பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Monday, November 22, 2004
Friday, November 19, 2004
டாக்டர் மாத்ருபூதம்
டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடைய "புதிரா புனிதமா" என்ற நிகழ்ச்சியை பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன்.
கடந்த சில ஆண்டாக உடல் நலம் குன்றியிருந்த டாக்டர் மாத்ருபூதம், தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கும்பகோணத்தில் நடந்த பள்ளிக் கூரை தீ விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு டாக்டர் மாத்ருபூதம் நேரில் சென்று மன நல மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தி வந்தார். இதன் அடுத்தக் கட்டமாக உடல் நோய்களை பொருட்படுத்தாமல் மீண்டும் கும்பகோணம் சென்று இலவச மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தினார். அப்போது அவருக்கு உடல்நிலை மோசமானது. எனினும் முகாமை நடத்தி முடித்து விட்டு, சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று காலை 5.15 மணிக்கு அவர் வீட்டிலேயே காலமானார்
அவர் வாழ்வில் ஏற்பட்ட பல நகைச்சுவையான சம்பவங்கள் சில இந்த பதிவில் இடம் பெற்றிருக்கிறது
* - *
நான் செக்ஸ் எஜுகேஸனைப் பற்றி தொடந்து 6 ஆண்டுகள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தினேன் என்பது தமிழறிந்த எல்லோருக்கும் தெரியும். அப்போது சில விவகாரமான கேள்விகள் நேயர்கள் கேட்பார்கள்.
ஒருவர் எழுதியுருந்தார், "உங்களுக்கு கிட்டத்தட்ட அறுபது வயதாகிறது. உங்களை நேர்காணல் செய்யும் லேடி டாக்டர் அழகான இளம் வயது பெண்மணி அவரை வைத்து கொண்டு நீங்கள் செக்ஸ் பற்றிப் பேசுவது உங்களுக்கு நியாமாக இருக்கிறதா? எனக் கேட்டார். நான் உடனே சொன்னேன். "இந்த வயதில் பேசத்தான் முடியும்" வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் ? என்றேன். அந்தப் பதில் எல்லோருக்கும் பிடித்திருந்தது என்பது தான் இதில் உள்ள விஷயம்.
* - *
ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.
"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.
"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.
அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.
பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.
அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள்.
* - *
சில இடங்களில் துக்கமாக இருக்கும் போது கூட சிரிப்புக்கான சந்தர்ப்பம் எற்படும்படி சில விஷயங்கள் நடப்பதுண்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை எனக்கு சிறுநீரகங்கள் பாதிக்கபட்டிருக்கிறது. "Acuterenal Failure". அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், நான் என்னுடைய மூட்டுவலிக்காக, பல வருடங்களாக அவ்வப்போது வலி நிவாரண மாத்திரைகள், "NSAID (Non Steroid Anty Inflammatory drug) என்று சொல்வோம்.
அதை சாப்பிட்டு வந்ததால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டிருக்கலாம் அதோடு பல வருடங்கள், சக்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதாலும் எற்பட்டிருக்கலாம் என பல காரணங்களைச் சொன்னார்கள். எனவே என்னை எமர்ஜென்சியாக அருகில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கீழே Emergency Room இருந்தது, என்னை பரிசோதித்த இளம் டாக்டர்கள்,
"டாக்டர் மாத்ருபூதம் எவ்வளவு பெரிய மனநல மருத்துவர், எவ்வளவு சேவை செய்கிறார், Sex Education-க்கொல்லாம் எவ்வளவு பாடுபட்டு நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தியிருக்கிறார் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றனர். உடனே நான் அக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "எப்படியாவது காப்பாற்றுகிறேன் என்று சொல்கிறீர்கள். விதியென்று ஒன்று உள்ளது. அதற்குமேல் இழுத்துப் பறித்துக் கொண்டு நான் இருக்க விரும்பவில்லை" என்றேன் அதற்கு,
"உங்களது தைரியம் எல்லோருக்கும் வராது, Any how உங்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் நர்ஸிடம், Send him up அதாவது மேல்மாடியில் இருக்கும் Critical care யூனிட்டிற்கு அனுப்பு என்று சொல்லியிருக்க வேண்டும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மறுபடியும் மாஸ்க்கை எடுத்துவிட்டு நான் சொன்னேன். நான் சைக்யாரிஸ்ட் எனக்கு புரிகிறது. நிங்கள் எல்லோரும் வந்திருக்கும்போது Send him up என்று சொல்லாதீர்கள்.கொஞ்சம் நாள் கழித்து போகும் உயிர் இன்றே போய்விடும்" என்றேன்.
அவரும், சாரி சார் என்றார். சாரி சொல்லாதீர்கள் இதையே நகைச்சுவையாக பார்க்கும் பக்குவத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார் என்று நான் சொன்னேன்.
மேலும் அவர் சொன்னார் உங்களுக்கு மூச்சு இழுக்கிறேதே அஸ்துமா இருக்கிறதா ? எனக் கேட்டார். நான் மறுபடியும் ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "அது ஒன்றுதான் எனக்கு இல்லை" என்றேன்.
"டாக்டர் உங்களுக்கு சாவே வராது" என்று சொன்னார் அவர். "பரவாயில்லை நீங்கள் சிறுவயதாக இருந்தால்கூட உங்கள் வாழ்த்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே போனேன்.
மேலேபோய் இரத்த பரிசோதனையெல்லாம் பண்ணினால், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், யூரியா எல்லாமே தாறுமாறாக இருந்தது. அதை பார்த்துவிட்டு அந்த டாக்டர், மிகவும் நல்லவர், மிகவும் வல்லவராகிய அவர் உங்கள் பையன்களுக்கு சொல்லியனுப்பிவிடுங்கள் என்றார். ( ஒருவர் லண்டனிலும், ஒருவர் அமெரிக்காவிலும் உள்ளார்). நான் சொன்னேன் "நான் இறந்தால் எப்படியும் வந்து விடுவார்கள், நான் ஒரு வேளை பிழைத்துக் கொண்டால் அவர்கள் வந்துபோவதே அவர்களுக்கு வேஸ்ட், அனாவசிய செலவு அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர் என் மனைவியிடம் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.
மேலும் நான் இறந்தால்கூட நீங்கள் அழக்கூடாது அழுகை என்றால் எனக்கு பிடிக்காது. பிறகு எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அப்படி சொன்னேனே தவிர அதற்காக நீங்கள் நரகாசுரன் செத்துவிடான் என்று பட்டாசெல்லாம் வெடிக்கக் கூடாது என்றேன். அப்போது என்னுடைய மனைவி உண்மையிலேயே அழ ஆரம்பித்துவிட்டாள். "உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்றாள். "எனக்கு என்றும் ஆகக் கூடாதுன்னு எல்லோருக்கும் இருக்கும் ஆசை எனக்கு இருக்கு ஆனாலும் பரவாயில்லை என்ற நேக்கத்தில்தான் நான் இருக்கிறேன்" என்றேன்.
இதை எதற்காக சொல்கிறேன் என்றால், "One can be affraid of Morbility, but not moratality" மார்பிடிட்டி என்றால் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்க கூடாது. அதை கண்டு பயப்படுவேன் என்று சொன்னால், அவர்கள் தினம் தினம் செத்து கொண்டிருப்பார்கள். அது தான் உண்மை.
பகவான் கிருஷ்ணர் பயம் என்பது ஒரு பாவம் என்கிறார். ஏசுநாதர் அது ஒரு நோய் என்றார். ஆதிசங்கரர் புனரபிஜனனம், புனரபிமரணம். அதாவது "மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு" என்கிறார். அப்படி இருக்கும்போது நமக்கு மரண பயம் ஏன்?
நீங்கள் உடல்நலத்தில் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நன்றாக இருப்பதாக நினைப்பது நம் கையில்தான் இருக்கிறது. அப்போழுது நோய்கூட குணமாகும். "The conerrs die everyday, the Brane die only once" என்று சொல்வது எக்காலத்துக்கும் பொருத்தமக ஒரு விஷயம்.
(புன்னகை பூக்கள், கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை-17)
(படம்: தினமலர் )
Posted by IdlyVadai at 11/19/2004 09:01:00 AM 2 comments
Thursday, November 18, 2004
லாடு லபக்குதாஸ் காலமானார்
மனநல மருத்துவரான மாத்ருபூதம் சென்னையில் இன்று காலமானார். டிவியில் பாலியல் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த இவர், நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். வீவேக்குடன் லாடு லபக்குதாஸ் காமெடியில் மேலும் பிரபலம் அடைந்தார். அவருடைய குடும்பதினருக்கு இட்லிவடையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
திரு.மாத்ருபூதத்தின் நகைச்சுவை பகுதிகள் நாளை இங்கு இடம் பெரும்.
Posted by IdlyVadai at 11/18/2004 05:11:00 PM 0 comments
டாப் 10 - ஜெ ஜெ சில குறிப்புக்கள்
1. ஜெயேந்திரரை கைது செய்தது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும். எந்த பகுத்தறிவு முதல் அமைச்சரும் இதை செய்திருக்க முடியுமா? என்று விவாதிக்க தமிழ் குழுக்களுக்கு செல்லவும். இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு நல்ல முன்னுதாரணம் கிடைத்திருக்கிறது.
2. தீபாவளி அன்று காலை டிவியில் அருள் ஆசி, வீட்டு புஜை அறைகளில் கடவுள் பக்கத்தில் சிரித்துக் கொண்டு போட்டோ, தீபாவளி மலர்களில் ஆர்ட் பேப்பரில் வண்ணப்படம், ஆபீஸ் மேசை கண்ணாடி அடியில்.... என்று இடத்தை பிடித்த ஒருவர் கொலை குற்றம் சாட்டப்பட்டு கைதாகிறார். இது ஒரு மெகா நம்பிக்கை துரோகம். இரவில் கைது செய்தது ஏன்? என்று நடுநிலையாளர்கள், அறிவு ஜிவிகள், என கூறிக் கொள்பவர்கள், எதிர்ப்பது காமெடியாக உள்ளது.
3. ஆஸ்பத்திரி, பள்ளி என்று சமுக சேவை செய்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று மக்கள் ஏமார கூடாது. சாய் பாபா, சந்திர சுவாமி போன்றவர்கள் இதில் அடங்கும். சாய் பாபா ஆசிரமத்தில் நான்கு பேர் கொலை செய்ததற்கு என்னும் விடை தெரியவில்லை. கல்கி பகவான் விளம்பரம் "குங்குமம்" பத்திரிக்கையில் வருவது - பெஸ்ட் கண்ணா பெஸ்ட். எங்கே பணம் இருக்கிறதோ கூடவே கிரைம் இருக்கும் என்பது எழுதப்படாத விதி.
4. RSS, VPH போன்றவர்கள் திமிழ் நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் உண்ணா விரதம், போராட்டம் என்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டு மக்கள் அமைதியை விரும்புபவர்கள் என்பது புலனாகும்.
5. விகடன், கல்கி ஆகிய பத்திரிக்கைகள் என்ன மாதிரி தலையங்கம் எழுதுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். எல்லோரும் கொஞ்சம் "play safe" mode'ல் இருக்கிறார்கள். கலைஞர் ஒரு படி மேலே சென்று சங்கர மடம் அழியக்கூடாது, அதை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆடு நனைகிறதே.." என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
6. பலரும் இது ஜெயின் அரசியல் உத்தி, ஜெக்கும்-ஜெக்கும் ஏதோ அடிப்படை பிரச்சினை என்று காரணம் சொல்லுகிறார்கள். எல்லோருக்கும் இது ஒரு அதிர்ச்சியே என்பது தான் உண்மை. கைதுக்கு சில நாட்கள் முன்பே கலைஞர் அவர்கள் "பல போலி சாமியார்கள்.." என்று அறிக்கை விட்டது அவருக்கு போலிஸில் சில நண்பர்கள் இருப்பதையே காட்டுகிறது. இதனால் ஜெ அவரை அவசரப்பட்டு கைது செய்தார் என்பது நம்பும் படியாக இல்லை.
7. காவியுடை அணிந்த ஒருவர் "..ஆண்டவனிடம் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார்!" என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். காவியுடை அணிந்த ஒருவர் இப்படி நினைப்பது மகா கேவலம். இப்படி நினைக்கும் ஒருவர் கொலையும் செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம். கடவுளிடம் இப்படி வழிப்பட்டு அவர் வணங்கும் கடவுளையும் கேவல படுத்திவிட்டார். இதுதான் "அன்பே சிவமா?"
8. நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்கள், நீதிபதிகள், குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், முதல்வர்கள் போன்றவர்கள் இனி மடம், நோன்பு கஞ்சி என்று போகாமல் மக்கள் நலனை கவனிப்பது நல்லது.
9. ஜெயேந்திர் கைதுக்க்கு அடுத்த நாள், ஏ.வி.எம் சரவணன், டாக்டர் பத்ரி நாத், மற்றும் சிலர் ஆளுநரை சந்திக்கிறார்கள். இவர்களுக்கு போலிஸ் மேல் நம்பிக்கை இல்லையா ? இவர்களுக்கும் மடத்திற்கும் என்ன சம்பந்தம் ? ஏன் இவர்கள் ஜெயேந்திரருக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் ?
10. ஜெயிலில் ஜெயந்திரருக்கு என்ன கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் கடைசிகாலத்தில் ஆதிசங்கரர் அருளிய "பஜகோவிந்தம்", புத்தகம் கொடுக்க சிபாரிசு செய்வது நல்லது. இவர் இன்னும் நிறைய basics கற்றுக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஆன்மீகம், ஒழுக்கம், கடவுள் நம்பிக்கை, தேஜஸ், மதம் இவற்றை சரியாக புரிந்துக்கொள்ளுங்கள். சாமியார்களுடன் குழப்பிக்கொள்ளாதீர்கள். மீறி குழப்பம் அடைந்தவர்களுக்கு இருக்கவே இருக்கு கீழ்பாக்கம்.
Posted by IdlyVadai at 11/18/2004 11:11:00 AM 3 comments
Wednesday, November 17, 2004
Friday, November 12, 2004
காஞ்சி ஜெயேந்திரர் சுவாமிகள் திடீர் கைது
சென்னை : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யயப்பட்டுள்ளார். முன்னதாக ஐதராபாத்தில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையிலிருந்து இவர் காஞ்சிபுரம் அழைத்துச் செல்படுகிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் முன்னாள் எஸ்.பி., பிரேம்குமார், இது குறித்து கூறுகையில் கடந்த 03.09.2004 நடந்த கொலை சம்பவம் தொடர்பாக 14 பேரைக் கைது செய்துள்ளோம், இதில் கடந்த 9ம் தேதி 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சொன்ன தகவலின் பேரில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயேந்திரர் இந்த கொலைச் சம்பவத்திற்கு திட்டம் தீட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட சங்கரராமனுக்கும், ஜெயேந்திரருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கான போதிய ஆதாரங்கள் போலீசார் வசம் இருக்கிறது. எனவே இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வாறாக பிர÷ம்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து இன்று காலையில் ஜெயேந்திரர் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் வேலூர் சிரையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
PS: தீபாவளி மலர்களில் முதல் பத்து பக்கங்களில் இவர் படத்தை பார்க்கலாம்
Posted by IdlyVadai at 11/12/2004 07:25:00 AM 0 comments
Wednesday, November 10, 2004
தீபாவளி ஸ்பெஷல் - 2
ஸ்பெஷல் திரைப்படம்:
எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
- இட்லி
Posted by IdlyVadai at 11/10/2004 08:49:00 AM 2 comments
Tuesday, November 09, 2004
தீபாவளி ஸ்பெஷல் - 1
ஸ்பெஷல் வெடி: தீபாவளி ஸ்பெஷல் (ஜெய)லெக்ஷ்மி வெடி. எப்போ எப்படி வெடிக்கும் என்பது தெரியாது.
ஸ்பெஷல் விடுகதை:
கொஞ்ச நேரம் பாத்தா ஜாலியா இருக்கும். ரொம்ப நேரம் பார்த்தா போர் அடிக்கும். அது தான் பேசும், நாம பேசவே மாட்டோம். தீடீர்னு அழுவும், தீடீர்னு சிரிக்கும். அது என்ன ? விடை நாளை
Posted by IdlyVadai at 11/09/2004 05:12:00 PM 3 comments
Monday, November 08, 2004
9/11 விசாரணைக் குழு முடிவுகள்
தாக்குதலில் இரட்டைக் கோபுரம் செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் பற்றி பலர் அலசுகிறார்கள்.
இட்லி வடைக்கு கிடைத்த தகவலின் படி ஒசாமா பின் லாடன் கீழ் காணும் தபால் தலை தான் தனக்கு 'அந்த' ஐடியாவை கொடுத்தது என்கிறார்.
Posted by IdlyVadai at 11/08/2004 10:33:00 AM 0 comments
Thursday, November 04, 2004
Hard Talk - முதல்வர் ஜெ அளித்த பேட்டி
போன மாதம் பி.பி.சிக்கு முதல்வர் ஜெ அளித்த பேட்டி குறித்து எல்லோரும் தங்களது வலைப்பதிவில் கருத்து தெரிவித்தனர். இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் லேட்.
அந்த பேட்டியில் 'நான் ஒரு மரபு மீறிய அரசியல்வாதி' என்றார்.
எப்படி என்பதை பார்போம்...
முதலில் ஜெ இந்த பேட்டியை மிகவும் சுலபமாக கையாண்டிருக்க வேண்டும். அந்த பேட்டியை காரசாரமாக ஆக்கியது ஜெ என்பது என்னுடைய கருத்து. சில கேள்விகளுக்கு மிகுந்த நகைச்சுவையாக பதில் சொல்லியிருக்கலாம். இதே கேள்விகளை சட்டசபையில் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார் ?
NDTV யில் வரும் Big Fight மற்றும் சில பேட்டிகளில் சில கேள்விகளை பச்சையாக கேக்கிறார்கள்.
உதாரணத்துக்கு : உமா பாரதியிடம் "பொய் சொல்லாதிர்கள், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததில் உங்களுக்கு வருத்தம் தானே ?"
சில சமயம் போட்டி காண்பவர் தர்மசங்கடமான கேள்விகளை கேட்பது நல்லதல்ல. இதை தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களிடம் அவர்கள் கற்று கொள்ள வேண்டும். பேட்டி காண்பவர் ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்பது நாகரிகம் ஆகாது. இருந்தாலும் மதம், நியூமராலஜி, ஜோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர் அவற்றை ஒப்புக் கொள்ள ஏன் வெட்கப்பட வேண்டும் ? "ஆமாம் அதுக்கு என்ன ? அது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை" என்று பதில் கூறியிருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும். ஏன் கரண் தாப்பருக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
அதே போல் "நிங்கள் ஒரு பொறுப்பற்ற முதல்வாரா?" என்ற கேள்வியும் அனாவசிய கேள்வியாக எனக்குப்பட்டது.
துக்ளக் சத்யா 'கரண் தாப்பர் கருணாநிதியை பேட்டி கண்டால்.." என்ற தலைப்பில் சில கேள்விகளும் பதில்களும் தந்துள்ளார்...
கேள்வி: நீங்கள் ஏன் சட்டசபைக்குப் போவதில்லை ?
கருணாநிதி: எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கூட சட்டசபைக்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்விகளை கேட்டீர்களா ?
கேள்வி: அப்படி என்றால் நீங்கள் பெரியார் அண்ணா வழியில் நடப்பதில்லை; எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியைத் தான் பின்பற்றுகிறீர்களா ?
...
...
சரி வாசகர்களுக்கு ஒரு மினி போட்டி..
நீங்கள் கரண் தாப்பராக இருந்தால் கலைஞரிடம் என்ன கேள்விகள் கேட்பீர்கள் ?
பி.கு: ஜெ பேட்டியின் Transcript கீழே.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml
பி.பி.சி வலைத்தலத்தில் Jayalalitha வில் ஒரு 'a' வை விட்டுவிட்டார்கள். கரண் தாப்பர்க்கு கோபம் என்று நினைக்கிறேன்.
Posted by IdlyVadai at 11/04/2004 05:31:00 PM 1 comments
Tuesday, November 02, 2004
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 11
தேவன் - (8-9-1913 - 5-5-1957)
தேவன் என்ற புனைபெயரில் நகைச்சுவையை கதை, கட்டுரை நாவல் என்று அள்ளி வீசியவர் ஆர்.மகாதேவன். திருவிடைமருதூரில் பிறந்தவர். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பின், 'ஆனந்த விகட'னில் உதவியாசிரியராக இருந்தார். பிறகு 1942 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டு காலம் அப்பத்திரிகையில் பல்வேறு சுவையான கதைகள், கட்டுரைகள் எழுதி சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். பத்திரிக்கை எழுத்துத் துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் எழுதிவந்தார்.
வித்தியாசம் என்றாலே அது தேவனின் கலை என்று சொல்லிவிடலாம்.
தேவன் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது துப்பறியும் சாம்புதான். காக்கை உட்கார்ந்தது; பனம்பழம் விழுந்தது! என்று ஒருமுறை சொன்னால் நம்பலாம். ஆனால் அதையே நூறு தடவை சொல்லி வாசகர்களை நம்பவைத்தவர் தேவன் மட்டுமே!. 'துப்பறியும் சாம்பு'வைப் படிக்க வாராவாரம் 'ஆனந்தவிகடனு'க்காகக் காத்திருந்த வாசகர்கள் ஏராளம்.
அவருடைய தொடர் நாவல்களில் வித்தியாசமானவை 'கோமதியின் காதலன்' வீட்டைவிட்டு ஓடிப்போய் வாழ்கையில் விளையாட்டாகவே சோதனைகளைச் சந்திக்கும் வாலிபனின் கதை. 'மிஸ்டர் வேதாந்தம்' கிராமிய மணம் கமழும் காதல் கதை. 'ஜஸ்டிஸ் - ஜகந்நாதன்' நீதிமன்றங்களில் நடக்கும் வாதப் பிரதிவாதங்களைக் கொண்டே புனையப்பட்ட வித்தியாசமான நாவல்.
சிறுகதைகளில் தேவனின் பாத்ததிரங்களைத் தவிர அவருக்கே கதை சொல்லும் முக்கிய பாத்திரமாக ஒருவர் வருவார். அவர் தான் 'மல்லாரிராவ்'. உள்ளங்கையிலிருக்கும் புகையிலைத்தாளைக் குவித்துக்கொண்டே பேசுவார். ஆள்காட்டி விரலிலும், கட்டை விரலிலும் பொடியை இடுக்கிக் கொண்டு மூக்கில் வைத்து உறிஞ்சிவிட்டு கையைச் சொடுக்குவார். அங்கே 'உண்மைக் கதை' பிறக்கும். ஆனால் அத்தனையும் நிஜம் போல் நம்பவைக்கும் கற்பனைக் கதைகள்.
தேவனின் நகைச்சுவைக் கட்டுரைகளை படிக்கையில் நெருங்கிய நண்பர் ஒருவருடன் ஜாலியாக அரட்டையடிப்பது போல் ஒரு அனுபவம் ஏற்படும்.
புத்தகம் எழுதி வெளியிடுவதைப் பற்றி அவருடைய கட்டுரையில் இப்படி எழுதுகிறார்:
நிலத்தில் உழுவது, பயிரிடுவது, வண்டி ஓட்டுவது, கொத்து, தச்சுவேலைகள் சொய்வது இப்படிப் பல தொழில்களைச் செய்து உயிரை வளர்க்கலாம் என்று ஒப்புக் கொண்டவர்கள் ஏனோ புத்தகம் எழுதிப் பிழைப்பதைப் பற்றி அவ்வளவு நம்பிக்கை கொள்ளவில்லை.
இருந்தும் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் என்னை விடவேல்லை. அதற்க்காக நான் தபஸ் செய்யவும் தயாராக இருக்கிறேன். தபஸின் இறுதியில் பகவான் பிரத்தியட்சமாகி என்னைப் பார்த்து, "பக்த்தா! உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்பார் அல்லவா? அப்போது என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் தான் தபஸையே ஆரம்பிக்காமல் இருக்கிறேன். அதில் என்ன சிரமம் என்று கேட்கிறீர்களா ?
'நீ என்ன மாதிரி புத்தகம் எழுத வேண்டும் என்று விரும்புகிறாய்? உன் ஆயுள் காலத்திலேயே யாரும் சீண்டாமல் சொற்ப ஜனங்களிடம் மட்டும் பாராட்டு தலைப் பெற்றுவிட்டு, நீ காலமானவுடன் 'குபீர்' என்று பிரக்யாதி அடையும் புத்தகங்கள் எழுத விரும்புகிறாயா? உன் ஆயுள் காலத்திலேயே அமோகமாக விற்பனையாகி, உனக்கு தனத்தை அள்ளிகொடுத்து எங்கே திரும்பினாலும், கண்ணில் பட்டு, நீ மறையும்போது உன்னோடு மறைந்துவிடும் புத்தகம் எழுத விரும்புகிறாயா? என்று பகவான் கோட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது ?
"ஸாக்கிலே கொஞ்சம் 'பேக்'கிலே கொஞ்சம் கேட்கிறவனாயிற்றே நான் ? அந்த உத்திரவாதம் கிடைகாததால் தபஸ் பண்ணவே ஆரம்பிக்கவில்லை!"
நிஜவாழ்கையிலும் அவருடைய உண்மையான தாபமும் தாகமும் அதுதான், சுமார் கால் நூற்றாண்டுக் காலம் கதைகளையும், நாவல்களையும் அவர் எழுதிக் குவித்தார். அவற்றை ஓரளவாவது புத்தக வடிவில் பார்க்கவும் ஆசைப்பட்டார். ஆனால் அந்த ஆசை ஏனோ அவர் உயிரோடு இருந்த வரையில் நிறைவேறவே இல்லை.
தேவனின் படைப்புக்களை வாசிக்க ...
1. மரத்தடி ( தேவன்- என் பார்வை - ஹரன் பிரசன்னா)
2. தேசிகன் பக்கம் ( தேவன் சில கட்டுரைகள்/கதைகள்)
3. அப்புசாமி ( தேவன் சில கட்டுரைகள்/கதைகள்)
Posted by IdlyVadai at 11/02/2004 09:36:00 AM 1 comments