பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 09, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 8

அடுத்ததாக Repartee - Adroitness and cleverness in reply. அத்தாங்க பளிச் பளிச்சென்று வேடிக்கையாக பதில் அளிப்பது. அரசு பதில்கள், துக்ளக் 'சோ' பதில்கள், மதனின் கேள்வி பதில்கள் இதற்கு உதாரணங்கள்.

கேள்வி: நிகழ்ச்சிகளுக்கு முன் இறைவணக்கப் பாடலும், முடிந்தபின் நாட்டு வணக்கப் பாடலும் பாடுகிறார்களே, ஏன்?"
சோவின் பதில்: நிகழ்ச்சி அமைதியாக நடக்க வேண்டுமே என்று நினைத்து இறைவனை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கிறோம். முடிந்தபிறகு இந்த நாட்டில் கூட அமைதியாக ஒரு நிகழ்ச்சி நடந்ததே என்று நினைத்து நாட்டுக்கு வணக்கம் சொல்கிறோம்.


கேள்வி: ஓட்டுப் போடும்போது ஏன் மறைவாகப் போய் போடுகிறோம் ?
சோவின் பதில்: தவறுகளைப் பலர் முன்னிலையில் செய்ய இன்னும் துணிவு வரவில்லை!
(துக்ளக் கேள்வி பதில் ( அல்லயன்ஸ்) )

கேள்வி: அரசியல்வாதிகள் வெளிநாட்டுக்குச் சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது ஏன் ?
மதனின் பதில்: மெரிட் இல்லாமல் தன்னிடமே லஞ்சம் கொடுத்து ரெகமெண்டேஷனில் சீட் வாங்கிய டாக்டர் தனக்கே ஆபரேஷன் செய்துவிடுவாரோ என்ற பயமாக இருக்கலாம்.

கேள்வி: அதிகபட்சமாக மாமியார் வீட்டில் எவ்வளவு காலத்தை கழிக்கலாம் ?
மதனின் பதில்: அதெல்லாம் ஜட்ஜின் தீர்ப்பை பொறுத்தது!
( ஹாய் மதன், விகடன் பிரசுரம் )

கேள்வி: தொப்பை ஏன் விழுகிறது ?
அரசு பதில்: வயிற்றில் இடம் இல்லாததால்!

Repartee பெரும்பாலும் சிலேடையுடன் வரும். அதற்கு உதாரணமாக கவிஞர் வாலியின் அனுபவம்... ..... பொதுவாக அந்த நபருக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது. .........."இவனெல்லாம் ஒரு கவிஞனா?" என்று என்னைப் பற்றி ஒரு கணிப்பை விழிகளில் எப்போழுதும் ஒட்டி வைத்துக் கொண்டு உலா வருபவர்.

சண்முகம் அண்ணாச்சி என்னை அவரிடம் அறிமுகப் படுத்ததியவுடன், என்னை ஏதோ ஓர் இக்கட்டான கேள்வியைக் கேட்டு திக்குமுக்காட வைக்க வேண்டும் என்ற திட்டமிட்டாரோ என்னவோ ! அவர் என்னைப் பார்த்து ஒரு வினாவைத் தொடுத்தார்:
"நிங்க ஏன்சார், வாலின்னு பேர் வெச்சுக்கிடிருக்கீங்க?" அவரது உள்நோக்கம் ஓரளவு எனக்கு புரிந்திருக்கும் நான் பவ்வியமாகப் பதில் சொன்னேன், "சார்! நீங்க தமிழறிஞர்; ராமாயணம் படிச்சிருப்பீன்ங்க! எதிராளி ஒருவன் வாலிக்கு முன்வந்து நின்றால், அவனது பலத்தில் பாதி
வாலியை வந்தடையும் என்பது ராமாயண வழக்கு. அது மாதிரி, எந்த அறிவாளி என் முன் வந்து நின்றாலும், அவரது அறிவில் பாதி என்னை வந்து சேரவேண்டும் என்பதற்காகதான், நான் 'வாலி' என்ற பெயர் வைத்துக் கொண்டேன்; அப்படிப் பலரது அறிவு என்க்கு கிடைக்கும் என்ற ஆசைதான்!"

இந்த விளக்கத்தைக் கேட்டதும் அவர் ஏளனமாகச் சிரித்து விட்டுப் பேசினார்:
அப்படிப் பலரது அறிவில் பாதி உம்மைச் சேர்ந்திருந்தால் நீர் இவ்வளவு காலம் பெரிய அறிவாளியாக அல்லவா ஆகியிருக்க வேண்டும்..? உம்மைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே..!" நான் ஒரு வினாடி கூடத் தயங்காமல் அவருக்கு பதிலுரைத்தேன்:
"சாரி! நான் இன்னும் என் வாழ்கையில் ஒரு அறிவாளியைக் கூட சந்திக்கவில்லையே?!" ......

அந்த தமிழ் எழுத்தாளரின் முகம் தொங்கிப்போயிற்று உடனே என்மீது வெறொரு கணையைத் தொடுத்தார் "என்னதான் நீர் சினிமாவில் பாட்டு எழுதினாலும் கண்ணதாசன் மாதிரி ஒரு கவியரசாக ஆகமுடியாது..."

உடனே நான் சொன்னேன்: "சார்! எதற்கு நான் இனிமே கவியரசு என்று ஆகணும்? வாலின்னு சொன்னாலே, கவியாரசு என்றுதானே அர்த்தம்! இதுவும் ராமாயணம் படிச்ச உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்...."

( நன்றி: நானும் இந்த நூற்றாண்டும், கவிஞர் வாலி, வானதி பதிப்பகம் )

0 Comments: