பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 31, 2008

நடிகை முத்துலட்சுமி காலமானார்


300 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. மறைந்த டி.பி.முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. 1948-ம் ஆண்டு சென்னைக்கு வந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

பல வருடங்களுக்கு முன்பு `பொன்முடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டி.பி.முத்துலட்சுமி. `சவுபாக்கியவதி' என்ற படத்தில், சாவித்திரியுடன் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

`நாடோடி மன்னன்', `அறிவாளி', `வீரபாண்டிய கட்டப்பொம்மன்', `இருவர் உள்ளம்', `நவராத்திரி', `மக்களை பெற்ற மகராசி', `அன்பே வா' உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகையாக நடித்து கொடிகட்டி பறந்தார்.

எம்.ஆர்.ராதா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி, டி.எஸ்.பாலையா உள்பட அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கும், பல படங்களில் ஜோடியாக நடித்தார். இவர் தமிழக அரசின் `கலைமாமணி' விருது பெற்றவர்.

நகைச்சுவை நடிகை முத்துலட்சுமி என்னுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்தவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
- ஜெயலலிதா

Read More...

தசாவதாராம் ரிலீஸ் தேதி - 13 ஜூன் - 1000 பிரிண்டுகள்.

கடைசியாக தவாசதாரம் ரிலீஸ் தேதி ஜூன் 13 (வெள்ளிக்கிழமை) என்று சொல்லியிருக்கிறார்கள்.
படம் Friday the 13th மாதிரி இல்லாமல் இருந்தால் சரி :-)



Read More...

கலைஞர் ஆட்சி - 30 மார்க் - அவுட் ஆஃப் பிட்டி - சோ

இந்த வார விகடனில் வந்த சோ பேட்டி - Keywords ( கலைஞர் குடும்பம், ஆட்சிக்கு மார்க்,ராமதாஸ், பிஜேபியுடன் கலைஞர் கூட்டு, அன்புமணி ராமதாஸ்.... )

மத்தியில் தேர்தல் கண்ணுக்கெட்டும் நேரத்தில், கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பி.ஜே.பி. இந்தச் சூழலில் கூட்டணிக் கணக்குகள் குறித்து 'சோ'விடம் அரசியல் ஆரூடம் கேட்காமல் இருக்க முடியுமா..!



''தென்னிந்தியாவில் முதல்முறையாக கர்நாடகாவில் பி.ஜே.பியின் ஆட்சி..!''

''கடந்த 15 வருஷங்களாகவே கர்நாடகாவில் பி.ஜே.பி. முன்னேறிண்டுதான் இருந்தது. விலைவாசி, தீவிரவாதம் போன்ற பிரச்னைகளால் காங்கிரஸ் மேல மக்களுக்கு நம்பிக்கை குறைஞ்சுபோச்சு. அதுக்கும் மேல தேவகவுடாவும் அவர் மகன் குமாரசாமியும் கர்நாடகாவில் அடிச்ச கூத்து பி.ஜே.பி. மேல சின்னப் பரிதாபத்தை உண்டாக்கிடுத்து. ஜெயிச்சா எடியூரப்பாதான் முதல்வர்னு பி.ஜே.பியிடம் இருந்த உறுதி, காங்கிரஸ்ல யாருக்கும் இல்லை. அங்கே நாலஞ்சு பேர் முதல்வர் ஆசையில் இருந்ததால, அவங்களால முன்னணிக்கு வர முடியலை!''

''கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். இனி, அந்தத் திட்டத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''

''காங்கிரஸ் வந்துடும்னு நினைச்சார் கலைஞர். ஆனா, அங்கே பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்திருப்பதால், பரபரப்பா ஏதாவது பண்ண முயற்சிப்பார். ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தா, 'எங்களுக்கு நியாயம் வேண்டும்! தர்மம்வேண்டும்! தண்ணீர் வேண்டும்!'னு எப்பவும் போல ஏதாவது அறிக்கை விட்டுண்டே பேச்சுவார்த்தைனு காலத்தை ஓட்டியிருக்கலாம். இப்போ அதுக்கும் வாய்ப்பு இல்லை.

தேர்தல்ல ஒகேனக்கல் திட்டம் குறித்து எடியூரப்பா எந்த வாக்குறுதியும் கொடுக் கலைன்னாலும், திட்டத்தை நிறைவேத்த வழி விடுறதில் அவருக்கும் தர்மசங்கடம்தான். இனி என்ன பண்ணுவா..! கோர்ட்டுக்குப் போகலாம். தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கு பொறுப்பைத் தள்ளிப்போட அதானே ஒரே வழி? அங்கே போயிட்டா, யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாது! 'காவிரி நம்பர் டூ'வா மாறிடும் ஒகேனக்கல்!''

''குஜராத், ஹிமாச்சல், கர்நாடகா என காங்கிரசுக்கு அடுத்தடுத்து சரிவுகள். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய கூட்டணிகளில் மாற்றம் இருக்குமா? குறிப்பாக, தமிழகத்தில்..?''

''தமிழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பிக்குனு தனியா வாக்கு வங்கி கிடையாது. ஆனால், நாடாளுமன்றத் தேர்த லைப் பொறுத்தவரை பி.ஜே.பிதான் இப்போ பந்தயத்தில் முந்தும் குதிரை. இப்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.கதான் தேர்தலுக்கு முன் பி.ஜே.பி யோடு கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது. அந்தக் கூட்டணி யால் இருவருக்கும் லாபம்.

பி.ஜே.பியைக் காட்டிலும் தமிழகத்தில் காங்கிரசுக்குக் குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி இருக்கிறதால தி.மு.க. இப்போ பி.ஜே.பி. பக்கம் போகாது. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க. ரெண்டு பேரோடயும் கூட்டணி போடாம பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியைப் பிடிச்சா, அப்போ இந்த நிலைமையில் மாற்றம் இருக்கும். ஜெயலலிதாவை முந்திக்கொண்டு பி.ஜே.பிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பார் கலைஞர். ஏன்னா, எப்போதுமே தேர்தல் முடிந்த பிறகு, சாதகமான கூட்டணியில் தன்னை இணைத்துக்கொள்ள அவர் தவறுவதில்லை!''

''கூட்டணிக்குள் இருந்துகொண்டே குடைச்சல் கொடுத்து வரும் ராமதாஸின் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''அன்புமணி அடுத்தடுத்து விவகாரங்களில் சிக்கும்போதெல் லாம் தி.மு.க. தரப்பில் இருந்து அவருக்கு எந்த உதவியும் கிடைக்கிறதில்லை. தமிழகத்தில் அன்புமணிக்கு ஆதரவாக ஒலிக்கிற ஒரே குரல், அவங்க அப்பா ராமதாசுடையது. இதுல தி.மு.க. மேல கோபம் இருந்திருக்கலாம். இதுபோக, தேர்தல் சமயத்தில் பா.ம.கவுக்குக் குறைவான தொகுதிகள், சம்பந்தம் இல்லாத தொகுதிகள்தான் கலைஞர் ஒதுக்குவாரோனு ராமதாசுக்குச் சந்தேகம் இருக்கலாம். அதனால், இப்போதிருந்தே இப்படி அதிரடி பண்ணிண்டு இருந்தா, கடைசி நேரத்தில் எப்படி முடிவெடுக்கவும் வசதியா இருக்கும்னு நினைச்சிருக்கலாம். ஆனா, இது மாதிரி தொடர்ச்சியா இம்சை கொடுக்கிறவங்களை மக்கள் எப்போதும் ஆதரிச்சதில்லை.

ஆனா, ஒரு விஷயம்..! பொது நலமோ, சுயநலமோ... யாரும் சொல்லத் தயங்குகிற கருத்துக் களை ராமதாஸ் மட்டும்தான் சத்தம் போட்டுச் சொல்றார். கலாசாரச் சீரழிவு, அரசியல் அராஜகம் மாதிரியான விஷயங்களில் பா.ம.க. மட்டும்தான் தன் எதிர்ப்பை உரக்கப் பதிவு செய்து வருகிறது!''

''அன்புமணி மீதான விவகாரங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''அவர் சொல்ற சில விஷயங்கள் எல்லாம் சுத்தப் பேத்தல். சினிமாவில் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு இவர் யாரு? சினிமாவில் சிகரெட் மட்டுமா பிடிக்கிறான்? எல்லாம்தான் பண்றான். அதுக் கெல்லாம் தடை போடவேண்டி யதுதானே..? ரஜினி, விஜய் இவர் சொல்றதுக்குச் சம்மதிச்சாங்களேன்னு கேட்டா, அவங்களுக்கு வேற வழி இல்லை. மீறி சிகரெட் பிடிச்சா தியேட்டருக்குள்ள புகுந்து பா.ம.ககாரங்க கலாட்டா பண்ணுவாங்களோனு இங்கே இருக்குற சினிமாக் காரங்களுக்குப் பயம் இருக்கும். ஏற்கெனவே அப்படிப் பண்ணி னவங்கதானே இவங்க! ஆனா, மும்பை நடிகர்கள்கிட்ட இவ ரோட அதிகாரம் செல்லுபடிஆகலையே..!''

''85வது பிறந்த நாள் கொண்டாடவிருக்கிறார் முதல்வர். அவரிடம் உங்களுக்குப் பிடித்ததும், பிடிக்காததும்..?''

''எந்தவொரு 'ப்ரமோட்டரு'ம் இல்லாத அவருடைய அரசியல் வளர்ச்சி அபாரமானது! கலைஞர், தி.மு.கவில் வளர்ச்சி அடைந்துகொண்டு இருந்த காலத்தில் அண்ணாதுரை, மதியழகன், நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், ஈ.வி.கே.சம்பத் ஆகியோரை தி.மு.கவின் 'ஐம்பெரும் தலைவர்கள்' என்று குறிப்பிடுவார்கள். அந்தப் பிரபலமான பட்டியலில் இடம் பிடிக்காத கலைஞர், அவர்களை எல்லாம்விட மதிப்பான உயரங்களை எட்டி, 'இன்று தி.மு.க என்றால் கருணாநிதிதான்!' என்ற உச்சத்துக்கு உயர்ந்துள்ளார். அவருடைய சாதுர்யமான பேச்சு, எழுத்தாற்றல், சூழ்நிலைக்குத் தக்கவாறு வளைவது, நிமிர்வது போன்ற எல்லாமே குறிப்பிடத்தக்கவை!

என்ன... கலைஞரின் அத்தனை ப்ளஸ்களையும் 'குடும்பத்தினரையே முன்னிலைப்படுத்தி, அவர்களுடைய உயர்வையே பிரதானமாகக் கருதுவது' என்ற ஒரு மைனஸ் அமுக்கிவிடுகிறது. அதே போல, அவரது இந்து மத துவேஷமும் அநாவசியமானது!''

''கொலை வழக்கில் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அழகிரிக்குக் கட்சியில் பதவி வழங்குவதற்குத் தடை இல்லை என்று சொல்லலாமா?''

''ஏதோ இதுக்கு முன்னாடி எல்லாருக்கும் தகுதி பார்த்து தான் பதவி கொடுத்தது மாதிரி கேட்கிறீங்களே! ஸ்டாலின் நீங்கலாக, ஒரே நாளில் அரசியல்வாதியான தயாநிதி மாறன், கனிமொழியின் வளர்ச்சியெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியும்னா, இதுக்கு என்ன வந்தது! அழகிரிக்கும் பதவி கொடுத்தாக வேண்டிய நிலைமையில்தான் இப்போ கருணாநிதி இருக்கார். தயாநிதி மாறன் கெட்டிக்காரர்... கனிமொழி நல்ல கவிஞர்னு சொல்லிப் பதவி கொடுத்த மாதிரி, அழகிரிக்கும் ஏதாவது சொல்லிப் பதவி கொடுத்தால், யார் கேட்கப் போறாங்க!''

''தமிழகத்தில் மின்வெட்டு..?''

''அட, நீங்கதான் சொல்றீங்க, தமிழ்நாட்டுல மின்வெட்டுனு! தமிழ்நாட்டுல 'ஏ.சி, டி.சி'னு ரெண்டு வகை கரன்ட் போக, மூணாவதா 'ஏ.வி' கரன்ட்னு ஒண்ணு இருக்கு. அதுதான் ஆற்காடு வீராசாமி கரன்ட்! அது எப்ப வரும், எப்ப போகும்னு சொல்ல முடியாது. விளக்கை போட்டே வைக்கணும். நீங்களா வீட்டுல விளக்கை அணைச்சுட்டு உட்கார்ந்தா, அதுக்குப் பாவம் ஆற்காடு வீராசாமி என்ன பண்ணுவார்!''

''இது மார்க் போடுற சீஸன். தமிழக அரசுக்கு நீங்க எத்தனை மார்க் போடுவீங்க..?''

''மார்க் போடுற அளவுக்கு இவங்க ஒண்ணும் பெருசா சாதிச்சுடலை. சொல்லப்போனா இங்கே ஒரு மாற்றம் ரொம்ப அவசியமா இருக்கு. இருந்தாலும், இவுங்களுக்கு 30 மார்க் போடலாம்! ஆனா, இந்த 30 என்பது 'அவுட் ஆஃப் ஹண்ட்ரட்' இல்லை. 'அவுட் ஆஃப் பிட்டி'! அதாவது, பரிதாப அடிப்படையில் போடுற மார்க்!''
( நன்றி: விகடன் )

Read More...

Friday, May 30, 2008

நச் பூமராங்

2004 நச் பூமராங் என்ற தலைப்பில் சில பதிவுகள் வந்தது. 2008 அது தொடர்கிறது..

எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் சமாளிப்பது என் அன்றாடப் பணிகளில் ஒன்றாகி விட்டது. முதலில் சர்ச்சைகள் வரும். பின்பு அதுவே சாதனைகளாகும். - அன்புமணி

உங்க அப்பானால இப்ப கலைஞரும் இந்த டயலாக் தான் பேசரார்.

தேமுதிக மலர் போன்றது. இங்கு வருபவர்கள் தேனீக்கள். அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் மற்ற கட்சிகளோ சிலந்தி வலைகள் ஆகும். - பண்ருட்டி ராமச்சந்திரன்

நல்லா மாட்டிகிட்டீங்க போல !

அரசியல் என்பது ஒரு தேர்தலோடு நின்று போவதில்லை. - குமாரசாமி

எந்த ஜோசியர் சொன்னார் ?

நான் சும்மா இருக்கேன்னு எல்லோரும் நினைக்கிறாங்க. நான் ஒண்ணும் சும்மா இல்ல. எனது லேப்டாப் மூலமா எல்லாத்தையும் வாட்ச் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். - நடிகர் கார்த்திக்

எங்க வீட்டுக்கு ஒரு வாட்ச் மென் தேவை வரீங்களா ?

பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது தற்கொலைக்கு சமமானது. - ஏ.பி.பரதன்:

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கூட தற்கொலை தான்!

அன்பழகன் இனமான பேராசிரியரே தவிர வருமான பேராசிரியர் அல்ல. - கருணாநிதி

வருமான பேராசிரியர்கள் லிஸ்டை சு.சுவாமியிடம் கேட்க வேண்டும்.

தசாவதாரம் படம் தாமதமாவதால் நாளென்றுக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்படுவதாக தயாரிப்பாளர் கோர்ட்டில் தகவல். - செய்தி

எங்களுக்கு எதற்கு இந்த நியூஸ், கமலுக்கு சொல்லுங்க ?

ஒகேனக்கல் பிரச்சனை யில் தமிழகத்திற்கு சாதக மாக தமிழக பிஜேபி யும், கர்நாடகத்திற்கு சாதகமாக கர்நாடக பிஜேபியும் செயல்படும். - வெங்கையா நாயுடு.

இரண்டு ஊர் சினிமா காரங்களும் சாதகமாக நடந்துக்கொள்வார்களா ?

Read More...

Thursday, May 29, 2008

எல்லோரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் - ஜூன் 2ம் தேதி தேர்வு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் : மாணவர்களுக்கு ஜூன் 2ம் தேதி தேர்வு

தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனை அடுத்து திருவண்ணாமலை, மதுரை ஆகிய இடங்களில் சைவ சமய அர்ச்சகர்களுக்கான பயிற்சியும், ஸ்ரீரங்கத்தில் வைனவ சமய அர்ச்சகர்களுக்கான பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவர்களுக்கான இறுதி தேர்வு வருகிற 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2006ல் கீ.வீரமணி அறிக்கை...

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைந்த ஆட்சியின் சாதனைகள் ஒரு சரித்திர தொடராக, என்றென்றும் வரலாற்றின் வைர வரிகளால் எழுதப்படுபவையாக தொடர்ந்து கொண்டே உள்ளன. அமைச்சரவை கூட்டத்தின் முதல் கூட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் ஆணை நிறைவேற்றப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. அதனைப் பார்த்து பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்பது தான் எனது ஆட்சியின் முதல் குறிக்கோள் என்று அறிவித்த கருணாநிதியின் ராக்கெட்வேக முடிவு கேட்டு, அவர்கள் தொண்டர்கள் மகிழ்ச்சிக் கண்ணீரில் மிதந்து கொண்டுள்ளனர். கருணாநிதிக்கும், அவரது அமைச்சரவைக்கும் நிரந்தர நன்றி என்ற சொல்லைத்தவிர வேறு சொற்களை அகராதியில் தேடிப்பார்க்கிறோம். பார்த்துக்கொண்டே இருக்கிறோம். உலகத் தமிழர்களின் பாராட்டு மழையில் கருணாநிதி ஆட்சி குளித்துக் கொண்டுள்ளது. இந்த துணிந்த முடிவுக்காக திராவிடர்கழகம் பாராட்டு நன்றித் திருவிழாக்களை நாடெல்லாம், தமிழர் வீடெல்லாம் நடத்தும்


இது போல FLASH BACK படிக்க விரும்புகிறவர்கள் இங்கே செல்லவும்

Read More...

தசாவதாரம் படத்திற்கு தடை இல்லை - தீர்ப்பு

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கு எதிராக இரு இந்து அமைப்புகள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லை, எனவே படத்தை திரையிட தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு விவரம்


தசாவதாரம்’ தலைப்புக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. படத்தில் ஓம், பிரணவ மந்திரம், பகவத் கீதை ஆகியவற்றின் மீது கால் வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக மனுதாரர் கூறியிருப்பது கற்பனையானது.

ராமானுஜர் என்ற கதாபாத்திரம் படத்தில் இடம் பெறவில்லை. மனுதாரர் கற்பனையான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதே நேரத்தில் எந்த பிரிவு மக்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் கருத்துரிமையை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது

Read More...

விகடன் சர்வே பற்றி குமுததில் அழகிரி கருத்து!

குமுதம் ரிப்போட்டரில் வந்த அழகிரி பேட்டி.


முன்பு ஒருமுறை மாறன் சகோதரர்களுடன் ஒட்டோ உறவோ கிடையாது எனக் கூறியிருந்தீர்கள். இப்போது எப்படி?

``என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே நிதானமாக முடிவெடுப்பவன். எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவன். அதே நேரத்தில் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ண மெல்லாம் எனக்குக் கிடையாது. நான் என் கருத்துக்கு உடன்படா தவர்களிடம் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன். அவ்வளவுதான். மாறன் சகோதரர்களுடனான என் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது. அதுமட்டுமில்லாமல், அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்களுடன் கூட நான் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன்.''

சமீபத்தில் ஓர் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் `மாறன் சகோதரர்களுடன் நல்லுறவு தொடர்ந்திருந்தால் முதல்வருக்குக் கூடுதல் பலமாக இருந்திருக்கும்' எனக் கூறப்பட்டுள்ளதே?

`தலைவருக்கு எப்படி இது போன்ற கருத்துக்கணிப்புகளில் உடன்பாடு கிடையாதோ, அதுபோல எனக்கும் கருத்துக் கணிப்பு களில் நம்பிக்கை கிடையாது. வாழ்நாளெல்லாம் பொதுவாழ்க் கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கலைஞர். இன் றைக்கு இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். மத்தியில் தேசிய அளவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போது, தலைவர் கலைஞரின் கருத்தும் கேட்கப் படுகிறது. அதற்கு முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. அப்படிப் பட்ட ஒரு தலைவருக்கு, சிலரது உறவு தொடர்ந்தால் கூடுதலான பலமாக இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதே வேடிக்கையாக இருக்கிறது. `அவர்களுடன் நல்லுறவு தொடர்ந் திருந்தால் முதல்வருக்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும்' என்பதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்களுடன் சேர்ந்திருந்தால் பலம் குறையுமே தவிர, அதிகரிக்காது. இது கருத்துக் கணிப்பாகத் தெரியவில்லை. கருத்து உருவாக்கமாகவே தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல், இப்போதைய சூழலில் முதல்வர் தனது பொறுப்புகளை சீனியருடன் பகிர்ந்தளிக்கலாம் எனக் கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அமைச்சரவையில் இடம்பெற் றுள்ள இளம் வயது அமைச்சர்கள் சிலரை விட கலைஞர் சுறுசுறுப்புடன் மக்கள் பணியாற்றி வருகிறார் என்பதை உடனிருப் பவர்களும் அறிவார்கள். மக்களுக்-கும் தெரியும்''

தா.கிருட்டிணன் கொலை வழக்குத் தீர்ப்பைத் தொடர்ந்து உங்கள் இமேஜ் உயர்ந்திருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்றும் கூட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டி ருக்கிறதே?

``ஆரம்பத்திலேயே கூறிவிட்டேனே.. எனக்கு இந்தக் கருத்துக் கணிப்பிலெல்லாம் உடன்பாடு கிடையாது என்று. இன்னும் சொல்லப்போனால் அந்த வழக்கு என்பது கழகத்துக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அரசால் தொடரப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என மக்கள் அறிவார்கள். நாங்கள் நிரபராதி என மக்களுக்குத் தெரியும். அதனால் தான் வழக்கை பொருட் படுத்தாமல் கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு மக்கள் வாக்களித்தார்கள். அதன் பிறகு நான் பொறுப்பேற்று நடத்திய மதுரை மேற்கு, மத்திய தொகுதி இடைத்தேர்தல்களில் கழகத்துக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் தந்தார்கள். இந்த இடைத்தேர்தல் களின் வெற்றிக்கு கலைஞர் அரசின் சாதனைகள்தான் காரணம் என்றாலும் தேர்தல் பணிகளை நான் முன்னெடுத்துச் செய்தேன். என்மீது மக்களுக்குச் சிறிதளவு ஆத்திரம் இருந்தாலும் அதை வாக்குச்சீட்டில் காண்பித்திருப்பார்கள். ஆனால், அந்த இடைத் தேர்தல் இரண்டிலும் தி.மு.க. அணி வேட்பாளர்கள் முப்பதாயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றனர். மதுரை மக்களுக்கும் கட்சியின ருக்கும் என்மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. நானும் அவர்கள் நம்பிக்கைக்கு என்றும் பாத்திரமானவனாக இருந்து வருகிறேன். அப்படியிருக்கை-யில் என் இமேஜ் உயர்ந்திருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனக் கருத்துக் கணிப்பில் கூறப்-பட்டிருப்பது விஷமத்தனமானது.''

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி என்பதை தேர்தலில் போட்டியிட்டு வென்றால் பரிசீலிக்கலாம்.. என்றும் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளதே?

(சற்று கோபமாக) ``தேர்தலில் போட்டியிடாமல் சிலர் ராஜ்யசபா எம்.பி.யாகி மத்தியில் அமைச்சராகவில்லையா? இந்த சர்வேயை தூண்டிவிட்டவர்களுக்கே அது தெரியுமே.''

வழக்கு முடியட்டும் எனக் கருதியோ என்னவோ நீங்கள் நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்தீர்கள். இனி எப்படி?

``நீங்கள் என்ன கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை. தி.மு.க.வின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் என் பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை. கட்சிப்பணிகள் ஆகட்டும் பொதுத்தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகட்டும் நான் களமிறங்கி பம்பரமாகச் சுற்றி வந்திருக்கிறேன். அதே நேரத்தில் லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவனாகவே பணியாற்றினேன். எந்த வெற்றியிலும் என் முகம் தெரிய வேண்டும் எனப் பணியாற்றியதில்லை. கழகமும் கலை ஞரும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தில்தான் என் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் நேரடி அரசியலில் நான் இல்லாதது போல கேட்கிறீர்களே.?''

நீங்கள் சென்னையை மையமாக வைத்து அரசியலில் ஈடுபடப் போகிறீர்கள் என்ற பேச்சு உள்ளதே?

``சென்னையை மையமாக வைத்து நான் செயல்படப்போவதாகப் பேச்சு உள்ளதா? எது எப்படியோ, எப்பவும் என்னை மையமாக வைத்துப் பேசுவது என்பதே சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. மதுரையையும் வைகை நதியையும் எப்படி பிரித்துப் பார்க்க முடியாதோ, அதுபோல என்னை மதுரையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. நான் என்றும் மதுரை மக்களுக்கு உரியவன்.''


தற்போது தி.மு.க. உள்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. உங்கள் ஆதரவாளர்களுக்கு அதிக பொறுப்பு களைப் பெற்றுத் தருவீர்களா?

``எனது ஆதரவாளர்-கள் எனக் குறிப்பிடாதீர்கள். அனைவரும் கலை ஞரின் ஆதரவாளர்கள். கட்சித் தேர் தல் ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது. தகுதியான வர்களை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்து வருகிறார்கள். இதில் யார் குறுக்கீடும் இருக்காது. கட்சிக்-காக மெய் வருத் தம் பாராமல் கண்துஞ்சாது பணியாற்றுபவர்கள் பதவியையும் பொறுப்புகளையும் பெறுவார்கள்.''

வழக்கிலிருந்து விடுதலையானதும் உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் படத்துக்கு பாலாபிஷேகம் நடத்தினார்களே?

``அது எனக்குத் தெரியாது. என்மீது கொண்ட அதிகமான அன்பால் இது போன்று செய்திருக்கலாம். என்றாலும் அதுமாதிரியான செயல்களில் எனக்கு உடன்பாடில்லை. எந்தச் செயலும் மக்களுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும்.. அதே நேரத்தில் தங்கள் கட்சித் தலைவிக்காக சிலர் வேப்பிலை ஆடை அணிந்ததையும் மண் சோறு சாப்பிட்டதையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.''

இரண்டாண்டு கால தி.மு.க. ஆட்சி குறித்து உங்கள் கருத்தென்ன?

``தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றியது மட்டுமல்ல. மக்கள் நலனுக்காக நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் கலைஞர் அவர்கள். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் மகிழ்வுறும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசின் ஒவ்வொரு துறையும் மக்களுக்-காக இயங்கிக் கொண்டிருப்பதை இந்த ஆட்சியில்தான் பார்க்க முடிகிறது என நடுநிலையாளர்களே கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கலைஞர் தேர்தல் நேரத்தில் அறிவித்து நிறைவேற்றிவரும் நியாயவிலைக்கடையில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற திட்டங்களை தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் உள்ள கட்சித் தலைவர்-களும் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறார்கள். சுருங்கச் சொன்னால் தமிழகத்தில் இரண்டாண்டுகாலமாக பொற் கால ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது...'' என்றார் அழகிரி.
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

Read More...

திமுகவின் கிரிமிலேயர்

நேற்று அர்ஜுன்சிங், திடீர் சென்னை வருகை. காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிணக்கை தீர்க்க முதல்வரின் உதவியை நாடி தான் அவர் சென்னை வந்திருப்பதாக செய்திகள் வந்தது.

ஆனால் அர்ஜுன் சிங் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் வருவதையடுத்து அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். இதுதான் நான் இங்கு வந்ததற்கான உண்மையான காரணம் என்றார். அப்ப நிச்சயம் இது உண்மையான காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. போகட்டும்.

அர்ஜுன்சிங்கை கனிமொழி எம்.பி., அமைச்சர் பொன்முடி ஆகியோர் வரவேற்றனர் ஆனால் ஸ்டாலின் மிஸ்ஸிங். ஸ்டாலின் தற்போது பெங்களூர் சென்றுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் கலைஞர் ஆஸ்பத்திரியில் இருந்த போது, முதல்-அமைச்சருக்கு குடும்ப நெருக்கடி அதிகமாக இருப்பதாக எல்லா பத்திரிக்கையிலும் வந்துவிட்டது. ஜூவி சர்வேயே நடத்தியது.

இன்று வந்த டைம்ஸ் செய்தியில் ஸ்டாலின் ரெஸ்ட் எடுக்க பெங்களூர் சென்றுள்ளார் கலைஞர் பிறந்த நாள் விழாவிற்கு வருவாரா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அழைப்பிதழ்களிலும் அன்பழகன், ஆர்காடு வீராஸ்வாமி பெயர் தான் இருக்கிறதே தவிற, ஸ்டாலின் பெயர் மிஸ்ஸிங் என்றும் சொல்லியுள்ளது

மாறன் குடும்பத்தின் பண பலம், மீடியா பலம் அடுத்த தேர்தலுக்கு உதவும் என்ற நம்பிக்கையில், மீண்டும் நல்லுரவு வைத்துக்கொள்ள ஸ்டாலின் ஓ.கே சொல்லிவிட்டார். ஆனால் அழகிரி அதற்கு சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஸ்டாலினுக்கு பெரிய பதவி கொடுப்பதில் கலைஞர் ஜவ்வு மாதிரி இழுப்பதற்கு குடும்ப பிரஷர் தான் காரணம் என்றும் தெரிகிறது.

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் அவர் ஸ்டாலினைவிட ஒரு படி மேலே சென்றுவிடுவார்( As per the protocol ), அதனால் கொடுக்கவில்லை என்றும் சொல்லபடுகிறது.

கடந்த சில மாதங்களாக கனிமொழி, ஸ்டாலின், அழகிரி ஆகியோரின் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த மாதிரி ஸ்டாலின் ரெஸ்ட் எடுக்க செல்லுவது தமிழ் நாட்டுக்கு புதுமை இல்லை மூன்பே தாய்லாந்து சென்றார், பிறகு கோவா சென்றார், இப்ப பெங்களூர்.

கிரிமிலேயரோ, கிருமிலேயரோ கலைஞர் அவர்கள் குடும்பதிலிருந்து ஆரம்பிப்பது நல்லது.

Read More...

Tuesday, May 27, 2008

சினிமா புதிர்

கீழே உள்ள பாடல் மியூஸிக் எந்த பாடல் மாதிரி இருக்கு. தெரிந்தவர்கள் கமெண்ட செய்ய தேவையில்லை :-)


Read More...

தமிழ் சந்து கும்மி

பல நண்பர்கள் நகைச்சுவை கொஞ்சம் வரம்பு மீறி இருக்கிறது என்று சொன்னதால், இந்த பதிவை நீக்குகிறேன்.

இந்த பதிவால் உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். ...

Read More...

டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டல் - என்ன நடக்கிறது ?

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டல் செயல்பட்ட 38 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. கொஞ்சம் நாளாக டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் செய்தி நாளிதழ்களில் வந்துக்கொண்டு இருக்கிறது. இன்று வந்த தினத்தந்தி செய்தி.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் வேளாண் தோட்டக்கலை சங்கம் என்ற அமைப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த அமைப்பு, டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டலை நடத்த ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை உள்குத்தகைக்கு விட்டிருந்தது. அந்த இடத்தில் டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு அனுமதியுடன், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டல் மூடப்பட்டது. இந்த நிலத்தில், உலக தரத்துடன் சிறப்பு வேளாண் தோட்டக்கலை பூங்கா அமைக்க போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே, தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து வேளாண் தோட்டக்கலை சங்கம் சார்பில் அதன் கவுரவ செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். இம்மனு நிலுவையில் இருக்கும் நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

எனவே, தமிழக அரசுக்கு எதிராக இதே கோரிக்கையை வலியுறுத்தி, வி.கிருஷ்ணமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் கவுரவ செயலாளர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவனாக அறியப்பட்டவன். இந்த 38 ஏக்கர் நிலம், கடந்த 180 ஆண்டுகளாக வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்தது. நகரில் தூய்மையான காற்று வீசவும், பசுமையான சுற்றுச்சூழல் நிலவவும், வேளாண் தோட்டக்கலை சங்கம் சார்பில் இந்த நிலத்தில் நூற்றுக்கணக்கான அரிய மரங்களும், மூலிகை தாவரங்களும், பூக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், என் மீதான வெறுப்பில் இந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு முயன்று வருகிறது. இந்த இடத்தில் வேளாண் தோட்டக்கலை பூங்கா அமைக்கப் போவதாக தமிழக அரசு கூறுகிறது. இந்த போர்வையில், நிலத்தை கையகப்படுத்தி, என்னை துன்புறுத்த முயற்சிக்கிறது. தமிழக அரசின் இந்த தீய நோக்குடைய, தன்னிச்சையான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடைக்கால தடை

இந்த மனு, நீதிபதிகள் சி.கே.தாக்கர், எல்.எஸ்.பாண்டா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவோ, எந்தவகையிலும் மாற்றி அமைக்கவோ கூடாது என்று நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

அதே சமயத்தில், நிலத்தை மாற்றி அமைப்பதில்லை என்ற நிபந்தனையுடன், வேளாண் தோட்டக்கலை பூங்கா அமைப்பதற்கு டெண்டர் கோரும் பணியை தொடர நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் மீண்டும் திறப்பு

Read More...

ஜோதிடத்தை நம்பியதால் காங்கிரசுக்கு தோல்வி - கி.வீரமணி

கர்நாடக தேர்தலில் ஜோதிடத்தை நம்பியதால் காங்கிரசுக்கு தோல்வி கி.வீரமணி அறிக்கை

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. 2004-ம் ஆண்டு தேர்தலைவிட காங்கிரஸ் 15 இடங்களை கூடுதலாக பெற்ற போதிலும், பா.ஜ.க.வைவிட அதிக இடங்களை பெறத் தவறியதால் கர்நாடகத்தில் காவிக் கறையை ஆட்சிப் பீடத்தில் ஏற்றியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றபோது, தேவகவுடா குடும்பத்தினருக்கு எதிராக பெண் வேட்பாளர்களை நிறுத்தினால், அவர்களை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று ஜோதிடர்கள் கணித்ததை காங்கிரஸ் கட்சி ஏற்றது.

அதன்படி, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியை எதிர்த்து ராமகிருஷ்ண ஹெக்டே மகள் மம்தாவை நிறுத்தியும், மற்றொரு மகனான ரேவண்ணாவுக்கு எதிராக பெண் வேட்பாளர் அனுபமாவை நிறுத்தினார்கள். ஆனால், காங்கிரஸ் பெண் வேட்பாளர்கள் எளிதில் தோற்றுவிட்டனர்.

அரசியல் கொள்கைகளை செயல்படுத்தவும், மக்களிடம் செல்வாக்குப் பெற்று தொண்டால் சிறந்தவர்களையும் தேர்வு செய்வதை விடுத்து, ஆலமர ஜோதிடர்களை நம்பியதே, கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏற்றாததற்கு முக்கிய காரணம் ஆகும்.

இந்த செய்திக்கு பெண்கள் என்ன நினைக்கிறார்கள் ?
( படம்: பி.ஜே.பி வெற்றியை கொண்டாடும் பெண்கள் )

Read More...

`தசாவதாரம்' படத்தை ஜார்ஜ் புஷ் பார்க்கிறார்

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த `தசாவதாரம்' படத்தை ஜார்ஜ் புஷ் பார்க்கிறார் `சப்-டைட்டிலுடன்' ஒரு பிரிண்ட் அமெரிக்கா போகிறது

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த `தசாவதாரம்' படம், ரூ.60 கோடி செலவில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தில் கமலஹாசனுடன், அசின், பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். நெப்போலியன், முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

கமலஹாசனின் 10 வேடங்களில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்சும் ஒன்று. கோவில் அர்ச்சகர், 8 அடி உயர மனிதர், கறுப்பான தொழிற்சங்க தலைவர், 3 அடி உயரத்தில் 90 வயது பாட்டி ஆகிய வேடங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.

ஜார்ஜ்புஷ் வேடத்தில் கமலஹாசன் நடித்து இருப்பதை, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பார்த்தால் படத்துக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கருதினார்கள்.

அமெரிக்காவில் உள்ள லூசியானா கவர்னர் மூலம் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. (லூசியானா கவர்னர், இந்தியாவை சேர்ந்தவர்.) `தசாவதாரம்' படத்தை பற்றிய குறிப்புகளும், டிரைலரும் லூசியானா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர் மூலம் ஜார்ஜ் புஷ், `தசாவதாரம்' படத்தை பார்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக, `தசாவதாரம்' படத்தின் ஒரு பிரிண்ட், ஆங்கில சப்-டைட்டிலுடன் தயாராகி இருக்கிறது. அந்த பிரிண்ட், ஜார்ஜ் புஷ் பார்ப்பதற்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறது.

இதேபோல் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் பார்ப்பதற்காக, சப்-டைட்டிலுடன் இன்னொரு பிரிண்ட் ஹாங்காங் அனுப்பி வைக்கப்படுகிறது
( நன்றி: தினத்தந்தி )

அப்படியே ஒரு பிரிண்டை தமிழ் சப்-டைட்டிலுடன் நம்ம ராமகோபாலனுக்கு அனுப்புங்க சார் :-)

Read More...

Monday, May 26, 2008

எச்சரிக்கை மணி - ஜாக்கிரதை!

ஏச்சரிக்கை மணி, ஜாக்கிரதை! தினமணி தலையங்கம்.

எதிர்பார்ப்புகளை பொய்யாக்குவது என்பதில் இந்திய வாக்காளர்கள் சமர்த்தர்கள். குஜராத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் கருத்துக் கணிப்புகளையும், பத்திரிகைச் செய்திகளையும் பொய்யாக்கி ஏறத்தாழ தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றியை அளித்திருப்பது என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு கட்டியம் கூறும் விதமாக அமைந்திருக்கிறது.

வடமாநிலங்களில் மட்டும் சக்திவாய்ந்த அரசியல் கட்சியாக இருந்த பாஜக, ஏனைய பகுதிகளில், குறிப்பாக தென்னிந்தியாவில் மாநிலக் கட்சிகளின் துணையோடுதான் வெற்றி பெற முடியும் என்கிற நிலைமைக்கு கர்நாடகத் தேர்தல் முடிவு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தனது சொந்த பலத்தில் தென்னிந்தியாவிலும் ஆட்சி அமைக்க முடியும் என்கிற வளர்ச்சியை இந்தத் தேர்தல் மூலம் பாஜக பெற்றிருக்கிறது.

கர்நாடகத்தில் பாஜகவின் வெற்றிக்கு எத்தனையோ காரணங்களைக் கூறலாம். தேவ கௌடா தலைமையிலான ஜனதா தளம் நடத்திய அரசியல் பேரங்களும், பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நடத்திய நாடகங்களும் பாஜகவுக்கு இந்த வெற்றியில் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தன என்றே கூற வேண்டும். ஒப்பந்தம் செய்துகொண்டபடி குமாரசாமி பதவி விலகி எடியூரப்பாவை முதல்வாராக்கியிருந்தால், கூட்டணியும் பலமாகியிருக்கும், இப்படி ஒரு தேர்தலுக்கும் தேவை இருந்திருக்காது.

அந்தக் கூட்டணி அரசு கவிழ்ந்ததும், அதிக இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருந்தால், தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா ராஜிநாமா செய்து தேர்தலுக்கு வழிகோலியிருப்பார். ஆளுநரை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு சிபாரிசு செய்ய வைத்து, அதன் மூலம் எடியூரப்பாவுக்கும் பாஜகவுக்கும் மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுத்த பெருமை காங்கிரûஸயே சாரும்.

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு மேலும் வலுவூட்டிய விஷயம், காங்கிரஸýம், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பரஸ்பரம் மற்றவரைப் பலவீனப்படுத்திக் கொண்டது. மகாராஷ்டிர ஆளுநராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணாவை பிரசாரத்தில் இறக்கி, தேவ கௌடாவின் கட்சிக்கு அஸ்திவாரமான "ஒக்கலிகர்' வாக்குகளை காங்கிரஸ் சிதறடித்தது. தனது பங்குக்கு தேவ கௌடாவோ சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து காங்கிரûஸ பலவீனப்படுத்தினார். போதாக்குறைக்கு காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிகள், டிக்கெட் கிடைக்காத கோபத்தைத் தங்களது கட்சி வேட்பாளர்களைத் தோல்வி அடையச் செய்து, பழி தீர்த்துக் கொண்டனர்.

இந்த ஆட்சியை பாஜக எப்படித் தக்கவைத்துக் கொள்ளப் போகிறது என்பதையும், எப்படி ஆட்சி நடத்தப் போகிறது என்பதையும் பொறுத்துத்தான் அண்டை மாநிலங்களில் அதன் வளர்ச்சி அமையும். காங்கிரûஸ போலல்லாமல், தன்னை ஓர் உண்மையான தேசியக் கட்சியாக நினைத்து, அண்டை மாநிலங்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து நடந்தால் மட்டும்தான், பாஜகவின் இந்த வெற்றி மற்ற மாநிலங்களிலும் அந்தக் கட்சியின் வளர்ச்சிக்கு வழிகோலும்.

ஒகேனக்கல் பிரச்னை மூலம் கர்நாடக மாநில மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயன்றவர் என்கிற அவப்பெயர் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவுக்கு ஏற்கெனவே உண்டு. ஆட்சியைப் பிடித்த பிறகும் அதே மனநிலையில் அவர் தொடர்வாரேயானால், அதன் விளைவுகள் மிகவும் விபரீதமாக இருக்கும்.

அதேநேரத்தில் தமிழகத்துடன் சமாதானமாகப்போவது என்கிற முடிவை எடியூரப்பாவும் பாஜகவும் எடுக்க முயற்சித்தால், அதை மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸýம் அனுமதிக்குமா என்பதும் சந்தேகம்தான். எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து, தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள காவிரி மற்றும் ஒகேனக்கல் பிரச்னைகளில் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் எடியூரப்பா நிச்சயம் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்க முடியாது.

கர்நாடக மக்களைப் பொருத்தவரை, ஒரு நிலையான ஆட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள். அண்டை மாநிலங்களுடன் சுமுகமான உறவு இல்லாமல் நிலையான ஆட்சி அமையாது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பில்லாத, கர்நாடக மாநிலம் முழுவதும் சமச்சீர் வளர்ச்சி ஏற்படுத்துகிற ஆட்சியாக எடியூரப்பாவின் தலைமையில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு.

ஆமாம், காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம்? விலைவாசி உயர்வும், மத்திய அரசின் மீதான அதிருப்தியும்தான் காரணமா? குஜராத், இமாசலப்பிரதேசத்தைத் தொடர்ந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது கர்நாடகம், ஜாக்கிரதை!

Read More...

மதம் மாறப் போவதாக வதந்தி :மறுக்கிறார் நடிகை நக்மா

கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக கூறப்பட்ட வதந்தியை, நடிகை நக்மா மறுத்துள்ளார். "நான் ஆன்மிகவாதி. ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சேர்ந்தவள் இல்லை. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்' என, அவர் கூறியுள்ளார். கிறிஸ்துவ மத போதகர் ஒருவர் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு, நக்மா பேசியதாக வெளியான தகவலை அடுத்து, இந்த வதந்தி பரவியது.இதை நக்மா மறுத்துள்ளார்.

கிறிஸ்துவ மதம் பற்றி அறிந்து கொள்வதற்காக, அதுகுறித்த தகவல்களை படித்தேன். அப்போது, அந்த அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டது. நற்செய்தி கூட்டத்திற்கு வரும்படி என்னை அழைத்தனர். மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டேன். இவ்வளவு தான் நடந்தது. அதற்குள், நான், கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக செய்திகள் வெளியாகி விட்டன.நான், ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள பெண். அதற்காக, எந்த ஒரு குறிப்பிட்ட மத முத்திரையும் என் மீது குத்தப்படுவதை,விரும்பவில்லை. அனைத்து மதங்களுக்கும் பொதுவானவள். மத மாற்றம் தொடர்பான விஷயங்களில் எல்லாம், எனக்கு நம்பிக்கை இல்லை. யாரையும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்த முடியாது.எனது தாயார், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். தந்தை இந்து. நான், கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தேன். கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தேன். எனது குடும்பத்தினர், அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். பகவத் கீதை, குரான், பைபிள் என, அனைத்தையும் படிக்கிறேன். மத சார்பற்ற பெண், என கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். மதபோதகராகும் திட்டம் எதுவும் இல்லை. நடிகையாவேன் என்று கூட நினைத்தது இல்லை. எனது எதிர்காலம் பற்றி, கடவுளுக்கு மட்டுமே தெரியும். கடவுள் தான், அதை முடிவு செய்ய வேண்டும். கடவுளைத் தேடி, எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார். இவ்வாறு நக்மா கூறினார்.
(நன்றி: தினமலர்)
தொடர்புடைய பழைய செய்தி:

Read More...

கர்நாடக தேர்தலில் அதிக பணப்புழக்கம் -

கர்நாடகா யாருக்கு என்ற இட்லிவடை 'எக்ஸிட் போலில்' படம் :-)

இனி செய்திகள்...
கர்நாடக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளிடையே அதிக அளவிலான பணப்புழக்கம் இருந்ததாக தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்தார்.

தொகுதி சீரமைப்பு அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் கட்-அவுட், சுவரொட்டி வாகன ஊர்வலம் என பல்வேறு பிரசாரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

எனினும், தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிகளையும் மீறி அதிக அளவிலான பணப்புழக்கம் நடமாடியதாக புகார்கள் எழுந்தன. தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் நேற்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கோபாலசாமி, `கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த தேர்தலில் விதி மீறல்கள் சிறிய அளவிலேயே இருந்தன. ஆனால், மிக அதிகமான அளவில் பணப் புழக்கம் இருந்தது. இதை தேர்தல் ஆணையத்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. கணக்கில் காட்டப்படாத பணம், கறுப்பு பணம் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வரை இது போன்ற பண புழக்கத்தை தடுக்க முடியாது' என்றார்.


கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர் வாட்டாள் நாகராஜ். இவர் நடத்தும் போராட்டங்களில் ``கர்நாடகத்தை விட்டு தமிழர்கள் வெளியேற வேண்டும்'' என்று அடிக்கடி கூறுவது வழக்கம். இந்த தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்றது என்ற நல்ல செய்தியுடன், வாட்டாள் நாகராஜ். டெபாசிட் இழந்தார் என்ற போனஸ் செய்தியுடன் இந்த பதிவை முடிக்கிறேன் :-)


Read More...

Sunday, May 25, 2008

பி.ஜே.பி வெற்றி

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது. தென்னகத்தில் பா.ஜ.கவின் முதல் வெற்றி இது. காங்கிரஸ் நிஜமாகவே பயபட வேண்டும்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பா.ஜ., கூறியுள்ளது. ( நீங்க இன்னும் திருந்தவே இல்லையா ? )

மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்ப‌ மெய்லி கருத்து தெரிவித்துள்ளார். ( இது எல்லாம் காமெடி கண்டுக்காதீங்க )

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுடன் கூட்டணி ஆட்சி கிடையாது என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கூறி இருக்கிறார். ( யாராவது உங்களுடன் வருவார்களா முதலில் )

ஜனதா தளத்தால்தான் பா ஜக வெற்றி பெறுகிறது - வீரப்ப மொய்லி
ஜனதா தளம் ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல - காங்கிரஸ்
113 கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சியாக அமர்வோம் - பாஜக


தற்போதைய நிலவரம்:
BJP 110
CONG 80
JDS 28
Others 6

Read More...

கர்நாடகா யாருக்கு ?

நிலவரம் Twitter'ல் அப்டேட் செய்யப்படுகிறது சைடில்....
கர்நாடக சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடந்தது.
இங்கு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 224. காங்கிரஸ், பாரதீய ஜனதா மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சி கள் தனித்தனியாக போட்டியிட்டன.
மொத்தம் 2242 வேட் பாளர்கள் களத்தில் இருந்தனர். பாரதீய ஜனதா 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் 222 தொகுதிகளிலும் மதசார் பற்ற ஜனதாதளம் 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. 943 சுயேட்சைகளும் போட்டியிட்டன.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. எலெக்ட்ரானிக் எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடந்து இருப்பதால் முதல் 2 மணி நேரத்துக்குள்ளேயே அனைத்து தொகுதி முன்னணி நிலவரங்கள் தெரிந்து விடும். மதியத்துக்குள் அனைத்து தொகுதி முடிவுகளும் வந்து விடும்.

தேர்தலில் பாரதீய ஜனதா காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்புப்படி பாரதீய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும். ஆனாலும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று தெரியவந்தது.


2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 79 இடங்களிலும் காங்கிரஸ் 65 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 58 இடங்களிலும் வெற்றி பெற்றது.

பின்னர் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இடையில் பிரச்சினை ஏற்பட்டு மதசார் பற்ற ஜனதாதளம் தனியாக பிரிந்தும் பாரதீய ஜனதாவும் மதசார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. முதலில் மதசார் பற்ற ஜனதாதளமும், அடுத்து பாரதீய ஜனதாவும் ஆட்சியை பகிர்ந்து கொள்வது என்ற முடிவு எடுத்தனர். ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி முடிந்த பிறகு அந்த கட்சி பாரதீய ஜனதா ஆட்சிக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டது. இதனால் ஆட்சி கவிழ்ந்து இப்போது தேர்தல் நடந்துள்ளது.

நிலவரம் Twitter'ல் அப்டேட் செய்யப்படுகிறது சைடில்....

Read More...

Saturday, May 24, 2008

வெட்கக்கேடு 1, 2, 3, 4, 5 - ஞாநி

இந்த வார குமுதத்தில் வந்த ஞாநியின் ஓ-பக்கங்கள்.

வெட்கக்கேடு 1

பூங்கோதையின் அமைச்சர் பதவி நிலைக்குமா , அவர் பதவி விலகலை கலைஞர் ஏற்றுக் கொண்டு விடுவாரா மாட்டாரா என்று ஒரு நண்பர் என்னிடம் ஆரூடம் கேட்டார். என்ன ஆனாலும் டி.ஆர்.பாலுவின் பதவி நிலைக்கும் என்று அடித்துச் சொல்வது போல இதில் எதையும் நிச்சயமாகச் சொல்லமுடியாது என்றேன். பாலு பதவி மட்டும் நிலைக்கும் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று கேட்டார் நண்பர்.

`என் மகனின் கம்பெனிக்காக பிரதமர் அலுவலகத்திலும் பெட்ரோலி யத்துறை அதிகாரிகளிடமும் சிபாரிசு செய்தேன். அதில் என்ன தவறு? என்று டி.ஆர்.பாலு கேட்டதை, வெட்கக் கேடானது என்று கலைஞர் சொல்லவில்லை என்பதுதான் காரணம் என்றேன். கலைஞரின் அகராதி யில் எதெல்லாம் வெட்கக்கேடானது, எதெல்லாம் வெட்கக் கேட்டுக்கு அப்பாற்பட்டது என்று இருக்கும் வரையறைகளை ஆராய்ச்சி செய்தால் குழப்பம்தான் மிஞ்சும்.

எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் 1972-ல் கலைஞர் மீது ஊழல் புகார்கள் வைத்தபோது அவற்றுக்கு ஐட்டம் வாரியாக பதில் அளிக்கையில், ஒரு குறிப்பிட்ட வீடு யாருக்குச் சொந்தம் என்ற கேள் விக்கு, `என் மகள் கனிமொழியின் தாயார்' என்று பதில் தரவேண்டிய நிலையில் தன்னைத் தானே வைத்துக் கொள்ள நேரிட்டது அவருக்கு வெட்க உணர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

தமிழால் மட்டுமே வாழ்க்கை முழுக்க தன் பிழைப்பை நடத்தி வந்திருக்கும் அவருக்கு, இன்று தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தமிழை மொழிப் பாடமாகக் கூடப் படிக்கத் தேவையில்லை என்று தன்னுடைய ஆட்சியிலேயே முடிவெடுக்கப்படுவது வெட்கக்கேடான விஷயமாகப் படவில்லை.

திருப்பூரிலும் ஈரோட்டிலும் நகரத்தையும் ஆற்றையும் மாசுபடுத்தி சூழலைக் குட்டிச் சுவராக்கியிருக்கும் சாய ஆலை, ஜவுளி ஆலை அதிபர்கள் எல்லாருமாகச் சேர்ந்து திருப்பூர் நகரத்தின் தி.மு.க மேயருக்கு தங்க மாலை அணிவிப்பது முதலமைச்சருக்கு வெட்கக்கேடான விஷயமாகப் படவில்லை. கலைஞருடைய 50 வருடப் பொது வாழ்க் கையில் இதுவரை அவர் வெட்கக்கேடானது என்று வேறு எதையும் வர்ணித்ததில்லை. பூங்கோதைக்கு மட்டுமே அந்த கௌரவம் கிட்டியி ருக்கிறது.

கீழ் முதல் மேல் வரை நூற்றுக்கு நூறு அப்பழுக்கற்ற மகாத்மாக்கள் மட்டுமே நிறைந்திருக்கும் தன் கட்சியில், ஒற்றை பூங்கோதை மட்டும் களங்கம் ஏற்படுத்திவிட்டதுதான் அவருக்கு வெட்கக்கேடானதாக இருக்கிறது. அது கூட ஒரு சில வாரங்களில் வெட்கத்துக்கு அப்பாற் பட்டதாக ஆகிவிடலாம். ஏனென்றால் ஞாபக மறதி என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், மனிதனால் நிம்மதியாக வாழமுடியாது என்ற அரிய தத்துவத்தை சில வருடங்கள் முன்பு சொன்னவரும் அவர்தான்.

வெட்கக்கேடு 2

"என் மனநிலை கருதியும் உடல்நிலை கருதியும் (ஜூன் 3 பிறந்த நாளன்று) வாழ்த்துக்களை ஏற்றிடும் பணியிலிருந்து எனக்கு விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டுமென்று உற்ற நண்பர்களையும் உயிரனைய உடன்பிறப்புக்களையும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளே கடும் கழுத்து வலி, முதுகு வலியினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறச் சென்றார்.

ஓரிரு தினங்கள் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் என்ன நடந்தது? மருத்துவமனையில் வாராது வந்த மாமணியான பேரன் தயாநிதி மாறன் முதல் பல கட்சி அரசியல் பிரமுகர்களையும், வீடு திரும்பியதுமே, உற்ற நண்பரான சோ ராமசாமி முதல் மத்திய மாநில அமைச்சர்கள் வரையிலும் சந்தித்து நலம் விசாரித்ததை அனுமதித்தார்.

கலைஞருக்கிருக்கும் அதே கழுத்து வலியும் முதுகு வலியும் எனக்கும் உண்டு என்பதால், அதன் வேதனையை நான் நன்றாகவே அறிவேன். யாராவது வந்தால், எப்போது போய்த் தொலைவார்கள் என்று உள்ளுக்குள் எரிச்சலை ஏற்படுத்தும் வலி கழுத்து வலி. உட்கார்ந்தால் நிற்கத் தோன்றும். நின்றால் படுக்கத் தோன்றும். படுத்தால் வலி அதிகமாகி எழுந்து நடக்கத் தோன்றும். வலியினால் படுத்துத் தூங்க முடியாமல் இரவெல்லாம் நடந்து நடந்து களைத்தபின்னே தூக்கம் வந்து காலையில் படுத்த நாட்கள் பல.

இவ்வளவு கொடுமையான வலிக்கான சிகிச்சை வேளையிலும் வீடு திரும்பிய பின்னரும், அவரைப் போய் பார்த்து நலம் விசாரித்தவர்கள் உண்மையில் நண்பர்களே அல்ல. மேலும் அவரை சித்ரவதைப்படுத்தி யவர்கள்தான். அன்பின் பெயரால் கொடுமைப்படுத்துவது என்பது இதுதான். பிறந்த நாளன்றும் இதுதான் நடக்கும்.

இந்த முறை கலைஞருக்கு கடும் வலித் தாக்குதல் ஏற்படுத்தியது எது? சுமார் 40 மணி நேரம் சட்டமன்றத்தில் அவர் விவாதங்களில் பங்கேற்றுப் பேசியதுதான். இப்படிப்பட்ட பணிகளிலிருந்து அவருக்கு ஓய்வு தரப்பட வேண்டும் என்று நான் சொன்னால் உடனே எனக்கு பார்ப்பனீய அர்ச்சனை தொடங்கிவிடும்.

தி.மு.க.வுக்குள் கலைஞர் கருணாநிதிக்கு அடுத்தபடி முதலமைச்சர் பதவி ஸ்டாலினுக்குத்தான் என்பது இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட விஷயம். ஸ்டாலினை முதலமைச்சராக ஏற்க முடியாதவர்களாக இருப்பவர்கள் கட்சிக்காரர்கள் அல்ல. கலைஞர் குடும்பத்தையே சேர்ந்த ஒரு சிலர்தான். ஸ்டாலினை என் தலைவராக ஏற்க நான் தயார் என்று மூத்த தலைவரான பேராசிரியர் அன்பழகன் பகிரங்கமாக அறிவித்தது போல ஒரு போதும் அழகிரியோ கனிமொழியோ தயாநிதியோ சொன்னதில்லை.

இந்த நெருக்கடிதான் கலைஞரின் மன நிலையையும் உடல் நிலை யையும் தொடர்ந்து நலிவுபடுத்தி வருகின்றன. இதுதான் உண்மை. ஸ்டாலினை முதல்வராக்கிவிட்டு, கலைஞர் கட்சித் தலைவராக வேலைப் பளுக்கள் இல்லாமல் வழிகாட்டும் பொறுப்பை மட்டும் மேற்கொள் ளவேண்டிய தருணம் வந்து பல காலமாகிவிட்டது. மீண்டும் மீண்டும் இதை நிரூபிக்கிற, நினைவுபடுத்துகிற தருணங்களாகவே அவரது மருத்து வமனை விசிட்டையும், ஓய்வுக்காக ஏங்கும் அறிக்கைகளையும் கருத வேண்டும். இந்த நிதர்சனமான உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்து என்னை வசை பாடும் வேலைகளில் இறங்கும் சூழல் இருப்பதுதான் வெட்கக் கேடானது.

வெட்கக்கேடு 3

`கூட இருந்தே குழி பறிக்கும் தோழமைகளும்` கலைஞரின் மன வலிக்குக் காரணம் என்று அவருடைய இன்னும் சில அறிக்கைகள் காட்டியிருக்கின்றன. யார் அப்படி குழி பறிப்பது? நாங்கள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி தேவையில்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

டெல்லியில் வேண்டுமானால் குழி பறிக்கும் வல்லமை இடதுசாரிகளுக்கு இருக்கலாம். தமிழகத்தில், குழி என்று சாக்பீசில் போர்டில் எழுதும் பலத்தில் கூட அவர்கள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.

கலைஞரின் ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி 60 மார்க் கொடுத்திருக்கும் அதே நேரத்தில் `நான் எந்த மார்க்கும் போட முடியாது; மக்களே போடுவார்கள்' என்று சொல்லும் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியைத்தான், `கூட இருந்து குழி பறிக்கும் தோழமை'யாகக் கலைஞர் கருதுகிறார் என்பது தமிழக அரசியலில் நேற்று நுழைந்து இன்று வெளியேறிக் கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக்கிற்குக் கூடப் புரியும்.

பாவம் பா.ம.க. அது என்ன செய்யும்? டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிறந்த விமர்சகர்களாக இருக்கும் இடதுசாரிகளால் அதே போல தமிழ்நாட்டில் இருக்க முடியவில்லை. டெல்லியில் எதிர்க்கட்சியாக தொடர்ந்து களத்தில் இறங்கி வேலை செய்யும் பி.ஜே.பிக்கு நிகராக தமிழகத்தில் எதிர்க்கட்சிக் கடமையைச் செய்யும் நிலையில் ஜெயலலிதாவும் அ.தி.மு.க.வும் இல்லை. விசிட்டிங் புரொபசரான சுப்ரமணியன் சுவாமியை நம்பித்தான் ஜெயா டி.வி.யே இயங்க வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இயங்கியாகவேண்டிய சுமை பா.ம.க மீது வந்து விழுந்துவிட்டது. இதைப் போய் கூட இருந்தே குழி பறிப்பது என்று சொல்வது வெட்கக்கேடானது அல்லவா. 2011-ல் உனக்கு என்னிடமிருந்து குழியும் பாலும் நிச்சயம் என்று இப்போதே கூட இருந்து சொல்பவன் நல்லவனா, கெட்டவனா?

வெட்கக்கேடு 4

தெய்வீகச் சிலைகள் மற்றும் தலைவர்களின் சிலைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி, விகாரப்படுத்தி இழிவுபடுத்தி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவோர், மற்றவர்களைக் கலகம் செய்யத் தூண்டுவோர், சாதி மத அடிப்படையில் பல்வேறு பிரிவினரிடையே பகை உணர்ச்சியை வளர்க்க செயல்படுவோர் எல்லாரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மதுரையில் தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புத் தரப்படும் என்று அண்மையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். நாட்டில் மனிதனுக்கு முழு நேரப் பாதுகாப்பு இல்லை. சிலைக்குப் பாதுகாப்பு என்பது எவ்வளவு வெட்கக் கேடானது. இந்த நிலைக்கு தமிழ்ச் சமூகத்தை ஆக்கியது யார்? அம்பேத்கர், காமராஜர், சிங்காரவேலர் போன்ற சாதி கடந்த தலைவர்களையெல்லாம் குறிப்பிட்ட சாதிக்கானவர்கள் என்று கொண்டாடும் சூழல் வந்தது எதனால்?

குண்டர் சட்டத்துக்கான புதிய திருத்தத்தின்படி, மதுரை உத்தப்புரத்தில் ஊரைப் பிரித்த சுவரை இடித்ததை எதிர்த்து காட்டுக்குப் போய் உட்கார்ந்து கலகம் செய்யும் அத்தனை உயர்சாதியினரையும் கைது செய்யவேண்டும். எப்போதும் மத துவேஷத்தையே பரப்பி வரும் ராம கோபாலன், இந்து முன்னணி1, 2, 3 ஆட்களையெல்லாம் கைது செய்யவேண்டும். இதையெல்லாம் நிச்சயம் அரசு செய்யப் போவதில்லை என்பதால், குண்டர் சட்டத் திருத்தம் என்பதே வெட்கக் கேடானது.

வெட்கக்கேடு 5

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் கோஷ்டி வேறுபாடு களினால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னால் இருக்கும் இரு அம்சங்களும் முக்கியமானவைதான். முதலாவது இயக்குநர்களின் ஈகோ காய்ச்சல்கள்.

சராசரி மனிதனை விட தனக்கு இரண்டு கொம்பு எக்ஸ்ட்ராவாக இருப்பதாக நினைக்கும் மெகா சைஸ் ஈகோ சினிமா இயக்குநர்களுக்கு எப்போதுமே உண்டு. சக இயக்குநரை விட தனக்குக் கூடுதல் கொம்பு இருப்பதாக நினைப்பதும் இதன் தொடர்ச்சி.

இதை விட நம் கவனத்துக்குரிய முக்கியமான அம்சம் இரண்டாவதுதான். இயக்குநர்கள் சங்கம் என்பதில் இயக்குநர்களும் இருக்கிறார்கள். உதவி இயக்குநர்களும் இருக்கிறார்கள். இதுதான் அடிப்படைத் தவறு.

ஒரு தொழிற் சங்கம் என்பதே அதன் உறுப்பினர்களின் வேலை, சம்பளம், உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பே தவிர பொழுதுபோக்கு கிளப் அல்ல. சினிமாவில் உதவி இயக்குநர்களின் வேலைச்சுமை, சம்பளம், சுயமரியாதை எல்லாமே சிக்கலுக்குள்ளாவது தயாரிப்பாளரை விட அதிகம் இயக்குநரால்தான். எனவே இந்த உரிமைகளையெல்லாம் உதவிகளுக்கு சங்கம் யாரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும்? இயக்குநரிடமிருந்துதான். இருவருமே எப்படி ஒரே சங்கத்தில் இருக்க முடியும் ?

இதே நிலைதான் எல்லா உதவிகளுக்கும் எனவே உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி படத்தொகுப்பாளர்கள், உதவி சவுண்ட் இன்ஜினீயர்கள் தனியே உதவியாளர்கள் சங்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் பெப்சி எத்தனை முயற்சித்தாலும், இயக்குநர்கள் சங்க கோஷ்டித் தகராறுகள் தீராது.

தற்போதைய பிரச்னையே இயக்குநர்கள் ஒருபுறமும் `உதவி'கள் ஒரு புறமுமாக எதிரெதிர் கோஷ்டிகளாக இருப்பதால்தான் வந்திருக்கிறது. இது அடிப்படை நோயின் அடையாளம். இதுவே நோய் அல்ல. அசல் பிரச்னைகளை அடையாளம் கண்டு அவற்றை சந்திக்க மறுப்பதுதான் சினிமாவின் சாபக்கேடும் வெட்கக்கேடும்..
( நன்றி: குமுதம் )

Read More...

Friday, May 23, 2008

சென்னையில் ஒட்டகங்கள்

சென்னை நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுவாகக் கழுதைகளும் எருமைகளும் மட்டுமே மனிதர்களுடன் பயணம் செய்யும். ஒரு மாறுதலுக்கு இப்போது ஒட்டகங்கள் அப்பணியை மேற்கொண்டுள்ளன. ராஜஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சம்மருக்கு நாம் ஊட்டி கொடைக்கானல் செல்வது போல், சென்னை வெயிலை அனுப விக்க இந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக யு.என்.ஐ. செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது;-)
படங்கள் கீழே...



Read More...

Thursday, May 22, 2008

இட்லிவடை பதில்கள் - 22-5-08

ரொம்ப நாள் கழித்து திரும்பவும்.

ஜி.சங்கர் கேள்விகள்
1. கமல் தனது படம் வெற்றிபெறுவதற்கு பிராமண கதாபாத்திரங்களை உபயோகப்படுத்துகிறார் என எனக்குப் படுகிறது (அவரின் பெரும்பாலான சமீபத்திய (15) ஆண்டுகளின் மாஸ் வெற்றிப் படங்களில் இது தெரியவரும். அசினுக்கு ஐயங்காராத்து பாஷை சொல்லிக்கொடுத்ததும் அவரேதானாமே ?

பிராமண சம்பந்தம் இல்லாமல் வெற்றி பெருவது கஷ்டம் என்று சொல்ல வரீங்களா ? ஐயங்கார் பாஷையை ஐயங்கார் சொல்லிக் கொடுப்பது தானே முறை !


2. தங்களின் பிரத்யேகத் துறையில் கொடிகட்டிப் பறந்த பலரும் கடைசியில் தமிழ் சினிமாவில் (ஒரு படத்திலாவது) ஐக்கியமாவது புகழுக்காகவா அல்லது பணத்திற்காகவா ? (சுஜாதா, மதன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாலமன் பாப்பையா, ராஜா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி....)

இரண்டுக்கும் தான். முதலில் புகழ், பிறகு பணம். முன்னது கிடைப்பதால் பிரபலம் ஆகிறோம். பின்னது கிடைக்காததால் பிராபலம் ஆகிறோம்!.

3. தினமலர் அந்துமணியின் நிஜ முகம் தெரியும் புகைப்படம் இட்லிவடையில் வெளியாகுமா ? (தினகரனில் போனவருடம் வந்த பாஸ்போர்ட் படம் அல்ல)

நான் அவர்கள் படத்தை போட்டு என் படத்தை அவர்கள் தினமலரில் போட்டுவிட்டால் ? எதற்கு வீண் வம்பு.

4. சமீபகால விவேக் காமெடிகளில் சரக்கு தீர்ந்துவிட்டது போல தெரிகிறதே ? கவுண்டரும் செந்திலும், பின்னர் வடிவேலுவும் பிடித்த மாஸ் இடத்தை விவேக்கால் பிடிக்க முடியாதா ?

அவரது காமெடி தி.க பிரச்சார மேடை போல் இருப்பதால் மக்கள் பழைய காமெடி என்று ஒதுக்கி விட்டார்களோ என்னவோ.

5. குமுதம் பக்தி (மற்றும் அனைத்து குமுதம் குழும பத்திரிக்கைகளும்) வெளியிடுபவர் (தற்போது) ஒரு கிறித்துவர் போலிருக்கிறதே ? இது எப்படி ?

பக்தி என்பது எல்லா மதங்களுக்கும் பொது என்று நினைத்திருக்கலாம். குமுதம் பக்தியில் பத்தியை தேட முடியாது. சக்தி விகடனில் அட்லீஸ்ட் அம்மாவசை, பெளர்ணமி எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

6. சமீபத்தில் யாருக்கானும் தபால் கார்டில் லெட்டர் எழுதி அனுப்பிய அனுபவம் இட்லிவடைக்கு உண்டா ? இப்போது 50 பைசாவா இல்லை 1 ரூபாயா ?

கிழக்கு பதிப்பகத்தில் சில புத்தகம் வாங்கினேன், கூடவே கருத்து சொல்லுங்க என்று தபால் கார்டு கொடுத்தார்கள். அதை அவர்களுக்கு அனுப்பினேன் (12.4.08). தபால் கார்டு விலை 119 ரூபாய். புத்தகத்தை சேர்த்து. :-)

7. ஹிமேஷ் ரேஷமய்யா ? கமல் ஏன் இளையராஜாவை தசாவதாரத்திற்கு உபயோகப்படுத்தவில்லை ?

ரஜினியை கூப்பிடாமல் ஏன் ஜாக்கி சான்னை கூப்பிட்டார் ? அது போல தான் இதுவும். ஹிமேஷ் ரேஷமய்யா பேர் சர்வேதேச மார்கெட்டிங் உத்தியாக இருக்கலாம். தசாவதார பாடல்கள் எல்லாம் நிஜமாகவே 'சீனி கம்' தான். அதுவும் ஹரிஹரன் பாடல் கேட்கும் போது எல்லாம் "அவள் வருவாளா.." என்ற பாடலை கேட்பது மாதிரியே இருக்கு. பாடல் பற்றிய விமர்சனம் பிறகு தனி பதிவாக போடுகிறேன்.

8. சமீபத்திய ஹிந்திப் படங்களில் ஒரு 'சீன்' ஆவது வருகிறதே ? தமிழ் படத்திலும் இது மாதிரி வருமா ?

முன்பு ஜேம்ஸ் பாண்டு படங்களில் வரும் சீன்கள் தான் இப்ப ஹிந்தி படத்தில் வருகிறது. தமிழ் படத்தில் சீன் வருவதில்லை, விழாவிற்கு நேராகவே வந்து சீன் காமிக்கிறார்கள்.

தறுதலை கேள்விகள்

9. பீரோடு கலந்து அடிக்க உகந்தது - ரம்மா? விஸ்கியா?

பீரோடு எதையும் கலக்காமால் அடித்தால் தான் நல்லா இருக்கும். வொட்காவுடன், ஸ்பிரைட் கலந்து குடித்தால் நல்லா இருக்கும், வீட்டுக்கும் தெரியாது.

10. கமலHஆசன் எப்பத்லேர்ந்து கமல் Hஆசன் ஆனாரு? ஏன்?

'காபி வித் அனு'வில் பதில் சொன்னார்கள். எனக்கு ஞாபகம் இல்லை. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டதில் பதில் சொல்லலாம்.

11. deleted.

12. சென்னை / தமிழக கிரிக்கெட் அணிங்கற பேர்ல அசட்டு அம்பிகள் மட்டுமே கோலோச்சும் மர்மம் என்ன?

கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமாக மட்டும் கேள்வி கேட்கவும். IPL கிரிக்கெட் இல்லை.


அனானி
13. வீ.பா.ஆ.மு வீட்டு திருமணத்திற்கு போகவேண்டாம் என நினைத்ததாலேயே கலைஞர் மருத்துவமனைக்கு சென்றார் எனவும் வீ.ஆ ராமதாசுக்கு சரியான பதிலடி கொடுக்க தயங்கினார் எனவும் டீக்கடை பெஞ்ச் சொல்கிறதே ? வீ.ஆ கூப்பிட்டது மாறன் சகோதரர்களையா ?

சில சமயம் டீ.கடை பெஞ்ச் உண்மை பேசும்.

14. பிஜேபி கட்சி முக்யஸ்தர்கள் கலைஞரை சந்தித்து நலம் விசாரித்துள்ளனரே ? (பொதுவாக இல.கணேசனாருக்கு கலைஞரின் மீது பரிவு உண்டு என்றாலும்) பாராளுமன்ற தேர்தலில் திமுக பிஜேபி கூட்டணி வருமா (கர்நாடகாவில் பிஜேபி ஜெயித்தால் - அதுவும் காங்கிரசுக்கு சரியான அடி விழுந்தால்).

விஜயகாந்த், ராமதாஸ் எந்த பக்கம் என்று தெரியாதவரை இதற்கு பதில் சொல்ல முடியாது. கர்நாடகாவில் எப்படி நிலவரம் என்று தெரிந்த பின் காய்களை நகர்த்துவார்கள். கர்நாடகாவில் திரும்பவும் காங்கிரஸ், தேவகவுடா கூட்டு சேர்ந்தாலும் சேர்வார்கள். திமுக பி.ஜே.பி பக்கம் சென்றாலும் வியப்பில்லை.

15. ஸ்டாலினுக்கு உள்துறையோ துணை முதலைமைச்சர் பதவியோ கொடுக்கப்பட்டால் அவர் தா.கிருட்டினன் வழக்கை தூசு தட்டச் சொல்வாரா ?

தா.கிருட்டிணன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மண்டையில் அடிப்பட்டு ரத்தம் வந்து இறந்துவிட்டார் என்று சி.பி.ஐயே சொல்லிவிட்டது.

16. ஐபிஎல் போட்டிகளால்தானே தசாவதாரம் ரிலீஸ் தள்ளிப் போகிறது ? இதனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு எவ்வளவு நஷ்டம் ? பாஸ்டன் பாலா வெளியிட்டுள்ள கமல், ஆஸ்கர் பிலிம்ஸ் கடிதங்கள் இ.வ.வில் வரவில்லையே ?

ஆஸ்கர் ரசிச்சந்திரன் எவ்வளவு பணம் வட்டிக்கு வாங்கினார் என்பதை பொறுத்தது. அட்லீஸ்ட் 2-3 கேடியாவது இழப்பு இருக்கும். பாஸ்டன் பாலா டுப்லிகேட் வேண்டாம் என்று நினைத்திருப்பார். இரண்டு வலைப்பதிவை வைத்திருந்தால் இது தான் பிரச்சனை.

17. குசேலன் வெளியாகும் அதே ஆகஸ்ட் 15ல் இந்தியில் எடுக்கப்படும் குசேலனும் வெளியாகிறதாமே (ரஜினியுடையது அல்ல)

ஆக்ஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திர தினம். சிறை கைதிகளை போல் படங்களையும் ரிலீஸ் செய்கிறார்கள். அவ்வளவு தான்.

பாஸ்டன் பாலா கேள்விகள்
18. யமுனா ராஜேந்திரன் & ஷோபா சக்தி - என்ன பாலிடிக்ஸ் ஏன் இப்படி அடிச்சுக்கறாங்க ?

ஜெயமோகன், சாரு பற்றிய அரசு பதில்கள் படிக்கவும். அதே பதில் தான் இதற்கும்.

19. வார்த்தை இரண்டாம் இதழ் எப்படி இருக்கு? வெளிநாட்டினருக்கு மே மாச இதழ் ஜூனில்தானே வந்து சேர்கிறது அங்கே எப்படி?

முன் அட்டையில் இருந்த அடையார் ஆனந்த பவன் விளம்பரம், பின் அட்டைக்கு சென்றுள்ளது. உங்க ஊருக்கு நாற்பது ரூபாய் ஸ்டாம்புக்கு பதில் என்பது ரூபாய் ஸ்ட்ம்பு ஓட்டினால் சீக்கிரம் வர வாய்ப்பு இருக்கு. சென்னையில், வேர்க்க விறுவிறுக்க புத்தக கடைக்கே சென்று வாங்கிவிடலாம்.

20. டவுன்லோட் இலக்கியம் - யார் கலக்கல்? யார் குலுக்கல்? (சாரு, எஸ் ரா, பா.ரா, பாமரன் எக்ஸெட்ரா நிரபிக்கொள்ளவும்)

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. எல்லோரும் கலக்கல் தான், எல்லா பெயர்களை குடத்தில் போட்டு குலுக்கல் முறையில் யாரையாவது தேர்ந்தெடுக்கணும்.

21. அரசு பதில்களில் சொல்லும் படம் என்ன (ஆங்கில) பெயர்? ஏன் இப்படி வெத்து படமெல்லாம் சொல்லும் அளவு அரசு இறங்கிப் போனார்.

ஆங்கில படத்தின் பெயர் ரெடென்ஷன. அரசு செய்வது தமிழக அரசின் ரிப்ஃலக்ஷன்.

22. கூகிள் ரீடர் வேலை செய்யுதா ?

மொபைலில் கூட நல்லா வேலை செய்யுது.

23. டோண்டுவின் பதிவு சிறப்பா? பதில்கள சிறப்பா?
கேள்விகள்!

24. அமெரிக்காவிலும் துப்பாக்கி வெடிக்கிறது (சின்னப்பசங்களால்)
இந்தியாவிலும் குண்டு வெடிக்கிறது இருந்தாலும் திவிரவாதம் என்று இங்கே மட்டும் பிரச்சினை பெரிதாவது ஏன்? (அமெரிக்காவில் shopping mallகளில், பள்ளிக்கூடங்களில் மாதந்தோறும் சின்னப்பசங்க, மனநலம் பாதிக்கப்பட்டோர் இன்ன பிறர்)
இங்கே அரசியல் தீவிரவாதிகள் அதிகம்.

25. எனக்கு ஒவ்வாமை... ஏதாவது திர்வு இருக்கா?
பிளாக் படிப்பதை முன்று வேளையும் நிறுத்தவும்.

Read More...

சிவராஜ் பட்டீலின் முட்டாள் தனமான பேச்சு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று விருந்து அளிக்கப்படுகிறது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நல்ல தருணத்தில் சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு கேட்டு விட்டு, அப்சல் குருவை எப்படி தூக்கில் போட முடியும்? என்று சிவராஜ் பட்டீல் தன் திருவாயை நேற்று திறந்திருக்கிறார். பொறுப்பற்ற முட்டாள் தனமான பேச்சு.

நேற்று நிருபர்கள் எந்த கேள்வியும் கேட்காத போது அவரே முன்வந்து

நாம் அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று விரும்புகிறோம். அதே சமயத்தில் சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். நாம் எப்போதுமே மற்றவர்கள் தூக்கில் போடப்படுவதையே விரும்புகிறோம். அங்கே சரப்ஜித்சிங்கை தூக்கில் போடாதே என்று கூறி விட்டு, இங்கே அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறோம். எப்படி இந்த கோரிக்கையை விடுக்க முடியும்? இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்.


பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனு, ஜனாதிபதியிடம் இன்னும் நிலுவையில் உள்ளது. இதனால் அப்சல் குருவை தூக்கில் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அல்லது தாமதப்படுத்துகிறார்கள்.

அதே சமயத்தில், பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்புகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங்கை காப்பாற்ற இந்தியா போராடி வருகிறது. அவருக்கு பொது மன்னிப்பு அளிக்குமாறு பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அப்சல் குரு, கோர்ட்டுகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர். ஆனால் சரப்ஜித்சிங்கோ, ஆள் மாறாட்டத்தில் தண்டிக்கப்பட்டவர். இந்த சின்ன வேறுபாட்டை கூட உள்துறை மந்திரி அறியாதவராக இருப்பதில் நமக்கு வியப்பு இல்லை. ஏன் என்றால் முஸ்லீம் ஓட்டு அவருக்கு வேண்டும். அவ்வளவு தான்.

தற்போதுள்ள மத்திய உள்துறை அமைச்சர் பலவீனமானவர். அவரால் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அது அவரால் இயலாத காரியம் இதை நான் சொல்லவில்லை போன வருஷம் நவம்பர் மாதம் லாலு சொன்னார்.

இந்தியாவை காப்பாற்ற யாராவது பிறந்து வர வேண்டும்.

Read More...

Wednesday, May 21, 2008

இட்லிவடை வசகர்களிக்கு ஜூவி சார்வே - முடிவுகள்

இட்லிவடை வசகர்களிக்கு ஜூவி சார்வே என்ற பதிவின் முடிவுகள். வாக்களித்த எல்லோருக்கும் நன்றி.

Google Docs உதவியுடன் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாஸ்டன் பாலா அதை என்னிடம் முன்பே சொல்லியிருந்தால் செய்திருப்பேன் :-) ஜூவி, இட்லிவடை முவுகள் எப்படி என்று தெரிந்துக்கொள்ள...










( மூன்றாவது ஆப்ஷன் ஜூவியில் எப்போதுமே கூடாது என்று தான் இருந்தது. ஆனால் முடிவில் 'தேர்தலில் போட்டியிட்டு வென்றால் பரிசியிக்கலாம்' என்று மாறியுள்ளது. நான் கட் & பேஸ்ட் செய்ததால் தப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு குறைவு )











கீழே உள்ள கேள்வி, ஜூவி சர்வேயில் இருந்து, ஆனால் முடிவில் இல்லை. என்ன காரணம் என்று தெரியலை.




Read More...

ஷாருக் என் காலை நக்குகிறான் - அமீர்கான்

தமிழ் எழுத்தாளர்கள் போல் இப்ப ஹிந்தி நடிகர்கள் பிளாக் எழுத ஆரம்பித்துள்ளார்கள். அமீர் கான் ஷாருக் என் காலை நக்கினார் என்று எழுதி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

....Shahrukh is licking my feet and I am feeding him biscuits every now and then. What more can I ask for?

Now, before you jump to any conclusions let me add that Shahrukh is the name of our dog. And before you jump to any further conclusions let me add that I had nothing to do with naming him. In fact Shahrukh is the dog of the caretakers of our house.

( http://aamirkhan.com/blog.htm )
தமிழ் செய்தி கீழே..

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் வளர்த்து வரும் செல்ல நாயின் பெயர், `ஷாருக்'. பஞ்சகனி என்ற இடத்தில் உள்ள அமீர்கான் வீட்டில் இந்த நாய் வளர்ந்து வருகிறது. பஞ்சகனிக்கு ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஷாருக்கான் வந்த நாளில், இந்த நாய் வாங்கப்பட்டதால், அதற்கு `ஷாருக்' என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நாய் பற்றி அமீர்கான், தனது இணையதளத்தில் கிண்டலாக எழுதி உள்ளார். `ஷாருக் என் காலை நக்குகிறான். அவனுக்கு நான் பிஸ்கெட் கொடுக்கிறேன். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?' என்று அவர் எழுதி உள்ளார்.

அமீர்கானின் இந்த அணுகுமுறைக்கு ஏராளமான ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இதுபற்றி விளக்கம் அளித்த அமீர்கான், `நகைச்சுவைக்காகவே அப்படி எழுதினேன். ஷாருக்கான் எனது நெருங்கிய நண்பர். அவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'
( நன்றி: தினத்தந்தி )

Read More...

Tuesday, May 20, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 20-05-08

இந்த வாரம் இட்லிவடை முனிக்கு எழுதும் கடிதம்

முனி வணக்கம்,

கைலாசத்தில் வெயில் எப்படி இருக்கு ? அங்கே பவர் கட் எல்லாம் உண்டா ?

மே 30க்குப் பின் பவர் கட் இருக்காது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொல்லியிருக்கார். இந்த செய்தியை படித்த போது மதனின் கார்ட்டூன் தான் நினைவுக்கு வந்தது. அதை சைடில் கொடுத்திருக்கிறேன்.

சென்னை மெரினா கடற்கரை இருப்பதால் பிழைத்தோம், ரொம்பா கூட்டம் வருவதால் பார்க்கிங் பிரச்சனை ரொம்ப இருக்கு.

போனவாரம் நக்மா கிறிஸ்டியனா மாறிட்டாங்க, அவர் தங்கை ரோஷினி ஒரு முஸ்லிம், இன்னொரு தங்கை ஜோதிகா இப்ப ஹிந்து. ஆக தேசிய ஒருமைப்பாடு என்பது மகளிரிடம் மட்டும் தான் இருக்கு.

பெண்கள் என்று சொன்னவுடன் ஞாபகத்துக்கு வருது.. பெண்கள் தினத்தில் கொல்லூர் மூகாம்பிகை என்ற படம் போட்டார்கள் வேற எங்கே கலைஞர் டிவியில் தான். நானும் ஏதோ சன் டிவியில் திருவிளையாடலுக்கு போட்டி என்று நினைத்தேன்.

அரை மணி நேரம் இந்த படத்தை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். (அதற்கு மேல்...முடியலை ) படத்தில் ஒரு சீன் - சின்ன குழந்தை(அசுரன்) கோழையாக இருப்பான். அப்பாவிற்கு கவலை எப்படி இவன் தேவர்களிடம் சண்டை எல்லாம் போடுவான். சுக்கிராச்சாரியார் ஒரு ஐடியா கொடுப்பார். பிராமாவை குறித்து தவம் செய் உனக்கு வேண்டியவற்றை தருவார் என்று. குழந்தை தவம் செய்ய ஆரம்பிக்கும்

அடுத்த ஷாட்டில் அந்த குழந்தை 13 வயசு பையனாக காட்சி தருவான். கால் வரை பாம்பு புற்று மூடியிருக்கும். அடுத்த ஷாட் அவன் 30 வயது இளைஞன்; இடுப்பு வரை பாம்பு புற்று.

அடுத்த ஷாட் வெறும் பாம்பு புற்று. உடனே பிரம்மா தோன்றி தன் கையை உயர்த்துவார். ஒளி வந்து பாம்பு புற்றை மறைத்து அதிலிருந்து 40 வயது ஜடா முடி, தாடியுடன் கூடிய அசுரன் இருப்பான். என்ன வரம் வேண்டும் என்று கேட்பார் பிரம்மா. as usual எனக்கு சாகா வரம் வேண்டும் என்று ஹிரணியன் போல் ஒரு லிஸ்ட் ... பிரம்மா அப்படியே ஆகட்டும் என்பார். (அவருக்கு என்ன கவலை விஷ்ணு, சிவன் பார்த்துக்கொள்வார்)

அசுரன் கையை தலைக்கு மேல் கூப்பி பிரம்மவிற்கு நன்றி சொல்லுவார். எனக்கு இங்கே தான் டவுட். இவ்வளவு வருஷத்தில் தாடி, தலை எல்லாம் முடி வளர்ந்திருக்கு ஆனா அக்குள் மட்டும் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்டிருக்கு இது எப்படி ?


சரி இந்த கொல்லூர் மூகாம்பிக்கை கோயில் பற்றி சில குறிப்பை கூகிள் ஆண்டவன் தவயால் எனக்கு கிடைத்தது. அது கடைசியில்

இப்ப ஒரு கிசு கிசு கண்டுபிடி பார்க்கலாம் - டை கட்டும் உத்தியோகம் பார்க்கும் நான்கெழுத்து எழுத்தாளர் ஆறெழுத்து உலக நடிகரின் ஐந்தெழுத்து அடுத்தப் பட டிஸ்கஷனுக்குப் போகிராராம். தற்போது சிவசக்தி பெற்ற கனகவேல் எழுத்தாளர் இவருக்கு அட்வைஸ் கொடுப்பாரா ?

சைடில் இருக்கும் அம்மணியை எங்கோ பார்த்த மாதிரி இருக்கா ? அவரே தான் - விசாலி கண்ணதாசன். இப்ப எச்சரிக்கை: ``இனிமேல் பாடல்களும் எழுதுவேன்...பட்டிமன்றத்திலும் பேசுவேன்...அப்பா விட்டு சென்ற இடத்தை நிரப்புவேன்'' என்கிறார், விசாலி கண்ணதாசன்! லியோனி, சாலமன் பாப்பையாவையே தாங்க முடியலை இப்ப இவர் வேற

காண்டலிஸா ரைஸ் இந்தியா வந்ததால் அரிசி தட்டுபாடு வராது எப்படி ? அவர் பெயரிலேயே ரைஸ் இருக்கே! உலக உணவுப் பற்றாகுறைக்கு விலை உயர்வுக்கும் இந்தியர்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிட்டதுதான் காரணம் என்று உளறிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உளறலுக்கு இது எவ்வளவோ தேவலை. என்ன நான் சொல்லுவது சரியா ?

சமிப காலமாக குங்குமம் பத்திரிக்கை விகடன், குமுதத்தை விட நல்லா இருக்கு கவனிச்சையா ? நம்ப முடியலை இல்லை ? ஆனால் அது தான் உண்மை. விகடன், குமுதத்தை விட சினிமா மேட்டர் கம்மியாக வருகிறது அதே போல் படம் போட்டு இடத்தை நிறப்பும் டெக்னிக்கும் கம்மி. நகைச்சுவை(ஜோக்ஸ்) வேற நிறைய வருது. வாழ்த்துக்கள். கல்கி பகவான் விளம்பரம் செய்யும் மாயமா ?.

சினிமா நடிகர்கள் சிகரெட் பிடிப்பதை பார்த்து தான் முதல் முறையாக சிகரெட் புகைக்க 52 சதவீத குழந்தைகள் கற்றுக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அமிதாப் பச்சன், ஷாருக்கானும் அதை சட்டை கூட செய்வதில்லை. ராமதாஸ் பாபாவிற்கு செய்த லூட்டியை வட நாட்டில் செய்ய துணிந்தால் ஒட்ட வெட்டிவிடுவார்கள். இந்தியாவில் இப்படி என்றால் பாகிஸ்தானில் மறைந்த முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் படம் போட்ட சிகரெட் லைட்டர்கள் விற்பனை சக்கை போடு போடுகிறது. முஷாரப்பின் படம் கொண்ட லைட்டர்கள், அல்காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடன் லைட்டர்களுக்கும் மவுசு அதிகமாம்.

கொல்லூர் மூகாம்பிகை பற்றி மேலும் சில தகவல்கள்...

மங்கரில் இருந்து 200 கி.மீ. தொலைவிற்கு அப்பாலுள்ளது கொல்லூர் மூகாம்பிகை கோவில். இந்த கோவிலின் முக்கிய விஐபி - எம்.ஜி.ஆர். இந்தகோவிலுக்கு வந்தது பற்றி கோவிலின் நிர்வாக அதிகாரி கோவிந்த மோகரல், எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான கோவில் குருக்கள் மூர்த்தி கணேஷ்பட்டரிடம் சொன்ன தகவல்கள்

மூகாம்பிகை கோவில் கர்நாடகத்தில் இருந்தாலும் கேரள கோவில்களில் உள்ள முறைகள்தான் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

எம்.ஜி.ஆரும் ஒவ்வொரு முறையும் சட்டையை கழற்றிக் கோவிலுக்குள் சென்று வந்திருக்கிறார். அவரது அந்த தோற்றத்தை அந்தப் பகுதி போட்டோ-ஸ்டூடியோவைச் சேர்ந்தவர் படம் எடுத்து விட்டார்.

பொதுவாக எம்.ஜி.ஆரை அவர் விரும்பாத தோற்றத்தில் யாரும் புகைப்படம் எடுத்து விடமுடியாது . கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் கண்ணாடி, தொப்பி இல்லாத தோற்றத்தில் எடுத்த புகைப்படக்காரரும் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலரின் பார்வையில் இருந்து தப்பவில்லை.

மெய்க்காப்பளர் படம் எடுத்தவரிடம் கேமராவை பறித்து பிலிமை உருவி எடுத்துவிட்டாராம். அதனால் எம்.ஜி.ஆர். வந்து போனதற்கு கோவிலிலேயே எந்த புகைப்படமும் இல்லை.

இதற்கு அந்த மூகாம்பிகையே சாட்சி :-)

போன மாசம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தங்கத்தேர் இழுத்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த வி.ஐ.பி - நடிகர் சரத்குமார் !

கடைசி செய்தி : இன்று அமைச்சர் பூங்கோதையின் ராஜினாமா ஏற்கப் பட்டதாக தெரிகிறது. கருணாநிதியிடம் இருக்கிற இந்த அமைச்சரவையில் அதாவது முப்பது பேரில் சுமாரா இருபது அமைச்சர்கள், அதாவது முக்கால்வாசிப் பேர், டேப்பில் சிக்கியிருக்கிறார்கள் என்கிறார் சுவாமி. நாளை சுவாமி மற்ற அமைச்சர்களின் மீதும் புகார்களை அடுக்கிக் கொண்டே போவார். அவர்கள் அத்தனை பேரையும் பதவிநீக்கப் போகிறாரா கலைஞர் ? ஒரு வேளை பூங்கோதை ராஜிநாமாவிற்கு தான் காத்துக்கொண்டிருதாரோ ? எதற்கு எடுத்தாலும் கேள்வி பதில் அறிக்கை விடும் கலைஞர் பூங்கோதை, டி.ஆர்.பாலு பற்றி பேசினால் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொள்கிறார். ஆக பதில் தெரியவில்லை என்றால் கேள்வி கேட்க மாட்டார், நல்ல டெக்னிக் தான்.

பதில் போடு,
இப்படிக்கு அன்புடன்,
இட்லிவடை

Read More...

Monday, May 19, 2008

கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட அன்பழகன் அழைப்பு

தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்தநாளை குதூகலமாக கொண்டாட தொண்டர்களுக்கு தி.மு.க., பொதுசெயலர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். உடல் நலம் காரணமாக ஓய்வு எடுக்க விரும்புவதாக தமது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் , அந்நாளில் ( ஜூன் 3 ) என்னை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என கருணாநிதி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது பிறந்த நாளை கொண்டாடாமல் இருக்க முடியாது என பிறந்த நாள் கொண்டாடும் போது தலைவருக்கு ஊக்கமும், புது உணர்ச்சியும் ஏற்படும் எனவே இந்நாளை கொண்டாட தொண்டர்கள் தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More...

பூங்கோதை, டி.ஆர்.பாலு, அழகிரி - கல்கி தலையங்கம்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி... என்ற தலைப்பில் கல்கி தலையங்கம்.

லஞ்ச ஒழிப்பு - கண்காணிப்புத் துறை (DVAC) என்பதாக ஒன்று நிறுவப்பட்டபோதே, அதன் வெற்றிகரமான செயல்பாடு குறித்துச் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஏற்கெனவே உள்ள சட்ட திட்டங்களும் காவல் அமைப்புகளுமே ஊழலைக் கண்டுபிடித்துத் தண்டிக்கப் போதுமானவைதான். அவை ஊழலை ஒழிப்பதற்குப் பதிலாக, ஊழலுக்குத் துணைபோவதுதான் பிரச்னை என்பது சுட்டிக் காட்டப்பட்டது. இப்போது ஊழல் ஒழிப்பு - கண்காணிப்புத் துறைக்கும் அதே கதி நேர்ந்துள்ளது!

இத்துறை இயக்குநர் உபாத்யாயாவுக்கு ஃபோன் செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. ஆனால், தமது உறவினர் பேரிலான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டைக் குறித்து தகவல் பெற மட்டுமே ஃபோன் செய்ததாகவும் அந்நபரைத் தப்புவிக்க, தமது செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்.

ஆனால், ஒட்டுக்கேட்டுப் பதிவு செய்யப்பெற்று வெளியிடப் பட்டுள்ள தொலைபேசி உரையாடலின் எழுத்தாக்கம், அமைச்சர் தமது உறவினருக்காகப் பரிந்துரைத்ததைத் தெளிவாக உணர்த்துகிறது.

தமது உறவினர் ஜவஹர் மீதான நடவடிக்கை குறித்து விசாரிப்பப்பதுகூட தார்மிக ரீதியில் தவறுதான் என்பதை உணர்ந்து அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டார்.

அமைச்சரது விசாரிப்பை இயக்குநர் உபாத்யாயா ஏன் அனுமதிக்க வேண்டும்? தமது அதிகாரத்தில் - அதிலும் ஊழல் ஒழிப்பு- கண்காணிப்புத் துறைச் செயல்பாட்டில் தலையிட யாருக்கும் உாிமை இல்லை என்பதுடன், அதன் செயல்பாடுகள் ரகசியமானவை என்பதை அவர் அமைச்சாிடம் வலியுறுத்தியிருக்க வேண்டாமா? மாறாக, அமைச்சர் கேட்டதற்கும் கூடுதலான விவரங்களை இயக்குநர் அளித்ததையே தொலைபேசி உரையாடல் உணர்த்துகிறது. ஜவஹரைத் தப்புவிக்க அவர் மறைமுகமாக யோசனை வழங்கியுள்ளதாக நம்புவதற்கும்
இடமிருக்கிறது!

அப்படியானால், ஊழல் ஒழிப்பு - கண்காணிப்புத் துறை, அதனை ஒழிப் பதற்குப் பதிலாகப் பாதுகாத்து வளர்க்கிறது என்றுதானே கொள்ள வேண்டியிருக்கிறது! ‘ஒட்டுக்கேட்டு அறியப்பட்ட இந்த ஒரு செய்தியைப் போல் இன்னும் எத்தனை அநீதிகளோ?’ என்று கவலைகொள்ள வைக்கிறது.

தமிழக முதல்வர், அமைச்சருடைய செயல்பாடைக் கண்டித்தபோதிலும் அவரது ராஜினாமாவை ஏற்காமலிருப்பது விசித்திரமாக உள்ளது. ஏற்கெனவே வெளியான ஒட்டுக்கேட்கும் சம்பவம் (இதில் லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டு ஏதுமில்லை) குறித்த நீதிபதி விசாரணையில், அமைச்சர் பூங்கோதை விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள இருப்பதாக முதல்வர் தரிவித்துள்ளார். இது தாமதத்துக்கே வழி வகுக்கும்.

டி.ஆர்.பாலு பேரிலான குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவையெல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள் என்று அவருக்குத் தோன்றவில்லை! ஆட்சி மீது படிந்துள்ள கறைகள் என்று அவர் கருதவில்லை!

அரசியல் தலைவர்கள், பொது வாழ்வில் இருப்போர், சந்தேகத்துக்கப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிற நிலைமை போய், ‘என்ன சந்தேகம் வேண்டுமானாலும் எழட்டும். ஆட்சி நம்மிடம் இருக்கும் வரை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது; நமக்கு முழு பாதுகாப்புதான்’ என்கிற மனோநிலை வேரூன்றிவிட்டது.

இதன் காரணமாகத்தான், அழகிரி மற்றும் பன்னிரண்டு பேர் கிருட்டிணன் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறபோது, அந்தச் சம்பவம் ஒரு கொண்டாட்டமாக மாறுகிறது. ‘அப்படியானால், யார்தான் கிருட்டிணனைக் கொன்றார்கள்?’ என்கிற சங்கடமான கேள்வி எழுப்பப்படுவதேயில்லை!

லஞ்ச-ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் சாி, அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளும் சரி, நேர்மைத் திறமின்றி இயங்குவார்களே யானால், ஆயிரம் லஞ்ச ஒழிப்புத் துறைகள் இருந்தும் பயனில்லை!

Read More...

இட்லிவடை வாசகர்களுக்கு ஜூவி சர்வே

விகடன்.காம் தளத்தில் ஜூவி நடத்தும் சர்வே என்று சில கேள்விகளை கேட்டிருந்தார்கள்.
உங்களுக்கு விகடன்.காம் அகவுண்ட் இல்லை என்றால் இதில் கலந்துக்கொள்ள முடியாது. அதனால் அதை அப்படியே இங்கே தந்துள்ளேன். ஜூவி முடிவும், இட்லிவடை முடிவும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் :-)
( மொத்தம் 9 கேள்விகள், கேள்விகளுக்கு நடுவில் இடைவெளி இருக்கு அதனால் Scroll செய்யவும் )















ஜூவி - 1



1. பிறந்தநாள் தருணத்தில் முதல்வர் மருத்துமனையில் சேரவேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கு காரணம்...






பணிச்சுமை மற்றும் வயது
குடும்ப ரீதியான நெருக்கடிகள்
கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகள்

 Current Results




கீழே மற்ற கேள்விகள்..














ஜூவி - 2



2. முதல்வர் இப்போது செய்ய வேண்டியது...






தொடந்து அவரே முழு நிர்வாக பொறுப்புகளை கவĪ
அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சில பொறுப்புகī
மு.க.ஸ்டாலினைவிட தகுதியுள்ள வேறொரு சீனியī

 Current Results


















ஜூவி - 3



3. தி.மு.க-வின் இரண்டாண்டு ஆட்சி முடிவில்... டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டுகள் வீசியது






முழுக்க முழுக்க அவசியம்தான்
இத்தனை கடுமையாகக் கூடாது
இந்த தருணத்தில் தவிர்த்திருக்கலாம்

 Current Results



















ஜூவி - 4



கனிமொழி எம்.பி-க்கு மத்திய அமைச்சர் பதவி...






உடனே வாங்கித் தரலாம்
இப்போது கூடாது
எப்போதுமே கூடாது

 Current Results



















ஜூவி - 5



5. தா.கிருட்டிணன் வழக்கு தீர்ப்பை தொடந்து கட்சியில் பதவிப்பெறும் அளவுக்கு அழகிரியின் இமேஜ்...






உயர்ந்துள்ளது
உயரவில்லை
இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

 Current Results


















ஜூவி - 6



6. கலாநிதி மாறன், தயாநிதி மாறனுடன் நல்லுறவு தொடந்திருந்தால்...






முதல்வருக்கு கூடுதல் பலமாக இருந்திருக்க
இன்னும் பலவீனம் ஆகியிருக்கும்
புதிதாக எந்த பலனும் இருந்திருக்காது

 Current Results


















ஜூவி - 7



7. வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றிய பூங்கோதையை சிபாரிசு சிக்கலில் தள்ளியது...






மோசமான அரசியல் சூழல்தான்
அவரது குடும்ப சூழல்தான்
பதவி போதைதான்

 Current Results


















ஜூவி - 8



8. அமைச்சர் பூங்கோதை போலவே இன்னும் பல அமைச்சர்களும் சிபாரிசு






ஆம்
பூங்கோதை மட்டுமே செய்திருப்பார்
யூகிக்க இயலவில்லை

 Current Results


















ஜூவி - 9



9. மருத்துவ ஓய்வில் இருந்து மீண்டதும் முதல்வர் முழு உற்சாகம் பெறுவதற்கான மருந்து எங்கே இருக்கிறது.?






அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம்
தி.மு.க மற்றும் கூட்டணி தலைவர்களிடம்
கலை மற்றும் இலக்கிய பணிகளில்

 Current Results





Read More...