பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 17, 2009

பூச்செண்டு - ஞாநி விளக்கம்

சாருவின் வலைப்பதிவில் 'ஞாநி பூச்செண்டு' மேட்டர் பற்றி எழுதியதற்கு ஞாநியின் விளக்கம் அல்லது மறுப்பு. நண்பர் ஒருவருக்கு ஞாநி அனுப்பிய மடல் இங்கே...

என் பேச்சு திரித்தும் வெட்டியும் போடப்பட்டு அவதூறு செய்யப்படுகிறேன், இலக்கிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பரிசுகளாக புத்தகங்களைத்தான் தரவேண்டுமென்பதே என் பேச்சின் அழுத்தம். எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான் வக்லியுறுத்துகிறேன் வலியுறுத்துகிறேன். எனக்கு மேடையில் தரப்படும் பூச்செண்டை நான் எடுத்துப் போய் ப்யன்படுத்த வழியில்லை. அவற்றில் உள்ள பூக்களை பூ வைக்கும் பழக்கத்தில் உள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். அதைத்தான் அன்றும் செய்தேன். எனக்குப் பயன்படாத பூச்செண்டை தருவதற்கு பதில், பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் கூட டவலாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன்.

எழுத்தில் தரும் பூச்செண்டு என்பது ஓர் அடையாளம் . பாராட்டின் அடையாளம். ஆஹா, பேஷ் பேஷ் , பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடு அவ்வளவுதான். எழுத்தில் தரும் குட்டு என்ன அசல் குட்டா ? அதுவும் கண்டனத்தின் குறியீடு மட்டுமே.

நான் பூச்செண்டுக்கு எதிரி அல்ல, அது பயன்படக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுத்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் அந்தக் காசில் புத்தகம் வாங்கித்தரவே விரும்புவேன்.

ஞாநி

இந்த வார பூச்செண்டு யாருக்கு ? இந்த வார குட்டு யாருக்கு ? உடனே இட்லிவடை பூவை வைத்து சிண்டு முடிகிறார் என்று சொல்லாதீங்க :-)

13 Comments:

மர தமிழன் said...

பூ அவ்வளவுதானே..
இனி பூச்செண்டுக்கு
பதில்
ஞாநி
புத்தகத்தையே
வாரா வாரம்
கொடுத்து
விடட்டும்

பி கு :- இந்த வார பூச்செண்டு பூங்கொத்துக்கு பதில் புத்தகம் கொடுக்க சொன்ன எனக்கு
இந்த வார குட்டு அதை கவிதை மாதிரி எழுதி எரிச்சல் படுத்திய எனக்கு..

வட போச்சா :))))

சைவகொத்துப்பரோட்டா said...

"எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான் வக்லியுறுத்துகிறேன்."



வரவேற்க பட வேண்டிய விசயம்தான்.



இ.வ கவனத்திற்கு:"வக்லியுறுத்துகிறேன்" - வழியுருத்துகிறேன், நன்றி.

Ganesan said...

அந்த விழாவில் நானும் கலந்துக்கொண்டேன்.

ஞானியாருக்கு கொடுத்த பூச்செண்டு எல்லாவற்றையும் சாருவுக்கு கொடுத்தாச்சே, அப்புறம் என்ன சாருவுக்கு கோபம்.

Madhavan Srinivasagopalan said...

"பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் ..."

-------------->
விழா மேடையில், இனிவரும் நாட்களில், 'பொன்னாடை' என்பதிற்கு பதிலாக, 'கைத்தறியாடை' என்றே சொல்லலாமே !
இதில் பொய் இருக்காதே?

Ganesan said...

அந்த விழாவின் புகைப்படங்களை பார்க்க.

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html

மற்றபடி, சாருவின் புத்தக வெளியீட்டு விழாவின் தொகுப்பு,புகைப்பட்ங்களை பார்க்க.

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

lok said...

சாநியின் சாரி சாருவின் மற்ற குற்றச்சாட்டுக்கு ஞாநியின் வாசகனின் பதில்.
- காஸ்ட்லி ஸ்காட்ச் குடித்து வளர்த்த தொப்பையை குறைக்க வாக்கிங் செல்லுபவர்களை பற்றி கவலைப்படவில்லை, இரண்டு கையையும் ஒரு சேர விரிக்க முடியாத குடிசையில் வாழும் சிறுவர்களின் உரிமையை பற்றி பேசுகிறார்
- சென்னை வெயிலிலும் 500 ருபாய் ஜீனஸ் போட்டு சுற்றுபவர்களை பற்றி பேசவில்லை , லுங்கியை அன்றாட உடையாக பயன்படுத்தும் லட்சகணக்கான மக்களை பற்றி பேசுகிறார்
- உடல் ஊனத்தால் நம்பிக்கையிழந்து இருக்கும் மக்களுக்கு தன்னம்பிக்கை வர பேசியதை, சாரு அடித்த கமெண்டை பார்த்தால் மனுஷ புத்திரனின் மேல் சாருவுக்கு காண்டு போல தெரிகிறது

கருணாநிதியை எதிர்த்து எழுதும் ஒரே எழுத்தாளர் ஞாநி , அது பொறுக்கவில்லை சாருவுக்கு

" பாட்டு எழுதி பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் , குற்றம் சொல்லி பெயர் வாங்கும் புலவர்களும் இருகிறார்கள் !!!"
இவர் குற்றம் சொன்னா பரவாயில்லை , காமெடி இல்ல பண்ணுறாரு

குரு said...

//

சைவகொத்துப்பரோட்டா said...

"எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான் வக்லியுறுத்துகிறேன்."



வரவேற்க பட வேண்டிய விசயம்தான்.



இ.வ கவனத்திற்கு:"வக்லியுறுத்துகிறேன்" - வழியுருத்துகிறேன், நன்றி.

//

அது "வலியுறுத்துகிறேன்"

கௌதமன் said...

பயன்படும் பொருட்களைத்தான் பரிசாகக் கொடுக்கவேண்டும் என்று ஞானி அவர்கள் கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.

கௌதமன் said...

ஞானி கொடுத்த பூச்செண்டைப் பெற்றவர், அதை ஸ்ரேயாவுக்கு அனுப்பிவைக்கவும். இங்கே வலதுபக்கத்தில் அவர் அதற்காக அழகாக காத்திருக்கிறார்!

ஞானி யா(சா)ரு said...

இவங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிறத பார்த்தா இன்னும் , இஸ்கூல மறக்கலயோ...

கே கே நகரை விரிச்சு சொல்லு ஒருத்தர். பஸ்ல தொங்கும் போது டிக்கட் வாங்க விரிச்சா நாம டிக்கட் வாங்கிறுவோம் இன்னொருத்தர்.

கைலி, ஜட்டி (பை த பை நம்ம அபிமான மஞ்சள் ஜட்டி எங்கே... )
என ரொம்ப கீழ பேச்சு.

சாநி ங்கவா என அவரு, அஞ்ஞானி என இவரு.

ஒரு வேளை பேசி வைச்சுக்கிட்டு செய்யுறாங்களோ அல்லது வெறும் வயித்தெரிச்சல் தானா. ...

மஞ்சள் ஜட்டி said...

தமிழ் சினிமாவில் எதற்கு கோடிகளை செலவு செய்வார்கள்? ஸ்விசர்லாந்தில் ரோட்டில் பிச்சைக்காரர்கள் போல் ஆடுவதற்கும், முன்னனி நாயகியை ஒரு பாட்டிற்கு ஆட வைப்பதற்கும், அந்த பாட்டிற்கு 5 கோடி ரூபாய் செட் போடுவார்கள். யோசித்துப் பார்த்தோமானால், அந்த படக் கதைக்கும் பாட்டிற்கும் சம்பந்தமே இருக்காது! உசிலம்பட்டியில் மாடு மேய்கும் ஹிரோ மூன்று முறை ஸ்விஸ், ரோம், வெனிஸ், ஸிட்னி என்று போய் ஒரு ஆட்டம் போட்டு விட்டு வருவார். உண்மையில் மாடு மேய்பவருக்கு அந்த ஊர்களின் பெயர் தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம்தான
---
Kamal said something about comparing Kollywood films and Hollywood films... My view here!!!

Unknown said...

kggouthaman said...

//அவர் அதற்காக அழகாக காத்திருக்கிறார்!
//


sir athenna azhagaga

Anonymous said...

ஞானி, சாரு சண்டையெல்லாம் போட்டு இட்லி-வடை தரத்தைக் குறைக்காதீங்க..உலகம் மொத்தம் இதைத் தெரிஞ்சிக்கணுமா?
So called இலக்கியப் பத்திரிகைகள் செய்து கொண்டிருந்த குழாயடி சண்டை, இப்போ BLOG-குகளை நாற அடிக்கின்றன. மனிதனை உயர்த்தும் விஷயங்களைப் போடுங்கள்.
-- டில்லி பல்லி