பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 27, 2004

This Day, That Age , 27th Oct ...

இட்லி வடையில் October 27, 2003 இவ்வாறு எழுதப்பட்டது -

(இனிமேல்) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த Blogகுக்கு ஏன் இட்லி வடை என்று பெயர் வைத்தேன் ?
தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள் - இட்லி வடை என்று பெயர் வைத்தால் கட்டாயம் இங்கு வருவார்கள்!

நான் யார் ?
இட்லி வடைக்குள் ஒளிந்து கொள்ள நான் சாம்பார் அல்ல - உங்களில் ஒருவன், உங்கள் நண்பன்,
உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் சில சமயம் உங்கள் மனசாட்சி.
(நான் யார் என்று சொன்னால், சட்னி ஆகிவிடுவது நிச்சயம்! அதனால் ...)


இட்லி வடை ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. சும்மா ஹிண்டு நாளிதழ் போல் "This Day, That Age ". அவ்வளவு தான்!

அன்புடன்,
இட்லி

Read More...

Tuesday, October 19, 2004

வீரப்பன் - இனி...

40 ஆண்டுகாலமாக சிம்ம சொப்பனமாக இருந்துவந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் (59) திங்கள்கிழமை இரவு 10.50 மணிக்கு தருமபுரி அருகே தமிழக அதிரடிப் படைப் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்த ஓய்ந்த பிறகு இனி வரும் சில நாட்களில்....

- எல்லா பத்திரிக்கைகளும் ( வலைப்பதிவுகளும் ?) வீரப்பன் ஏன் உருவானான் என்ற கருத்தை தெரிவிப்பார்கள். தலையங்கம், கவர் ஸ்டோரி எழுதுவார்கள்.

- நக்கீரன் கோபால் வீரப்பனை பற்றி ஒரு புத்தகம் எழுதுவார். தனது பத்திரிக்கையை 'நக்கீரன்' என்பதை 'வீரப்பன்' என்று மாற்றினாலும் மாற்றுவார்.

- தமிழ்ப்பற்று உள்ள தலைவர்கள் வீரப்பரின் குடும்பத்திற்கு உதவுவார்கள். அவர் மனைவியை அடுத்த தேர்தலில் நிக்கவைப்பார்கள். அவர் குழந்தையை பேட்டி எடுத்து அனுதாபத்தை வர
வைப்பார்கள்.
- சிலர் அவன் ஒரு தமிழ் தியாகி, அவன் என்ன செய்தான் பாவம் என்று வக்காலத்து வாங்குவார்கள்.

- பலர் அவனை எப்பொழுதோ பிடித்திருக்க வேண்டும், இது ரொம்ப லேட் என்பார்கள்.

- அவனை உயிருடன் பிடித்திருக்க வேண்டும் அப்போது தான் பல உண்மைகள் தெரிந்திருக்கும் என்பார்கள்.

- ராஜ்குமார் அவன் கெட்டவன் ஆனால் அவன் என் நண்பன் என்றும். நாகப்பாவின் குடும்பத்தினர் எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் கூறுவர்.

- அவன் கொல்லப்பட்டதில் பல மர்மங்கள் இருக்கிறது. இதை CBI விசாரிக்கவேண்டும் என்று கூறுவார்கள்.

- அவன் ஒரு வீரன், அவனை எளிதில் பிடிக்க முடியாது அவனே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று அவன் வீரத்தை பாராட்டுவார்கள்.

- தமிழ் நாட்டு எதிர்கட்சிகள், இதில் கர்நாடக பங்கை மறக்க கூடாது என்பார்கள்.


என் கருத்து:

1. தமிழக முதல்வர் ஜெ காட்டிய விடா முயற்சியும், அதிரடிப் படைக்கு அவர் அளித்துவந்த எல்லையற்ற ஆதரவு சரிதான் என்பதை வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவம் நிரூபித்துள்ளது.

2. கலைஞர் ஆட்சியில் இது நிகழ்ந்திருக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே.

கடைசியாக இந்த வாரம் விகடனில் மதனின் கார்ட்டூன் என்ன பொருத்தம் பாருங்கள்!

(நன்றி ஆனந்த விகடன்)












Read More...

Friday, October 15, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 10

சில நாட்களாக தொடர்ந்து எழுத முடியவில்லை. ஒன்றும் எழுதவில்லை என்றாலும் என் வலைப்பதிவுக்கு வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

வரும் சில பதிவுகளில் நகைச்சுவை எழுத்தாளர்களை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்ற எண்ணம்.

முதலில்

எஸ்.வி.வி (25-8-1880 - 31-5-1950 )

எஸ்.வி.விஜயராகவாச்சாரி என்ற இந்த எழுதாளரைத் தெரியாத தமிழ் வாசகர் இருக்க முடியாது.
1934ஆம் ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்துக் கொண்டே பல நகைச்சுவை, கட்டுரைகள், நாவல்கள் என்று பல எழுதியுள்ளார். 'இந்து' நாளிதழில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த இவரை, எளிமையான பழகு தமிழில் நகைச்சுவையுடன் எழுத வைத்த பெருமை 'ஆனந்த விகடனை'யே சாரும். இவருடைய எழுத்தை படித்தால் ஒரு நகைச்சுவை உணர்வுள்ள ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருப்பது போல் இருக்கும்.

இன்று விகடனில் வரும் "அனு-அக்கா-ஆன்டிக்கு" அறுபது ஆண்டுகளுக்கு முன்பே முன்னோடியாக இருந்து தொடங்கி வைத்தவர் எஸ்.வி.வி.

அந்த காலக் குடும்பங்களை எண்ணிப் பாருங்கள். கிராமங்களாக இருந்தால் வீட்டில் ஒரு முற்றம்; வாசலில் அகலமான திண்ணை இருக்கும். நகரங்களில் உள்ள குடும்பத்தாரின் வீடுகளில் மேலே திறந்த மாடி இருக்கும் கட்டிடம் ஏதும் இல்லாததால் அத்ற்கு மொட்டை மாடி என்று பெயர் வேறே.
அங்கே கணவனும் மனைவியும் குழந்தகளுமாக உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள். இந்த அரட்டை கச்சேரிக்கு உல்லாச வேளை என்று தலைப்பும் கொடுத்து அறிமுகம் செய்தார் எஸ்.வி.வி.

வாழ்க்கையை ஒட்டி அமைந்த நகைச்சுவை கட்டுகளை நிறைய எழுதியிருக்கிறார் எஸ்.வி.வி. அவற்றைப் படிக்கும்போது நம்முடைய வீட்டில் நடப்பதையே மீண்டும் கவனிப்பதைப் போல் இருக்கும்.

பல்வலியால் அவதிப்படும் மனைவி கணவனைத் திண்டாட வைத்துப் பந்தாடுவாள் கணவன் மீது சந்தேகப்படும் மனைவி விதம் விதமாக கற்பனை செய்து கடைசியில் தானே அவனுடைய ராஜாத்தி என்பதை புரிந்துகொள்வாள். "பிறர் குழந்தைகள்" என்ற கட்டுரையில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
சில வீடுகளுக்குப் போனால் குழந்தையின் தகப்பானார் பெருமை அடித்துக்கொள்ளும் கொடுமையைக் கேட்டு நமக்கு அலுத்துவிடும். எப்பொழுது எழுந்து போகலாம் என்று தோன்றும்.

"குழந்தை யார் பேரனா?" என்று கோட்கிறேம். அவருடைய வயதைப் பார்த்தால் பேரனாகத்தான் இருக்க வேண்டும் என்று நமக்கு படுகிறது.
"பேரன் இல்லை பிள்ளைதான் இவன்தான் கடைசி!"
"ஏன் இதற்குள் கடைசி என்று சொல்லி விடுகிறீர்கள்" என்று சிரிக்கிறோம்.
"பொல்லாத பயல் ஸார்! ஏண்டா சோனி? நீ பொல்லாத பயல்தானேடா ?"
"நான் பொல்லாத பயல் அல்ல. அப்பாதான் பொல்லாத அப்பா"
இந்த சமர்த்து வார்த்தையைக் கோட்டு அப்பாவிற்குப் பெருமை பொங்குகிறது....

அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் மட்டும் அல்ல; நாவல்களிலும் குடும்ப சித்தரம் அழகாக மலரும். இவை எல்லாவற்றிலுமே பாத்திரங்களைக் கவனித்தால் நம்மையே நாம் கூர்ந்து பார்ப்பது போல் இருக்கும். சில நிகழ்ச்சிகளை படிக்கும் போது "நம் வீட்டுல்கூட இப்படி நடக்கிறதே?" என்று எண்ணத் தோன்றும்.

நகைச்சுவையைத் தனது கலையாக ஏற்றுக் கடைசி வரை அதிலேயே திளைத்தவர் எஸ்.வி.வி. 'ஆனந்த விகடனில்' எழுதத் தொடங்கியவர், கடைசிவரையில் அதில் மட்டுமே எழுதினார். கடைசி நாட்களில் தனக்கு வந்த நோயைக்கூட நகைச்சுவையுடன் வருணித்து குறிப்பிட்டவர் அவர்.

நம்முடனேயே இருந்து நம்மை நமக்கு எடுத்துக் காட்டிச் சிரிக்க வைத்தவர் எஸ்.வி.வி.

Read More...