM. Any bloggers in Dubai, please get in touch with me.. We can talk about taking Tamil Blogging to adutha kattam, ilakkiya sinthanaigal and everything we blog about :)

A sight seeing trip around Dubai will be preferred option!!

--
Please feel free to call me if you need any information.
Thanks

Vassan Subramanian
Sr. Datawarehouse, BI Architect
781-696 5814(M)
732-729 0705 (H)
dwarchitect@gmail.com

இங்கே நல்ல மழை, பஸ், பால் கட்டணம் வேற ஏறிவிட்டது...பிளைட்டை விட்டது நல்லது தான்.

Read More...

Thursday, November 17, 2011

இலவச கட்டண உயர்வு




தமிழக அரசு ஷெல்லுக்குள் போகுதோ?

Read More...

Friday, November 11, 2011

11.11.11



எவ்வளவோ Zero's பார்த்துட்டோம். இதைப் பார்க்க மாட்டோமா..?

Read More...

Thursday, November 10, 2011

சென்னை புத்தகக்கண்காட்சி இல்லையா ? - எக்ஸ்க்ளூசிவ்

நேற்று சவேரா ஹோட்டலுக்கு போனேன். உள்ளே 'சூடா பஜ்ஜி' என்ற போர்டுக்கு பக்கம் ப்ராடிஜி டி ஷர்ட் போட்ட ஒருத்தரை பார்க்க முடிந்தது.
எதாவது காது குத்துவிழாவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்
மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தேன்
"எங்கே பத்ரி"
"சரக்கு மாஸ்டர் வரலையா ? "
"அவருக்கு ஆபீஸில் ஏகப்பட்ட வேலை எப்போதும் ஜி.டாக்கில் இருப்பார்" என்றார்
"பத்ரி வரலை,சரக்கு வரலை நீங்க எதற்கு வந்தீங்க" என்ற கேள்வியை கேட்கலாமா என்று நினைக்க
"இன்னும் கொஞ்ச நேரத்துல பபாஸி எலக்ஷன் நடக்க போவுது இங்கே" என்றார் ப்ராடிஜி டி.ஷர்ட்.

சரி பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் என்று பல தேர்தலை பார்த்துவிட்ட நமக்கு இந்த தேர்தலையும் ஒரு முறை பார்த்துவிடலாமே என்று உள்ளே பேசாமல் போய் கடைசி சீட்டில் உட்கார்ந்தேன். பக்கத்துல இருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். பபாஸி தேர்தல் என்று ஒரு அறிவுப்பு கூட இல்லையே ஏன் ? காதும் காதும் வைத்த மாதிரி நடத்துறாங்க ?

மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு "நீங்க எந்த பதிப்பகம்?" என்றார். நைசாக அந்த கேள்வியை சாய்ஸுக்கு விட்டுவிட்டு தேர்தல் நடத்த அய்யர் மாதிரி யாராவது வருவாங்களா ? என்று பதில் கேள்வி கேட்டேன்.

"அட நீங்க வேற இந்த வருஷம் புக் ஃபேர் நடக்காதுன்றாங்க" என்றார்.

"என்ன நீங்க சொல்லுவது நிஜமா ?" என்று கேட்டு முடிப்பதற்குள் அவர் தடையில்லாமல் பேச ஆரம்பித்தார் ....

"வழக்கமா புக் ஃபேர் நடத்துற இடத்தை வாடகைக்கு தரமாட்டேன்னு சொல்றாங்களாம். அதனால சிலர் இந்த வருஷம் புத்தகக் கண்காட்சி நடக்காதுன்னுதான் சொல்றாங்க வேற இடம் பார்த்தாலும் அது சரியா வராதுன்னு ஃபீல் பண்றாங்க இனிமே இடம் பார்த்து அரங்குகள் பிரிச்சு வாட்கை கொடுத்து வாங்கி
பந்தல் போட்டு, டாய்லட வசதி(?) செய்துகொடுத்து... வாய்ப்பே இல்லைன்றாங்க"

"அம்மாவோட எஃபெக்ட் ஏதாவது... ?

"அவங்களோட பங்களிப்பு இதுல இருக்கலாம் என்று சிலருக்கு சந்தேகம் இருக்கு ஆனால் அம்மா இதுல எல்லாம் இண்ட்ரஸ்டா இருக்க வாய்ப்பே இல்லைன்னும் சொல்றாங்க"

"ஏங்க புத்தகக் கண்காட்சி நடக்கலைன்னா அப்ப எதுக்கு இந்த தேர்தல் ?"

"ஆமாங்க அது தான் இப்ப ஹாட் டாப்பிக். பபாசின்னு ஒண்ணு எதுக்கு இருக்கணும்னு பதிப்பாளர்களுக்குள்ள பேச்சு. இவங்க நடத்துற மதுரை புக் ஃபேர் கொஞ்சம் சுமார் திருச்சில நடத்துறதே இல்லை கோவைலயும் நடத்துறது இல்லை ஈரோடு மட்டும் ஓகே, அதுவும் தனிப்பட்ட ஒருத்தர் முயற்சியால"

"பபாசி புக் ஃபேர் நடத்தமுடியலைன்றது தன்மான தமிழனுக்கு எவ்வளவு கேவலம்!"
"ஏங்க நீங்க எந்த பதிப்பகம் ?"
"அதைவிடுங்க நீங்க கண்டினுயூ பண்ணுங்க"
"இப்ப பாருங்க இந்த வருடம் எலெக்‌ஷன் போன முறை (ரெண்டு வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும்) கனஜோரா நடந்தது ஒரே நோட்டிஸ் மயம் அது இதுன்னு ஆடம்பரமா ஆனா இந்த தடவை ரொம்ப கமுக்கமா ரகசியமா நடக்குது. அதுவும் ஒரே டீம் ஆளுங்க ஜெயிச்சு வந்துட்டாங்க போன டீம்தான் இந்த தடவையும் தலைவர் நிக்க விரும்பாததால வேற ஒருத்தர் தலைவர் ஆனா இத்தனை நடந்தும் என்ன புண்னியம்! சென்னை புக் ஃபேர் நடக்கலைன்னா இவங்க எல்லாருமே வேஸ்ட்னு அர்த்தம்"

"கலைஞர் ஆட்சியாக இருந்தால் இது நடந்திருக்காது இல்லையா ?"

"கருணாநிதி ஆட்சில இருந்தப்ப அவருக்கு ரொம்ப ஜால்ரா போட்டுட்டாங்க கிட்டத்தட்ட அவங்க எம் எல் ஏ மாதிரி கை கட்டி வாய் பொத்திதான் நின்னாங்க அவர்கிட்ட இப்ப இந்த அம்மா ஜெயிச்சதும் இந்த பபாஸிக்கு என்ன பண்றதுன்னே தெரியலை அவரை எதாவது செண்டிமெண்ட்டா பேசி ஏமாத்திடலாம் இந்த அம்மாகிட்ட அதுவும் நடக்காதுன்னு கலங்கி போய் இருக்காங்க.

"ஆமாம் அண்ணா நூலகத்தையே மாத்திட்டாங்க"

"பொதுவா கலைஞர் ஆட்சில நூலக ஆர்டர் வரும், இந்த அம்மா ஆட்சில வராதது தான் வரலாறு ஆனா என்னமோ தெரியலை, கருணாநிதி ஆட்சியிலயும் இந்த தட்வை கடந்த 2 வருஷமா ஆர்டரே வல்லை இனிமே இந்தம்மா வந்தா தரப்போகுது, அதுலயும் இந்த பபாஸி கருணாநிதிக்கு அந்த ஜால்ரா அடிச்சப்புறம் இந்தம்மா எப்படி ஆர்டர் தரும்னு ஒரே கவலை எல்லாத்துக்கும். அதுலயும் சிலருக்கு சந்தோஷம். ஏன்னா கருணாநிந்தியோட ஆசியோட பலர் பலவிதமா அநியாயமா ஆர்டர் வாங்கினாங்க. இப்ப அவங்களுக்கும் கிடைக்காதுன்னு பலர் சந்தோஷபப்டறாங்க.

"சரி நீங்க எந்த பதிப்பகம் ? "
"நீங்க எந்த பதிப்பகம் என்று சொல்லுங்க" என்று நான் எதிர் கேள்வி கேட்க அவர் உடனே ஓடிவிட்டார்.
"எங்கே இவ்வளவு அவசரமா ஓடறீங்க ..."
"விஷயமே தெரியாதா வெட்டோத்தி சுந்தரம் படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ண..." என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்.


அவருக்கும், புத்தகக்கண்காட்சி நடக்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.

Read More...

Wednesday, November 09, 2011

அப்படியா செய்திகள் ....

நேற்று வந்த சில அப்படியா செய்திகள்....

1. ஜாமினில் வெளியே வரும் எடியூரப்பாவை மீண்டும் முதல்வர் ஆக்க பாஜக மேலிட தலைவர்கள் சிலர் ஓசையின்றி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ரதயாத்திரை தான் முடிந்துவிட்டதே!

2. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலாநிதி மாறன் குடும்பத்துடன் தனி விமானத்தில் ஃபின்லாந்து சென்றுள்ளார். இந்த விஷம் சிபிஐக்கு கூட தெரியாதாம். ஆங்கில பத்திரிக்கைகள் இந்த செய்தியை கண்டுக்கொள்ளவில்லை.என்ன குளிர் இருந்து என்ன? அவருக்குதான் சிபிஐ குடுக்கும் சப்போர்டில் குளிர் விட்டுப் போயிருக்குமே!


3. “சார்க்” மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று மாலத்தீவு பயணம்.

துக்ளக் கேள்வி பதில் ஒன்று...
கே : ‘தான் விரைவில் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதால், அச்சமயம் மத்திய அரசின் பணிகளை ஒருங்கிணைக்கவும், அவசரமான முடிவுகளை எடுப்பதற்கும், அரசியல் விவகாரங்களுக்கான மந்திரிசபைக் குழுவைக் கூட்டவும் பிரணாப் முகர்ஜி அல்லது ப.சிதம்பரம் பொறுப்பேற்க வேண்டும்’ – என்று பிரதமர் உத்திரவு பிறப்பித்துள்ளது பற்றி?

ப : ‘பிரணாப் முகர்ஜி அல்லது ப.சிதம்பரம்’ என்று பிரதமர் கூறினாரா? இல்லாவிட்டால் ‘ப.சிதம்பரம் அல்லது பிரணாப் முகர்ஜி’ என்று கூறினாரா? இந்த விவரம் சரியாகத் தெரியவில்லை. இதில் யார் பெயரை பிரதமர் முதலில் குறிப்பிட்டுள்ளாரோ அவர் பக்கம்தான் அவர் நிற்கிறார் – என்று மற்றவர் சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறதே? இதை எப்படி பிரதமர் தீர்க்கப் போகிறார்? ‘பிபரசிணாதப்ம்முபகரர்ம்ஜி கவனித்துக் கொள்வார்கள்’ என்று வேண்டுமானால் சொல்லிப் பார்க்கலாம். அது ஓரளவு சமாதானமாக இருக்கும்.

4. சொத்துக்குவிப்பு வழக்கு - பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை. மீண்டும் பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா 22-ந்தேதி ஆஜராக உத்தரவு. அதுவரை நாம் எல்லோரும் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! " என்ற பாட்டை கேட்டுக்கொண்டு இருக்கலாம்.

5. தவறு செய்தவர்களைப் பிடிக்க போலிஸ் இருக்கு. அந்தப் போலிசுக்கு ஒரு அமைச்சர் இருப்பார். சமயத்துல முதலமைச்சரே இதை கவனிப்பார். ஆனால் போலிஸ் பிடிச்ச ஆட்களை போலி-ஸ்டேஷனுக்கு ஒரு குண்டர் படையோடப் போயி விடுவிச்சது இந்த உலகத்துல முதல் முறையா மேற்கு வங்காளத்தில் நடந்து இருக்கு. நல்ல பிரசிடென்ஸ் நன்றி மம்தா

Read More...

Tuesday, November 08, 2011

குப்பையில் கிடைத்தது ...

7 ஆம் அறிவு படத்தில் சூர்யா சொல்லும் வசனம் "ஒருத்தவங்களப் பத்தி கெட்ட விஷயங்களை தெரிஞ்சுக்க குப்பைக் கூடை யைத் தோண்டு" என்பார். ஆனால் திரு.நாகராஜன் தன்னுடைய 80 வயதில் "திருநெல்வேலி"யின்"குப்பை" என்ற பிளாக் ஆரம்பித்து சில நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கொள்கிறார். அவர் பதிவில் படித்த தானம் என்ற பதிவை இங்கே மீண்டும் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

தானம்
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் தானம் என்றால் (பிறருக்கு நன்மை செய்யும் நோக்கத்தில்) தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும்
எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல் என்று கூறுகிறது. தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் முதல் செய்யுள் –
ஒளவையாரின் ‘ஆத்திசூடி’. சுலபமானது. எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியது.
அருமையான நீதி போதனைகள் அடங்கியது.அறம் செய விரும்பு. (அறம் எனப்படும் நல்ல
உதவிகளைச் செய்ய விரும்பு) இயல்வது கரவேல் (உன்னால் கொடுக்க
இயன்றதை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்). ஈவது விலக்கேல் (தானம் செய்வதை நிறுத்தாதே). ஐயம் இட்டு உண். (ஏழை எளியவர்களுக்கு
தானம் செய்து உண் (சாப்பிடு). தானமது விரும்பு (தன்னார்வமாக நன்கொடை கொடுப்பதை விரும்பு)

ஆக, குழந்தைகளுக்குச் சொல்லும் முதல் நீதிப் பாடமே தானத்தைப் பற்றித்தான்.
அப்படியிருந்தும் குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது ஏன் இதை மறந்துவிடுகிறார்கள்!
சிந்தியுங்கள். விடை கிடைத்தால் சொல்லுங்கள்.

தானத்தைப் பற்றியும் தானத்தினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பேசாத, எழுதாத, மதங்களோ மதகுருமார்களோ இல்லை. எத்தனையோ கருத்துக்கள், கதைகள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.

தைத்ரேய உபநிஷத் சொல்கிறது:

“நம்பிக்கையோடு கொடு;
நம்பிக்கையில்லாமல் கொடுக்காதே;
நிறையக் கொடு; அடக்கத்தோடும், கருணையோடும்,
உணர்ச்சியோடும் கொடு.”

வள்ளுவர் கூற்று:

வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (23:1)

ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பதுதான்
உண்மையான தானம். மற்றவை எல்லாம்
செய்த வேலைக்கு நன்றிக் கடனாகக் கொடுப்பது.

கீதையில் 20க்கும் மேலான இடங்களில்
தானத்தின் சிறப்பைக் காண முடிகிறது.

‘ஆறில் ஒரு பங்கு’ என்ற சொற்றொடர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவனுடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைத்தான் தனக்கென்று வைத்துக்கொள்ள வேண்டும். மீதியில் ஒரு பங்கு பெற்றோர்களுக்கு,
இரண்டாவது பங்கு பித்ருக்களுக்கு (இறந்து போனவர்கள் நினைவாக),
மூன்றாவது பங்கு சமூகத்திற்கு (community), நான்காவது பங்கு அரசருக்கு அதாவது அரசாங்கத்திற்கு வரியாக (16% வரி எவ்வளவு நியாயமானது. கறுப்புப் பணத்திற்கு அவசியம் இருந்திருக்காதே). கடைசிப் பங்கு தான தர்மங்களுக்கு என்று பழைய நூல்கள் சொல்கின்றன. தானம் என்னென்ன? எது உயர்ந்த தானம்?
யாருக்குக் கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுக்க வேண்டும்? தானத்தில் எத்தனையோ வகை உண்டு.

பொருள் தானம், வஸ்த்ர தானம் (உடை)
அன்ன தானம் (சாப்பாடு), பூதானம் (நிலம்),
கன்னிகா தானம் (கல்யாணம்), வித்யா தானம் (படிப்பு),
கோ தானம் (பசு). இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் எது உயர்ந்தது?
எல்லா தானங்களிலும் மிகச் சிறந்த தானம் அன்ன தானம்தான். ஏன்?

மற்ற எல்லா வித தானங்களிலும் தானம் பெறுபவருக்கு ‘போதும்’ என்ற திருப்தி
ஏற்படுவதில்லை. 10 ரூபாய் கொடுத்தால், 20 ரூபாய் கொடுத்திருக்கக் கூடாதா என்ற நினைப்பு வரும். ஆடைகள் கொடுத்தால், இதைவிட நல்ல ஆடைகள்
தரக் கூடாதா என்று நினைப்பார்கள். இதே மாதிரி மற்ற தானங்களிலும் ஏற்படும்.
ஆனால் ஒருவருக்குச் சாப்பாடு போட்டால், அவர் வயிறு நிறைந்துவிட்ட பிறகு மேலே ஒரு கரண்டி அன்னம் அளித்தாலும் கையை வைத்துத் தடுத்து “போதும், போதும்” என்று கூறுவார்கள். மேலும் வாயார வாழ்த்தவும் செய்வார்கள்.

எது மேலான தானம்?
எதனால் அதிக நன்மை கிடைக்கும்?

தானம் பெறத் தக்கவனை அணுகி தானம் செய்தல் மேலானது. உத்தமம். ஒருவரை அழைத்து தானம்செய்வது மத்திமம். யாசிப்பவனுக்கு தானம்செய்வது, மட்டமானது. சேவைசெய்தவனுக்கு கொடுத்த தானமோ பயனற்றது.

தானம் பெறத் தக்கவரின் இருப்பிடம் சென்று யாதொரு தானம் டுக்கப்படுகிறதோ
அது அளவற்ற பயனைத் தரும்.


மைமோனிடீஸ் (Maimonidies – வைத்தியர், தத்துவ ஞானி (1135 – 1204) யூத மதத்தைச் சேர்ந்தவர்) ஒரு கட்டுரையில் தானத்தின் எட்டு படிகளைப்
பற்றி விளக்குகிறார். தானத்தின் எட்டு படிகள் — கீழேயிருந்து

முதல் படி -மனத்திற்குப் பிடிக்காமலோ, மன வருத்தத்தோடோ கொடுப்பது. ‘
இந்த தானம் கையால் கொடுக்கும் தானம். இருதயத்திலிருந்து வரும் தானம் அல்ல.’

2ஆவது படி -சந்தோஷத்தோடு, ஆனால் கேட்பவர் தேவைக்குக்குறைவாகக்
கொடுக்கும் தானம்.

3ஆவது படி -சந்தோஷமாகவும், தேவையைப் பூர்த்திசெய்யும் வண்ணம ஆனால் கேட்ட பிறகு கொடுக்கும் தானம்.

4ஆவது படி -சந்தோஷமாகவும், கேட்காமலேயே தேவைக்கேற்ற தானத்தை தானம் பெறுபவர் கையில் கொடுத்து அவரை வெட்கப்படும்படி
செய்யும் தானம்.

5ஆவது படி- யாருக்காக தானம் கொடுக்கப்பட்டது என்ற தெரியாமலேயே தானம் செய்வது. முன்னோர்களில் சிலர் தங்கள் வீட்டு முற்றங்களில்
பண மூட்டைகளை தொங்கவிடுவார்களாம். பணம் தேவையுள்ளவர்கள் கொடுத்தவருக்குத் தெரியாமலேயே எடுத்துச் செல்வார்களாம்.

6ஆவது படி -தானம் கொடுத்தவரின் பெயர் விளம்பரப்படுத்தாமலேயே கொடுக்கப்படும் தானம். முந்தைய காலத்தில் சில நல்லவர்கள்
யாருக்கு உதவி தேவையோ அவர்கள் வீட்டுக்கு தானப் பொருள்களை அனுப்புவது உண்டு. யார் அனுப்பினர் என்பது பெறுபவருக்குத் தெரியாது.

7ஆவது படி -கொடுப்பவருக்கும் யாருக்கு கொடுக்கிறோம் என்று தெரியாது. வாங்கியவருக்கும் யாரிடமிருந்து வந்தது என்றுதெரியாது. இந்த தானம் சிறந்தது.
ஒரு பொது இடத்தில் (உதாரணம் கோவிலில் ஒரு அறை)
தானப் பொருள் கொடுக்கப்படும். வேண்டியவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றபட
விநியோகிக்கப்படும்.

8ஆவது படி -எல்லாவற்றிற்க்கும் மேலான உயர்ந்த தானம், ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகள். “Do not give a person a fish a day. But teach him how to fish.”
“ஒரு மனிதனுக்கு தினந்தோறும் ஒரு மீனை தானமாகக் கொடுக்காதே. அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்துச் சொந்தக் காலில் நிற்க வை”
என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தேவை என்று வருகிறவர்களுக்கு ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ கற்றுக்கொள்ள வசதிகள் செய்வது
மிகப் பெரிய தானம். இந்த தானம்தான் அவர்களை மற்றவர்களிடம்
கை ஏந்தி நிற்காத நல்ல தன்மானமுள்ள மனிதர்களாக மாற்றும்.

இப்படி வெவ்வேறு விதமான தானங்கள் செய்து வழிகாட்டிகளாக இருந்த எத்தனையோ மகான்கள், பெரியோர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய கதைகள் அடிக்கடி சொல்லப்படுகின்றன.

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, நள்ளி, சிபி சக்ரவர்த்தி, திலீபன், கர்ணன்…
இப்படி எத்தனையோ பெரியவர்களின் கதைகள் கேட்டிருப்பீர்கள்.

எனக்குப் பிடித்தக் கதைகள் இரண்டு.

ஒன்று மகாபாரதத்தில் வருகிறது. ‘தரும புத்திரர்களும் அணிலும்’ என்ற கதை.
மகாபாரதத்தில் கடைசிப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
எல்லோருக்கும் தெரிந்த கதை. கதையைப் படிக்க விரும்புகிறவர்கள் ராஜாஜி எழுதிய ‘வியாசர் விருந்து” புத்தகத்தையோ அல்லது அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Mahabharata’ புத்தகத்தையோ (A Pound of Flour) படிக்கவும்

நான் சொல்லப்போகும் கதை அவ்வளவாகப் (popular) பிரபலமாகாத கதை.
ரந்திதேவன் என்ற ஒரு அரசனின் கதை. பாகவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மகாத்மா காந்திக்கு வழிகாட்டியாக இருந்த ஒரு கதை. ஒரு சமயம் ரந்திதேவனின் நாடு கடும் பஞ்சத்தால் தாக்கப்பட்டது. அரசன் தன்னுடைய சொத்தையெல்லாம் மக்களுடைய பசியையும், கஷ்டங்களையும் தீர்க்கச் செலவிட்டான்.மக்களுடைய கஷ்டங்களை நினைத்து வருந்தி 48 நாள் உண்ணாவிரதம் இருந்தான்.
தண்ணீர்கூடக் குடிக்கவில்லை.

பஞ்சம் தீர்ந்து மக்களுக்கு உணவு கிடைக்கிறது என்ற நிலை ஏற்பட்டவுடன், 49ஆம் நாள் உண்ணாவிரதத்தை முடித்துவிடத் தீர்மானித்தான். ஒரு கவளம் உணவும் ஒரு கோப்பை தண்ணீரும் அவன் முன் வைக்கப்பட்டன. ரந்திதேவன் சாப்பிட ஆரம்பிக்க, அந்த சமயம் ஒரு பிராமணன் வந்து “ஐயா, பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றான். அரசனும் ஒரு பகுதி அன்னத்தை அவனுக்குக் கொடுத்தான். மறுபடி சாப்பிட ஆரம்பிக்கும் சமயம், ஒரு ஏழை விவசாயி வந்து “பசி” என்று முறையிட்டான் அவனுக்கும் அரசன் ஒரு பகுதியைக் கொடுத்தான்.
மீதியைச் சாப்பிட முயற்சி செய்தபோது ஒரு தாழ்ந்த குடிமகன் தன்னுடைய நாய்களோடு வந்து “உணவு வேண்டும்” என்று கேட்டான். மீதியுள்ள உணவை அவனுக்கும் அவன் நாய்களுக்கும் கொடுத்துவிட்டுத் தண்ணீரையாவது குடிக்கலாம் என்று நினைத்த போது ஒரு புலையன் “ஐயா, தாகமாக இருக்கிறது.
குடிக்கத் தண்ணீர் தாருங்கள்” என்று கேட்டான். அரசன் தயங்காமல் அந்தத் தண்ணீரை அந்தப் புலையனுக்குக் கொடுத்தான். அப்போது ரந்திதேவன் சொன்ன இரண்டு பாட்டுகள் மிகவும் உயர்ந்த கருத்துகள் கொண்டவை.
முதலாவது நான் கடவுளிடமிருந்து மோட்சத்தயோ அஷ்டமா சித்திகளையோ பெற ஆசைப்படவில்லை. மறுபடி பிறவாத நிலையையும் ஆசைப்படவில்லை.
என்னுடைய ஒரே ஆசை மக்களின் மனத்தில் இடம்பெற்று அவர்கள் சுக துக்கங்களில் பங்குகொண்டு அவர்களுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்.

இரண்டாவது. ‘தாகம்’ என்று கேட்டு வந்தவனுக்குத் தண்ணீர் கொடுத்த மாத்திரத்தில், என்னுடைய பசி, தாகம், களைப்பு, சோர்வு, வருத்தம், ஏமாற்றம்
எல்லாம் நொடிப்பொழுதில் மறைந்துவிட்டன. எப்பேர்ப்பட்ட தியாகம்?
கதை முடிவு —சுபம். மும்மூர்த்திகளும் அவனுக்குக் காட்சி அளித்து அவனை வாழ்த்தினார்கள்.

நிறையவே தானத்தைப் பற்றி எழுதியாயிற்று.

நாம் எல்லோரும் நம்மால் முடிந்த
தானத்தை செய்ய முயற்சிப்போம்.

கடைசியாக, கபீர்தாஸின் ஒரு வாக்கியம்:

நீங்கள் இந்த உலகத்தில் தோன்றும்போதுhttp://www.blogger.com/img/blank.gif
கைகளை இறுக்கி மூடிக்கொண்டு வந்தீர்கள்.
நீங்கள் உலகத்தை விட்டுப் போகும் போது
திறந்த கைகளோடு போகப்போகிறீர்கள்.
நீங்கள் உயிரோடு இருக்கும் போது
கைகளை நன்றாகத் திறந்து
மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுங்கள்.

குப்பையான இட்லிவடையில் ஒரு மாறுதலுக்கு குப்பை பதிவு!. எனக்கும் வயசாகிறது இல்லையா?

மேலும் குப்பையை கிளற... இங்கே செல்லுங்கள் http://tsnagarajan.blogspot.com/

Read More...