பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 23, 2007

தினமணி - ராமர் சேது கார்டூன்கள்

தினமணியில் வந்த ராமர் சர்ச்சை - சிறப்புக் கார்ட்டூன்கள்




அட... தப்பா எடுத்துக்காதீங்க..! புண்படுத்தும் நோக்கமெல்லாம் எதுவுமில்லை. சொரணை இருக்குதான்னு ஒரு டெஸ்ட் பண்ணேன், அவ்வளவுதான்..!


எப்படியும் ராம பக்தர்கள் ஓட்டு இனிமே நமக்கு கிடைக்கப் போறது இல்லை..! அதனால பிள்ளையார், முருகன், சிவன், பார்வதி, ஐயப்பன்... இந்த சாமி எல்லாம் இருக்கறதுக்கு ஆதாரம் இருக்குதுன்னு சொல்லி மற்ற சாமி பக்தர்கள் ஓட்டுகளையாவது தக்க வச்சுக்கறதுதான் இப்போதைக்கு நமக்கு நல்லதுன்னு தோணுது தலைவரே..! நல்லா பகுத்தறிவுப்பூர்வமா யோசிச்சுப் பாருங்க..!



ராமர் காலத்துல என்ஜினீயரிங் காலேஜ் இருந்ததோ இல்லையோ, கல்விக் கட்டணம்ன்ற பெயர்ல அப்பாவி பெற்றோர்கள் கழுத்தை நெரிச்சு 30 லட்சம், 40 லட்சம், 50 லட்சம்னு வசூல் பண்ற சுயநிதிக் கல்லூரிகள் இல்லைன்றது மட்டும் நிச்சயமா தெரியும் சார். இந்த சாதனைகள் எல்லாம் திமுக, அதிமுக ரெண்டு ஆட்சிகளுக்கும்தான் சேரும்..!


வேணுமாய்யா இதெல்லாம் நமக்கு..? ராமரை பற்றி கலைஞர் திட்ட திட்ட நாடு முழுக்க காங்கிரஸ் எதிர்ப்பு பெருசாகிகிட்டே போகுதாம்..! பேசாம சோனியாஜிக்கு "திருக்குறள்' புத்தகம் ஒண்ணு வாங்கி அனுப்பி "கூடா நட்பு' அதிகாரத்தைப் படிக்கச் சொல்லலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்பா..! என்ன சொல்றீங்க..?


சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழர்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழகத்தை வளப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்! இன்னும் புரியும்படியாக சொல்வதென்றால் "டாஸ்மாக்' மதுக்கடைகளைப்போல அரசுக்கும், அதன்மூலம் தமிழகத்திற்கும் பெரும் பணத்தை ஈட்டித்தரும் திட்டம் என்பதை குடிமக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..!


சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றினாலும் சம்மதம். ஆனால் எப்படியாவது அதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம்னு கலைஞர் சொல்றாரு..! இதே உறுதி இவருக்கு மதுவிலக்கு, வன்முறை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, இரட்டை தம்ளர் முறை ஒழிப்பு... இதிலெல்லாம் இருந்திருந்தா இவர் 5 முறை முதல்வராக இருந்த கால கட்டத்தில் தமிழகமே புண்ணிய பூமியா மாறியிருக்குமே, சார்..!


அட... ராமர், வால்மீகி இதையெல்லாம் விடய்யா ! தலைவர் ஏதோ "சோமபானம்'னு சொன்னாரே, அது எங்கே கிடைக்கும்னு உனக்கு தெரியுமாய்யா? ரெண்டு மூணு நாளா அதையே நினைச்சு மனசு தவிச்சுட்டு கிடக்குது..!



பாருங்கள், அண்ணாவின் இதயத்தில் நான் மட்டுமே இருக்கிறேன் என்பதற்கு என்ன ஒரு உயிரியல்பூர்வமான, அறிவியல்பூர்வமான, பகுத்தறிவுப்பூர்வமான ஆதாரம்..!