பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 24, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 24-06-08

இந்த வாரம் தசாவதாரம் ஸ்பெஷல். முனி மன்னிப்பாராக....
அன்புள்ள முனி,

தசாவதாரம் சீசன் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. படம் எப்படி என்று தெரிந்துக்கொள்ள எங்க ஆபிஸில் பையனிடம் (Office Boy) "படம் எப்படி ?" என்று கேட்டேன். "சார் படம் சூப்பர் ஆனா ஒண்ணும் புரியலை, அதனால இன்னொரு தபா பார்க்க போறேன்" என்கிறான். ஆக B-C செண்டர்களில் ஏன் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் என்று புரிகிறதா ?

குருவி பார்ட்-2, முகுந்தா முகுந்தா என்று படத்தை போஸ்ட்மார்ட்டம் செய்த இரண்டு 'A' கிளாஸ் வலைப்பதிவர்கள், உள்ளூரில் பார்த்தால் அடி விழும் என்று சேர நாட்டுக்கு போய் இரண்டாம் ஆட்டம் இரண்டாம் தடவை பார்த்திருக்கிறார்கள். ஆக 'A' செண்டர்களிலும் ஏன் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் என்று புரிகிறதா ? ஆஸ்கர் ரவிசந்திரன் பயப்படவே வேண்டாம்.

நான் உனக்கு கடிதம் எழுதுவது போய் இப்ப உனக்கு இணையத்தில் நிறைய ரசிகர்கள் வந்துட்டாங்க, அப்படி ஓர் இணைய ரசிகர் உனக்கு எழுதிய கடிதம் கீழே...


அன்புள்ள முனிக்கு

இந்த தசாவதாரம் தசாவதாரம் என்னும் ஒரு படத்தைப் பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கே உனக்கும் அது பற்றிய லேட்டஸ்ட் விபரம் தெரிய வேண்டாமா என்பதற்காக இந்தக் கடிதம்.

இணைய உலகில் இந்தத் தசாவதாரத்தைப் பற்றி எழுதாத எவரும் இணையப் பிறவியாகவே கருதப் படமாட்டார் என்பதனினாலும். நேற்று படம் பார்க்க நேர்ந்ததினாலும், பார்த்ததை வீணாக்காமல் பதிந்து வைப்போமே என்ற எண்ணத்தினாலும் இங்கே உன்னிடம் மட்டும் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். படத்தில் நடிப்பு, காமிரா, இசை போன்ற விஷயங்களையெல்லாம் ஏற்கனவே கையில் கீ போர்ட் கிடைத்த அனைவரும் எழுதித் தீர்த்து விட்டதால் அவற்றையெல்லாம் நான் தொடப் போவதில்லை பயப்படாதே. நான் தொடப்போவது பரவலாகப் பேசப் பட்டு வரும் இந்த சினிமாவின் அரசியல் பின்புலம் மட்டுமே. சரியா?

சென்ற வாரம் என் பக்கத்து க்யூப் அம்மணி இந்த சினிமாவைப் பார்த்து விட்டு வந்து "ரொம்ப நன்னாருக்கு ஒரு தடவை பார்த்திடுங்கோ" என்று சிபாரிசு பண்ணினார். அவர் ஆச்சாரமான வடகலை ஐயங்கார் பெண்மணி. "அப்படி என்னங்க அதில ஸ்பெஷல்?" என்று நான் கேட்க்க அதில் ஐயர் ஐயங்கார் சண்டையெல்லாம் சூப்பரா வைச்சிருக்கார் என்று பரவசப் பட்டார். "அது சரி கமலஹாசன் தென்கலை நாமம் போட்டுண்டு வர்ராரே இருந்துமா படம் பிடிச்சது?" என்று நான் கேட்டுத் தொலைக்க, அவருக்கு சுருதி இறங்கி அது வரை பிடித்திருந்த படம் திடீரென்று பிடிக்காமல் போய் விட்டதாகத் தோன்றியது :)) இப்படி இந்தப் படத்தை அப்பாவித்தனமாகப் பார்ப்பவர்கள்தான் அனேகம் பேர். ஏராளமான ஐயங்கார்களுக்கு இது ஏதோ ஐயங்கார்களை உயர்த்திப் பிடிக்கும் ஒரு படம் என்று ஒரு வித பெருமிதம் வேறு இருப்பதாக ஒரு சிலரிடம் பேசியதிலும் ஒரு சில குழுக்களைப் படித்ததிலும் தெரிந்து கொண்டு சுவற்றில் முட்டிக் கொண்டேன். தேவர் மகன் சினிமா வந்த பொழுது அதில் தங்கள் இனத்தின் குறைகளைச் சொல்லுகிறார் என்பது கூடப் புரியாமல் பதினெட்டு பட்டியில் இருந்தும் மாட்டு வண்டி போட்டுக் கொண்டு வந்து சினிமா பார்த்தது போல ஐயங்கார்கள் எல்லோரும் ஒரே குஷியாகக் கிளம்பிப் போய் இந்தப் படத்தைப் பார்த்து வருவதாகக் கேள்வி. இதில் கமலஹாசன் தென்கலை நாமம் அணிந்து வருவதால் அது பிடிக்காத ஒரு சில வடகலை இணையப் பிரபலங்கள் இந்தப் படத்தைக் கடுமையாகச் சாடி விமர்சித்திருப்பதாகக் கருடன் சொல்கிறது :))


இந்த சினிமாவில் அப்பாவி ஆஸ்திகர்களையும், வைணவர்களையும் ஏமாற்றி விஷ்ணுதான் புரண்டு படுத்து உலகத்தை ரட்சித்தார் என்ற எண்ணம் ஏற்பட வைக்கும் படியான பல காட்சிகள் பல உள்ளன.. அதே நேரத்தில் கடவுள் இல்லை, பகுத்தறியும் திறன் இல்லாதவனே கடவுளை நம்புவான் என்பதை வலியுறுத்தும் பல காட்சிகளும் உள்ளன. சினிமாதானே இதையெல்லாமா போய் பார்ப்பார்கள் சும்மா ஜாலியாகப் போய் பார்த்து விட்டு வரலாமே என்று பார்த்து விட்டு இதன் பின்னால் உள்ள அரசியல் பற்றி ஏதும் அலட்டிக் கொள்ளாதவர்களும் அறிந்து கொள்ள விரும்பாதவர்களுமே பெரும்பாலானவர்கள் என்பதினால் இது மக்களிடையே ஏதோ நாஸ்திக உணர்வை வளர்த்து விடும் என்ற அச்சம் எல்லாம் யாருக்கும் வேண்டியதில்லை. தமிழ் நாட்டு ரசிகர்கள் புத்திசாலிகள். கமலஹாசன் சொல்ல வருவதை விட்டு விட்டு மற்றதை மட்டும் கபக்கென்று பிடித்துக் கொள்வார்கள். பின்னே சும்மாவா ஈ வெ ராவும் கருணாநிதியும் ஓவர் டைம் போட்டு நாஸ்திகப் பிரச்சாரம் செய்தும் வருடா வருடம் திருப்பதிக்கும் ஐயப்பனுக்கும் பழனிக்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது? பகுத்தறிவுக் குஞ்சுகளே இன்று மஞ்சள் துண்டு போர்த்திக் கொண்டும், பாபாவிடம் மோதிரம் வாங்கி மாட்டிக் கொண்டும் திரிகின்றன? ஒரு முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இதே தசாவதாரம் என்ற பெயரில் குடும்பப் படம் எடுக்கும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எடுத்த ஒரு நிஜமான தசாவதாரக் கதை சினிமாவாக வந்தது. அதில் இந்திராவின் எமெர்ஜென்சியைக் நாரதர் கிண்டல் அடிக்கும் அரசியல் வசனங்கள் எல்லாம் இருக்கும். அந்தப் படம் ஏற்படுத்தாத பக்தி அலையை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளதாகக் கேள்வி. அது கமலோட ராசி.


இருந்தாலும் சித்தாந்த அடிப்படையில் பார்த்தால், எடுத்தவரின் கொள்கைப் படி இது ஒரு நாஸ்திக பிரச்சாரப் படம் என்பதினால் இந்து அமைப்புகள் எதிர்ப்பதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது, இது போன்ற பலமான எதிர்ப்புகள் நாளைக்கு இது போன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்களை தயங்கச் செய்யும் என்பதற்காகவும் அவர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தலும் அவசியம். சாமான்ய மக்கள் இதில் சொல்லப் பட்டிருக்கும் நாத்திகங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல ஜாலியான சினிமா என்ற ரீதியில் பார்த்து விட்டுப் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். நிற்க.

இது ஆஸ்திகத்தை வளர்க்கும் படமா அல்லது நாஸ்திகத்தை வளர்க்கும் படமா? என்று ஒரு பட்டி மன்றம் நடத்தும் அளவிற்கு கமலஹாசன் மிக சாதுர்யமாக பக்தி, ஐயங்கார் பிராண்ட் புளியோதரை , நாஸ்திக மசாலா எல்லாம் சேர்த்து ஒரு கலவையாக மேல்பார்வைக்கு இது வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்று புரியாத சைவ அசைவக் கடைக் குழம்பு போல கலங்கலாகக் காட்சியளிக்கிறது.. கொஞ்சம் உள்ளே போய் கலக்கிப் பார்த்து விடலாம்

இதில் ஆஸ்திக மற்றும் கடவுள் நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் கருத்துக்கள்/காட்சிகள் எவை எவை என்பதை முதலில் பார்த்து விடலாம்.

1. முதலில் வரும் ரங்கராமானுஜ நம்பி தீவீரமான வைணவ பக்தராகக் காட்டப் பட்டு அவர் நமோ நாராயணாய நமஹ என்று சொல்வது போன்ற காட்சிகள் பெருமாள் பக்தர்களையாவது கொஞ்சம் புல்லரிக்கச் செய்திருக்கும். பிற பக்தர்களையும் கன்னத்தில் போட வைத்திருக்கும். கொஞ்சம் கிராமப் புறத் தியேட்டரானால் கோவிந்தா கோவிந்தா என்று கோவிந்தா போட்டிருப்பார்கள்.

2. படம் முழுக்க பெருமாள் பெயர் படைத்த ஆட்களும் உபகரணங்களுமே தக்க சமயத்தில் தோன்றி தர்மத்திற்குத் துணை நிற்கின்றார்கள். அதாவது தர்மம் ஜெயிக்க ஆண்டவனாகிய விஷ்ணு பல் வேறு உருவில் தோன்றி உதவுவார் என்ற நம்பிக்கை படம் முழுக்கக் காட்சிகளாகக் காண்பிக்கப் படுகின்றன. ஹீரோ தப்பிக்க வேண்டுமானால் அவர் உயரமான இடங்களில் இருந்து குதித்தாலும் கீழே ஸ்ரீராம ஜெயம் என்ற பெயருடன் சங்கு சக்கிர நாமம் தாங்கிய லாரிகள் ஓடி வந்து தாங்கிக் காப்பாற்றி விடுகின்றன. பல் வேறு கமலஹாசன்கள் விளிம்பு நிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள். அதாவது ஏதாவது ஒரு பெரிய கட்டிடத்தின் விளிம்பில் நின்று தொங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கை நழுவும் பொழுது பெருமாள் அனுப்பிய வைக்கோல், காய் கறி லாரிகள் வந்து மொத்து மொத்தென்று தாங்கிக் கொள்கின்றன. கோவிந்தா கோவிந்தா என்று பிண்னனியில் பாட்டு பாடாதது ஒன்றுதான் பாக்கி.

3. விஷ்ணுவின் பல நாமங்களை உடையவர்கள் தொடர்ந்து ஹீரோவுக்கு உதவுகிறார்கள். அமெரிக்காவில் தக்க சமயத்தில் பி எம் டபிள்யு ஓட்டி உதவி செய்பவர் பெயர் ராம், சாய்ராம். கொரியர் ஆபீஸில் முக்கியமான தகவல்களைத் தந்து உதவும் பையன் பெயர் நரசிம்மராவ். இறுதியில் சுனாமியில் இருந்து பெருமாளைத் தேடிச் சென்ற இருவரும் காப்பாற்றப் படுகின்றனர். இப்படியாகப் பூடகமாக கடவுள் நம்பிக்கையைச் சொல்லும் பல காட்சிகள் நிறைந்துள்ளன. கமலுக்கு உதவும் இன்ஸ்பெக்டரோ பரதன்.

4. சுனாமியை உருவாக்கி வைரஸ் பரவலைத் தடுத்ததே கோவிந்தராஜப் பெருமாளின் சிலைதான் என்ற செய்தி வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாகச் சொல்லப் படுகிறது. படம் பார்த்த பாதி பேருக்கு இந்த செய்தி தெரியாது ஏனென்றால் இதை வெளிப்படையாக படத்தில் சொல்வதில்லை. படம் பார்ப்பவர்களே அனுமானித்துக் கொள்ள வேண்டும் அல்லது விஷ்ணு புரம் உப பாண்டவம் போன்ற நாவல்களைப் படித்துப் கொட்டை போட்டுப் பழம் தின்ற பின் நவீனத்துவவாதியாக இருத்தல் வேண்டும்.

5. பெருமாளின் யானை துர்நோக்கத்துடன் வரும் செக்ஸ் வில்லியான மல்லிகா ஷ்ராவத்தைத் தூக்கி எறிந்து ஹீரோவுக்கு உதவி செய்கிறது.

6. பெருமாளை நம்பி பிசின் போல் ஒட்டிக் கொள்ளும் அசின் கடைசி வரை காப்பாற்றப் படுகிறார். பெருமாளை நம்பிய பாட்டியும் சுநாமியில் அழிவதில்லை.

7. 12ம் நூற்றாண்டில் பெருமாளை நம்பிச் சரண்டைந்த நம்பியும் அவரது மனைவி ஆண்டாளும் 21 நூற்றாண்டில் மறு பிறவி எடுத்து தங்கள் செய்த புண்ணியத்தின் பலனாக அதே பெருமாளின் முன்பாகவே மீண்டும் இணைகிறார்கள். இது மறு பிறவி. புண்ணியம் காக்கும் போன்ற இந்து மத நம்பிக்கைகளை வலுவாக நிலை நிறுத்தும் காட்சிகள்.

8. கமலஹாசனைப் புகழ்ந்து பாடப் படும் கல்லைக் மட்டும் கண்டால் பாட்டில் சீனிவாசன் மகனும் விஷ்ணுதாசன் தான் என்று வைணவர்கள் மனம் குளிர என்ன தான் கமலஹாசன் மேடையில் நாத்திகம் பேசினாலும் அவரும் ஒரு வைணவர்தான் அதை மறந்து விடாதீர்கள் என்று குறிப்பால் உணர்த்தப் படுகிறது.

இன்னும் இது போல சப்டிலாக பல காட்சிகள் இருக்கலாம். இவற்றையெல்லாம் பார்த்து விட்டுப் புளங்காகிதம் அடையும் ஆஸ்திகவாதிகளும், வைணவர்களும், பெருமாளைப் பற்றி உயர்வாகத்தானே சொல்லி படம் எடுத்திருக்கிறார் என்று நம்பும் அப்பாவி இந்துக்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் நாம் சிதற அடிக்க வேண்டாம்.

ஆனால் இந்தப் படம் இறுதியாகச் சொல்ல முயல்வது என்ன? மேற்படி காட்சிகள் மூலம் இந்த சினிமா மக்களிடையே இந்து மத நம்பிக்கைகளையும் கடவுள் நம்பிக்கையும் பரவலாகக் கொண்டு செல்கிறதா? வைணவர்களைப் பெருமையாகக் காண்பிக்கிறதா? உண்மையிலேயே இது ஆஸ்திகத்தைப் பரப்பும் ஒரு படம்தானா?


ஒரு சினிமா ஒரு சித்தாந்தத்தை, ஒரு பிராச்சாரத்தை ஒலிக்குமானால், ஒரு சினிமாவை உருவாக்கும் படைப்பாளியின் தனிப்பட்ட கருத்தே, கொள்கையே அந்த சினிமாவின் கொள்கையாகவும் இருக்கும். இதை நாம் பைத்ருக்கம் என்றொரு மலையாளப் பட உதாரணத்தின் மூலமாகப் பார்க்கலாம். பைத்ருக்கம் இங்கு ஒரு சரியான உதாரணம். கம்னியுசத்தின் கடுமையான பிடியில் சிக்கித் தவிக்கும் கேரள மண்ணில் துணிந்து இந்து மத நம்பிக்கைகளைப் பரப்பும் ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் சுரேஷ் கோபியும், ஜெயராஜும். அந்தப் படத்தில் பல்வேறு நாஸ்திகக் கருத்துக்களும் பேசப் பட்டாலும் கடவுள் நம்பிக்கையே இறுதியில் வெல்கிறது அதை எந்த விதத் தயக்கமும் இல்லாமல், ஒளிவு மறைவு இல்லாமல், வெட்கமோ போலித்தனமோ இல்லாமல் மிகத் தெளிவாகச் சொல்லி விடுகிறார்கள். அது இந்து மத நம்பிக்கைகளையும் கடவுள் நம்பிக்கையும் உயர்த்திப் பிடிக்கும் ஒரு படம். அதில் இயக்குனரின் கருத்தே, சொந்த நம்பிக்கையே அந்தப் படத்தின் இறுதித் தீர்ப்பாக, பிரச்சாரமாக வெளிப்படுகிறது. இயக்குனர் ஜெயராஜும், நடிகர் சுரேஷ் கோபியும் பெரும் ஆன்மீகவாதிகள். அந்தப் படத்தில் நாஸ்திகராக நடிக்க நேர்ந்த பாவத்தைப் போக்க சுரேஷ் கோபி பின்னர் பல பரிகாரங்களைச் செய்திருப்பதாகத் தயக்கமில்லாமல் பேட்டி கொடுக்கிறார். அவர்கள் தனிப்பட்ட நம்பிக்கையே படத்தின் மையக் கருத்தாகவும் ஒலித்தது.


ஆனால் இந்த தசாவதாரத்தை எடுத்தவரோ ஒரு தன்னன ஒரு நாஸ்திகராக அறிவித்துக் கொண்டவர். ஈ வெ ராவின் வாரிசாக தன்னன வரித்துக் கொண்டவர். வீரமணியால் பகுத்தறிவு வளர்த்தப் பார்ப்பான் என்று புகழப் படுபவர். கருணாநிதியால் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கப் பட்டவர். இந்து மதத்தை அழிக்கக் கிளம்பியுள்ள நச்சுச் சக்திகளுடன் ஒட்டி உறவாடுபவர். ஒரு நாஸ்திகவாதி தனது சினிமாவில் தன் கொள்கையான நாஸ்திகத்தையே பரப்புவான் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. அப்புறம் ஏன் படத்தில் மேற்படி பக்தி ஸ்பெஷல் காட்சிகள் ? ஏனென்றால் படம் விற்க வேண்டுமே. அடிப்படையில் ஒரு வியாபாரி என்ன செய்வானோ அதையே கமலஹாசன் செய்திருக்கிறார். இது வரை அவர் படங்களில் பிராமணக் காட்சிகள் இருந்த படங்கள் எல்லாம் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. பிராமணக் காட்சி சேர்க்காத படங்கள் நிறைய தோல்வி அடைந்துள்ளன ஆகவே எதை வைத்தால் படம் ஓடுமோ, எதுக்கு ஆதரவு இருக்கோ? எதுக்கு மார்க்கெட் இருக்கோ அதை கடை பரத்தியிருக்கிறார். கடை விரித்திருக்கிறார் கொள்வாரும் உளர். மதுரையில் எண்ணெய்ப் பலகாரக் கடை என்று ஒரு சங்கிலித் தொடர் கடைகள் எல்லா இடங்களிலும் இருக்கும்,. அதை நடத்துபவர் ஒரு தி க காரர். ஆனால் பிண்னனியில் தனது கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றும் வேலையைச் செய்யும் தேவனுக்கு சகாயம் செய்யும் ஒருவர். ஆனால் டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் இந்தக் கடைகளில் மிக்சர், காராச்சேவு வாங்க அலை மோதும். கவனமாக அந்த சீசனில் "கடவுளை நம்புபவன் காட்டு மிராண்டி" என்ற போர்டைக் கழற்றி வைத்து விடுவார்கள். அப்பாவி ஐயப்ப சாமிகளுக்கு தங்களைக் கேவலமாக இழிவாகப் பிரச்சாரம் செய்பவன் என்பது தெரியாமல் கசாப்புக்காரன் பின்னால் போகும் ஆடுகள் போல கூட்டம் கூட்டமாக வாங்குவார்கள். அது போல இருக்கிறது இது வைண்வத்தைத் தூக்கி நிறுத்தும் படம் என்று அப்பாவித்தனமாக, அசட்டுத்தனமாக ஐயங்கார்கள் எண்ணிக் கொள்வதும். உங்களை வைத்து உங்களில் ஒருவன் நல்ல வியாபாரம் செய்கிறான் என்பது கூடத் தெரிவதில்லையே.

சினிமாவை விற்க வேண்டியும், கூட்டத்தைக் கவர வேண்டியும் சில ஆஸ்திக/கடவுள் நம்பிக்கையைப் படம் முழுக்க தெளித்து விட்டிருந்தாலும் இறுதியில் அழுத்தமான தன் நாஸ்திகக் கருத்துக்களையே இந்தப் படம் அழுத்திச் சொல்கிறது. ஆகவே இது தீர்மானமாக இந்து மத/கடவுள் நம்பிக்கையை எதிர்க்கும் ஒரு சினிமாவே. அதற்கான சான்றுகளாக பின் வரும் காட்சிகள் அமைகின்றன.

1. படத்தின் ஆரம்பத்திலும் படத்தின் இறுதியிலும் ஒரு விஞ்ஞானியின் நாஸ்திகக் கருத்துக்களே அழுத்தமாகவும் இறுதியாகவும் சொல்லப் பட்டு மக்களின் நம்பிக்கை என்பது பகுத்தறிவு இன்மையினால் வருவது என்ற கருத்துப் பிரச்சாரம் செய்யப் படுகிறது.

2. ஒரு விஞ்ஞானி மூலமாக இந்தக் கருத்துச் சொல்லப் படுவதால் பார்க்கும் அப்பாவி மக்கள் மனதில் ஒரு பெரிய விஞ்ஞானியே சொல்கிறார் என்றால் அதில் அர்த்தம் இருக்கும் என்ற எண்ணம் பதியப் படுகிறது, நம் மக்களுக்கு படித்தவர்கள் சொல்கிறார்கள் என்றால் ஒரு மதிப்பும், நம்பிக்கையும் இருக்கும். மன்மோகன் சிங்கை இன்னமும் உலகின் மிகப் பெரிய பொருளாதார மேதை என்று நம்பிக் கொண்டே ஒரு கிலோ அரிசிக்கு 50 ரூபாய் கொடுக்கும் இளிச்சவாயர்கள் இருக்கும் தேசம் இந்தியா. முட்டாள் இந்தியர்களுக்கு படித்தவர்கள் மேல் இருக்கும் மரியாதையை பயன் படுத்தி ஓட்டு வாங்க ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலப் பள்ளி என்னும் டுயுட்டோரியல் காலேஜில் இத்தாலியில் இருந்து ஸ்போக்கன் இங்க்லீஷ் படிக்க வந்தவளையெல்லாம் ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டியில் படித்தவர் என்று பொய் சொல்லி ஏமாற்ற முனைகிறார்கள். படித்தவன் செய்யும் சூதை நம்பும் கூட்டம் உள்ள தேசமாகையினால் அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானியின் வார்த்தைகளாக நாஸ்திகப் பிரச்சாரம் கன ஜோராக நடக்கிறது.

3. விஞ்ஞானியாகிய கோவிந்தராஜன், மக்கள் எல்லோரும் தங்களுக்கு மேலே ஒரு சக்தி இருக்கும் என்று நம்புகிறார்கள் ஆனால் நமக்கு மேலே இருப்பதென்னவோ மேலே பறக்கும் சாட்டிலைட்டுகள் மட்டுமே ஆம் அது சக்தி வாய்ந்ததுதான் என்று மக்களின் நம்பிக்கையைக் கிண்டலடிக்கிறார்.

4. பகுத்தறிவு அதிக மக்களைச் சென்றடைவதின் மூலமே மக்களிடையே கடவுள் நம்பிக்கை என்னும் மூட நம்பிக்கை மறைந்து அறிவியல் பூர்வமான நம்பிக்கை வளரும் என்று இறுதியாக தன் பேச்சை முடிக்கிறார். அதன் அர்த்தம் பகுத்தறிவு (ஈ வெ ரா பிராண்ட்) வளர வேண்டும், ஆன்மீகம் (முக்கியமாக இந்து மதம் மட்டும்) அழிய வேண்டும் என்ற கருத்தே படத்தின் முடிவாகவும், தீர்மானமாகவும், மக்கள் மூளையில் பதிய வைக்கப் படும் நச்சுக் கருத்தாகவும் இந்த சினிமா மூலமாகச் சொல்லப் பட்டு பரப்பப் பட்டு வருகிறது.

5. பிற மத நம்பிக்கைகளை இந்தப் படம் விமர்சிப்பதோ கேள்வி கேட்ப்பதோ இல்லை. ஆனால் இந்து மத நம்பிக்கைகளும், மடங்களும் மட்டுமே ஏளனம் செய்யப் படுகின்றன. மடத்தில் கிரிமினல் இருக்கமாட்டார்களா என்ற கேள்வியும், அழகிய சிங்கர் என்றால் மடோனாவா என்ற கிண்டலும், இன்னும் பல நாஸ்திகக் கருத்துக்களும் எவ்வித தயக்கமும் இல்லாமல் சொல்லப் படுகின்றன ஆனால் இஸ்லாமியர்கள் என்று வரும் பொழுது அவர்களை உயர்வாகவும், அவர்கள் நம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டதாகவும் காண்பிக்கப் படுகின்றன. ஆகவே இந்தப் படத்தின் உள்நோக்கம் இந்து மதத்தைப் பற்றி மட்டுமே இழிவாகச் சித்தரிப்பது என்பது தெளிவாகின்றது. அதே நேரத்தில் பள்ளிவாசலுக்குள் இருந்ததினால்தான் நாம் பிழைத்தோம் என்று இஸ்லாமியப் பெரியவர் நாகேஷ் சொல்லும் பொழுது அருகே நிற்கும் பின் லாடர் நெட்டைக் கமலஹாசன் ஒரு அசட்டுச் சிரிப்புடன் மட்டும் நிற்கிறார். அவர் ஏன் அல்லா மற்றவர்களைக் கொன்றார் அப்படிக் கொன்ற அல்லா என்ன ஒரு கடவுள் என்று எதிர் கேள்வி கேட்டு தன் பகுத்தறிவுப் புலமையை டார்ச் அடித்துக் காட்டுவதில்லை. ஆனால் இதே கேள்வி இந்துக் கடவுள் பற்றி மட்டும் சயிண்டிஸ்ட் கமலால் கடவுள் பக்தியுள்ள ஒரு இந்துப் பெண்ணிடம் கேட்க்கப் படுகிறது. ஆக இவர்கள் நாஸ்திகம், பகுத்தறிவு எல்லாம் இந்துக்களிடம் மட்டும் தான் செல்லுபடியாகும் இந்து மதத்தை இழிவு செய்வதும், கேலி செய்வதும் மட்டுமே தன் ஈ வெ ரா பிராண்ட் பகுத்தறிவு என்று கமலஹாசன் மிக வெளிப்படையாக காண்பிக்கிறார். அதையும் பார்த்து விட்டு ஒரு கும்பல் வைணவத்தை வளர்க்கிறார் என்று அறிவு கெட்டுப் போய் நம்பித் திரிகிறது மடத்துக்குள் கிரிமினல்கள் இருக்க மாட்டார்களா என்று கேள்வி எழுப்பி தன் தி க ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கிக் கொள்ளும் அதே கமலஹாசன் அதே போன்ற ஒரு வ்சனத்தை பள்ளிவாசலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சொல்லும் இடத்தில் வைப்பதில்லை. ஆக இஸ்லாமியர்களின் பள்ளி வாசல் மதிக்கப் பட வேண்டியவை இந்துக்களின் மடங்கள் கிரிமினல்களின் கூடாரங்கள். நீ யோக்கியன் என்றால் பள்ளி வாசலில் குண்டுகள் ஒளித்து வைப்பது குறித்தும் தேச விரோதப் பிரச்சசரம் செய்யப் படுவது குறித்தும் அல்லவா விமர்சித்திருக்க வேண்டும்?

6. சைவ வைணவச் சண்டை என்பதோ இந்து மதத்தின் பல பிரிவுகளுக்குள் சண்டை என்பதோ வரலாற்றில் எப்பொழுதுமே தீவீரமாகவோ பேரழிவுடனோ இருந்ததில்லை என்ற வரலாற்று உண்மை இருக்கும் பொழுது அதைத் திரிக்கும் விதமாக யேசுவும்,முகமதுவும் இந்தியாவுக்குள் பரவுவதற்கு முன்பாக இந்து மதம் என்ற ஒன்றே இல்லாதாது போலவும், அவர்களுக்குள் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொண்டது போலவும், ஆபிரகாமிய மதங்களின் வருகைக்குப் பின்பே இந்து மதக் குழுக்கள் அடித்துக் கொள்ளாமல் ஒன்றாக இருப்பது போலவும் வரலாற்று உண்மை திரிக்கப் பட்டு மக்களையும் அதை நம்பும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ளது. இந்தக் காட்சி மட்டும் மிக அழுத்தமாக பதியும் விதத்தில் படமாக்கப் பட்டுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது. இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்தால் தென்கலை நாமம் அணிந்து வருவது கூட வைணவர்களுக்கிடையேயும் பிளவை ஏற்படுத்தும் ஒரு சதியோ என்று எண்ணத் தோன்ற்கிறது :)))



ஆகவே இந்தப் படத்தின் முழுப் பொறுப்பாளியான கமலஹாசனின் நாஸ்திகக் கொள்கையைக் கருத்தில் கொண்டும், படத்தின் இறுதிப் பிரச்சாரத்தை எடுத்துக் கொண்டும், இது ஒரு முழு இந்து எதிர்ப்பு நாஸ்திகப் பிரச்சார சினிமாவே என்று தீர்மானமாகக் கூறுவேன்.



படத்தின் அரசியல்களைக் களைந்து விட்டு ஒரு அப்பாவி பாமரத் தமிழ் சினிமா பார்வையாளனின் கண்ககளில் பார்த்தால் இது ஒரு நல்ல பொழுது போக்கு சினிமாவாக காட்சியளிக்கிறது. தமிழ் சினிமாவில் பல நல்ல பொழுதுபோக்கக் கூடிய எண்டெர்டெயின்மெண்ட் சினிமாவை கமலஹாசன் அளித்திருக்கிறார். அதில் இதுவும் ஒன்று. தமிழ்ப் படத் தரத்திற்கும் இந்தியப் படத் தரத்திற்கும் இதில் எடுக்கப் பட்டுள்ள பிரமாண்டமான காட்சிகளும், ஒரு சில மேக்கப் முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவையே. உலக சினிமாவின் தரத்திற்கு இதை ஒப்பிட முடியாது. மாடர்ன் தியேட்டர்ஸ்ஸின் ஜெய்சங்கர் படங்களை ஜேம்ஸ்பாண்டு தர படங்கள் என்று நம்பிக் கொண்டிருந்த காலத்தை ஒப்பிடும் பொழுது தமிழ் சினிமாவின் தரத்திற்கு டெக்னிக்கலாக இது ஒரு பிரமாண்டமான படமே.



ஒரு சினிமாவில் ஏன் ஒரே நடிகரே அனைத்து ரோல்களையும் செய்ய வேண்டும்? இது என்னவிதமான மன நோய் என்று சிலர் கேட்க்கிறார்கள்? ஆனால் இந்தப் படத்தில் தனக்கு உரிய வாய்ப்பு இருந்தும் எத்தனை விதமான ரோல்களை அவரே நடிக்காமல் தியாகம் செய்திருக்கிறார் என்பதை சிறுமதியாளர்கள் காணத் தவறி விடுகிறார்கள். இதில் கமலஹாசன் பெரிய மனது பண்ணி நடிக்காமல் நிறைய ரோல்களை விட்டு விட்டார். அசின், மல்லிகா, ஆராய்ச்சி சாலை குரங்கு, கோவில் யானை, சிறுவன், சிறுமி, பட்டாம் பூச்சி, ஜீப், கார், ஏரோப்ளேன், துப்பாக்கி, போன்ற ஏராளமான பாத்திரங்களில் கமலஹாசன் நடிக்காதது அவரது பெருந்தன்மையையே காண்பிக்கிறது என்றால் மிகையில்லை.

புஷ்ஷுக்குக் காமென் சென்ஸ் கிடையாது என்று கிண்டலடிக்கிறார் சரி. இந்தப் படம் எடுத்தவர்களின் ஐ க்யூ காமெண் சென்ஸ் எல்லாம் எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்பதை சற்று பார்க்கலாம்.

1. எந்த ஆய்வுக் கூடத்தில் எந்த விஞ்ஞானி எப்பொழுதும் கெமிக்கல் காம்பவுண்டின் பார்முலாப் பெயரை மட்டுமே சொல்லிப் பேசிக் கொள்கிறார்கள். விஞ்ஞானிகள் எப்பொழுதும் அந்த என் ஏ சி எல் ஐக் கொட்டு, இவ்வளவு என் ஏ சி எல் வேண்டும் என்று மட்டுமே பேசிக் கொள்கிறார்கள், சோடியம் க்ளோரைடு என்று பேசிக் கொள்வதேயில்லை. என் ஏ சி எல் என்றால் என்ன என்று புஷ்ஷைக் கேட்க்க வைத்து அவரை ஒரு முட்டாளாகக் காண்பிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் தவிர இது பயன்பாடு அல்ல என்ற ஒரு எளிய விஷயம் கூட இவர்களுக்குத் தெரியவில்லை.


2.. ரா என்ற ரிசர்ச் அநாலிஸிஸ் விங்கின் நோக்கம் என்ன? அதன் பிண்னனி என்ன? ஒரு ரா அதிகாரியின் நோக்கம் என்ன? போன்ற அடிப்படைகள் கூடத் தெரியாமல் ஏதோ பரவலாகக் கேட்ட துறையாக இருக்கிறதே என்று கேனத்தனமாக ஒரு சாதாரண விசாரணை அதிகாரியை ரா அதிகாரி என்கிறார்கள். ஒரு விமானத்தில் ஆள்/பொருள் கடத்தல் இருந்தால் முதலில் சுங்கத் துறை அதிகாரிகள் மட்டுமே விசாரிப்பார்கள். அவர்கள் கையை மீறிய விஷயம் என்றால் விமானக் கண்ட்ரோல் போலீஸின் சூப்பிரண்டு வருவார். அவரையும் மீறிய விஷயம் என்றால் ஐ பி துறையினர் வருவார்கள். இதில் இந்திய வெளிநாட்டு ராஜாங்க ரீதியான சதி ஏதும் இருப்பின் வேண்டுமானால் ரா அதிகாரிகள் இறுதியில் விசாரிப்பார்கள். இப்படி ஒரு ரா அதிகாரி ஜூப்பை எடுத்துக் கொண்டு போலீஸ்காரர்களுடன் சாதாரண இன்ஸ்பெக்டர் ரேஞ்சுக்கு ஊர் ஊராகத் திரிய மாட்டார்கள். ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் வெளிநாட்டுச் சதிகாரர்கள் இருந்த போதிலும் அதிக பட்சம் விசாரித்தது சி பி ஐ தான். ரா பின்னால் இருந்து தகவல் சேகரித்திருக்கும். நேரடியாக சந்து பொந்தில் துரத்தி சிவராஜனைக் கொன்றது எல்லாம் சி பி ஐ யின் எஸ் ஐ டி தானே அன்றி ரா அல்ல. இந்த காமென் சென்ஸ் கூட இல்லாதவர்கள் புஷ்ஷைக் கிண்டல் அடிக்கக் கிளம்பி விடுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை.

3. தமிழ் படங்களில் ஜியாகரஃபி இருக்காது என்பதினால் தூரம், டிரெயின், சாலைக் குழப்பங்களை நான் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறேன்.

4. முதல் காட்சியாக எல்லோராலும் பெரிதும் சிலாகிக்கப் படும் எல்லோரையும் சீட்டு நுனியிலும் அதற்குக் கீழேயும் தள்ளி விட்ட காட்சிக்கும் படத்திற்கும் என்ன தொடர்பு என்று யாருமே எங்குமே சொல்வதில்லை. ஆரம்பத்தில் விஞ்ஞானி ஏதோ 12ம் நூற்றாண்டுக்கும் நடந்த விஷயத்திற்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது என்று சொல்லி விட்டு அதென்ன அப்படியாகப் பட்ட முக்கியமானத் தொடர்பு என்பதை முக்கியமாகச் சொல்ல மறந்து விடுகிறார்கள். ஒரு கதையின் ஆரம்பத்தில் துப்பாக்கி தோன்றினால் கதை முடியும் முன் அது வெடிக்க வேண்டும் என்பது சிறுகதை இலக்கணம் என்று செக்காவ் சொன்னதாகச் சொல்வார்கள். அது ஒரு வேளை சினிமாவுக்குப் பொருந்தாதோ. ஆகப் பெரிதான முதலும் முக்கியமும் ஆன அந்தக் காட்சி எல்லோரையும் சீட்டு நுனிக்குக் கொண்டு போய் குப்புறத் தள்ளிய காட்சிக்கும் மீதிப் படத்திற்கும் என்ன புண்ணாக்கு ஐயா சம்பந்தம்? இதற்கு டிஸ்கவரி சானலில் இருந்தோ , இண்டியானா ஜோன்ஸில் இருந்தோ ஒரு காட்சியைக் காண்பித்திருந்தால் கூட அதற்கும் மக்கள் சீட் நுனிக்குப் போய் கீழே விழுந்துதானே தொலைத்திருப்பார்கள்? அதற்கும் இந்தப் படத்திற்கும் கூடத்தான் ஒரு மயிறு சம்பந்தமும் இருந்திருக்காது. தொடர்பு இருக்கிறது என்றால் அது முக்கியமானது என்றால் ஏன் சொல்லவில்லை? சொல்ல மாட்டார்கள், சொல்ல முடியாது. ஏன்? அதைச் சொன்னால் இவர்கள் நாஸ்திகப் பிரச்சாரம் பல்லிளித்து விடும். ஆகவே படத்தின் முக்கியமான முதல் காட்சிக்கும் படத்தின் மொத்த கட்டுமானத்திற்கும் உள்ள சம்பந்தம் சொல்லப் படுவதில்லை. பூடகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பி ந எழுத்தாளர்கள் ரேஞ்சுக்குச் சொல்கிறார்கள். ஏன் சொல்லவில்லை?

6. ஏன் சொல்லவில்லையென்றால் இதில் சொல்லப் படும் மேல்நாட்டுக் கடவுள் மறுப்புச் சித்தாந்தமான கேயாடிக் தியரி அடி பட்டுப் போய் விடும். வைரஸ் கிருமியை அழிக்கக் கடல் பொங்கி எழ வேண்டும். ஆக அங்கு ஒரு காரணம் வந்து விடுகிறது. ஒரு காரணத்தின் பொருட்டு நடக்கும் செயல் கயோட்டிக் செயல் ஆகாது அது திட்டமிடப் பட்டச் செயல் ஆகி விடும். இங்கு உலகத்தைக் காக்கும் பொருட்டே காக்கும் கடவுளான விஷ்ணு தன் சிலையைத் திருப்பிப் படுப்பதன் மூலம் ஒரு சுனாமியை உருவாக்குகிறார் என்ற உண்மையைச் சொல்ல வேண்டி வரும். இது இந்த முட்டாள்களுக்கு கடைசியில்தான் உறைத்திருக்கிறது. அட கயோட்டிக் தியரிக்கும் முதலில் காண்பிக்கும் காட்சிக்கும் ஒத்து வரவில்லையே, இந்த சிலை கடலினடியில் போய் அது டெக்டானிக் உரசலை எழுப்பியதால்தான் சுனாமி வருகிறது என்று காண்பித்து அதை அழுத்திச் சொன்னால் அது கடவுள் நம்பிக்கையை வலியுறுத்துவதாக அல்லவா அமையும் என்று கடைசியில் இந்த ஈ வெ ரா குருவின் சிஷ்யர்களுக்குத் தோன்றி, அப்படியானால் அதைச் சொல்லாமலேயே விட்டு விடலாம் என்று மொட்டையாக விட்டு விட்டார்கள். ஆக படத்தின் சீட் நுனிக்குத் தள்ளி மக்களின் பல்லை உடைத்த முதல் காட்சிக்கும் மீத சினிமாவுக்கும் சம்பந்தமில்லாமல் கமல்ஹாசன் பல சீன்களில் கட்டிட விளிம்புகளில் தொங்குவது போலத் தொங்குகிறது. இதற்குப் பதிலாக ஒரு ஜேம்ஸ் பாண்டு படத்தின் முதல் காட்சியை வைத்திருந்தாலும் அதுவும் இதே போல் சீட் நுனிக்குத் தள்ளித் தொங்கிக் கொண்டிருக்கும். அது சரி, நுனிக்குத் தள்ளினால் தொங்கத்தானே செய்யும்?

7. ஐயா தெரியாதையா. பைனாகுலர் மூலமாக 300 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் வைரஸ் கிருமிகள் நெளிவது எல்லாம் தெள்ளத் தெளிவாகத் தெரியுமா ஐயா? சொல்லிப் போடுங்க ஐயா, நான் சீட் நுனிக்குப் போய் இறங்க முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறேன். அப்புறம் எதுக்கு மைக்ராஸ்கோப்பு, எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பு எல்லாம்? லாபில் அவற்றையெல்லாம் எடுத்துக் கடாசி விட்டு ஆளுக்கு ஒரு பைனாகுலர் வாங்கிக் கொடுத்து விடலாமே. ஸ்பஷ்டமாகத் தெரியுதே வைரஸ் கிருமி எல்லாம்?

8. அமெரிக்காவில் உள்ள ஒரு பயோ டெக்னாலஜி கம்பெனியில் நிறைய தமிழர்கள் வேலை பார்க்கச் சாத்தியக் கூறுகள் உள்ளன இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இப்படியா முக்கியமான போர்ட் மீட்டிங்கில் கூட எல்லோரும் தமிழில் பேசிக் கொள்வார்கள்? அந்த அளவுக்கு வளர நாம் என்ன ஜப்பான் நாட்டினரா? அவர்கள்தான் தங்கள் கம்பெனிகளில் பிறர் இருந்தாலும் பொருட்படுத்தாமல் ஜப்பானிய மொழியில் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்: ஆனால் தமிழிலோ இந்தியிலோ நம் இந்தியர்க்ள் கூடும் ஆபீஸ் கூட்டங்களில் கூட அமெரிக்காவில் யாருமே பேசத் துணிவதில்லை. இந்த சினிமாவில் மட்டும் எல்லோரும் தமிழிலேயே பேசிக் கொள்கிறார்கள் ஜப்பானியப் பெண்மணி உட்பட. நான் அந்தக் குரங்கு கூடத் தமிழில் பேசி சாக்லேட் கொடு என்று கேட்குமோ என்று ஆர்வத்துடன் சீட் நுனிக்குப் போய் விட்டேன்.

9. மேக்கப் ஒவ்வொன்றும் காணச் சகியாமல் ஆளாளுக்கு பத்து கிலோ மைதா மாவைப் பிசைந்து மூஞ்சி மேலே அப்பிக் கொண்ட மாதிரி அசிங்கமாக இருக்கிறது. டி வி யில் புஷ், சோனியா, அத்வானி போன்றோரைக் கிண்டல் அடிக்க ஒரு முகமூடி போட்டுக் கொண்டு வருவார்கள் அந்த முகமூடிகளின் அணிவகுப்பு இந்த சினிமா.

10. அதென்ன ரெங்கராமானுஜ நம்பி பெருமாள் பக்தரா அல்லது குஸ்தி பயில்வானா? குகை வழியாக வந்தும் கூட கோடி பட்டு வேட்டியில் ஒரு அழுக்கு பிசுக்குப் படாமல் வந்து சண்டை போடுகிறார். அவரது சம்சாரமோ புதுப் பட்டுப் புடவையோடு வந்துதான் கணவனைக் காப்பாற்றப் போராடுவார் போலும். ஒரு வேளை சிதம்பரத்தில் பெரிய லாண்ட் லார்டு அண்டு குஸ்தி பயில்வானாக இருந்திருப்பார் போலும்.
கேயாட்டிக் தியரிப் படி உலகின் எந்தவொரு காரியமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்கிறார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களாகிய நாம் அதையே 'எல்லாமே அவன் செயல்' 'அவ்ன் இன்றி ஒரு அணுவும் அசையாது' ' தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்', நமக்குள் இருப்பது அவனே, அணுவுக்குள் இருப்பதும் அவனே, அவனே பரம்பொருளாகிய ஈஸ்வரன் என்பதைப் புரிந்து கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை நாம் ஈசனின் அம்சமாகக் கண்டு வணங்குகிறோம். நாஸ்திகவாதிகள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி ஏற்றுக் கொள்ளுதல் கவுரவக் குறைச்சல் ஆகவே நாம் சொல்லும் அதே 'நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே', 'கிருஷ்ணன் ஒரு சோற்றுப் பருக்கை உண்டால் உலகே பசி அடங்குகிறது" என்ற அதே தத்துவத்திற்கு வேறு ஒரு பெயர் கொடுத்து கயோட்டிக் தியரி என்று பம்மாத்துச் செய்கிறார்கள். என்னைப் பொருத்தவரை கயோட்டிக் தியரியை நம்புவதும் கடவுளை நம்புவதும் ஒன்றே. வேறு எந்தவிதத்திலும் அதை விளக்க முடியாது. நான் கடவுளை நம்புகிறேன் என்பதை வேறு மொழியில் சொல்லும் பம்மாத்து இந்த தியரிகள்.



கயோட்டிக் தியரியின் அடிப்படையில் அலெஜாண்ட்ரோ கோன்சாலஸ் (பெயர் சரிதானே?) இயக்கிய அமோரஸ் பெரோஸ் (இதை மணி ரத்தினம் காப்பியடித்து ஆயுத எழுத்து என்று எடுத்தார்), 21 க்ராம்ஸ், பேபல் என்ற முப்பட வரிசை சினிமாக்கள் குறிப்பிடத்தக்கவை. முகமூடி போட்டுக் கொண்டு பத்து வேடங்களில் நடிப்பது, நாப்பது வேடங்களில் நடிப்பது போன்ற கோமாளித்தங்களையெல்லாம் கமலஹாசன் நிறுத்தினால் அவரும் கூட இது போன்ற உலகப் புகழ் வாய்ந்த படங்களை எடுக்கலாம். இந்த படங்கள் அனைத்துமே ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாத நபர்களை ஏதோ ஒரு சம்பவத் தொடர்ச்சிகள் எப்படி இணைக்கின்றன என்பதைப் பற்றிய படங்களே. இந்த மாதிரி படங்களைப் பார்த்த பின்னாலும் ஒரு சினிமாவில் வரும் மரம் , மட்டை, குரங்கு, நாய் , தெருப்புழுதி என்று அனைத்திலுமே தானே நடிப்பேன் என்று ஒருவர் சர்கஸ் செய்து கொண்டிருக்கிறார். நாமும் சீட்டு நுனிக்குப் போய் பாராட்டி மகிழ்ந்து கொண்டேயிருக்கிறோம்.


ஒரு வேளை நான் பத்து வயதில் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் நானும் கூட ஒரு வேளை சீட் நுனி வரை போய் திரும்பி வந்திருப்பேன் முதல் காட்சியில் சீட் நுனிக்குப் போனவன் அதற்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் நுனியிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு

சீட் நுனி வரைக்கும் போய் விட்டுக் இறங்க முடியாமல் தவிக்கும் ஒரு அப்பாவி ரசிகன்
(சீக்கிரமே மெத்தை அல்லது வைக்கோல் ரொப்பிய உன் பெயர் போட்ட ஒரு பிக் வேனை கீழே வருமாறு அனுப்பி வை, குதிக்கக் காத்திருக்கிறேன்)

சரி, இவர் இப்படி சொல்றார் ஆனால் படத்தை பார்த்த தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், "யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை பகுத்தறிவுக் கொள்கை உணர்வோடு செய்திருக்கிறீர்கள். உங்கள் சாதனையை, உங்களால் மட்டுமே முறியடிக்க முடியும்" என்று பாராட்டு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கும், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். இருவரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

அப்பா தலைசுத்துது, உன்னிடம் தலைவலி மாத்திரை இருந்தா எனக்கு உன் பதிலோடு அனுப்பு
இப்படிக்கு,
இட்லிவடை

46 Comments:

Anonymous said...

excelent review

Bart said...

You left out one more scene. Rangaraja Nambi carrying the last right pot and going around perumal statue..
Whether Anna's dravidian parties support hinduism or not, hinduism practices annaism.. "Edhayum thaangum idhayam vendum".

Anonymous said...

வேற வேலை எதுவும் கிடையாதா?

தசாவதாரம் பற்றி தினமும் ஒரு பதிவாவது போடாமல் உங்களுக்கு தூக்கம் கிடையாது. சரியா?

படம் ஹிட்டாகி ரவி கல்லா கட்டிக் கொண்டு இருக்கிறார். இதுல உங்களுக்கு எங்க பொறாமை?

ஒரு விசயம் உறுதி. இணைய வெளியில் பொழப்ப விட்டு பதிவுகளாக பதிய செய்து, எத்தனை நொட்டை, நொள்ளை & குறை சொன்னாலும், "எல்லா பதிவர்களையும் பாதிப்பு அடையச் செய்திருக்கும்" கமல் தசாவதாரம் படம் மூலம் சிக்சர் அடித்திருக்கிறார். இது "உலக நாயகனுக்கு" கிடைத்திருக்கும் வெற்றி.

என்னாப்பா ? தெனம் தெனம் தசா பதிவு போட்ற? என்ன மேட்டரு? இது படத்தோட நூறாவது நாள் வரை தொடருமா?

அது சரி, உங்களுக்கு மட்டும் வீர்மணி & கமல் போட்டோ எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது? ஒரு இணையதளம் விடாமல் தேடித்தேடி மேட்டர் பொர்றுக்குவீஙகதானே?(!!??)

Anonymous said...

ஒருத்தர் வீரமணியையும், செயமோகனையும் சால்ராக்கள்ன்னு
எழுதிருக்காரே, கவனிக்கலையா.

Anonymous said...

Too Gud
Mind Blowing

ஜயராமன் said...

கமலஹாசன் என்கிற வாணிக கலைஞனின் அபத்த வக்கிர கற்பனைகளையும், வரலாற்றுப் புரட்டுகளையும், வீங்கிய அவன் சுயமதிப்பை சொரிந்துகொள்ளும் சுய தம்பட்டங்களையும், அரைவேக்காடு நாத்திக, காழ்ப்பு படங்களையும் பார்த்து ஆகா, ஓகோவென்று ஆர்ப்பரிக்கும் பலப்பல மந்தைக் கூட்டங்களுக்கு இடையில் ஒரு தெள்ளந்தெளிய - கொஞ்சம் நீண்ட - மதிப்புரை.

படத்தைப் பார்ப்பதற்கு முன்னால் இந்த மதிப்புரையை படித்திருந்தால் நீங்கள் இப்படி தலைவலி மாத்திரைக்கு முனியிடம் மன்றாட வேண்டாம்.

நன்றி

ஜயராமன்

ஜயராமன் said...

ஏஏ

Anonymous said...

your usual Muni letter touch is missing except in the first few paragraph's...

IdlyVadai said...

//அது சரி, உங்களுக்கு மட்டும் வீர்மணி & கமல் போட்டோ எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது? ஒரு இணையதளம் விடாமல் தேடித்தேடி மேட்டர் பொர்றுக்குவீஙகதானே?(!!??)//

கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், நமிதா ரசிகர்கள் எல்லாம் இட்லிவடை ரசிகர்களாக இருக்கிறார்கள், அதனால் அவர்கள் எனக்கு தகவல் சொல்லுகிறார்கள். படம் விடுதலை.காம் இன்றைய செய்தி.

IdlyVadai said...

//படத்தைப் பார்ப்பதற்கு முன்னால் இந்த மதிப்புரையை படித்திருந்தால் நீங்கள் இப்படி தலைவலி மாத்திரைக்கு முனியிடம் மன்றாட வேண்டாம்.//

இப்ப உங்க கமெண்டை படித்த பின் எனக்கு இரண்டு மாத்திரை வேண்டும் :-)

Anonymous said...

ஒசி சரக்கில் படையல் வைக்கிறீர்,
முனி கோபிக்கமாட்டாரா.

Anonymous said...

உண்மைத்தமிழன்?

IdlyVadai said...

//உண்மைத்தமிழன்?//

உண்மை தமிழன் படித்தால் கோபப்பட போறார். :-)

Anonymous said...

தமிழ்நாட்டில் மொத்தம் ///எட்டு கோடி/// ஐயங்கார் சமுதாய மக்கள் இருக்கின்றனராம். அவர்கள் வந்து பார்த்தால்தால் தான் தசாவதாரம் படம் ஓடுமாம். அதற்காகத்தான் இந்தப்படத்தில் கமல் ஐயங்காரை உயர்வாக சித்தரித்துள்ளாராம். அதனால் தினமும் ஐயங்கார் கூட்டம் அலை மோதுதாம். ///எட்டு கோடி/// ஐயங்கார்களும் கண்டுகளிக்க என்ன செய்வது என்று தெரியாமல் தியேட்டர் அதிபர்கள் குழப்பத்தில் இருக்கின்றனறாம். த்தூ.....

Anonymous said...

சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை!

Anonymous said...

சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை!

Anonymous said...

there are flaws in the film that many reviewers have pointed out. This is one review that is aimed at getting attention.
There is nothing in the film that degrades one community. Certainly there's no such intentions. I fear people like you will create unnessecary problems.
One character in the film doesnt believe in god. All arguments can be seen as the character's.

Anonymous said...

How many films where kamal acted as a brahmin succeeded? can u explain ur view that there is a business reason behind kamal acting as a iyengar?

Anonymous said...

தமிழ் நாட்டு ரசிகர்கள் புத்திசாலிகள். கமலஹாசன் சொல்ல வருவதை விட்டு விட்டு மற்றதை மட்டும் கபக்கென்று பிடித்துக் கொள்வார்கள்.

Does he mean tamilians are idiots?

மன்மோகன் சிங்கை இன்னமும் உலகின் மிகப் பெரிய பொருளாதார மேதை என்று நம்பிக் கொண்டே ஒரு கிலோ அரிசிக்கு 50 ரூபாய் கொடுக்கும் இளிச்சவாயர்கள் இருக்கும் தேசம் இந்தியா. முட்டாள் இந்தியர்களுக்கு படித்தவர்கள் மேல் இருக்கும் மரியாதையை பயன் படுத்தி ஓட்டு வாங்க ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலப் பள்ளி என்னும் டுயுட்டோரியல் காலேஜில் இத்தாலியில் இருந்து ஸ்போக்கன் இங்க்லீஷ் படிக்க வந்தவளையெல்லாம் ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டியில் படித்தவர் என்று பொய் சொல்லி ஏமாற்ற முனைகிறார்கள். படித்தவன் செய்யும் சூதை நம்பும் கூட்டம் உள்ள தேசமாகையினால் அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானியின் வார்த்தைகளாக நாஸ்திகப் பிரச்சாரம் கன ஜோராக நடக்கிறது.


The prime minister of india has been degraded. Another political leader is also degraded here.

Anonymous said...

அதென்ன ரெங்கராமானுஜ நம்பி பெருமாள் பக்தரா அல்லது குஸ்தி பயில்வானா?
Why? a devotee of perumal coudnt be strong? what are you trying to say?????

Anonymous said...

தேவர் மகன் சினிமா வந்த பொழுது அதில் தங்கள் இனத்தின் குறைகளைச் சொல்லுகிறார் என்பது கூடப் புரியாமல் பதினெட்டு பட்டியில் இருந்தும் மாட்டு வண்டி போட்டுக் கொண்டு வந்து சினிமா பார்த்தது போல ஐயங்கார்கள் எல்லோரும் ஒரே குஷியாகக் கிளம்பிப் போய் இந்தப் படத்தைப் பார்த்து வருவதாகக் கேள்வி.
These lines cause more insult to a community than what he claims Dasavatharam has caused.

Anonymous said...

He degraded Dr. Manmohan singh with his comments. The other person who the writer says did a oxford spoken english course is also a political leader close to Dr. Manmohan Singh. Now you know to which party the writer belongs to......Readers can also guess why he is dragging the muslims in to this...
What is the relationship between the finance expertise of Dr.Manmohan singh, the other leader from "oxford univ" and the film or kamal haasan?

Anonymous said...

Unnecessarily he is talking about sonia gandhi. If you dont like kamal scold him. Dont talk about others.

Anonymous said...

In Dasavatharam the character Balram naidu suspects people in the Mutt. The same way he suspects a muslim family and their whole street infact. Where is the bias against one religion like what the author says?

Viji Sundararajan said...

u too idlyvadai, i thought you were sensible and liked Dasavathram...eddhukkutthu idnhha venddhha review, pessamma link mattum kooddutthu irrukalam lla ?

Anonymous said...

ஊசி போன இட்லி அப்படி தான் எழுதும்..வேஸ்ட் மேட்டர் அது.. ஒரு ஆள் ரூம் போட்டு எழுதினதில்ல அது.. சென்னை எக்மோர் நேரு ஸ்டேடியத்தை மொத்தமா வாடகைக்கு எடுத்து உக்கார்ந்து உருப்படாத பதிவு..போட்டு மண்டையை பிச்சி பிச்சி குழப்பிகிட்டு எழுதுறீங்களே ?? எப்படி ??

வேற வேலையே இல்லை போலிருக்கு.

தமிழ் ப்ளோக் களில் தசாவதாரத்தை என்னவோ Ph.D ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட மாதிரி ஒவ்வொரு வலை பதிவாளர்களும் அடிச்சிகுறீங்க.. ஜாதி, மத கருமாந்திரத்தை விட்டுவிட்டு அதை ஜஸ்ட் ஒரு சினிமா என்ற பொழுதுபோக்கு அம்சமாக என் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்..??

Anonymous said...

THIS IS A TARGETED PERSONAL ATTACK AGAINST KAMAL FROM A HINDU VERIYAR..

USELESS CRAP AND SOMEIDIOTIC HINDU RACISM COMMENTS LIKE BJP AND VHP DOES...

Anonymous said...

இட்லி வடையிடம் சரக்கு இல்லை. இது தசாவதாரம் சீசன், அதனாலே ஒசி சரக்கை பிடிச்சிப் போட்டுட்டார்/ள். இதுக்குப் போயி இப்படி அலட்டிக்கலாமா.

Anonymous said...

I was routed to your blog from
Kovi Kannan's blog on the same
film.

I did not read your review. But I
agree with the opinion of some
here that Dasaavathaaram is just
a fantasy film, maybe, relying on
some mumbo-jumbo of Hindu
religion that is being followed
in Tamilnadu.

It is better for you not to see
such films and go to your
nakkal god muni for
atonement.
Why to invite avoidable
irritations,
dear boy?

Hope you will put in your
blog to better use in future.

Anonymous said...

In Dasavatharam the character Balram naidu suspects people in the Mutt. The same way he suspects a muslim family and their whole street infact. Where is the bias against one religion like what the author says?



ஐயா அநாநி

பரவாயில்லையே திங்க் பண்ணக் கூடத் தெரியுதே?

ஆமா அந்த நெட்டை முஸ்லீமைப் பார்ர்த்து பலராம் நாயுடு நீ அல்குவைதாவா, தாலிபானான்னு கேக்குறாரு வாஸ்தவம்தான். ஆனா அவரை அப்படி, ஒரு முஸ்லீமை அப்படிக் கேட்டால் யாராவது கோவிச்சுக்கிடுவாங்களோன்னு நெனச்ச்சி முன் ஜாக்கிரதையா முதல் சீன்லயே கோவிந்தராஜனையும் அதே கேள்வி கேட்டு வச்சுக்கிடுதாரு. அதாவது நான் மூஸ்லீமை மட்டும் கேட்க்கவில்லை இந்துவையும் கேட்டேன் என்று சமாளிப்பதற்காக. ஒரு முஸ்லீம் என்று வரும் பொழுது இவ்வளவு முன் ஜாக்கிரதை எடுக்கும் கமலஹாசன், இந்து என்று வரும் பொழுது மட்டும் நக்கல், நையாண்டி எல்லாம் ஏன்?

நன்றாக கவனிக்க வேண்டும் கமலஹாசன் கேட்பது ஒரு தனிப்பட்ட முஸ்லீமைப் பார்த்து நீ அல்குவைதாவா அல்லது பின் லாடரா (ஏணியா என்ற அர்த்தத்தில்) ஆனால் இந்துக்கள் என்று வரும் பொழுது ஒரு இந்து ஸ்தாபனத்தையே மடத்தையே பார்த்து ஏன் கிரிமினலா இருக்கக் கூடாது என்கிறார். அவர் மசூதியில் ஏன் குண்டு இருக்கக் கூடாதா என்று கேப்பதில்லை ஆனால் மடத்தில் கிரிமினல்கள் இருக்கக் கூடாதா என்று கேட்க்கிறார். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு மிஸ்டர். மேலும் மடம் என்று இங்கு அவர் குறிப்பது காஞ்சி மடத்தை. இவர் ஒரு ஐயங்கார். ஐயர்களின் மடமான காஞ்சி மடத்தைக் கிண்டல் அடித்து இரு சமூகத்தாரிடையே மனமாச்சரியத்தையும் ஏற்படுத்துகிறார். ஏன் முஸ்லீம்களிடம் இப்படி ஒரு வசனம் அவர் வைக்கவில்லை?

நாகேஷ்: அதெப்படிங்க மசூதிக்குள்ள போய் விசாரிப்பீங்க

பலராம்: ஏன் மசூதிக்குள்ளே குண்டு வைச்சிருப்பீங்க, பாக்கிஸ்தானுக்கு ஆதரவா தீர்மானம் போடுவீங்க, தீவீரவாதிகளை ஒளிச்சு வைப்பீங்க நான் மட்டும் உங்களை விசாரிச்சா தப்பா? மசூதின்னா? அங்கு கிரிமினல்கள் டெரரிஸ்டுகள் இருக்க மாட்டாங்களா என்ன?

தைரியம் இருந்தால் கமலஹாசன் இப்படி ஒரு வசனத்தைப் படத்தில் வைப்பதுதானே? ஏண்டா இந்துக்கள் மடம்னா உனக்கு நக்கல் மத்தவன் கோவில்னா மசூதின்னா மதிப்பா? இதுதானே இவர் குரு ஈ வெ ரா சொல்லிக் கொடுத்த பகுத்தறிவு? அதைத்தான் நான் இந்தக் கட்டுரையில் எதிர்த்திருக்கிறேன். போதுமா விளக்கம்?

Anonymous said...

சங்கு மாமா

உங்க கமல் அங்கிள் ஜாலியா பொழுது போக்கு படம் மட்டும் எடுத்து நாஸ்திகப் பிரச்சாரத்தையெல்லாம் சினிமாவில் கொண்டு வராமல் இருந்தால் நாங்கள் ஏன் ஐயா எதிர்க்கிறோம், நாங்களும் அதை சினிமா மட்டும் பார்த்து விட்டுப் போவோம்ல? இவரு சினிமாவை நாஸ்திகம் பரப்ப யூஸ் பண்ணுவாராம் ஆனா நாங்க மட்டும் அதைப் பிரச்சாரமா நினைக்காம சினிமாவா நினைக்கனுமாம்? அதுக்கு வேற ஆளப் பாருங்க மிஸ்டர் சைரன் அங்கிள்

Anonymous said...

சங்கு ::::
/// உங்க கமல் அங்கிள் ஜாலியா பொழுது போக்கு படம் மட்டும் எடுத்து நாஸ்திகப் பிரச்சாரத்தையெல்லாம் சினிமாவில் கொண்டு வராமல் இருந்தால் நாங்கள் ஏன் ஐயா எதிர்க்கிறோம், நாங்களும் அதை சினிமா மட்டும் பார்த்து விட்டுப் போவோம்ல? இவரு சினிமாவை நாஸ்திகம் பரப்ப யூஸ் பண்ணுவாராம் ஆனா நாங்க மட்டும் அதைப் பிரச்சாரமா நினைக்காம சினிமாவா நினைக்கனுமாம்? ///

இதுவரைக்கும் ஆத்தீகத்தை பரப்ப சினிமாவை யாரும் பயன்படுத்தலையா. அப்பொழுது அது உங்களுக்கு சினிமாவாக தெரியவில்லையா?

Anonymous said...

//// இதுவரைக்கும் ஆத்தீகத்தை பரப்ப சினிமாவை யாரும் பயன்படுத்தலையா. அப்பொழுது அது உங்களுக்கு சினிமாவாக தெரியவில்லையா? ////

ஏம்பா, "சீ யாரு?"

எங்கிட்டு போணாலும் வெவரம் தெரியாம ஊடாக்க பூந்து ஏதாயினு பினாத்திகிட்டே கீறியே, எல்லீ ப்ளாக்கிலியும்.

ஆத்திக சினிமா மட்டுக்கும் எல்லே, எல்லா சினிமாவிலியும் மெசேஜ் வெச்சா அதை கொஞ்சம் விமர்சனம் வர தான் காட்டி செய்யும். ஆத்திகம் சினிமாவ பாராட்டிகிணா அதுவும் விமர்சனம்தான். நாத்திக சினிமாவ டிரவுசர் கிழிச்சா அதிவும் விமர்சனம்தான். எதயுமே சரியா பிரிஞ்சுகமாட்டியா நீ!

இந்த சூப்பர் படத்த பாத்துட்டு நம்ம ப்ரேவ் மணி கமலகாசனுக்கு பகுத்தறிவு வளர்த்து கீறாருன்னு பொன்னாடையெல்லாம் போத்திட்டிருக்காறு! அப்புறம் இன்னா காட்டியும் நீ சும்மா "இது வெறும் சினிமாதான்" சவுண்ட் உட்டுகிணு கீற!! நிசமாலுமே நீ "சீ யாரு" இல்ல ஆனா "சீ போரு..."

Anonymous said...

அப்பா தலைசுத்துது, உன்னிடம் தலைவலி மாத்திரை இருந்தா எனக்கு உன் பதிலோடு அனுப்பு

மங்களூர் சிவா said...

:))))

puduvaisiva said...

idly vadai pai nalla manna thaathuva doctor poi parru pa
paithiyam roomma mutharuthukulla.

puduvai siva.

Anonymous said...

அனானி

ஏலே! உன்னால உம்பெயரையே தைரியமா சொல்ல முடியல. நீ என்பெயரை கிண்டல் பண்றியா?
என்னலே உனக்கு மட்டும் தமிழ் தெரியும்னு நெனச்சியா. அல்வா அறுவா எல்லாம் சேர்ந்து வரும்லே

Anonymous said...

ஐயா இட்லி வடை.
முனிக்கு எழுதின இந்த கடுதாசுதான் ஒரு படத்தை விமரிசிக்கற இலக்கணம்.
எல்லாருக்கும் சொல்லி போடுங்க.
நன்றி.
அன்புடன்.
ராஜா,
நங்கனல்லூறு.

Anonymous said...

தசாவதாரம்: வீரமணியின் தொடரும் காமெடி

http://viduthalai.com/20080626/chennai_2.html

Anonymous said...

தசாவதாரம்: வீரமணியின் தொடரும் காமெடி

http://viduthalai.com/20080626/chennai_2.html

Anonymous said...

Excellent review !

Any Hindu will never wake up till the sword comes to his head !

Anonymous said...

/// உங்க கமல் அங்கிள் ஜாலியா பொழுது போக்கு படம் மட்டும் எடுத்து நாஸ்திகப் பிரச்சாரத்தையெல்லாம் சினிமாவில் கொண்டு வராமல் இருந்தால் நாங்கள் ஏன் ஐயா எதிர்க்கிறோம், நாங்களும் அதை சினிமா மட்டும் பார்த்து விட்டுப் போவோம்ல? இவரு சினிமாவை நாஸ்திகம் பரப்ப யூஸ் பண்ணுவாராம் ஆனா நாங்க மட்டும் அதைப் பிரச்சாரமா நினைக்காம சினிமாவா நினைக்கனுமாம்? ///

"இதுவரைக்கும் ஆத்தீகத்தை பரப்ப சினிமாவை யாரும் பயன்படுத்தலையா. அப்பொழுது அது உங்களுக்கு சினிமாவாக தெரியவில்லையா?"
அது அதே தான்.

Anonymous said...

Hi idlivadai,

whats ur intention.......

portraying ur views about the movie or just negative criticising works of KAMAL and other stuff....

why cant u find some good stuff about technical advancements in the film.

do u think its a good idea display a message like this. ஐயா அநாநி

பரவாயில்லையே திங்க் பண்ணக் கூடத் தெரியுதே?

ஆமா அந்த நெட்டை முஸ்லீமைப் பார்ர்த்து பலராம் நாயுடு நீ அல்குவைதாவா, தாலிபானான்னு கேக்குறாரு வாஸ்தவம்தான். ஆனா அவரை அப்படி, ஒரு முஸ்லீமை அப்படிக் கேட்டால் யாராவது கோவிச்சுக்கிடுவாங்களோன்னு நெனச்ச்சி முன் ஜாக்கிரதையா முதல் சீன்லயே கோவிந்தராஜனையும் அதே கேள்வி கேட்டு வச்சுக்கிடுதாரு. அதாவது நான் மூஸ்லீமை மட்டும் கேட்க்கவில்லை இந்துவையும் கேட்டேன் என்று சமாளிப்பதற்காக. ஒரு முஸ்லீம் என்று வரும் பொழுது இவ்வளவு முன் ஜாக்கிரதை எடுக்கும் கமலஹாசன், இந்து என்று வரும் பொழுது மட்டும் நக்கல், நையாண்டி எல்லாம் ஏன்?

நன்றாக கவனிக்க வேண்டும் கமலஹாசன் கேட்பது ஒரு தனிப்பட்ட முஸ்லீமைப் பார்த்து நீ அல்குவைதாவா அல்லது பின் லாடரா (ஏணியா என்ற அர்த்தத்தில்) ஆனால் இந்துக்கள் என்று வரும் பொழுது ஒரு இந்து ஸ்தாபனத்தையே மடத்தையே பார்த்து ஏன் கிரிமினலா இருக்கக் கூடாது என்கிறார். அவர் மசூதியில் ஏன் குண்டு இருக்கக் கூடாதா என்று கேப்பதில்லை ஆனால் மடத்தில் கிரிமினல்கள் இருக்கக் கூடாதா என்று கேட்க்கிறார். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு மிஸ்டர். மேலும் மடம் என்று இங்கு அவர் குறிப்பது காஞ்சி மடத்தை. இவர் ஒரு ஐயங்கார். ஐயர்களின் மடமான காஞ்சி மடத்தைக் கிண்டல் அடித்து இரு சமூகத்தாரிடையே மனமாச்சரியத்தையும் ஏற்படுத்துகிறார். ஏன் முஸ்லீம்களிடம் இப்படி ஒரு வசனம் அவர் வைக்கவில்லை?

நாகேஷ்: அதெப்படிங்க மசூதிக்குள்ள போய் விசாரிப்பீங்க

பலராம்: ஏன் மசூதிக்குள்ளே குண்டு வைச்சிருப்பீங்க, பாக்கிஸ்தானுக்கு ஆதரவா தீர்மானம் போடுவீங்க, தீவீரவாதிகளை ஒளிச்சு வைப்பீங்க நான் மட்டும் உங்களை விசாரிச்சா தப்பா? மசூதின்னா? அங்கு கிரிமினல்கள் டெரரிஸ்டுகள் இருக்க மாட்டாங்களா என்ன?

தைரியம் இருந்தால் கமலஹாசன் இப்படி ஒரு வசனத்தைப் படத்தில் வைப்பதுதானே? ஏண்டா இந்துக்கள் மடம்னா உனக்கு நக்கல் மத்தவன் கோவில்னா மசூதின்னா மதிப்பா? இதுதானே இவர் குரு ஈ வெ ரா சொல்லிக் கொடுத்த பகுத்தறிவு? அதைத்தான் நான் இந்தக் கட்டுரையில் எதிர்த்திருக்கிறேன். போதுமா விளக்கம்?

do u think all the others except u are just idiots... whats the first question u asked. do u think others cant think outside the circle.do u expect such kinds of dialogues in movies. hope u'd be aware of the results of such dialogues....

my kind suggestion. better dont repeat the same kind of debate in the blog...Hope u'd maintain the decorum of ur blog.

Thanks.

Anonymous said...

Did you read kumudam jothdam editorial?

Anonymous said...

நான் சொன்னதையே பெரியவர் ஏ எம் ராஜகோபலனும் சொல்லியுள்ளார்


பாரதம் சுதந்திரம் பெற்ற பின்பு இந்து மதத்தையும், இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும், பவித்திரமான ஆஸ்ரமங்கள், மடங்கள் ஆகியவற்றைப் பழிப்பதும், கேலி செய்வதும், நமது ஆச்சார்ய மகாபுருஷர்களின் ஒழுக்கத்திற்கு மாசு கற்பிப்பதும், நமது அரசியல் கட்சிகளுக்கும்,அரசியல் தலைவர்களுக்கும் பொழுது போக்காக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே! அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்துமத விரோத நடவடிக்கைகள், சில அரசியல் கட்சிகள் மற்றும் தற்போதைய தமிழக அரசு ஆகியவற்றின் ஆதரவுடனும், வெளிப்படையான பிரசாரங்களுடனும் நடைபெற்று வருவதும் உலகமறிந்த உண்மையாகும்.

தற்போது சினிமாத்துறையும் இத்தகைய அநீதியை இந்து சமூகத்திற்குச் செய்வதில் சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தீவிரமாக இறங்கியுள்ளது. திரைப்படத்துறை என்பது ஓர் இருமுனை ஆயுதம். இதனால் சமூகத்திற்கு நன்மை செய்யவும் முடியும். தீமை செய்யவும் முடியும்.

வெளிநாடுகளில் விஞ்ஞானபூர்வமான,அதிசயக்கத்தக்க பல திரைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு உலகப் புகழ்பெற்று வருகின்றன. உதாரணமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ``டினோசார்'' என்ற மிருகத்தை வைத்து அற்புதமான படங்களை வெற்றிகரமாகத் தயாரித்து, மிகப் பெரிய அளவில் லாபமும், புகழும் பெற்றுள்ளனர் மேலைநாட்டுத் தயாரிப்பாளர்கள்.இதற்கு மாறாக,தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படக்கூடிய திரைப்படங்கைளத் தயாரிப்பதற்குப் பதிலாக தரக்குறைவான படங்களையே பெரும்பாலும் தயாரித்து வருகின்றனர். சென்றகாலத் திரைப்படங்களில் உயர்ந்த கருத்துகளைக் கொண்ட நல்ல கதைகள் இருக்கும். பண்புள்ள கருத்துகள் பொதிந்திருக்கும். நல்ல சங்கீதமும் இருக்கும். நடிப்பிலும் திறமை இருக்கும்.

உதாரணமாக,திரைப்பட உலகில் தனக்கென்று அழியாத ஒரு தனிச்சிறப்பையும், பெருமையையும், புகழையும் சம்பாதித்துக் கொண்டவர் திரு. சிவாஜிகணேசன் அவர்கள். இவரைப்போன்றே சென்றகாலத்தில் புகழ்பெற்ற நடிகர்களான திரு. பி.யூ. சின்னப்பா, திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரையும் கூறலாம். பாடல்களை எழுதியவர்களும் உண்மையான கவிஞர்கள். அவர்கள் எழுதிய பாடல்களில் நயம் இருக்கும். நெஞ்சைத் தொடும் நல்ல கருத்துகள் இருக்கும். பாடல்களில் விரசமும், இரட்டை அர்த்தமும் இருக்காது. கண்ணியம் இருக்கும். இவற்றிற்கு உதாரணமாக திரு. கண்ணதாசன்அவர்களைச் சொல்லலாம்.

ஆனால் தற்காலத் திரைப்படங்களில் நல்ல கதைகள் கிடையாது. கருத்துகள் கிடையாது. பாலுணர்வைத் தூண்டும் இரட்டை அர்த்தம் பொதிந்த தரக்குறைவான பாடல்களே பெரும்பாலும் ஒலிக்கின்றன! பொழுதுபோக்கிற்கு வேறு வழியின்றித் ``தலைவிதியே'' என்று சகித்துக்கொண்டு இதுபோன்ற தரக்குறைவான திரைப்படங்களை மக்களும் பார்த்து வருகின்றனர். பெரும்பாலான நடிகைகளும், திறமையை விட சிறிதளவும் வெட்கமின்றி, உடலழகைக் காட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

தற்போதைய
திருப்பம்!

இந்நிலையில் சமீபகாலமாக, திரைப்படத்துறையினரின் பார்வை இந்து சமுதாயத்தின் மீதும், இந்து மதத்தின் மீதும் திரும்பியுள்ளது. இந்துக்கள் என்றாலே அவர்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அரசாங்கத்தின் பாதுகாப்பும் நமக்கு உள்ளது என்ற எண்ணத்தில், ஏராளமான மகான்களாலும் மகரிஷிகளாலும் அளவற்ற ஆன்மிகச் சக்தி பெற்ற இம்மாபெரும் இந்து சமுதாயத்தை மிகவும் கேவலமாகச் சித்திரிப்பதில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் போட்டியிட்டுக் கொண்டு முனைந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இத்தகைய திரைப்படங்களைப் பற்றி எந்தத் தமிழகப் பத்திரிகையும் நடுநிலைமையாக விமர்சிப்பதில்லை. பிரசாரம், விளம்பரம், அரசியல் ஆதரவு, சம்பந்தப்பட்ட நடிக, நடிகையர் ஆகியோரின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையிலேயே மிகத் தரக்குறைவான படங்களைக்கூட `ஓஹோ' என்று தமிழகப் பத்திரிகைகள் புகழ்ந்து எழுதிவருவது கண்கூடு. இதற்குக் காரணம், சினிமாத்துறை குவித்துவரும் பணம்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நிலைமையே மாறிவிட்டது. லஞ்சமாகவோ அல்லது பரிசாகவோ அல்லது பட்டமாகவோ கொடுத்துவிட்டால் மனசாட்சியை எளிதில் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை தேசபக்தி உள்ள எவரும் மறுக்கமுடியாது.

இத்தகைய சூழ்நிலையில்தான், சென்ற சில நாட்களுக்கு முன்பு, மிகப் பெரிய அளவில் விளம்பரமும், பிரசாரமும் செய்யப்பட்டு, சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளது `தசாவதாரம்' என்ற புதிய தமிழ்ப்படம். என்னிடம் அன்பு கொண்ட ஏராளமான `குமுதம் ஜோதிடம்' வாசக அன்பர்கள் இப்படத்தைப் பற்றி மிகவும் மனம் வருந்தி எழுதியுள்ளனர். தொலைபேசியிலும் கூறி வருத்தப்பட்டனர். இதுபற்றி விவரங்கள் கூற எங்கள் மனமும், மனசாட்சியும் இடம் தரவில்லை.

எத்தனையோ உயர்ந்த கருத்துகளும், மக்களின் கலாசாரம், பண்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை உயர்த்தக்கூடிய மிகவும் தரமுள்ள திரைப்படங்களை எடுத்து பெருமைப்படுவதை விட்டுவிட்டு, இத்தகைய தரக்குறைவான படங்களைக் குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் ஏன் எடுக்கவேண்டும் என்று மிகவும் வருத்தப்பட்டு என்னிடம் பேசினார்கள் பல அன்பர்கள். இவர்களில் பலர் படித்து நல்ல பதவிகளில் உள்ள தேசபக்தி நிறைந்த பெரியோர்கள், சான்றோர்களும்கூட.

இது நமக்குப் புதிதல்ல..!

காலம் காலமாக, உலகில் வேறு எந்த மதமும் தோன்றாமல் இருந்த காலத்திலிருந்தே பெயரும், புகழும், பக்தியும் நிறைந்த இந்து சமுதாயத்திற்கு இத்தகைய அநீதிகள் புதிதல்ல. உலகில் வேறு எந்தச் சமூகத்தினருக்கும் இத்தகைய கொடிய அநீதிகள் இழைக்கப்படவில்லை என்பதை இந்திய சரித்திரம் எடுத்துரைக்கிறது. ஏராளமான அன்னியர்களின் படையெடுப்பின்போது, கற்பழிக்கப்பட்ட இந்துப் பெண்கள் கணக்கில் அடங்கா! அவ்வளவு ஏன்? இந்தியாவிலிருந்துபாகிஸ்தான் பிளவுபட்டபோது, பாகிஸ்தானின் நகரத் தெருக்களில் இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட கொடுமைகளை மேலைநாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்டன. அதனை அப்போதைய இந்திய அரசாங்கமும், ஆங்கிலேய அதிகாரிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். அந்தக் கொடுமைகளை மறப்பதற்கு இந்துச் சமுதாயம் முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்நிலையில், இந்துத் தாய்க்குப் பிறந்து, இந்துத் தாயின் பாலைப் பருகி இந்துக்களாக வளர்ந்தவர்களே இன்று இத்தகைய படத்தைத் தயாரித்து அன்பிலும், கருணையிலும் உயர்ந்த இந்து சமுதாயத்தை ஈனப்படுத்திப் பேசுவதும், எழுதுவதும், கேவலப்படுத்துவதும் எவ்விதம் நியாயமாகும்?

பாரத மக்களுக்கு இத்தகைய கொடுமைகள் புதிதல்ல. துவாபர யுகத்தில் பவுண்டரகன் என்றொரு மன்னன் இருந்தான். `இறைவன் என்று ஒருவன் கிடையாது. அந்த இறைவன் நான்தான். நான்தான் அந்த வாசுதேவன்' என்று ஆணை பிறப்பித்தான் அவன். (பகவான் ஸ்ரீமந் நாராயணனுக்கு வாசுதேவன் என்ற பெயர் உண்டு). அவனுக்கு பயந்து மக்கள் அவனை வணங்கினர். இருப்பினும் ஒருசிலர் மறைமுகமாக, `பகவான் என்றால் நான்கு கரங்கள் இருக்கவேண்டுமே! சங்கு, சக்கரம் இருக்கவேண்டுமே! கருட வாகனம்தான் எங்கே உள்ளது?' என்று பேச ஆரம்பித்தார்கள். இது மன்னனின் காதில் விழுந்தது. ஆதலால் அவன் அக்காலத்தில் இருந்த ஒரு நிபுணரைக் கொண்டு யந்திரங்கள் வைத்த இரண்டு கைகள், சங்கு சக்கரம், ஒரு கருட வாகனம் ஆகியவற்றை அமைத்துக்கொண்டான். அதன்மூலம் தான்தான் அந்த வாசுதேவன் என்று கூறிக்கொண்டான்.

துவாரகையை கண்ணன் ஆண்டுவந்த காலம் அது!மன்னன் பவுண்டரகனின் அட்டூழியம் அதிகரித்தது. மக்களால் அக்கொடுமைகளைத் தாங்கமுடியாத நிலை ஏற்பட்டபோது, கண்ணனே பவுண்டரகனைப் போருக்கு அழைத்து, அவனைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினான்.

பவுண்டரகனோடு ஒப்பிடும்போது, தமிழகத்தின் தற்போதைய நாத்திக அரசியல் தலைவர்கள் ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள். `தெய்வம் உண்டு; அது நான்தான்!' என்று கூறினான் பவுண்டரகன். ஆனால், இந்த நாத்திகர்களோ, பகவானே இல்லை என்றல்லவா கூறுகிறார்கள்!

சென்ற சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு நாத்திக பிராசார படத்தில், மகா உத்தமியும், கற்புக்கரசியுமான ஸ்ரீசீதையைப் பற்றி அவதூறாக ஒரு பாடலை எழுதி, பல தலைமுறைகளுக்கான கொடிய பாவத்தை இப்போதே சேர்த்துக்கொண்டுவிட்டார் ஒரு ``கவிஞர்.'' பாவம்-புண்ணியம் ஆகியவற்றில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். ஆனால் தர்மம் என்றொரு சட்டம் இருக்கிறது அல்லவா! அது தன் கடமையைத் தவறாமல் செய்யும். காலம் இதனை நிரூபிக்கும்.

பணத்திற்குப் பத்தும் விலை போகும்!

இந்து சமுதாயத்தையே கேவலப்படுத்தி எடுக்கும் இத்தகைய திரைப்படங்களினால் பணம் சேர்க்கலாம். ஆனால், அந்தப் பணத்திற்காக இவர்கள் கொடுக்கும் விலை என்ன என்பதை இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ``பணம் பத்தும் செய்யும்'' என்றொரு மூதுரை உண்டு. ஆனால், இதே பணம், இவர்களது குலம், கல்வி, மானம், தவம், கற்பு, பெருமை, ஒழுக்கம், அறிவுடைமை, தாளாண்மை, தூய்மை ஆகிய பத்து பெருமைகளை இழக்கவும் செய்யும் என்பதை இவர்கள் மறந்துவிட வேண்டாம். ஆணவமும், பணத்தாசையும் இவர்கள் கண்களை மறைக்கின்றன. சாதுக்களாக வாழ்க்கை நடத்திவரும் இந்துக்களுக்கு இத்தகைய திரைப்படங்களின் மூலம் இவர்கள் இழைத்து வரும் அநீதிகளின் மூலம், பாவம் எனும் கொடிய நாகப்பாம்பைத் தேடி, அணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இவர்களைத் தீண்டும்போது, இவர்கள் தேடி ஓடிச் சேர்த்த பணம், கைகுலுக்கிய அரசியல் செல்வாக்கு என்று எதுவும் இவர்களுக்குத் துணை நிற்காது.

இன்று இவர்கள் சிரிக்கட்டும்! அந்த நாள் வரும்போது தர்மதேவதை சிரிக்கும்!!

இந்துக்களுக்கு தர்மம் என்றும் துணை நிற்கும்!!!

சக்தி said...

எந்த ஆய்வுக் கூடத்தில் எந்த விஞ்ஞானி எப்பொழுதும் கெமிக்கல் காம்பவுண்டின் பார்முலாப் பெயரை மட்டுமே சொல்லிப் பேசிக் கொள்கிறார்கள். விஞ்ஞானிகள் எப்பொழுதும் அந்த என் ஏ சி எல் ஐக் கொட்டு, இவ்வளவு என் ஏ சி எல் வேண்டும் என்று மட்டுமே பேசிக் கொள்கிறார்கள், சோடியம் க்ளோரைடு என்று பேசிக் கொள்வதேயில்லை. என் ஏ சி எல் என்றால் என்ன என்று புஷ்ஷைக் கேட்க்க வைத்து அவரை ஒரு முட்டாளாகக் காண்பிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் தவிர இது பயன்பாடு அல்ல என்ற ஒரு எளிய விஷயம் கூட இவர்களுக்குத் தெரியவில்லை.///

உயிரியல் ஆராய்ச்சியாளர்கள்/விஞ்ஞானிகள் உயிரியல் பெயர்களை அத்துப்படியாக வைத்திருப்பார்கள். ஆனால் வேதியியல் பெயர்களை உச்சரிக்கவே மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வர். வேதியியலாருக்கு தலைகீழ். உயிரியல் பெயர்கள் வாயில் நுழையவே நுழையாது. எனது அனுபவத்தின் (11 வருடங்கள்) மூலம் பெற்ற கருத்து.

நான் வேதியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளன். வேதியலார்களாகிய நாங்களே பல சேர்மங்களுக்கு அதன் சுருக்கத்தைத்தான் சொல்லுவோம். அப்படியிருக்கையில் உயிரியல் துறையைச் சேர்ந்தவர்கள் (படத்தில் வரும் விஞ்ஞானிகள்) சேர்மத்தின் முழுப்பெயரையும் சொல்லவில்லையென்று கூறி அது புஷ்ஷை முட்டாளாகக்காட்டத்தான் என்று கூறியிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது.

அமெரிக்க அதிபராக இருந்தால் சாதாரண உப்பின் வேதிப் பொருள்கூடத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமா என்ன?