சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கொடைக்கானல் பிளசன்ட்ஸ் டே ஓட்டலில் 4 மாடிகளை 6 மாதத்துக்குள் இடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின்போது பிளசன்ட்ஸ் ஸ்டே என்ற பெயரில் கொடைக்கானலில் ஓட்டல் கட்டப்பட்டது. ரூ.1.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் சட்ட விதிமுறைகறை மீறி கட்டப்பட்டிருப்பதாக பழனி பாதுகாப்பு சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்பது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் முகாபாத், சுகுணா ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். அதில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட பிளசன்ட்ஸ் ஸ்டே ஓட்டலின் 4 மாடிகளை 6 மாத காலத்துக்குள் இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக 1997ம் ஆண்டு திருத்தப்பட்ட நகராட்சி சட்டம் 3வது பிரிவையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, July 26, 2007
பிளசன்ட் ஸ்டே - 4 மாடிகள் இடிக்க வேண்டூம் - ஐகோர்ட்
Posted by IdlyVadai at 7/26/2007 02:44:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment