பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 28, 2005

கைவிரல் கையேடு



கைவிரல் கையேடு ;-) ( படத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக தெரியும் )
( நன்றி http://www.telegraphindia.com/ )

Read More...

என்ன இது, சின்னப்புள்ளத்தனமா இருக்கு ...

1. நடிகை சுஹாசினி கருத்து பிராமணர் - பிராமணர் அல்லாதோர் என்ற இயக்கத்தை வளர்க்கப் பயன்படும் - தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி

2. இந்த படத்தை பார்க்கவும்

Read More...

Wednesday, November 16, 2005

இந்தியா தென் ஆப்பரிக்கா கிரிக்கெட்

இன்று ஹைதிராபாதில் நடக்கும் ஒரு நாள் போட்டியில் இந்தியா அதிரடியாக (டான்ஸ்) ஆடிக்கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரம்: http://imsports.rediff.com/score/in_match1155.html

ஒரு சின்ன வாக்கெடுப்பு - மேலே பார்க்கவும் !

பிகு: இந்தியா சரியாக எவ்வளவு ரன் எடுக்கும் என்று சொல்லாம்.

என் கணிப்பு : 143 ஆல் அவுட்

Read More...

Monday, November 14, 2005

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !

தங்கர்பச்சன் கருத்துக்கு குஷ்பு ஆவேசம்.

தமிழ் கலாசாரத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக நடிகை குஷ்புக்கு தமிழக முழுவதும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்தன. பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கும் தொடரபட்டன.

குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது: பா.ம.க. இன்று மனு

தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு பேசிய கருத்துகள் சரியே என அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகை சுஹாசினிக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.

"குஷ்பு-சுஹாசினி ஆகிய 2 பேர் வீட்டின் முன்பும் துடைப்பம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்று தமிழர் பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கூறியிருக்கிறார்.

மனோரமா: முதல்வரும் ஒரு நடிகையாக இருந்தவர்தான். அவரே குஷ்பு கூறியது தவறு என்று கூறியிருக்கிறார். முடிந்த விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். நான் படித்தவள் இல்லை. அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.

தயாரிப்பாளர் கேயார்: குஷ்பு, சுஹாசினி ஆகியோரின் பேச்சு அவர்களுக்கு வேண்டுமானால் துணிச்சலான பேச்சாக தெரியலாம். அவர்கள் கருத்தை ஏற்கமுடியாது. இது கண்ணகி வாழ்ந்த நாடு. விளம்பரம் இல்லாமல் இருப்பதை விட இப்படித் தவறான விஷயங்களைப் பேசி மலிவான விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.

இயக்குநர் சீமான்: தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது, தமிழர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதெல்லாம் சகிக்க முடியாத விஷயங்கள். இதற்காக சுஹாசினி மன்னிப்பு கேட்கவேண்டும்.

கவிஞர் மேத்தா: குஷ்பு விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி கூரையின் மேல் விழுந்து கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சமயத்தில் அதை அணைக்கப் பார்ப்பதுதான் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக்கூடாது.

தமிழருவி மணியன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சர்வதேச சிந்தனையை விதைத்த தமிழர்களுக்கு கொம்பு முளைத்திருப்பது உண்மைதான்.

இல.கணேசன்: தமிழர்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாகப் பேசுவதா என்று ஆவேசப்படும் தமிழக மக்களுக்கு சவால்விடும் வகையில் குஷ்புவுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சுஹாசினி பேசியுள்ளதாகவே கருதுகிறேன்.

வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பு, சுஹாசினி போன்றவர்கள் தயாராகிவிட்டனர். இவர்களைத் திருத்த முடியாது. தமிழர்களுக்கு கொம்பு இருப்பதைக் காட்டினால் அதை இவர்களால் தாங்கமுடியாது.

திருமாவளவன்: என்னைக் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன் என்று குஷ்புவைக் கண்டித்தவர்களைத்தான் சுஹாசினி கூறியுள்ளார். ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்பு கேட்க இவர் யார்? தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டுமாம்.

"என் மீது நீங்கள் குற்றம் சாட்டினால் உங்களையும், உங்கள் தலைவரையும் கோர்ட்டில் சந்திப்பேன்'' - சுஹாசினி எஸ்.எம்.எஸ்.

எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் - நடிகை சுஹாசினிக்கு சரத்குமார் கண்டனம்

செயற்குழுவை கூட்டி குஷ்பு மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

கடைசி செய்தி: ( சத்யராஜ், வடிவேலு )

சத்யராஜ்: நடிகர், நடிகைகள் பேச்சை நாடே உற்று கவனித்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் நல்லதைப் பேசினாலும் கெட்டதைப் பேசினாலும் அதற்கேற்றாற்போல் பல மடங்கு விளைவு ஏற்படும். பிரபலமடைந்ததற்கான விலை அது. எனவே நடிகர், நடிகைகள் பொது மேடைகளில் பேசும்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். முடிந்துபோன ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறி சர்ச்சையை எழுப்புவது கொம்பு சீவி விடுவது போல. சுஹாசினி அவ்வாறு பேசியதைத் தவிர்த்திருக்கலாம்.

வடிவேலு: குஷ்புவால் ஏற்பட்ட பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைக்க எல்லோரும் பாடுபட்டோம். அது ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆனால் சுஹாசினி இப்போது தேவையில்லாமல் அந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எல்லோரையும் வம்புக்கு இழுப்பது போல் பேசியுள்ளார்.

இவர்கள் எல்லோருக்கும் இட்லிவடை சார்பில் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் !

Read More...

Tuesday, November 08, 2005

அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்.

இந்தியாவின் முதல் குடிமகன் திரு. அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அவர்களுக்கு,

கும்புடுகிறேன் சாமி!

இப்பெல்லாம் யாருக்காவது கடுதாசி எழுதறதுன்னாலே கையல்லாம் வெடவெடுக்கிறது. தமிழ் வலைப்பதிவின் லேட்டஸ்ட் ஃபேஷன் உங்களுக்கு கடிதம் எழுதுவதுதான். அந்த விஷயத்திற்கு அப்பால வருவோம். அப்புறம் நீங்க இன்னும் கவிதையெலாம் எழுதிக்கிட்டு இருக்கீங்களா ? அப்படியே ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சிங்கனா ஷோக்கா இருக்கும். இங்கேயும் நிறைய அரசியல் இருக்கு.

சின்ன வயசில உங்க போட்டோவை ரூம்ல எல்லாம் மாட்டி வெச்சிருப்பேன். எப்போ உங்கள் போட்டோவை பார்த்தாலும் அதில உங்கள் உழைப்பு, நேர்மை, செயல் திறமை எல்லாம் தெரியும். உங்க அக்னிச் சிறகுகள் புத்தகத்தை நிறைய முறை படிச்சிருக்கேன்.

உங்களை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்த போது, முதல மகிழ்ச்சி அடைந்தவன் நானாகத்தான் இருப்பேன். இந்தியாவிற்கு விடிவுகாலம் வந்தது என்று நினைத்துக்கொண்டேன். விஞ்ஞானி ஜனாதிபதியாகப் போகிறார் என்று ஒரே சந்தோஷம். எல்லோருக்கும் இனிப்பு எல்லாம் கொடுத்தேன்.

ஆனால் நீங்கள் கூட மற்றவர்கள் என்ன செய்யதார்களோ அதைத்தான் இன்று வரை செஞ்சிருக்கீங்க. நடு ராத்திரி வீடு தேடி வந்து கடுதாசியை நீட்டினால் உடனே கையெழுத்து போட்டுடரீங்க. அடுத்த நாள் காலை பேப்பர் பாத்தவுடன் தான் உங்களுக்கே அது அமைச்சர் மாற்றம் அல்லது ஆட்சி கலைப்பு பற்றியது என்று என்று தெரியவரும். அப்துல் கலாம் என்ற உங்கள் பெயரை அப்துல் சலாம் என்று எல்லோரும் கிண்டல் பண்ணுகிறார்கள். இது தேவையா ?

பீகார் சட்டசபை கலைத்ததற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. அதை படித்தீர்களா ? இது அசிங்கம் இல்லையா ? கையெழுத்து போடுவதற்கு முன் ஒரு சின்ன கேள்வி கூட கேட்க மாட்டிங்களா ? கொஞ்ச நாள் முன்னாடி "கவர்னர்கள் சுதந்திரமாக செயல்படலாம், எந்த முடிவையும் எடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு; யாருக்கும் பயப்படத் தேவையில்லை" என்று சொன்னீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வை என்னேன்னு சொல்லுவது ?

பொக்ரான் அணுகுண்டு நல்லா போட்டீங்க ஆனா அதை விட ஒரு பெரிய குண்டை சில வாரங்களுக்கு முன் போட்டீங்க - அது ராஜிவ் கொலையாளிகள், வீரப்பன் கூட்டாளிகள் உட்பட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சுமார் 40 கைதிகளுக்கு கருணை காட்டுமாறு மத்திய அரசுக்கு நீங்கள் சிபாரிசு செய்திருக்கிறீர்கள் என்று படித்தேன். ஏன் அவர்கள் மீதி குற்றம் சுமத்தியவுடனே கருணை காமிக்கலாமே ? கோர்ட், கேஸ், அப்பீல், தீர்ப்பு என எதற்கு வீண் செலவு, நேர விரயம் ? அப்புறம் டெல்லியிலே குண்டு வெச்சவங்களையும் இந்த லிஸ்டில சேத்துக்குவீங்களா ?

எதிர் கட்சி அவ்வப்போது உங்களிடம் வந்து டீ, காப்பி சாப்பிட்டு விட்டு ஒரு மனுவை கொடுக்கிறார்கள். அதை நீங்கள் படிக்கிறீர்களா ? அல்லது ஃபைல் செய்து வைத்துக்கொள்வீர்களா ? அல்லது பழைய பேப்பர் காரனுக்கு போடுவீர்களா ? எதிர் கட்சியும் தவறாது மனுவை கொடுத்துவிட்டு வெளியே வந்து போட்டோ எடுத்துக்கொண்டு NDTVக்கு பேட்டி கொடுக்கிறார்கள். இதெல்லாம் சுத்த ஏமாத்து வேலை என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் இந்த பாசாங்கு ?

உங்க ராஷ்ட்ரபதி மாளிகையில் மூலிகை தோட்டம் எல்லாம் நீங்க வளர்க்கிறதா கேள்விபட்டேன். அதில நம்ம அரசியல்வாதிகள் திருந்துவதற்கு எதாவது ஸ்பெஷல் மூலிகை இருக்கான்னு பாருங்க. நீங்கள் விஷன் 2010 என்று ஏதேதோ சொன்னிர்களே?

வருடா வருடம் நடிகர்களுக்கு தேசிய விருது கொடுக்கிறீங்க. நல்ல விஷயம் தான். ஆனா நீங்கள் விருது கொடுத்த சில நடிகர்களின் வீடுகளில் எல்லாம் இன்கம் டாக்ஸ் ரைடு எல்லாம் நடந்திருக்கிறது. அவர்கள் அரசாங்கத்தை ஏமாத்தியிருந்தால் இந்த விருதுக்கு அவர்கள் தகுதியானவர்களா ?. எவ்வளவோ பேர் இன்கம் டாக்ஸ் எல்லாம் தவறாது கட்டிக்கொண்டு நல்ல குடிமகன்களாக இருக்கிறார்கள். இவர்களை காட்டிலும் நடிகர்கள் உசந்தவர்களா ? அடுத்த முறை விருது கொடுக்கும் முன் கொஞ்சம் யோசிப்பீர்களா ?

வருஷா வருஷம் அந்தந்த தினங்களுக்கு வாழ்த்து சொல்லுவதும், டிவியில் குடியரசு/சுதந்திர தினத்திற்கு ரேடியோ/டிவியில் பேசுவதும் ஒரு சடங்காக ஆகிவிட்டது. இந்த தடவை பவர் பாயிண்ட் ஸ்லைட் எல்லாம் ஷோக்கா காமிச்சிங்க. இதனால் என்ன பிரயோஜனம் ?

வருகிற 14 ஆம் தேதி, குழந்தைகள் தினம். குழந்தைகளை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். குழந்தைகள் தின வாழ்த்துக்கள். சரி என்ன செய்வதாக உத்தேசம் ? உங்கள் பதவி காலத்தில் எதாவது ஒன்றாவது கொஞ்சம் வித்தியாசமாக செய்வீர்கள் என்று இன்றும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. செய்வீர்களா ?

ஆவலுடன்,
இட்லிவடை
(ஒரு சராசரி இந்திய குடிமகன்)

Read More...