பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 19, 2007

கனிமொழி கருணாநிதி

இன்று வந்த செய்தி:

தமிழக அரசு உதவியுடன் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு டாக்டர்கள் பலரும், பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் பேசி மருத்துவம் பார்ப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது என்று கனிமொழி கருணாநிதி எம்.பி. வருத்தத்துடன் கூறினார்

இதில் செய்தியில் பிரமாதமாக ஒன்றும் இல்லை, ஆனால் கவிஞர் கனிமொழி என்று அழைத்துக்கொண்டிருந்த பத்திரிக்கைகள் (நேற்று முதல் ?) கனிமொழி கருணாநிதி எம்.பி என்று அழைக்க தொடங்கியுள்ளது.

"என்னை என் சொந்த தகுதிகளை வைத்துத்தான் அடையாளம் காட்ட விரும்புகிறேனே தவிர, கருணாநிதியின் மகள் என்ற அடையாளம் தேவையில்லை. அவரை அன்பான அப்பாவாக மட்டுமே பார்க்கிறேன்" - கனிமொழி

6 Comments:

Anonymous said...

Unmaithane...enna irundhaalum avarum karunaanidhiyin magal dhane..
adhusari kanimozhi's hubby enna aanaar..

வெங்கட்ராமன் said...

****************************************
"என்னை என் சொந்த தகுதிகளை வைத்துத்தான் அடையாளம் காட்ட விரும்புகிறேனே தவிர, கருணாநிதியின் மகள் என்ற அடையாளம் தேவையில்லை. அவரை அன்பான அப்பாவாக மட்டுமே பார்க்கிறேன்" - கனிமொழி
****************************************
அது போன மாசம்

****************************************
கனிமொழி கருணாநிதி எம்.பி என்று அழைக்க தொடங்கியுள்ளது.
****************************************
இது இந்த மாசம்

அக்குஹீலர் சுப்ரமணியன் said...

///வெங்கட்ராமன் said...

Super Punch!!!

G. Krishnamurthy said...

மூத்த மகள் செல்விக்கு கனிமொழியை முன்னிலைப்படுத்துவது பிடிக்காமல் போய்விட்டது. காரணம் பழங்கால, அரதப் பழசான கதையான 'சின்ன வீட்டு'க்குப் பிறந்தவர் என்பதால்தான். கலைஞரின் மூன்றாவது திருமணத்தை அகில உலகமும் ஏற்றுக் கொண்டாலும், இன்னமும் கலைஞரின் இரண்டாவது மனைவி தயாளு அம்மையார் ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜாத்தி அம்மையாருடன், இதுவரை தயாளு அம்மையார் ஒரு வார்த்தைகூட பேசிக் கொண்டதில்லை.

ஆலிவர் ரோடு வீட்டில் நடந்த கனிமொழி-அரவிந்தன் திருமணத்தின்போதுகூட தயாளு அம்மையார் அந்த வீட்டுக்கு வரவில்லை. அப்போது பெண்ணின் தோழியாக இருந்தவர் அக்கா செல்விதான். அதன்பின் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த ரிசப்ஷனுக்கு மட்டுமே வந்து தலையைக் காட்டினார் தயாளு அம்மையார்.
இப்படி ஆலிவர் ரோடு வீட்டுப் பக்கம் காரில்கூட வரமாட்டேன் என்ற விரதத்தில் இருந்த தயாளு அம்மாவை, அங்கே போக வைத்த பெருமையும், இரண்டுபட்டுக் கிடந்த குடும்பத்தை அப்போதே ஒன்று சேர்த்த பெருமையும் ஜெயலலிதா அம்மையாருக்கு உண்டு.

Anonymous said...

ponamaasam...adhu ilakkiyavaadhi kanimozhinga..ada indhamaasam idhu arasiyalvaadhi kanimozhinga..ingittu tamilnadu...angittu delhingoo.

கௌதமன் said...

எனக்கு, இதில் சமீபத்திய திருமதி, செல்வி - லாவணிகள் சம்பந்தம் இருப்பதாக ஒரு சந்தேகம்.