பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 26, 2009

செல்லாத ஓட்டு போட்ட புத்திசாலி

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பா.ம.க. பொதுக்குழு டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் யாருடன் கூட்டணி தொடர்பான ஓட்டெடுப்பு நடந்தது.

யாருடன் கூட்டணி வேண்டும் என்று விரும்புபவர்கள் அந்த கட்சியின் பெயரை “டிக்” செய்து பெட்டியில் போட்டனர். பாமக தேர்தலில் 2581 பேர் ஓட்டு போட்டிருந்தனர்.

இதில் அ.திமு.க. கூட்டணியில் சேர 2453 பேரும்,
தி.மு.க கூட்டணியில் சேர 117 பேரும் வாக்களித்தனர்.
ஒரு ஓட்டு செல்லதா ஓட்டு. அவர் அதிமுக-திமுக இரண்டையுமே டிக் செய்திருந்தார்.

ஓட்டெடுப்பு முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பா.ம.க. பொதுக்குழுவில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர தீர்மானிக்கப்பட்டது.

அந்த செல்லாத ஓட்டு போட்டவருக்கு நிச்சயம் மந்திரி பதவி உண்டு

33 Comments:

SUBBU said...

//அந்த செல்லத ஓட்டு போட்டவருக்கு நிச்சயம் மந்திரி பதவி உண்டு//
ஹய்யோ ஹய்யோ, எப்பிடிதான் கண்டு பிடிக்கிராய்ங்கலோ :)

R.Gopi said...

//அந்த செல்லத ஓட்டு போட்டவருக்கு நிச்சயம் மந்திரி பதவி உண்டு//

*********

ஏங்க, அவரு அவ்ளோ அரசியல் அப்பாவியா??

இல்ல, நீங்க சொன்ன மாதிரி மந்திரி பதவி வாங்கிடுவாரோ??

எது எப்படியோ, கடை தொறந்தாச்சு, வியாபாரம் தொடங்க போகுது...... கல்லா நிறைய போகுது .......

(ஆண்டவா, இவிங்க எல்லார் கிட்டயும் இருந்தும் இந்த அப்பாவி தமிழ்நாட்டு மக்களை காப்பாத்துப்பா!!!)

மஞ்சள் ஜட்டி said...

அதுக்கு பேரு தான் "வரும்....ஆனா வராது"....ஒருவேளை அன்புமணியா இருக்குமோ??

இனியவன் said...

அட நம்ம டாக்டர் எங்கே வேணும்னாலும் இருப்பாருனு புத்திசாலி தனமா செல்லா ஒட்டு போட்டிருப்பனு நெனக்கிறேன்..ஏனுங்க அப்படி தானே ?

Anonymous said...

PMK's decision is already expected one.

That Guy who voted for both DMK and ADMK is none other than RAMADAS.

Am i right friends!


by bsrikanth19@gmail.com
bangalore

Rajaraman said...

\\அந்த செல்லத ஓட்டு போட்டவருக்கு நிச்சயம் மந்திரி பதவி உண்டு//

அப்ப அந்த செல்லாத ஒட்டு போட்டவர் நிச்சயம் அன்புமநியாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா?

மனிதன் said...

கூட்டணி மாற்றத்திற்காக கொள்கை அளவில் எதையும் பாமக விட்டுத்தரவில்லை, பிற்படுத்தப்பட்ட சமுதாய முன்னேற்றத்தை விட்டுத்தந்தனரா? தமிழ் மொழி,சமுதாய வளர்ச்சியை விட்டுதந்தனரா?

பாமகவை தாக்குபவர்கள் திமுக,அதிமுக,பாஜக,காங். எல்லாம் எக்காலத்திலும் ஒரே கூட்டணியில் இருப்பதாக எண்ணுகின்றனரோ?

neysamy said...

அம்மாவுக்கு சலம் ஆரம்பித்த பிறகு கலைஞரிடம் எப்படி இருந்த நான் அம்மாவிடம் இப்படி ஆய்ட்டேன் என்று சொல்லும் காலம் வரும்.

மணிஜி said...

பொதுக்குழுவில்"இலை" விருந்து தடபுடலாம்(ஆமாம் பரிசு எப்ப வரும்)

மணிஜி said...

பொதுக்குழுவில்"இலை" விருந்து தடபுடலாம்(ஆமாம் பரிசு எப்ப வரும்)

மணிகண்டன் said...

****
கொள்கை அளவில் எதையும் பாமக விட்டுத்தரவில்லை, பிற்படுத்தப்பட்ட சமுதாய முன்னேற்றத்தை விட்டுத்தந்தனரா? தமிழ் மொழி,சமுதாய வளர்ச்சியை விட்டுதந்தனரா?
*****

பாட்டாளி சார், நீங்க சொல்றது ரொம்பவே சரி. எந்த கொள்கையும் பாமக விட்டு தரல. இருந்தா தான் விட முடியும் !

Anonymous said...

இப்போ ஜெ-யை ராம்தாஸ் அக்கா என்றும், அன்புமணி அத்தை என்றுறம் அழைக்க ஆரம்பிப்பார்கள்.
.... அந்த செல்லாத ஓட்டு போட்டவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சொல்லி நீக்கப்படுவார்.
( கட்சி கொள்கையே காவடி தூக்கறது அல்லது தூற்றறது தானே!)--- டில்லி பல்லி

Anonymous said...

New name to ramadoss, "Political Prostitute"

Anonymous said...

இப்படி பண்ணூவாங்கன்னு தெரிஞ்சு இருந்தா காடு வெட்டியை ரிலீஸ் பண்ணி இருக்க மாட்டேனே-- மஞ்சள் முனகல்.

Anonymous said...

That intelligent guy..

who else can do such a activity..

Dr.ayya ..the one and only...

Anonymous said...

>>பாமகவை தாக்குபவர்கள் திமுக,அதிமுக,பாஜக,காங். எல்லாம் எக்காலத்திலும் ஒரே கூட்டணியில் இருப்பதாக எண்ணுகின்றனரோ?>>>

அப்போ அவிங்க மாதிரி இவிங்களும் அதே குட்டையில் ஊறும் மட்டைகளா?..”ஏண்டா திருடினே”ன்னு கேட்டா, அவிங்களும் தான் திருடினாங்களேன்னு சொல்ற மாதிரி கீது...

Anonymous said...

Politics is no more the last resort of scoundrels. It is their only resort.

Anonymous said...

nalaikku murasoliyil kavaithai superaa irukkum.

நாரத முனி said...

//அந்த செல்லத ஓட்டு போட்டவருக்கு நிச்சயம் மந்திரி பதவி உண்டு//

யோவ் இட்லி பின்னி எடுக்கற போ... உன் குசும்புக்கு தீனி போடவே எலக்ஷன் வருதுப்பா

M Arunachalam said...

Hello Paattaali,

//பாமகவை தாக்குபவர்கள் திமுக,அதிமுக,பாஜக,காங். எல்லாம் எக்காலத்திலும் ஒரே கூட்டணியில் இருப்பதாக எண்ணுகின்றனரோ?//

You have also commented in a previous post in IV like this:

//1.DMK ALLIES WITH ALL EXCEPT AIADMK
2.ADMK ALIES WITH ALL EXCECT DMK
3.CONGRESS ALLIES WITH ALL EXCEPCT BJP
4.BJP ALLIES WITH ALL EXCECT CONGRESS AND COMMUNIST
5.COMMUNIST ALLIES WITH ALL EXCEPCT BJP
6.VCK ALLIES WITH DMK AND ALSO ADMK
7.MDMK ALLIES WITH ALL

WHAT IS NEED TO BLAME PMK?//

My answer is as follows:

1.An Industrialist (DMK) ALLIES WITH ALL EXCEPT Unions (AIADMK)
2.Union workers (ADMK) ALLIES WITH ALL EXCECT an Industrialist (DMK)
3. Govt. Dept. (CONGRESS) ALLIES WITH ALL EXCEPT a business-man (BJP)
4. A business-man (BJP) ALLIES WITH ALL EXCEPT Govt. Dept. (CONGRESS) AND a beggar (COMMUNIST)
5. A beggar (COMMUNIST) ALLIES WITH ALL EXCEPT a business man (BJP)
6. A Broker (VCK) ALLIES WITH Industrialist (DMK) AND ALSO Union (ADMK)
7.A consultant (MDMK) ALLIES WITH ALL.

You have forgotten to add one more.

A PROSTITUTE (YOU KNOW WHO) courts all the above people but definitely prefers the one who can PAY HER THE HIGHEST.

But, ultimately the whole SOCIETY BLAMES only the prostitute for spoiling the society, right?

This is the answer to your question.

R.Gopi said...

//Anonymous said...
இப்படி பண்ணூவாங்கன்னு தெரிஞ்சு இருந்தா காடு வெட்டியை ரிலீஸ் பண்ணி இருக்க மாட்டேனே-- மஞ்சள் முனகல்.//

******

நச் கமெண்ட்.

சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி

Anonymous said...

உங்கள் செய்தி தவறு. நடுவுநிலையில் ஓட்டளித்தது ஒருவர் இல்லை 10 பேர்.
According to dinamalar 2453 voted for alliance with ADMK, 117 for DMK and 10 நடுவுநிலை.

cho visiri said...

PMK's decision is already expected one.

That Guy who voted for both DMK and ADMK is none other than RAMADAS.

Am i right friends!

by bsrikanth19@gmail.com
bangalore

I agree with Sreekant.
Dr.Senior will say that he remained neutral in order to give respect to Anbumani (who may not have been too keen to resign the Ministerial post) and to simultaneously give respect to party men who wanted alliance with AIADMK.

Secondly, in 2014 he will tell us that in 2009 too, the decision to ally with AIADMK was taken against his wish not to leave DMK.
Last but not the least, Dr.Senior may even tell tomorrow that he favoured a combination of DMK, AIADMK and PMK as single formidable alliance.
Hi....Hi......

mazhai said...

That is Dr. Anbumani Ramdas....No doubt.

மாயவரத்தான் said...

யோவ், என்னய்யா பொதுக்குழு தேர்தல் இது? ஓட்டெடுப்பு எடுத்த இடத்தில அஞ்சா நெஞ்சனை விட்டுருக்கணும். அப்போ தெரிஞ்சிருக்கும் யாருக்கு சப்போர்ட்டுன்னு!

Anonymous said...

லோக்சபா தேர்தல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ஏப்ரல் 1ம் தேதிதான் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.
பாஜகவுடன் பேசி வருவது உண்மைதான். ஆனால் அவர்கள்தான் எங்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள் என்றார் கார்த்திக்.

Anonymous said...

/அந்த செல்லாத ஓட்டு போட்டவருக்கு நிச்சயம் மந்திரி பதவி உண்டு/
இட்லி வடையின் கணிப்புப்படி பா.ம.க.
ஜெயித்து, ஆட்சியில அமருது.வாஹ்ரே வாஹ்.

Anonymous said...

பீட்டர் மாமா - சுசிலா மாமி

அப்ப அன்புமணி எதுக்கு டெல்லி போனார்..?’’ என்று சுசி மாமி விசாரித்தாள்.

‘‘டியெம்கே அணில இருந்து விலக வேண்டிய நிலைமை வந்ததுக்கு என்ன காரணம்னு விளக்கம் கொடுக்கதான் போனாராம்.. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டா நிச்சயமா பியெம்கே சப்போர்ட் உண்டுனு பிராமிஸ் பண்ணினாராம்..’’

‘‘காங்கிரஸ் அணிலதான் பியெம்கே இருக்குன்னு தங்கபாலு கடைசி செகண்ட் வரைக்கும் சொல்லிகிட்டு இருந்ததை பாத்து எனக்கு வேற மாதிரி டவுட் வந்துடுத்து.

ஒருவேளை அன்புமணி இங்கேயும் அவர் ஃபாதர் அங்கேயும் இருந்து ரெண்டு அணியிலயும் தலா அஞ்சு சீட் கிடைச்சா டோட்டல் பெருசாயிடுமே.. அந்த மாதிரி எதுவும் ஐடியா..’’ என்று சுசி மாமி சொல்லும்போது பீட்டர் மாமா பலமாக சிரித்தார்.

‘‘தேவகவுடா - குமாரசாமி ஃபார்முலா ஞாபகத்துல பேசுற.. அன்புமணிக்கு டியெம்கே அலையன்ஸ் பிடிச்சுருந்தாலும் அப்பா பேச்சை மீற மாட்டார். இவர் டெல்லி போயிருந்தாலும் அவர் தைலாபுரத்துல ஆக்டிவா இருந்தார். ஏடியெம்கே தர்ற 7 தொகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கட்சி பிரமுகர்களை வரவழைச்சு ஆலோசனை நடத்தினாராம்..’’

‘‘பொதுக்குழு கூடும்போது அதுக்கென்ன அவசரம்..?’’

‘‘பொதுக்குழுவுல பெட்டிகள் வச்சு வாக்கெடுப்பு நடத்துவாங்களாம். எந்த கூட்டணில சேரலாம்னு கருத்து சொல்லலாம்... நைன்டி பெர்சன்ட் உறுப்பினர்கள் ஏடியெம்கே கூட சேரலாம்னு சொல்லுவாங்களாம்.. மீதிப்பேர் டியெம்கே அணியிலயே தொடரலாம்னு சொல்லுவாங்களாம்.. அந்த அடிப்படைல, பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்பப்படி ஏடியெம்கே அணிக்கு போறதுனு முடிவை அறிவிப்பாங்களாம்..’’

‘‘ரிகர்சல் நடந்த மாதிரியும் அதை ஒளிஞ்சிருந்து பாத்தா மாதிரியும் சொல்றேளே..?’’

‘‘இன்ஃபர்மேஷன் கிடைச்சதை சொன்னேன். இன்னொரு பாசிபிலிடி, ‘டியெம்கே உறவு வேண்டாம்; கூட்டணி யாரோடன்னு முடிவு எடுக்கிற அதிகாரத்தை டாக்டருக்கு வழங்குகிறோம்’னு தீர்மானம் போடுவாங்களாம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இவ்வளவு தூரம் டீடெய்ல்ஸ்லாம் வெளியில தெரிஞ்சுட்டா ஸ்கிரிப்டை மாத்திடுவாளே..?’’ என்று கேட்டாள் சுசி மாமி.

‘‘சின்ன சேஞ்சஸ் பண்ணலாம். கதையவே மாத்த முடியாதே..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா.

neysamy said...

Srikanth is correct.PMK supportars are the only people who voted for both the parties DMK and AIADMK (in alternate elections).

Krish said...

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

Anonymous said...

pajjothi maaakal katchi

Rajan said...

avaru vera yaarumilla

'FOREST CUTTING' GURU

neysamy said...

Ramadoss will become Zero and Vijayakanth will become Hero after the election.