விளையாட்டு - Statutory warning - இந்திய அணி மேல் பெட் வைக்காதீர்கள்.
இலங்கையை நான்கு ரன் வித்தியாசத்தில் சூப்பர் லீகில் வீழ்த்திய பின் திடீர் என்று இந்திய அணி இனி சென்ற இடமெல்லாம் ஜெயித்துவிடும் என்று எல்லோரும் மீண்டும் நம்பினார்கள். இலங்கை 228 என்ற உடன் கோப்பை நமது என்று கனவு கண்டார்கள். அசிங்கமாக தோத்தார்கள். ஏனென்றால் அவர்கள் அன்று விளையாடியது கிரிக்கேட் இல்லை. அன்றைய மாட்சை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்.
முதல் பகுதி - ஆஹா இந்திய அணி என்றால் சும்மாவா ? எப்படி விளையாடுகிறார்கள் பார்த்தீர்களா? பந்து வீச்சாளர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.
இரண்டாவது பகுதி - 228 ஒரு சுலபமான இலக்கு என்ற நம்பிக்கையில் நண்பர்களுடன் பெட் வைத்தல்.
முன்றாம் பகுதி - கடவுளே என்ன ஆயிற்று இவர்களுக்கு ஏன் இவ்வளவு கேவலமாக விளையாடுகிறார்கள்.
நான்காம் பகுதி - அடச்சே சொதப்பிட்டாங்களே இவர்கள் விளம்பர படத்தில் நடிக்கத்தான் லாயக்கு.
நீதி: இந்திய அணியை நேசி, அவர்கள் ஜெயிக்க கடவுளை வழிபடு, ஆனால் அவர்கள் நம்பி பெட் வைக்காதே.
அரசியல் - புதிய சிக்கல்
சிபு சோரனை தொடர்ந்து இன்னொரு மத்திய அமைச்சரான டி.ஆர். சந்திரசேகர ராவுக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரான அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ., வற்புறுத்தியது. இதனால், மத்திய அரசுக்கு புதிய சிக்கல் முளைத்துள்ளது. இது மாதிரி எவ்வளவு பேர் கிளம்பியிருக்கீங்க ?
முன்பு நான் எழுதிய அடுத்த தேர்தலுக்கான விண்ணபப் படிவத்தின் டாப் 10+3 கேள்விகள்
அரசியல் - நடைப்பயணம்
மதிமுக பொதுச்செயலர் வைகோ தனது மறுமலர்ச்சி நடைப்பயணத்தை திருநெல்வேலியில் வியாழக்கிழமை நண்பகல் தொடங்கினார்.
தாமிரபரணி ஆற்றில் நீராடி தனது பயணத்தைத் தொடங்கிய அவர், 42 நாட்களில் 1,025 கி.மீ. தூரம் நடந்து சென்று அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னையைச் சென்றடைகிறார்.
வைகோவின் 'வேண்டும்' லிஸ்ட்
மாநிலங்களிடையே ஓடும் நதிகளை இணைக்க வேண்டும்
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும்
பொதுவாழ்வில் ஊடுருவிவிட்ட சீர்கேடுகளை அகற்றும் உணர்வு பொதுமக்களிடையே ஏற்பட வேண்டும்;
சாதி, மத மோதல்களைத் தடுக்க வேண்டும்;
வன்முறை மனப்பாங்கை இளைஞர்கள் கைவிட வேண்டும்
என்பனவற்றை வலியுறுத்துவதோடு, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் அராஜகத்தையும், ஊழல்களையும் எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டவும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
உங்களுக்கு டயாபடீஸ் என்றால் கலந்துகொள்ளலாம் வாக்கிங் டயாபடீஸூக்கு நல்லது.
அரசியல் - சம்பிரதாயம்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி/கவர்னரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. என்ன நடந்துவிட போகிறது ? ஒன்றும் நடக்காது. மிஞ்சி போனால் ஒரு நல்ல நாள் பார்த்து ஒரு அழகான ஃபைலில் போட்டு வைக்கலாம். பின் ஏன் இந்த கூத்து ? இப்படி பண்ணினால் தான் பத்திரிக்கை/டீவியில் உங்களை காண்பிப்பார்கள்.
கொரிக்க கொஞ்சம் பான் மசாலா
பான்மசாலா மற்றும் குட்கா விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதன் மூலம், தமிழகத்தில் பான்மசாலா மற்றும் குட்கா விற்பனைக்கு இருந்து வந்த தடை நீங்கியது. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.அதைத் தடை செய்ய வேண்டும் எனக் கருதியிருந்தால் நாடாளுமன்றமே அதற்குத் தடை விதித்திருக்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். சட்டப்படி நியாயமான தீர்ப்பு என்றாலும், நல்ல தீர்ப்பு இல்லை.
இது கொஞ்சம் ஓவர்
மதுரையை சுற்றியுள்ள மக்கள் வழக்கு சம்பந்தமாக சென்னைக்கு அலைவதை குறைக்க மதுரை கிளை துவங்க பட்டது. நல்லது நடந்தது ஆனால் வக்கீல்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார்கள்.மதுரை கிளைக்கு 25 ஆயிரம் வழக்குகள் மாற்றிக் கொடுத்தாலும், மீதம் சென்னையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்கவே 20 வருட காலம் ஆகும்.
நீண்ட காலமாக மிக நல்ல வருமானத்தைப் பார்த்து விட்ட சென்னை வக்கீல்கள், பிற்காலத்தில் தன் மகன், பேரன், கொள்ளுப் பேரன்களை வக்கீலுக்கு படிக்க வைத்து வக்கீலாக பிராக்டீஸ் செய்யும்போது, மதுரை கிளை துவங்குவதால் 100 வருடங்களுக்குப் பிறகு தன் கொள்ளுப் பேரன் வக்கீலாகும்போது அவன் தொழில் பாதிக்குமே என இப்போதே வேதனையுடன் கொள்ளுப் பேரனை எண்ணி துடி துடிக்கின்றனர்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டியை மாற்றியே தீர வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் மன்ற வக்கீல்கள் அனைவரும் அணி திரண்டு போராடினர்.இது கொஞ்சம் ஓவர்.
வருங்கால முதல்வர்களே..
இயக்குனர் பாரதிராஜா, ஒரு வார நாளிதழில், "நடிகர் விஜயகாந்த் எல்லாம் வருங்கால முதல்வர் என்று அடைமொழியிட்டுக் கொள்கிறார்' என்று மிகவும் வருத்தத்துடன் கடிந்து கொண்டுள்ளார். இந்தியர்களாக பிறந்த எல்லோரும் வருங்கால முதல்வர் என்று அழைத்துக் கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.நான் ஸ்கூலில் படிக்ககும் போது, "If you become a PM/CM" என்று கட்டுரை எழுதச் சொல்லுவார்கள் பாரதிராஜா அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தெரிவிப்பார்.
திருட்டுத்தானே ..
சென்னை போன்ற பெரு நகரங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குற்றங்கள் மிகவும் அதிகமாகி விட்டன.சில இடங்களில் கொள்ளையர்கள் கொலையும் செய்து விட்டுத் தப்பியோடி விடுகின்றனர். நம்முடைய தண்டனை சட்டத்தில் இதற்கு கடுமையான தண்டனை இல்லாததே இதற்கு காரணம்.
கொள்ளை, திருட்டு, வழிப்பறி மட்டும் செய்பவர்கள் குற்றம் நிரூபணமாகும்போது குறைந்தபட்சம் தண்டனையை கடுமையாக்க வேண்டும். திருட்டுத்தானே என்று விட்டுவிடுவதால் வந்த விளைவு.
ஓர் அறிவுரை
"இது பள்ளியா" என்று ஜெ கேட்டிருப்பது அவர் நாட்டு நடப்பு பற்றி அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதையே காண்பிக்கிறது. முன்பு அரசர்கள் "மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே" என்று கேட்டார்கள்,
மாறுவேடம் அணிந்து நகர்வலம் வந்தார்கள். இவர் அது மாதிரியெல்லாம் செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் வாரம் ஒரு முறை அமைச்சர்கள், பத்திரிக்கை நிருபர்களை சந்தித்தாலே போதும் நாட்டு நடப்புகள் தெரிய வரும்.
ஓர் எச்சரிக்கை
நக்ஸலைட்டுகள் மீதான தடையை ஆந்திர அரசு விலக்கி கொண்ட இந்த அவகாசத்தை அவர்கள் பணம், ஆட்பலம் சேர்க்க பயன்படுத்தபடுவதாக செய்தி வருகிறது. உண்மை இருக்கும் என்று தான் தோன்றுகிறது. இதற்க்காக ஆந்திர அரசு வருத்தபடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. ஆயிதத்தை ஒப்படைக்கும் வரை பேச்சு வார்த்தை தொடங்கியிருக்க கூடாது என்பது என் எண்ணம்.
சரி - தப்பு
கும்பகோணம் தீ விபத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஐந்து பேருக்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம், "கும்பகோணத்தில் இருந்து வழக்கறிஞர்கள் யாரும் மேற்படி குற்றவாளிகளுக்கு ஆஜராக மாட்டோம்' என்று முடிவெடுத்துள்ளது. நல்ல முடிவு தான், ஆனால் கொஞ்சம் யோசித்தால் இது ஒரு தப்பான முடிவு என்பது தெரியும்.
கடைசி செய்தி - மரணப்பிடியில்
இந்தியர்கள் மூன்று பேர் இராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இரண்டு வாரம் ஆகிறது. அவர்கள் வைத்த கோரிக்கை என்ன, என்ன பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. தீவிரவாதிகள் அவர்களை விட்டுவிட ஆண்டவனை பிராத்திப்பதை தவிர நாம் ஏதும் செய்ய இயலாது. மனிதாபிமானம் ஜெயிக்க வேண்டும்.
ஜோக்ஸ்
1. "தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தில் தி.மு.க., தில்லு முல்லு செய்து விட்டது' - ஜெயலலிதா.
2. "கவிதை எழுதுகிறவன் ஆட்சி செய்வதற்கு மிக அருமையானவன். கவிதை எழுதுபவனிடம் நாட்டை ஒப்படைத்தால் அந்த நாடு நன்றாக இருக்கும். இது மூடர்களுக்குத் தெரியவில்லை" - கவிக்கோ அப்துல் ரகுமான்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, August 09, 2004
சென்ற வார உலகம் - 9/8/04
Posted by IdlyVadai at 8/09/2004 12:35:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment