நன்றி: Rediff.
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Friday, December 31, 2004
யார் மேல் குற்றம்? - கருணாநிதி கவிதை
சுனாமி அலை தாக்குதல் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை:
கடற்கரையோரம் நின்று
கவிதைப் பயிர் விளைக்க
கற்பனைக் கலப்பை பிடித்து
கடல் அலையில் கவின் நிலவொளியில்
ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே!
சீராட்டும் தமிழில் என்னை
கொள்ளையழகு காட்டுகின்ற கோலப்பெண்ணால் என்றும்...
அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர்
அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும்
கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின்
கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும்
தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்!
கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம்
ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம்
திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல்
தீய்ந்து போனதேனோ?
"சுனாமி" என எனக்கோர் புதுப்பெயர் வைத்தீர்!
"பினாமி" என்றீர்! பிணந்தின்னி என்றீர்!
சுனாமியும் சுந்தரி போல் சுகந்தி போல் சுகன்யா போல்
சுகந்தரு மெல்லிய பெண்ணின் பெயர் தான் என எண்ணாமல்
சுடுகாட்டுக் காட்டேரி என்றும் மூதேவியென்றும்
மூளி அலங்காரி என்றும் முணுமுணுத்து
மூன்று நாளாய் முன்னூறு நானூறு கவிதை எழுதி விட்டீர்
கோலத் தமிழ் விடுத்து கோபத் தமிழால் எனைச் சுடுகின்றீர்;
குற்றம் நான் என்னதான் செய்துவிட்டேன்
கொற்றவன் பாண்டியன் முன் நீதி கேட்ட கண்ணகி போல்
குலவிளக்கு நான்;கவிஞர் காள்! உம்மிடம் கேட்கின்றேன்.
உயிர்கள் லட்சத்தை நான் உண்டு மகிழ்ந்தேன் என்கின்றீர்-
உண்மையா? உண்மையா? அது உண்மையா? உரைத்திடுக!
ஊமையாய் வீழ்ந்து உயிர் துறந்த பாண்டிய மன்னன் ஆகாதீர்!
கடற்கோள் என்று பெயர் இட்டதாலே;அது
கடலாம் என் குற்றம் ஆகி விடுமா?
நீவிர் அறிந்திடுக; "கடற்கோள்" அல்ல இது;
"நிலக்கோள்!"
நில மடந்தையின் சீற்றத்தால்தான்
"சுனாமி"யெனும் கொந்தளிப்பு சுமத்ராவில் தோன்றியது.
ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு
ஆவேசங் கொண்டு பூமி தேவி ஏன் வெடித்தாள்?
அந்த வெடிப்புக்குள்ளே வீழ்ந்த நானும்
தலையில், தோளில், கையில் தாங்கியிருந்த சுமையை
நிலை கொள்ளாமல் கீழே போட நேர்ந்தது-
அலைகடல் நான்;பொறுமைக்கு எல்லையுண்டே
பூமிதேவி செயல் தவிர்க்கத் தற்காப்புப் போர்க் கவசம்
பூண்டு நான் கிளம்பியது "காரணக்கோள்;"-
"கடற்கோள்" அல்ல!
கவிஞர்காள்! கவனமாகக் கேளுங்கள்-
காதலியை அணைத்துக் கொண்டு நீவீர்
கடற்கரை மதிற்சுவரில் அமர்ந்திருக்கும் போது
மதிற்சுவர் இடிந்து காதலி, உமது கை விட்டுக்
கடலில் வீழ்ந்திறந்தால்-அது
மதிலின் குற்றமா? இந்தக் கடலாள் குற்றமா?
மதிற்சுவர் வெடித்தது போல் மண் மாதா
ஆயிரம் கிலோ தொலைவு அழிவு வேலை செய்திட
அந்தோ நான் பழிகாரி ஆகி விட்டேன்
சதிகாரி எனும் சாபத்திற் காளாகி விட்டேன்-
கோபத்திற்காளான குவலயத்தார் என் மீது
கொட்டுகின்ற பழிச் சொற்கள் உம்மால் பரிமாறப்படுவதை
பார்க்கச் சகிக்கவில்லை;கேட்கப் பொறுமையில்லை-
பழைய நாள் ஞாபகம் மறவாதீர்-கவிஞர்காள்!
நானும் உமது கவிதைக்குக் கருப்பொருளாய் உதவியதை
கணத்தில் மறந்து விட்டு சுடுகணை தொடுக்காதீர்!
அடுக்காது இயற்கையின் தாண்டவம் எனினும்;
பூமி தான் இதற்குப் பொறுப்பாளி; மறவாதீர்!
நன்றி: தினத்தந்தி
Posted by IdlyVadai at 12/31/2004 10:48:00 AM 3 comments
Thursday, December 30, 2004
மிண்டும் வியக்க வைக்கும் கூகிள் !
வியக்க வைக்கும் கூகிள் என்று முன்பு நான் எழுதியது நியாபகம் இருக்கலாம். தற்போது "சுனாமி பேரழிவு உதவும் வழிகள்" என்று கூகிள் ஒரு linkகை தன் முதல் பக்கத்தில் தந்துள்ளது.
அதில் Tsunami help blog என்ற ஒரு வலைப்பதிவும் இருக்கிறது.
அதே போல் காசி அவர்கள் ஒரு அறிவிப்பு செய்துள்ளார்.
காசி (சுனாமி பேரழிவு சேதம் - உதவி வேண்டுகோள்களின் தொகுப்பு) என்ற பதிவு ஆரம்பித்தவுடன் அதை கூகிளில் உள்ள "Ways to help with tsunami relief" பக்கத்தில் ஒரு link கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கூகிள் தொடர்ந்து என்னை வியக்க வைக்கிறது.
Posted by IdlyVadai at 12/30/2004 11:17:00 AM 0 comments
Labels: கூகிள்
Wednesday, December 29, 2004
உண்மையை உணர்த்தும் 'பொய்' கடிகாரங்கள்
வைரமுத்து கவிதையை பார்த்த பலர் "நல்லா வருது" வாயிலே என்று திட்டியிருக்கிறார்கள்.
பலர் BP எகிற நான் காரணமாக இருந்துவிட்டேன் என்று வருத்தப்படுகிறேன்.
கோபத்தை தணிக்க ஒரு ஜோக்.
ராப்ரி தேவி சொர்கத்திற்கு போகிறாள்.எமனை பார்க்கிறாள். எமனுக்கு பின்னாடி பல கடிகாரங்கள் மாட்டப்பட்டு இருக்கிறது.
"எம தர்மாஜி! எதற்கு இவ்வளவு கடிகாரங்கள் ?"
"இது உண்மையை உணர்த்தும் 'பொய்' கடிகாரங்கள்!"
"புரியவில்லையே!"
"உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு கெடிகாரம் உள்ளது. ஒவ்வொருமுறை பொய் சொல்லும் போது அதில் உள்ள முள் நகரும்."
"அப்படியா?, அங்கே இடது பக்கத்தில் இருக்கும் கடிகாரம் யாருடையது?"
"அது புத்தருடையது, அவர் பொய்யே சொல்லாததால் முள் நகரவே இல்லை"
"அதற்கு கீழே உள்ளது?"
"அது காந்தியுடையது, சின்ன வயசில் இரண்டு பொய் சொன்னதால் முள் இரண்டில் இருக்கிறது!"
"அப்படியா ? என் கணவர் லாலுஜியுடைய கடிகாரம் எங்குள்ளது ?
"அது என் ஆபிஸில் இருக்கிறது, அதை நான் சீலிங் ஃபேன்னாக உபயோகிக்கிறேன்!"
Posted by IdlyVadai at 12/29/2004 05:08:00 PM 3 comments
சுனாமி -கவிஞர் வைரமுத்து
ஏ கடலே!
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்
ஏ கடலே!
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா!
முதுமக்கள் தாழியா?
நீ கலங்களின் மைதானமா?
பிணங்களின் மயானமா?
துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?
உன் அலை
எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?
நீ தேவதை இல்லையா
பழிவாங்கும் பிசாசா?
உன் மீன்களை நாங்கள்
கூறுகட்டியதற்கா
எங்கள் பிணங்களை நீ
கூறுகட்டுகிறாய்?
நீ அனுப்பியது
சுனாமி அல்ல
பிரளயத்தின் பினாமி
பேய்ப்பசி உன்பசி
பெரும்பசி
குமரிக்கண்டம் கொண்டாய்
கபாடபுரம் தின்றாய்
பூம்புகார் உண்டாய்
போதாதென்று
உன் டினோசர் அலைகளை அனுப்பி
எங்கள்
பிஞ்சுக்குழந்தைகளின்
பிள்ளைக்கறி கேட்கிறாய்
அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?
என்னபிழை செய்தோம்?
ஏன் எம்மைப் பலிகொண்டாய்?
சுமத்ராவை வென்றான்
சோழமன்னன் ராஜராஜன்
அந்தப் பழிதீர்க்கவா
சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
சோழநாடு கொண்டாய்?
காணும் கரைதோறும்
கட்டுமரங்கள் காணோம்
குழவிகளும் காணோம்
கிழவிகளும் காணோம்
தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்
பிணங்களை அடையாளம்காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள்
பிணத்தையே காணோம்
மரணத்தின் மீதே
மரியாதை போய்விட்டது
பறவைகள்
மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய்வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை
அழுதது போதும்
எழுவோம்
அந்த
மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்
இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்
நாம் மனிதர்கள்
எதிர்கொள்வோம்
மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்
ஆனால்
உனக்குள் அஸ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்
நன்றி:தினத்தந்தி
Posted by IdlyVadai at 12/29/2004 11:59:00 AM 6 comments
Thursday, December 23, 2004
Thursday, December 09, 2004
கொஞ்சம் கசப்பு
கடந்த இரண்டு வாரமாக வலைப்பதிவிலும், இணைய குழுமத்திலும் ஜெயேந்திரர் பற்றி ஒரே விதமான கருத்துக்கள் பல விதங்களில் விவாதிக்கப்பட்டன. சிலர் ஜெயேந்திரருக்கு ஆதரவாக பத்து பக்கம் எழுதிவிட்டு "நான் ஜெயந்திரர் ஆதரவாளர் இல்லை" என்று கடைசியில் ஒரு Disclamier கொடுத்து தான் ஒரு நடு நிலைமையாளர் என்று கூறிக்கொண்டார்கள்.
சிலர் என்னதான் இருந்தாலும் பரமாச்சாரியார் போல் வராது "அவர் வழி தனி வழி, என்ன ஒரு தேஜஸ் அவருக்கு" என்று தங்களுக்கே அறுதல் கூறிக் கொண்டார்கள்.
மத குரு என்பவருக்கு மனிதநேயம் என்பது அடிப்படை என்பதை இவர்கள் யாரும் புரிந்துக்கொள்ளவில்லை. Ritualsலில் அதிகமாக ஈடுபடுபவர்கள் கடவுளை நெருங்கி விட்டதாக தப்பு கணக்கு போடுகிறார்கள்.சந்தியாவந்தனம், பூஜை இதெல்லாம் ஒரு வித காலை/மாலை exercise அவ்வளவே. இதனால் நாம் கடவுளை நெருங்கிவிட்டோம் என்று நினைத்தால் அது முட்டாள் தனம்.
அன்னை தெரசாவை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் எழை மக்களிடம் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் அன்பு செலுத்தினார். குஷ்ட நோயாளிகளை தன் கையால் அனைத்துக் கொண்டார். ராமானுஜர் என்பவர் குளிக்க சொல்லும் போது தன் இனத்தவர் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு போவார், குளித்துவிட்டு வரும் போது ஒரு தாழ்த்தப்பட்டவர் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு வருவார் என்று படித்ததாக நியாபகம். இதுதான் "Role Model" என்பது. இதை எந்த வைணவ மடாதிபதியாவது கடைப்பிடிக்கிறார்களா ? மடாதிபதி/பீடாதிவதியாக இருப்பவர்கள் பிரசாதத்தை கூட நம் மேல் படாமல் தூக்கித்தான் போடுகிறார்கள் நாமும் அதை catch பிடித்துக் ஆனந்த படுகிறோம்.
துக்ளக், அ.வி போன்ற பத்திரிக்கைகள், பரமாச்சாரியார் சொன்ன "தெய்வத்தின் குரல்"லிருந்து (எந்த தெய்வம் ?) சில வரிகளை போட்டு விட்டு தப்பித்து கொண்டன.
கடைசியாக எங்கோ படித்த ஒரு கவிதை
நான் வாயிலிருந்து
லிங்கம் வரவழைத்தேன்
கையிலிருந்து
வீபூதி வரவழைத்தேன்
ஆனால் என்னை யாரும்
ஜாமினில் வரவழைக்க முடியவில்லை
Posted by IdlyVadai at 12/09/2004 09:04:00 AM 1 comments
Wednesday, December 01, 2004
உலக எயிட்ஸ் தினம்
[ தமிழ் மக்களுக்காக கொஞ்சம் Censor செய்யப்பட்டுள்ளது]
Posted by IdlyVadai at 12/01/2004 12:31:00 PM 1 comments