பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 30, 2009

இரண்டு படங்கள், இரண்டு செய்திகள்

கீழே இரண்டு படங்களும் செய்திகளும் இருக்கு.


பிரபல(?) நடிகை ரம்பா முதல்வர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார் ரம்பா. இன்று காலை நடிகை ரம்பா முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கான காரணம் குறித்து செய்திகள் வெளியாகவில்லை. எனினும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இச்சந்திப்பு நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிராமண சமுதாயத்திற்கு 7 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் நேரில் வழங்கினார்.

நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது பிராமண சமுதாய மக்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரிடம் மனு ஒன்றை கொடுத்தார். பிராமணர்களுக்கு இந்த இடஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்தினார்.

இதனை கனிவுடன் கவனிப்பதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று அரசிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்தால் போதும், திமுக கூட்டணிû ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது குறித்து ஏப்ரம் மாதம் தமது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு படத்திலும் ’ஜெ’யம் காலண்டர் இருக்கிறது. முதல்வரும் இருக்கிறார்.

14 Comments:

Anonymous said...

S.Ve.Shekar ku, Kalaignar ku Manjal Saalvai porthanum nu theriyatha? ayyoo..ayyoo..ivarlaam ennatha arasiyal panni? (Ramadoss ithula talented...refer old pics pls)

R.Gopi said...

//இதனை கனிவுடன் கவனிப்பதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று அரசிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்தால் போதும், திமுக கூட்டணிû ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.//

*******

நடிகை ரம்பா
நடிகர் எஸ்.வி.சேகர்

வேற யாருப்பா அது, வாசல்லையே நிக்கறது...... ஒவ்வொருத்தரா வாங்க ......

வந்து "தல"யை வாழ்த்துங்க. பொன்னாடை போர்த்துங்க .... கலெக்ஷன் பாக்கற வழிய பாருங்கப்பா.......

"தல" இப்போதான் "தொடையழகி ரம்பா"வ பாத்தா குஸில இருக்காரு ........ இதே மூட்ல வந்து கலெக்ஷன் ஆரம்பிங்க.

(பின்குறிப்பு - "ரம்பா' கிட்ட "தல" மானாட மயிலாட நமீதா பத்தி எதுவுமே கேக்கலியாம்!!!)

R.Gopi said...

//இதனை கனிவுடன் கவனிப்பதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று அரசிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்தால் போதும், திமுக கூட்டணிû ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.//

*******

நடிகை ரம்பா
நடிகர் எஸ்.வி.சேகர்

வேற யாருப்பா அது, வாசல்லையே நிக்கறது...... ஒவ்வொருத்தரா வாங்க ......

வந்து "தல"யை வாழ்த்துங்க. பொன்னாடை போர்த்துங்க .... கலெக்ஷன் பாக்கற வழிய பாருங்கப்பா.......

"தல" இப்போதான் "தொடையழகி ரம்பா"வ பாத்தா குஸில இருக்காரு ........ இதே மூட்ல வந்து கலெக்ஷன் ஆரம்பிங்க.

(பின்குறிப்பு - "ரம்பா' கிட்ட "தல" மானாட மயிலாட நமீதா பத்தி எதுவுமே கேக்கலியாம்!!!)

வாழவந்தான் said...

இந்த ஜெயம் ரியல் எஸ்டேட் தலைவர் குடும்பத்தில் யாருக்கு சொந்தமானது?

Anonymous said...

அட, இங்க பாருயா!

நம்ம மயிலாப்பூர் தொகுதி AIADMK சட்ட மன்ற உறுப்பினர் இப்போ எந்த கட்சில இருக்காரு?

சட்ட கலர் "ஆரஞ்சு" போத்தர துண்டு "காவி" (கிட்டத்தட்ட)!
சட்டைல "தேசிய" கொடி (காங்கிரஸ் பரம்பரை!)
இருக்கது "தல" வீட்டுல!
பின்னாடி காலண்டர்ல "ஜெ"!!!

அது சரி, கேக்கறதுதான் கேக்கறீங்க ஒரு 20% கேக்கலாமே! ஏன் only 7%, திரு சேகர் அவர்களே!!!

அரவிந்தன் said...

ஒரு வேளை சேகர் கேட்பதுபோல 7% ஓதுக்கீடு பிராமணர்களுக்க்கு கிடைத்திவிட்டால் அதன்பிறகு”கோட்டாவில் படிக்கும் மாணவர்கள் என்று எள்ளலோடு எழுதுவாரா இ.வ

IdlyVadai said...

அனானி உங்க காலெண்டர் ஜோக்கை மிகவும் ரசித்தேன். ஆனால் அதை இவ'ல பிரசுரிக்க முடியாது :-)

மாயவரத்தான் said...

அது என்னங்க அனானி அனுப்பிய காலெண்டர் ஜோக். அநியாயமா நீங்க மட்டும் ரசிக்கிறீங்க. எங்களுக்கும் சொன்னா நாங்களும் ரசிப்போமில்ல? ஹிஹி

Krish said...

எப்பவும் தேசியக் கோடியை குத்துகிட்டு வர்றாரே! ஏங்க

Krish said...

"பிராமணர்கள் இந்த நாட்டின் கடவுள்கள்; அவர்களின் ஆசியை பெறாமல் , யாரும் மன்னராக உயர முடியாது " - லல்லு பிரசாத் யாதவ்

கருணாநிதி யும் இதையே சொன்னால்கூட ஆச்சரிய பட முடியாது. ஓட்டு அரசியல் படுத்தும் பாடு!

Krish said...

அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆண்டவன் நினைத்தால் அது தானே நடக்கும் - ரம்பா

Venkat said...

"ஜெயம்" காலண்டர் பார்த்ததும் சேகர் பயந்துருப்பாரு..."எங்க வீடு மாறி வந்துட்டேன்னா ?"
அரசியல் செய்ய சரியான இடத்திலிருந்து ஆசீர்வாதம் வாங்கிருக்கீங்க. வாழ்க.. நீங்களும் உங்கள் சுற்றத்தாரும் வளர்க.

Anonymous said...

""நடிகை ரம்பாவுக்கு சொத்து சம்பந்தமா ஒரு சிக்கல் இருந்ததாம் பா... அது தொடர்பா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனை
சந்திச்சிருக்காங்க... "முதல்வரை சந்திச்சு பேசினா பிரச்னை தீர வாய்ப்பிருக்கு... சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி தாங்க'ன்னு கேட்டிருக்கார்...


""பிரச்னையைத் தீர்த்துட்டா, நடிகையை தி.மு.க.,வுக்கு அழைச் சுட்டு வந்துடலாம்... இல்லாட்டாலும் தேர்தல் பிரசாரம் செய்யவாவது அழைக்கலாம்னு தயாரிப் பாளர் திட்டமிட்டிருக் கார்... முதல்வரை சந்திக்க நேரமும் வாங்கிக் கொடுத்துட்டார்...


""முதல்வரை சந்திச்ச நடிகை, தன்னோட பிரச்னையை சொல்லியிருக்கார்... "எல்லாம் சரி பண்ணிடலாம்'ன்னு பதில் வந்ததாம்... அடுத்த அரை மணி நேரத்துல பிரச்னை தீர்ந்துடுச்சாம்...


சந்தோஷத்தில் இருக்கும் ரம்பா, அதுக்கு நன்றிக்கடனா தி.மு.க.,வுக்கு ஆதரவா பிரசாரத்துல குதிச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை பா...'' என்றார் அன்வர்பாய்.

Unknown said...

அடங்கொக்கமக்க........!!!! இந்த வயசான காலத்துல ரம்பா ஆயாவுக்கு எதுக்கு வேண்டாத வேல......!!!! நா நெனைக்குறேன்......... இந்தம்மாவ வெச்சு தி.மு.க இளைஞர் அணிக்கு பாட்டி கத சொல்லிகுடுப்பாங்கன்னு .....!! நெம்ப சந்தோசமும்கோவ்.......!!!!


----------------------------------------------------

ஆமாங்கோவ் ......!! பிராமண சமுதாயத்திற்கு 7 சதவீத இடஒதுக்கீடு வேனுமுங்கோவ்.......!! வேணுமுன்னா தி.மு.க கட்சிக்கு ப்ரீய்யா பரிகாரம் பண்ணிதரமுங்கோவ்..........!!!!!!