"We have created an organization where every child in this country will say chak de Railways. Everybody is happy with the Railways" - Lalu
ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் லாலு பிரசாத் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தார்....
2007-08ம் ஆண்டில் ரூ. 25,000 கோடி லாபம் பெற்று ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு 53 புதிய ரெயில்கள் விடப்படும் என்றும், 10 ஏழைகள் ரதம் கூடுதலாக அறிமுகம் செய்யப்படும் என்றும் ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.
.
பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்றும், வயதான பெண்மணி களுக்கு தற்போது வழங்கப்படும் 30 சதவீத சலுகை 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் இன்று 12 மணியளவில் தாக்கல் செய்தார்.
முன்னதாக 11 மணிக்கு அவை கூடிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விவசாயிகள் தற்கொலை பிரச்சனை தொடர்பாக ரகளையில் ஈடுபட்டதால் அவை 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து பகல் 12 மணியளவில் லாலு பிரசாத் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.
ரெயில்வேயின் லாபம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உயர்ந்து இருப்பதாகவும் இந்த நிதி ரெயில்வேயை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொது அறிவிப்பு வசதி ஏற்படுத்தப்படும்.
* நீண்ட தூர ரெயில்களில் அடுத்த நிலையம் பற்றிய அறிவிப்பு டிஜிட்டல் பலகையில் வெளியாகும்.
* பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் காலங்களில் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* இரண்டு ஆண்டுகளில் 15 ஆயிரம் தானியங்கி பயணச் சீட்டு இயந்திரங்கள் அமைக்கப்படும்.
* ரெயில்களில் மாடூலர் கழிப்பறை வசதி.
* 2009ல் ரெயில்களுக்கு தகவல் தொடர்பு இணைப்பு வசதி.
* சரக்கு போக்குவரத்துக்கான இலக்கு 790 மில்லியன் டன்னாக உயர்வு.
* திட்ட அளவு ரூ.11 ஆயிரம்
கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்வு.
* எல்லா ரெயில்வேகளிலும் ஸ்மார்ட் காட் முறை.
* நாடு முழுவதும் 50 முக்கிய ரெயில் நிலையங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதி.
* செல்போன் மூலம் ரிசர்வேஷனை உறுதி செய்து கொள்ளும் வசதி.
* ரெயில்வேகள் கால்சென்டரோடு இணைக்கப்படும்.
* ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக டிஜிட்டல் பலகை மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
* மேலும் அதிக மார்க்கங்கள் மின்மயமாக்கப்படும்.
* 195 ரெயில் நிலையங்களில் பயணிகள் நடைபாதை அமைக்கப்படும்.
* 200708ல் ரெயில்வேயில் 14 லட்சம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர்.
* சதாப்தி, ராஜ்தானி ரெயில்களில் பெட்டிகள் மேம்படுத்தப்படும்.
* டிக்கெட்களில் ரெயில்கள் வந்து சேரும் நேரம் அச்சிடப்படும்.
* புதிய வேகன்களை அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களோடு பேச்சு.
* 2 ஆண்டுகளுக்கு பிறகு வரிசையில் காத்திருக்கும் தேவை இருக்காது.
* 2010ல் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பெட்டிகள்.
* ரெயில் நிலையங்களில் தொடு கணினி மற்றும் கலர் டிவி வசதி.
* தாய்சேய் சுகாதார எக்ஸ்பிரஸ்.
* அனைத்து லெவல் கிராசிங்கிலும் கேங்மேன்.
* ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் அசோக் சக்ரா விருது வென்றவர்களுக்கு இலவசம்.
* மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவச சீசன் டிக்கெட்.
* வயதான பெண்மணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.
* 16,548 ரெயில் பாதைகள் புதுப்பிக்கப்படும்.
* பதட்டமான ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.
* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத சலுகை.
* எண்ணூர் மின் நிலையத்திற்கு புதிய லைன்.
* டெல்லியில் உள்ள ரெயில்வே மருத்துவமனை ஏசி வசதி கொண்டதாக ஆக்கப்படும்.
* ஊழியர் நல நிதி 10 மடங்கு உயர்த்தப்படும்.
* ஹூப்ளி மற்றும் ஜெய்ப்பூர் ரெயில்வே மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
* 10 புதிய ஏழைகள் ரதம், 53 புதிய ரெயில்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, February 26, 2008
Chak De Railways
Posted by IdlyVadai at 2/26/2008 01:51:00 PM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
சென்ற வருடம் எத்தனை விபத்து; எவ்வளவு பேர் இறந்தார்கள்... எம்புட்டு பேருக்கு கை கால் போச்சு என்னும் கணக்கும் சொன்னாரா?
தோப்பில் ஆயிரம் பழம் பழுத்தாலும் காக்கைக்கு தெரிவது வேப்பம்பழம்தானே
Post a Comment