பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 09, 2004

கொஞ்சம் கசப்பு

கடந்த இரண்டு வாரமாக வலைப்பதிவிலும், இணைய குழுமத்திலும் ஜெயேந்திரர் பற்றி ஒரே விதமான கருத்துக்கள் பல விதங்களில் விவாதிக்கப்பட்டன. சிலர் ஜெயேந்திரருக்கு ஆதரவாக பத்து பக்கம் எழுதிவிட்டு "நான் ஜெயந்திரர் ஆதரவாளர் இல்லை" என்று கடைசியில் ஒரு Disclamier கொடுத்து தான் ஒரு நடு நிலைமையாளர் என்று கூறிக்கொண்டார்கள்.

சிலர் என்னதான் இருந்தாலும் பரமாச்சாரியார் போல் வராது "அவர் வழி தனி வழி, என்ன ஒரு தேஜஸ் அவருக்கு" என்று தங்களுக்கே அறுதல் கூறிக் கொண்டார்கள்.

மத குரு என்பவருக்கு மனிதநேயம் என்பது அடிப்படை என்பதை இவர்கள் யாரும் புரிந்துக்கொள்ளவில்லை. Ritualsலில் அதிகமாக ஈடுபடுபவர்கள் கடவுளை நெருங்கி விட்டதாக தப்பு கணக்கு போடுகிறார்கள்.சந்தியாவந்தனம், பூஜை இதெல்லாம் ஒரு வித காலை/மாலை exercise அவ்வளவே. இதனால் நாம் கடவுளை நெருங்கிவிட்டோம் என்று நினைத்தால் அது முட்டாள் தனம்.

அன்னை தெரசாவை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் எழை மக்களிடம் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் அன்பு செலுத்தினார். குஷ்ட நோயாளிகளை தன் கையால் அனைத்துக் கொண்டார். ராமானுஜர் என்பவர் குளிக்க சொல்லும் போது தன் இனத்தவர் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு போவார், குளித்துவிட்டு வரும் போது ஒரு தாழ்த்தப்பட்டவர் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு வருவார் என்று படித்ததாக நியாபகம். இதுதான் "Role Model" என்பது. இதை எந்த வைணவ மடாதிபதியாவது கடைப்பிடிக்கிறார்களா ? மடாதிபதி/பீடாதிவதியாக இருப்பவர்கள் பிரசாதத்தை கூட நம் மேல் படாமல் தூக்கித்தான் போடுகிறார்கள் நாமும் அதை catch பிடித்துக் ஆனந்த படுகிறோம்.

துக்ளக், அ.வி போன்ற பத்திரிக்கைகள், பரமாச்சாரியார் சொன்ன "தெய்வத்தின் குரல்"லிருந்து (எந்த தெய்வம் ?) சில வரிகளை போட்டு விட்டு தப்பித்து கொண்டன.

கடைசியாக எங்கோ படித்த ஒரு கவிதை
நான் வாயிலிருந்து
லிங்கம் வரவழைத்தேன்
கையிலிருந்து
வீபூதி வரவழைத்தேன்
ஆனால் என்னை யாரும்
ஜாமினில் வரவழைக்க முடியவில்லை

1 Comment:

Anonymous said...

What you have said is true irrespect of religion.I would like to appreciate your views.