பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 08, 2005

நட்வர் சிங் டிராமா

நட்வர் சிங் விவகாரம் குரோஷியா நாட்டுக்கான இந்தியத் தூதர் மாத்ரானி அளித்த பேட்டிக்கு பின் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.

இதில் நட்வர் சிங், அவரது மகன் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார்கள்(அல்லது தியாகம்). காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தை பார்க்கும் போது, இந்த எண்ணை விவகாரத்தில் கணிசமான பங்கு காங்கிரஸுக்கு நிச்சயமாக கிடைத்திருக்கும் என்பது என் கருத்து

சோனியா, மன்மோகன் சிங் பயப்படுவது பி.ஜே.பிக்கோ அல்லது பார்லிமெண்ட் ஸ்தம்பித்துவிட்டதற்கோ கிடையாது. எங்கே நட்வர் சிங்கை பதவி நீக்கம் செய்தால் அவர் உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயம் தான். இந்த டிராமாவின் திரைக்கதையை மேலும் ஒழுங்காக எழுதிவிட்டு பின்னர் நடிக்க தொடங்குவார்கள். (அதாவது நட்வர் சிங்கிடம் கொஞ்சம் பேரம் பேசிவிட்டு) அதுவரை பத்திரிக்கைகள் தங்களுக்கு தெரிந்தவற்றை எழுதிக்கொண்டிருப்பார்கள். மக்கள் அடுத்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தவுடன் இந்த எண்ணை விவகாரம் பிசுபிசுத்துப்போய்விடும்.

0 Comments: