டீவியில் செந்தில் கவுண்டமணி நகைச்சுவையை பலர் பார்த்திருப்பீர்கள், பார்க்காதவர்கள் ஒரு முறை மரத்தடிப் பக்கம் போய் வாருங்கள். ஏகப்பட்ட செந்தில் ஏகப்பட்ட கவுண்டமணி!
மரத்தடி ஆண்டு விழா போட்டியில் இதையும் சேர்த்துக் கொள்ளாம் என்பது என் எண்ணம்.
பிகு: செந்தில் கவுண்டமணி மன்னிக்கவும்
முன்பு நான் எழுதிய இணைய(யாத?) குழுக்கள்
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Thursday, July 22, 2004
மரத்தடியில் செந்தில் கவுண்டமணி
Posted by IdlyVadai at 7/22/2004 03:53:00 PM 0 comments
Monday, July 19, 2004
ரூமியின் "அல்லாஹ் பெரியவன்" - என் எண்ணம்
திரு நாகூர் ரூமி தனது வலைப்பதிவில் "அல்லாஹ் பெரியவன்" என்ற தலைப்பில் சமீபத்தில் ஈராக்கில் ஒரு அப்பாவி கொரிய இளஞனை நான்கு தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்ததை பற்றி எழுதியுள்ளார். தீவிரவாதத்திற்கு மதம், மொழி கிடையாது. தீவிரவாதம் தீவிரவாதம்தான்.
ரூமியின் பதிவை படித்த போது எனக்கு தோன்றிய கருத்துக்கள் இவை:
1. "ஒரு ஜார்ஜ் புஷ், அல்லது ஒரு ரம்ஸ்·பெல்டு போன்றவர்களைப் பிடித்து அவர்கள் தலையைக் கொய்தால்கூட இதே பரிதாப உணர்ச்சிதான் ஏற்பட்டிருக்கும். என்றாலும், கொலை செய்பவர்கள் பக்கம் கொலைக்கு வரலாற்று ரீதியான ஒரு நியாயம் கிடைத்திருக்கலாம்" என்று ரூமி குறுப்பிடுகிறார். திரு ரூமி இது போல் எழுதியது எனக்கு வியப்பையும் ஆச்சிரியத்தையும் கொடுத்தது. ஆழ் மனதில் உள்ள வெறுப்பு சில சமயம் எழுத்தில் வந்துவிடுவது தடுக்கமுடியாது என்பதைத் தான் இது காட்டுகிறது.
2. "எவனொருவன் மற்றோர் ஆத்மாவை (அநியாயமாக) கொலை செய்கிறானோ, அவன், மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவனொருவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன், மனிதர்கள் யாவரையுமே வாழ வைத்தவன் போலாவான்" என்று குர் ஆனில் இருக்கிறது என்று கூறுகிறார் ரூமி.
ஆத்மா என்பது ஒரு பொதுவான விஷயம். எல்லா ஆதாமக்களுக்கும் உயிர் இருக்கிறது, எல்லா ஆத்மாக்களுக்கும் "கழுத்தை அறுத்தால் நுரையீரலுக்குக் காற்று செல்லும் குழல்தான் முதலில் அறுபடும் என்றும், பின்பு பிடரி எலும்பு துண்டிக்கப்படும்". நபிகள் ஏன் ஆத்மா என்று குறுப்பிடுகிறார், அவர் மனித ஆத்மா என்றே குறுப்பிட்டுயிருக்கலாமே ? சில சமயம் நாம் தவறாக interpret செய்கிறோம். எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்ட கருத்தை(எல்லா மதங்களுக்கும் பொருந்தும்) கண்முடித்தனமாக எடுத்து கொள்ளாமல் நன்றாக சிந்தித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு அறிவு, சிந்திக்கும் திறமை கடவுள் தந்த மிகப் பெரிய வரப்பிரசாதம். ஐந்தறிவு ஆத்மா, ஆறறிவு ஆத்மா என்று வேறு படுத்தி பார்க்கும் கடவுள் என்னை
பொருத்த மட்டில் கடவுள் கிடையாது அவரும் நம்மை போல் ஒரு சாதாரன மனிதரே. எனக்கு தெரிந்து, என்னுடைய கடவுள், அவ்வாறு வேறு படுத்த மாட்டார். கொஞ்சம் சிந்தியுங்கள்.
கணேசன் என்பவர் ஆத்மா மனித ஆத்மா மட்டும் தானா ? ஆடு, மாடும் என்ன பாவம் செய்தது என்று கேட்டதற்கு. ஆடு, மாடு போன்ற ஜீவன்களை கொலை செய்யாமல் விட்டால் அது நம்மை கொலை செய்துவிடும் என்று ரூமி பதில் தருகிறார். நியாமாக பார்த்தால் ஆடும் மாடும் தான் நம்மை பார்த்து இப்படி நினைக்க வேண்டும். (human science ?). மேலும், பர்ஸ், ஷூ போன்றதற்கு தோல் தேவை படுகிறதே என்று பதில் தருகிறார். நல்ல சிந்தனை, நல்ல ஜோக்.
( இந்த கோரக்காட்சியை CNN, BBC, NDTV எனக்கு தெரிந்து காமிக்கவில்லை, ஆனால் சன் டீவி அதை காமித்து சாதனை படைத்தது. இவர்களும் ஒரு வகை தீவிரவாதிகளே )
Posted by IdlyVadai at 7/19/2004 11:57:00 AM 0 comments
Tuesday, July 13, 2004
கல்வி முறை மாற வேண்டும்!
கல்வி முறை மாற வேண்டும்! மாற வேண்டும்! என்று பலர் சொன்னாலும், எழுதினாலும் யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. எதற்கு மாற்றம் தேவையோ இல்லையோ, மேல்நிலைப் பள்ளிக்கல்விமுறைக்கு மாற்றம் தேவை. ஏனென்றால் மேல்நிலைக் கல்வி, தொழில் சார்ந்த கல்வியின் வாசல். 10ம் வகுப்பு வரை நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் சரியாக படிப்பதில்லை. 10ம் வகுப்பில் கணக்கில் 100 வாங்கிய மாணவர்கள் பலர் 11ம் வகுப்பில் கணக்கில் பெயிலாவது உண்டு. இதற்கு என்ன காரணம்? அந்த மாணவர்கள் திறமையில்லாதவர்களா? இதற்கு காரணம் 10ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியவை. சில எளிய உதாரணங்களைக் கொண்டு விளங்கக் கூடியவை. 11ல் இருந்து பாடங்கள் எளிய உதாரணங்களால் விளங்காது. கொஞ்சம் கற்பனா சக்தி இருந்தால்தான் புரிந்துகொள்ள முடியும். அதற்காக இந்த பாடங்களை விட்டு விட முடியுமா? அவற்றையும் எளிதாக்குவதற்கு பாடத்திட்டத்தில் பிராக்டிகள் வகுப்புகள் இருக்கிறது. இதுவும் சரியான வழி முறைதான். பின் எங்கே தவறு? பாடத்திட்டம் சரியானதுதான். ஆனால் அதை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முறை? முதலாவதாக அவற்றை கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களே(பெருவாரியான) , அந்த பாடங்களை சரியாக புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு புரிந்தால்தானே மாணவர்களுக்கு புரிய வைப்பதைப் பற்றி யோசிக்க முடியும். அவர்களைப் பொறுத்தவரை கல்வி முறை என்பது மாணவர்களை பாடத்தை மனப்பாடம் செய்ய வைத்து, தேர்வு எழுத வைப்பது. அடுத்ததாக கல்வி என்பது தேர்வுக்கான படிப்பு மட்டுமே என்று ஆகிவிட்டது. தேர்வில் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கேள்விகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற எண்ணம் எல்லோர் மத்தியிலும் பரவி விட்டது. அது போன்ற கேள்விகளை இனங்கண்டு, மாணவர்களை படிக்க(?) செய்வதில் பல ஆசிரியர்கள் கில்லாடிகள். இதனால் படிப்பை மதிப்பிடத் தேர்வு என்ற நிலை மாறி தேர்வுக்காகப் படிப்பு என்று ஆகிவிட்டது. அடுத்தக் கூத்து தேர்வுத்தாள் திருத்துவது. வெகு சிலரே விடைகளைச் சரியாக மதிப்பிடுகின்றனர். பலர் விடைகளைச் சரியாக வாசிப்பது கிடையாது. 'ஒவ்வொன்றையும் வாசித்து திருத்தினால், ஒரு நாளைக்கு பத்து விடைத்தாள்கள் கூட திருத்த முடியாது', என்று காரணம் கூறுவார்கள். அது போக அவர்களின் வீட்டு, வெளிக் கோபங்களை வேறு விடைத்தாள்களில்தான் காட்டுவார்கள். இதையெல்லாம் மீறி ஒரு மாணவன் ஸ்டேட் ராங்க் வாங்குவது பெரிய அதிர்ஷ்டம்!?!?! இப்படி வழங்கப்பட்ட மதிப்பெண்களைக் கொண்டுதான் ஒரு மாணவனின் புத்திசாலித்தனத்தை சமூகம் மதிப்பிடுகிறது. இதனால் சமுதாயத்திற்குத்தான் நஷ்டம். பல புத்திசாலிகளை இழக்கிறது. இவையெல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் மாறி விடாது, மாற்றவும் முடியாது. ஆனால் அரசாங்கம் சரியானபடி திட்டமிட்டால், ஆசிரியர்களும் அவர்களின் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், நல்லது சீக்கிரம் நடக்கும். - மகேசன் இரா.
Posted by IdlyVadai at 7/13/2004 12:57:00 PM 0 comments
Wednesday, July 07, 2004
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 9
நகைச்சுவையில் ஒரு வகை விஷயத்துக்கு வராமல் இழுத்துக்கொண்டே போய், கடைசியில் ஒரு சாவதானமாக சமாசாரத்துக்கு வருகிற பாணியில் ஹாஸ்யம் கொண்டுவருவார்கள்.
ஓர் உதாரணம்:
"அண்ணா நகருக்கு எப்படி போகணுங்க ? "
"இப்படியே போங்க.. முதல் தெருவை விட்டுடுங்க. இரண்டாவது தெருவை விட்டுடுங்க...
மூன்றாவதைவிட்டுடுங்க. வலது பக்கம் திரும்புங்க..முதல் சந்தை விட்டுடுங்க..இரண்டாவதை விட்டுடுங்க.. மூன்றாவதையும் விட்டுடுங்க.. திரும்பினதும் ஒரு லைப்ரரி இருக்கிறது.. முதல் அறையை விட்டுடுங்க.. இரண்டாவது அறையை விட்டுடுங்க.. முன்றாவதையும் விட்டுடுங்க.. அப்புறம் ஒரு அலமாரி இருக்கும் முதல் ஷெல்பை விட்டுடுங்க.. இரண்டாவது விட்டுடுங்க.. மூன்றாவதை விட்டுடுங்க.. நாலாவதில் ஒரு பைபிள் புஸ்தகம் இருக்கும். அந்த பைபிள்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன் எனக்கு தெரியாது!"
எஸ்.வி.வி அவர்கள் இத்தகைய 'போர் அடிக்கிற, சலித்துப்போகவைக்கிற' உத்தியை நிறைய
கையாண்டிருக்கிறார். 'இப்படியும் ஒரு பிரகிருதி' ஒரு நல்ல உதாரணம். (முடிந்தால் இதை கொடுக்க முயற்சிக்கிறேன்) ( செல்லாத ரூபாய், எஸ்.வி.வி, அல்லயன்ஸ் ).
நிங்கள் இது போல் முயற்சி செய்து எனக்கு அனுப்புங்களேன் ?
Posted by IdlyVadai at 7/07/2004 06:27:00 PM 0 comments
Tuesday, July 06, 2004
சினிமா விமர்சனம் மச்சி !
எல்லோரும் blogல் சினிமா விமர்சனம் எழுதுகிறார்களே, நாமும் ஒன்றை எழுதலாம் என்று ஆசைப்பட்டேன். சினிமா விமர்சனம் எழுத படத்தை அட்லீஸ்ட் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் அதனால் ஒரு படம் பார்க்க போனேன். இல்லோரும் ஆயுத எழுத்தை அலசி காயப்போட்டதனால். நான் 'மச்சி'யை தேர்ந்தெடுத்தேன். எவ்வளவு தப்பு என்பது படம் ஆரம்பித்து பத்து நிமிடத்தில் தெரிந்தது.
தமிழ் சினிமாவில் தற்போது சின்ன டைட்டில் சீசன்! சாமி, தூள், அருள், குத்து, கில்லி, ஜோர் இப்போது மச்சி. நாளை 'ஏய்', 'ஷாக்' ஆகி விடாதீர்கள். இவர்கள் 'கதை' என்ற சின்ன எழுத்துக்கு கொஞ்சம் அக்கறைக் காமித்தால் நல்லது.
மச்சியின் கதை இதுதான்: ஹீரோவை (துஷ்யந்த்) ஒரு விபத்திலிருந்து நான்கு பேர் காப்பாற்றுகிறார்கள். நன்பர்களாகிறார்கள். பிறகு அவர்கள் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். வில்லன் அவர்களை துரத்துகிறான். ஹீரோ அவர்களை காப்பாற்றி, கடைசியில் ஜெயிலுக்கு போகிறார். ஆஹா! இதன் நடுவே காதல், செண்டிமெண்ட், சண்டை எல்லாம் வரும் ஜாக்கிரதை.
வில்லனாக 'பசுபதி' நடித்துள்ளார். விருமாண்டியில் கமலிடம் கஷ்டப்பட்டு சாகும் இவர். இதில் நேற்று முளைத்த மீசையுடன் வரும் ஹீரோவிடம் ஈஸியாக அடிப்பட்டு சாகிறார். ஹீரோ அவரை அடிக்கும் போதெல்லாம் 'நார்ராய்யண்ணன்.." என்று சத்தம் மட்டும் பெரிதாக போடுகிறார்.
படத்தில் காமெடி இல்லாத குறையை செண்டிமெண்ட் சீன்கள் போக்குகிறது.
ரைஹானா (ஏ.ஆர்.ரஹமான் சகோதரி ) இசை அமைக்க முயர்ச்சி செய்துள்ளார்.
விரைவில் "இந்திய தொலைக்காட்சியில்...."
படம் உதவி : galatta.com
Posted by IdlyVadai at 7/06/2004 09:16:00 AM 0 comments
Thursday, July 01, 2004
யார் இவர் விடை !
யாரும் சரியான விடையை சொல்லவில்லை. விடை - கடந்த இரண்டு வாரமாக பத்திரிக்கை மற்றும் டீவியில் பிரபலமாக இருக்கும் நம்ம 'குட்டி + சாமி + யார்!' தான்( பரணிதர ஸ்ரீஹரி ராகவேந்திர சுவாமி )
Posted by IdlyVadai at 7/01/2004 12:36:00 PM 1 comments