தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நடிகர் கமல் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். என்ன பேசியிருப்பார்கள் ?
கலைஞர்: என்ன ஆச்சு தாடிக்கு ?
கமல்: ஐயா நீங்க தசாவதாரம் படம் பார்த்துவிட்டு முத்தம் தந்தீர்கள். நினைவிருக்கிறதா ? அது போல இப்ப தந்தால் உங்களுக்கு உறுத்தும் என்று தாடியை எடுத்துவிட்டேன்.
கலைஞர்: உன்னை போல் ஒருவனை பார்த்ததே இல்லை!
கமெண்ட் பெட்டியில் உங்க கைவரிசையை காண்பிக்கலாம். சிறந்த கமெண்டுக்கு பரிசு உண்டு !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 23, 2009
கமல் கலைஞர் சந்திப்பு
Posted by IdlyVadai at 9/23/2009 05:59:00 PM
Labels: போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
37 Comments:
ஒரு அளவில்லாம ரூம் போட்டு யோசிக்குதுப்பா நம்ம இட்லி!!!
சான்ஸே இல்லை. :-D
கமல் - போன தடவதான் இட்லிவடை நம்ம ஃபோட்டோவ கண்டுக்கல !
கலைஞர் - இந்த முறை பாக்கலாம், இல்லன்னா மானஸ்தன் கிட்ட சொன்னா, மத்தது தானா முடிஞ்சிரும் !
கலைஞர்: உன்னை போல் ஒருவனை பார்த்ததே இல்லை!
கமல்: ஐயா நான் தான் உங்களுக்கு special show போடவில்லையே!!!
கலைஞர்: பரவாயில்லை,இந்தி படத்தை நேரடியாக ரிலீஸ் செய்து தமிழ் மொழியை அழிக்காமல், தமிழ் மொழி வளர டப் செய்து ரிலீஸ் செய்ததற்காக 20% வரி விலக்கு செய்ய உத்தரவு போடட்டுமா???
கமல்: ஐயா நான் டப் செய்யவில்லை, அதற்கு பெயர் ரீமேக்!!
கலைஞர்: ஓ அப்படியா!!! பரவாயில்லை, ஆமா இது
நமது அடுத்த தேர்தல் வெற்றியை பாதிக்குமா???
கலை: வாங்க தம்பி! உ.போ.ஒ நல்லா ஓடுதா?
கமல்: எதிர்பார்த்ததுக்கு மேல ஓடுதுங்க ஐயா!
கலை: என்ன விஷயமா வந்தீங்க? அடுத்த படத்துல நான் நடிக்கணுமா?
கமல்: இன்லங்கய்யா! வசனம் எழுதனும்.
கலை: ஐயோ! எனக்கு நேரமே இல்லயேப்பா!
கமல்: தெரியும்க! அதனாலதான் நானே வசனம் எழுதி இந்த ஃபைல்ல போட்டு கொண்டாந்திருக்கேன். நீங்க மறுபார்வை பாத்தா போறும். ஆனா வசனகர்த்தா நீங்கதான். டைட்டில்ல போடறோம். பப்ளிசிட்டி எல்லாம் உண்டு
கலை: இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்ல. பல வருஷமா இதத்தான செஞ்சுகிட்டிருக்கேன்.கோப்பை பா.விஜய் கிட்ட குடுத்துட்டு போங்க. அவர் எல்லாத்தயும் பாத்துப்பார்
கலைஞர் : என்னப்பா கலைஞானி... எப்படி இருக்கே...
கமல் : எப்படி இருக்கிறாய் என்று அன்பொழுக கேட்கும் தங்களிடம், நான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னால், அது பொய்யாகி விடும் என்பதால் உண்மையை கூறி விடும் மன நிலைக்கு நான் வந்து விடுகிறேன்... இப்போது சொல்கிறேன்.. நான் மிக மிக சுமாராக தான் இருக்கிறேன் அய்யா...
கலைஞர் : என்னய்யா ஒரே பீடிகை போடற... ஒரே வார்த்தைய நீட்டி, முழக்கி, ஒரு மாசம் வரைக்கும் சொல்றத இன்னும் விடலியா... சரி, என்ன ஆச்சு... உன்னை போல் ஒருவன் படமும் ஓடலியா... கலைஞர் டி.வி.ல அடுத்த மாசம் வர்ற "விடுமுறை நாள்"ல படத்தை போட்டுறுவோமா... இல்லேன்னா "எலியின் மீசை"ன்னு ஒரு படம் எடுக்க சொல்றேன்... அதுக்கு கதை, திரைக்கதை எழுது... நான் வசனம் எழுதறேன்.. இது சரியா, போதுமா!!...
கமல் : அய்யா... அவ்வளவு பெரிய உதவி எல்லாம் வேணாம்யா... அந்த சன் டி.வி.தயாரிக்கற "எந்திரன்" பட்ஜெட் அமௌண்ட்டில் ஒரு பாதி கலைஞர் டிவி.ல இருந்து கொடுத்தால், என்னோட கனவு படம் "மருதநாயகம்" படப்பிடிப்பு ஆரம்பித்து விடுவேன்... பராக் ஒபாமா இந்தியா வரும்போது, அவரையே வைத்து முதல் காட்சியை டைரக்ட் பண்ண சொல்லி விடலாம்...
கலைஞர் : ஏன், நானும், சோனியா அம்மையாரும் வந்து ஆரம்பிச்சா நல்லா இருக்காதா? போய் வேற ஏதாவது புது யோசனையோடு வந்து என்னை பார்...
கமல்: அய்யா வணக்கம்
கருணா: வணக்கம் தம்பி. புதுசா ஏதோ படம் எடுத்து வெளிய விட்டுறிக்கீங்க போலிருக்கே?
கமல்: அய்யா, உங்களுக்கு "உன்னை போல் ஒருவன்" படத்த ஓசி காட்சி போட்டு காமிக்காதது என் தப்புதான். ராவணனை ரசிக்கற மூடுலையே இருந்தேன. இதை மறந்துட்டேன். மன்னிச்சிடுங்க.
கருணா: சரி, சரி. வந்த விஷயத்த சீக்ரமா சொல்லிட்டு கிளம்புங்க. எனக்கு ஆயிரம் பிரிவ்யூ ஷோ பாக்கற வேலை இருக்கும்ன்றது உங்களுக்கு தெரியாதா?
கமல்: தசாவதாரம் படத்துல உங்கள ஒரு சீன்ல காமிச்சு கழக கண்மணிகளை வெச்சு கொஞ்சம் வசூல் பாத்தோம். இந்த படத்திலயும், உங்க வாய்ஸ் வெச்சு படத்த ஓட்ட முடியுமான்னு பாக்கறோம். இப்போ, என்னோட அடுத்த படத்துக்கும், உங்க பங்களிப்பு இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சு இந்த கோப்புல கதை வசனத்தோட வந்திருக்கேன். நீங்க படிச்சு பாத்துட்டு, உங்களுக்கு சம்மதம்னா உங்க பேரையே கதை, வசனம் "கலைஞர்"நு போட்டு விடலாம்னு பாக்கிறேன்.
கருணா: (மனதிற்குள்) ஆஹா! இவன் என்ன லூசா? நாமளே, கருப்ப வெளுப்பாக்க கதை வசனம் எழுதறாமாதிரி சீன் காட்டறோம். அதை இந்த லூசு நிஜம்னே நம்புது போல இருக்கே. (உரக்க) அப்படியா தம்பி. அதுகென்ன. தாராளமா எண் பேர போட்டுக்குங்க. என்னால உங்க படம் ஓடுச்சுன்னா, அத விட இந்த தமிழனுக்கு வேற பெருமை இருக்கா?
கமல்: ரொம்ப நன்றி அய்யா. ஏதோ நீங்க இருக்கீங்களோ, என் படமும் ஓடுதுன்னு என்னாலையும் சீன் போட முடியுது. இல்லைனா, ஒரு தயாரிப்பாளரும் என்கிட்டே மாட்டவே மாட்டறாங்க. வர, வர இந்த தயாரிப்பாளருங்க தொல்ல தாங்கமுடியலைங்க அய்யா. போயிட்டு வறேங்கய்யா!
கமல்: ஞான விளக்கே காலை வணக்கம் அய்யா.
கலை: வணக்கம் பார்பன தம்பி. எப்படி இருகிறாய்? தசாவதாரம், உன்னை போல் ஒருவன் என பல படங்களில் எனக்கு டூப் போடும் அளவிற்கு என் மேல் காதலா? இப்படி ஒரு ஜால்ராவை உன்ன்கிட்ட நான் எதிர் பார்க்கல? பிற்காலத்தில் என் போடோவை வைத்து கட்சி ஆரம்பிக்க திட்டமா?
கமல்: சும்மா பிட் போட்டு வைசுகிலாம்னு தான் சார். பிற்காலத்தில் உதவும்னு நினைக்கிறன்.
கலை: என்ன விஷயம். காரியம் இல்லாமல் நீ வரமாடியே.
கமல்: உங்களோட "பிளாக் மணி" கொஞ்சம் கொடுத்தீன்கனா, என்னோட படங்களை முடிச்சிடுவேன். அப்பரும் வோயிடா உங்ககிட்ட திருப்பி கொடுதிறேன்.
கலை: இப்படி எத்தனை பேருக்கு அல்வா குடுதிருபீங்க. ஆளைவிடு தம்பி.
கமல்: சார், உங்களுக்கு படத்தில் முக்கிய வேடம் தருகிறேன். யோசிச்சு சொல்லுங்க.
கலை: யாரு சோடி.
கமல்: ஐயோ! ஜோடி என்னக்கு தான். நீங்க புரட்சி வேங்கையாக வருகிறீர்கள்.
கலை: என்னை வைச்சு காமடி கீமடி பண்ணலியே?
கமல்: தமிழ் அவதாரமே. உங்களிடம் அதெல்லாம் முடியுமா? கண்டிப்பாக அப்படியில்லை.
கலை: சரி, என் பேரங்கள் யாரையாச்சும் ஹீரோ வா வைச்சு படம் பண்ணு, செலவை நான் பாத்துகிறேன்.
கமல்: கவலையை விடுங்க. அவுங்க எல்லாம் என் அடுத்த ப்ரொஜெக்டில் ...
கலை: என்ன திமிர், நீ அவர்கோளட அடுத்த ப்ரொஜெக்டில் என சொல்லிக்கோ.
கமல்: மிக்க நன்றி அய்யா. அப்போ நான் உத்திரவு வாங்கிக்கிறேன்.
கலை: அப்படியே என் காலில் விழுந்து வணங்கிட்டு போ. டேய் போட்டோகிராப்பரை கூப்பிடு
Kamal : Kattu miraandi koottathil kalaiyai puguthiya kalaigare. Naanum oru kaatu miraandi thaan.
Kazaigar: Podhum un peedikai. Sai meera kitta phone panni sollitten. Avanga inimel unkitta kaasu ketka maattaanga.
கலைஞர்: அடுத்ததா ஒரு கதை வசனம் எழுதி வெச்சிருக்கேன்.
கமல்: ஐயா! நானு பெரியார் பேரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
கலைஞர்: வந்து...அடுத்ததா ஒரு கதை வசனம் எழுதியிருக்கேன்னு சொன்னேன்.
கமல்: ஆமாங்கையா! மர்மயோகி கதை வசனம் திருத்தம் செஞ்சுட்டு இருக்கேன்.
கலைஞர்: இல்லப்பா. உன்னைத்தான் அதுல நடிக்கவைக்கலாம்னு நம்ம முருகன் கூட சொன்னாப்புல.
கமல்: ஆமாங்கையா. இரா.முருகனுக்கு இது தான் முதல் படம் ஐயா.
கலைஞர்: தயாரிப்ப நம்ம ரெட் ஜெயன்ட் உதயநிதி பன்னுவாரு.
கமல்: (ஐய்யையோ! எப்படி தப்பிகிறது?) ஐயா...அது...வந்து...
கலைஞர்: சொல்லுப்பா...
கமல்: மர்மயோகியில...
கலைஞர்: கதை வசன உதவி தேவைப்படுதா?
கமல்: (தேவர் மகன் ஸ்டைலில்) இல்லையா. என்ன உட்டுடுங்கையா. நான் போறேன். இது காட்டுமிராண்டிதனமா இருக்கு.
தம்பி, உன் வாரிசு சுருதி இசை எல்லாம் அமைச்சிருக்கலாமே?
உங்க வழிய தான்யா நான் பின்பற்றி வரேன்...
சரி சரி சந்தோசம் ஆனா ஜாக்கிரதையா இருந்துகோப்பா... சுருதிக்கும் ஸுப்புலஷ்மிக்கும் பிரச்சனை ஏதாவது வந்திட போகுது அப்புறம் "உன் இதயம் இனித்திட கண்கள் பனித்திட" நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்...
சரிங்க அய்யா
/****கமல் : அய்யா... அவ்வளவு பெரிய உதவி எல்லாம் வேணாம்யா... அந்த சன் டி.வி.தயாரிக்கற "எந்திரன்" பட்ஜெட் அமௌண்ட்டில் ஒரு பாதி கலைஞர் டிவி.ல இருந்து கொடுத்தால், என்னோட கனவு படம் "மருதநாயகம்" படப்பிடிப்பு ஆரம்பித்து விடுவேன்... பராக் ஒபாமா இந்தியா வரும்போது, அவரையே வைத்து முதல் காட்சியை டைரக்ட் பண்ண சொல்லி விடலாம்...***/
வயிரெறிச்சல்!!!!!
என்ன பேசியிருப்பார்கள்??? கலைஞர் சொல்லியிருப்பார்....நானாவது ஹிந்துக்களை திருடன் என்றுதான் சொன்னேன்....நீ ஒரு ஹிந்துவை தீவிரவாதியாகச் சித்தரித்து சமூகநீதியை நிலைநாட்டி விட்டாய்....அதற்கு கமல்....இதென்ன சமூகநீதி?? நீங்கள் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அல்-உம்மா தீவிரவாதிகளையே விடுதலை செய்து சமூகநீதியை நிலைநாட்டி விட்டீர்கள் என்று பாராட்டு தெரிவித்து விட்டு கிளம்பியிருப்பார்.
http://wiki.pkp.in/forum/t-165676/ இதுல ரெண்டு பேர் அடிச்சுக்றாக்ஙகளே யார் சொல்றது உண்மை
இட்லி வடை வாசகர்களுக்கு என்னாச்சு .. எதாவது நல்ல கமெண்ட் போடுவாங்கன்னு பாத்தா எல்லாம் வயித்தெரிச்சல் கமெண்ட், மொக்கை கமெண்டா இருக்கு ...
கலைஞர் : வாங்க கலைஞானி... எப்படி இருக்கீங்க...
கமல் : வணக்கம் அய்யா...என்னை இல்லத்தின் வாசல் வரை வந்து வரவேற்கும் உங்கள் பண்பு எனக்கு பிடித்திருக்கிறது... வந்தாரை வரவேற்கும் பண்பு உங்களுக்கு முன்னோர்கள் கற்று கொடுத்தது.. அந்த நல்ல பண்பை தமிழ் திரையுலகமும் தொடர வழி வகுத்திருக்கிறது..
கலைஞர் : சரி..சரி... என்ன சொல்ல வர்றீங்க...உன்னை போல் ஒருவர் ஓடுதா, தியேட்டர்ல? பழைய படங்களின் சாயல் இருக்காமே... நீங்கள் நடித்து வெளிவந்த "உன்னை போல் ஒருவன்" படம் பற்றிய ஒரு கேள்வி.. அது, நீங்கள் ஏற்கனவே நடித்து வெளிவந்த "எனக்குள் ஒருவன்" படம் போல் இருக்குமா?
எனக்கு தெரியாம என் வீட்ட வேற படம் பிடிச்சிட்டீங்களாம்.... என்னை மாதிரி யாரோ பேசறாங்களாம் படத்துல... என்னப்பா இதெல்லாம்?
கமல் : ஆற்காட்டார் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன் அய்யா... இரண்டும் நான் நடித்த படங்கள் என்பதை தவிர எந்த ஒற்றுமையும் இல்லை... அவன் உங்களை போல், என்னை போல், நம்மை போல் ஒரு கோபமுற்ற இளைஞன் என்பதை தவிர ஒன்றுமில்லை அய்யா... அப்புறம் அந்த சாய்மீரா மேட்டர்...
கலைஞர் : உதயநிதி அப்புறம் அழகிரி பையனோட கம்பெனி... ரெண்டு பேருக்கும் தலா ஒரு படம் நடிச்சு கொடுத்துடு... அப்புறம் அந்த சாய்மீரா மேட்டர நான் பார்த்து கொள்கிறேன்... எவ்ளோ அமௌண்ட்? 11 கோடியா... சரி சரி...உடன்பிறப்பே... சாய்மீரா சாமிநாதனை அலைபேசியில் அழை...
vilvarani said
ஊலக நாயகன் கமல் போல் ஒருவரை பார்ப்பது மிகவும் கடினம்.
/*** Vivek said...
இட்லி வடை வாசகர்களுக்கு என்னாச்சு .. எதாவது நல்ல கமெண்ட் போடுவாங்கன்னு பாத்தா எல்லாம் வயித்தெரிச்சல் கமெண்ட், மொக்கை கமெண்டா இருக்கு ...**/
இட்லிவடை உங்களோட வேலை ஒண்ணும் இல்லையே!!!! பரிசு குடுக்க கூடாத்துணு இப்படி ஒரு கமெண்ட்ட கேப்ல போட்டுடீங்களா????
ஆனால் இது உண்மை தான்!! எல்லாமே மொக்கை மற்றும் வயித்தெரிச்சல் கமெண்ட்கள்.
ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள், தான் ரஜினி பிரியராக இருப்பதால் கமலை கண்டிப்பாக திட்ட வேண்டும் என்று பித்த வெறி பிடித்து அலைகிறார்கள் மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மனம் உண்டு என்று அறிவார்கள் (நாம் வைத்திருக்கும் பூ மல்லிகையா அல்லது கணக்காம்பரமா என்பது வேறு விசயம்!!!) என்று எனக்கு புரியவில்லை.
கண்டிப்பாக இதற்கும் ஒரு சிலர் பல பத்தி கொண்ட வெறித்தனமான பின்னூட்டங்கள் போடுவார்கள் என நம்புகிறேன்.
kamal : aiya,kooptu annupicheengalam...
kalaignar : amam - ennakku innum payment varlaya?
kamal : edhukku aiya payment?
kalaignar : en kuralla rendu scenela use panni irruke - edavadhu paathu pottu kudu...
kamal : aiya - indha chinna vishayattuka koopiteenga....ella printlayum - title cardla - "gaurava pechu"nnu - unga pera add panren...
kalaignar : nanri - idhu podhum (manasukkula - eppadiyo namma pechu "gauravamma" irrukkunnu solla oru sandarpam - udane arrikai ready panna vendiyadhu thaan)
கலைஞர்: " தம்பி வா... திரை படம் எடுக்க வா.. காயிதே மில்லத் என் கனவிலே வந்து கூறியது போல காவியம் படைக்க வா, அண்ணாவின் நூற்றாண்டு விழா தருவாயில் இந்த அண்ணனுக்கு நூறாவது நாள் விழா அழைப்பு கொடுக்க வா.. ஹோட்டலிலே ரூம் போடுவதற்காகவே இரண்டு முறை கல்யாணம் செய்துகொண்டவனே வா... "
கமல்: இப்போ நான் என்று ஒரு குன்றிற்கும் நீ என்ற ஒரு குன்றிற்கும் இடைப்பட்ட சமுதாய கோபத்தின் பிரதிபலிப்பு தான் இந்த உன்னை போல் ஒருவன்.. கதைக்கான கரு நான் களத்தூர் கண்ணம்மா பண்ணும்போதே எனக்குள் தோன்றினாலும் வாத்தியார் போட்ட வேகதடையினால் சற்று தாமதம்.. எனக்கு நசுருதீன் ஷாவும் வேணும் பெர்னாட்ஷாவும் வேணும்.. இந்த பிரபஞ்ச கூட்டின் நிலயான்மை உணரவே, கோணங்கி எழுதின "உப்பு கத்தியில் மறையும் சிறுத்தைகள்" நாவல தழுவி "தப்பு புத்தியில் மறையும் சிறுகதைகள்" னு ஒரு படம் எடுக்க போறேன்...
கலைஞர் : யோவ் வீரபாண்டியாரே, அப்பல்லோவுக்கு போன் போடுயா.. இந்த ஆள் என்ன விட பயங்கரமா கொழப்பறான்
க.ஞானி: ஐயா! மரியாதை நிமித்தம் நிமிடங்கள் சில நாம், நித்தம் சந்திப்பது இட்லி வடை வரை இடிக்கிறது.
கலைஞர்: பாசத் தம்பி, நேரா சொல்லு, புரியுர மாதிரி பேசி பழகு. நம்ம விஜயகாந்த் தம்பி படம் மரியாதைய ஆஸ்கார் அனுப்பனுமா.
க.ஞானி: அது வேறு, இது வேறு. நமது புகைப்படம் பேஸ்ட் செய்து கற்பனையாய் வசனம் எழுத சொல்லி, இட்லி வடை பதிவிட்டு குற்றுக்கு குந்தகம் செய்திருக்கிறது.
கலைஞர்: இவ்வளவு தானே! நம்ம மானஸ்தன் ஏற்கனவே தொலைபேசினார். ஆக வேண்டியதை செய்ய சொல்லி விட்டேன்.
க.ஞானி: அதுக்கில்லீங்க, நம்ம கோபி சொல்லியிருக்கிற ‘புலியின் மீசை’ மேட்டரு
கலைஞர்: அந்த இடக்கு மடக்கு தம்பி! என் ரேடாரில் வந்து ரொம்ப நாளாச்சு. ஆனாலும் ‘உளியின் ஓசை/ புலியின் மீசை’ எனும் போது எனக்கே புல்லரிக்கிரது. நல்ல கவி நடை இருக்கிறது. இந்த எந்திரன் பட்ஜெட் பாதி கேட்ட்து அவரா, நீயா!
கமல் முழிக்க.... கலைஞர் தொடருகிறார்.
கலை ஞானி, வித்தக கவிஞர் வரிசையில் நக்கல் நலங்கிள்ளி என பட்டம் தர நான் தயார். அவரிடம் கேட்க வேண்டும்.
க.ஞானி: ராகுல் தம்பி கூட, ஸ்பெஷல் ஷோ போடாத்து குறித்து வருந்துகிறார்.
கலைஞர்: நேருவின் பேரனே வா, கல் ஏறிய தயாராயிருக்கிறது கழகம்.
க.ஞானி: ஐயா! அது அரசியல், இது இட்லிவடை பின்னூட்டர்.
கலைஞர்: ஓ! அந்த டகுள் பாட்சா மேலே உள்ளவரா... என்னைஎழுத தெரியாது என்று எழுதிய தம்பி, இருக்கிறாள் தமிழ் அன்னையே உன்னை நம்பி.
க.ஞானி: அருண் கூட நீங்க அன் அபிஷியலா இரண்டு பட்த்தில நடிச்சத பத்தி எழுதிருக்காரு
கலைஞர்: பாஸ்கியை பார்த்தாயா! நான் சிவப்பு கருப்பு என்பதை தெரியாமல் வெள்ளையை பற்றி சொல்லியிருக்கிறான். நடுவிலே வெள்ளையாய் அண்ணாவை போட்டு என் வியாபாரத்தை கெடுத்த கதை தமிழகம் அறியும்.
க.ஞானி: சீனு! நம்மை தேவர் மகன் வரை ஈட்டு சென்று இருக்கிறார். ஐயா யதி ராஜ சம்பத் குமார், ரொம்ப டேஞ்சர் டெர்ரிஸ்ட். அவர் பின்னூட்டம் படிச்சா நாமளும் போட்டுத் தள்ளி புடுவோம்.
கலைஞர்: தம்பி பாலு! தரை வழி கப்பல் கூலிங்கிளாஸ் பேர்வழி இல்லை, இன்னொரு பின்னூட்டர். ரொம்ப கோப்ப்பட்டு வயித்தெரிச்சல்னு சொல்றார்.
விவேக் பார்த்துட்டு புலம்புரார். எல்லாம் மொக்கையா இல்லை இது இட்லி வடையான்னு.... எல்லாம் அந்த இ.வா. கே வெளிச்சம்.
கலை(ஞர்) ஞானி – கற்பனை சந்திப்பு.
க.ஞானி: ஐயா! மரியாதை நிமித்தம் நிமிடங்கள் சில நாம், நித்தம் சந்திப்பது இட்லி வடை வரை இடிக்கிறது.
கலைஞர்: பாசத் தம்பி, நேரா சொல்லு, புரியுர மாதிரி பேசி பழகு. நம்ம விஜயகாந்த் தம்பி படம் மரியாதைய ஆஸ்கார் அனுப்பனுமா.
க.ஞானி: அது வேறு, இது வேறு. நமது புகைப்படம் பேஸ்ட் செய்து கற்பனையாய் வசனம் எழுத சொல்லி, இட்லி வடை பதிவிட்டு கூற்றுக்கு குந்தகம் செய்திருக்கிறது.
கலைஞர்: இவ்வளவு தானே! நம்ம மானஸ்தன் ஏற்கனவே தொலைபேசினார். ஆக வேண்டியதை செய்ய சொல்லி விட்டேன்.
க.ஞானி: அதுக்கில்லீங்க, நம்ம கோபி சொல்லியிருக்கிற ‘புலியின் மீசை’ மேட்டரு
கலைஞர்: அந்த இடக்கு மடக்கு தம்பி! என் ரேடாரில் வந்து ரொம்ப நாளாச்சு இந்த எந்திரன் பட்ஜெட் பாதி கேட்ட்து அவரா, நீயா!.
கமல் முழிக்க.... கலைஞர் தொடருகிறார்.
ஆனாலும் ‘உளியின் ஓசை/ புலியின் மீசை’ எனும் போது எனக்கே புல்லரிக்கிரது. நல்ல கவி நடை இருக்கிறது. கலை ஞானி, வித்தக கவிஞர் வரிசையில் நக்கல் நலங்கிள்ளி என பட்டம் தர நான் தயார். அவரிடம் கேட்க வேண்டும்.
க.ஞானி: ராகுல் தம்பி கூட, ஸ்பெஷல் ஷோ போடாத்து குறித்து வருந்துகிறார்.
கலைஞர்: நேருவின் பேரனே வா, கல் ஏறிய தயாராயிருக்கிறது கழகம்.
க.ஞானி: ஐயா! அது அரசியல், இது இட்லிவடை பின்னூட்டர்.
கலைஞர்: ஓ! அந்த டகுள் பாட்சா மேலே உள்ளவரா... என்னைஎழுத தெரியாது என்று எழுதிய தம்பி, இருக்கிறாள் தமிழ் அன்னையே உன்னை நம்பி.
க.ஞானி: அருண் கூட நீங்க அன் அபிஷியலா இரண்டு பட்த்தில நடிச்சத பத்தி எழுதிருக்காரு
கலைஞர்: பாஸ்கியை பார்த்தாயா! நான் சிவப்பு கருப்பு என்பதை தெரியாமல் வெள்ளையை பற்றி சொல்லியிருக்கிறான். நடுவிலே வெள்ளையாய் அண்ணாவை போட்டு என் வியாபாரத்தை கெடுத்த கதை தமிழகம் அறியும்.
க.ஞானி: சீனு! நம்மை தேவர் மகன் வரை ஈட்டு சென்று இருக்கிறார். ஐயா யதி ராஜ சம்பத் குமார், ரொம்ப டேஞ்சர் டெர்ரிஸ்ட். அவர் பின்னூட்டம் படிச்சா நாமளும் போட்டுத் தள்ளி புடுவோம்.
கலைஞர்: தம்பி பாலு! தரை வழி கப்பல் கூலிங்கிளாஸ் பேர்வழி இல்லை, இன்னொரு பின்னூட்டர். ரொம்ப கோப்ப்பட்டு வயித்தெரிச்சல்னு சொல்றார்.
விவேக் பார்த்துட்டு புலம்புரார். எல்லாம் மொக்கையா இல்லை இது இட்லி வடையான்னு.... எல்லாம் அந்த இ.வா. கே வெளிச்சம்.
கம : வணக்கம் ஐயா !
கலை: வா தம்பி உட்கார்!
கம: ஐயா - உங்கள் வழியில் என் வாழ்க்கையில் எவ்வளவோ .....
கலை: (திடுக்கிடுகிறார்)
கம : இன்னல்களை சந்தித்து - வெற்றி கண்டு வருகிறேன் என்று சொல்ல வந்தேன் ஐயா !
கலை : ஓஹோ! நான் கூட உன்னை மாதிரி பல .....
கம : (திடுக்கிடுகிறார்)
கலை: விஷயங்கள் தெரிஞ்சு - கலைஞர் பட்டம் பெற்றேன்!
கம : ஐயா நான் கலைஞன் என்று ஒரு படத்தில் நடித்துள்ளேன்!
கலை : நீங்க எப்பொழுதோ பேசும் பொழுது கடவுள் வேடத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஏன் என்றால் நான் கடவுள் யாரையும் பார்த்ததில்லை என்று சொல்லியிருந்ததைப் படித்தேன்.
கம: ஆமாம் ஐயா - அதையே இப்பொழுதும் சொல்கிறேன்.
கலை : ஆனா மருதநாயகத்தை மட்டும் பார்த்திருப்பீர்கள் போலிருக்கு - இந்து தீவிரவாதி கூட பார்த்திருப்பீர்கள் போலிருக்கு!
கம: ஐயா - சந்தர்ப்ப வாதம் எல்லாம் கூட நான் உங்களைப் பார்த்துக் கத்துகிட்டதுதான்!
கலை : அட அப்படியா - அடுத்த அண்ணா விருது உங்களுக்குத்தான்.
கம: நன்றி ஐயா!
:: குரோம்பேட்டை கோபால் குமார்::
All Comments Super.Real Creative Dialogues.....Keep it up
// "உப்பு கத்தியில் மறையும் சிறுத்தைகள்" நாவல தழுவி "தப்பு புத்தியில் மறையும் சிறுகதைகள்" னு ஒரு படம் எடுக்க போறேன்...
கலைஞர் : யோவ் வீரபாண்டியாரே, அப்பல்லோவுக்கு போன் போடுயா.. இந்த ஆள் என்ன விட பயங்கரமா கொழப்பறான்//
Hillarious!!!!
neenga ponavati matum padatha parthingala?
or
paravaillai neenga oru mutham thanga athu pothum illina oru virudhu avlothan
Kalaignar: Vaanga thambi, saaminathanukku kuselan sangu oothuna appuramum, neenga "saai meera" saayama irukka kai kodutheenga... aanaa, parunga avan ungalukke aappu adikkiraan....
Kalaignani: ithu enakku enakku eppothum nervathu thaane ayya...
Kalaignar: Ithai sila rajini veriyargal thrithu seithi parappuraanganu enakku theriyum thambi....
Kalaignani: Suriyanai paarthu kuraitha naai kathaigalum ungalukku theriyum thaane ayya...
Kalaignar: Idly vadai kooda kindalukku vazhi vakuthu - mattamana comments anumathikkirathu polirukku....
Kalaignani: (in Anbe Sivam style) pozhachu pogattum vidungayya...!
இந்த பொழப்புக்கு......................
..............ம்
.....................கு
.......கே
.....................வா
.....................சு
நாராயணா நாராயணா
கலை: வா தம்பி எப்பொழுதும் என்ன கதை என்று புரியாத அளவுக்கு படம் எட்டுப்பே இந்த முறை கொஞ்சம் வித்யாசமாக எல்லோருக்கும் புரியும் படி ஒரு படம் .. நான் கூட எதிர்பார்கலே
கமல்:Iyaa இது ஒரு ஹிந்தி படம் அதை துழுவி அப்படியே ....
கலை: கலையின் மீது உன் காதல் குறைந்துவிட்டவத
கமல்: இல்லை இயா சாய்மீராவுக்கு 4 கோடி தரனும் அப்படியே கொஞ்சம் கல்லா கட்டனும் அதான்
கலை: அப்பா உன் பணம் பணம் உன்பனம் அது பணம்
Kamesh
கலைஞர்: தம்பி, உன்னைப்போல் ஒருவன் பெரிய வெற்றியாமே, அடுத்த படத்துக்கு நானே வசனம் எழுதிடட்டுமா? பேனாவை ரெடியாத் தீட்டி வெச்சிருக்கேன்
கமல்: (திகைத்துப்போய்) இல்லீங்கய்யா, நான் ‘பேசும் படம்’மாதிரி வசனம் இல்லாம எடுக்கறதா முடிவு செஞ்சுட்டேன், இப்பதான் ;)
Kalaingar : Vanakam Kamal nala irukingalah..?
Kalaigyani : Vanakam Ayya naan nandraga ulen...
Kalaingar : Idly vadai edavathu sapidringalah
Kalaigyani : Athu pura oosi pona itemah irkuthay ayya ena pandrathu...
Kalaingar : Puriyalae...
Kalaigyani : Masala nambiyae valum makaluku mathiyil 6-vathu arivai puguthiulen...anal enaku 5 arivu than iruku ean soalkirathu intha comment-il ullavargal
"Pottukudutha pappuva nama onnum panamudiyathu" (Vassol raja MBBS)
"Moolai ilatha makalai nama thiruthavay mudiyathu" (Saval Raja B.L.,)
http://www.eramurukan.in/tamil/magazines.php
நீங்கள் வசனம் எழுதிய முதல் திரைப்படமான உன்னைப் போல் ஒருவன், வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த நேரத்தில், உங்களுடைய ஒரு மினி பேட்டியை என் நேசமுடன் இதழில் சேர்க்க ஆவல். கேள்விகள் இவை:
1. நீங்கள் எழுதிய வசனங்கள் கண்ணெதிரே உயிரோட்டத்துடன் விரியத் தொடங்கியபோது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
2. நீங்கள் வசனம் எழுதியபோது, இது கமல் பேசும் வசனங்கள் என்பதற்காக சிறப்புக் கவனம் ஏதேனும் எடுத்துக்கொண்டீர்களா?
3. வசனம் எழுதியபோது, The Stupid Common Manஐ உள்ளூர நீங்கள் உணர்ந்தீர்களா?
4. உங்களுடைய இத்தனை ஆண்டுகால நவீன இலக்கிய பரிச்சயம், பயிற்சி ஆகியவை வசனம் எழுத எப்படிப் பயன்பட்டன?
5. உங்கள் எழுத்தில் உள்ள தனித்தன்மையை, வசனங்களில் கொண்டுவர முடிந்ததா?
என் பதில் (நிறைய நேரம் எடுத்து யோசித்த பிறகு)
இப்போது வேண்டாமே வெங்கடேஷ். படம் பெருவெற்றி பெற்றிருக்கிறது. இணைய நண்பர்கள் பலரும், திரு இ.பா, ஜெயமோகன், பா.ரா, பெண்ணேஸ்வரன் என (விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) சக எழுத்தாளர்களும், சுதீஷ் காமத் போன்ற விமர்சர்கர்களும், பெருவாரியான ரசிகர்களும் படத்தின் மற்ற பல நல்ல அம்சங்களோடு கூட உரையாடலையும் ரசித்திருக்கிறார்கள். மற்றவர்களும் படம் பார்க்கட்டும்.
தவிர, அங்கங்கே சில இடங்களில் ஜெலூசில் வியாபாரம் திடீரென்று அதிகமானதாகத் தெரிகிறது. அந்த மருந்துக் கடைகளுக்கும் வருமானம் வரட்டும்.
மு.க. : வாய்யா, அந்தணர் குலக் கொழுந்தே. பெரியார் பெக்காத பேரனே. என் அருமைத் தம்பியே!
உ.நா: வணக்கம் அய்யா!! திருக்குவளைத் திருமகனின் திருநாவால் திகட்டத் திகட்டத் திட்டு வாங்கினாலும் தித்திக்குமே!!
மு.க. : என்ன தம்பி வரும் போதே ரொம்பத்தான் பில்டப் குடுக்கற!
உ.நா.: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை ஐயா. என் படம் நானே எதிர்பார்க்காத வகையில் நன்றாகப் போவதால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியில் ஏதோ உளறுகிறேன்.
மு.க. : நீ உளர்றதுதான் ஊர் அறிஞ்ச விஷயம் ஆச்சே. அது என்னையா, கையில் நீல புஸ்தகம்?
உ.நா.: இட்லிவடை வலைமனையில் யாரோ ராம கிருஷ்ணனாம், அவர் சனி பெயர்ச்சி பலன் எழுதிவருகிறார். ரிஷப ராசிக்கும், குறிப்பா மிருகஷீரிஷம் நட்ஷத்ரத்துக்கு அவர் எழுதின பகுதிய அப்டியே கட்டி-வெட்டி-ஒட்டி உங்களுக்கு குடுக்க வந்தேன். இந்தாங்க. மறக்காம ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்லுங்க.
கலைஞர்:ஏம்ப்பா உன் படத்துல என் குரல்ல பேசுன ப்ரஹஸ்பதி யாருப்பா?......
கமல்: நான் தாங்கய்யா......!
கலைஞர்:ஏம்ப்பா அதுக்கு நீ என்னையேக் கூப்பிட்டுருக்கலாமே?......
கமல்: உங்களுக்கு வேலை நெறையா இருக்குமேன்னு தான்.................
கலைஞர்:அடப் போய்யா....சினிமா வேலையை விட மத்த வேலைங்க முக்கியமா எனக்கு............
//கமல்: மர்மயோகியில...
கலைஞர்: கதை வசன உதவி தேவைப்படுதா?
கமல்: (தேவர் மகன் ஸ்டைலில்) இல்லையா. என்ன உட்டுடுங்கையா. நான் போறேன். இது காட்டுமிராண்டிதனமா இருக்கு.//
டாப்பு டக்கர் வசனம்!
கலைஞர்: என்னப்பா இந்த பக்கம்?
கமல்: ஐயா, படம் வந்து 3-4 நாளு கூட ஆகுல.... அதுக்குள்ள ஒரு 90 விமர்சனம் பதிவுலகம் பார்த்துடிச்சு....ஒரு common man னா நா என்னா பண்ணுறது...அதான் அத்தனையும் பைல் போட்டு எடுத்து வந்து இருக்கேன்...இதை படிச்சுட்டு ஒரு கலவையா கவிதை எழதி குடுங்க...
கலைஞர்: வேண்டாம்பா...வேண்டாம்....அப்புறம் இது மஞ்ச துண்டு இல்ல, மடிசாருனு ஒரு 100 பதிவு வரும்...தேவயா?
கலைஞர்: நானே உன்னை அழைத்துப் பேசணும்னு நினைச்சேனப்பா
கமல்: சொல்லுங்க
கலைஞர்: நீ நன்றாக மேக்கெப் போட்டுக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு செய்து கொள்கிறாயெ.. சில நாள் என்னைப் போல மேக்கெப் போட்டுக் கொண்டாயானால் நான் சில நாள் ஓய்வு எடுப்பேன்
கமல்: மேக்கெப் போட்டுக்கிறது சுலபங்க.. ஆனா உங்களை மாதிரி மேக்கப் செய்ய முடியுமா
Post a Comment