இலங்கையின் வன்முறை வரலாறு மற்றும் ஒரு சிறந்த தலைவரை பலி கொண்டிருக்கிறது. 'லக்ஷ்மண் கதிர்காமர் மரணத்துக்கு தாங்கள் பொறுப்பில்லை' என்று விடுதலைப் புலிகள் கூறுவதை இலங்கை அரசு நம்புவதற்குத் தயாராயில்லை.
கதிர்காமரின் மரணம் பேரிழப்பே என்றபோதிலும், இத்தகைய பயங்கரங்கள் புதிதல்ல என்று கூறும் அளவுக்கு, இலங்கையில் நிச்சியமற்ற சூழல் பல்லாண்டுகளாக நிலவி வருகிறது. புலிகள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டு, தற்காலிக அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வதும், அதைப் பயன்படுத்திக் கொண்டு, ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தங்களை பலப்படுத்திக் கொள்வதும், பிறகு எதிர்பாராத நேரத்தில் இவ்வாறு தாக்கி தலைவர்களைக் கொல்வதும் வழக்கமாகவே ஆகிவிட்டது.
கதிர்காமர் விஷயத்தில் புலிகள் மிகுந்த வெறுப்பு கொள்ள நிறையவே காரணம் உண்டு. தமிழராக இருந்த போதிலும் கதிர்காமர் தம்மை ஸ்ரீலங்கா பிரஜை என்றே கருதி, தேசிய உணர்வு மிக்கவராக விளங்கினார்.
சர்வதேச அளவில், விடுதலை இயக்கமாக அறியப்பட்டு அங்கீகரிக்கவும்பட்டு, பல தரப்புகளிலிருந்த்து பொருளுதவி பெற்று வந்த்து விடுதலைப்புலிகள் அமைப்பு.
அதனை ஒரு வன்முறை இயக்கமாக இனம் காட்டி, தடை செய்யப்படவேண்டிய பயங்கரவாதி அமைப்பாக அடையாளப்படுத்தி, பல உலக நாடுகளின் உதவியும் ஆதரவும் ரத்தாவதற்கு காரணமாக இருந்தவர் கதிர்காமர்தான். இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் என்கிற பொறுப்பில், இந்த பணியை அவர் மிகுந்த தீவிரத்துடன் ஆற்றினார். பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை விழுந்ததும் புலிகளுக்குப் பொருளுதவி செய்வதை பல நாடுகள், அரசுகள் நிறுத்தின. தங்கள் நாட்டு மக்கள், விடுதலைப் புலிகளுக்கு உதவுவதை தடைசெய்தன.
இதன் காரணமாகவே விடுதலைப் புலிகள், கதிர்காமரை பரமவிரோதியாகக் கருதுவதற்கு இடம் உண்டு.
தவிர, கதிர்காமர் போரில் சிங்கள வெறியர் அமைப்புகளுக்கும் வெறுப்பு இருந்திருக்கலாம். புலிகளைப் போலவே அமைதியை மதியாத இவ்வமைப்புகள், கதிர்காமரைப் போன்ற ஒருவரது மரணம், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முடக்கிப்போடும் என்ற கருத்தில் செயல்பட்டிருக்கக் கூடும். பலர் கைதானாலும், இன்றளவும் கதிர்காமரைக் கொன்றது யார் என்பது மர்மமாகவே உள்ளது.
எவ்வாறாயினும் கதிர்காமர் கொலை மிகப் துல்லியமாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவருடைய அன்றாட பழக்க வழக்கங்களை உன்னிப்பாகக் கவனித்துத் தெரிந்து வைத்துக் கொண்டு அவர் பெரிதும் நம்பிக்கை வைத்திருத பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டுக்குள் நுழைந்து, பல பேர் கண்களில் மண் தூவி, தூரத்திலிருந்தே சுட்டு வீழ்த்தியிருக்கிறான் கொளையாளி!. உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை அல்ல இது; முன் கூட்டியே திட்டமிட்டுச் செய்த படுபாதகம்.
"ஒரு மாவீரரை இழந்துள்ளது இலங்கை" என்று கூறியுள்ள சந்திர்கா குமாரதுங்கா, இனி அமைதிப் பேச்சுவார்த்தையை எவ்வாறு நெறிப்படுத்தப் போகிறார் என்பதுதான் மிகப்பெரிய சவால்.
இலங்கையின் வடகிழக்கில் மட்டுமின்றி, உலகெங்கிலும் இலங்கைத் தமிழர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் புலிகள் தங்கள் வலைப் பின்னலைப் பரவச் செய்துள்ளார்கள். இலங்கையில் நேரடியாகவும், பிற நாடுகளில் தமிழர் அமைப்புகள், சங்கங்களுக்கு நன்கொடை என்கிற பெயரில் மறைமுகமாகவும் தங்கள் 'ஆட்சி'யை நடத்த வரி வசூல் செய்து வருகிறார்கள். இலங்கை அரசால் இது குறித்து ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் இக்கொலயால் சாட்டையடிபட்டு ஸ்தம்பித்துப் போய்விட சந்திரிகா குமாரதுங்கா அனுமதிக்க கூடாது.
பயங்கரவாதத்தை அரசு அமைப்புகள் ஜெயிப்பது துர்லாபம். ஒரேயடியாக அவற்றை அழித்துவிடுவது சாத்தியமில்லை. அமைதியைப் பெற, நாட்டின் கெளரவத்துக்கு இழுக்கின்றி எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கலாம் என்பதையே சந்திரிகா இனி சிந்தித்தாக வேண்டும். இன்னும் பல உயிர்கள பலியாவதற்கு முன் இதைச் செய்தாக வேண்டும். கெளரவம் பார்ப்பதைக் காட்டிலும், மக்களின் கண்ணீர் துடைத்து அச்சம் போக்குவதுதான் முக்கியம்.
தமிழகத் தலைவர்களோ, புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவதையும், அனுதாபம் காட்டி நடந்து கொள்வதையும் அறவே நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுள், முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர வேறுயாரும் கதிர்காமரின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவிக்கவில்லை; கொலையைக் கண்டனம் செய்து அறிக்கை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிருபர்கள் கேள்வி கேட்ட பிறகே, கருணாநிதி தாம் அதிர்ச்சியுற்றதாகக் கூறியிருக்கார்.
இனியும் தமிழகத்தில் புலிகள் அனுதாப அரசியல் நடத்தினால், இலங்கையைக் காட்டிலும் அதிகமாக நாம் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவோம்; காயமுறுவோம்!.
( கல்கி, 28.8.05 தலையங்கம் )
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Wednesday, August 24, 2005
கதிர்காமருக்கு நேர்ந்த கொடூரம்!
Posted by IdlyVadai at 8/24/2005 10:51:00 AM 0 comments
Wednesday, August 17, 2005
சில செய்திகள்..
சீனாவில் ஷான்சி மாநிலத்தை சேர்ந்த லீ என்ற பெண்மணி தான் வளர்க்கும் பறவையை எப்போது தன்னுடன் வைத்துள்ளார். இந்த பறவை அந்த பெண்மணியின் பல்லை சுத்தம் செய்கிறது. ( செய்தி உதவி: தினத்தந்தி )
[ பல்லை மட்டும் சுத்தம் செய்தால் பறவைக்கு நல்லது ]
சிங்கபூரில் நேற்று முத்திரத்தை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்திருக்கிறார்கள்.
( செய்தி உதவி: News-Medical.Net )
[ ஆக இனி டிரான்ஸ்ஃபார்மர் மீது ஒன்னுக்கு அடிக்கலாம் என்று போர்ட் மாட்டலாம் ]
லண்டனில் 'பேஸிக் இன்ஸ்டின்க்ட்-2' படப்பிடிப்பில் இருந்த ஷெரன் ஸ்டோன்
குண்டு வெடிப்புக்கு பின் லண்டன் செல்ல மறுத்தார். ( செய்தி உதவி: Times of India )
[survival என்பது 'பேஸிக் இன்ஸ்டின்க்ட்-1' ?]
டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, கதாநாயகனாக நடித்த நியூ படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. அந்தப் படத்திற்கு சென்சார் போர்டு அளித்த சான்றிதழும் ரத்து செய்யப்பட்டது.
[ அ, ஆ ]
Posted by IdlyVadai at 8/17/2005 07:18:00 PM 2 comments
Thursday, August 04, 2005
தமிழ் புதிர் டாப் 10
தேசிகன் பக்கத்தில்( இணையத்தில் சுட்ட) புதிர் பதிவு ஒன்று கொடுத்துவிட்டு, இதே போல் தமிழில் இருக்கா என்று ஒரு புதிர் போட்டார்.
யோசித்ததில் தமிழில் டாப் 10 புதிர். ஓகே, ரெடியா ?
யார் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் பார்க்கலாம்...
Posted by IdlyVadai at 8/04/2005 11:30:00 AM 23 comments
Tuesday, August 02, 2005
வெற்றி பெற டாப் 10-5 வழிகள்
1. வாழ்க்கை என்பது கடினமானது. தோட்டத்தில் எப்படி களை இருக்குமே அதேபோல் வாழ்கையிலும் தடைகள் இருக்கும். களைகள் கண்டு விலகிச் செல்லாமல் களைந்து
விடுங்கள். நிச்சியம் வெற்றி உங்களுக்கே.
2. புத்திசாலி தனமாக இருங்கள். மற்றவர்கள் பிரச்சனைகளை எப்படி அனுகுகிறார்கள் என்று பாருங்கள். அதே போல் அல்லது அதைவிட நன்றாக செயல் படுங்கள். வெற்றி உங்களுக்கே.
3. என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். மறதி, வெற்றிக்கு பகை.
4. பிரச்சனை எதுவந்தாலும் பின் வாங்காதீர்கள். பலர் இன்று வெற்றி பெற்றதற்கு அவர்கள் பின் வாங்காதது தான் காரணம்.
5. இவையாவும் முடியாவிட்டால் சுலபமான வழி - இது
வாழ்த்துக்கள்.
Posted by IdlyVadai at 8/02/2005 07:10:00 PM 3 comments