பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 19, 2008

நோயாளிகளை நாடும் அல்கொய்தா

தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு மனித வெடிகுண்டு களாக பயன்படுத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு தேர்வு செய்து வருவதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

மனநல மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மனநோயாளிகளை அல்கொய்தா தேர்வு செய்து வருவதாக கூறப் படுகிறது. சமீபத்தில் 100 பேரின் உயிரை பலி வாங்கிய 2 குண்டுவெடிப்பு தாக்குதல் களில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மனித வெடிகுண்டுகள் இருவரும் மனநோய் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கிரகரி ஸ்மித் கூறியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை தனிப்பட்ட முறையில் அணுகி அவர்களை மருத்துவமனை யிலிருந்து அழைத்துச் சென்று பின்னர் அவர்களை மனித வெடிகுண்டுகளாக அல்கொய்தா பயன் படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை அல்கொய்தா சேகரித்து வøத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல சம்பவங்கள்ள ஈடுபட்ட அல்காயிதா தற்கொலைப் படையினருக்குக் கால் கிடையாது அல்லது வாய் பேசாது அல்லது காது கேக்காது.

உண்மையான மனநேயாளிகள் இந்த மாதிரி தீவிரவதிகள் தான்.

1 Comment:

Anonymous said...

மொத்த கும்பலுமே மெண்டல் தான்...இதில பிரிச்சி என்ன பாக்க வேண்டி இருக்கு