பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 05, 2007

மகளிர் பேரணிக்கு எதிராக வழக்கு

கடந்த 1ம் தேதி திமுக நடத்திய மகளிர் பேரணிக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

டிராபிக் ராமசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1ம் தேதி அன்று திமுக சார்பில் சென்னையில் மகளிர் பேரணி நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் இதில் கலந்து கொண்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.

அண்ணாசாலையில் வழிமறித்து மேடை அமைக்கப்பட்டு அலங்கார மின்விளக்குகள் போடப்பட்டிருந்தன. போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

இதற்கு அனுமதி கொடுத்தது குறித்து விளக்கம் தருமாறு மின்வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தந்தி அனுப்பினேன். ஆனால் இதுவரை பதில் இல்லை. எனவே என்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தபட் டவர்களுக்கு நீதிமன்றம் உத்தர விடவேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.

7 Comments:

Anonymous said...

We need more people like him. Hats off to him

Anonymous said...

டிராபிக் ராமசாமி - The most elible person to become next president of India. Find some time to search and read about this noble man.


[Did u notice Kanimozhi in the rally? Pathetic.]
--Nokia Fan

Anonymous said...

யோவ்
இட்லி வடை இன்னும் உன்னோட பதிவு தமிழ் மணத்துல திரட்டுறாங்க ஐயா, அவிங்கிளுக்கு திரட்ட்டாதடான்னு ஒரு கடுதாசி போட்டியா இல்லியா அல்லது நீயே திருப்பி சேந்துகினியா? இன்னா நடக்குது இங்கே. உன்னையப் போய் மானம் ரோசம் உள்ள ஆளுன்னு நெனச்சுப் போட்டேன் போ

IdlyVadai said...

//யோவ்
இட்லி வடை இன்னும் உன்னோட பதிவு தமிழ் மணத்துல திரட்டுறாங்க ஐயா, அவிங்கிளுக்கு திரட்ட்டாதடான்னு ஒரு கடுதாசி போட்டியா இல்லியா அல்லது நீயே திருப்பி சேந்துகினியா? இன்னா நடக்குது இங்கே. உன்னையப் போய் மானம் ரோசம் உள்ள ஆளுன்னு நெனச்சுப் போட்டேன் போ//

ஏற்கனவே கடுதாசி போட்டுட்டேன் நைனா. மானம் ரோஷம் எல்லாம் இருந்தா தமிழ் வலைப்பதிவு நடத்தமுடியாது :-). அடுத்த தபா டைம்கிடைக்கும் போது, நீயும் ஒரு கடுதாசி போடு நைனா. சரியா ?

Anonymous said...

ஒரு கொலகாரியைக் கொள்ளைக்காரியை ஜனாதிபதினியா தேர்ந்தெடுப்பதை எதிர்க்கும் அனைவரும், கீழ்க்கண்ட கூட்டத்துக்குத் தவறாமல் ஆஜராகும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரதீபா பாட்டில தேர்ந்தெடுக்குறதுக்குப் பதிலா பேசாம நம்ம போலீஸ் ஜெயலட்சுமியைக் கூட தேர்ந்தெடுக்கலாம்


INDIAN LIBERAL GROUP
(an Organization founded by MR Masani Mumbai)

(Chennai Chapter)

12/3, Viswams, Thiruvengadam Street Extension,

Chennai - 600 004.

(Tele: 2493 7046)



cordially invites you and your friends to a meeting

on



"The 13th Presidential Election

- Issues in the Selection and Election"



to be addressed by



Sri Arun Shourie MP
Eminent Journalist & Former Minister, GOI



Cho Ramaswamy

Editor Thuglak


ERA Chezhian

Former MP

Presides




At 6.15 p.m., Friday, 13th July 2007

Venue: Dhakshinamurthy Auditorium
P.S. High School, R.K. Mutt Road
Mylapore Chennai - 600 004.

IdlyVadai said...

ஆனானி என்னை பாராட்டி பின்னூட்டம் போட்டிருந்தாலும், மற்றவர்களை துவசம் செய்ததால் உங்கள் பின்னூட்டம் ரிஜக்ட் செய்ய படுகிறது.

Anonymous said...

அது சரி அந்த மானம் கெட்ட பயல்களைப் பற்றிய என் பின்னூட்டத்தைப் போடா விட்டாலும் பரவாயில்லை., அருண் ஷோரி, சோ, செழியன் மீட்டிங் பற்றி தனி ப்ளாகாகப் போட்டு ஒரு அறிவிப்புக் கொடுக்கலாம்ல? கண்ட கண்ட பொறுக்கிங்க கூப்புடுற மீட்டிங்குக்கு எல்லாம் இலவச விளம்பரம் தர்றீங்க, இதுக்குக் கொடுக்கக் கூடாதா? ப்ளீஸ்