பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 22, 2005

பிளின்டாப் அதிர்ச்சி தகவல்

லண்டன்: ""டில்லி போட்டியில் ஆர்வமாக பீல்டிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஏதோ ஒன்று என் மீது பயங்கரமாக தாக்கியது. உடனே குனிந்து பார்த்தேன். மைதானத்தில் ஆங்காங்கே துப்பாக்கி குண்டுகள் சிதறிக் கிடந்தன. அப்படியே அதிர்ந்து போனேன், '' என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து அணியின் ஆஷஸ் நாயகன் ஆன்ட்ரூ பிளின்டாப்.

சவுரவ் பதிலடி:கடந்த 2002ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 6 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இங்கிலாந்து 13 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. இந்தச்
சூழலில் அதிரடி வீரராக கலக்கிய பிளின்டாப் தொடர் சமநிலையில்(33) முடிய முக்கிய காரணமாக இருந்தார். சர்ச்சைக்குரிய டில்லி ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 39 பந்தில் 52 ரன் விளாசி வெற்றி தேடி தந்தார். அடுத்து மும்பையில் நடந்த 6வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. உடனே கால்பந்து வீரர் பாணியில் பிளின்டாப் சட்டையை கழற்றி சுழற்றினார். இதற்கு பதிலடியாகத் தான் லார்ட்ஸ் அரங்கில் நாட்வெஸ்ட் தொடரை நமது அணி வென்ற போது கேப்டன் கங்குலியும் சட்டையை கழற்றி சுழற்றினார்.


சரிதை:இப்படி பல்வேறு விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய தொடர் குறித்து தனது "பீயிங் பிரட்டி' சுயசரிதையில் பிளின்டாப் குறிப்பிட்டுள்ளார். இதில் டில்லி ஒரு நாள் போட்டியில் யாரோ ஒருவர் தன்னை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை வெளியில் தெரிவிக்க அணி நிர்வாகம் தடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது பற்றி பிளின்டாப் எழுதியிருப்பதாவது:

ஐந்தாவது ஒரு நாள் போட்டி டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 2002, ஜன.31ல் நடந்தது. நான் துடிப்பாக பீல்டிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஏதோ ஒன்று என் மீது பயங்கரமாக தாக்கியது. குனிந்து பார்த்த போது மைதானத்தில் துப்பாக்கி குண்டுகள் சிதறிக் கிடந்தன. பொதுவாக இந்திய துணைக் கண்டத்தில் நடக்கும் போட்டிகளின் போது ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை தான் வீசி எறிவர். ஆனால் துப்பாக்கியால் சுடுவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்தேன். அப்போதைய கேப்டன் நாசர் ஹூசைன் மிகுந்த ஆத்திரமடைந்தார். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மீடியா அதிகாரி ஆன்ட்ரூ வால்போல் சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம் என்று கூறி விட்டார். அடுத்த நாள் நிருபர்களை சந்திக்கும் போது எதையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். இப்போது அந்த சம்பவத்தை நினைக்கும் போது எல்லாவற்றையும் அப்போதே தெரிவித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏöன்றால் நான் சுட்டு வீழ்த்துவதற்காக களத்தில் நிற்கவில்லை. அணி நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளால் எல்லாவற்றையும் மூடி மறைக்க வேண்டியதாயிற்று.

இவ்வாறு டில்லி அதிர்ச்சி சம்பவம் குறித்து பிளின்டாப் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் மறைத்தார்?

பிளின்டாப் புகாரை மறுத்துள் ளார் டில்லி கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் சி.கே.கண்ணா. "" இது மிகவும் வேடிக்கையான குற்றச்சாட்டு. அப்போது டில்லி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அப்படியிருக்கையில் துப்பாக்கியால் ஒருவர் சுடுவது எல்லாம் நடக்காத காரியம். பிளின்டாப் சொல்வது உண்மையானால் இத்தனை காலம் ஏன் மறைத்தார்? எனவே அவரது புகாரை சீரியசாக எடுத்துக் கொள்ள முடியாது,'' என்றார் கண்ணா.

Read More...

Tuesday, September 13, 2005

கேப்டன் பேட்டி

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட "சூப்பர் ஸ்டார்", அரசியல் வானில் தோன்றாமலே ஒதுங்கியபடி இருக்க... "நான் நிச்சயமாக வருவேன்" என்று கடந்த சில ஆண்டுகளாகவே சூடு கிளப்பிக் கொண்டிருந்த "கேப்டன்", களத்தில் குதித்தே விட்டார். வரும் 14'ம் தேதியன்று மதுரையில் அவர் நடத்தப்போகும் மாநாடுதான் தமிழகத்தில் இன்றைக்கு "ஹாட் டாபிக்"! எந்தப் பக்கம் திரும்பினாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது.

மாநாட்டுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், "நான் நினைப்பது என்ன... சாதிக்கப்போவது என்ன... அதையெல்லாம் எப்படி சாதிக்கப் போகிறேன்" என்பது குறித்தெல்லாம் "விஜய் டி.வி"'க்காக மனம் திறந்திருக்கிறார் "கேப்டன்" விஜயகாந்த்.


* நடிக்க வந்த புதுசுல, மூணு நாளைக்கு மட்டும் இவரை வெச்சு படமெடுத்துட்டு, திடீர்னு சொல்லாம இவரை அனுப்பிட்டாங்க. என்ன காரணம்னுகூட இவருக்குத் தெரியலை. அப்புறமா விசாரிச்சப்பத்தான், ‘இவருக்கு உச்சரிப்பே வராது. தமிழ் சரியா பேசத் தெரியலை’னு சொல்லியிருக்காங்க. அப்பதான் அவரு முடிவெடுத்திருக்காரு. தமிழ் நல்லா பேசறது மட்டுமல்ல... நான் அனல் கக்கற நீண்ட வசனமெல்லாம் பேசணும், அதை மக்கள் ஆரவாரம் பண்ணி ரசிக்கணும்னு முடிவெடுத்திருக்காரு. "ரமணா" படத்துல, ஏக அப்ளாஸ§க்கு நடுவில் அவர் பேசுகிற வசனமெல்லாம்கூட அந்த கனவின் வெளிப்பாடுதான்.

* ‘எம்.ஜி.ஆர்&னா நல்லவர் என்கிற அசைக்க முடியாத எண்ணத்தை அவர் எனக்குள் உருவாக்கி வச்சிட் டாரு. அவரு ரொம்ப எளிமையானவர். மக்களோட ரசனையை துல்லியமா எடை போடத் தெரிஞ்சதால், அவரோட படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களா இருந்துச்சு. எல்லாரும் ரொம்ப கஷ்டப் பட்டு பண்ற எந்தவொரு விஷயத்தையும் எம்.ஜி.ஆர். அப்படியே ஊதித் தள்ளிட்டுப் போயிடுவாரு. அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச் சிருந்துது.

* நான் நடிக்க வந்த பிறகு சிவாஜியோட எனக்கு நெருக்கமா பழகற வாய்ப்பு கிடைச்சுது. அவரு எட்ட முடியாத உயரத்தை அடைந்துவிட்ட மிகப் பெரிய நடிகர்ங்கறதை தெரிஞ்சுகிட்டேன். அவரும் எளிமையானவருனு புரிஞ்சிகிட்டேன். இருந்தாலும், எல்லாத்துலயும் என்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்குத்தான் முதலிடம்’ என்ற விஜயகாந்த்,


* ‘நான் ஆரம்ப காலத்துல நடிக்க வந்தப்ப என்னோட பல நடிகைகள் நடிக்க மாட்டேன்னு மறுத்திருக்காங்க, தெரியுமா?’னு எந்த காம்ப்ளக்ஸ§ம் இல்லாம வெளிப்படையா தனது கடந்த கால நிகழ்வுகளையும் பகிர்ந்துகிட்டார்.


* ‘எத்தனையோ கட்சிகள் தமிழகத்துல இருக்கு. நீங்க பொது வாழ்க்கைக்கு வர்றதுனு முடிவு செஞ்ச பின்னாடி, உங்களுக்கு உரிய அந்தஸ்து கொடுக்கக்கூடிய ஏதாவது ஒரு கட்சியில் போய்ச் சேராமல்... ஏன் நீங்களே ஒரு புதுக்கட்சி ஆரம்பிக்கிறீங்க? இருக்கிற கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா?’னு கேட்டேன். பளிச்சுனு அவரிடம் ஒரு கோபத்தையும், ஆதங்கத்தையும் பார்த்தேன்.

‘எந்த கட்சிகளுமே மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்தலை. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறாங்க. மக்கள் வெறுப்பை ரொம்பவே சம்பாதிச்சிருக்காங்க. இந்த கசப்பான உண்மையை என்னால தாங்கிக்க முடியலை. நேர்மையா மக்களுக்கு உழைக்கணும். அதுக்காக ஒரு இயக்கம் ஆரம்பிக்கணும் என்கிற உந்துதல் காரணமாத்தான் நானே இறங் கிட்டேன்’னு சொன்னாரு.

‘நேர்மையா இயக்கம் நடத்தப் போறேன்னு சொல்றீங்க... நீங்க ஆரம்பிக்கப் போற கட்சிக்கு செயலாளர், பொருளாளர்னு பதவிகள் போட்டாகணும். மனிதர்களின் ஜாதகத்தையும், அவங்களோட கடந்த காலத்துப் பக்கங்களையும் புரட்டிப் பார்த்து, சரியா எடை போட்டுட முடியுமா? எந்த அடிப்படையில் பதவிகள் தருவீங்க? உங்க கட்சியிலயும் சத்தமில்லாமல் தாதாக்கள் ஊடுருவி விடலாமே?’

‘அப்படியெல்லாம் தப்பு நடக்காம இருக்கறதுக்கு நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அந்தத் திட்டத்தை மதுரையில் மாநாட்டுல அறிவிப்பேன். நீங்க வேணும்னா பாருங்க... அந்தத் திட்டத்தை அறிவிச்சு செயல்படுத்த ஆரம்பிச்ச பிறகு என்னை நிச்சயம் பாராட்டுவீங்க. என் கட்சிக்குக் கூட்டத்தை சேர்க் கறது மட்டும் எனக்கு இலக்கு இல்லை. கூட்டத்தை எப்படி நல்ல மனோபாவத்தோடு கொண்டு போறேன் என்பதும் லட்சியம். அதனாலதான் சொல்றேன்... கண்டவங்களையும் என் கட்சில சேர்க்க மாட்டேன். அவங்களுக்கெல்லாம் பதவி களைத் தூக்கிக் கொடுக்கவும் மாட்டேன்’

* ‘மனைவி என்பதே இன்றைய அரசியலில் "எக்ஸ்ட்ரா கான்ஸ்டிடியூஷனல் அத்தாரிட்டி" என்கிற மாதிரி ஆகிப் போச்சே... பல இடங்களில் அரசியல்வாதிகளைவிட, அவர்களுடைய மனைவியை "தலைவி"னு சொல்லிக்கிட்டு போய்ப் பார்த்து காரியம் சாதிக்கிற நடைமுறை இருக்கே. உங்க விஷயத்தில் எப்படி? அம்மாவைப் பார்த்துட்டுதான் ஐயாவைப் பார்க்கணும் என்கிற நிலைமை வந்துடுமா?"

‘பெண்களுக்கு முப்பத்து மூணு சதவிகிதம் கொடுக்கணும்னு எல்லாரும் போராடுறாங்க. நான், வாழ்க்கையில என் மனைவிக்கு ஐம்பது சதவிகித உரிமை கொடுத்திருக்கேன். எனக்கு ஒரு வயசு இருக்கும்போதே, என்னோட அம்மா இறந்துட்டாங்க. தாய்மை உணர்வுக்காக ஏங்கியே வளர்ந்தேன். அதை எனக்கு முழுமையா கிடைக்கச் செய்தது என்னோட மனைவி தான். என்னோட மகிழ்ச்சி, துக்கம், அவமானம், சாதனை இப்படி எல்லாத்தையும் என் மனைவிகிட்டதான் நான் பகிர்ந்துக்க முடியும். இரவுல படுக்கையறையில அவங்ககிட்டதான் என் மன உணர்வுகளைச் சொல்லி வடிகால் தேட முடியும்.

அப்படியிருக்க, எல்லாத்துலயும் என்னோட பங்கெடுத்துக்குற என் மனைவிக்கு, என் பொதுத் தொண்டிலும் உரிய பங்கு கொடுத்தா, அதை எப்படி தப்புனு சொல்லமுடியும். வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டுப் போக முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி கூட்டிக்கிட்டுப் போகமுடியுமா... இல்ல வேற பொண்ணுங்களை அழைச்சுக்கிட்டுப் போக முடியுமா..."

* ‘அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்ல ஜார்ஜ் புஷ் முதல் ஃபிரெஞ்சு அதிபர் வரையில் அவங்களோட மனைவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. அதுபோல நீங்களும் உங்க மனைவிக்கு கொடுக்கப் போறீங்களா?

கொஞ்சமும் யோசிக்காத விஜயகாந்த், ‘அது மாதிரிதான் நானும் இருக்கப் போறேன்’ என்றார்.

‘உங்க கட்சி போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் படுதோல்வியை தழுவி, டெபாஸிட் பறிபோயிடுதுனு வெச்சுப்போம். அப்ப என்ன பண்ணுவீங்க... இந்த கஷ்டகால அரசியலே வேணாம்னு ஒதுங்கிடுவீங்களா?’

‘எனக்கு பதவிங்கறது ரெண்டாம் பட்சம்தான். நீங்க நெனக்கிற மாதிரி ஒருபோதும் நடக்காது. இருந்தாலும், இதெல்லாத்தையும் மீறி நடந் துடுச்சுனு வெச்சுக்குவோம்... முன் வெச்ச காலை பின் வைக்க மாட் டேன். தொடர்ந்து மக்களோடு மக்களாக இருந்து அவங்களுக்கு சேவை செஞ்சிகிட்டுத்தான் இருப் பேன். அதை ஒரு வாக்குறுதியாவே தர்றேன். நான் ஏற்கெனவே சொன்னது தான், தோல்வினு வந்துட்டா எதுலயும் நான் வெற்றியடையாம விட மாட்டேன். இது சத்தியம். இன்னொண்ணு, ஏற்கெனவே அரசியல்ல ஜெயிச்சவங்கள்லாம் ஆரம்பத்துல& ஒண்ணு, ரெண்டு, ஐந்து தொகுதிகள்ல ஜெயிச்சு அரசியல் பண்ணின வங்கதான்’’



* மிகப் பிரமாண்டமான மாநாடு நடத்தறீங்க... ரொம்ப ஜாக்கிரதையா பண்ணணுமே’?

‘நான் சாதாரணமா நெனச்சு இந்த மாநாட்டை நடத்தலை. அதுக்காக எல்லா ஏற்பாடுகளை யும் பக்காவா பண்ணியிருக்கேன். ஆம்புலன்ஸ் வேன்கள், மெடிக்கல் டீம், தீயணைப்புத் துறை வண்டிகள் எல்லாம் தயாரா இருக்கும். கடைசி நேரத்துல ஆம்புலன்ஸ் வண்டிகளோ, தீயணைப்பு வண்டிகளோ வரலைனு வெச்சுக்கங்க. நான் கவலையே பட மாட்டேன். சினிமா ஷ¨ட்டிங்குல மழைக் காட்சிக்காக தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டும் பாருங்க லாரிங்க... அத வரவழைச்சுடுவேன். மத்தபடி மாநாட்டு பந்தலுக்குள்ள யாரு வேணும்னாலும் நுழைய முடியாது. அந்த அளவுக்கு மாநாட்டு நுழைவு வாயிலிலேயே பாதுகாப்புக் கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும். ரவுடிகளும், தாதாக்களும் மாநாட்டுக்குள் நுழைந்து எதுவும் செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, என்னிடம் இருக்கும் கூட்டம் கட்டுக்கோப்பானது. எல்லாம் ரொம்ப நல்லவிதமாவே நடக்கும்... மாநாடு மட்டுமல்ல’னு உள்ளர்த்தத் தோடவே சொன்னார்""

நன்றி - ஜூவி, விஜய் டிவி.

Read More...

Friday, September 09, 2005

வாழ்க கேப்டன் !

Image hosted by Photobucket.comவருகிற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஒரு பெரிய புரட்சி நடக்கவிருக்கிறது. காலை 10:30 - 11 மணிக்கு எங்கள் தங்கத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விஜய் டிவியில் பேட்டி கொடுக்கிறார். பேட்டி காண்பவர் மதன்.

காணத்தவறாதீர்கள்

வாழ்க கேப்டன்

பிகு1: தனது 25 வருட கலை உலக வாழ்கையில் இது அவர் தரும் முதல் பேட்டி
பிகு2: தொப்புளில் பம்பரம் விடுவது பற்றி கேட்கப்படுமா என்று தெரியவில்லை.

Read More...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு !

பெட்ரோல் விலை, லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் உயர்ந்தது.
இந்த விலை உயர்வை சமாளிக்க இப்படி செய்யலாம்.
Image hosted by Photobucket.com
இந்த வண்டிக்கு பேர் - Cowasaki.

Read More...

Tuesday, September 06, 2005

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !

Read More...