தி.மு.க. பேச்சாளர்கள் தேர்தலில் எப்படி பேச வேண்டும், என்ன கருத்துக் களை வலியுறுத்த வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு ஆதர வாக எவ்வாறு பிரசாரம் செய்வது குறித்து பேச்சாளர் களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் இன்று அறிவாலயத் தில் நடந்தது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, துணை பொதுச் செயலாளர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், சற்குண பாண்டியன், பரிதி இளம்வழுதி ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர்கள் திருச்சி சிவா, கோபி செழியன், கூத்தரசன், புதுக்கோட்டை விஜயா, சேலம் சுஜாதா உள்பட 200 பேச்சா ளர்கள் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் கருணாநிதி, பேச்சாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். எதிர்க்கட்சி தலைவி ஜெயலலிதா, தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற வைகோ ஆகியோரை திட்டி பேசவோ, விமர்சிக்கவோ கூடாது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் சந்தித்த பிரச்சினை கள், சர்வாதிகார ஆட்சி, ஏகாதிபத்தியம் பற்றி பேச வேண்டும்.
இந்த ஆட்சியில் ஒரு சிலரே ஆதாயம் பெற்று உள்ளனர். விவசாயிகள், நகர்ப்புற ஏழை கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் எந்த புதிய தொழிற்சாலையும் வர வில்லை என்ற கருத்தை மக்கள் இடையே எடுத்துரைக்க வேண்டும்.
ஆவேசமாக பேசவோ, கீழ்த்தரமாக திட்டவோ கூடாது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதே குறிக்கோளாக கொள்ள வேண்டும். கூட்டணி கட்சிகளை ஆதரித்து தெருமுனை பிரசாரம், பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும் என 10 அம்சங் களை பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு பேச்சாளர் களுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞருக்கு பாராட்டுக்கள் !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 28, 2006
அறிவாலயத்தில் அறிவுரை
Posted by IdlyVadai at 3/28/2006 07:29:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
வழக்கமா, அவரு, செய்யாதன்னு சொன்னா, செய்யுன்னு அர்த்தமுங்க. அவரு, செய்யாதன்னு சொல்லறத செய்யனுன்னு நெனச்சி, இவங்க அவரு பேசாதன்னு சொன்னத பேசனாங்கன்னா, கத கந்தலுங்க.
hello Idly vadai, good repoting is the best form of communication.you have done a marvelous job. aththuzhaai.
Post a Comment