இந்த கடிதத்தில் விடை தெரியாத கேள்விகள், புத்தகங்களைப் பற்றி மட்டும்.
அன்புள்ள பாடிகாட் முனீஸ்வரனே,
நலமா ? இந்த கடிதத்தில் எனக்கு விடை தெரியாத கேள்விகள் சில இருக்கு. அதற்கு பதில் போடவும்.
* உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க ஜனாதிபதியின் ஒப்புதல் என்ன ஆயிற்று ?
* அரசு ஆணைகள் எல்லாம் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று மருத்துவர் வழக்கம் ஆர்ப்பாட்டம் செய்தார். இப்ப மறந்துவிட்டாறா ?
* தேர்தல் போது, வைகோ மதிமுக எம்.பிக்களின் எண்ணிக்கையும் சேர்த்து காட்டி கூடுதல் இடங்களை திமுக பெற்றது என்றார். கலைஞர் அதற்கு "சோனியாவும், பிரதமரும் மறுப்பார்கள்" என்றார். ஏன் இன்னும் மறுக்கவில்லை ?
* காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கு என்ன ஆயிற்று ?
* இலவச சைக்கிள் திட்டம் இன்னும் நடக்கிறதா ? டெண்டரில் ஏதோ குளறுபடி என்று சொன்னார்களே ?
* "மதுபானத் கடைகளில் எனக்கும் சசிகலாவுக்கும் பங்கு இல்லை" என்றார் ஜெ. இருக்கு என்றார் கலைஞர். எது உண்மை ?
* ஜிப்மர் கல்லூரிக்கு தன்னாட்சி கிடைத்துவிட்டதா ?
* தேர்தலின் போது இலவச டிவியுடன் இலவச கேபிள் என்றார் கலைஞர் தற்போது, அது தரப்படுகிறதா ? அல்ல மூன்று முட்டைகள் மட்டும்தானா ?
* டான்ஸி நிலம் என்ன ஆயிற்று ? அரசுக்கு திரும்ப கிடைத்துவிட்டதா ?
* பீடிக்கட்டுகள் மீது மண்டை ஓடு விவாகாரம் என்ன ஆயிற்று ?
பின்னூட்டதில் வரும் மற்ற கேள்விகளை உனக்கு அடுத்த மடலில் அனுப்புகிறேன். இப்ப சில புத்தகங்களை பற்றி
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. மொத்தம் மூன்று பாகங்கள் ஒவ்வொரு பாகத்திலும், சுமார் 1000 பக்கங்கள். மூன்று பாகங்களுடன், ஆங்கிலத்தில் 'பொருள் குறிப்பு அகராதி' ( index மாதிரி ) என்று ஒரு சின்ன புத்தகம் தருகிறார்கள். இந்த சின்ன புத்தகம் இல்லை என்றால், அதில் கண்டுபிடிப்பது கஷ்டம். R.K.Laxman, Friedman,jayalalitha, karunanidhi, sanskrit, sanyasi, san jose, periyar, sankara das swamigal, logic என்று எல்லாம் இருக்கிறது. முனீஸ்வரன் பற்றி தேடி பார்த்தேன், சாரி இல்லை.
சிவபாலன் Tintin பற்றி எழுதியிருக்கிறார். அதை பற்றி ஒரு செய்தி, "Tintin In The Congo" என்ற புத்தகம் இப்ப நல்ல விற்பனை ஆகிறதாம். அதில் சில வசனங்கள், கருப்பு இன மக்களை இழிவுபடுத்துவதாகவும், இனவெறி சம்பந்தமாக இருப்பது தான் காரணம். ( இதில் கருப்பு இன மக்களை குரங்கு என்று சொல்லுவதாக வந்துள்ளது ). இந்த புத்தகம் லண்டன் கடைகளிலிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளபடுகிறது.
சேவியர் ஹாரிபாட்டர் பற்றி எழுதியிருக்கிறார். அதை பற்றி மேலும் சில தகவல்கள். இந்த மாதம் 21ஆம் தேதி வரவிருக்கும் ‘ஹாரிபாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ("Harry Potter and the deathly hallows" ) புத்தகம் இப்பவே Amazon.comல் இரண்டு மில்லியன் பிரதிகள் முன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஆறு நாட்களில் இந்த எண்ணிக்கை கூடும் என்று சொல்லுகிறார்கள். ஏழாம் பாகம் தான் ஹாரி பாட்டரின் கடைசி புத்தகமாம்.
அதில் ஹாரிபாட்டர் என்ன ஆகிறார் என்ற முடிவை பரம ரகசியமாக வைத்துள்ளார்கள். ரகசியத்தை காக்க செலவு எவ்வளவு தெரியுமா ? 800 கோடி ரூபாய். புத்தகம் ஏற்றி செல்லும் லாரிகளில் செயற்கைகோள் மூலம் டிராக் செய்கிறார்கள். புத்தகம் அச்சகத்தில் யாரும் மொபைல் போனை எடுத்து செல்ல கூடாது, அதே போல் டிபன் பாக்ஸுக்கும் தடா!. அச்சாகும் போது படிக்க கூடாது என்று வேலை செய்யும் இடத்தில் லைட்டை கூட அணைத்துவிட்டார்களாம். நாயுடன் காவல் காக்கும் காவலர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 30 பவுண்ட், நாயில்லாமல் காவல் காக்கும் காவலருக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் என்று ஒரே பரபரப்பு.
சிலர் ஹாரிபாட்டர் இறந்துவிடுவார் என்கிறார்கள்; தற்கொலை என்கிறார்கள், இதற்கு கூட பெட்டிங் ஆரம்பித்துவிட்டது.
இப்படி இருக்க கேபிரியல் என்றவர் இது தான் முடிவு என்று சொல்லி பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார். எது எப்படியோ கடைசியில் மகிழ்ச்சியாக முடியாது என்று ஜே.கே ரெளலிங் (offlineனாக) சொல்லியிருக்கிறார். பார்க்கலாம். உனக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லு. அப்புறம் மூல பிரதியை எடுத்துக்கொண்டு லண்டனிலிருந்து அமெரிக்கா சென்றவர் பாதுகாப்பிற்கு ஃபிளைட்டில் அதன் மேலேயே உட்கார்ந்து கொண்டு சென்றாராம். சூடாக விற்பனையாவதில் ஆச்சரியம் இல்லை :-)
தமிழ்நாட்டு பாட புத்தகத்திலிருந்து கம்ப ராமாயணத்தை எடுத்துவிட்டார்களாம் எனக்கு நேற்று தான் தெரிந்தது, அதே போல் பிரிட்டன் கல்வி பாடப் புத்தகத்தில் இருந்து, மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில், மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களின் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாம என்ன சொல்ல முடியும் ?
கடைசியாக ராமதாஸ் சொல்லியிருப்பதை கொடுத்துள்ளேன். சிரிக்காமல் படிக்கவும்.
பா.ம.கவுக்கு கனவு காணும் உரிமை கூட இல்லையா ? - ராமதாஸ்
2011 பா.மா.க ஆட்சி அமைக்கும் - ராமதாஸ்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, July 16, 2007
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-07-07
Posted by IdlyVadai at 7/16/2007 08:49:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
அண்ணாச்சி ராஜகோபால் பெயில் வந்தாரே அது என்ன ஆச்சு, ஒரு குற்றவாளி பெயிலில் அதிக பட்சம் எத்தனை வருஷம் இருக்கலாம், இன்னும் ஒரு 50 வருஷத்துக்குள்ளாவது அவரது கேசை அவரது கொள்ளுப் பேரன் சாகும் முன்னாலாவது நடத்தி முடிப்பார்களா என்று காடிகாடிடம் கேட்டுச் சொல்லவும் இதற்கு மட்டும் சரியான பதில் சொன்னால் என்னிடம் இது போல இன்னும் ஒரு 101 கேள்விகள் இதே பாணியில் உள்ளன, ரெடியா?
Some more questions for B.Muneeswaran. He is the only one who knows the answer for these:
1. Visu announced that he'll contest in elections. Has he changed his mind???
2. Dr. Ramadoss once apposed "Generation politics" (Vaarisu arasiyal). Now will Dr. and Jr Dr. agree to the same???
3. Do Jayalalitha and Vijayakanth have a habit of drinking liquor? And is Karunanidhi an absolute tee-tottler? B.Muneeswaran might know this.
ZOMG SPOILERS
Post a Comment