இன்றைய நிலவரம் - விஜயகாந்த் கூட்டணி என்கிறார். நாளை என்ன சொல்லுவார் என்று தெரியலை.
ஜாதி கட்சிகளான பா.ம.க., விடு தலை சிறுத்தை ஆகியோருடன் நாங்கள் கூட்டணி பற்றி பேச மாட்டோம் என்கிறார். இந்த ஒரு காரணம் போதும், இவருக்கு ஓட்டு போட.....
நாங்கள் ஊழலுக்கும் ஜாதி, மதங்களை ஆதரிப்போருக்கும் எதிரானவர்கள். இவற்றை எதிர்க்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர நாங்கள் தயா ராக இருக்கிறோம்.
காங்கிரஸ், இடது சாரி கட்சி கள் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கின்றன. ஜாதி கட்சிகளான பா.ம.க., விடு தலை சிறுத்தை ஆகியோருடன் நாங்கள் கூட்டணி பற்றி பேச மாட்டோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அருண்குமார் மூத்த அரசியல்வாதி, நாங்கள் சந்தித்தது பற்றி வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி சொல்வது சரியல்ல, எங்கள் கட்சி வேக மாக வளர்வதால் காங்கிரஸ் தலைவர்கள் எங்களை நெருங்கி வருகிறார்கள்.
எங்கள் கட்சி அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க.கட்சிகளுக்கு மாற்று சக்தியாக எங்கள் கட்சி உரு வாகி வருகிறது. மக்கள் தே.மு.தி.க. மீது நல்ல எண்ணம் வைத்து இருக்கிறார்கள்.
2006 சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக எங்கள் கட்சி 8.38 சதவீத ஓட்டு பெற்று இருக்கிறது. உள் ளாட்சி தேர்தலிலும் எங்கள் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது.
எங்கள் கட்சி 3-வது அணி என்பதை ஏற்க முடியாது. நாங்கள் தான் பிரதான அணி. எங்கள் தலைமையில் மற்ற கட்சிகள் வந்தால் வரவேற்போம். ஊழலுக்கும், சாதி மத, அரசியலுக்கும் எதிராக பாடுபடுவோம் என்று நான் மக்களுக்கு உறுதி அளித்திருக்கிறேன். இதை மக்கள் ஏற்பார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மக்கள் ஆதரவை இழந்து விட்டன. ஏனென்றால் அவர் கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. தி.மு.க. ஆட்சியின் நிர்வாகம் மோசமாக உள் ளது. சிமெண்ட் விலை குறைப்பு உள்பட பல பிரச்சினைகள் முறையாக செயல்படுத்தப்பட வில்லை.
கேபிள் டி.வி. பிரச்சினை யில் அரசு குழப்பத்தில் இருக்கிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி, எம்.ஜி.ஆருடன் 40 ஆண்டுகள் நண்பராக இருந் தவர். என்றாலும் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தவரை தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அது போன்று எங்கள் கட்சியையும் மக்கள் ஆதரிப்பார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட் டணி தமிழ்நாட்டில் 40 தொகுதி களையும் பெற்றது. ஆனால் முதல்-அமைச்சர் கருணாநிதி சேது சமுத்திரம் பிரச்சினையில் ராமர் பற்றி பேசியது காங்கி ரசுக்கு எதிராகி விட்டது. வட மாநிலங்களில் நடந்த சட்ட சபை தேர்தல்களில் 400 இடங் களை காங்கிரஸ் இழந்து விட்டது. மத நம்பிக்கைக்கு எதிராக பேசியதால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
முதல்-அமைச்சர் கருணா நிதியும், அ.தி.மு.க. பொது செய லாளர் ஜெயலலிதாவும், கட்சி தொண்டர்களை ஏமாற்று கிறார்கள்.
எனவே அந்த கட்சிகளில் உள்ள இளைஞர்களும், பெண் களும் அங்கிருந்து வெளி யேறுகிறார்கள். எங்கள் கட் சியை விரும்புகிறார்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, February 22, 2008
பா.ம.கவுடன் நோ கூட்டணி - விஜயகாந்த்
Posted by IdlyVadai at 2/22/2008 12:31:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
I am not sure whether DMDK will come to power in next assembly election or not but, certainly they can get more than 8.33 percentage in election.
அட..
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்த மாதிரி டயலாக் விடமாட்டேங்கிறாரே :))
Post a Comment