சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (26/09/2004, ஆனந்த விகடன்) பகுதியிலிருந்து ...
"நம் திரைப் படங்களிலும் தொலைக்காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் பின்பக்கத்தில் உதைப்பது, கஷ்கத்தைச் சொறிவது, ஒருவர்மேல் ஒருவர் துப்பிக் கொள்வது போன்ற அநாகரிகமான காட்சிகள் இப்போது மலிந்து வருகின்றன. எமிலிபோஸ்ட் மாதிரி பொதுவாழ்வில் நாகரிக நடைமுறைக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகின்றனÕÕ என்ற முன்னுரையுடன் எனது நண்பர் சாரதி இ|மெயில் அனுப்பி, Ôஇது உங்கள் பகுதிக்கு உதவுமா, பாருங்கள். இல்லையென்றால் டெலீட்டுங்கள்Õ என்று எழுதியிருந்தார்.
பொது வாழ்வில் நடத்தையை நாகரிகம், அநாகரிகம், ஆநாகரிகம் என மூன்று வகையாகப் பிரித்துக் குறிப்பிட்டிருக்கிறார் (எனக்கென்னவோ mad லிருந்து தட்டியிருக்கிறாரோ என்று சந்தேகம்!). இம்மாதிரி சாரதி இருபது அயிட்டம் கொடுத்திருந்தார். அவற்றில், நம் சூழ்நிலையில் பிரசுரத்துக்குத் தகுந்த பத்து மட்டும் தருகிறேன்.
உதாரணம்: 1.பொது இடத்தில் மூக்கை, காதை, பல்லை நோண்டாமல் இருப்பது நாகரிகம். நோண்டுவது அநாகரிகம். நோண்டுவது மட்டுமின்றி, விளைவை உருட்டி ஆராய்வது ஆநாகரிகம்!
2.புருவம், காது, மூக்கு உரோமங்களைச் சீராக வெட்டி வைத்திருப்பது நாகரிகம். வெட்டாமல், காடாக வளர்ப்பது அநாகரிகம். அவற்றை நீளமாக வளர்த்து, சீப்புப் போட்டு வாரிப் பின்னுவது ஆநாகரிகம்.
3.என்னதான் ஜலதோஷமாக இருந்தா லும், பொது இடங்களில் தும்மாமல், சிந்தாமல் கைக்குட்டையில் Ôஸ்க்Õகுவது நாகரிகம். மூக்கில் புல்லாக்கு போல் தொங்கவிடுவது அநாகரிகம். ‘ஹளார்Õ என்று 120 டெஸிபலில் தும்மி, ஜெட் வேகத்தில் பக்கத்தில் இருப்பவர் சட்டையில் பாய, ÔஸாரிÕ சொல்லாமல் துடைத்து விடுவது ஆநாகரிகம்.
4.ஹெர்னியா போன்ற ஆபரேஷன் பற்றிப் பேசாமல் இருப்பது நாகரிகம். ஆபரேஷன் தழும்பைக் காட்டுவது அநாகரிகம். ஆபரேஷனில் நீக்கிய பாகத்தை ஜாடியில் வைத்திருந்து காட்டுவது ஆநாகரிகம்.
5.சுத்தமான சட்டை அணிவது நாகரிகம். கைக்குக் கீழ் வியர்வைக் கறை தெரிய, சட்டை அணிவது அநாகரிகம். அந்த வியர்வையை மற்றவர் எதிரில் பிழிவது ஆநாகரிகம்.
6.ஆபீஸில்... தூங்காமல் இருப்பது நாகரிகம். குறட்டைவிட்டுத் தூங்குவது அநாகரிகம். குறட்டையுடன் ஜொள்ளு விடுவது ஆநாகரிகம்.
7.அடக்கி வைத் திருந்து, வீட்டுக்குப் போய் சிறுநீர் கழிப்பது நாகரிகம். தெருவில் சுவர்மேல் சிறுநீர் கழிப்பது அநாகரிகம். அதில் டிசைன் போடுவது ஆநாகரிகம்.
8.விருந்தில், சாப்பாட்டில் தலைமுடி இருந்தால், பார்க்காமல் நீக்குவது நாகரிகம். எல்லோரும் பார்க்க, அதை எடுத்துப் போடுவது அநாகரிகம். அந்த ரோமம் யாருடையது என்று பெண்களிடம் விசாரிப்பது ஆநாகரிகம்.
9.அடிபட்ட புண் தெரியாமல் உடை அணிவது நாகரிகம். அடிபட்ட புண்ணைக் காட்டுவது அநாகரிகம். அதை வரக் வரக்கென்று சொரிவது ஆநாகரிகம்.
10.சாப்பிடும்போது பேசாமல் இருப்பது நாகரிகம். வாய் நிறைய போண்டா சாப்பிட்டுக்கொண்டே பேசுவது அநாகரிகம். பாதி சாப்பிட்ட போண்டாவை எடுத்து, சற்று நேரம் கையில் வைத்துக்கொண்டு பேசுவது ஆநாகரிகம்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நாகரிகம். சுட்டிக்காட்டுவது அநாகரிகம். படம் போட்டுக் காட்டுவது ஆநாகரிகம்!
நன்றி ஆனந்த விகடன்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, September 20, 2004
நாகரிகம், அநாகரிகம் தெரியும்... அதென்ன ஆநாகரிகம்?
Posted by IdlyVadai at 9/20/2004 09:51:00 AM 0 comments
Thursday, September 09, 2004
Friday, September 03, 2004
புது முயற்சிகள் - 2
1. காசியின் தமிழ்மணம் - அற்புதமான முயற்சிக்கு எடுத்துக்காட்டு. இதை அவரே தனித்து செய்து காண்பித்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கூட்டாக செய்திருந்தால் முடிந்திருக்குமா ?
2. இட்லிவடையில் வரும் புதிர்களை பார்த்திருப்பீர்கள். இட்லிவடை வலைப்பதிவை வைத்து VIP புதிர் ஒன்றை குசும்பன் வெளியிட்டுள்ளார். இன்னுமும் நன்றாக எழுதியிருக்கலாம் என்பது என் எண்ணம். அவருடைய இந்த புதிய (தைரியமான?) முயற்சிக்கு பாராட்டுக்கள்.
Posted by IdlyVadai at 9/03/2004 09:32:00 AM 0 comments
Subscribe to:
Posts (Atom)