பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 04, 2004

Hard Talk - முதல்வர் ஜெ அளித்த பேட்டி

Tamil Nadu CM Jayalalitha போன மாதம் பி.பி.சிக்கு முதல்வர் ஜெ அளித்த பேட்டி குறித்து எல்லோரும் தங்களது வலைப்பதிவில் கருத்து தெரிவித்தனர். இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் லேட்.

அந்த பேட்டியில் 'நான் ஒரு மரபு மீறிய அரசியல்வாதி' என்றார்.
எப்படி என்பதை பார்போம்...

முதலில் ஜெ இந்த பேட்டியை மிகவும் சுலபமாக கையாண்டிருக்க வேண்டும். அந்த பேட்டியை காரசாரமாக ஆக்கியது ஜெ என்பது என்னுடைய கருத்து. சில கேள்விகளுக்கு மிகுந்த நகைச்சுவையாக பதில் சொல்லியிருக்கலாம். இதே கேள்விகளை சட்டசபையில் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார் ?

NDTV யில் வரும் Big Fight மற்றும் சில பேட்டிகளில் சில கேள்விகளை பச்சையாக கேக்கிறார்கள்.
உதாரணத்துக்கு : உமா பாரதியிடம் "பொய் சொல்லாதிர்கள், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததில் உங்களுக்கு வருத்தம் தானே ?"

சில சமயம் போட்டி காண்பவர் தர்மசங்கடமான கேள்விகளை கேட்பது நல்லதல்ல. இதை தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களிடம் அவர்கள் கற்று கொள்ள வேண்டும். பேட்டி காண்பவர் ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்பது நாகரிகம் ஆகாது. இருந்தாலும் மதம், நியூமராலஜி, ஜோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர் அவற்றை ஒப்புக் கொள்ள ஏன் வெட்கப்பட வேண்டும் ? "ஆமாம் அதுக்கு என்ன ? அது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை" என்று பதில் கூறியிருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும். ஏன் கரண் தாப்பருக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
அதே போல் "நிங்கள் ஒரு பொறுப்பற்ற முதல்வாரா?" என்ற கேள்வியும் அனாவசிய கேள்வியாக எனக்குப்பட்டது.

துக்ளக் சத்யா 'கரண் தாப்பர் கருணாநிதியை பேட்டி கண்டால்.." என்ற தலைப்பில் சில கேள்விகளும் பதில்களும் தந்துள்ளார்...

கேள்வி: நீங்கள் ஏன் சட்டசபைக்குப் போவதில்லை ?
கருணாநிதி: எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கூட சட்டசபைக்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்விகளை கேட்டீர்களா ?
கேள்வி: அப்படி என்றால் நீங்கள் பெரியார் அண்ணா வழியில் நடப்பதில்லை; எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியைத் தான் பின்பற்றுகிறீர்களா ?
...
...

சரி வாசகர்களுக்கு ஒரு மினி போட்டி..
நீங்கள் கரண் தாப்பராக இருந்தால் கலைஞரிடம் என்ன கேள்விகள் கேட்பீர்கள் ?

பி.கு: ஜெ பேட்டியின் Transcript கீழே.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml
பி.பி.சி வலைத்தலத்தில் Jayalalitha வில் ஒரு 'a' வை விட்டுவிட்டார்கள். கரண் தாப்பர்க்கு கோபம் என்று நினைக்கிறேன்.

1 Comment:

Anonymous said...

சாமி உங்களுக்கு புரட்டு தலைவியின் முதல் நிலை சீடர் என்று பட்டத்தை அடுத்த ஆண்டு கண்டிப்பாக திரு ராமகோபல் கொடுப்பார் கவலை வேண்டாம்.

"ஜெ-வை யாரவது கிண்டல் செய்தால் உடனே உங்கள் சமுகத்தினர் உங்கள் காயத்தின் மருந்தாக கருணாநிதியை கிண்டல் செய்வீர்கள்."

roy