பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 25, 2004

மீண்டும் யார் இவர் ?

அடுத்த வாரம் இவரை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்
Clue கீழே உள்ள படத்தில் !

Read More...

Thursday, June 24, 2004

இவர் யார் ?



யாரும் சொல்லவில்லை என்றால் விடை நாளை

Read More...

Tuesday, June 22, 2004

நா கூறும் நாக்கூறும் ! - எனக்கு பிடித்த டாப் 9

எனக்கு பிடித்த டாப் 9 என்று சொன்னவுடன் அது ஜோக் தான் என்று பலர் தப்பாக யூகித்துள்ளார்கள். இட்லிவடையில் இட்லி பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்றால் எனக்கு அடுத்த வேளை இட்லி, சாரி சாப்பாடு கிடைக்காது. அதனால் 99வது வதிவு இட்லி ஸ்பெஷல்.

1. ரத்தினா கபே சாம்பார் இட்லி
2. கீதா கபே மல்லிகைப்பூ இட்லி
3. பாலாஜி பவன் பட்டாணி இட்லி
4. சங்கீதா செட்டிநாடு இட்லி
5. சரவண பவன் 14 இட்லி
6. சக்கர பொங்கல் காஞ்சிபுரம் இட்லி
7. வசந்த பவன் ஃப்ரைட் இட்லி
8. MTR ரவா இட்லி
9. முருகன் இட்லி கடை

1. ரத்தினா கபே: ரொம்ப காலமாக இருக்கிற ஹோட்டல். என் தாத்தா இங்கு இட்லி சாப்பிட்டிருக்கிறார். திருவல்லிக்கேணியில் இருக்கிறது. சனி ஞாயிறு கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு ஸ்பெஷல் இட்லி சாம்பார். சாம்பாரை ஒரு Mugகில் கொண்டுவந்து ஊற்றுவார்கள். சாம்பார் தீரத்தீர ஒருவர் உங்கள் தட்டை ரொப்பிக் கொண்டே இருப்பார். ஒரு முறை இங்கு சென்று தோசை சாப்பிட்டேன். எல்லோரும் என்னை ஏதோ கொலை குற்றம் செய்தவரை போல் பார்த்தார்கள்.

2. கீதா கபே: சாயந்திரம் 4-6:30pm வரை மல்லிகைப்பூ இட்லி கிடைக்கும். கும் என்று ஸ்பாஞ் போல் இருக்கும். தி.நகர் பாண்டி பஜாரில் இருக்கிறது. 6:35 போனால் தீர்ந்து போயிருக்கும். கொஞ்சம் சீக்கிரமாக போய்விடுங்கள். இந்த இட்லிக்கு மற்றொரு பேர் குஷ்பு இட்லி. வாழ்க தமிழர்கள்.

3. பாலாஜி பவன்: கீதா கபேயில் மல்லிகைப்பூ இட்லி கிடைக்கவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் பாலாஜி பவனுக்கு செல்லுங்கள். இங்கு பட்டாணி இட்லி ஸ்பேஷல். நன்றாக இருக்கும். ஒரு முறை போய் பாருங்களேன்.

4. சங்கீதா: ஒரு பிலேட்டில் மூன்று இட்லி இருந்தால் அது செட்டிநாடு இட்லி. Side Dish- வத்த குழம்பு, தக்காளி , புதினா சட்னி!. நுங்கம் பாக்கம், தி.நகர், அடையார், மைலாப்பூர் ஆகிய இடங்களில் கிளைகள் இருக்கின்றன.

5. சரவண பவன்: 14 இட்லி சாம்பார் ஸ்பெஷல். இந்தியாவிற்கு வரும் NRIக்கு என்றே ஏற்பட்ட உணவு என்று நினைக்கிறேன். நெய் ஊற்றி, 14 மினி இட்லியை மொதக்கவிட்டு .. போய் சாப்பிடுங்கள்.

6. சக்கரப் பொங்கல்: பல நல்ல rare உணவு வகைளை அறிமுகப்படுத்தியவர்கள். இங்கு காஞ்சீபுரம் இட்லி நன்றாக இருக்கும். இவர்களிடத்தில் சக்கர பொங்கல், மோர்களி,கேழ்வரகு கூழ், புளிஉப்புமா, மணிகொழக்கட்டை, பிடி கொழக்கட்டை போன்ற கொள்ளுப்பாட்டி உணவு வகைகள் கிடைத்துக்கொண்டிருந்தது. தற்போது இவர்களை காணவில்லை. தேடி கொடுப்பவர்களுக்கு சிறப்பு பரிசு.

7. வசந்த பவன்: உங்களுக்கு கொலஸ்டரால் பற்றி கவலையில்லை என்றால், நீங்கள் வசந்த பவன் சென்று ஃப்ரைட் இட்லி சாப்பிடலாம். எக்மோர், அடையாரில் கிளைகள் இருக்கிறது. எச்சரிக்கை:ஃப்ரைட் இட்லி சாப்பிட்டவுடன் உதடு லிப்ஸ்டிக் போட்டார் போல் சிகப்பாகிவிடும். வீட்டுக்கு துடைத்துக் கொண்டு போங்கள்.

8.நம்ம MTR: Residency ஹோட்டல் எதிரில். 'நம்ம MTR' என்று புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். கார் வைத்து கொண்டிருப்பவர்கள் அடிக்கடி வந்து போகிறார்கள். இங்கு ரவா இட்லி கிடைக்கிறது. Stuffed சட்னி வடை மற்றொரு ஸ்பெஷல். சுத்தமான ஃபில்டர் காப்பியுடன் ஆஹா!

9. முருகன் இட்லி கடை: இட்லிக்கு என்றே ஒரு கடை. மதுரை famous முருகன் இட்லி கடை இப்போது சென்னையில். இரண்டு இடத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். இட்லிக்கு 5 விதமான சட்னி, இட்லி பொடி என்று அசத்துகிறார்கள். வருகிறவர்கள் எல்லோரும் இடம் கிடைக்காமல் வேளியே டீவி சீரியல் பார்க்காமல் இட்லிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்க்ள். அவர்களுடைய இன்னொரு ஸ்பெஷல் - சின்ன வெங்காய ஊத்தப்பம்!.

999ஆம் பதிவு வடையை பற்றியது இல்லை, பயப்படாதீர்கள்.

Read More...

Thursday, June 17, 2004

எனக்கு பிடித்த 9 (டேஷ்,டேஷ்,டேஷ்)

என்னுடைய அடுத்த பதிவு 99வது பதிவு. அதில் எனக்கு பிடித்த டாப் 9 (- - -)
கொடுக்கலாம் என்று இருக்கிறேன்!.

பி.கு 1: இதுக்கும் ஒன்பது கட்டளைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. (மச்சி அதெல்லாம் பெரியவங்க சாமாச்சாரம்)
பி.கு 2: ஜெ'யின் ராசி நம்பருக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை. (அப்படியா ? நல்லது!)
பி.கு 3: அரசியல் ? மூச்!
பி.கு 4: நகைச்சுவை ? சுவை இருக்கலாம்.( ம்ம்ம் )
பி.கு 5: அரைத்த மாவே அரைக்கப்படும்! ( போச்சுடா!)
பி.கு 6: சத்தியமாக நக்கலும், அசட்டுத்தனமும் இருக்காது. (அப்பாடா!)
பி.கு 7: கவிதை, ஹைக்கூ ? (நோ நோ !)
பி.கு 8: சினிமா ? (கிடையவே கிடையாது!)
பி.கு 9: எனக்கு பிடித்தது, உங்களுக்கு பிடித்தது. (ஓவர் பில்டப், அவ்வளவுதான்!)

( அப்பா! ஒரு வழியாக 9 பி.கு வந்து விட்டது! ).

என்ன என்று ஊகித்து விட்டீர்களா ? இல்லை ? அடுத்த வாரம் வரை காத்திருக்கவும் !

Read More...

Wednesday, June 16, 2004

எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங் !

'எளிய தமிழில் இனிய மார்கெட்டிங்' என்று மீனாக்ஸ் எழுதுவது பலருக்கு தெரிந்திருக்கலாம். அதை ஆரம்பித்த நாள் முதல் படித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல சிரத்தை எடுத்து செய்கிறார், எளிய தமிழில் இவருடைய இந்த முயற்சி பாராட்டுக்குறியது.'மார்கெட்டிங்' என்பது ஒரு பெரிய கலை ( நான் மார்கெட்டிங்கில் இருப்பதால் இதை சொல்லவில்லை!).

ஓர் உதாரணம்: மார்கெட்டிங்கில் இருக்கும் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள 'டார்கெட்'டால் டென்ஷனாகி தற்கொலை பண்ணிக்கொள்ள முடிவு செய்தார். அருகில் உள்ள குளத்துக்கு சென்றார். கடைசியாக காயத்திரி மந்திரம் சொல்லலாம் என்று கண்ணை முடிக் கொண்டார். மூடிக்கும் முன் போலிஸ் அங்கு வந்து அவரை கைது செய்தது. "தற்கொலைக்கு 5 வருடம் சிறை தண்டனை தெரியுமா ?" என்றார் இன்ஸ்பெக்டர். நம்ம மார்க்கெட்டிங் ஆசாமி, தன் மார்கெட்டிங் திறமையை உபயோகப்படுத்த ஆரம்பித்தார். இன்ஸ்பெக்டரிடம் தான் ஏன் தற்கொலைக்கு முனைந்தார் என்றும் தற்கொலையினால் என்னென்ன பயன் என்று விளக்கிக் கூறினார். சொல்லி முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் தண்ணியில் குதித்தார்!.

Read More...

Monday, June 14, 2004

தப்பித்தவறி வந்த நகைச்சுவை

சில சமயம் தப்பித்தவறி ஈ-மெயிலில் சில நல்ல நகைச்சுவை வரும். கீழே கொடுத்திருப்பது நேற்று எனக்கு வந்தது.

The manager of a large corporation got a heart attack, and the doctor told him to go
for several weeks to a farm to relax. The guy went to a farm, and after a couple of
days he was very bored, so he asked the farmer to give him some job to do.
The farmer told him to clean the shit of the cows. The farmer thought that to somebody
coming from the city working the whole life sitting in an office, it would take over a week to finish the job, but to his surprise the manager finished the job in less than one day.
The next day the farmer gave to the manager a more difficult job to cut the heads of 500 chickens. The farmer was sure that the manager will not be able to the job, but at the end of the day the job was done.
The next morning, as most of the jobs in the farm were done, the farmer asked the manager to divide a bag of potatoes in two boxes: one box with small potatoes and one box with big potatoes. At the end of the day the farmer saw that the manager was sitting in front of the potatoes bag, but the two boxes were empty. The farmer asked the manager: "How is that you did such difficult jobs during the first days, and now you cannot do this simple job?"
The manager answered: "Listen, all my life I am cutting heads and dealing with shit,
but now you ask me to make decisions!"

Read More...

Thursday, June 10, 2004

உதவாக்கரையின் விமர்சனங்கள்

கிருபாவின் ஃ எழுத்து விமர்சனத்தை இங்கு பார்க்கவும்.
சும்மா சொல்ல கூடாது நல்லாவே இருக்கு. கிருப்பவிற்கு இட்லிவடையின் ஆசீர்வாதங்கள்.

Read More...

Wednesday, June 09, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 8

அடுத்ததாக Repartee - Adroitness and cleverness in reply. அத்தாங்க பளிச் பளிச்சென்று வேடிக்கையாக பதில் அளிப்பது. அரசு பதில்கள், துக்ளக் 'சோ' பதில்கள், மதனின் கேள்வி பதில்கள் இதற்கு உதாரணங்கள்.

கேள்வி: நிகழ்ச்சிகளுக்கு முன் இறைவணக்கப் பாடலும், முடிந்தபின் நாட்டு வணக்கப் பாடலும் பாடுகிறார்களே, ஏன்?"
சோவின் பதில்: நிகழ்ச்சி அமைதியாக நடக்க வேண்டுமே என்று நினைத்து இறைவனை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கிறோம். முடிந்தபிறகு இந்த நாட்டில் கூட அமைதியாக ஒரு நிகழ்ச்சி நடந்ததே என்று நினைத்து நாட்டுக்கு வணக்கம் சொல்கிறோம்.


கேள்வி: ஓட்டுப் போடும்போது ஏன் மறைவாகப் போய் போடுகிறோம் ?
சோவின் பதில்: தவறுகளைப் பலர் முன்னிலையில் செய்ய இன்னும் துணிவு வரவில்லை!
(துக்ளக் கேள்வி பதில் ( அல்லயன்ஸ்) )

கேள்வி: அரசியல்வாதிகள் வெளிநாட்டுக்குச் சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது ஏன் ?
மதனின் பதில்: மெரிட் இல்லாமல் தன்னிடமே லஞ்சம் கொடுத்து ரெகமெண்டேஷனில் சீட் வாங்கிய டாக்டர் தனக்கே ஆபரேஷன் செய்துவிடுவாரோ என்ற பயமாக இருக்கலாம்.

கேள்வி: அதிகபட்சமாக மாமியார் வீட்டில் எவ்வளவு காலத்தை கழிக்கலாம் ?
மதனின் பதில்: அதெல்லாம் ஜட்ஜின் தீர்ப்பை பொறுத்தது!
( ஹாய் மதன், விகடன் பிரசுரம் )

கேள்வி: தொப்பை ஏன் விழுகிறது ?
அரசு பதில்: வயிற்றில் இடம் இல்லாததால்!

Repartee பெரும்பாலும் சிலேடையுடன் வரும். அதற்கு உதாரணமாக கவிஞர் வாலியின் அனுபவம்... ..... பொதுவாக அந்த நபருக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது. .........."இவனெல்லாம் ஒரு கவிஞனா?" என்று என்னைப் பற்றி ஒரு கணிப்பை விழிகளில் எப்போழுதும் ஒட்டி வைத்துக் கொண்டு உலா வருபவர்.

சண்முகம் அண்ணாச்சி என்னை அவரிடம் அறிமுகப் படுத்ததியவுடன், என்னை ஏதோ ஓர் இக்கட்டான கேள்வியைக் கேட்டு திக்குமுக்காட வைக்க வேண்டும் என்ற திட்டமிட்டாரோ என்னவோ ! அவர் என்னைப் பார்த்து ஒரு வினாவைத் தொடுத்தார்:
"நிங்க ஏன்சார், வாலின்னு பேர் வெச்சுக்கிடிருக்கீங்க?" அவரது உள்நோக்கம் ஓரளவு எனக்கு புரிந்திருக்கும் நான் பவ்வியமாகப் பதில் சொன்னேன், "சார்! நீங்க தமிழறிஞர்; ராமாயணம் படிச்சிருப்பீன்ங்க! எதிராளி ஒருவன் வாலிக்கு முன்வந்து நின்றால், அவனது பலத்தில் பாதி
வாலியை வந்தடையும் என்பது ராமாயண வழக்கு. அது மாதிரி, எந்த அறிவாளி என் முன் வந்து நின்றாலும், அவரது அறிவில் பாதி என்னை வந்து சேரவேண்டும் என்பதற்காகதான், நான் 'வாலி' என்ற பெயர் வைத்துக் கொண்டேன்; அப்படிப் பலரது அறிவு என்க்கு கிடைக்கும் என்ற ஆசைதான்!"

இந்த விளக்கத்தைக் கேட்டதும் அவர் ஏளனமாகச் சிரித்து விட்டுப் பேசினார்:
அப்படிப் பலரது அறிவில் பாதி உம்மைச் சேர்ந்திருந்தால் நீர் இவ்வளவு காலம் பெரிய அறிவாளியாக அல்லவா ஆகியிருக்க வேண்டும்..? உம்மைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே..!" நான் ஒரு வினாடி கூடத் தயங்காமல் அவருக்கு பதிலுரைத்தேன்:
"சாரி! நான் இன்னும் என் வாழ்கையில் ஒரு அறிவாளியைக் கூட சந்திக்கவில்லையே?!" ......

அந்த தமிழ் எழுத்தாளரின் முகம் தொங்கிப்போயிற்று உடனே என்மீது வெறொரு கணையைத் தொடுத்தார் "என்னதான் நீர் சினிமாவில் பாட்டு எழுதினாலும் கண்ணதாசன் மாதிரி ஒரு கவியரசாக ஆகமுடியாது..."

உடனே நான் சொன்னேன்: "சார்! எதற்கு நான் இனிமே கவியரசு என்று ஆகணும்? வாலின்னு சொன்னாலே, கவியாரசு என்றுதானே அர்த்தம்! இதுவும் ராமாயணம் படிச்ச உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்...."

( நன்றி: நானும் இந்த நூற்றாண்டும், கவிஞர் வாலி, வானதி பதிப்பகம் )

Read More...

Thursday, June 03, 2004

Positive x Negative

'Negative' விஷயங்களை பார்க்கறது, பேசறதுலேதான் மனுஷனுக்கு ஆர்வம் அதிகம்.
"கல்யாணத்துக்கு போயிருந்தியே ....எப்படி இருந்தது"
"எப்படி இருந்தது... சாம்பாரிலே உப்பு கம்மி"
சாம்பாரிலே உப்பு கம்மி என்பது ஒரு குறைதான். ஆனா ரசத்திலே அது சரியா இருந்தது என்று
சொல்ல மனசு வருதா பாருங்க.

ஒரு பெரிய வெள்ளைப் பேப்பர் நடுவுலே ஒரு சின்ன கருப்பு புள்ளியை வச்சி அதை ஒத்தர்கிட்டே நீட்டி அது என்னனு கேட்டா .."கருப்பு புள்ளி"-ன்னு தான் சொல்லுவார். ஒரு சின்ன கருப்பு புள்ளியைத்தான் அவர் கவனிக்கிறார் புள்ளியை சுத்தி பேப்பர் பூராவும் வெள்ளைப் பகுதியா இருக்கு.. அதை கவனிக்கிறதில்லே..

நம்ம கண்ணாடி முன்னாலே போய் நிக்கிறோம் முகத்தை பார்கிறோம். ஒரு பரு அல்லது ஒரு கருப்பு புள்ளி இருந்தா அதைத்தான் முதலில் கவனிப்போம். அதை சுத்தியிருக்கிற அழகான (?) பகுதிகள்லாம் அதுக்கு அப்புறம்தான்.

காலையிலே ஒரு செய்தித்தாளை வாங்கி புரட்டறோம் முதலில் நாம் பார்ப்பது எதிர்மறையான சொய்திகளைத்தான். நல்ல சொய்திகள் அதற்கு பிறகுதான். 'Negative' விஷயங்கள்தான் பத்திரிக்கை விற்பனைக்கு முக்கியம்.

பேப்பர்லே எப்படி செய்தி வருது ?
ஒரு கும்பலில் கலவரம். கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தார்கள்-ன்னுதான் வரும். கலவரத்தில் 712 பேர் உயிரோடு திரும்பிப் போனார்கள் -ன்னு வராது. எத்தனை பேர் செத்தாங்க-ங்கறதுதான் பத்திரிக்கைக்கு முக்கியம். ஏன்னா நம் மனம் அதைத்தான் கவனிக்கிறது.
இன்று விமான விபத்தில் 110 பேர் உயிரிழந்தார்கள் என்பது 'Negative' விஷயம். இன்று விமானம் மூலம் 2 லட்சம் பேர் சொளக்கியமாக பயனம் செய்தார்கள் என்று வராது.

ஒரு நாள் பூரா நல்ல நடந்துக்கிட்டிருப்பீங்க ஏதோ ஒரு நேரத்திலே வாழைப்பழத் தோல் வழுக்கி விழுந்திருப்பீங்க. வழுக்கி விழுந்ததைத்தான் பெரிசு படுத்திக்கிட்டிருப்பீங்க. நாள் பூரா நல்லா நடந்தது பெரிசா தெரியாது.

புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் எல்லாம் இந்த வகைதான்.

உலகத்து மகிழ்ச்சிகளையெல்லாம் - வாழ்வின் சந்தோஷங்களையெல்லாம் நாம் மறந்துடறோம். இந்த உலகத்திலே சந்தோஷப் படறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு, அதை கவனியுங்க முதல்ல

உங்களையே எடுத்துக்கோங்க எவ்வளவோ நல்ல வலைப்பதிவு இருக்கும் போது, நீங்க 'இட்லிவடை'க்கு எதுக்கு வரீங்க ?

Read More...

Tuesday, June 01, 2004

க்ரிப்ட்அரித்மெடிக் - Crypt Arithmetic - விடை

Dear Idly,

முதல் புதிர் : SEND = 9567; MORE = 1085 ; MONEY = 10652

இரண்டாவது புதிர் : CROSS = 96233 ; ROADS = 62513 ; DANGER = 158746


I want to clarify abt MKs answer. I think MK had misunderstand the question. He had
found the answer for s + e + n + d + m + o + r + e = m + o + n + e + y.
But our question is,

SEND
+ MORE
-------
MONEY
-------
Any way his programmatical logic is correct. We
can arrange ten digits in 10! ways. But there will be
only one reasonable answer for these puzzles. I'd also
written a program to solve these types of puzzles.
I've attached that program with this mail for ur
reference.
- Mahesan R

Note: Want the 'C' program ? Send me a separate mail.

நன்றி: மகேசன்

Read More...