அரசியல் - ஒரு மந்திரி, ஒரு வழக்கு, ஒரு வாபஸ்
நான் சென்ற வார உலகம் எழுத ஆரம்பித்ததிலிருந்து யாராவது ஒரு மத்திய அமைச்சர் மாட்டிக்கொள்கிறார்.இந்த வாரம் ராஷ்ட்ரீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தஸ்லிமுதீன் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது போலவே இவருக்கு எதிராகவும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாராளுமன்றத்தில் பாஜகவினர் புயலைக்கிளப்புவார்கள், வழக்கம் போல் சபாநாயகர் சட்டர்ஜி ஸ்வீட்,காரம், காப்பி கொடுத்து
சமாதானப்படுத்துவார்.சற்றுமுன் கிடைத்த செய்தி: மத்திய அமைச்சர் முகமது தஸ்லிமுதீன் மீதான கொலை முயற்சி, வெடிபொருட்கள், பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக பதிவான வழக்கை பீகார் மாநில அரசு வாபஸ் பெற்றது.
அரசியல் - பேட்டி - போட்டி
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசுக்கு 11,625 கோடி ரூபாய் இழப்பு என்பது பல பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வந்தது. திரு.தீத்தன்(மாநில அக்கெளண்டெண்ட் ஜெனரல்) இந்த தகவல்களை தெரிவித்து, தவிர்க்க வேண்டிய செலவுகள், குறைபாடுகளால் இந்த இழப்பு எற்பட்டிருக்கிறது என்று பேட்டி கொடுத்து பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டார். தீத்தன் இந்த ஆண்டில் 4,713.88 கோடி ரூபாய் இழப்பு என்று கூறியதாக தினகரன், முரசொலி, ஹிந்துவில்
செய்தி வெளியாகியது. ஆனால் இது நான் பத்திரிகைகளுக்கு அளிக்கவில்லை என்று தீத்தன் கூறியுள்ளார். ஹிந்து மட்டும் ஒரு திருத்தத்தை அளித்துள்ளது. அது சரியாகயில்லை. அதிகாரி கூறியதாக ஒரு செய்தி அதற்கு ஒரு திருத்தம், திருத்தத்திருக்கு திருத்தம் என்று பல சந்தேகங்கள் எழுப்பிகிறது. தீத்தன் சுட்டிக்காட்டியுள்ள குறைகளுக்கு தமிழக முதல்வர் பதில் அளித்திருக்கிறார். முதல்வர் விளம்பரங்கள் மூலம் விளக்கம் அளித்தது எதுவும் தவறில்லை.
அரசியல் - ரகசிய சந்திப்பு
உடுமலையில் நடிகர் விஜயகாந்தை, பா.ஜ., மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இ ருவரும் தனி அறையில் அரசியல் விஷயங்கள் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்தினர். இந்த ரகசிய சந்திப்பு போட்டோவுடன் இல்லா பத்திரிக்கைகளிலும் ரகசியமாக வந்தது.
அரசியல் - வாக்கிங்
வைகோவின் வாக்கிங் பற்றி சென்றவாரம் எழுதியிருந்தேன். வைகோ சென்ற இடமெல்லாம் மக்கள் வரவேற்கும் காட்சி, போட்டோக்கள் இன்று எங்கு செல்லயிருக்கார் போன்ற தகவல்களை ரன்னிங் கமண்டரி போல் பத்திரிக்கை/டிவி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சன் டிவி ரன்னிங் கமண்டரி வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு வாக்கிங் கமண்டரி கூட கொடுக்கவில்லை.
அரசியல் - லாலுவின் அதிர்ச்சி வைதியம்
அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அதிரடியால் தற்போது டில்லியில் ரயில்வே அமைச்சக ஊழியர்கள் அலுவலகம் துவங்கும் நேரத்திற்கு முன்னதாகவே ஆஜராகி விடுகின்றனர். அதிகாரிகள் பலர் ஒரு மணிநேரத்திற்கு முன்பே உள்ளே அமர்ந்திருக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்வே அலுவலகங்களிலும் இதே நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது.டில்லியில், பார்லிமென்ட் ஹவுசை ஒட்டியுள்ள ரயில்வே அமைச்சகத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை ரயில்வே அமைச்சர் லாலு அதிரடி விஜயம் செய்து, தாமதமாக வந்த அதிகாரிகள் உட்பட ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தாமதமாக வந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு "ஆப்சென்ட்' போட்டு, ஒரு நாள் சபளத்திலும் "கை' வைத்தார்.
இதனால், ஆடிப் போன ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தற்போது ஒரு மணி நேரத்திற்கு முன்பே அலுவலகத்திற்கு வந்து விடுகின்றனர். மற்ற ஊழியர்களும் அலுவலக நேரத்திற்கு சற்று முன்னதாகவே வந்து விடுகின்றனர்.
பீஹார் முதலமைச்சர் ராப்பிரி தேவி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மட்டும்தான் போகிறார். மற்ற நாட்களில் உருளைக்கிழங்கு உரித்துக்கொண்டே ஃபைல்களை பார்கிறார்.
அரசியல் - தன்மானம்
ஒரு தவறும் செய்யாத என்னை, இரண்டு வருடங்களாக நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகள்
அனுமதிக்கவில்லை. இதைவிட அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்றும் பெரிதல்ல,'' என்று முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார். இது நம் இந்திய குணம். அவ்வளவுதான். இல்லாவிட்டல் இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் ஒரு காசுக்கும் உதவாத 'ராவ்பகதூர்', 'திவான்பகதூர்' பட்டங்களை நமக்கு கொடுத்து நம் தலையில் மிளகாய் அரைத்திருக்க முடியுமா? வெள்ளைக்காரர்களை பார்த்தால் நாம் கொஞ்சம் தாழ்த்தப்பட்டவர்களாக உணர்கிறோம். இதுதான் உண்மை. நம் கண்களில் தூசு விழுந்துவிட்டால்
'foreign particle' என்று அப்படியே விட்டாலும் விடுவோம்.
அரசியல் - குண்டர்கள்
தினமலர் மற்றும் காலைக்கதிர்' பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய பா.ம.க அரசியலை வன்மையாக எந்த கட்சியும் கண்டிக்காதது வியப்பை அளிக்கிறது. நீ ஆயுதம் வைத்திருந்தால் தீவிரவாதி உன் தொண்டர்கள் வைத்திருந்தால் நீ தலைவன் என்று எங்கோ படித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
தொழிலாளர் சேமநல நிதி - 8.5
நீண்ட இழுபறிக்குப் பின், தொழிலாளர் சேமநல நிதிக்கு (இ.பி.எப்.,) இந்த நிதியாண்டில் 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.தொழிலாளர் சேமநல நிதித் திட்டத்தில் நாடு முழுவதும் மூன்று கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இத்திட்டத்தில் தொழிலாளர்கள் செலுத்தும் தொகைக்கு தற்போது 9.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதை எட்டு சதவீதமாக குறைக்க மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.வட்டி விகிதத்தை முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டது. பலமுறை இக்குழுவின் கூட்டம் நடந்த போதும், முடிவு ஏற்படாமல் இழுபறியாக இருந்தது. குழுவின் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், இந்த
நிதியாண்டிற்கு மட்டும் 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா, இதை அறிவித்தார். கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்புடைய சி.ஐ.டி.யூ., மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற் சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. பாரதிய மஸ்துõர் சங்கமும் 8.5 சதவீத வட்டியை ஏற்கவில்லை. இதை எதிர்த்து, அடுத்த மாதம் 20ம் தேதி டில்லி, கோல்கட்டாவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக இச்சங்கம் அறிவித்தது. இதை ஏன் (புத்திசாலி)பட்ஜெட்டில் சொல்லாமல் இப்போழுது சொல்கிறார்கள்?
விளையாட்டு - நம்பிக்கை, எதிர்பார்ப்பு, எதார்த்தம்...
ஒலிம்பிக்... 4 ஆண்டு பயிற்சிக்கு பலனாக பதக்கங்களை அறுவடை செய்யும் விளையாட்டுத் திருவிழா.இதில் ஒரே வீராங்கனை பல தங்கங்களை அள்ளிச் செல்வதை நாம் ஏக்கத்துடன் பார்த்திருக்கிறோம். இத்தனை கோடி மக்கள் இருந்தும் நமக்கு வெண்கலம் மட்டுமே ஆறுதலாக கிடைக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளோம். கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவால் ஒரு தங்கப்பதக்கத்தை கூட பெற முடியாததது வேதனையான விஷயம்தான். இந்த வேதனைக்கு எல்லாம் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியாக
ஹாக்கி, தடகளத்தில் அஞ்சு ஜார்ஜ், துப்பாக்கி சுடுதலில் அஞ்சலி பகவத், பளு துõக்குதலில் மல்லீஸ்வரி, டென்னிசில் பயஸ், பூபதி என ஏகப்பட்ட பதக்க "நம்பிக்கைகள்' இம்முறை காணப்படுகின்றனர்.
எதார்த்தம்: நான் செல்ல வேண்டுமா என்ன ஒரு வெண்கலம் கிடத்தால் அதுவே ஒரு பெரிய சாதனைதான்.
இரண்டு தண்டனை
பள்ளி மாணவியை கற்பழித்துக் கொன்ற தனஞ்ஜய் சட்டர்ஜிக்கு 14ஆம் தேதி அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேல்முறையீடுகள், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியது உள்ளிட்ட பல விஷயங்களால் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போய்க் கொண்டே இருந்தது.தூக்கிலிட அவரை அழைத்துச் சென்ற போது அவர், "நான் நிரபராதி; என்னை கொல்கிறார்கள்' என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்.
இந்த தூக்கு தண்டனை வழக்கிற்கு ஒரு பெரிய hype மீடியாவினால் கிடைத்தது. தூக்கு தண்டனை வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை பற்றி தினமும் அலசினார்கள்.தனஞ்சய்க்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை சரிதான், ஆனால் 14 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றபட்டதுதான் தவறு என்பது என் எண்ணம். தனஞ்ஜய்க்கு இரண்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது - ஒரு ஆயுள் தண்டனை + ஒரு தூக்கு தண்டனை.
14 வயது மாணவியை, 14 ஆண்டுகளுக்கு முன் கற்பழித்துக் கொன்ற தனஞ்ஜயின் பிறந்ததினம் 14 ஆம் தேதி. இறந்த தினமும் 14 ஆம் தேதி!.
நம் எல்லோருக்கும் கொஞ்சம் பாவமாகதான் இருந்தது. தூக்கு தண்டனையை நீக்கமுடியாது. தூக்குத் தண்டனைக்கு பதிலாக குற்றவாளிக்கு விஷஊசி போட்டு மரணத்தை தழுவச் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை மனிதாபிமானத்தோடு ஒரு குற்றவாளியை உயிர் இழக்கச் செய்வதற்கு இதுவே வழி.
கொண்டாட்டம் - சுதந்திர தினம்.
சுதந்திர தினம் என்றால் நாம் எல்லோரும் முதலில் பார்ப்பது அது எந்த கிழமையில் வருகிறது என்று தான். இந்த வருடம் அது ஞாயிற்றுக்கிழமையில் வந்தது எல்லோருக்கும் ஏமாற்றமே. சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே டிவி சானல்கள் அன்று என்னென்ன சினிமா என்று அலர ஆரம்பித்துவிட்டன. பழைய கருப்பு வெள்ளை படங்களிருந்து சில காட்சிகளை போட்டு தங்களின் தேச பக்தியை உணர்த்தினார்கள். கொடியை குத்திக் கொண்டு நடிகர், நடிகைகள் பேட்டி கொடுத்தார்கள். வழக்கம் போல் டிடியில் அணிவகுப்பை காண்பித்தார்கள். செய்திகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு என்று வாசித்தார்கள். விஜய் டிவியில் -
காமராஜர், ராஜ் - வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் காண்பித்தார்கள்.
நம் நாட்டில் இது ஒரு சடங்கு அவ்வளவுதான்.
கப்பல்
நாட்டின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் துவக்க கூடாது என்று ஜெ கூறியிருக்கார். நல்ல கோரிக்கை என்பது என் எண்ணம். இந்த புதிய வசதியினால் பெட்ரோல், டீஸல் போன்ற பொருட்கள் கடத்தலுக்கு வழிவகுக்கும். ஏன் ஆயுத பரிமாற்றம் கூட நிகழலாம். என்னை கேட்டால் ஒரு பேப்பர் கப்பல் கூட விட அனுமதிக்க கூடாது.
குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்கப்பா
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அங்கு செயற்கையான ஏரி உருவாகியுள்ளது. இதில் தேங்கியிருக்கும் வெள்ள நீரினால் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கும் பெரும் அபாயம் ஏற்படக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை சென்னை பக்கம் திருப்ப முடியுமா ?
கின்னஸ் சாதனை ?
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல காவல்துறை அதிகாரிகள் முறைகேடான தொடர்பு வைத்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி காவல்துறைக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலட்சுமி இதுவரை 19 பேரை(இன்றைய கணக்குப்படி!) கல்யாணம் செய்துள்ளதாகவும், இதில் பலர் காவல்துறை அதிகாரிகள் எனவும், இவர்களைத் தவிர மேலும் பல போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று செய்திகள் வருகிறது. இந்த செய்தி விரைவில் அமுத்தப்படும் என்பது
என் எண்ணம்.
கடைசி செய்தி
ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள மூன்று இந்தியர்களை பற்றிய செய்தி அவ்வளவாக கடந்த வாரம் வரவில்லை. பேச்சு வார்த்தை முன்னேற்றம், பின்னடைவு என்று மாறி மாறி கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக தீவிரவாதிகளின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் அல் துலாய்மி, சுவாரசியமான பேட்டி ஒன்று அளித்தார். அதில், "பாலிவுட் நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா ஆகியோர் "டிவி'யில் தோன்றி வேண்டுகோள் விடுத்தால், இந்தியர்களை தீவிரவாதிகள் உடனடியாக விடுதலை செய்து விடுவார்கள்' என்றார். இந்த செய்தியை வைத்து கொஞ்ச நாள் பத்திரிக்கையை ஓட்டினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்திருக்கார்கள்.
ஜோக்ஸ்
"திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முஸ்லிம்கள் காரணம்" - கருணாநிதி.
"சந்தன கடத்தல் வீரப்பனின் குணாதிசயங்களை அறிந்தவன் நான். பொதுகாரியங்களுக்கு விரப்பன் எவ்வித இடையூரும் செய்யமாட்டான்" - ஈ.விகே.எஸ். இளங்கோவன்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, August 17, 2004
சென்ற வார உலகம் - 17/8/04
Posted by IdlyVadai at 8/17/2004 01:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment