திரு நாகூர் ரூமி தனது வலைப்பதிவில் "அல்லாஹ் பெரியவன்" என்ற தலைப்பில் சமீபத்தில் ஈராக்கில் ஒரு அப்பாவி கொரிய இளஞனை நான்கு தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்ததை பற்றி எழுதியுள்ளார். தீவிரவாதத்திற்கு மதம், மொழி கிடையாது. தீவிரவாதம் தீவிரவாதம்தான்.
ரூமியின் பதிவை படித்த போது எனக்கு தோன்றிய கருத்துக்கள் இவை:
1. "ஒரு ஜார்ஜ் புஷ், அல்லது ஒரு ரம்ஸ்·பெல்டு போன்றவர்களைப் பிடித்து அவர்கள் தலையைக் கொய்தால்கூட இதே பரிதாப உணர்ச்சிதான் ஏற்பட்டிருக்கும். என்றாலும், கொலை செய்பவர்கள் பக்கம் கொலைக்கு வரலாற்று ரீதியான ஒரு நியாயம் கிடைத்திருக்கலாம்" என்று ரூமி குறுப்பிடுகிறார். திரு ரூமி இது போல் எழுதியது எனக்கு வியப்பையும் ஆச்சிரியத்தையும் கொடுத்தது. ஆழ் மனதில் உள்ள வெறுப்பு சில சமயம் எழுத்தில் வந்துவிடுவது தடுக்கமுடியாது என்பதைத் தான் இது காட்டுகிறது.
2. "எவனொருவன் மற்றோர் ஆத்மாவை (அநியாயமாக) கொலை செய்கிறானோ, அவன், மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவனொருவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன், மனிதர்கள் யாவரையுமே வாழ வைத்தவன் போலாவான்" என்று குர் ஆனில் இருக்கிறது என்று கூறுகிறார் ரூமி.
ஆத்மா என்பது ஒரு பொதுவான விஷயம். எல்லா ஆதாமக்களுக்கும் உயிர் இருக்கிறது, எல்லா ஆத்மாக்களுக்கும் "கழுத்தை அறுத்தால் நுரையீரலுக்குக் காற்று செல்லும் குழல்தான் முதலில் அறுபடும் என்றும், பின்பு பிடரி எலும்பு துண்டிக்கப்படும்". நபிகள் ஏன் ஆத்மா என்று குறுப்பிடுகிறார், அவர் மனித ஆத்மா என்றே குறுப்பிட்டுயிருக்கலாமே ? சில சமயம் நாம் தவறாக interpret செய்கிறோம். எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்ட கருத்தை(எல்லா மதங்களுக்கும் பொருந்தும்) கண்முடித்தனமாக எடுத்து கொள்ளாமல் நன்றாக சிந்தித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு அறிவு, சிந்திக்கும் திறமை கடவுள் தந்த மிகப் பெரிய வரப்பிரசாதம். ஐந்தறிவு ஆத்மா, ஆறறிவு ஆத்மா என்று வேறு படுத்தி பார்க்கும் கடவுள் என்னை
பொருத்த மட்டில் கடவுள் கிடையாது அவரும் நம்மை போல் ஒரு சாதாரன மனிதரே. எனக்கு தெரிந்து, என்னுடைய கடவுள், அவ்வாறு வேறு படுத்த மாட்டார். கொஞ்சம் சிந்தியுங்கள்.
கணேசன் என்பவர் ஆத்மா மனித ஆத்மா மட்டும் தானா ? ஆடு, மாடும் என்ன பாவம் செய்தது என்று கேட்டதற்கு. ஆடு, மாடு போன்ற ஜீவன்களை கொலை செய்யாமல் விட்டால் அது நம்மை கொலை செய்துவிடும் என்று ரூமி பதில் தருகிறார். நியாமாக பார்த்தால் ஆடும் மாடும் தான் நம்மை பார்த்து இப்படி நினைக்க வேண்டும். (human science ?). மேலும், பர்ஸ், ஷூ போன்றதற்கு தோல் தேவை படுகிறதே என்று பதில் தருகிறார். நல்ல சிந்தனை, நல்ல ஜோக்.
( இந்த கோரக்காட்சியை CNN, BBC, NDTV எனக்கு தெரிந்து காமிக்கவில்லை, ஆனால் சன் டீவி அதை காமித்து சாதனை படைத்தது. இவர்களும் ஒரு வகை தீவிரவாதிகளே )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, July 19, 2004
ரூமியின் "அல்லாஹ் பெரியவன்" - என் எண்ணம்
Posted by IdlyVadai at 7/19/2004 11:57:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment