பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 16, 2007

பிஎஸ்என்எல் - 30 கோடி நஷ்டம்

டெண்டர் பிரச்னையால் "பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம்"


பிஎஸ்என்எல் டெண்டர் பிரச்னையால் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபமும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநிலச் செயலர் என்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் கூறியது:

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஜிஎஸ்எம் 2ஜி மற்றும் 3ஜி கருவிகள் வாங்க டெண்டர் இறுதி செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும், கருவிகள் வாங்க ஆர்டர் வழங்காததால் பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

டெண்டர் பிரச்னையால் மாதம் ஒன்றுக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 65 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் 29 ஆயிரம் செல் இணைப்புகளை மட்டுமே வழங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் வேலை நிறுத்தம் என்ற நிலைக்கு பிஎஸ்என்எல் ஊழியர்களும் அலுவலர்களும் தள்ளப்பட்டனர்.

அவசர அறிவிப்பின் மூலம் பொய்யான தோற்றத்தை பதிய அமைச்சர் ராசா மேற்கொள்ள, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் நலனுக்காக அறிக்கை விடுகிறார். இவர்கள் இருவரும் டெண்டர் பிரச்னையை அரசியல் ஆக்கியதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருவதுதான் வேதனை.

முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் அமைச்சரின் அரசியல் சர்ச்சைகளில் சிக்கி, பிஎஸ்என்எல் நிறுவனம் மக்கள் நலன்களை, தனியார் முதலாளிகளிடம் அடகு வைத்துவிடக் கூடாது. எனவே அரசியல் சர்ச்சைகளை உதறித் தள்ளிவிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத் தலைவர் அக்கறையுடன் செயல்பட்டு, 15 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும்.

2 Comments:

Anonymous said...

cho audio speech on prathiba patil:
http://www.esnips.com/web/bseshadri-podcasts

Anonymous said...

the loss is 30 crores or 30 thousand crores?? correct the title pl!!