பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 31, 2008

கோதாவரியிலிருந்து கூகிள் வரை

எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு..

God has always been planning things for me'

Naga Naresh Karuturi has just passed out of IIT Madras in Computer Science and has joined Google in Bangalore.

You may ask, what's so special about this 21-year-old when there are hundreds of students passing out from various IITs and joining big companies like Google?

Naresh is special. His parents are illiterate. He has no legs and moves around in his powered wheel chair. (In fact, when I could not locate his lab, he told me over the mobile phone, 'I will come and pick you up'. And in no time, he was there to guide me)

Ever smiling, optimistic and full of spirit; that is Naresh. He says, "God has always been planning things for me. That is why I feel I am lucky."

Read why Naresh feels he is lucky.

Childhood in a village
I spent the first seven years of my life in Teeparru, a small village in Andhra Pradesh, on the banks of the river Godavari. My father Prasad was a lorry driver and my mother Kumari, a house wife. Though they were illiterate, my parents instilled in me and my elder sister (Sirisha) the importance of studying.

Looking back, one thing that surprises me now is the way my father taught me when I was in the 1st and 2nd standards. My father would ask me questions from the text book, and I would answer them. At that time, I didn't know he could not read or write but to make me happy, he helped me in my studies!

Another memory that doesn't go away is the floods in the village and how I was carried on top of a buffalo by my uncle. I also remember plucking fruits from a tree that was full of thorns.

I used to be very naughty, running around and playing all the time with my friends. I used to get a lot of scolding for disturbing the elders who slept in the afternoon. The moment they started scolding, I would run away to the fields!

I also remember finishing my school work fast in class and sleeping on the teacher's lap!

January 11, 1993, the fateful day
On the January 11, 1993 when we had the Sankranti holidays, my mother took my sister and me to a nearby village for a family function. From there we were to go with our grandmother to our native place. But my grandmother did not come there. As there were no buses that day, my mother took a lift in my father's friend's lorry. As there were many people in the lorry, he made me sit next to him, close to the door.

It was my fault; I fiddled with the door latch and it opened wide throwing me out. As I fell, my legs got cut by the iron rods protruding from the lorry. Nothing happened to me except scratches on my legs.

The accident had happened just in front of a big private hospital but they refused to treat me saying it was an accident case. Then a police constable who was passing by took us to a government hospital.

First I underwent an operation as my small intestine got twisted. The doctors also bandaged my legs. I was there for a week. When the doctors found that gangrene had developed and it had reached up to my knees, they asked my father to take me to a district hospital. There, the doctors scolded my parents a lot for neglecting the wounds and allowing the gangrene to develop. But what could my ignorant parents do?

In no time, both my legs were amputated up to the hips.

I remember waking up and asking my mother, where are my legs? I also remember that my mother cried when I asked the question. I was in the hospital for three months.

Life without legs
I don't think my life changed dramatically after I lost both my legs. Because all at home were doting on me, I was enjoying all the attention rather than pitying myself. I was happy that I got a lot of fruits and biscuits.

'I never wallowed in self-pity'

The day I reached my village, my house was flooded with curious people; all of them wanted to know how a boy without legs looked. But I was not bothered; I was happy to see so many of them coming to see me, especially my friends!

All my friends saw to it that I was part of all the games they played; they carried me everywhere.

God's hand
I believe in God. I believe in destiny. I feel he plans everything for you. If not for the accident, we would not have moved from the village to Tanuku, a town. There I joined a missionary school, and my father built a house next to the school. Till the tenth standard, I studied in that school.

If I had continued in Teeparu, I may not have studied after the 10th. I may have started working as a farmer or someone like that after my studies. I am sure God had other plans for me.

My sister, my friend
When the school was about to reopen, my parents moved from Teeparu to Tanuku, a town, and admitted both of us in MSFS missionary school where I was given free education up to 10th standard. They decided to put my sister also in the same class though she is two years older. They thought she could take care of me if both of us were in the same class. My sister never complained.

She would be there for everything. Many of my friends used to tell me, you are so lucky to have such a loving sister. There are many who do not care for their siblings.

She carried me in the school for a few years and after a while, my friends took over the task. When I got the tricycle, my sister used to push me around in the school.

My life, I would say, was normal, as everyone treated me like a normal kid. I never wallowed in self-pity. I was a happy boy and competed with others to be on top and the others also looked at me as a competitor.

Inspiration
I was inspired by two people when in school; my maths teacher Pramod Lal who encouraged me to participate in various local talent tests, and a brilliant boy called Chowdhary, who was my senior.

When I came to know that he had joined Gowtham Junior College to prepare for IIT-JEE, it became my dream too. I was school first in 10th scoring 542/600.

Because I topped in the state exams, Gowtham Junior College waived the fee for me. Pramod Sir's recommendation also helped. The fee was around Rs 50,000 per year, which my parents could never afford.

Moving to a residential school
Living in a residential school was a big change for me because till then my life centred around home and school and I had my parents and sister to take care of all my needs. It was the first time that I was interacting with society. It took one year for me to adjust to the new life.

There, my inspiration was a boy called K K S Bhaskar who was in the top 10 in IIT-JEE exams. He used to come to our school to encourage us. Though my parents didn't know anything about Gowtham Junior School or IIT, they always saw to it that I was encouraged in whatever I wanted to do. If the results were good, they would praise me to the skies and if bad, they would try to see something good in that. They did not want me to feel bad.

They are such wonderful supportive parents.

Life at IIT- Madras
Though my overall rank in the IIT-JEE was not that great (1992), I was 4th in the physically handicapped category. So, I joined IIT, Madras to study Computer Science.

Here, I looked up to many students at IIT, and one of them was Karthik who was in the same hostel.

He had asked for attached bathrooms for those with special needs before I came here itself. So, when I came here, the room had attached bath. He used to help me and guide me a lot when I was here.

I evolved as a person in these four years, both academically and personally. It has been a great experience studying here. The people I was interacting with were so brilliant that I felt privileged to sit along with them in the class. Just by speaking to my lab mates, I gained a lot.

'There are more good people in society than bad ones'

Words are inadequate to express my gratitude to Prof Pandurangan and all my lab mates; all were simply great. I was sent to Boston along with four others for our internship by Prof Pandurangan. It was a great experience.

Joining Google R&D
I did not want to pursue PhD as I wanted my parents to take rest now.

Morgan Stanley selected me first but I preferred Google because I wanted to work in pure computer science, algorithms and game theory.

I am lucky
Do you know why I say I am lucky?

I get help from total strangers without me asking for it. Once after my second year at IIT, I with some of my friends was travelling in a train for a conference. We met a kind gentleman called Sundar in the train, and he has been taking care of my hostel fees from then on.

I have to mention about Jaipur foot. I had Jaipur foot when I was in 3rd standard. After two years, I stopped using them. As I had almost no stems on my legs, it was very tough to tie them to the body. I found walking with Jaipur foot very, very slow. Sitting also was a problem. I found my tricycle faster because I am one guy who wants to do things faster.

One great thing about the hospital is, they don't think their role ends by just fixing the Jaipur foot; they arrange for livelihood for all. They asked me what help I needed from them. I told them at that time, if I got into an IIT, I needed financial help from them. So, from the day I joined IIT, Madras, my fees were taken care of by them. So, my education at the IIT was never a burden on my parents and they could take care of my sister's Nursing studies.

Surprise awaited me at IIT
After my first year, when I went home, two things happened here at the Institute without my knowledge.

I got a letter from my department that they had arranged a lift and ramps at the department for me. It also said that if I came a bit early and checked whether it met with my requirements, it would be good.

Second surprise was, the Dean, Prof Idichandy and the Students General Secretary, Prasad had located a place that sold powered wheel chairs. The cost was Rs 55,000. What they did was, they did not buy the wheel chair; they gave me the money so that the wheel chair belonged to me and not the institute.

My life changed after that. I felt free and independent.

That's why I say I am lucky. God has planned things for me and takes care of me at every step.

The world is full of good people
I also feel if you are motivated and show some initiative, people around you will always help you. I also feel there are more good people in society than bad ones. I want all those who read this to feel that if Naresh can achieve something in life, you can too

( Source: Rediff )

Read More...

குசேலன் - கலக்கும் முதல் சினிமா விமர்சனம்

குசேலன் படத்தை ரஜினி ரசிகர்கள் ஒட வைத்துவிடுவார்கள் என்கிறது குமுதம் - அப்படியா ?

ரஜினிக்கு முதலில் கை குலுக்க வேண்டும். ஆக்சன், மசாலா படங்களிலிருந்து விலகிக் கதைக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்ததற்கு. அதை ரசிக்கும்படி செய்ததற்குக் கூடவே ஒரு கொசுறு கை குலுக்கல்.

மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட "கத பறயும் போள்" கதை. இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவில் சிறந்து சூப்பர் ஸ்டாராகிறான். இன்னொருவன் உடைந்து போன நாற்காலியுடன் முடி திருத்தகம் நடத்துகிறான். இருவரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்தச் சின்னப் பொறியை வைத்துத் திரைக்கதை செய்திருக்கிறார்கள், ரஜினிக்காக அதிகம் மாற்றாமல்.

சூப்பர் ஸ்டாரை, சூப்பர் ஸ்டாராகவே பார்ப்பது தமிழுக்குப் புதுசு. ரஜினியும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். அத்துடன் ரசிகர்களின் ஆர்வமான பல நாள் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.


* அரசியலில் சேருவேன் என்று சொல்லிவிட்டு சும்மா டபாய்க்கிறீர்களே ஏன்?

* நீங்கள், கமல் எல்லாம் ரொம்ப பந்தா பண்ணுகிறீர்கள?

* அடிக்கடி இமயமலை போகிறீர்களே. இங்கே இல்லாத எது அங்கே உங்களுக்குக் கிடைக்கிறது? இப்படி சுவாரசியமான கேள்விகள். பதில்களை வெள்ளித் திரையில் காண்க.


ரஜினி அழுவதைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. "ஆறிலிருந்து அறுபது வரை"யை ஞாபகப்படுத்தும் நடிப்புத் திறமை இத்தனை மசாலா பார்முலாக்களைத் தாண்டி வந்தும் அவரிடம் அப்படியே இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் அவர் கண் கலங்கும்போது நம் கண்களும் கலங்குகின்றன.

ரஜினியின் படத்தில் அவரைத் தவிர வேறு யாரும் கண்ணில் தெரியமாட்டார்கள். ஆனால், அதையும் மீறி மனதோடு, மண் மணத்தோடு ஒட்டிக்கொள்க்றார் பசுபதி. சூப்பர் ஸ்டாரின் நண்பர் என்று மற்றவரெல்லாம் மதிக்கும்போதும், புகழும்போதும் வெட்கமும் ஏக்கமும் கலந்து இயலாமையாய்ப் பார்க்கும் அவரது அழுத்தமான பார்வைக்கு ஆயிரம் பாராட்டுக்களைத் தரலாம்.

நயன்தாரா 'நெய்'ந்தாரா. வழுக்கும் உடலில் வழுக்கும் உடைகளில் இதயங்களை வழுக்கி விழ வைக்கிறார். அவர் நடை,உடை பாவனைகளைப் பார்க்கும்போது கூடிய விரைவில் ஹாலிவுட் படங்களில் அரங்கேறுவார் என்று பட்சி சொல்லுகிறது.

மீனாவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று. அப்படியே இருக்கீங்க அம்மணி.

கஸ்டமர் கிடைக்காததால், முடி வளர்த்தவர்களைக் கடத்திக் கொண்டு வந்து 'கட்டிங்' செய்யும் பார்பராக வந்து கலகலக்க வைக்கிறார் வடிவேலு. அவரின் மனைவியாக வரும் சோனா.. செமை சால்னா !

முதல் பாதியில் ரஜினி எப்போது வருவார் என்று பார்த்துப் பார்த்து கொஞ்சம் அலுப்பு வருவது திரைக்கதையின் பலவீனம். ஆனால் அந்தக் குறையை கடைசி அரைமணி நேரத்தில் மனதைக் கரைத்து மறக்கடித்துவிடுகிறார் இயக்குநர். ரஜினி போன்ற ஆக்சன் சூப்ப்ர் ஸ்டாரை வைத்துக் கொண்டு இது போன்ற அழுத்தமான படங்களை எடுப்பது சற்று சிரமமான காரியம். கெட்டியாகச் செய்திருக்கிறார் ப்.வாசு. சபாஷ் .

லிவிங்ஸ்டன், சின்னிஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், டி.பி.கஜேந்திரன் என்று காமெடி பட்டாளமே களம் இறங்கி சிரிப்பு மூட்ட முயற்சிக்கிறது.

ஜி.வி. பிரகாசின் இசையில் 'தலைவா' பாடல் தாளம் போட வைக்கிறது. வாலியின் வரிகள் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாக கொஞ்ச காலத்திற்கு இருக்கும். இவர் வாத்தியங்ளைக் குறைத்துக் கொள்வது நல்லது. அவருக்கும் கேட்பவர்களின் காதுகளுக்கும்.

அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா குசேலனை, குபேரனாக்கியிருக்கிறது. தோட்டாதரணியின் செட்டிங்ஸும் பிரமாண்டம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒவ்வொரு ரசிகரின் வீட்டுக்குள்ளும் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது படம். ரஜினி ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

குசேலன் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி, டைரக்டர் பி.வாசுவிடம் சொன்ன கமெண்ட் இதுதான். "படம் 25 வாரம் ஒடும்".

உண்மைதான். ரஜினி ரசிகர்கள் ஒட வைத்துவிடுவார்கள்.

நன்றி: குமுதம்.
( இதை முழுவதும் டைப் அடித்து தந்த heartzக்கு ஸ்பெஷல் நன்றி )

Read More...

தைலாபுரத்தில் இருந்து தடவப்படும் தைலம - ராமதாஸ் பேட்டி

தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்ததன் பின்னணி, தமிழக அரசின் செயல்பாடு மற்றும் பா.ம.க.வின் எதிர்கால அணுகுமுறை குறித்த கேள்விகளுக்கு "துக்ளக்'கிற்கு அளித்த இப்பேட்டியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரிவாகப் பதிலளித்திருக்கிறார்.

கேள்வி : "தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்க முடியாது' என்ற முடிவை அறிவித்ததற்கு முக்கிய காரணமாக, காடுவெட்டி குரு பேசிய பேச்சை தி.மு.க. தலைமை சுட்டிக்காட்டியது. அதை பா.ம.க. பொதுக்குழு நிராகரித்தது. கூட்டணியை விட்டு பா.ம.க.வை வெளியேற்ற, உண்மையான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

டாக்டர் ராமதாஸ் : பொதுமக்கள் நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடிய வகையில்,
கடந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க. அரசு எடுத்த சில முடிவுகளை நான்
விமர்சித்து வந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, பள்ளிக் கூடங்களுக்கு அருகிலேயே கஞ்சா விற்பனை, சிமென்ட் விலை உயர்வைக் கண்டு கொள்ளாமல் இருந்தது, சுயநிதிக் கல்லூரிகளின் வரைமுறையற்ற வசூல், நதிநீர்ப் பிரச்சனைகளில் உரிய சமயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியது – இப்படி பலவற்றை மக்கள் நலனை முன்னிறுத்தி சுட்டிக்காட்டி வந்தோம்.

ஆளும் கட்சியின் தோழமைக் கட்சி என்றால், நாலு காரியங்களைச் சாதித்துக்கொண்டு, முதலமைச்சருக்கு துதிபாடிக்கொண்டிருக்க வேண்டும் என்று கலைஞர் எதிர்பார்த்தார். நாங்கள் அந்த மாதிரி ஏதாவது செய்திருந்தால், தேதி வாரியாகக் குறித்து வைத்துக்கொண்டு, சொல்லிக் காட்டுவார். நாங்கள் அப்படி இருக்கவில்லை.

சட்டசபையிலும், வெளியேயும் பொறுப்போடு செயல்பட்டோம். சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டுள்ளது? எத்தனை கொலை – கொள்ளைகள் தலைநகரிலேயே நடைபெறுகின்றன? இதைச் சொல்லாமல் இருக்க முடியுமா?

"பிரச்சனைகளைக் கொஞ்சம் மென்மையாகக் கூறுங்கள்; முன்கூட்டியே என்னிடம் சொல்லுங்கள்' என்று கலைஞர் என்னிடம் சொன்னது உண்மை. ஆனால், ஒவ்வொன்றுக்குமா அவரிடம் ஃபோனில் சொல்ல முடியும்? ஆற்றுப் படுகைகளில் அளவுக்கு மீறி மணல் கொள்ளை நடப்பது அவருக்குத் தெரியாதா?

அதன் பிறகு, அன்புமணியிடம், "அப்பாவிடம் கொஞ்சம் விமர்சனத்தைக் குறைக்கச் சொல்லுப்பா' என்றார். அன்புமணியும் என்னிடம் "பாவம், வயசானவருப்பா!' என்று சொன்னார். ஆனால் பா.ம.க., தி.மு.க.வின் கிளையாக இருக்க முடியாது அல்லவா?

ஆரம்பத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டியபோது, "தைலாபுரத்தில் இருந்து தடவப்படும் தைலம்' என்றுதான் சொன்னார்; ஆனால், போகப்போக, தவறுகளைத் திருத்திக்கொள்வதற்குப் பதிலாக, கோபப்பட்டார். "கூட இருந்தே குழிபறிப்பவர்கள்' என்று என்னைத்தான் மறைமுகமாகச் சொன்னார். நான் பதிலுக்கு, "குழிபறிக்கும் கலை எல்லாம் எனக்குத் தெரியாது; நான் உழைத்து வளர்ந்தவன்' என்று கூறி, அவரைப் போல எனக்கு அந்த வேலை தெரியாது என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பதில் சொன்னேன்.

கேள்வி : காடுவெட்டி குருவின் பேச்சை நீங்கள் கண்டிக்கவில்லை; அவர் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை – என்பதற்கு உங்கள் பதில் என்ன?

பதில் : இதுவும் தவறான தகவல். காடுவெட்டி குரு மீது போடப்பட்ட ஒரு வெடிகுண்டு வழக்கை – பொய் வழக்கை – வாபஸ் வாங்க வேண்டும் என்று எங்கள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பலமுறை கலைஞரைப் போய் பார்த்து கேட்டார். அப்போது குருவின் இந்தப் பொதுக்குழு பேச்சை கலைஞர் சுட்டிக்காட்டி, "இப்படியெல்லாம் பேசுகிறாரே, இது சரியா?' என்று கேட்டார். அப்போது
ஜி.கே. மணி, "குருவை, டாக்டர் அழைத்து இதற்காகக் கண்டித்திருக்கிறார்; குருவையும் உங்களிடம் அழைத்து வந்து வருத்தம் தெரிவிக்கச் செய்கிறேன்' என்று சொல்லி இருக்கிறார்.

இதன் பிறகு கலைஞருக்கு இதுபற்றி நானும் கடிதம் எழுதி, அவர் அதை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைந்ததாகப் பதில் எழுதி, பத்திரிகைகளுக்கும்
இக்கடிதங்கள் தரப்பட்டுள்ளன. ஆகவே நான் குரு பேச்சைக் கண்டிக்கவில்லை என்பதே தவறு. நான் சொன்ன மாதிரி, இது அவர்களுக்கு ஒரு சாக்கு.

கேள்வி : தி.மு.க. – பா.ம.க. உறவு முறிய சில அமைச்சர்களும் முக்கியக் காரணம் என்று, உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசியிருக்கிறார்கள். இதுபற்றி விளக்க முடியுமா?

பதில் : முதல்வரைச் சுற்றியுள்ள சில அமைச்சர்கள் அவருக்குத் தவறான தகவல்களைத் தருவதோடு, தவறான யோசனைகளையும், அணுகு முறைகளையும் சொல்கிறார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்கிறார். "மின்வெட்டு புகழ்' அமைச்சர் ஆற்காடு வீராசாமி, "உயர்கல்விக் கொள்ளை புகழ்' பொன்முடி ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய துறைகளின் செயல்பாடு பற்றி நான் விமர்சித்ததை, இவர்களால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை. "வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் கல்லூரி, புறம்போக்கு நிலத்தில் கட்டப்படுகிறது' என்றார் ஆற்காடு வீராசாமி.

கடைசியில் 4 சென்ட் நிலம் புறம்போக்கு என்று ஒரு ஆதாரம் காட்டினார். அந்த ஆதாரமும் தவறானது என்பதை, சென்னையில் இருந்து நிருபர்களை அழைத்துச் சென்று, அந்த இடத்தையும், ஆவணங்களையும் காட்டி நிரூபித்தேன்.

வீராசாமிக்கு எங்கள் மீது என்ன கோபம் என்றால், அவருக்கு வேண்டிய தனியார் கம்பெனிக்கு ஆதரவாக, கடலூரில் நல்ல நிலங்களை கையகப்படுத்தி, மின்சாரத் திட்டம் கொண்டு வர முயன்றார். அந்தப் பகுதி மக்கள் என்னிடம் முறையிட்டார்கள். ஆகவே வேறு இடம் பாருங்கள் என்றேன். இப்படிப்பட்ட விஷயங்களால் என் மீது கோபம்.

கேள்வி : சிறப்புப் பொருளாதார மண்டலம், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் – ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள் என்ற விமர்சனம், உங்கள் மீது வைக்கப்படுவதற்கு என்ன சொல்கிறீர்கள்?

பதில் : முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக உள்ள எந்தக் கட்சியாவது, வேளாண் வளர்ச்சிக் கொள்கை, தொழில் கொள்கை, சென்னை பெருநகர போக்குவரத்து நெருக்கடிக்கான மாற்றுத் திட்டம், "தமிழ்நாடு 2020 – ஒரு தொலைநோக்குப் பார்வை' போன்ற அரசுக்கு ஆலோசனைகள் கூறும் அறிக்கை களையும், கடந்த 6 ஆண்டுகளாக "மாதிரி பட்ஜெட்'டுகளையும் அரசிடம் சமர்ப்பித்து வந்திருக்குமா?

விமான நிலைய விரிவாக்கத்தில் ஏன் எதிர்ப்பு வந்தது? மத்திய – மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் ஐந்தாயிரம் பேர், சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில், இடம் வாங்கி வீடு கட்டியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அப்புறப்படுத்தப் போகிறார்கள் என்றதும், இடிந்துபோய் விட்டார்கள். அவர்களில் பலர் நடுத்தரக் குடும்பத்தினர். அவர்கள் தைலாபுரத்திற்கு வந்து அழுதார்கள்.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மாநகரங்களில், சர்வதேச தரத்தில் "கிரீன் ஃபீல்டு ஏர்போர்ட்' அமைக்க 1999லேயே திட்டமிடப்பட்டது. மற்ற இருமாநிலங்களிலும் இரண்டாண்டுகளில் அப்பணியை முடித்துவிட்டார்கள். 1999ல் இங்கு தி.மு.க.தானே ஆட்சியில் இருந்தது? இதற்காக என்ன செய்தார்கள்?

துணை நகரம் அமைப்பதிலும் எங்கள் எதிர்ப்பு நியாயமானதுதான். திருப்போரூர் அருகே 140 கிராமங்களில் வீடுகளில் குடியிருப்போர், நிலம் வைத்திருப்போரை எல்லாம் வெளியேற்றி விட்டு, ஐம்பதாயிரம் ஏக்கரில் துணை நகரம் என்றால், அந்த மக்கள் எங்கே போவார்கள்? அங்கே, கடும் மக்கள் எதிர்ப்பு உருவானவுடன், சட்டசபையில் முதல்வர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்குவதில் ஒரு அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, இருப்பதையும் அழித்துவிட்டு, ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கு மாநில அரசு புரோக்கர் வேலை பார்க்கக்கூடாது. அதை முன்னேற்ற நடவடிக்கை என்றால் அதை ஏற்கவும் முடியாது.

தமிழக அரசின் திட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, தமிழகத்தில் 1 கோடியே 45 லட்சம் பேர், மாதம் 571 ரூபாய் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது; அதாவது சுமார் 25 சதவிகிதம் பேரின் நிலை இது. இன்னொரு 20 சதவிகிதம் பேருக்கு சுமார் 1000 ரூபாய்தான் மாத வருமானம். இவர்களைப் பற்றி அரசு கவலைப்படுகிறதா?...

ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக என்ன அம்சங்கள் தேவை? சாலைகள், தரை மற்றும் இதர வழியானப் போக்குவரத்து வசதிகள், தட்டுப்பாடற்ற குடிநீர் மற்றும் மின்சார வசதி. இதுதான் அவசியமான உள்கட்ட மைப்பு. ஐந்து தடவை முதலமைச்சராக வந்தவர், இவற்றை பூர்த்தி செய்து சாதனை படைத்திருக்கிறாரா?

மது விற்பனை அதிகரிக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இலவசத்
திட்டங்கள், மது, ஓட்டுக்குப் பணம், சினிமா கவர்ச்சி – இதை வைத்தே மக்களிடம் ஓட்டைப் பறித்துவிடலாம் என்று அரசியல் நடத்துகிற இவர்களா, நாங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாகச் சொல்வது?


கேள்வி : சில பகுதிகளில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் எதிரிக் கட்சியினர் மாதிரி நடந்து கொண்டார்கள் – என்கிற தி.மு.க.வின் விமர்சனம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில் : ஆளும் கட்சியினரின் அடாவடித்தனத்தை, பா.ம.க. கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியதுதானே என்கிறார்களா? 20 அடி, 30 அடி அளவு ஆழத்துக்கு ஆற்றில் மணல் அள்ளி, நீர் ஆதாரத்தையே அடியோடு சேதப்படுத்துவதை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? எங்கள் எம்.எல்.ஏ.க்கள் உயிரைப் பணயம் வைத்து, தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அதை படமெடுத்து வந்தார்கள். அங்குள்ள
மக்கள் – ஆளும் கட்சிப் பிரமுகர்கள் பெயரைக் கூறி, இவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்றார்கள். அந்தப் பெயர்களை நாங்கள் கூறவில்லையே? இதைத் தடுத்து
நிறுத்துங்கள் என்றோம். அந்த மணல் கொள்ளையில் பங்கு எங்கெங்கோ போகிறது. அதனால் தடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.

அதேபோலத்தான் லாட்டரி விற்பனை. ஜெயலலிதா அம்மையார் அதை தடை செய்தார். நான் வரவேற்று அறிக்கை வெளியிட்டேன். இப்போது தடை ஏட்டளவில் இருந்தாலும், ஆங்காங்கே விற்பனை நடைபெறுகிறது. லாட்டரி வியாபாரி ஒருவர் போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி. அவர் ஒரு அமைச்சரின் நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இன்னொரு லாட்டரி அதிபர் பத்திரிகை நடத்துகிறார். லாட்டரி விற்பனையும், கஞ்சா விற்பனையும் அமோகமாக நடப்பதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நாங்கள் அதை பார்த்துக்கொண்டு பேசாமல்
இருந்தால், எங்களை நல்லவர்கள் என்பார் முதலமைச்சர்.

கேள்வி : பா.ம.க.வுடன் கூட்டணி முறிந்தபோது, "அன்புமணியை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு கோருவீர்களா?' என்று கேட்டபோது, "அன்புமணி மீது எனக்கு அன்பு உண்டு' என்று கலைஞர் சொன்னார். அன்புமணிக்கு அவரது துறையில் சில நெருக்கடிகள் ஏற்பட்டபோது தி.மு.க. பக்கபலமாக இருந்ததா?

பதில் : எள்ளளவும் உதவிகரமாக இல்லை. அஐMகு பிரச்சனையிலும் சரி, ஜிப்மர் விவகாரத்திலும் சரி – அன்புமணிக்கு ஆதரவாக ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. எதிராக வேண்டுமானால் வேலை செய்திருக்கிறார்கள். "மருத்துவ மாணவர்கள் மூன்று மாதங்கள் கிராமப்புறத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டும்' என்று ஒரு கருத்து, பேச்சளவில் வந்தது. மத்திய அரசு, ஜி.ஓ. போடவில்லை; மசோதா கொண்டுவரவில்லை. பேச்சுதான் எழுந்தது. அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதைத் தடுக்காமல், வேடிக்கை பார்த்து, தூண்டிவிட்டதே கலைஞர்தான். இதுதான் அன்புமணி மீது அவருக்கிருந்த அன்பின் அடையாளம்.


கேள்வி : தேசிய அளவில் இடதுசாரிகள் மூன்றாவது அணி அமைத்துள்ளனர்.
இருந்தாலும், தமிழகத்தில் இடதுசாரிகள், தி.மு.க.வோடுதான் என்று கலைஞர் கூறுகிறாரே! இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?


பதில் : "மூன்றாவது அணியில் தி.மு.க. இல்லை என்று இடதுசாரிகள் சொல்லவில்லையே' என்று கலைஞர் கூறியிருக்கிறார். அதாவது மூன்றாவது அணிக்கும் கதவைத் திறந்தே வைத்திருக்கிறார். இது ஒருபுறம். மூன்றாவது
அணியினர், மாயாவதியை முன்னிறுத்திச் செயல்படத் தொடங்கியுள்ளனர். உடனடியாக அடுத்தத் தேர்தலில் மூன்றாவது அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்பதுதான் எங்கள் கருத்து.

கேள்வி : வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உருவாக வேண்டும். அந்த அணியில் பா.ம.க. இடம்பெறும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தி.மு.க.வை உதறிவிட்டு காங்கிரஸ் வருமா? இது சாத்தியமா?

பதில் : 40 வருடங்களாக திராவிடக் கட்சிகளின் தலைமையிலான அணியிலேயே
காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆகவே, காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியை உருவாக்கலாம் என்பது எங்கள் யோசனை. தவிர, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகளுக்கு அதிக இடங்களை மாநிலக் கட்சிகள் தந்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் மட்டும் அதிக இடங்களை
மாநிலக் கட்சிகள் பெற்று வந்ததுபோய், இப்போது நாடாளுமன்றத் தேர்தலிலும்
மாநிலக் கட்சிகள் அதிக இடம்பெற முனைந்துள்ளன. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட, தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு தி.மு.க. 10 தொகுதிகளைத்தான் ஒதுக்கியது. இதனால் மாநிலக் கட்சிகளை, தேசியக் கட்சிகள் சார்ந்து ஆட்சி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்திரமற்ற தன்மையும் உருவாகிறது.

ஆகவேதான், தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு மாற்று அணி அமைத்தால், பா.ம.க. அதில் இடம்பெறும் என்கிறோம். தேர்தலுக்கு அவகாசம் உள்ளது. இதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. பா.ம.க.வைப் பொறுத்தவரை, தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளது. ஆகவே, கூட்டணி குறித்து இப்போது அவசரப்படவோ, கவலைப்படவோ இல்லை.

( நன்றி: துக்ளக் )



நேற்று கலைஞர் பேச்சு:
மத்திய அரசும், மாநில அரசும் ரயிலுக்கு இரண்டு தண்டவாளங்களை போல அமைந்து இணைந்து இருந்தால் தான், சேர வேண்டிய இடத்திலே பயணிகள் போய் சேர முடியும். குறிக்கோள் நிறைவேறும்.

இந்த கூட்டணி ரயில் மத்திய அரசையும், மாநில அரசையும் இணைக்கின்ற ரயில். அந்த கூட்டணி என்கிற அந்த ரயிலை திமுக என்கிற என்ஜின் இழுத்துச் செல்லும்.

நிச்சயமாக நான் என்ஜினாக இருந்து அவற்றை கொண்டு செல்வேன். வழியிலே எங்கும் தடம் பிறழாமல், கவிழாமல் இந்த என்ஜின் இந்த கூட்டணியை கொண்டு வந்து சேர்க்கும்

'என்ஜின்' கருணாநிதி என்றால் ராமதாஸ் ?

Read More...

நக்மா மீது வழக்கு போடும் பி.ஜே.பி

நான் காணாமல் போன ஆடல்லவோ? கர்த்தர் என்னைத் தேடுகிறார்'' என்று கிறிஸ்துவப் பெண்ணாக மாறி, மதப்பிரசாரத்தில் இறங்கிய நடிகை நக்மாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக மாறி இருக்கிறது. நக்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.



கிறிஸ்துவ மதபோதகர்களில் மிகவும் பிரபலமானவர் மோகன் சி.லாசரஸ். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இவர் நடத்தும் பிரசங்கத்துக்கு எக்கச்சக்கக் கூட்டம் கூடும். கடந்த 29.06.08-ம்தேதி, திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமாவடியில் இவர் வழக்கம்போல `இயேசு விடுவிக்கிறார்' கூட்டத்தை நடத்தியபோது, அதைக் கேட்க வந்த கிறிஸ்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அங்கே மேடையில் வெள்ளைப் புறாவாக வீற்றிருந்தவர் நடிகை நக்மா. `ஸ்டைலு ஸ்டைலுதான்' என்று சூப்பர் ஸ்டாருடன், சொக்க வைக்கும் விதத்தில் ஆட்டம் போட்ட நடிகை நக்மா, ஏதோ ஞானப்பாலில் குளித்தவர் போல அங்கே கிறிஸ்துவ மதப்பிரசாரமும் செய்தார். `இஸ்லாமியப் பெண்ணான தான் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டது எப்படி?' என்பதோடு கிறிஸ்துவ மதத்தின் சிறப்புகளை அவர் நெக்குருக விளக்கியபோது, `உச்' கொட்டாத கிறிஸ்துவர்களே இல்லை. அந்த அளவுக்கு உள்ளம் உருக்கும் விதத்தில் நக்மாவின் பேச்சு இருந்தது.

நக்மாவின் இந்த மதப்பிரசங்கம்தான் அவரை இப்போது சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. நாலுமாவடியில் நக்மா நடத்திய பிரசங்கம் பற்றிய செய்தி மறுநாள் நாளிதழ்களில் வெளியாக, அதைப் படித்துப் பார்த்த பி.ஜே.பி.யினர் கடும் காட்டமாகி இருக்கிறார்கள். குறிப்பாக, பி.ஜே.பி. வழக்கறிஞர் பிரிவின் நெல்லை மாவட்டத் தலைவர் வக்கீல் அருள்ராஜ் இதில் செமை காட்டமாகி விட்டார்.

நக்மாவின் பேச்சு அடங்கிய முழு சி.டி.யை வாங்கிப் போட்டுப் பார்த்த அவர், பி.ஜே.பி.யின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் ஷ்ரீதர் மூர்த்தியிடம் அதுபற்றிப் பேசியிருக்கிறார். இந்த ஷ்ரீதர் மூர்த்திதான் மதானி விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு போட்டிருப்பவர். நக்மாவின் பேச்சைக் கேட்ட அவரும், இதற்காக நக்மா மீது வழக்குத் தொடரலாமே என கிரீன் சிக்னல் கொடுக்க, உற்சாகமானார் வக்கீல் அருள்ராஜ்.

உடனடியாக இவர் நடிகை நக்மாவின் முகவரியைத் தேடி அலைந்திருக்கிறார். இரண்டு வாரம் தேடியும் நக்மாவின் மும்பை முகவரிகிடைக்கவில்லை. ``அதனாலென்ன? நடிகர் சங்கத்துக்கு அனுப்பினால் அவர்கள் நக்மாவுக்கு அதை ஃபார்வர்ட் செய்து விடுவார்கள்'' என சில சீனியர்கள் ஐடியா கொடுக்க, உடனே சென்னை தி.நகரில் உள்ள `தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க அலுவலக' முகவரியிட்டு நக்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் வக்கீல் அருள்ராஜ். கடந்த 23-ம்தேதி மாநிலச் செயலாளர் ஷ்ரீதர் மூர்த்தி இதற்காகவே நெல்லை வந்து நோட்டீஸுக்கு இறுதி வடிவம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

இது பற்றி வக்கீல் அருள்ராஜிடம் பேசினோம்.

``நடிகை நக்மா யாருங்க? அடிப்படையில் அவர் ஒரு முஸ்லிம். அவர் திடீர் என்று நாலுமாவடியில் போதகர் மோகன்.சி.லாசரசின் `இயேசு விடுவிக்கிறார்' பிரசங்கக் கூட்டத்தில் கிறிஸ்துவ பிரசங்கம் செய்யப்போவதாக வந்த விளம்பரத்தைப் பார்த்த உடனேயே எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ஏனென்றால், மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் சூத்ரதாரியாகச் செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமோடு இணைத்துப் பேசப்பட்டவர்தான் இந்த நடிகை நக்மா. தவிர, குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.ஐ. அவரையும் விசாரித்திருக்கிறது.

எனவே, ஒரு தேசத் துரோகியோடு இணைத்துப் பேசப்பட்ட நடிகை கிறிஸ்துவப் பிரசங்கம் செய்ய வருகிறார் என்றவுடனேயே நாங்கள் அலெர்ட் ஆகிவிட்டோம். பி.ஜே.பி. தொண்டர்கள் இரண்டு பேரை கிறிஸ்துவர்கள் போல அந்தக் கூட்டத்திற்கு அனுப்பினோம். அவர்கள் நக்மாவோட பேச்சை அப்படியே டேப் பண்ணிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய்த்தான் அவர் மீது வழக்குப் போட முடிவு செய்தோம்'' என்றார் அவர்.

`வழக்குப் போடும் அளவுக்கு அப்படிஎன்ன பேசிவிட்டார் நக்மா?' என்ற கேள்வியை வக்கீல் அருள்ராஜிடம் கேட்டு வைத்தோம். சிவகாசி பட்டாசாகச் சீறினார் அவர்.

``நடிகை நக்மாவின் கிறிஸ்துவ மதப்பிரசங்கம் பிற மதத்தினரின் மத உணர்வை ரொம்பவே புண்படுத்துகிற மாதிரி இருக்கிறது. `உலகில் இயேசு மட்டும்தான் கடவுள், மற்றவர்கள் கும்பிடுவதெல்லாம் வெறும் சாத்தான்களும், பேய்களும்தான்' என அவர் பேசியிருக்கிறார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 295(ஏ)-படி தண்டனைக்குரிய குற்றம். தவிர, `கேன்சர், பக்கவாதம், பிரஷ்ஷர், ஆண்மைக் குறைவு என எல்லா நோய்களும் அற்புத சக்தி மூலம் தீரும்' என அவர் பேசியிருக்கிறார். நக்மா டாக்டருக்குப் படித்தவரல்ல. அப்படி இருக்கும் போது நோய் தீர பிரிஸ்கிரிப்ஷன் கொடுப்பது ரொம்பத் தவறு. எனவேதான் நடிகை நக்மா மீது `தி டிரக்ஸ் அண்ட் மேஜிக் ரெமடீஸ் ஆக்ட் 1954'ன் கீழ் வழக்குத் தொடர முடிவு செய்திருக்கிறோம். அற்புத சக்தி மூலம் நோய் தீரும் என அவர் பேசியிருப்பது ஓர் ஆட்சேபத்துக்குரிய விளம்பரம்.

இது பற்றி இன்னும் பத்து நாட்களுக்குள் அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அதோடு, `இனி இது போன்ற மத பிரசங்கங்கள் செய்வதில்லை' என அறிவிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். பதில் வராவிட்டால் உடனடியாய் ஐகோர்ட்டில் வழக்குப் போடப்போகிறோம். நடிகை நக்மாவின் மதப்பிரசங்கத்தை பி.ஜே.பி தடுத்து நிறுத்தும்'' என்றார் ஆவேசமாய்.

கிறிஸ்துவ மத போதகர் மோகன்.சி.லாசரசுக்கும் இதே போல நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறதாம். `இயேசு அழைக்கிறார், இயேசு நேசிக்கிறார், இயேசு விடுவிக்கிறார்' என்பதெல்லாம் இருக்கட்டும், இயேசு வழக்கிலும் சிக்க வைப்பார் போலிருக்கிறதே!
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

Read More...

கலைஞர் பேட்டி

Type your summary here

கேள்வி :- உங்கள் இளமைக் காலம் வறுமையானதா?

கலைஞர் :- "எனது இளமைக்காலம் வறுமை சூழ்ந்தது இல்லை. எனது பெற்றோர் வைதீகத்தில் தோய்ந்தவர்கள் என்பதால் எனக்குக் ‘காதணி விழா’வைச் சிறப்பாக நடத்துவதற்கும், ‘வித்யாரம்பம்’ என்ற பெயரில் ஆடம்பரமாக என்னைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்புவதற்கும், பள்ளிக் கல்வி மட்டுமின்றி, எனக்கென இசைக் கல்விக்குத் தனியே ஏற்பாடு செய்வதற்கும், தனியாக எனக்கு ஆசிரியர் அமைத்துப் பாடம் போதிப்பதற்கும், தேவையான வசதி வாய்ப்புகளை பெற்றிருந்த குடும்பத்திலே நான் பிறந்தேன்."

"பள்ளிப் பருவத்திலேயே, பனகல் அரசர் குறித்த கட்டுரையைப் பாடம் செய்து சொல்வேன்!"

கேள்வி :- "உங்கள் தந்தை என்ன தொழில் செய்து வந்தார்?"

கலைஞர் :- "என் தந்தையார் சிறந்த நாதசுர வித்வானாகவும் திகழ்ந்தார். நல்ல விவசாயியாகவும் இருந்தார்."

கேள்வி :- "நீங்கள் எப்போதிலிருந்து புத்தகங்களை அதிகம் படிக்க ஆரம்பித்தீர்கள்?"

கலைஞர் :- "நான் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ‘பனகல் அரசர்’ என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப் பாடக் கட்டுரையாக வைக்கப் பட்டிருந்தது. ஏறத்தாழ 50 பக்கங்கள் கொண்ட அந்தச் சிறு நூல் முழுவதையும் வகுப்பிலேயே நான் ஒருவன் தான் அப்படியே மனப்பாடம் செய்து சொல்வேன்."

எனது அரசியல் பாதைக்கு வெள்ளோட்டம்!

கேள்வி :- "நீங்கள் சின்ன வயதிலேயே அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்?"

கலைஞர் :- "பெரியார் பேச்சில் காணப்பட்ட அழுத்தம் திருத்தமான வாதமும், அழகிரி பேச்சில் காணப்பட்ட வீரம் கொப்பளிக்கும் வரிகளும், அண்ணா பேச்சில் நிறைந்திருந்த அழகு தமிழும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.

1938ல் நாள்தோறும் மாலை நேரத்தில் மாணவர்கள் பலரை அணிவகுத்திடச் செய்து, திருவாரூர் தெருக்களில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்ப் பரணி பாடி ஊர்வலம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதுவே எனது அரசியல் பாதைக்கு வெள்ளோட்டமாக அமைந்தது."

எதையும் சரியாகத்தான் செய்வேன் எனும் திடநெஞ்சம் கொண்டோர், எனது குடும்பத்தினர்!

கேள்வி :- "உங்கள் தந்தை மறைவின்போது நீங்கள் ஒரு மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தீர்கள். உங்கள் முதல் மனைவி பத்மாவதி அம்மாள் மறைவின்போதும் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தீர்கள். தயாளு அம்மாளை மணந்த தினத்தன்று போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள். குடும்பத்தினரின் பார்வையில் உங்களின் இந்தப் போக்கு எப்படி எடுத்துக் கொள்ளப்பட்டது?"

கலைஞர் :- "நான் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வேன் என்ற திட நெஞ்சம் இருந்த காரணத்தினால், என்னுடைய முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்டு அவர்கள் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை."

கேள்வி :- "நீங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் உங்கள் மூத்த மகன் மு.க. முத்துவை உங்களுடைய கலையுலக வாரிசாக வளர்த்தெடுக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருக்கிறதா?"

கலைஞர் :- "முத்து பல்வேறு திறமைகள் ஒருங்கே வாய்த்திடப் பெற்றவன். அத்திறமைகள் பட்டை தீட்டப்பட்டு மிளிர்வதற்கேற்ற வகையில், அவனுக்கென கிடைத்த பாதையிலே பயணம் செய்யாமல், திசைமாறிய பறவையாகிவிட்டானே என்ற வருத்தம் எனக்கு உண்டு."

அரசியல் - எனக்குப் பிராணவாயு! இலக்கியம் - தெம்பூட்டும் சரிவிகித உணவு!

கேள்வி :- "ஒரு நல்ல இலக்கியவாதியால், பெரிய அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பது பொதுவான கருத்து. உங்களால் எப்படி இருக்க முடிந்தது?"

கலைஞர் :- "இது பொதுவான கருத்து எனினும், அதற்கும் விதிவிலக்கான எடுத்துக்காட்டுகள் உண்டு. பண்டித நேரு அவர்கள் அடிப்படையில் இலக்கிய உள்ளமும், படைப்பாளிக்கான பண்பட்ட திறனும் கொண்டிருந்தவர். சிறையில் இருந்து கொண்டே தனது அருமை மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் இலக்கியச் செறிவு கொண்டவை. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் எழுத்திலும், பேச்சிலும் இலக்கியத்தின் குணாதிசயங்கள் இயங்கிக் கொண்டிருப் பதைக் காணலாம். பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருமளவுக்கு இலக்கியங்களில் இதயம் பறிகொடுத்தவர். அவரே படைப்பிலக்கியப் பேராசான். அதனால்தான் அவரது எழுத்திலும், பேச்சிலும் புதுத் தேனின் சுவையும், அன்றலர்ந்த மலரின் மணமும் விரவிப் பரவி தனித்தன்மை பெற்று ஒளிர்கின்றன.

அப்படிப்பட்டவர்களோடு என்னை ஒப்பிட்டுக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. அரசியல் எனக்குப் பிராணவாயு எனில், இலக்கியம் எனக்குத் தெம்பூட்டும் சரிவிகித உணவு."

கேள்வி :- "உங்களது புத்தக வாசிப்புப் பழக்கம் எந்த வகை இலக்கியத்திலிருந்து தொடங்கியது?"

கலைஞர் :- "புராண - இதிகாசக் கதைகளில் இருந்தும், அவற்றிற்கு எதிரான ‘சுயமரியாதை’ நூல்களில் இருந்தும் தொடங்கியது."

தமிழ்மொழியின் நீள அகலத்தை முன்னிலைப்படுத்தும் பக்தி இலக்கியங்கள்!

கேள்வி :- "தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்தெல்லாம் நீங்கள் சிலாகித்துப் பேசுகிறீர்கள். ஆனால், பக்தி இலக்கியம் குறித்து சொல்வதே இல்லை. கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகிறது என்பதாலேயே அந்த இலக்கிய வகையைப் புறக்கணித்துவிட முடியுமா?"

கலைஞர் :- "தொல்காப்பியம், சங்க இலக்கியம் - பெரும்பாலும் சாதி, சமயம், பக்தி இவற்றிற்கு அப்பாற்பட்ட மிக உயர்வான இலக்கண, இலக்கியங்களாகும். அவற்றிற்குப் பிறகு வந்தவையே பக்தி இலக்கியங்கள். அவற்றை நான் புறக்கணித்ததும் இல்லை ; புறந்தள்ளியதும் இல்லை. அவ்வகை இலக்கியங்களில் நான் படித்துத் தோய்ந்திருக்கிறேன். அவை கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகின்றனவோ இல்லையோ, தமிழ்மொழியின் நீள அகலத்தை நிச்சயமாக முன்னிலைப்படுத்துகின்றன."

தலைசிறந்த பத்து புத்தகங்கள்!

கேள்வி :- "தலைசிறந்த 10 புத்தகங்களை வகைப்படுத்துங்களேன்?"

கலைஞர் :- "1. திருக்குறள், 2.தொல்காப்பியம், 3.புறநானூறு, 4.சிலப்பதிகாரம், 5.பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், 6.அண்ணா எழுதிய ‘பணத்தோட்டம்’, 7.மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, 8.பண்டித நேரு அவர்கள் எழுதிய ‘உலக வரலாறு’, 9.அண்ணல் காந்தி அடிகளின் ‘சத்திய சோதனை’, 10.ராகுல சாங்கிருத்தியாயாவின் ‘வோல்கா முதல் கங்கை வரை’."

நான் நாத்திகன்! ஏனெனில் மனிதனை நேசிக்கிறேன்!

கேள்வி :- "ஏதோ ஒரு சக்தியால் இந்த உலகத்தில் எல்லாம் நிகழ்கிறது என்று குறளோவியத்தில் எழுதி இருக்கிறீர்கள். அந்த சக்தி கடவுளில்லை என்பதை இப்போதும் அழுத்தமாகச் சொல்வீர்களா? அந்த சக்தியை கடவுள் என்று பெருவாரியானவர்கள் நம்பி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை ஒற்றை வரியில் நிராகரித்துவிட முடியுமா?"

கலைஞர் :- "இல்லையென்பார்கள் சிலர்; உண்டென்று சிலர் சொல்வர்; எனக்கில்லை கடவுள் கவலை" என்ற பாவேந்தரின் பாடல் வரிகளையே பதிலாகத் தருகிறேன். "நான் நாத்திகன் ; ஏனெனில், மனிதனை நேசிக்கிறேன்" என்று நெஞ்சுயர்த்திச் சொல்லிக் கொள்ளும் எனக்கு, யாரையும் நிராகரித்திட வேண்டும் என்ற நினைப்பில்லை!"

மனிதநேயமும் மாநிலப் பாசமுமே மதத் தலைவர்களோடு அமர்ந்து பேசக் காரணம்!

கேள்வி :- "முன்பெல்லாம் கடவுள் மறுப்பு என்பதை தீவிரமாக முன்னிறுத்தினீர்கள். இப்போது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மதத் தலைவர்களுடன் அமர்ந்து பேசும் மனநிலைக்கு வந்திருக்கிறீர்கள். இந்த மாற்றம் பகுத்தறிவின் நெகிழ்ச்சியால் ஏற்பட்டதா? வயதின் முதிர்ச்சியால் ஏற்பட்டதா?"

கலைஞர் :- "தமிழ்மொழி வளர்ச்சிக்காக குன்றக்குடி அடிகளாரோடும், பேரூர் சாந்தலிங்க அடிகளாரோடும், திருவாவடுதுறை ஆதீனத்தோடும் ஆர்வத்தோடு அமர்ந்து பேசுவேன்; தெலுங்கு - கங்கைத் திட்டத்தால் சிந்தாமல் சிதறாமல் சென்னைக்குத் தண்ணீர் வரவேண்டும் என்பதற்காக சாய்பாபா அவர்களோடும் அன்போடு அளவளாவுவேன். இவை அனைத்தும் பகுத்தறிவின் நெகிழ்ச்சியாலோ, வயதின் முதிர்ச்சியாலோ ஏற்பட்டவை அல்ல; என்னுள் நிறைந்திருக்கும் இன்பத் தமிழ்ப்பற்று, மனிதநேயம், மாநிலப் பாசம் இவற்றால்தான். "ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!" என்று அறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியதை அனைவர்க்கும் நினைவுறுத்து கிறேன்."

முதிர்ந்த பண்பாடு முரண்பாடாகி விடாது!

கேள்வி :- "தீவிரப் பகுத்தறிவாளர் நீங்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் கடவுள், கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகள் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?"

கலைஞர் :- "நான் பகுத்தறிவாளன் என்ற நிலையில் எள்ளளவும் மாற்றமில்லை. மஞ்சள் துண்டு அணிவது கடவுள் நம்பிக்கையினால் அல்ல என்பதையும்; அதற்கான காரணத்தையும் பலமுறை விளக்கி இருக்கிறேன். ஒரு பகுத்தறிவாளனை அறிவியல் ரீதியான உண்மைகள் மட்டும் ஆட்கொள்ள முடியுமே தவிர, மூடநம்பிக்கைகள் எதுவும் துரத்திக் கொண்டிருக்க முடியாது. என்னைச் சேர்ந்த ஒரு சிலரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் தேவையான தெளிவில்லாத நிலையில் குழப்பத்தில் இருப்பதாகவே கருதிக் கொள்வேன். முதிர்ந்த பண்பாடு முரண்பாடாகிவிடாது!"

கேள்வி :- "ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?"

கலைஞர் :- "தோன்றாமல் இல்லை. கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததால் நேரம் கிடைக்கவில்லை."

‘எனது சிலை உடைக்கப்பட்ட போது, எனது மனநிலை!’

கேள்வி :- "உங்களுக்கு உயிரோடு இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்டது. அதை விஷமிகள் உடைத்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?"

கலைஞர் :- "உயிரோடு இருக்கும்போது சிலை அமைக்கப்பட்டது எனக்கு மட்டும்தான் என்று சொல்வது தவறு. பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் உயிரோடு இருந்தபோது சிலைகள் நிறுவப்பட்டன. எனது சிலையை உடைத்தபோது இருந்த மனநிலையை அப்போதே -

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை!

நெஞ்சிலேதான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!!

என்று கவிதையாக்கி வெளியிட்டிருந்தேன்."

கட்சியின் முடிவிலிருந்து, மாறுபட்ட எண்ணம் எனக்குத் தோன்றியதில்லை

கேள்வி :- "எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து வெளியே விட்டிருக்கக்கூடாது என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா?"

கலைஞர் :- "எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது கழகம், செயற்குழு - பொதுக் குழுக்களின் மூலம் ஒருமனதாக எடுத்த முடிவு. கட்சியின் அந்த முடிவிலிருந்து மாறுபட்ட எண்ணம் தனிப்பட்ட முறையில் எனக்குத் தோன்றியதில்லை."

கேள்வி :- "தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி நிலவும் சூழலில், மாநிலக் கட்சிகளின் கைகள் ஓங்கி இருப்பதைக் கண்டு டெல்லிக்காரர்கள் எரிச்சல் அடைகிறார்களே? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

கலைஞர் :- "கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்தியில் கூட்டணி ஆட்சி என்பதும், மாநிலக் கட்சிகள் அதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதும் "டெல்லிக்காரர்களுக்கு" மட்டுமல்ல; அனைவருக்கும் பழக்கப்பட்டுவிட்ட - அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட அரசியல். இதில் யாரும் எரிச்சல் அடைய இடமில்லை."

அரசியல் கலாச்சாரம் நிகழ எடுக்கப்பட்ட முன்முயற்சிகள்!

கேள்வி :- "காமராஜர், ராஜாஜி, எம்.ஜி.ஆர். இவர்களை எல்லாம் எதிர்த்து அரசியல் செய்த நீங்கள், தமிழகத்தில் நல்ல அரசியல் கலாச்சாரம் நிகழ்வதற்கு ஏதேனும் முன்முயற்சி எடுத்தீர்களா?"

கலைஞர் :- "தமிழகத்தில் மனிதநேயம், பரஸ்பரம் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் நல்ல அரசியல் கலாச்சாரம் தழைத்திட வேண்டும் என்பதிலே தணியாத ஆர்வம் உள்ளவன் நான். தலைநகரம் டெல்லியில் ஆளும் கட்சி - எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி முக்கிய தேசிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதும், ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் பரிமாறிக் கொள்வதும் நாம் காணும் காட்சிகள். அதைப்போலத் தமிழகத்திலும் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் உருவாகிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனினும், எனது முயற்சிகள் இதுவரை முழுப்பலனைத் தரவில்லை என்பதுதான் உண்மை. அரசியல் கலாச்சாரத்தில் அனைவருக்கும் சமமான ஈடுபாடு வேண்டுமல்லவா? அது ஒரு கை ஓசையாகிவிடக் கூடாது."

கேள்வி :- "விடுதலைப்புலிகள் விவகாரத்தில் ஏற்ற - இறக்கங்களோடு செயல்பட்டிருக் கிறீர்கள்! என்ன காரணம்?"

கலைஞர் :- "நான் பலமுறை விளக்கி உரைத்ததைப் போல; விடுதலைப் புலிகள் விவகாரத்தில் - ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்; படுகொலைக்குப்பின் - என்ற கண்ணோட்டம்தான் முக்கியமே தவிர, இதில் ஏற்றமும் இல்லை; இறக்கமும் இல்லை."

கேள்வி :- "தமிழக தேர்தலில் சாதியின் ஆதிக்கத்தை ஒழிக்கவே முடியாதா?"

கலைஞர் :- "தமிழகத் தேர்தலில் மட்டுமல்ல; இந்தியத் தேர்தலிலேயே - சாதியின் ஆதிக்கத்தை மட்டுமல்ல; மதத்தின் ஆதிக்கத்தையும் சேர்த்தே ஒழித்தாக வேண்டும். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமுதாய இயக்கங்களும் அப்பழுக்கற்ற ஆர்வமும், செய்தே தீரவேண்டுமென்ற பிடிவாதமும் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலைமை சீர்திருந்த வழி உண்டு."

கேள்வி :- "பொதுவாகவே அரசியல் ஊழல் மயப்பட்டு விட்டதாக மக்கள் உறுதியாக நம்புகிறார்களே?"

கலைஞர் :- "அரசியல் என்றாலே ஊழல் என்று மக்கள் நம்புவதாக நான் கருதவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியையும், ஒவ்வொரு அரசியல் கட்சியிலுள்ள ஒவ்வொருவரையும் ஊழல் என்னும் அளவுகோலால் அளந்து, மக்கள் தரம் பிரித்துப் பார்க்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். அரசியலில் இருந்து ஊழலை அறவே ஒழிக்க வேண்டுமென்றால், வாக்காளர்கள் அனைவரும் உயர்ந்த கல்வியைப் பெற்றிருக்க வேண்டும். வாக்குகளை விற்பனைப் பொருளாக்காத மனோபாவம் வேண்டும். நல்லவர்கள், வல்லவர்கள் பெருமளவுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும்."
( நன்றி: ராணி வார இதழ் )

Read More...

ரஜினி எழுதிய கடிதம்

கன்னட திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கன்னடத்தில் எழுதியுள்ள கடிதம்

ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.

ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்"

கன்னட கடிதம் கீழே...




ரஜினியின் படங்கள் ஒவ்வொரு முறை வெளியிடப்படும் போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறது. அப்போது எல்லாம் தமிழ் திரையுலகம் சும்மா இருக்கிறது.
பாபா படத்துக்கு பாமகவால் பிரச்சினை ஏற்பட்ட போதும் திரையுலகம் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. யாரும் கண்டனம் தெரிவிக்கக் கூட முன் வரவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. வருக்கு குரல் கொடுக்க முன்வந்தவர் விஜயகாந்த் மட்டும். ஆனால் ரஜினி வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். ( நன்றி : விஜயகாந்த ரசிகர் )

Read More...

Wednesday, July 30, 2008

ஆபீஸ் பையன் பதில்கள்

முரசொலியில் வந்த ஆபீஸ் பையன் பதில்கள்

முரசொலி - 28.7.08
( டாக்டர் ராமதாஸ் அவர்களின் அண்மைக் காலப் பேட்டிகள் நமது ஆபீஸ் பையனை எல்லாம் பதில் சொல்ல வைத்துள்ளது - மன்னிக்கவும். )

டாக்டர் ராமதாஸ் :- "எம்.ஓ.யு. கலைஞர்" என்று நான் கலைஞருக்கு ஒரு பட்டப் பெயர் கொடுக்கிறேன்.

ஆபீஸ் பையன்:- ஜெயலலிதா ராமதாசுக்குக் கொடுத்த "மரம் வெட்டி" என்ற பட்டப் பெயர் போல இது இல்லையே?

டாக்டர் ராமதாஸ் :- கடந்த இரண்டு வருடமாக; தமிழக அரசு ரியல் எஸ்டேட் வியாபாரம்தான் செய்து வருகிறது.

ஆபீஸ் பையன்:- பணக்கார முதலாளிகளை பயமுறுத்தி கமிஷன் வியாபாரம் நடத்துகிறவர்கள்; இப்படித்தான் பிறர் மீது சேறு வாரி இறைப்பார்கள்! மருத்துவக் கல்லூரிக்கு இவர்கள் வாங்குகின்ற கமிஷன் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பா?

டாக்டர் ராமதாஸ் :- குரு பேசியதை ஒட்டுக் கேட்டதற்காக ஒட்டுக் கேட்பு புகழ் கலைஞர் என்று அழைக்கிறேன்.

ஆபீஸ் பையன்:- குருவிற்கு ஆதரவாக எப்போதும் ராமதாஸ் பேசுகிறார் என்பதால், "சண்டியர் புகழ் ராமதாஸ்" என்று நாமும் அழைக்கலாமே?

டாக்டர் ராமதாஸ் :- தமிழகத்தில் உள்ள காலி இடங்களையெல்லாம் டாட்டா, டி.எல்.எப். கம்பெனிகளுக்கு கொடுக் கிறார்களே?

ஆபீஸ் பையன்:- இதே கேள்வியை பல முறை கேட்டு டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டதற்கெல்லாம் நெற்றியிலே அடிப்பதைப் போல விவரமாக முதல்வர் கலைஞர் பதில் அளித்திருக்கிறாரே; அதையெல்லாம் ராமதாஸ் படிக்கிறாரா? இல்லையா?

டாக்டர் ராமதாஸ் :- தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் போட வேண்டும் என்றால் தி.மு.க. வில் 90 சதவிகிதம் பேரை போடலாம்.

ஆபீஸ் பையன்:- தி.மு.க.விலே உள்ள பேச்சாளர்கள் எல்லாம் அவனைக் கொலை செய்வேன், இவனைக் கொலை செய்வேன், எவனும் மயிரைப் புடுங்க முடியாது என்றெல்லாம் வாய்க்கொழுப்பெடுத்தா பேசுகிறார்கள்? கட்சிக்காரனை மரியாதையாகப் பேசச் சொல்லி கண்டிக்க யோக்கியதை இல்லை. இதில் வறட்டு ஜம்பத்திற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.

டாக்டர் ராமதாஸ் :- நாங்கள் தி.மு.க. வினரை பல ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க வைத்திருக்கிறோம்.

ஆபீஸ் பையன்:- திண்டிவனம் கொலை வழக்கிலிருந்து தப்பியது மறந்து விட்டதா அய்யாவுக்கு?

டாக்டர் ராமதாஸ் :- தமிழகத்தில் நந்தி கிராமம் வராமல் தடுத்தது பா.ம.க. தான்.

ஆபீஸ் பையன்:- தமிழக அரசின் ஒவ்வொரு சாதனைக்கும் நந்தியாக நீங்களே இருக்கும்போது நந்தி கிராமம் எப்படி வரும்?

டாக்டர் ராமதாஸ் :- தமிழகத்திலே மின்வெட்டு - ஆற்காட்டிற்கு அனைத்து தரப்பினரும் சாபம்!

ஆபீஸ் பையன்:- நீங்கள் ஜெயலலிதா விற்கு கொடுத்த சாபங்களை விடவா? பார்ப்பதற்கு நேரம் கொடுக்காமல் அலைக் கழித்தார் என்று நீங்கள் கொடுத்த சாப அறிக்கைகள் இன்றும் பழைய ஏடுகளில் உள்ளதே?

டாக்டர் ராமதாஸ் :- இசை வேளாளர் சமுதாயத்தை மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நான்தான் காரணம்!

ஆபீஸ் பையன்:- இசைவேளாளர் சமுதாயம் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றது காமராஜர் ஆட்சியிலே இருந்த போதுதான்! பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டாமா?

டாக்டர் ராமதாஸ் :- இட ஒதுக்கீட்டிற் காக பத்து முறை சிறை சென்றிருக்கிறேன்?

ஆபீஸ் பையன்:- தைலாபுரம் போய் வந்ததை எல்லாம் சிறை என்கிறார்போலும்! ஒரே ஒருமுறை ஜெயலலிதா இவரைப் பிடித்து உள்ளே போட்டதும், மனைவியையே ஜெயலலிதாவிடம் சமரசத்திற்கு அனுப்பிய வீராதி வீரர் அல்லவா இவர்?

டாக்டர் ராமதாஸ் :- வன்னியர்கள் யாரும் உயர்ந்த பொறுப்பில் இல்லை.

ஆபீஸ் பையன்:- தேர்வாணையத்தில் வன்னியர் யாரும் உறுப்பினராக இல்லை என்று நீங்கள் கடிதம் எழுதி, ராமசாமி என்பவரை நியமிக்க வேண்டுமென்று கடிதம் எழுதியவுடன் அவரை நியமித்து ஆணை பிறப்பித்தவர் கலைஞர் என்பதை அதற்குள்ளாகவா மறந்து விட்டீர். அந்தத் தேர்வாணையத்தின் தலைவராகவே ஒரு வன்னியரைத்தான் கலைஞர் நியமனம் செய்திருக்கிறார். தேர்தல் ஆணையத் தலைவராகவும் பணி நீடிப்பு கொடுத்து ஒரு வன்னியரைத்தான் கலைஞர் நியமித்திருக்கிறார். சேலம், திருநெல்வேலி பல்கலைக் கழகங்களில் வன்னியர்கள்தான் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மூன்று அமைச்சர்களாக வன்னியர்கள் இடம் பெற்றிருப்பதே இந்த ஆட்சியிலே தானே?

டாக்டர் ராமதாஸ் :- முரசொலியில் சின்ன குத்தூசி என்ற பெயரில் ஒரு பக்கம் எழுதுவார்.

ஆபீஸ் பையன்:- சின்னக்குத் துhசி "தமிழ் ஓசை பாலா" அல்ல.

டாக்டர் ராமதாஸ் :- நீங்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக வந்திருக்கிறீர்கள். இதுவரை என்ன சாதனை செய்திருக்கிறீர்கள்? மேடை போட்டு பேச நான் தயார், நீங்கள் தயாரா?

ஆபீஸ் பையன்:- உங்களோடு வாதாட முதல்வர் வேண்டாம், நானே தயார்! எப்போது வைத்துக் கொள்ளலாம். வன்னியர் பயன் பெற வேண்டுமென்பதற்காக 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கொடுத்த ஒரு சாதனை போதாதா? கலைஞர்தான் சாதனையே செய்யவில்லையே, பிறகு எதற்காக 2006ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தல் உறவு கொள்ள வந்தீர்கள்? எப்படியாவது வெற்றி கிடைத்து விடும் என்ற அற்பப் புத்தியினால் தானே? மேடைக்கு மேடை வானளாவ புகழ்ந்தீரே, பாராட்டி கடிதம் எழுதினீரே, ஏடுகளில் எல்லாம் வெளிவந்ததே? அதெல்லாம் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வாய்ஜாலம் காட்டிய வஞ்சகமா?

டாக்டர் ராமதாஸ் :- மரக்காணத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப் போவதாகச் சொல்கிறீர்கள். இதை காதில் பூ வைத்தவன் கூட நம்ப மாட்டான்.

ஆபீஸ் பையன்:- ஆமாம், நீங்கள் நம்பத் தான் மாட்டீர்கள்!

டாக்டர் ராமதாஸ் :- உங்கள் அதிகாரிகளுக்கு வகுப்பெடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆபீஸ் பையன்:- வகுப்பெடுத்துக் கொள்ளத்தான் யாரும் தயாராக இல்லை. முதலில் நீங்கள் எப்படிப் பேசுவது, எப்படி அறிக்கை விடுவது, எப்படி பழகுவது என்பதற்கு யாரிடமாவது வகுப்பெடுத்துக் கொள்வது நல்லது.

டாக்டர் ராமதாஸ் :- தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆபீஸ் பையன்:- தி.மு.க. பட்டது போதாதா?

டாக்டர் ராமதாஸ் :- பா.ம.க.வின் கொள்கை மற்றும் தி.மு.க.வின் கொள்கை பற்றிப் பேசத் தயாரா?

ஆபீஸ் பையன்:- பா.ம.க.வுக்கு கொள்கையா? பலே! பேஷ்!




தொடர்புடைய ஜூவி கழுகார் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்....

'' 'முரசொலி'யைப் பார்த்தீரா? டாக்டர் ராமதாஸ் மேடையில் பேசியதற்கு வார்த்தைக்கு வார்த்தை 'ஆபீஸ் பையனை' விட்டு பதில் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். எப்போதும் போல கடந்த 26-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. மீது வசைபாடிய டாக்டர் ராமதாஸ், ஆற்காட்டாரை கொஞ்சம் கூடுதலாகவே காய்ச்சி எடுத்துவிட்டார். அதற்கு பதிலடிதான் ஆபீஸ் பையன் பதில்...''

''டாக்டர் அப்படி என்னதான் பேசினார்?''

''பா.ம.க. தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் முடிவதையட்டி சென்னை சைதாப்பேட்டையில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாட்டாளிகளின் சிரமங்களையெல்லாம் பட்டியலிட்ட டாக்டர், அதில் மின்வெட்டை ஹைலைட் செய்தார். 'எனக்குப் பழி, பாவம், சாபம் ஆகியவற்றில் நம்பிக்கை கிடையாது. ஆனால் ஒரு விவசாயி, லேத் பட்டறை தொழிலாளி, மில் தொழிலாளி என பாட்டாளி சமூகத்தின் சாபமெல்லாம் சாமியை சும்மா விடாது. அந்தச் சாமி எந்தச் சாமின்னு உங்களுக்குத் தெரியும்' என்று பெயர் குறிப்பிடாமல் ஆற்காடு வீராசாமியை ஒரு பிடிபிடித்தார். இதற்குத்தான் முரசொலியில், 'நீங்க ஜெயலலிதாவுக்கு கொடுத்த சாபங்களை விடவா?' என்று ஆபீஸ் பையன் மூலமாக டாக்டருக்கு கேள்வி வைத்திருக்கிறது தி.மு.க.''


Read More...

அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு....

28.7.08 முரசொலியில் வந்த அழகு தமிழ் கட்டுரை..

ராம பக்தை - அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு நாள் தவறாது கலைஞரைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் பொழுதுபோகாது.

26.7.2008 அன்று ராமர் பாலம் என்ற கற்பனைக்கு ஆதரவாக விடுத்த அறிக்கையில்,

"தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று பகிரங்கமாகக் கூறுகிறார்.

இந்துக்களின் வணக்கத்துக்குரிய இறைவன் பெருமாள், காமத்தில் நீந்திக் களித்தவர் என்று இப்போது கருணாநிதி கண்டுபிடித்துள்ளார்."

- என்று கலைஞர் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார்.

ராமர் குடித்தார் - என்று கலைஞர் தன் கருத்தாக - சொந்தக் கருத்தாக ஒருபோதும் கூறியதில்லை.

ராமர் குடிப்பார்

அவருக்கு

குடிப்பழக்கம் உண்டு

என்று ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரே கூறியிருக்கிறார். வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டத்தில் ஸர்க்கம் 37ல் -

ராமருக்குக்

குடிப்பழக்கம்

உண்டு

என்று வால்மீகியே கூறியிருக்கிறார் என்றுதான் கலைஞர் எடுத்துக்காட்டியிருந்தாரே தவிர - தமது சொந்தக் கருத்தாக ராமர் பற்றி அப்படியெல்லாம் கூறவில்லை.

28.9.2007 தேதியிட்ட ‘முரசொலி’யில் ‘சுந்தரகாண்டம் சொல்வது என்ன?’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதினார். அதிலே -

"இராமனைக் கருணாநிதி இழித்துரைத்தார் இராமன் மது அருந்தியதாகக் கூறுகிறார் - அதனால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பதவி துறக்கவேண்டும் என்று பதறித் துடிக்கிறார்கள். அய்யோ பாவம்; நான் அவர்களுக்கு விளக்கமாகக் கூறிவிட்டேன். ‘வால்மீகி’" எழுதிய ராமாயணம் என்ன சொல்கிறது? மூதறிஞர் ராஜாஜி எழுதிய ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற ராமாயண ஆய்வு நூல் என்ன சொல்கிறது?

அவற்றில் எல்லா பகுதிகளையும் நான் சாட்சியத்துக்காகப் பயன்படுத்த விரும்பவில்லை இதோ -

"சீதையைத் தேடி வந்த அனுமான், அவளை அசோகவனத்தில் கண்டு, அவளைப் பிரிந்த இராமன் படும் துன்பத்தை இதோ; ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் ஸர்க்கம் 37 வர்ணிக்கிற விதத்தை மாத்திரம் கண்டால் போதும்.

"தேவியாரைப் பிரிந்த நிலையில் இராமருக்குத் தூக்கமே கிடையாது. எப்போதாவது தேகம் அலுத்துத் தூங்கினாலும் ‘சீதே’ என்ற மதுரமான வார்த்தையைச் சொல்லிக்கொண்டே விழித்துக் கொள்கிறார். தங்கள் நினைவால் மது, மாமிசம் அருந்துவதை விட்டுவிட்டார். வானப் பிரஸ்தருக்கு உகந்த பழம், கிழங்குகளையே சாயங்காலத்தில் புசிக்கிறார்"

"உடன்பிறப்பே, தலையும் நாக்கும் வேண்டும் என்று துடியாய்த் துடிப்பவர்கள்; அதைப் பிடித்துக்கொண்டு குதியாய்க் குதிப்பவர்கள் - அம்மையின் பிரிவால் அய்யன் துயருற்று அதுவரை அருந்தி வந்த மதுவையும், மாமிசத்தையும் விட்டுவிட்டார் என்பதற்குப் பொருள் என்ன கூறுவரோ? யானறியேன்!"

- என்று வால்மீகி முனிவரின் வாக்குமூலமே ராமர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதை விளக்கியிருந்தார்.

வால்மீகி ராமாயணத்தின் சுந்தரகாண்டம் ஸர்க்கம் 37ல் அப்படியெல்லாம் இல்லை என்று இன்று வரை எந்தக் கொம்பனும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது!

வால்மீகி குறிப்பிட்ட ‘மது’ என்ற சொல்லுக்குத் ‘தேன்’ என்றுதான் அர்த்தம். மது என்று அர்த்தமல்ல என்று துக்ளக் சோ மழுப்பினார் பதில் என்ற பேரில்.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட கழகத் தமிழ் அகராதியில் தேன் என்றாலும் மது, கள் என்று பொருள் கூறப்பட்டிருக்கிறது.

ராமனின் அயோத்தி மக்களே குடிப்பழக்கம் உள்ளவர்கள். ஆண்கள் மட்டும்தானா பெண்களும் குடிகாரர்களாகத்தான் இருந்தார்கள் என்று கம்பராமாயணம் கூறுகிறது.

ஜெயலலிதாவின் ஆர்.எஸ்.எஸ். நகல் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றுதான் பெயர்.

கட்சிக்கொடியிலும் அண்ணாவின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

அண்ணா ‘கம்பரசம்’ என்ற நூலில் அயோத்தி மக்கள் குடிகாரர்கள் - ராமனுக்கு காம உணர்ச்சி அதிகம் என்பதை கம்பராமாயணத்திலிருந்தே டோஸ் - டோசாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் என்ற செய்தி அயோத்தி மக்களிடையே பரவுகிறது. அந்தச் செய்தி அவர்களது சிந்தை எல்லாம் மகிழ்ச்சி மயமாக்குகிறது! அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்; எப்படி?

குடித்துக்

கும்மாளமிட்டு!

உண்டாட்டுப் படலத்திலே உவகை பொங்கிட - கம்பர் அந்தக் குடிகாரர்களின் நிலையையும் - அவர்களது கொண்டாட்டத்தையும் வர்ணித் திருக்கிறார். எப்படி?

அதை அண்ணாவின் வாயாலேயே கேட்போம்:-

"வெண்ணிலா தன்னொளி பரப்பிற்று; இராமனுடைய தூயமனம் போலவா - தசரதனுடைய வெண்கொற்றக் குடைபோலவா - அல்ல, அல்ல, காமம் மிக்கு ஒழுகிற்று என்ன என்று அறிவிக்கிறார் அரிதாசர், பளிச்செனப் புரியவேண்டும் என்பதற்காக, காமம் மிக்கு ஒழுகிற்று என்று கூறியதுடன் கள் வெள்ளம் புரண்டு வருவதுபோல என்றார்.

வெப்பம் கொண்டு இருபாலரும் விடுதி திரும்பினர் - அவர்களை நிலவு மகிழ்விக்க வந்தது - அந்த நிலவொளி எங்ஙனமிருந்ததென்றால், காமம் மிகவும் வெளிப்பட்டது போலவும், கள்வெள்ளமாக ஓடியது போலவுமிருந்தது, மதி நிறைந்தது, மதுக்குடம் தெரிகிறது. காமுற்ற இரு பாலரிடம் கட்குவளைகள்! உண்டாட்டுப் படலத்தில் முதற் பாடலே இது; அவர்கள் இனி உண்ணப் போவது என்ன, ஆடப் போவது எவ்விதம் என்பதை எடுத்துக்காட்டுவது போல, இனி அவர்கள் கள்ளைக்குடித்துவிட்டு காமக் கூத்தில் ஈடுபடப் போகிறார்களென்பதைச் சுட்டிக் காட்டியாகிவிட்டது - முதற்பாட்டிலேயே; அந்தக் கூத்து நடந்து தொலைக்குமட்டும் கவி, வேறு பொருள்பற்றிக் கூறிடலாகாது; இதை இனியும் காணவல்லேன் அல்லேன்; என்று கூறியபடி மதி எனும் மங்கை நல்லாள் மறைந்திடக் கண்டான், சுடுகிறேன் அவர் தமை என்று சூளுரைத்துமே கதிரவன் எழுந்தான் காணீர் - என்று ஒரே பாடலோடு முடிந்திடலாகாதா! நம்மைக் கூறுவர், சரியப்பா! காமச் சுவை இருக்கிறது என்று ஒரு வரியோடு விட்டுத் தொலைக்காமல், துளைத்துத் துளைத்துக் காட்டுவதா - என்று வெட்கத்தால் தாக்குண்டவர்கள். கம்பர் இந்த உண்டாட்டுப் படலத்தில் 67 பாடல்கள் பாடி இருக்கிறார். அவ்வளவும் ரவிவர்மா கை வண்ணத்தோடு வெளிவந்தால், உலக உல்லாசக்கூடக் கண்காட்சியில் முதலிடம் பெறும். அவ்வளவு ‘ரசம்’!!

மகளிர் கள்ளைக் குடிக்கும்போதே, வழி நடந்த களைப்புத் தீரவேண்டும் என்றோ, அலுத்து உறங்க வேண்டும் என்றோ எண்ணவில்லை! பஞ்சைகளன்றோ அவ்விதம் எண்ணுவர்! இவர்கள் கொஞ்சுமொழிப் பாவையர், எனவே, தங்களை ‘யுத்தத்துக்கு’த் தயாரித்துக் கொள்ளவே, குடிக்கிறார்கள்.

குடித்தார்கள், குடித்தார்கள் என்று குறை கூறாதே, அவர்கள் குடித்தது, தேன் அல்லது, மலரும் வாசனைப் பொருள்களும் சேர்ந்த சுவைமிகு பானம் - கள் அல்ல! என்று வாதாடிப் பார்க்கிறார்கள் சிலர்.

பைத்தியக்காரி! இது ஏதோ உடலுக்குக் கெடுதல் என்று எண்ணுகிறாள்! இது அவ்வளவும்! பிளட் (க்ஷடடிடின) டானிக்!" என்று, ‘இழந்த காதல்’ நாடகத்தில் ஒரு கட்டம் வரும்; அதுபோலச் சிலர், அயோத்தி அணங்குகள் போதை சாப்பிடவில்லை என்று கூறுவர்! உள்ளதை மறைக்க வெகு பாடுபடுகிறார்கள்!!

கண் சிவக்கிறது, நிலை தடுமாறுகிறது, ஒரு பொருள் மற்றொன்றாகத் தெரிகிறது, எதிரில் இருப்பது இன்னது என்று தெரியவில்லை, பாத்திரத்தில் பானம் இருப்பதும் தீர்ந்து போனதும் புரியவில்லை. நிலவுக்கும் கள்ளுக்கும் மாறுபாடு தெரியவில்லை. நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. நாக்குக் குழறுகிறது. வார்த்தைகள் பொருளற்று உருள்கின்றன. காரணமற்றுச் சிரிப்பு, கைகொட்டி ஆடுவது - இது தேன் உண்டதின் இலட்சணமா!!

இவ்வளவு வருகிறது, கம்பர் கவிதையில் தெளிவாக, உண்டாட்டுப் படலத்தில்.

மலரணை! மலர் சூடிய மங்கையர்! மதுக்குடம் இப்படித்தான் ஆரம்பமாகிறது; உண்டாட்டுப் படலம் ஆறாம் பாடல். களவிப்போரில் நாம் தோற்றுவிடக் கூடாது, களித்திடவேண்டும் என்ற கருத்துடனேயே பருகுகிறார்கள் - பஞ்சை பராரிகள் அல்ல. எனவே புளித்துப்போன கள்ளை மண் பாண்டத்தில் வார்த்துக் குடிக்கவில்லை - பொற்கிண்ணத்தில் புதிய மதுவை ஊற்றிக் குடிக்கிறார்கள். உண்ட கள் காமத்தை மூட்டுகிறது! கவிதை 9. ஓமகுண்டத்திலே நெய்யை ஊற்றினதும் தீ மேலே எழுவது போல, உள்ளே மது சென்றதும், மூண்டு கிடந்த காமம் மேலே எழுகிறது.

வெம் காமம் கனலினை

கனற்றிக் காட்டிற்று

சாதாரணக்குடி அல்ல! பட்டதும், வெடித்தெழுகிறது காமம்! இராமபாணத்தின் சிறப்பைப் பிறகு பாடலாம் இப்போது இந்த ரசபானத்தின் சிறப்பைக் கூறி முடிப்போம் என்று கம்பர் விரிவாகவே, அதனால் ஏற்பட்ட சேட்டைகளைக் கூறுகிறார்.

மதுவிலே தெரியும் உருவு கண்டு, அதனைத் தோழி என்று எண்ணுகிறாள் ஒருத்தி, மதுவிலே தன்முகம் தெரிகிறது, போதை ஏறிய நிலையில் இருப்பதால் வேறு யாரோ ஒருத்தி, தன்னிடம் உள்ள மதுவைப் பருக வருகிறாள் என்று எண்ணிக் கொள்கிறாள். இவள் குவளையில் ஒன்றுமில்லை நிலவொளி அதிலே வீசுகிறது. அதைக் கள் என்று எண்ணிக் கொண்டு குடிக்க முயல்கிறாள், இன்னொருத்தி. ஒருத்தி வள்ளலாகி விடுகிறாள். வானத்து நிலவு வட்டிலில் தெரிகிறது, வா! வா! வந்து நீயும் கொஞ்சம் பருகு, அஞ்சாதே வா! என்றே அழைக்கிறாள். ஒருத்தி எங்கே அந்த மனுசன்! நேரம் நினைப்புத் தெரியாத ஆசாமி! "போடி! அழைத்து வா ஓடு!" - என்று தூது அனுப்புகிறாள். ஒருத்தி பஞ்சணையில் படுத்திருந்த தன் பதியைப் பாதத்தால் உதைத்து, பதைப்புறு காதல் கொள்ளும்படி செய்கிறாள், மன்மதனே களிப்படைகிறானாம், அவர் தம் சொல்லைக் கேட்டும், செயலைக் கண்டும்!!

குளித்தது கூடியது போலவே இருந்தது என்று கூறினது போலவே, குடித்ததும் கலவி போன்றே இன்பளித்தது என்றார்; எதுகை மோனை மட்டுமல்ல, எல்லா ரசபாவங்களும் அனுபவ பூர்வமாகத் தெரிந்திருக்கவேண்டும், அல்லது அத்தகைய சுகானுபவத்தைப் பெற்றவர்களின் தோழமை இருந்திருக்கவேண்டும், இவ்விதம் கவிதை இயற்ற; சும்மா வராது!"

- என்று கம்பராமாயணத்து காமவெறி கள்வெறி ஆகியவைகளை அண்ணா சுட்டிக் காட்டி யிருக்கிறார்.

‘யதாராஜா - ததாபிரஜா’ என்பது வடமொழியில் வழங்கும் பழமொழி.

‘மன்னன் எவ்வழி - மக்களும் அவ்வழியே’ என்பது இதன் பொருள்!

வடமொழியின் இந்தக் கூற்றுப்படி பார்த்தால் ராமர் குடிப்பழக்கம் உள்ளவர் - என்று வால்மீகி சுந்தரகாண்டத்தில் சொன்னதையும், ராமராஜ்யத் துப் பிரஜைகள் குடிகாரர்கள் என்று கம்பர் எழுதியிருப்பதையும் யாரே மறுக்கமுடியும்!

ஜெயலலிதா மறுக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவருக்கு செக்கு எது என்றும் தெரியாது; சிவலிங்கம் எது என்றும் தெரியாது என்பதன்றி வேறு என்ன?

ராமன் - பெருமாள் காமவெறியர் என்று கலைஞர் இப்போது கண்டுபிடித்துள்ளார் என்கிறார் ஜெயலலிதா!

இப்போதல்ல; அப்போதே 1925ல் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலமுதலே பெருமாளும் பெருமாளின் அவதாரமான ராமரும் எப்படிப்பட்ட காமாந்தகாரர்கள் என்பது மேடைகள் தோறும் ஏடுகள்தோறும், நூல்கள்தோறும் அலசி ஆராய்ந்து ஆதாரங்களோடு புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள்!கம்பராமாயணத்திலும் ராமனின் காமவுணர்வு எத்தகையது என்பதை விளக்கி கம்பன் காமரசம் சொட்டச் சொட்ட எழுதிய பாடல்களை எல்லாம் அண்ணா தமது ‘கம்பரசம்’ நூலில் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

அதை எல்லாம் இங்கே மறுபிரசுரம் செய்து விட்டால்தான் என்ன?

ஆரியநாரிமணி ஜெயலலிதா - படித்துத் திருந்தி விடுவாரா அல்லது தனது சொந்த ஆர்.எஸ்.எஸ். கட்சியின் பெயரிலிருந்து அண்ணாவின் பெயரையும் அண்ணாவின் உருவத்தையும் அகற்றிவிடப் போகிறாரா?

இதைத்தான் ஜெயலலிதாவின் பிதற்றல்களை - பித்தலாட்டங்களை தகர்த்துத் தரைமட்டமாக்கும் வகையில் மறுக்க முடியாத ஆதாரங்களோடு விடுத்துள்ள அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஜெயலலிதாவுக்கு ஓர் அறைகூவல் என்பது போலவே அடுக்கடுக்கான வினாக்கள் வடிவில் கேட்டிருக்கிறார்.

அவை வருமாறு:-

1. ராமன் - இராமாயணம் பற்றிய தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகியோரின் கருத்துக்களை எதிர்க்கிறீர்களா?

அப்படியென்றால் அய்யா, அண்ணா கொள்கைகளுக்கு விரோதமானதுதான் அண்ணா தி.மு.க. என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?

2. அதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால், கட்சியிலிருந்தும் கொடியிலிருந்தும் அண்ணாவை அகற்றி விடுவீர்களா?

திராவிட இயக்கச் சிந்தனைக்கு எதிரான சிந்தனையும் போக்கும் உங்களுக்கு இருக்கிற காரணத்தால், ‘திராவிட’ என்ற இன கலாச்சார வரலாற்றுப் பெயரையும் கட்சியிலிருந்து நீக்கிவிடுவீர்களா?

இந்த இரு கேள்விகளுக்கும் உரிய பதிலை சந்தேகத்துக்கு இடமின்றி அறிவித்த பின்னர்தான் ராமனுக்கும் - ராமாயணத்துக்கும் வக்காலத்து வாங்கவேண்டும் - அதுதான் அறிவு நாணயமும் நேர்மையும் ஆகும்"

- என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் வீரமணி!

பதில் சொல்வாரா ஜெயலலிதா? அறிவு நாணயத்துக்கும் நேர்மைக்கும் ஜெயலலிதா வுக்கும் வெகுதூரமாயிற்றே!

Read More...

சன் டி.வி., ஸ்டார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை : அரசு

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு தங்களது சேவையை இதுவரை வழங்காத சன் டி.வி., ஸ்டார் டி.வி. உள்ளிட்ட குழுமங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு கம்பி வட தொலைக்காட்சி நிறுவனம் தற்போது 23 கட்டண சேனல்களையும் சேர்த்து 73 சேனல்களை விநியோகித்து வருகிறது.

இவற்றில், ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ், ஜி ஸ்போர்ட்ஸ், டி.டி.ஸ்போர்ட்ஸ், நியோ ஸ்போர்ட்ஸ் மற்றும் நியோ ஸ்போர்ட்ஸ் பிளஸ், எல்லா தமிழ் சேனல்கள் (விஜய், ஸ்டார் குரூப் டி.வி. மற்றும் சன் டி.வி. குழும சேனல்களை தவிர) ஆகியவை அடங்கும்.

இருப்பினும் தங்களது சேவைகளை அரசு கேபிள் டி.வி.க்கு அளிப்பது தொடர்பாக ஸ்டார், சன் மற்றும் சோனி எண்டர்டைன்மென்ட் ஆகிய ஒளிபரப்பாளர்களிடம் இருந்து இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிறுவனங்களின் இணைப்புகள் சம்பந்தமாக சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தக்க சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More...

முண்டாசு கட்டிய விஜயகாந்த், மூடவுட் ஆன மு.க

கடந்த மூன்று நாட்களாக விஜயகாந்த் x கலைஞருக்கு நடக்கும் பேச்சு போட்டி அறிக்கைகள்....

ஜூலை 27 விஜயகாந்த் பேச்சு
தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டைக் கண்டித்து தேமுதிக சார்பில் தஞ்சாவூரில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆயிரக்கணக்கானோர் திரண்ட ஆர்ப்பாட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,

கர்நாடகத்தில் காவிரி உட்பட மூன்று நதிகள் ஓடுகிறது. ஆனால் நம் மாநிலத்தில் ஒரே ஒரு நதியை தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. கர்நாடகா பணக்கார மாநிலமாகவும், தமிழ்நாடு ஏழை மாநிலமாகவும் இருக்கிறது.

தண்ணீர் பிரச்சனையை வைத்து கர்நாடகத்தில் அரசியல் செய்கிறார்கள். அதே போல் இங்கும் அரசியல் செய்கிறார்கள்.

தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்குத்தான் திமுக உறவாம். இது எப்படி இருக்கிறது? இலவச டிவி கொடுக்கும் நமது முதலமைச்சர், ஏன் அதற்கான இணைப்பை இலவசமாக கொடுப்பதில்லை?

விவசாயிகளுக்கு விதைப்பதற்கு நல்ல விதையும், விளைந்த விலை பொருட்களுக்கு நல்ல விலையும் கொடுங்கள் என்கிறோம். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் இவ்வாறு கொடுக்க முடியுமா என்கிறார்கள். கண்டிப்பாக நாங்கள் கொடுப்போம்.

விவசாயக் கடனை ரத்து செய்துள்ளோம் என்று மத்திய அரசும், மாநில அரசும் சொல்கிறது. ஆனால், ஏழை விவசாயிகளின் கடனை ரத்து செய்தார்களா? பணக்கார விவசாயிகள் தானே இதில் பலன் அடைகிறார்கள்.

சிறு, குறு விவசாயிகள் என்று கூறும் அரசு, அவர்களுக்கு விவசாயக்கடன் கொடுப்பதே இல்லை. இந்த விவசாயிகள் வங்கிக்கு சென்று கடன் கேட்டாலும் விரட்டப்படுகிறார்கள். இந்த அளவுக்கு மோசமான அரசுதான் இன்று நடந்து வருகிறது.

2 மாதங்களுக்கு முன் உரம் தட்டுப்பாடு இருந்தது. இப்போது உரம் வாங்க ஆள் இல்லை என்று அமைச்சர் சொல்கிறார். விவசாயத்திற்கு தண்ணீரும் கொடுப்பதில்லை, மின்சாரமும் கொடுப்பதில்லை.

நமது முதலமைச்சர் தற்போது டெல்லிக்கு சென்றாரே, ஏன்? நாட்டு மக்கள் பிரச்சனை குறித்துப் பேசவா சென்றார். அவரது பிரச்சனை பற்றி பேச மட்டுமே சென்றார்.

விவசாயிகளை நீங்கள் தேர்தலுக்காக மட்டும்தான் பயன்படுத்துவீர்களா? நாட்டில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உயர்வு, மின்சார தட்டுப்பாடு வரும் என்று முன்கூட்டியே மக்களுக்கு தெரிந்திருந்தால் நிச்சயமாக இந்த அரசை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.

மின்சாரத்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன் நகர் பகுதிகளில் ஒரு மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 2 மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என்றார். ஆனால் நகர் பகுதியில் 2 மணி நேரமும், கிராமப் பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் தடைப்படுகிறது.

மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கொடுப்பதற்கு தானே அமைச்சராக உட்கார வைத்துள்ளோம். இவ்வாறு மின்சாரத்திற்கு விடுமுறை கொடுத்தால் எதற்காக அந்த பதவி?.

பவர் கட், பவர் கட் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படியே போனால் மக்கள் உங்களின் பவரை ஆஃப் செய்து விடுவார்கள்

ஜூலை - 28 - கலைஞர் கேள்வி பதில் அறிக்கை


கேள்வி :- "விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி'' என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு "தினமணி'' ஒருவரது பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளி யிட்டிருக்கிறதே?

பதில்:- ஆமாம் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் - 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு - விவசாயிகள் கடனை ரத்து செய்ததும் - யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு (ப) வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!

விவசாயிகளுக்காக தி.மு.கழக அரசு செய்தசாத னைகளின் பட்டியல் வேண் டுமா? இதோ :-

இந்தியாவிலேயே முதன் முதலாக 1990இல் தி.மு. கழக அரசு தான் விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின் சாரம்; தொடர்ந்து எத்த னையோ எதிர்ப்புகள், சிரமங்களுக்கிடையிலும் நீடிக்கப்பட்டு அதனால் லட்சக்கணக்கான விவசாயி கள் பயன் பெற்று வருகிறார் கள்.

டிசம்பர் 1996இல் ஏற் பட்ட வெள்ளச்சேதம் காரண மாக விளைபொருள் இழப்புக் காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.

மீண்டும் நவம்பர் 1997இல் ஏற்பட்ட வெள்ளச் சேதம் காரணமாக - விவசாயி களுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட் பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர். மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அர சினால் ரத்து செய்யப் பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.

இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000/; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000/- நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.

மூன்று குதிரைத்திறன் கொண்ட ஆயில் என்ஜின் களுக்குப் பதிலாக ஐந்து குதிரைத் திறன் கொண்ட ஆயில் என்ஜின்கள் வாங்க சிறு விவசாயிகளுக்கு 25 விழுக்காடு அளவிற்கும், மிகச்சிறு விவசாயிகளுக்கு 30 விழுக்காடு அளவிற்கும், தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இன விவசாயிகளுக்கு 50 விழுக்காடு அளவிற்கும் மானியத் தொகை கழக அரசி னால் வழங்கப் படுகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப் படும் 13 சதவிகித வட்டி 12 சதவிகிதமாகவும், 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு விதிக்கப் படும் 16 சதவிகித வட்டி 15 சதவி கிதமாகவும் குறைப்ப தென்று 24-10-2000 அன்றைய அமைச்ச ரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக் கப்பட்டுள்ளது.

30-6-99க்கு முன்பு தவணை தவறிய வேளாண்மை சார்ந்த கடன்களுக்கு, 31-7-2000க் குள் வட்டியுடன் கடனைச் செலுத்திய 3,40,727 சிறிய, பெரிய விவசாயிகள் அனை வருக்கும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.

1998-99ல் நடப்புக் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 6.25 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

1999-2000இல் இந்த ஊக்குவிப்புத் தொகை 7 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை 2,42,817;

நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் வழங் கப்படும் மாத ஓய்வூ தியம் ரூ. 100 என்பது 1997இல் ரூ.150 ஆகவும், 2000-2001இல் ரூ. 200 ஆகவும் தற்போது 2006இல் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 400 ஆகவும் கழக அரசிலே உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த பாதைக்கட்டணம் 2000-2001இல் கழக அரசில் ரத்து செய்யப் பட்டுள்ளது.

விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப்பாதுகாக்க கழக அரசில் திரு.கோலப்பன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு அமைக் கப்பட்டு - அவரது பரிந்துரை களையேற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது.

விவசாயத் தொழிலாளர் களுக்கென்று தனியாக நல வாரியம் ஒன்று தொடங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு 1 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேர் இது வரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு -இது வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 7 விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழிலாளர் கள் குடும்பங்களுக்கு 159 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 963 ரூபாய் உத வித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தை களை தமிழகமெங்கும் அமைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல விலையிலே விற்கவும், வாங்கிப் புசிப்போர் நியாய விலையிலே அவைகளைப் பெறவும் வழி வகை செய்ததும் தி.மு. கழக அரசு தான்.

2006ஆம் ஆண்டு பதவிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே பிறப் பிக்கப்பட்ட மூன்று ஆணைகளில் ஒன்றே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்தது தான். கடன்களை ரத்து செய்தது மாத்திரமல்லாமல், புதிய கடன்களை அவர்கள் 1500 கோடி ரூபாய் அளவிற்கு பெறவும் நிதி நிலை அறிக்கையிலே வசதி செய்யப்பட்டது.

விவசாயிகளின் கடன் களுக்கான வட்டி வீதத்தை 2006-2007இல் 9 சதவி கிதத்திலிருந்து 7 சத விகிதமாகக் குறைத்து, அதனை 2007-2008இல் 5 சதவிகிதமாக மேலும் குறைத்து, அதுவும் போதா தென்று இந்த ஆண்டு முதல் வட்டி வீதத்தை 5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைத்துள்ள ஆட்சியும் தி.மு. கழக ஆட்சி தான்.

நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப்பண்படுத்தி இலவசமாக
அளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

2008-2009ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு நெல் கொள் முதல் விலையை சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 850 ரூபாய் என்றும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 880 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்து அறிவித்தவுடன், தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1000 ரூபாய் என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1050 ரூபாய் என்றும் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கேள்வி :- காவேரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயிகளை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் தினமணியில் விஷம் கக்கி யிருக்கிறாரே?

பதில்:- காவேரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டு மேயானால் - அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதி மன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்ட தால்; தமிழக தி.மு.க. அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதி யான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவ சரக்கார அரசியல் வாதி கள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்ச நீதி மன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும் - அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவேரித் தண்ணீரை தமி ழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபர மறிந்த வர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கி றார்கள்.

கேள்வி:- வருமான வரித்துறைக்குப்பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிர முகர் பேசியதாக பிரசுரித் திருக்கிறதே?

பதில்:- வருமான வரிக்குப்பயந்து இப்போது காங்கிரஸ் காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!

கேள்வி :- "ஒகேனக்கல்'' கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப்பிரமுகர் உளறியிருக்கிறாரே?

பதில் :- பாவம்; ஒகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது - ஒகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என் கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிதி ஆதாரத்தைத் தேடிய நேரத்தில் ஜப்பான் நாட்டு உதவியை நாடி யிருந்தோம். அப்போது "பொக்ரான்'' குண்டு பரி சோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.

அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற் கொள்ளப்பட்டு,
அது வும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது
உண்மை. ஆனால் 2006இல் தி.மு.கழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடன் பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித்துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது.

இத்திட்டம் மத்திய அரசு சார்பிலும் - மாநில அரசுகள் சார்பிலும் பேசப்பட்டு - பிரச்சினைகள் இல்லாமல் விரைவில் நிறைவேற்றப்பட்டு - தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச் சினை தீர்க்கப்பட இருக்கிறது.

விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசா யிகளின் நண்பனாகி விட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என் பதையும் எழுதியுள்ளது. "போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்ற வாறு அவர் பேசத் துவங் கினார்.

அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தக வலையே திரும்பத்திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார்.

தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்து கொண்டார். காவிரி பிரச் சினை உட்பட பல தகவல் களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய் தது'' என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந் தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.

ஜூலை - 30 - விஜயகாந்த் பதிலடி
தஞ்சையில் விவசாயிகளுக்காக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நான் பேசியதற்கு முதல்வர் கருணாநிதி, தனக்கே உரிய பாணியில் கேள்வி கேட்டு பதிலும் அளித்துள்ளார்.


நான் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு, மக்களை திசை திருப்பும் வகையில் பதில் அளித்துள்ளார். காவிரி பிரச்னையில், 1971ல் அன்றைய பிரதமர் இந்திரா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சுப்ரீம் கோர்ட்டில் நடுவர் மன்றம் அமைக்க கோரிய வழக்கை கருணாநிதி திரும்பப் பெற்றார். அன்று திரும்ப பெறாமல் இருந்திருந்தால் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, 1974ம் ஆண்டிலேயே தீர்ப்பு கிடைத்திருக்கும். 34 ஆண்டுகளில் கர்நாடகம் பாசனப் பகுதியை அதிகரித்துவிட்டு இன்று தீராத தலைவலியாக ஆகியிருக்காது.இலங்கைக்கு கச்சத்தீவை வழங்க இந்திரா 1974ல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கருணாநிதி உடன்பட்டார். இதனால், இன்று வரை கடலோர மீனவர்கள் உயிருக்குப் போராடுகின்றனர். ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 1998ல் நிறைவேற்ற அனுமதி பெற்றிருந்தும், கர்நாடகம் தனது பெங்களூரு குடிநீர் திட்டத்தை நான்கு ஆண்டுகளில் முடித்துவிட்டது.


தமிழகத்தின் பங்கான ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை இன்று வரை நிறைவேற்றாதது மட்டுமல்ல, சோனியா கேட்டுக்கொண்டதால், தமிழக மக்களின் போராட்டத்தையும் கருணாநிதி ஒத்திவைத்தார்.இதனால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று நான் கூறினால், அதை பிதற்றல் என்கிறார். பிறர் கேட்கும்போது தனது சொந்த நலனை விட்டுக்கொடுக்கலாம்; நாட்டு நலனை விட்டுக்கொடுக்கலாமா?சாதனைகளை மற்றவர்கள் தான் பேச வேண்டும். விவசாயிகளுக்கு அளித்த சலுகைகளை கருணாநிதி பட்டியல் போடுகிறார். பேராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் பட்டியல் எங்கே என விவசாயிகள் கேட்கின்றனர்.


வருமான வரிக்கு பயந்து காங்கிரசார் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பதாக கேலி பேசியுள்ளார். என் சொத்துக்கள் எல்லாம், நான் உழைத்து சேர்த்த சொத்துகள். வருமான வரிக்குப் பயந்து யார் வீட்டு வாசலிலும் காத்துக் கிடக்கவில்லை. ஊழல் செய்து சொத்து சேர்த்தவர்கள் தான் பயப்பட வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து வழக்கிலோ, கோதுமை பேர ஊழலிலோ சிக்கிக் கொண்டு சிறை செல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைமையின் காலில் விழ வேண்டிய அவசியமும் இல்லை. இன்றும் பதவிக்காக டில்லியில் காத்துக் கிடப்பது யார் என்று நாட்டுக்குத் தெரியும்.


எம்.ஜி.ஆர்., ஆட்சியில் வீரப்பன் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது, திருச்செந்தூர் கோவிலில் வேல் காணாமல் போனது என்றும், சுப்பிரமணிய பிள்ளை கொலை செய்யப்பட்டார் என்றும் கூறி கருணாநிதி நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். அப்போது அவராகவே முண்டாசு கட்டிக்கொண்டார். தஞ்சையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தின்போது சில ஏழை விவசாயிகள் தங்களது துண்டுகளை தூக்கி எறிந்து முண்டாசு கட்டிக்கொள்ளச் சொன்னார்கள். அவர்களின் விருப்பத்தின்படி முண்டாசு கட்டினேன்.அவராகவே கட்டிக்கொண்ட முண்டாசு நீதி கேட்கத் தகுதியுடையது என்றால், நான் கட்டிக் கொண்ட விவசாயிகளின் துண்டு நீதி கேட்க தகுதியில்லையா?


கேப்டன் அடிச்சாரு சிக்ஸர்

Read More...

விஜயகாந்த் ஸ்பெஷல்

விகடன், கல்கியில் வந்த விஜயகாந்த் பேட்டிகள்...

விகடன் பேட்டி
''தலைநகரம், கொலை நகரமாகிவிட்டது போல தொடர்ச்சியாகக் குற்றங்கள்... காவல் துறையின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா?''

''அட, போங்க சார்! இதே கலைஞர் முன்னாடியே சொன்ன மாதிரி காவல் துறையின் ஈரல் கெட்டுப்போய் ரொம்ப நாளாச்சு! இருக்கிற கொஞ்ச நல்ல ஆபீஸர்களையும் சுயமா இயங்கவிடாமத் திட்டமிட்டுத் தடுக்குது இந்த அரசு. பிடிக்காதவங்களை உளவு பாக்குறதுக்கு மட்டும்தான் காவல் துறையை கரெக்ட்டாப் பயன்படுத்துறார் கலைஞர். மீட்டிங் போட்டுப் பேசினா மட்டும் போதுமா? சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போனதுக்கும் பொறுப்பேத்துக்குங்க. இனிமே இப்படி நடக்காம இருக்க என்ன செய்யப்போறீங்கன்னு மக்களுக்குச் சொல்லுங்க. இப்போ அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு இன்ச்சிலும் ஊழல் நடக்குது. கலைஞர் எப்போ ஆட்சிக்கு வந்தாலும், சட்டம் ஒழுங்குக்கு கேடுதான். அது இப்போ இன்னும் மோசமாகிருச்சு. ஆனா இதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம விழாக்களுக்குப் போகவே கலைஞருக்கு நேரம் சரியா இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி '100-க்கு 100'னு பாட்டெல்லாம் பாடி இவங்களே இவங்க 'சாதனை'களைக் கொண்டாடினாங்க. ஆனா, இந்த 100/100 ஆட்சியில சட்டம்-ஒழுங்கு சைபராகிடுச்சே. நாளுக்கு நாள் நிர்வாகம் மோசமாகி, கட்சிக்குள்ளேயே கெட்ட பெயர் வாங்கின ஒரே ஆட்சி, உலகத்திலேயே இப்போ தி.மு.க. மட்டும்தான்!''

''சென்னையிலேயே இனி மின்வெட்டு உண்டுன்னு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்திருக்கிறாரே!''

''நல்ல கூத்து. அவர்தானே முன்னாடி எல்லாத்தையும் மறுத்தார். இப்போது அவர் வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கார். கரன்ட் கட் பற்றி கேட்ட தன் மனைவியைக் காசிக்கு அனுப்பிவெச்சதாச் சொல்றார் அமைச்சர். அங்கே எல்லாம் பயங்கர மின்வெட்டாம். ஓஹோ... அப்படியே உங்கள் மனைவியை குஜராத் வழியா வரச் சொல்லியிருக்கலாமே. அங்கே மின்வெட்டே இல்லையே. பல முறை அமைச்சராக இருந்தவர் இப்படிக் கூச்சமே இல்லாமப் பேசலாமா? மக்கள் இருட்டில் தவிக்கவா இவரை அமைச்சராக்கி இருக்காங்க. நீதி, நேர்மை, குறைந்தபட்ச வேலைத்திறனை நாம் அமைச்சர்களிடம் எதிர்பார்ப்பது தவறா? இதைக் கேட்டா... பழி சொல்வது, கண்டபடி ஏசுவதுன்னு இதுதாங்க இந்த ஆட்சியாளர்களின் பண்பாடு... பக்குவம்... அரசியல் நாகரிகம்!''

''ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்காக நீங்கள் போராட்டம் நடத்தியதைக் கண்டித்து உங்களை பைத்தியக்காரன் என்று பேசியிருக்கிறார்களே!''

''1947-ல் கச்சத் தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோதே நமது உரிமைகள் எல்லாமே பறிபோய்விட்டன. மத்திய அரசிடம் தனக்கு வேண்டிய துறைகளை வாங்கும் அளவுக்குச் செல்வாக்குமிக்கவர்தானே கலைஞர். அப்படிப்பட்டவர்கள் கச்சத் தீவை மீட்கப் போராடிஇருக்கலாமே? அதை விட்டுவிட்டு இப்போது தி.மு.க-வே உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்துதானே!

என்னைப் பைத்தியக்காரன்னு சொல்றாங்க. பைத்தியக்காரர்களில் பல வகை உண்டு. பணப் பைத்தியம், பதவிப் பைத்தியம், செங்கோல் பைத்தியம்னு. இதெல்லாம் அவங்கதான். ஆனா, எனக்கு ஏழை மக்கள் மேலே பைத்தியம். உண்மை மேல், நியாயத்தின் மேல் பைத்தியம். யார், யார், எப்படின்னு மக்களுக்கு இப்போ தெளிவாத் தெரியும் சார். வோட்டு கேட்டுப் போவீங்கள்ல... அப்ப மக்கள் கேட்பாங்க சார்!

மத்திய அரசில் இவ்வளவு பலத்தை வெச்சுக்கிட்டு, இந்த கச்சத் தீவு ஒப்பந்தத்தை கலைஞர் ரத்து செய்யவெச்சா, அவரை நானும் சேர்ந்து கொண்டாடுவேன். நேபாளத்தில் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிற மாவோயிஸ்ட்டுகள் இந்தோ - நேபாள ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள முடியாதுன்னு சொன்னாங்களே. அது சரி, நாட்டுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள்தான் இதையெல்லாம் செய்வார்கள். இவங்களுக்குதான் அந்த நினைப்பே இல்லையே!

அவங்க குடும்பப் பிரச்னைகள் பற்றித்தான் அதிகம் செய்தி வருது. உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்குது, இன்னும் அவர்களுக்குள் என்னதான் நடக்கும்னு மர்மமா இருக்கு. இதோ இப்போகூட நானும் தயாநிதி மாறனின் பிரஸ்மீட் பார்த்தேன். வருத்தமாதான் பேசுறார். அது போகட்டும், அவங்க உள் விவகாரங்கள் நமக்குத் தேவை இல்லை. ஆனா, எதுவும் கண்ணுக்கு நல்லா இல்லை!''

கல்கி பேட்டி

ராமேஸ்வரத்தில் ஆளும் கட்சியினர் குறித்து நீங்கள் பேசியது பாிெய சர்ச்சை யாகிவிட்டதே?

“பத்திாிகையாளர்கள் எனக்கு நல்ல நண்பர்கள். இருந்தாலும், சில சமயங்களில் என் இமேஜைப் பாதிப்பதுபோல செய்தி கள் வருகின்றன. முன்பு ‘தன்னிலை மறந்த’ விஜயகாந்த் என்று எழுதினார்கள். பொறுத் துக்கொண்டேன். இப்போது நான் பேசாத தைப் பேசியதாகப் போடுகிறார்கள்.”

நீங்கள் பேசியதற்கு சி.டி. வீடியோ ஆதாரம் இருக்கிறதாமே...!

“என்னிடமும் சி.டி. இருக்கிறது. நீதி மன்றத்துக்கு வரட்டும்; நிரூபிக்கட்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் பேச்சு வழக்கு மாறுபடும். ராமேஸ்வரத் தில் பேசும்போது, ‘தி.மு.க.’ என்று குறிப் பிட்டேனா?”

உங்களைப் போல கருணாநிதியைப் புகழ்ந்தவருமில்லை; இகழ்ந்தவருமில்லை. ஏன் இந்தத் தடுமாற் றம்?

தமிழினக் காவலர் என்றுதான் பேசியிருப் பேன். காலம் செல்லச் செல்ல பல விஷயங் களில் நம் அனுபவம், பார்வை, படிப்புக்கேற்ப கருத்துகளை மாற்றிக் கொள்கிறோம். அரசிய லுக்கு வந்த பிறகு, கலை ஞரைப் பற்றிய என் பார்வை மாறிவிட்டது. தமிழகத்துக்கு எப்போ தெல்லாம் துரோகங்கள் நடந்திருக்கிறதோ அப்போதெல்லாம் கலைஞர்தான் ஆட்சியில் இருந்திருக்கிறார். 1998ல் ஆட்சியில் இருந் தார். அந்தச் சமயம் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுகிற வகையில், இரு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டுவிட்டன. ஆனால், கலைஞர் செய்யவில்லை. கர்நாடகா அப்போதே காவிாி நீரைக் குடிநீர் தேவைக் காக நீண்ட தூரம் எடுத்துச் சென்றுவிட்டது. அப்போது கோட்டை விட்டார் கலைஞர்.”

‘கச்சத் தீவைப் பற்றி விஜயகாந்துக்கு என்ன தாிெயும்’ என்கிறதே ஆளும் கட்சி?

“அவர்களைவிட எனக்கு அதிகமாகவே தாிெயும். மதுரையில் நான் இருந்தபோது, வருடத்துக்கு இரண்டு நாள் கச்சத்தீவில் நடக்கும் திருவிழாவுக்குப் பல வருடங்கள் சென்றிருக்கிறேன். என் வியாபார நண்பர் களுடனும் சென்றிருக்கிறேன். எம்.ஜி.ஆர். கச்சத் தீவைத் தாரை வார்த்தது குறித்தெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். கச்சத்தீவில் கால் வைத்தவன் நான்.”

நீங்கள் ஜெயலலிதா குறித்து மட்டும் விமர்சனத்தைக் கடுமையாக வைப்ப தில்லையே...!

“ ‘இந்த இரு கழகங்களுக்கும் வோட்டு போடாதீர்கள்’ என்றுதான் பேசுகிறேன். ஆட்சியில் இல்லாதவர்களைப் பற் றிப் பேசி என்ன பயன். இரு கழகங்களும் மக்களை நன்றாக ஏமாற்றி வருவதாக நான் சொல்லித்தான் வருகிறேன். தேர்தல் வரும்போது, விமர் சனம் இன்னமும் கடுமையாகும்.”

பாராளுமன்றத் தேர்தலில் என்ன பிரச்னைகளை மக்கள் முன் எடுத்துச் செல்வீர்கள்... கூட்டணி உண்டா?

“இவற்றை நான் முன்கூட்டியே சொல்லிவிட்டால், எதிாி கள் சுதாாித்து விட மாட்டார்களா? தேர்தல் வியூகத்தைப் பற்றிப் பேசமாட்டேன். நாளுக்கு நாள் மாற்றம் நடந்து வருகிறது. தேசிய மாநில அளவில் இப்பொழுது பிாிந்தவர்கள், எப்படி மோதிக்கொள்கிறார்கள் என்று பார்க்கிறார்கள். இதுதான் அரசியல். அப் படிப்பட்ட அரசியலுக்குள் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.”

எப்படிப்பட்டவர்களை வேட் பாளர்களாகத் தேர்ந்தெடுப்பீர் கள்? அவர்களுக்கான அளவு கோல் என்ன?

“சொல்ல வேண்டிய அவ சியம் இல்லை. இவர்கள் தான் வேட்பாளர்கள் என்று அறிவித்துவிட் டால், அவ்வளவுதான். ஆளும் கட்சி அவர்களை டார்கெட் பண்ணத் துவங்கி விடும். போலீஸ் சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கிறார் களோ இல்லையோ, இது போன்ற வேலைகளில் ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். அதிகாரத்தைப் பயன் படுத்தி, என்னையே முடக்க பல யுக்திகளைப் போட்டுப் பார்க் கிறது ஆளும் கட்சி.”

தி.மு.க., அ.தி.மு.க. தவிர, மற்ற கட்சிகளில் எந்தக் கட்சியுடன் உங் களுக்குச் சுமுக உறவு இருக்கிறது?

“மற்ற கட்சிகளுடன் சுமுக உறவு இல்லை. இதற்குக் காரணம் அவர்களைப் பற்றிய என் கண் ணோட்டம். இந்தக் கட்சி கள் ஒவ்வொரு கால கட் டத்திலும், தி.மு.க. -அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந் தவை தானே. இரண்டு கழக ஆட்சியும் சாியில்லை என்று விமர்சிக்கும்போது, அவர்களுடன் இருந்த கட்சிகளும் சாி யில்லை என்பதுதானே பொருள். இந்த இரண்டு கழகங்களும் அடிக்கும் அரசியல் கொள்ளைக்கும், அதிகார துஷ்பிர யோகத் துக்கும் கூட்டணி கட்சிக்காரர்களும்தானே உடந்தை. எல்லாம் சுய லாபம்தான் நோக் கம். அதுதான் வெறுத்துப் போய் தனியாய் இருக்கிறேன்.”

பல மேடைகளில் பேசும்போது, ஊழல் பற்றி பேசுகிறீர் கள். ஆனால், ஆளும் கட்சி குறித்து, ஆதார பூர்வமாக ஒரு ஊழலைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லையே?

“எனக்கு நேரம் இல்லை. நோண்டினா பிடித்துவிடுவேன். அர சாங்க அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர், தாசில்தார் ஆஃபீஸ், பொது இடங் கள்... என்று எல்லா இடங் களிலும் ஆளும் கட்சிக் காரர்கள் ஊழல்தான் அல சப்படுகிறது. அதைத்தான் நான் பேசுகிறேன். ஒரு வேளை அடுத்த ஐந்து வருடம் ஆட்சிக்கு வர முடியாதென்று ‘அடிக்கிற கொள்ளை’யை ஓங்கி அடிக்கறாங்க போலிருக்கு. மொத்தமாக வசூல் செய்து போட்டுக்கறாங்க. 2000 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் 5000 பேரை எடுக் கறாங்க. எல்லாம் வசூல் வேட்டைக்குதான்.

மக்களுக்கு நல்லது செய்யணுமே என்ற எண்ணம் கிடையாது. ‘விருத்தாசலத்தில், மருத்துவமனை கட்டுவதற்கு நிலம் கொடுங்கள்’ என்று இரண்டு வருடமாக போராடிக்கொண்டிருக்கிறேன். ஒன்றும் நகரக் காணும்.”

அஅரசு கேபிள் கார்ப்பரேஷன் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

“உங்க முந்தின கேள்விக்கு இந்தக் கேள்வியே நல்ல பதில். இந்த
கேபிள் கார்ப்பரேஷன், ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கப்
போகிறது பாருங்கள்.”

பொன்முடி சொன்ன குற்றச்சாட்டு களுக்கு உங்கள் பதில் வலுவாக
இல்லையே!


“சொந்த சொத்துக் களுக்கும் உறவினர் சொத் துக்களுக்கும் வித்தியாசம் தாிெயாதவ ரெல்லாம் அமைச்சராக இருக்கிறார் கள். என் கல்லூரி அலு வலகமும், என் சகலை நடத்தும் மருத்துவக் கல் லூாி அலுவலகமும், ஒரே கட்டடத்தில் இருந்தால், அதுவும் எனக்குச் சொந்த மாகிவிடுமா? சகலை குடும்பம், ஏற்கெனவே நல்ல வசதியான குடும் பம்; பரம்பரை பணக்காரர். பொன் முடிக்கு என்ன வருமானம்? அவரது மனைவி பெயாில் ஏகப் பட்ட சொத்து இருக் கிறதே! பொன்முடியும் கல்லூாி கட்டுகிறார். இதற்கென்ன சொல்கிறீர்கள்...?”

Read More...

Tuesday, July 29, 2008

சூரத்தில் 13 குண்டுகள் கண்டெடுப்பு

குஜராத் மாநிலம் சூரத் நகரில் போலீசார் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் 13 வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மற்ற குண்டுகளை செயலிழக்க செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சனிக்கிழமை மாலை அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வைர நகரம் என போற்றப்படும் சூரத்தில் நாள்தோறும் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் கார்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. நேற்றும் இரண்டு இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று 10 வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சூரத்தில் உள்ள வர்ச்சா சாலை மற்றும் மராத்தா சாலையில் 3 குண்டுகளும், லாபேஷ்வர் என்ற இடத்தில் 2 குண்டுகளும், சந்தோஷி நகர், மடவாடி ஆகிய இடங்களில் தலா 1 குண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மடவாடி என்ற இடத்தில் மரம் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லாபேஷ்வர் பகுதியில் காவல் நிலையம் அருகே அனாதையாக கிடந்த ஒரு பையில் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 10 இடங்களில் சூரத்தில் குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அந்த நகரம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி விட்டதோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
( மாலை மலர் செய்தி கொஞ்சம் மாற்றங்களுடன் )

Read More...

Monday, July 28, 2008

ஒரு முதலமைச்சர் இப்படி பேசலாமா ?

நடிகை நமீதா படத்தை பார்த்துவிட்டு பெருமாள் கடவுளை அவமதித்த முதல்வர் கருணாநிதிக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இப்படி பேசினால் தி.மு.க.டெபாசிட் இழக்கும் என்று இல.கணேசன் காட்டமாக கூறியுள்ளார்.

நடிகை நமீதா நடித்த பெருமாள் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை முதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு பார்த்தார். விலைவாசி உயர்வு,மின்சார வெட்டு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தமிழ்நாட்டில் இருக்கும்போது முதல்வர் கருணாநிதி சினிமா பார்த்து ரசிக்கிறார் என்று ஏற்கனவே அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

இந்தநிலையில்தான் நமீதாவின் பெருமாள் படத்தை முதல்வர் கருணாநிதி பார்த்து ரசித்தார். இந்த படத்தில் நமீதாவின் ஆபாச காட்சிகள் பல இடம் பெற்றுள்ளன. இப்படத்தை பார்த்த முதல்வர் கருணாநிதி இப்படத்திற்கு பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது பொருத்தமானது என்று கிண்டல் அடித்தார். இதுபோன்ற காட்சிகளைத்தான் பெருமாள் ரசித்தார் என்று பல புராணங்களில் தாம் படித்திருப்பதாகவும் அவர் நக்கலாக கூறினார்.

தேடலுக்கு பிறகு கிடைத்த வீடியோ கீழே...


Read More...

Sunday, July 27, 2008

ஹிட் லிஸ்ட்டில் மீனாட்சியம்மன் கோவில்

படிக்கும் போதே பயமாக இருக்கிறது.

பாக்., ஐ.எஸ்.ஐ.,யின் ஆதரவு இயக்கமான லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிடத்தில் உள்ளது என்ற திடுக்கிடும் தகவல், மத்திய உளவுத் துறை தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள ரகசிய "பேக்ஸ்' அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவம்,"ரா' என்னும் உளவுப் படை ஆகியவற்றிடமிருந்து மத்திய உளவுத் துறைக்கு, இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் "ஹிட் லிஸ்ட்' ல் மதுரையிலுள்ள புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவில் இருப்பது தெரியவந்துள்ளது.


மத்திய உளவு துறை டி.ஜி.பி., பி.சி.ஹல்தார் தமிழக போலீஸ் டி.ஜி.பி., கே.பி.ஜெயினை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் கவலையை வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழக முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விவாதித்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவார்.

தன்னுடைய ரகசிய "பேக்ஸ்' அறிக்கைகள் மீது தமிழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, பூந்தமல்லியில், வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தது பற்றி, மாநில அரசுக்கு உளவுத் துறை தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உளவுத் துறை தரும் இது போன்ற தகவல்கள் மீது போலீசார் தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் தகவல் தொழில் நுட்ப மையங்களாக உள்ளன. ஆனால், மத ரீதியிலான தாக்குதலுக்கு சென்னை நகரை தங்களது, "ஹிட் லிஸ்ட்'டில் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர். பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கும்படி தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
( நன்றி: தினமலர் )
Reated news in rediff.com

Read More...

Saturday, July 26, 2008

ஆமதாபாதில் 17 குண்டு வெடிப்பு

அப்டேட்ஸ்
=> 7:00pm 27 பேர் காயம்
=> 7:28pm இப்போது 8 இடங்களில்
=> 7:40pm According to reports 4 dead
=> 7:45pm According to police sources, the explosions occured at six areas of Maninagar, Isanpur, Narol circle, Bapunagar, Hatkeshwar and Sarnagpurbridge. As the names suggest, all these areas are residential and market areas and are located in the old city area of Ahmedabad. Sources say that these areas are particularly crowded on Saturday and Sunday evenings.
First explosion took place in Maninagar, which happens to be Chief Minister Narendra Modi's constituency.
=> 8:10pm Count increases - 13 blasts in Ahmedabad , 48 injured
=> 8:15pm Most of the bombs planted in cycles.

=> 8:30pm 16 blasts now - 10 killed - 48 injured

=> 8:40pm All are timer based

=> 8:53pm IBN says 17 Blasts.

=> 9:15pm Advani, Rajnath Singh insist on the need of bringing back POTA.
=> 9:30pm High level meeting at 11 am tomorrow, says home minister
=> 9:40pm It's a cowardly act: Sonia Gandhi, Reports of more live bombs in civil hospital: Ahmedabad


ஆமதாபாத்-குஜராத்தில் 6 இடங்களில் குண்டு வெடித்தது. ஆமதாபாத்தில் 6 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. இதில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் குறித்த விவரம் இன்னும் அறியப்படவில்லை. சம்பவ இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்த சமயம் இன்று மாலை 6:40 மணி.

நேற்று பெங்களூரில் வெடித்தது போல சின்ன வெடிகுண்டு என்று தகவல்கள் வருகிறது.

பெங்களூர், குஜராத் இரண்டும் பி.ஜே.பி ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Read More...

பெங்களூரில் மேலும் ஒரு வெடிக்காத வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஆடுகோடியில் மேலுமொரு வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படப்படும் ஆடுகோடி சோதனை சாவடிக்கு விரைந்துனர். அங்கு இருந்தது வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டில்லியில் இருநு்து வந்த வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குண்டை செயலிழக்க செய்தனர். கோரமங்களா பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. நேற்றும் ஆடுகோடியில் வெடிக்காத குண்டு ஒன்று கைபற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More...

Friday, July 25, 2008

கலைஞர் பெருமாள் விழா பேச்சு - ராமகோபாலன் கண்டனம்

பெருமாள்' திரைப்பட விழாவில் முதல்வர் கருணாநிதி இந்து மதம் குறித்து பேசிய பேச்சுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:

"பெருமாள்' என்ற திரைப்படத்தின் ஆடல், பாடல், காட்சிகள் சிடி வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் கருணாநிதி தமது வயதுக்கும், பொறுப்புக்கும் பொருந்தாத பேச்சை பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

விழாவில் நடிகை அரைகுறை ஆடையில் கடலில் குளித்து, நடிகருடன் நெளிந்து, உருண்டு, ஆடுகிற காட்சி திரையிடப்பட்டது. பெருமாள் இப்படி எல்லாம் செய்ததாக தாம் புராணத்தில் படித்திருப்பதாக அவர் கூறியிருப்பது, கோடானு கோடி இந்துக்கள் குறிப்பாக வைணவர்களின் உணர்வுகளை புண் படுத்தியுள்ளனர்.

அவருக்கென்று சில நம்பிக்கை களும், சில ஆசைகளும் இருக்கலாம். அதை எவரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால் பொது விழா ஒன்றில் இந்துக்களை குறி வைத்து தாக்குவதை வேடிக்கை பார்க்க முடியாது.

இந்துக்கள் சம்பந்தப்பட்ட எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதை கொச்சைப்படுத்துவது அவருக்கு மிகப்பிடித்தமான விஷயம். அதே நேரத்தில் மற்ற மதங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு அவருக்கு துணிச்சல் இல்லை.

அவர் பாரபட்சமற்ற பகுத்தறிவு வாதியாக இருந்தால் எல்லா மதங்களிலும் உள்ள குற்றம், குறைகளை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். கருணாநிதி பகுத்தறிவு வாதி அல்ல. சந்தர்ப்பவாதி, இந்து விரோதி.

இளைஞர்கள் இப்படிப்பட்ட படங்களைத்தான் விரும்புகிறார்கள் என்று பேசியிருப்பது, இளைஞர்களை அவமதிப்பதாகும். எல்லா இளைஞர்களும் காமவெறி பிடித்து அலையவில்லை. லட்சக் கணக்கான இளைஞர்கள் படிப்பு, தொழில் வளர்ச்சி, உடல் ஆரோக்யம், இசை, ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு வருவது அவருக்கு தெரியாது.


தொடர்புடைய லிங்க்: பெருமாள் கலைஞர்தான் !

Read More...