பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 19, 2008

எம்.எல்.ஏ. பதவியையே அவமானப்படுத்தி விட்டனர் - எஸ்.வி. சேகர்

பொதுக்குழுவுக்கு அழைப்பு இல்லை: எம்.எல்.ஏ. பதவியையே அவமானப்படுத்தி விட்டனர் - எஸ்.வி. சேகர் பேட்டி

அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு இந்த முறையும் எனக்கு அழைப்பு அனுப்பவில்லை. எனவே நான் கலந்து கொள்ளவில்லை. பல வேலைகள் காரணமாக வெளியூரில் இருக்கிறேன்.

எனக்கு அழைப்பு அனுப்பாதது வருத்தம் அல்ல. இதை எனக்கு இழைக்கப்பட்ட அவமானமாக நான் கருதவில்லை. எம்.எல்.ஏ. பதவியை அவமானப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன்.

17 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தொகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ.வாக இருந்து செய்ய வேண்டிய பணிகளை மன சாட்சிப்படி சிறப்பாக செய்து வருகிறேன்.

கடந்த 1 ஆண்டுகளாக எனது தொகுதியில் நடைபெறும் கூட்டங்களுக்கு கூட போஸ்டர்களில் எனது பெயரை போடுவது கிடையாது. அழைப்பு தருவதும் இல்லை.

இதற்கு காரணம் தயாநிதி மாறனோடு ஒரு மேடையில் தோன்றியதுதான் என்பது உணர்ந்து கொண்டேன். ஆனால் இன்று அதே தயாநிதி மாறன் அ.தி.மு.க. நிகழ்ச்சிகளையே டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்புகிறார்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் அதை தவிர்க்கவும் முடியாது. இது ஜனநாயக பண்புதானே யொழிய கட்சிக்கு விரோத மான செயல் அல்ல.

அ.தி.மு.க.வில் எத்தனையோ பேர் தி.மு.க.வோடு சம்பந்தி, மாமன், மச்சான் என்று உறவுகளை வைத்துக் கொண்டு தொழில் ரீதியாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அப்படி ஏதும் தொழில் செய்கிறேனா? அல்லது கட்சிக்கு விரோதமாக ஏதாவது செய்தேனா? என் மீது வழக்குகள் இருக்கிறதா? நான் கடவுள் நம்பிக்கை உடையவன். ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள்.

ஒரு கதவல்ல ஐந்தாறு கதவுகள் திறக்கும். தொடர்ந்து தொகுதி மக்களுக்கு என்றும் போல் சேவை செய்து கொண்டிருப்பேன்.

பிகு: சில தினங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சத்யராஜியின் மகன், நடிகர் சிபிராஜின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு எஸ்.வி.சேகர் சென்றிருந்த போது, அங்கு வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடன் சிரித்து பேசினார். மேலும், ஸ்டாலினும், சேகரும் சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

6 Comments:

Selva said...

I hate Sekar's ideology Brahminism etc. etc. But one has to appreciate the courage with which he speaks and does things. In the political career of Jeyalalitha her pscho character has not allowed anyone else except Sasikala to have a standing relationship. This is once again proved in the case of Sekar

முருகானந்தம் said...

அப்போ கூடிய சீக்கிரம் திமுக போக போறார்.. நான் அடிச்சு சொல்றேன் பாருங்க..

யூர்கன் க்ருகியர் said...

நம்முடைய பணியினை செவ்வனே செய்து வந்தால் எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. ( எல்ல்ல்ல்லாம் மேல இருக்கறவன் பார்த்துக்குவான் :) )

enRenRum-anbudan.BALA said...

Jeyalalitha needs to learn a lot in life, nothing more to add !

Sekar has really done some good things as an MLA and doing this to him is actually not an insult to him but speaks volumes about how AIADMK functions, pathetic really :(

enRenRum-anbudan.BALA said...

Jeyalalitha needs to learn a lot in life, nothing more to add !

Sekar has really done some good things as an MLA and doing this to him is actually not an insult to him but speaks volumes about how AIADMK functions, pathetic really :(

Raju said...

Where is the great S. Ve. Shekar, How many comedy drama he has provided to the Brahmin community(!), once upon a time, i was so craze about his drama and put the drama cassette in the walkman and laugh at midnight at singapore. Now he is begging for respect. How many time he teased all respected people by his drama. So, the wheel spins.

Wait S. Ve. Wheel still rotating, you will go up...