கூகிளில் சில நேரங்களில் சில வார்த்தைகளை கொடுத்து நீங்கள் தேடியிருப்பீர்கள். ஆனால், அந்த வார்த்தை மீண்டும் உங்கள் ஞாபகத்துக்கு வராமல் போகலாம். இதற்காக கூகிள் ஒரு புதிய வசதியை அறிமிகம் செய்திருக்கிறது. அது Search History
உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருக்கிறது என்றால் கூகிள் முதல் பக்கத்தில் வலதுப்பக்கம் மேல் மூலையில் இருக்கும் 'Sign-in' என்ற லிங்க்கை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
நீங்கள் தேடுவதற்காக கொடுத்த வார்த்தைகள் அனைத்தும் இதில் தேதி வாரியாக பதிவு செய்து வைத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு இன்று "Who is Tamil Nadu's Super Star" என்று தேடுகிறீர்கள். ஒரு மாதம் கழித்து நீங்கள் என்ன தேடினீர்கள் என்று பாக்க இதில் வசதி இருக்கிறது. நீங்கள் தேடியவற்றில் தேடவும் வசதியிருக்கிறது.
பயன் படுத்திப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.
வியக்க வைக்கும் கூகிள் - 1
வியக்க வைக்கும் கூகிள் - 2
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Thursday, April 28, 2005
வியக்க வைக்கும் கூகிள் - 3
Posted by IdlyVadai at 4/28/2005 11:51:00 AM 3 comments
Labels: கூகிள்
Monday, April 25, 2005
எழுத்துரு பற்றிய கருத்துரு
காசி அவர்கள் "தமிழ்க்கணிமை முன்னேற்றத்துக்கு அரசின் ஆணை" என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதற்கு நிறைய பேர் பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்கள். நல்லது.
சமீபத்தில் தயாநிதி மாறன் அவர்கள் வெளியிட்ட (C-DAC)குறுந்தகட்டை சிறுவர்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். அந்த கூட்டத்தில் எனக்கும் ஒரு குறுந்'தட்டு' கிடைத்தது. அதில் வந்துள்ள மென்பொருட்களை பற்றி பத்ரி அலசியுள்ளார். பயன் படக்கூடியது என்று எனக்கு தோன்றியது - பொன்விழி (optical character recognition) மட்டும் தான். அதில் உள்ள spell checker நீ ஓசியிலதான வாங்கின என்று சிரிக்கிறது.
மற்றபடி நிறைய TAM, TAB ஃபாண்ட்ஸ் கிடைக்கிறது. வீட்டில் உள்ள ஷோகேஸில் வைக்கலாம். குறுந்தகட்டில் உள்ள மென்பொருட்கள் எதுவுமே Unicode சார்ந்தது கிடையாது.
அரசியல்வாதிகள் இது பற்றியெல்லாம் என்றுதான் கவனிப்பார்களோ தெரியவில்லை. கருத்துரு பற்றிய கவலை எழுத்துருவுக்கும் இருந்தால் புண்ணியம். UNICODEக்கு அடுத்த தேர்தல் பிரச்சாரத்திலாவது குரல் கொடுக்க யாராவது ஒரு கட்சி தொடங்கினால் கட்சி மாநாட்டில் இட்லிவடை இலவசமாக வழங்கப்படும்.
இன்று 'லதா Font' பிரபலம் அடைந்ததற்கு காரணம் அது 'மைக்கிரோசாப்ட் விண்டோஸுடன்' வந்தது தான். கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. இது வரை எவ்வளவோ தமிழ் மாநாடுகள் நடந்திருக்கின்றன. செவ்வாய் க்ரகத்தில் அடுத்த மாநாடு நடக்கும் சாத்தியம் அதிகம். இதுவரை அதில் எதுவும் சாதிக்கவில்லை, எதையும் அவர்களால் standardise செய்ய முடியவில்லை. வருடாவருடம் வரும் ஒரு சடங்காக ஆகிவிட்டது. அதற்கு பதில் வீட்டில் வடாகம் பிழியலாம்.
நாளை ஒரு நல்ல மென்பொருள் தமிழுக்கு வர வேண்டும் என்றால் அது மைக்கிரோஃசாப்ட் கொண்டுவந்தால் தான் முடியும். ஓபன் ஆபிஸ் எல்லாம் தமிழர்களுக்கு ஒத்து வராது என்று எனக்கு தோன்றுகிறது.
இன்னும் ஒர் 5 ஆண்டுகளில் மைக்கிரோசாப்ட் நிறுவனம் தமிழுக்கு ஏதாவது ஒரு சில நல்ல மென்பொருட்களை கொண்டுவந்தால் சந்தோஷப்படலாம். என்று suratha.comக்கு வேலை இல்லையோ அன்று தான் நமக்கு விடிவு காலம். மற்ற மென்பொருட்கள் .. அடுத்த போகிவரை காத்திருக்கவும்.
Posted by IdlyVadai at 4/25/2005 02:06:00 PM 2 comments
Wednesday, April 20, 2005
தமிழ் எழுத்துக்களின் சுடுகாடு (அல்லது ) வலைப்பதிவு.
குதிரைக்கு சராசரி ஆயுட் காலம் 20-25 வருடம்; நாய்க்கு 8-10 வருடம்; பன்னிக்கு 5-12 வருடம்; குப்பைக்கு கார்பரேஷன் லாரி வரும் வரை; வலைப்பதிவுக்கு தமிழ்மணத்தில் வந்து போகும் நேரம் ! அதன் பிறகு அது எழுத்துக்களின் சுடுகாடாகிறது. இந்த வரிசையில் தற்போது எவ்வளவோ பதிவுகள் எழுதப்பட்டு அவரவர் வழக்கபடி எரித்தோ புதைத்தோ ஆகிவிட்டன. சில பதிவுகள் தீடீர் என்று உயிர் பெற்று கொஞ்சம் டான்ஸ் ஆடும் அவ்வளவுதான்.
தமிழ் மணத்தில் இருக்கும் வலைப்பதிவின் பட்டியலை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இன்று தமிழில் மொத்தம் 476 வலைப்பதிவுகள் இருக்கிறது. எழுத ஆட்கள் இருக்கிறார்கள், படிக்க ? கிடையாது. பின்னூட்டங்கள் ஒரு மினி Yahoo Groups ஆகிவிட்டன. சில சமயம் அதைவிட மோசமாகவும்.
ஒரு வலைப்பதிவின் ஆயுட் காலத்தைக் கூட்ட இட்லிவடையின் டாப் 10
1. யாரும் எழுதாத போது எழுதலாம். தமிழ்மணத்தில் உங்கள் பதிவு ரொம்ப நேரம் காண்பிக்கப்படும். காசி தமிழ்மணத்தில் ராணி முத்து காலண்டர் ஸ்டைலில் எமகண்டம், ராகுகாலம் போட்டால் நல்லது.
2. கவனத்தை ஈர்க்கும் தலைப்பாக கொடுங்கள். உதாரணம்: "அய்யா, அம்மா யாராவது வாங்களேன்". என்று பிச்சைகாரன் ஸ்டைலில் டிரை பண்ணிப்பாருங்கள்.
3. மேதாவிதனமக எதாவது எழுதுங்கள். உதாரணம் : "பாலியலில் சமுகவியல்", "மகாவிஷ்ணு தான் டார்வின்" , "பஞ்சு மிட்டாயில் பார்பனியம்" என்பது போல். இதை டிஸ்கஸ் பண்ண படித்த கூட்டம் இருக்கிறது.
4. எழுதிவிட்டு உங்கள் நண்பர்களை பார்க்க சொல்லுங்கள், பிறகு ஓட்டு போட சொல்லுங்கள்.(கவனிக்கவும் - பார்க்க சொல்லுங்கள், படிக்க சொல்லாதீர்கள், படித்தால் உங்களுக்கு "-" வாக்குகள் நிச்சயம்), தப்பித்தவறி உங்கள் பதிவு தமிழ்மணம் டாப் 25யில் இடம்பெற்றது என்றால் அந்த வலைப்பதிவுக்கு ஆயுட் காலம் 7 நாட்கள். பிறகு உங்கள் சொந்த செலவில் பால்.
5. ஏதாவது வில்லங்கமாக எழுதிவிட்டு காத்திருங்கள். செருப்பு, சானி, மலம் என்று நாகரிகமான பின்னூட்டம் கொடுக்க சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய மனது பண்ணி பின்னூட்டம் எதாவது கொடுத்தால் உங்கள் பதிவுக்கு அன்று பம்பர் பரிசுதான். சண்டை போட ஒரு கூட்டம், வேடிக்கை பார்க்க ஒரு பெரிய கூட்டம் என்று உங்கள் பதிவில் அன்று ஒரு திருவிழாதான்.
6. ஆராய்ச்சி கட்டுரை போல் ஏதாவது எழுதுங்கள். "ரஜினியின் அடுத்த படம்","ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? என்பது போல். இதற்கு கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு சண்டை போட வேறு ஒரு கூட்டம் இருக்கிறது.
7. யாருக்காவது கோபம் வரும் படியாக கேள்வி கேளுங்கள். "சுந்திராராமசாமிக்கு ஏன் இவ்வளவு கோபம்", "தயிர் சாதத்திற்கு ஏன் ஊறுகாய்?" என்பது போல். யாருக்காவது கோபம் வரும். வந்தால் நல்லது, உங்கள் பதிவு கொஞ்சம் நேரம் உயிருடன் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.
8. மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக எழுதவும். "ஆவக்காய் ஊறுகாய் போடுவது எப்படி" என்பது போல. தெரியவில்லை என்றால் கவிதை எழுதாதீர்கள் அது நகம் கடிப்பது போல் கெட்ட பழக்கம்.
9. நீங்கள் இருக்கும் இடத்தில் வலைப்பதிவு கூட்டம் கூட்டுங்கள், மிளகாய் பஜ்ஜிக்கு தமிழை தொட்டுக்கொள்ளுங்கள். பஜ்ஜியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள். உழைப்பாளர் சிலை பக்கத்தில் என்றால் விஷேசம். பதிவில் போடுங்கள்.
10. இவையாவும் கஷ்டமாக இருந்தால் நல்லவற்றை நல்ல தமிழில் எழுதுங்கள். அவற்றை படிக்க ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அவர்கள் படிப்பார்கள். வாழ்த்துக்கள்.
Posted by IdlyVadai at 4/20/2005 09:15:00 AM 18 comments
Wednesday, April 06, 2005
Friday, April 01, 2005
மிஸ் இந்தியா 2005
Posted by IdlyVadai at 4/01/2005 03:10:00 PM 1 comments