பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 22, 2010

பரப்பிலக்கியத்தை விமரிசித்தல் குறித்து ...

‘மடித்துச் செருகியிருந்த கோமணத்திலிருந்து தூமை வாசனை அடித்தது’ என்ற ஒற்றை
வரியை நான் படிக்க, ‘யார், நம்ம தோமா கண்ணகி எழுதியிருக்காளா’ என்று எனக்காகத்
தேநீர் கலக்க உள்ளே சென்ற கரியதிருமேனி அடுக்களையிலிருந்து மெல்லக் கேட்டார்.


அது இன்னும் அவர் படிக்காத புத்தகம். சமீபத்திய வெளியீடு. அதை நான் கொண்டு
வந்திருப்பதையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ‘தூமை’ என்ற ஒற்றைச்
சொல்லை வைத்து தோமா கண்ணகியைக் கண்டுபிடித்தாரோ என்று எண்ணியிருந்தேன்.




கோப்பையுடன் திரும்பிய கரிய திருமேனி சொன்னார். ‘இல்லை, இந்தச் சொல்லை
செவ்வியல் இலக்கியத்தில் பரவலாகப் பயன்படுத்துகிறார்களே. ஆனால் பொதுவாய் அதைச்
சொல்லும்போது கூடவே நெடி அல்லது வாடை என்பார்கள். கண்ணகி மட்டும்தான் வாசனை
என்று எழுதுவார்’ என்றார் சிரித்தபடி.


நான் கரியதிருமேனியிடம் மனம் வெதும்பிச் சொன்னேன். ’அய்யா, நானும் எவ்வளவோ
செவ்வியல் புத்தகங்களைப் படித்துப் பார்த்துவிட்டேன். ஆனால் இந்தப் ப்ரயோகங்கள்
எல்லாம் பிடிபடவே மாட்டேங்குது. சமயத்தில் இந்த தூமை சாண்டா இத்யாதி எல்லாம்
என்ன வித்தியாசம்னு கூட சரியா தெரிய மாட்டேங்குது. என்னய்யா பண்றது?’


கரியதிருமேனி கொஞ்சநேரம் யோசித்தபின் சொன்னார். ‘நீங்க கவலைப்பட வேண்டாம்னுதான்
படுது. இந்த அம்பது வயசுல செவ்விலக்கியம் புரிஞ்ச அய்யர நான் பாத்ததே இல்ல’.


ஆக இன்றுவரை அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறேன். செவ்விலக்கிய ஆர்வம் உண்டு.
எப்போதுமே தேடிப் படிக்கிறேன். கரியதிருமேனி போன்ற விற்பன்னர்களிடம் இணையத்தில்
விவாதம் கூட செய்ய முயல்கிறேன். ஆனால் ஒன்றுமே ஏறுவதில்லை.


இலக்கிய விமரிசனத்துக்கும் எனக்கும் அதிக தூரம். விவாதங்கள் எனக்குப் புரிவதும்
இல்லை. என் பார்வையில் எல்லா எழுத்துமே நன்றாகத்தான் இருக்கின்றன. சில
படைப்புகள் இன்னும் நன்றாக இருக்கின்றன. ஏன் சிலர் எழுத்து நன்றாக இல்லை, சில
நன்றாக இருக்கின்றன என்கிறார்கள் என்ற மாபெரும் மர்மம் எனக்கு இன்னமும்
விளங்கவில்லை.


ஒருமுறை தமிழ் இலக்கியத்தை மிக நன்றாக அறிந்த நாலைந்து நண்பர்களுடன் அறைக்குள்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சிறந்த படைப்புகளை அவர்கள் நினைவை சலித்துச்
சலித்து பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். நான் சுஜாதாவின் ‘நிலாநிழல்’ என்ற கதையை
எனக்குப் பிடித்த படைப்பாகச் சொன்னேன். சட்டென்று என் நண்பர் அது சரியில்லை.பல
கொழப்பங்கள் அதிலே இருக்கு. ஒரு தந்திரம்தான் அது’ என்று சொல்லிவிட்டு அதே
எழுத்தாளரின் ’நகரம்’ என்ற இன்னொரு கதை ஒன்றுதான் ‘சரியான சமூகப்ரக்ஞை கொண்ட
செவ்விலக்கியத்துக்குக் கொஞ்சம் அருகில் வரும் படைப்பு’ என்றார்.


அது எனக்கு குழப்பத்தை அளித்தது. இப்படி விமர்சனபூர்வமாக தீர்மானிப்பதற்கு
இவர்களுக்கு இருக்கும் அளவுகோல் என்பது தமிழ் மரபிலக்கியத்தால்
உருவாக்கப்பட்டது. ஆனால் அதை வைத்து அந்தப்படைப்பை அளக்க முடியுமா?
பரப்பிலக்கியத்தை அளக்க செவ்விலக்கிய அளவுகோல்கள் பொருந்துமா?


எனக்கு அக்கதை மிக அந்தரங்கமானது. ஒன்று அதில் என் இளமை நினைவுகள் கலந்துள்ளன.
கிரிக்கெட்டும் முதல்காதலும் என்னை அலைக்கழித்திருந்த காலகட்டத்தில் ஓர்
அற்புதமான தருணத்தில் அதைப் படித்தேன். நான்குநாட்களில் கிட்டத்தட்ட மனப்பாடம்
அளவுக்குப் படித்தேன். நிலாநிழலில் வரும் முகுந்துடன் என்னை ஒப்பிட்டு என்னை
மேலும் செம்மைப்படுத்திக் கொண்டேன். அது தந்த தெம்பில் சின்னதாய் ஒரு கவிதை
எழுதி என் காதலியிடம் தந்தேன்.


'இருக்கும் சக்தியெல்லாம் கையில் திரட்டி இன்ஸ்விங்கர் போட எதிரே ஸ்டம்புகள்
எகிறிச் சுழல்கையில் உன்னை உன் இன்மையை பெரிதும் உணர்கிறேன்’ என்று அவள்
பார்க்க வராத ஒரு மேட்ச் முடிந்தவுடன் எழுதிக் கொடுத்தேன். என் காதல் ்கதை
ஒருபுறம் கிடக்கட்டும்.


பரப்பிலக்கியம் என்று சொல்லி இந்த அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் வெறும்
இலக்கணம் மூலம் அந்த அபாரமான கதையை மதிப்பிட முடியுமா என்ன?


பின்னர் ஒருமுறை கரியதிருமேனியிடம் கேட்டேன். ‘அது சுஜாதா சாரின் ஒரு
மாஸ்டர்பீஸ். ஆனால் செவ்விலக்கியத்தில் அதைச் சேர்ப்பது கஷ்டம் ’ என்றார்.
மரபிலக்கணத்தைக்கொண்டு பரப்பிலக்கியத்தை அளப்பது அபாயகரமானது என நான் உள்ளூர
உறுதிசெய்துகொண்டேன்.


செவ்வியல்கலையில் இக்கேள்விக்கே இடமில்லை. படைப்பின் வெகுஜனசெல்வாக்கு அங்கே
ஒரு பொருட்டே இல்லை. ஆனால் பரப்பிலக்கியத்தில் மக்களின் பங்கேற்பை
புறக்கணிக்கவே முடியாது. அதன் நோக்கமே மக்களைச் சென்றடைவதுதான். எது மேல்,
மக்கள் விரும்புவதா கலைநுட்பம் கொண்டதா? பரப்பிலக்கியத்தில் இந்தக்கேள்விக்கு
எளிய பதில்கள் இல்லை.


என்னைப் பொருத்தவரை சுஜாதாசாரின் வைரங்கள் ’காதர்’ அடிபட்டுச் சாகும்போது ஏதோ
என் தம்பி இறந்தது போல் அழுதிருக்கிறேன். 24ரூபாய்த்தீவு விஸ்வநாதனின் தங்கை
சிதைக்கப்பட்டு வீடு திரும்பி நடைபிணமாய் உட்கார்ந்திருப்பதைப் படித்து என்
வீட்டின் சோக நிகழ்வாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம்
செவ்விலக்கியவாதிகள் சொல்லும் பதில் ஒன்றுதான். சுஜாதா போன்றோரின் எழுத்துக்கள்
மேலோட்டமானவை. ஆழம் போக விரும்பாமல் அவசர உலகுக்காகப் படைக்கப்பட்டவை.


முடிவாய் ஒன்று சொல்ல விரும்புகிறேன். பரப்பிலக்கியத்தை நாம் நம் தனி ரசனையில்
இருந்து தொடங்கியே விவாதிக்க முடியும். ஒவ்வொரு பரப்பியக் கலைப்படைப்புக்கும்
அதற்கான அளவுகோல்களை தற்காலிகமாக உருவாக்கிக்கொண்டு முன்னகர வேண்டியிருக்கும்.
நாம் நம் அந்தரங்க மதிப்பீடுகளை முன்வைத்து புறவயமான விவாதத்தை
உருவாக்கவேண்டும். அந்த விவாதம் மூலம் மையமாக உருவாகி வரும் அளவுகோல்களே
பயனுள்ளவை.


நன்றி!

- குமரம்

29 Comments:

யுவா said...

இது ஒரு தரப்பு.
;-)

lok said...

Super...............

கௌதமன் said...

புரிகிறதுபோல பதிவு போடும்பொழுது, எனக்கு ட்விட்டரில் @kgg3399 என்று போட்டு ஒரு இணைப்பு அனுப்பவும். எனக்கும் எளக்கியத் தமிலுக்கும் ரொம்ப தூ ............ரம்!

Gaana Kabali said...

பரப்பிலக்கியம், பரப்பிசை என்றெல்லாம் என்னென்னவோ சொல்கிறீர்களே, நான் படித்த காலத்தில் தமிழ் இலக்கிய வரலாறு நூலில் இந்த மாதிரி வார்த்தைகளை பார்த்ததே இல்லையே.
அது என்ன பரப்பிலக்கியம், பரப்பிசை என்று யாராவது விளக்குவீர்களா?

Guru Prasath said...

@Yuva:

// இது ஒரு தரப்பு.
// ;-)

Super

Jegan Mogini said...

Pinni Pedal edutheetinga.. Idhu Parappilakkiya comment.
Pirithu meindhu vitteergal.. Idhu sevvilakkiya comment.

Anonymous said...

பரப்பிலக்கியம் என்றால் என்ன? செவ்விலக்கியம் என்றால் என்ன? சிலப்பதிகாரம் மணிமேகலை போன்று பாட புஸ்தகத்தில் படித்தது என்ன வகை இலக்கியம்? அவற்றுக்கும் எவற்றுக்கும் என்ன வித்தியாசம்?

இட்லி வடைக்கும் (இவ்வகை) இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு? வர வர தமிழே புரிய மாட்டேங்குது. என்ன நடக்குது சாமி?

V.P.Jaiganesh said...

sooper!!
shaji is a music critic whose criticism is beyond criticism. who appointed JeMO to do shaji defense in thamizh nadu? and what a pathetic defense it was, trying to laugh at genuine comments of sethupathi.
Shame on JeMo and offcourse shaaji's antics are beyond definitions of shame.

Mukhilvannan said...

நான் எங்கோ என்றோ படித்திருக்கிறேன். சிதம்பர ரகுநாதன் எழுதிய விமர்சனம் என்று நினைவுக்கு வருகிறது.
“இலக்கியத்தில் பத்தினி இலக்கியம் என்றோ பரத்தை இலக்கியம் என்றோ கிடையாது. இலக்கியம் என்றால் இலக்கியம்தான்”.
பரப்பிலக்கியம், செவ்விலக்கியம் என்பதெல்லாம் நவீன அறிவு’சீவி’களின் இலக்கியப் பம்மாத்து.
வழிப்போக்கன்

Anonymous said...

சுஜாதா என்ற மகத்தான ஆளுமை எட்டிய உச்சம், புகழ், வாசகர் வட்டம் இவற்றின்பால் கொண்ட பொறாமை, பொச்சரிப்பை அந்தப் புண்ணியவான் போய்சேர்ந்தபிறகு, அவ்வப்போது தன் கட்டுரைகளில் அவரைப் புகழ்வதுபோல் நாலுவரி எழுதிவிட்டு, ’அவர் எழுத்தில் ஆழமில்லை, அகலமில்லை, அது செவ்விலக்கியமில்லை, வவ்விலக்கியமில்லை’ என்று எழுதி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்த எழுத்தாளர் ஒருவருக்கு அவர் பாணியில் எழுதப்பட்ட கட்டுரை இது என்பது என் புரிதல். சரியா?

Anonymous said...

http://www.jeyamohan.in/?p=8221

கௌதமன் said...

doubt # n: பரப்பிசை என்பது pop music என்றால், pop corn என்பதை எப்படி சொல்வது?

Anonymous said...

doubt # n+1: Idly vadai popular blog என்பதன் தமிழாக்கம் இட்லிவடை பருப்பு பதிவா ?

Anonymous said...

The last paragraph makes me think it was written by JM himself!

தமிழ் பயணி said...

"அது நம்ம நிலா இல்லடா வேற யாரோ " எனும் இறுதி வரிகளில் தெருவில் விடப்பட்ட சிறுவனாய் உணர்ந்தேன்

Anonymous said...

(சுந்தர ராமசாமி கொஞ்சம்நேரம் யோசித்தபின் சொன்னார் "நீங்க கவலைப்படவேண்டாம்னுதான் படுது. இந்த எழுபது வயசுக்குள்ள சங்கீதம் தெரிஞ்ச நாயரை நான் பாத்ததே இல்லை")

’பரப்பிசை’ குறித்த ஜெயமோகன் கட்டுரை இப்படித் தொடங்குகிறது. இதிலிருக்கும் நுண்ணரசியலைப் பாருங்கள்.

முதலில் சுந்தரராமசாமி இப்படி பொத்தாம்பொதுவாய் ஒரு கருத்தை அதுவும் ’ஜாதிபுத்தி’ என்பதைப்போல் பொருள் கொள்ள வைக்கும் ஓர் அபத்தத்தை இவரிடம் சொல்லியிருப்பாரா என்பது முதலில் சந்தேகத்துக்குரியது. இதை அவர் உற்றார் உறவினர்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

இரண்டாவது அப்படி சுரா சொல்லியிருந்தாலும் அதைத் தனக்கு ஆறுதலாக எடுத்துக்கொண்டு சொன்னால் அது ஒரு கேணத்தனமான கருதுகோள். ஏனேன்றால் செவ்வியல் கலைகள் பலவற்றிலும் தேர்ந்த நாயர் மேனன்மார்கள் சுராவின் எழுபது வயதுக்குள் நிறையவே பிரபலமாய் இருந்திருக்கிறார்கள். மலபார் கோபாலன் நாயர், அவர் மகன் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், ஓமனக்குட்டி, அவர் மாணவி சின்னக்குயில் சித்ரா, ஸ்ரீலதா மேனன், கல்யாணி மேனன் என்று தமிழன் எனக்கே சட்டென்று ஐந்தாறு பெயர்கள் நினைவுக்கு வருகிறதென்றால் மலையாளி ஜெயமோஹனுக்கு ஐம்பது பேரையாவது தெரிந்திருக்கும்.

இருந்தும் ஏன் இப்படி ஒரு பொய்யை ஷாஜி விழா மேடையில் தன் பேச்சின் தொடக்கத்திலேயே வலிந்து நுழைக்கிறார்!? அங்குதான் இருக்கிறது அத்வைதத்திலிருந்து பக்தியை வடிகட்டுவது போன்றதொரு மிகத்தந்திரமான நுண்ணரசியல். சுரா போன்ற மேட்டுக்குடிமார் எனக்குப் புரியாமல் போன செவ்வியல் இசைக்கு சொந்தம் கொண்டாடிப் போகட்டும். ஆனால் வெகுஜனம் மயங்கியிருக்கும் இந்த ‘பரப்பிசை’க்கு நானும் ஷாஜியும்தான் அதாரிடி. அதில் குற்றம் சொல்ல சேதுபதிகளுக்குத் தகுதியில்லை.

எத்தனை கபடமான எழுத்து!

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வடக்கிலிருந்து வந்தழித்ததாய் புதுக்கதை எழுதினாலும் ’கொற்றவை’ என்பாள் அகிலாண்டேஸ்வரி! பேரளவில் அந்த பகவதியை வணங்கியதற்காவது என்றாவது இவர் போன்றோர் கண்களையும் அவள் திறப்பாள்! நுண்ணரசியல் புண்ணரசியல் எல்லாம் அன்று ஒழிந்து போகும்.

- நாகசுப்ரமண்யம்

Anonymous said...

(சுந்தர ராமசாமி கொஞ்சம்நேரம் யோசித்தபின் சொன்னார் "நீங்க கவலைப்படவேண்டாம்னுதான் படுது. இந்த எழுபது வயசுக்குள்ள சங்கீதம் தெரிஞ்ச நாயரை நான் பாத்ததே இல்லை")

’பரப்பிசை’ குறித்த ஜெயமோகன் கட்டுரை இப்படித் தொடங்குகிறது. இதிலிருக்கும் நுண்ணரசியலைப் பாருங்கள்.

முதலில் சுந்தரராமசாமி இப்படி பொத்தாம்பொதுவாய் ஒரு கருத்தை அதுவும் ’ஜாதிபுத்தி’ என்பதைப்போல் பொருள் கொள்ள வைக்கும் ஓர் அபத்தத்தை இவரிடம் சொல்லியிருப்பாரா என்பது முதலில் சந்தேகத்துக்குரியது. இதை அவர் உற்றார் உறவினர்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

இரண்டாவது அப்படி சுரா சொல்லியிருந்தாலும் அதைத் தனக்கு ஆறுதலாக எடுத்துக்கொண்டு சொன்னால் அது ஒரு கேணத்தனமான கருதுகோள். ஏனேன்றால் செவ்வியல் கலைகள் பலவற்றிலும் தேர்ந்த நாயர் மேனன்மார்கள் சுராவின் எழுபது வயதுக்குள் நிறையவே பிரபலமாய் இருந்திருக்கிறார்கள். மலபார் கோபாலன் நாயர், அவர் மகன் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், ஓமனக்குட்டி, அவர் மாணவி சின்னக்குயில் சித்ரா, ஸ்ரீலதா மேனன், கல்யாணி மேனன் என்று தமிழன் எனக்கே சட்டென்று ஐந்தாறு பெயர்கள் நினைவுக்கு வருகிறதென்றால் மலையாளி ஜெயமோஹனுக்கு ஐம்பது பேரையாவது தெரிந்திருக்கும்.

இருந்தும் ஏன் இப்படி ஒரு பொய்யை ஷாஜி விழா மேடையில் தன் பேச்சின் தொடக்கத்திலேயே வலிந்து நுழைக்கிறார்!? அங்குதான் இருக்கிறது அத்வைதத்திலிருந்து பக்தியை வடிகட்டுவது போன்றதொரு மிகத்தந்திரமான நுண்ணரசியல். சுரா போன்ற மேட்டுக்குடிமார் எனக்குப் புரியாமல் போன செவ்வியல் இசைக்கு சொந்தம் கொண்டாடிப் போகட்டும். ஆனால் வெகுஜனம் மயங்கியிருக்கும் இந்த ‘பரப்பிசை’க்கு நானும் ஷாஜியும்தான் அதாரிடி. அதில் குற்றம் சொல்ல சேதுபதிகளுக்குத் தகுதியில்லை.

எத்தனை கபடமான எழுத்து!

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வடக்கிலிருந்து வந்தழித்ததாய் புதுக்கதை எழுதினாலும் ’கொற்றவை’ என்பாள் அகிலாண்டேஸ்வரி! பேரளவில் அந்த பகவதியை வணங்கியதற்காவது என்றாவது இவர் போன்றோர் கண்களையும் அவள் திறப்பாள்! நுண்ணரசியல் புண்ணரசியல் எல்லாம் அன்று ஒழிந்து போகும்.

- நாகசுப்ரமண்யம்

Anonymous said...

(சுந்தர ராமசாமி கொஞ்சம்நேரம் யோசித்தபின் சொன்னார் "நீங்க கவலைப்படவேண்டாம்னுதான் படுது. இந்த எழுபது வயசுக்குள்ள சங்கீதம் தெரிஞ்ச நாயரை நான் பாத்ததே இல்லை")

’பரப்பிசை’ குறித்த ஜெயமோகன் கட்டுரை இப்படித் தொடங்குகிறது. இதிலிருக்கும் நுண்ணரசியலைப் பாருங்கள்.

முதலில் சுந்தரராமசாமி இப்படி பொத்தாம்பொதுவாய் ஒரு கருத்தை அதுவும் ’ஜாதிபுத்தி’ என்பதைப்போல் பொருள் கொள்ள வைக்கும் ஓர் அபத்தத்தை இவரிடம் சொல்லியிருப்பாரா என்பது முதலில் சந்தேகத்துக்குரியது. இதை அவர் உற்றார் உறவினர்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

இரண்டாவது அப்படி சுரா சொல்லியிருந்தாலும் அதைத் தனக்கு ஆறுதலாக எடுத்துக்கொண்டு சொன்னால் அது ஒரு கேணத்தனமான கருதுகோள். ஏனேன்றால் செவ்வியல் கலைகள் பலவற்றிலும் தேர்ந்த நாயர் மேனன்மார்கள் சுராவின் எழுபது வயதுக்குள் நிறையவே பிரபலமாய் இருந்திருக்கிறார்கள். மலபார் கோபாலன் நாயர், அவர் மகன் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், ஓமனக்குட்டி, அவர் மாணவி சின்னக்குயில் சித்ரா, ஸ்ரீலதா மேனன், கல்யாணி மேனன் என்று தமிழன் எனக்கே சட்டென்று ஐந்தாறு பெயர்கள் நினைவுக்கு வருகிறதென்றால் மலையாளி ஜெயமோஹனுக்கு ஐம்பது பேரையாவது தெரிந்திருக்கும்.

இருந்தும் ஏன் இப்படி ஒரு பொய்யை ஷாஜி விழா மேடையில் தன் பேச்சின் தொடக்கத்திலேயே வலிந்து நுழைக்கிறார்!? அங்குதான் இருக்கிறது அத்வைதத்திலிருந்து பக்தியை வடிகட்டுவது போன்றதொரு மிகத்தந்திரமான நுண்ணரசியல். சுரா போன்ற மேட்டுக்குடிமார் எனக்குப் புரியாமல் போன செவ்வியல் இசைக்கு சொந்தம் கொண்டாடிப் போகட்டும். ஆனால் வெகுஜனம் மயங்கியிருக்கும் இந்த ‘பரப்பிசை’க்கு நானும் ஷாஜியும்தான் அதாரிடி. அதில் குற்றம் சொல்ல சேதுபதிகளுக்குத் தகுதியில்லை.

எத்தனை கபடமான எழுத்து!

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வடக்கிலிருந்து வந்தழித்ததாய் புதுக்கதை எழுதினாலும் ’கொற்றவை’ என்பாள் அகிலாண்டேஸ்வரி! பேரளவில் அந்த பகவதியை வணங்கியதற்காவது என்றாவது இவர் போன்றோர் கண்களையும் அவள் திறப்பாள்! நுண்ணரசியல் புண்ணரசியல் எல்லாம் அன்று ஒழிந்து போகும்.

- நாகசுப்ரமண்யம்

Anonymous said...

(சுந்தர ராமசாமி கொஞ்சம்நேரம் யோசித்தபின் சொன்னார் "நீங்க கவலைப்படவேண்டாம்னுதான் படுது. இந்த எழுபது வயசுக்குள்ள சங்கீதம் தெரிஞ்ச நாயரை நான் பாத்ததே இல்லை")

’பரப்பிசை’ குறித்த ஜெயமோகன் கட்டுரை இப்படித் தொடங்குகிறது. இதிலிருக்கும் நுண்ணரசியலைப் பாருங்கள்.

முதலில் சுந்தரராமசாமி இப்படி பொத்தாம்பொதுவாய் ஒரு கருத்தை அதுவும் ’ஜாதிபுத்தி’ என்பதைப்போல் பொருள் கொள்ள வைக்கும் ஓர் அபத்தத்தை இவரிடம் சொல்லியிருப்பாரா என்பது முதலில் சந்தேகத்துக்குரியது. இதை அவர் உற்றார் உறவினர்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

இரண்டாவது அப்படி சுரா சொல்லியிருந்தாலும் அதைத் தனக்கு ஆறுதலாக எடுத்துக்கொண்டு சொன்னால் அது ஒரு கேணத்தனமான கருதுகோள். ஏனேன்றால் செவ்வியல் கலைகள் பலவற்றிலும் தேர்ந்த நாயர் மேனன்மார்கள் சுராவின் எழுபது வயதுக்குள் நிறையவே பிரபலமாய் இருந்திருக்கிறார்கள். மலபார் கோபாலன் நாயர், அவர் மகன் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், ஓமனக்குட்டி, அவர் மாணவி சின்னக்குயில் சித்ரா, ஸ்ரீலதா மேனன், கல்யாணி மேனன் என்று தமிழன் எனக்கே சட்டென்று ஐந்தாறு பெயர்கள் நினைவுக்கு வருகிறதென்றால் மலையாளி ஜெயமோஹனுக்கு ஐம்பது பேரையாவது தெரிந்திருக்கும்.

இருந்தும் ஏன் இப்படி ஒரு பொய்யை ஷாஜி விழா மேடையில் தன் பேச்சின் தொடக்கத்திலேயே வலிந்து நுழைக்கிறார்!? அங்குதான் இருக்கிறது அத்வைதத்திலிருந்து பக்தியை வடிகட்டுவது போன்றதொரு மிகத்தந்திரமான நுண்ணரசியல். சுரா போன்ற மேட்டுக்குடிமார் எனக்குப் புரியாமல் போன செவ்வியல் இசைக்கு சொந்தம் கொண்டாடிப் போகட்டும். ஆனால் வெகுஜனம் மயங்கியிருக்கும் இந்த ‘பரப்பிசை’க்கு நானும் ஷாஜியும்தான் அதாரிடி. அதில் குற்றம் சொல்ல சேதுபதிகளுக்குத் தகுதியில்லை.

எத்தனை கபடமான எழுத்து!

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வடக்கிலிருந்து வந்தழித்ததாய் புதுக்கதை எழுதினாலும் ’கொற்றவை’ என்பாள் அகிலாண்டேஸ்வரி! பேரளவில் அந்த பகவதியை வணங்கியதற்காவது என்றாவது இவர் போன்றோர் கண்களையும் அவள் திறப்பாள்! நுண்ணரசியல் புண்ணரசியல் எல்லாம் அன்று ஒழிந்து போகும்.

- நாகசுப்ரமண்யம்

Anonymous said...

(சுந்தர ராமசாமி கொஞ்சம்நேரம் யோசித்தபின் சொன்னார் "நீங்க கவலைப்படவேண்டாம்னுதான் படுது. இந்த எழுபது வயசுக்குள்ள சங்கீதம் தெரிஞ்ச நாயரை நான் பாத்ததே இல்லை")

’பரப்பிசை’ குறித்த ஜெயமோகன் கட்டுரை இப்படித் தொடங்குகிறது. இதிலிருக்கும் நுண்ணரசியலைப் பாருங்கள்.

முதலில் சுந்தரராமசாமி இப்படி பொத்தாம்பொதுவாய் ஒரு கருத்தை அதுவும் ’ஜாதிபுத்தி’ என்பதைப்போல் பொருள் கொள்ள வைக்கும் ஓர் அபத்தத்தை இவரிடம் சொல்லியிருப்பாரா என்பது முதலில் சந்தேகத்துக்குரியது. இதை அவர் உற்றார் உறவினர்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

இரண்டாவது அப்படி சுரா சொல்லியிருந்தாலும் அதைத் தனக்கு ஆறுதலாக எடுத்துக்கொண்டு சொன்னால் அது ஒரு கேணத்தனமான கருதுகோள். ஏனேன்றால் செவ்வியல் கலைகள் பலவற்றிலும் தேர்ந்த நாயர் மேனன்மார்கள் சுராவின் எழுபது வயதுக்குள் நிறையவே பிரபலமாய் இருந்திருக்கிறார்கள். மலபார் கோபாலன் நாயர், அவர் மகன் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், ஓமனக்குட்டி, அவர் மாணவி சின்னக்குயில் சித்ரா, ஸ்ரீலதா மேனன், கல்யாணி மேனன் என்று தமிழன் எனக்கே சட்டென்று ஐந்தாறு பெயர்கள் நினைவுக்கு வருகிறதென்றால் மலையாளி ஜெயமோஹனுக்கு ஐம்பது பேரையாவது தெரிந்திருக்கும்.

இருந்தும் ஏன் இப்படி ஒரு பொய்யை ஷாஜி விழா மேடையில் தன் பேச்சின் தொடக்கத்திலேயே வலிந்து நுழைக்கிறார்!? அங்குதான் இருக்கிறது அத்வைதத்திலிருந்து பக்தியை வடிகட்டுவது போன்றதொரு மிகத்தந்திரமான நுண்ணரசியல். சுரா போன்ற மேட்டுக்குடிமார் எனக்குப் புரியாமல் போன செவ்வியல் இசைக்கு சொந்தம் கொண்டாடிப் போகட்டும். ஆனால் வெகுஜனம் மயங்கியிருக்கும் இந்த ‘பரப்பிசை’க்கு நானும் ஷாஜியும்தான் அதாரிடி. அதில் குற்றம் சொல்ல சேதுபதிகளுக்குத் தகுதியில்லை.

எத்தனை கபடமான எழுத்து!

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வடக்கிலிருந்து வந்தழித்ததாய் புதுக்கதை எழுதினாலும் ’கொற்றவை’ என்பாள் அகிலாண்டேஸ்வரி! பேரளவில் அந்த பகவதியை வணங்கியதற்காவது என்றாவது இவர் போன்றோர் கண்களையும் அவள் திறப்பாள்! நுண்ணரசியல் புண்ணரசியல் எல்லாம் அன்று ஒழிந்து போகும்.

- நாகசுப்ரமண்யம்

Anonymous said...

(சுந்தர ராமசாமி கொஞ்சம்நேரம் யோசித்தபின் சொன்னார் "நீங்க கவலைப்படவேண்டாம்னுதான் படுது. இந்த எழுபது வயசுக்குள்ள சங்கீதம் தெரிஞ்ச நாயரை நான் பாத்ததே இல்லை")

’பரப்பிசை’ குறித்த ஜெயமோகன் கட்டுரை இப்படித் தொடங்குகிறது. இதிலிருக்கும் நுண்ணரசியலைப் பாருங்கள்.

முதலில் சுந்தரராமசாமி இப்படி பொத்தாம்பொதுவாய் ஒரு கருத்தை அதுவும் ’ஜாதிபுத்தி’ என்பதைப்போல் பொருள் கொள்ள வைக்கும் ஓர் அபத்தத்தை இவரிடம் சொல்லியிருப்பாரா என்பது முதலில் சந்தேகத்துக்குரியது. இதை அவர் உற்றார் உறவினர்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

இரண்டாவது அப்படி சுரா சொல்லியிருந்தாலும் அதைத் தனக்கு ஆறுதலாக எடுத்துக்கொண்டு சொன்னால் அது ஒரு கேணத்தனமான கருதுகோள். ஏனேன்றால் செவ்வியல் கலைகள் பலவற்றிலும் தேர்ந்த நாயர் மேனன்மார்கள் சுராவின் எழுபது வயதுக்குள் நிறையவே பிரபலமாய் இருந்திருக்கிறார்கள். மலபார் கோபாலன் நாயர், அவர் மகன் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், ஓமனக்குட்டி, அவர் மாணவி சின்னக்குயில் சித்ரா, ஸ்ரீலதா மேனன், கல்யாணி மேனன் என்று தமிழன் எனக்கே சட்டென்று ஐந்தாறு பெயர்கள் நினைவுக்கு வருகிறதென்றால் மலையாளி ஜெயமோஹனுக்கு ஐம்பது பேரையாவது தெரிந்திருக்கும்.

இருந்தும் ஏன் இப்படி ஒரு பொய்யை ஷாஜி விழா மேடையில் தன் பேச்சின் தொடக்கத்திலேயே வலிந்து நுழைக்கிறார்!? அங்குதான் இருக்கிறது அத்வைதத்திலிருந்து பக்தியை வடிகட்டுவது போன்றதொரு மிகத்தந்திரமான நுண்ணரசியல். சுரா போன்ற மேட்டுக்குடிமார் எனக்குப் புரியாமல் போன செவ்வியல் இசைக்கு சொந்தம் கொண்டாடிப் போகட்டும். ஆனால் வெகுஜனம் மயங்கியிருக்கும் இந்த ‘பரப்பிசை’க்கு நானும் ஷாஜியும்தான் அதாரிடி. அதில் குற்றம் சொல்ல சேதுபதிகளுக்குத் தகுதியில்லை.

எத்தனை கபடமான எழுத்து!

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வடக்கிலிருந்து வந்தழித்ததாய் புதுக்கதை எழுதினாலும் ’கொற்றவை’ என்பாள் அகிலாண்டேஸ்வரி! பேரளவில் அந்த பகவதியை வணங்கியதற்காவது என்றாவது இவர் போன்றோர் கண்களையும் அவள் திறப்பாள்! நுண்ணரசியல் புண்ணரசியல் எல்லாம் அன்று ஒழிந்து போகும்.

- நாகசுப்ரமண்யம்

தமிழ் பயணி said...

"அது நம்ம நிலா இல்லடா வேற யாரோ " எனும் இறுதி வரிகளில் தெருவில் விடப்பட்ட சிறுவனாய் உணர்ந்தேன்

Anonymous said...

//அப்படி சுரா சொல்லியிருந்தாலும் அதைத் தனக்கு ஆறுதலாக எடுத்துக்கொண்டு சொன்னால் அது ஒரு கேணத்தனமான கருதுகோள். //

சர்தார்ஜி ஜோக் மாதிரி அது ஒரு ஜோக். ரொம்ப கஷ்டபட்டு அதுல கருதுகோள்லாம் கண்டுபிடிச்சு... முடியல.

Anonymous said...

அந்தப் பையன் பேர் புள்ளி என்று ஞாபகம். கதையின் பெயர் மறந்து விட்டது.

Anonymous said...

//
சர்தார்ஜி ஜோக் மாதிரி அது ஒரு ஜோக். ரொம்ப கஷ்டபட்டு அதுல கருதுகோள்லாம் கண்டுபிடிச்சு... முடியல.//

இதுக கூட மாரடிக்க முடியாமதான் பின்னூட்டத்தையே நிறுத்திப்பிட்டாரு ஜெமோ . ஜோக்கு சொன்னா அதுல அரசியல தேடுற இதுகளை எல்லாம் வைச்சுகிட்டு ?

Anonymous said...

எதுடா ஜோக்கு? செத்துபோன ஒரு நல்ல தமிழ் எழுத்தாளனை சாதிவெறியன் என்பதைப்போல் பிம்பத்தை உருவாக்குவதா?

அதை சுரா உயிருடன் இருக்கும்போது எழுத வேண்டியதுதானே? இப்ப ஏன்?

சுஜாதா செத்தபின் அவர் எழுத்தில் தூர்வாரி ஆழம் பார்ப்பது போல.. இதெல்லாம் ஒரு பிழைப்பு தூத்தெறி..

Anonymous said...

கெட்ட வார்த்தை வருது , ஆனா அப்புறம் உனக்கும் எனக்கும் வித்யாசம் இல்லாம போயிடுமே .

சுரா , சுஜாதா இருக்கும்போதே சொன்னதுதான் இதெல்லாம் , அன்னைக்கெல்லாம் நீதான் விரல் சூப்பிகிட்டுருந்தே வெண்ணெ

Anonymous said...

"கோமணத்திலிருந்து தூமை வாசனை"

சொற்குற்றம் இருக்கலாம் ; பொருற்குற்றம் பொறுக்க முடியாதது

Bala
Texas

Anonymous said...

@- நாகசுப்ரமண்யம்

ஜோக் சொன்னா அனுபவிக்கனும். ஆராய கூடாது.

இருந்தாலும் நீங்க ஓவரு... எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க ”பேண்ட பீயில கடுகு இருக்கான்னு பாக்குறான் பாரு”ன்னு.

குஷ்டமப்பா...

உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க..அவங்கல நினைச்சா பாவம்.