நகைச்சுவையின் அடுத்த வகை சிலேடை - ஆங்கிளத்தில் Pun. இரண்டு பொருளைத்
தரும் ஒரே சொல்லை வைத்து நகைச்சுவை செய்வது. காளமேகப் புலவர்,
ஒளவையார் சிலேடைப் பாடல்களை பாடுவதில் சிறந்து விளங்கியவர்கள்.
சில நகைச்சுவைத் துணுக்குகள் சிலேடையாகவோ சமயோசிதமாகவோ அமையாமல்
ஒருவகை சொல் விளையாட்டுக்களாக அமைவதும் உண்டு இவற்றை "அறுவை"
துணுக்குகள் என்று அழைக்கப்படுகிறது.
சில உதாரணங்கள் முதலில் சிலேடை -
அமைச்சர்: இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ?
அரசர்: இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்...
அதனால் 'விழுப்புண்' என்றேன்.
(நன்றி ஆனந்த விகடன், 7-3-82).
ஒரு அறுவை -
"வானம் மூடியிருக்கே மழை மேகமா ?"
"மழை may come"
சிலச்சமயம் அச்சுப் பிழைகளை அடிப்படையாகக் கொண்டு அழகான நகைச்சுவை
வருவதுண்டு. அதுவும் punல் ஒரு வகை.
"ஏண்டா உன்னை எடிட்டர் வேலையிலிருந்து எடுத்து விட்டார்"
"மாவட்ட கலெக்டர் ஹோட்டலுக்கு வந்தார் என்று போடுவதற்கு பதிலா, மாவாட்ட
கலெக்டர் ஹோட்டலுக்கு வந்தார்ன்னு போட்டுடேன்"
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, April 06, 2004
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 5
Posted by IdlyVadai at 4/06/2004 10:00:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment